>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 25 ஏப்ரல், 2017


பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில்
இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.
இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம் என்று தெரிகிறது.
ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.