>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
''7'' PAY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
''7'' PAY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 மார்ச், 2019

7th Pay Matrix, HRA And CCA Slab in Single Page

ஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வியாழன், 28 மார்ச், 2019

7th Pay Commission - Pay Matrix Slap For 01/04 Annual Increment.

இம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

7th Pay Commission: Diwali gift for CG employees, but is it enough

7th Pay Commission: Diwali gift for CG employees, but is it enough By Vicky Nanjappa

Image result for 7 pay commission


New Delhi, Sep 24: There is finally some good news for the Central Government employees regarding the 7th Pay Commission.

7th Pay Commission: Diwali gift for CG employees, but is it enough
In what could be called as a Diwali gift, the government has extended LTC benefits for the CG employees. The Department of Personnel and Training said that the scheme allowing government servants to travel by air to the North East Region, Jammu and Kashmir and Andaman and Nicobar Islands is extended for a further period of 2 years with effect from September 26 2018 to September 25 2020.

    "LTC for visiting NER, J&K and A&N in lieu of a Home Town LTC."
    " Facility for air journey to non-entitled Government servants for NER, J&K and A&N."
    "Permission to undertake journey to J&K, NER and A&N by private airlines."

The Union government had previously extended the LTC benefits for Central government employees in 2014.

Also Read | 7th Pay Commission: Rs 1,500 crore assistance sought even as govt mulls disciplinary action

It may be recalled that the 7th Pay Commission had recommended to retain and rationalise the Leave Travel Allowance. The LTC facilitates CG employees' home travel as well as travel to different parts of the country, The 7th Pay Commission had noted the the demand for increase the frequency of LTC especially for All India visits and foreign countries too.
The 7th Pay Commission had said:

On splitting hometown LTC, the pay panel said, "The proposal to split hometown LTC has merit and can be considered. Hence, it is recommended that splitting of hometown LTC should be allowed in case of employees posted in North East, Ladakh and Island territories of Andaman, Nicobar and Lakshadweep. This will enable these employees and their families to meet more often."

Also Read | 7th Pay Commission latest news: CG employees could lose money, here is why

    For CAPF, Indian Coast Guard: "Presently, personnel of Defence forces serving in field/high altitude/CI Ops areas are granted one additional free railway warrant. This should be extended to all personnel of CAPFs and the Indian Coast Guard mutatis mutandis."
    For SSB Personnel: "The facility of Additional LTC should be extended to SSB personnel, at par with other CAPFs."
    For Railways staff: "Regarding bringing Railway employees (and employees whose spouses are Railway servants) into the fold of LTC, the following is recommended:

        No hometown LTC will be admissible to Railway employees, only "All India" LTC will be granted once in four years.
        b. For the grant of LTC, all passes for the current year will have to be surrendered.
        c. If the employee has already availed of a pass in any year, then LTC will not be allowed in that year.

This comes as some relief for CG employees who have been struggling to get the government to extend benefits relating to a pay hike. While the above

announcement may not be the much sought soother, it still is some good news for CG employees who have been demanding a hike of Rs 26,000 as opposed to the Rs 18,000 recommended by the 7th Pay Commission.

வியாழன், 1 பிப்ரவரி, 2018


7th Pay Commission: Central Government Employees Might Get Additional Pay Hike in Budget 2018

The 7th Pay Commission had recommended that Rs 18,000 minimum salary must be given to the Central government employees. 
However, the recommendations of the seventh CPC were not accepted by the employees union that wanted more salary for employees. Now, it seems that the demand might get approved in Budget 2018. The government might pay up salary beyond what was recommended by the 7th Pay Commission, but without arrears.
A source told a news website that the government was committed to paying the hiked salary beyond the suggestion of the 7th Pay Commission in April. The salary hike will be given to lower level employees, but no arrears will be given by the government. Finance Minister Arun Jaitley will table the proposal before the Cabinet in April.



The minimum salary for central government employees was increased to Rs 18,000 as recommended by the 7th pay commission. The highest salary was increased from Rs 90,000 to Rs 2.5 lakh with a fitment factor of 2.5 times. The unions demanded that the minimum salary should be Rs 26,000 with a fitment factor to be 3.68 percent. The employees had gone on a strike in 2016. Finance Minister Arun Jaitley had assured that their demands will be looked into.
The unions content that Rs 18,000 was not enough to live. Also the ratio from highest to lowest salary had dipped to 1:14, which was 1:12 in the 6th pay commission.
It was reported recently that the government might make the allocation for the revised salary in the upcoming Budget and raise the salary beyond 7th pay commission recommendation in April..

வெள்ளி, 22 டிசம்பர், 2017

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.

புதன், 29 நவம்பர், 2017

8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!

சனி, 25 நவம்பர், 2017

வழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய சம்பளம் வழங்க கோரிக்கை!!!

புதன், 22 நவம்பர், 2017

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

வெள்ளி, 17 நவம்பர், 2017

JACTTO GEO - SG PAY - வழக்கில் Affidavit தாக்கல்

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்...

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN 7th PAY - பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி(HRA) குறைப்பு.

சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது.சென்னைக்கும், அதனை சுற்றி 32 கி.மீ., க்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1பி) ல் கோவை, மதுரையும் உள்ளன. இந்த இரு மாநகராட்சிகளில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரு மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
அதேபோல் கிரேடு '2' ல் இடம் பெற்றுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இருந்து 8 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேடு (3) ல் இடம்பெற்றுள்ளநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் கிரேடு '2' ல் இடம் பெற்றிருந்தன. தற்போது எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தில் அந்த பட்டியலில் இருந்து இரு நகராட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்சேவியர் கூறுகையில், ''சிவகங்கை, தேவகோட்டை போன்று மாநிலம் முழுவதும் பல நகராட்சிகள் கிரேடு '2' ல் நீக்கப்பட்டுள்ளன.இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் வீட்டுவாடகைப்படி 3,200 ல் இருந்து 2,400 ரூபாயாக குறைந்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட தலைநகராகவும் உள்ளது. இதனை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும்,'' என்றார்

வியாழன், 16 நவம்பர், 2017

Fixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017

☀ஊதியக்குழுவிற்குப் பின்னர் ஆசிரியரின் புதிய ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அலுவலகத்திற்கு உரியதே!
☀அலுவலகத்தில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து அதற்கான படிவம் (Fixation Form) ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
☀அவ்வாறு அலுவலகம் நிர்ணயம் செய்ததைவிட  கூடுதல் பணப்பலன் கிடைக்க வழிவகை இருக்கும் எனில்,
☀புதிதாக எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்தால் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தி,
☀ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட தேதியில் இருந்து, 3 மாதங்களுக்குள் விருப்பப் படிவம் (Option Form) வழங்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.
☀இதன்படி விருப்பம் தெரிவிக்கும் நபர் ஊதியக்குழு அரசாணை 303 வெளியிடப்பட்ட 11.10.2017-ல் இருந்து 3 மாதங்களுக்குள் அதாவது, 10.1.2018-ற்குள் தங்களின் விருப்பத்தினைத் தெரிவிக்கலாம்.
எவ்வாறு எனில், உதாரணமாக
☀பணி உயர்வு பெறும் நபர்,  தற்போது ஊதியம் நிர்ணயம் செய்வதைவிட அடுத்த வளரூதியம் / தேர்வுநிலை / சிறப்புநிலைக்குப் பின்னர் ஊதிய நிர்ணயம் செய்வதால் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் எனில்,
☀"அதுவரை நான் பழைய ஊதியத்திலேயே தொடர்ந்து கொள்கிறேன்" என விருப்பம் தெரிவிக்க ஊழியர் நல அரசாணைகளில் வழிவகை உண்டு.
அல்லது,
☀"புதிய ஊதிய நிர்ணயத்தால் எனக்குப் பலனேதுமில்லை. எனவே, ஊதியக்குழுவிற்கு முந்தைய எனது ஊதியத்துடன் இருக்க விரும்புகிறேன்" என்றும் விருப்பப் படிவம் தெரிவிக்கலாம். (இவர்களுக்கு என தனி அகவிலைப்படியானது பழைய ஊதியக்குழுவின் தொடர்ச்சியாகவே வழங்கப்பட்டு வருகிறது)
☀எனவே, ஊதிய நிர்ணயம் செய்த பின்னர் அதனடிப்படையில் விருப்பம் தெரிவிப்பது என்பது வழக்கமான நடைமுறையே!
☀இந்நடைமுறையை முன்வைத்து சிலர், தங்களின் சுய இலாபத்திற்காக, இடைநிலை ஆசிரியர்களை 2009, TET என்று பிளவுக்குட்படுத்தி, ஜாக்டோ-ஜியோ-வையும் முறையாக அணுகாது, கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, தனித்து வழக்காடுவோம் என, வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை நயவஞ்சகத்தோடு கூட்டம் சேர்ப்பித்து குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
☀இ.நி.ஆ ஊதியப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருப்பின், இவர்கள் ஜாக்டோ-ஜியோ மீது தொடுக்கப்பட்ட வழக்கில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வழக்கினை செறிவூட்டியிருக்க வேண்டும்.
☀ஆனால் இவர்களின் எண்ணம் இ.நி. ஆசிரியர்களுக்கு 8370-2800 மட்டும் போதும் என்பதே. ஏனெனில் இதனைக் கூறினால் தான் இ.நி. ஆசிரியர்களைப் பிளவுக்குட்படுத்தித் தாங்கள் வளர வழியேற்படும் என சூது செய்து வருகின்றனர்.
☀தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துவதோ, ரூ.9300-4200. இது நாம் முன்னர் பெற்று வந்ததில் முறைகேடாக 6-வது ஊதியக்குழுவால் பறிக்கப்பட்டதே.
☀மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு (ஊதியக்கட்டு-2) ரூ.9300-4200 தர ஊதியம். ஆனால் 1.6.2009 அன்று அன்றைய திமுக அரசால் வெளியிடப்பட்ட ஆறாவது ஊதியக்குழுவில் (ஊதியக்கட்டு-1) ரூ.5200-2800 தர ஊதியம் என அறிவிக்கப்பட்டது.
☀5.6.2009 அன்று கொடைக்கானலில் கூடிய மாநிலச் செயற்குழு இதைக் கண்டித்து, மத்திய அரசு போல் ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 6.6.2009 அன்று சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
☀அன்றிலிருந்து தனிச்சங்க நடவடிக்கையாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதோடு, டிட்டோஜாக், ஜாக்டோ என கூட்டியக்கங்களின் மூலமும் தொடர்ந்துபோராடி இன்று ஜாக்டோ-ஜியோ என்ற பதாகையின் கீழ் போராடி வருகிறது, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.
☀போராட்ட காலத்தில் ஜாக்டோ-ஜியோ மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாலேயே, அடத்த கட்ட இயக்க நடவடிக்கை தாமதப்பட்டு வருகிறது.
☀இருந்தும், நம்மீது போடப்பட்ட வீணான வழக்கினை நமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து களத்தில் உள்ளது என்பதற்கு ஊதியக்குழுவை அறிவிக்க வைத்த நீதிமன்றத் தீர்ப்பே சான்று.
☀தற்போது, நீதிமன்ற நடைமுறைகளால் அடுத்தகட்ட விசாரணை தாமதமானாலும் அதனூடாய் இ.நி. ஆசிரியர் ஊதிய முரண் தொடர்பான மனு (Affidavit) தயார்செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
☀இந்நிலையில், நமது தோழர்கள் சமூக வலைதளங்களில் உலாவும், "Fixation Return வாங்கலேனா சம்பளம் கூடாமலே போய்விடும்" என்ற வீணான தர்க்கமற்ற பதற்றச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும்,
☀நமது இலக்கு பறிக்கப்பட்ட ரூ.4200 தரவூதியத்தினை மீட்டு ஊதியக்கட்டு 2-ல் மீண்டும் இடம்பிடிப்பதே என்றும்,
☀ரூ.9300-4200 நிலையில் வைத்து ஊதிய நிர்ணயம் செய்வதே புதிய ஊதியக்குழுவிலும் எதிர்வரும் காலங்களிலும் நிரந்தரப் பயனை இடைநிலை ஆசிரியர்களுக்குப் பெற்றுத் தரும் என்றும்,
☀அதற்கான இயக்க நடவடிக்கைகள் ஜாக்டோ-ஜியோ வழக்கின் விசாரணையிலும், அதனைத் தொடர்ந்து களப்போராட்டத்திலும் இருக்கும் என்றும், தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
☀மேலும், இன்று (15.11.2017) சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில்,
⚡24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில்,
⚡மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்⚡
நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
☀அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
_தோழமையுடன்,_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

செவ்வாய், 14 நவம்பர், 2017

TN 7th PAY - ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் - அரசு அறிவிப்பு.



01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.