>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 30 டிசம்பர், 2016

தினமலர் 'லட்சிய ஆசிரியர் 2016' விருது; டி.இ.ஓ., வழங்கினார்

தினமலர் 'லட்சிய ஆசிரியர் 2016' விருது; டி.இ.ஓ., வழங்கினார்                                                                                            


மதுரை: "மாணவர்கள் திறமையை கண்டறிந்து அவர்கள் மனதில் இடம் பிடிப்பதே ஆசிரியர் பணியின் உண்மையான வெற்றி," என மதுரையில் தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த 'லட்சிய ஆசிரியர் --2016' விருது வழங்கும் விழாவில், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) முருகானந்தம் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நாளிதழ் சார்பில் 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கு தேர்வான 25 பேருக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.

விருதுகள் வழங்கி டி.இ.ஓ., முருகானந்தம் பேசியதாவது: கற்பித்தல் பணியை ஒவ்வொரு ஆசிரியர்களும் ரசித்து மேற்கொள்ள வேண்டும். தற்போதைய மாணவர்கள் மிகவும் 'ஹைடெக்' ஆக உள்ளனர். அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அவசியம். கற்பித்தல் பணி, தேர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாணவர்கள் திறமையை வெளிக்கொணர்ந்து, அவர்களின் இதயங்களில் இடம் பிடிப்பதே உண்மையான ஆசிரியரின் வெற்றி ஆகும். கற்பித்தல் பணி, கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அதேநேரம் குற்றம், தவறுகளுக்கு ஆட்படாத ஆசிரியர் சமுதாயம் உருவாக வேண்டும். அவ்வாறு இருந்தால் இதுபோன்று பல்வேறு விருதுகள் உங்களை தேடி வரும், என்றார்.
விருது பெற்றவர்கள்
1) கோ.புவனேஸ்வரி, மெப்கோ ஸ்லெங் மழலையர், தொடக்க பள்ளி, திருமங்கலம்.
2) ப.ஹரிபாபு, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனையூர், மதுரை.
3) ர.கிறிஸ்டெல்லா, மகாத்மா பாபா பள்ளி, மதுரை.
4) மு.தென்னவன், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துவக்கப் பள்ளி, யா.ஒத்தக்கடை, மதுரை.
5) எம்.பி.சந்திரகலா, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அய்யன் கோவில்பட்டி
6) ம.சுகந்தி, நாடார் உயர்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை.
7) வெ.சோ.ராமு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செ.பாறைப்பட்டி,
8) இ.இலாசர் வேளாங்கண்ணி,காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல்.
9) ரா.சுமதி, நா.சு.வி.வி.சாலா தொடக்கப் பள்ளி, பட்டிவீரன்பட்டி,
10) ம.பெத்த வண்ண அரசு, அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யலுார்
11) எஸ்.ஜி.விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வீரபாண்டி.
12) ரெ.தமிழ்ச்செல்வி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அழகாபுரி
13) கே.சரவண சித்ரா, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி, தேனி.
14) கா.கூ.முருகேசன்,நாடார் மேல்நிலைப்பள்ளி, போடி நாயக்கனுார்,
15) சி.சத்தியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலப்புதுக்குடி,
16) ஐ.அய்யநாதன், சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்.
17) தே.தமயந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி,செல்வநாயகபுரம்
18) வி.செல்வராஜ், அரசு உயர்நிலைப் பள்ளி,தவத்தாரேந்தல் 
19) பெ.செல்லையா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோட்டவயல்
20) ஞா.மீனாம்பிகை, ஸ்ரீமுருகானந்த நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
21) வி.ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்னவேங்காவயல்.
22) ச.சந்திராமேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வில்லிபத்திரி.
23) எஸ். ராஜசேகரன், இந்து மேல்நிலைப் பள்ளி,வத்திராயிருப்பு.
24) சு.முத்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜமீன்சல்வார்பட்டி.
25) சி.மரகதவல்லி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பி.எஸ்.கே.மாலையாபுரம்

எழுதுங்கள் ஜே.இ.இ. தேசிய நுழைவு,!

எழுதுங்கள் ஜே.இ.இ. தேசிய நுழைவு,!

நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்
பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும்.

பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது, தலா 45 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களும் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரு நிலைகள்
ஜே.இ.இ., தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு எனும் இரண்டு நிலைகளை கொண்டது. நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களிலும் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஜே.இ.இ., மெயின் தேர்வை தொடர்ந்து ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலையான அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெறும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தேர்வு முறை

தாள் 1: இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்.,
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்து அல்லது கணினி அடிப்படை தேர்வு முறைகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

தாள் 2: இளநிலை பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்
கணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

குறிப்பு: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 2, 2017

மேலும் விவரங்களுக்கு: www.jeemain.nic.in

PRIMARY - 3 rd TERM FA(a) & FA(b) ACTIVITIES, DICTATION WORDS & TAMIL MEANINGS

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) சேருவதற்கு விண்ணப்பிக்க டிச. 30-ம் தேதி கடைசி நாள் என அப்பல்கலைக்கழக மதுரை மண்டல உதவி இயக்குநர் பீமாராவ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஜெஜெ. கல்லூரியில் உள்ள இக்னோ மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்ய வந்த அவர் மேலும் கூறியது:
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை தேதி டிச. 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இப்பல்கலைக்கழகப் படிப்பு மையமான பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ. 200. பணமில்லா பரிவர்த்தனையை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.ac.‌i‌n  என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி., பி.சி.ஏ., பி.டி.எஸ்., பி.எஸ்.டபிள்யூ. ஆகியவற்றில் சேருவதற்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.சி.ஏ., காஸ்ட் அக்கவுண்ட்ஸ்,ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்தின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கான சிறப்பு பி.காம். பாடத்திட்டம் உள்ளது. இதற்கான விண்ணப்பத்தின் விலை ரூ. 750. மேலும்,விவரங்களுக்கு 96881 70709, 04322- 260103, 261 801, 260 802 ஆகிய எண்களிலும், மதுரை மண்டல அலுவலகத்தை 0452 -2380733, 2380775 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தமிழக சிறார்கள் 17 பேருக்கு தேசிய பாலஸ்ரீ விருது !!

தமிழக சிறார்கள் 17 பேருக்கு தேசிய பாலஸ்ரீ விருது !!

தமிழகத்தைச் சேர்ந்த, 17 சிறார்கள், மத்திய அரசின், 'பாலஸ்ரீ' விருது பெற்றுள்ளனர்.
மேடைக்கலை, படைப்புக் கலை, அறிவியல் கலை, எழுத்துக் கலை ஆகியவற்றில், 16 வகையான உட்பிரிவுகளில் புதுமைகள் படைத்திடும், 10 முதல், 16 வயதிற்கு உட்பட்ட
சிறுவர்களுக்கு, தேசிய அளவில், 'பாலஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது.
இது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும், தேசிய சிறுவர் மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின், ஒரு பகுதியாக விளங்கும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், சிறந்த சிறார்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்விருதுக்கான தேர்வை, மாவட்ட, மாநில அளவில் நடத்தி, தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைப்பர். இந்திய அளவில், 520 சிறார்கள் பங்கேற்ற தேசிய போட்டியில், 82 பேர், விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 17 பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

வீடில்லா குடும்பத்துக்கு நிலம் மத்திய அரசு உத்தரவு

வீடில்லா குடும்பத்துக்கு நிலம் மத்திய அரசு உத்தரவு

வீடில்லாத குடும்பத்தின், பெண் உறுப்பினர் பெயரில், நிலம் ஒதுக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிராம மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ராம் கிருபால் யாதவ் கூறியதாவது: நம்
நாட்டில், 2022க்குள், அனைவருக்கும் வீடு கட்டிதர வேண்டும் என்பது, மத்திய அரசின் கனவு திட்டம். இதற்கான பணிகளை மத்திய அரசு துவங்கி விட்டது.
வீடுகள்இல்லாத குடும்பங்களை, மாநில அரசுகள் கணக்கெடுக்க வேண்டும். அந்த குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் பெயரில், நிலம் ஒதுக்க வேண்டும்.
அந்த நிலத்தில் வீடு கட்ட, 1.20 லட்சம் ரூபாயை, அந்த பெண் உறுப்பினரின் வங்கி கணக்கில், மத்திய அரசு, நேரடியாக செலுத்தும்.கழிப்பறைகள் கட்ட, 12 ஆயிரம் ரூபாய் தனியாக வழங்கப்படும்.
மேலும், மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 90 நாட்கள் வேலையும் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு, 18
ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வீடுகள் இல்லாத குடும்பத்தினருக்கு, நிலம் ஒதுக்கும் பணியை, மாநில அரசுகள் துவக்க வேண்டும். சில மாநிலங்களில், நிலம் ஒதுக்கும் பணி துவங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, மாதம், 20 முதல், 40 ரூபாய் வரை உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், அகவிலைப் படியை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, தனி உயர்வு வழங்க, அரசு முடிவு செய்தது. அதன்படி மாதம், 600 ரூபாய் வரை, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய், தனி உயர்வு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

SLAS Test Valuation Starts - கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

SLAS Test Valuation Starts - கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.
        தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
        கடந்த 19- 24ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில், தமிழகம் முழுக்க படிக்கும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களின் விடைத்தாளை, வட்டார வாரியாக உள்ள, ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், ஆன்-லைனில் மதிப்பிடும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கின.இதன் முடிவுகள், ஜன., இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக, மதிப்பெண் குறியீடுவழங்கப்படும். பாடவாரியாக பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கண்டறிந்து, உரிய ஆசிரியருக்கு, புதுவிதமான முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும். 'குறிப்பிட்ட பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் தோல்வியை தழுவும் பட்சத்தில், பாட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்' என்றனர்.

உங்களது ஊதியம் பற்றி முழு விவரம் அறிய வேண்டுமா?

உங்களது ஊதியம் பற்றி முழு விவரம் அறிய வேண்டுமா?

நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில்,எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.
நீங்கள் அரசு ஊழியரா...
💶 உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்.
💷 உங்களது Bill ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...
💵 ஒரே ஒரு Click மட்டும் போதும்.
💷 உங்களது GPF / CPS No. தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.

JAN 2017 CRC : PRIMARY 21.01.2017 & UPP.PRIMARY 28.01.2017


தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !! இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

     தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !!
இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.
தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம்
செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/
வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்
தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை :
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த :
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன்
கவனிக்க வேண்டியவை :
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது ?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
# மேலும் #விவரங்களுக்கு:
உதவி  இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm
இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://
www.stationeryprinting.tn.gov.in/
forms.htm

விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.
இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல் தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

           தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா
மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல்
தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெருத்த எதிர்பார்ப்புக்கு இடை யில் அதிமுக பொதுக்குழு டிசம்பர் 29-ல் சென்னையில் கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதனால், பொதுக் குழுவை சிறு சலசலப்புகூட இல் லாமல் வெற்றிகரமாக நடத்திமுடிப் பதற்கான அனைத்து வேலைகளும் சசிகலா தரப்பிலிருந்து கவனமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவ ருக்கு ஜோதிடம் கணித்துக் கொடுத்த ஜோதிடர் குழுவின் ஆலோசனைப்படி அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் சசிகலா தயாராகி வருகிறார். இதுகுறித்து அதிமுகவின் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள் ‘‘29-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் சசிகலா, புத்தாண்டில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் எளிய முறை யில் அவர் கட்சியின் பொதுச்செய லாளராக பதவி ஏற்றுக்கொள்வார்.
இதையடுத்து, தை பிறந்ததும் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான வேலைகள் முடுக்கிவிடப்படும். இதற்கேற்ற வகையில் அமைச்சர் கள், கட்சியின் நிர்வாகிகள் சசிகலா முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைப்பார்கள். அதை ஏற்று, தை மாதத்தில் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அநேகமாக ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதால் அந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று பரவலான தகவல் உள்ளது. ஆனால், சென்னையில் போட்டியிடுவதை விட தென் தமிழகத்தில் போட்டி யிடுவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று உளவுத் துறை தகவல் தந்துள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியை இரண்டாவது தேர்வாக வைத்திருக்கிறார் சசிகலா. அதற்கு பதிலாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை மேற்கு இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் சசிகலாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதில் பெரும் பாலானவர்கள் சசிகலாவின் சிபாரிசு. இதில் இரண்டு பேர் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் சசிகலாவுக்கு ஆதரவாக இருக் கிறார்கள். அவருக்காக பரிசீலனை யில் உள்ள இந்த மூன்று தொகுதி களிலும் கணிசமாக இருப்பது இந்த சமூகம்தான். எனவே, இதில் ஏதாவதொரு தொகுதியில் சசிகலா போட்டியிடுவதற்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது’’ என்றனர்.
“சசிகலா தலைமைப் பொறுப் புக்கு வருவது பெண்கள் மத்தி யில் கடும் விமர்சனத்துக்கு உள் ளாகி இருக்கிறது. இந்த எதிர்ப்பை வீழ்த்தி, பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக, முதல்வர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதுமே மதுவிலக்கை அமல்படுத்தும் முக்கியக் கோப்பில் சசிகலா கையெழுத்திடுவார்’’ என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்தனர்

செவ்வாய், 27 டிசம்பர், 2016

மரம் வளர்த்தால் மாதாமாதம் பரிசு! அசத்தும் கிராமம்!

மரம் வளர்த்தால் மாதாமாதம் பரிசு! அசத்தும் கிராமம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, "வேர்கள்" என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள்.
இவர்களது முக்கிய பணி, வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை அளிப்பது.
அது மட்டுமல்ல, சரியாக மரக்கன்றுகளை பராமரிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் மாதாமாதம் பணப்பரிசும் அளிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு 2000 மூன்றாம் பரிசு 1000 ரூபாய்.
இந்த வித்தியாசமான பரிசுத்திட்டத்துக்குக் காரணமானவர். இதே கிராமத்தைச் சேர்ந்த , க.தமிழன் .
இந்த மரம் வளரப்பு பரிசுத்திட்டம் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
"மரம் தருவதோ நடுவதோ பெரிய விசயமல்ல..
கடந்த இருபதாண்டு செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்தால், மரம் நடும் விழாக்களில் நட்ட மரங்கள் மட்டும் பல கோடி மரங்களைத் தாண்டும்.. அதெல்லாம் வளர்ந்திருந்தா, இன்னைக்கு தமிழ்நாடு பசுமைக்காடா மாறியிருக்கும்.. மரம் நடும் பணியில் காட்டும் முனைப்பு அதனை பராமரித்தலில் இல்லை.
கடந்த மூன்று தினங்களில் கிட்டத்தட்ட 5000 மரக்கன்றுகளை வீடுதோறும் வழங்கியுள்ளோம்.. இதோடு நின்றுவிடாமல், அதனை 5 வருடங்கள் அந்தந்த வீட்டினரே பராமரிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் கீழ்க்காணும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளோம்.
1) மரக்கன்றுகள் வழங்கப்பட்ட ஒவ்வொரு வீடும் ஒரு எண்ணால் (Unique number) அடையாளப்படுத்தப்படும்.
 2 ) ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையும் குலுக்கல் முறையில் மூன்று எண்கள் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படும்.
 3) முதல் பரிசாக 3000 ரூபாயும் , இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 1000 ரூபாயும் 5 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்..
விதிமுறைகள்:
1) தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் 5 மரக்கன்றுகளையும் சரியாக பராமரித்து இருக்க வேண்டும்.
 2) அவர்கள் வீட்டில் சீமைக்கருவேல மரங்கள் முற்றாக அழிப்பட்டு இருக்க வேண்டும்.
 3) கொடுக்கப்பட்ட 5 மரக்கன்றுகளில், குறைந்த பட்சம் இரண்டு மரக்கன்றுகள் வீட்டிற்கு வெளியே நட்டிருக்க வேண்டும்.
 4) பரிசுத் தொகை அந்தந்த வீட்டிலுள்ள குடும்பத் தலைவியிடம் மட்டுமே கொடுக்கப்படும்..
தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு வேர்கள் இளையோர் அமைப்பினர் சென்று பார்வையிட்டு, மேற்சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதன்மூலம் 5 வருடங்கள் இந்த மரக்கன்றுகளை அந்தந்த வீட்டு மக்கள் சரியாக பராமரிப்பார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.
ஊராரின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் 'வேர்கள்' இளையோர் அமைப்பு வேர்களை பரவவிட்டிருக்கிறது." என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் க.தமிழன்.
இதே போல, வாய்ப்புள்ளவர்கள் தங்களது பகுதியில் மரக்கன்றுகளையும் அளித்து, ஊக்கப்படுத்த தங்களால் இயன்ற பரிசுகளையும் அளிக்கலாமே!

டாப் ஸ்கோர் எடுக்க சென்ற ஆண்டின் முதல் மாணவி தரும் டிப்ஸ்!

டாப் ஸ்கோர் எடுக்க சென்ற ஆண்டின் முதல் மாணவி தரும் டிப்ஸ்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. காலையில் அலாரம் வைத்து எழுந்து படிப்பது தொடங்கி, மாணவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கும். நாட்கள் நெருங்க, நெருங்க பயம் தொற்றிக்கொள்வது இயல்புதான். ஆனால், அவசியமற்ற
அந்த பயத்தை ஒதுக்கித்தள்ளி, தேர்வை நம்பிக்கையுடன் எழுதுவதோடு, டாப் ஸ்கோர் எடுக்கவும் ஆலோசனைகள் தருகிறார் ஆர்த்தி.
ஆர்த்தி யார் என்று தெரியும்தானே?! சென்ற ஆண்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்த மாணவி. தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் வருடம் மருத்துவம் படித்துவருகிறார்.
''தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துகள். தேர்வுக்கு இன்னும் முழுதாக மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதனால் பதட்டமோ, பயமோ வேண்டாம். நான் சென்ற ஆண்டில் படித்தபோது கடைப்பிடித்த பழக்கங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.
* இப்போது, அதிகாலையில் எழுந்து படிப்பதோடு இரவில் அதிகநேரமும் படிக்கலாம். ஆனால் தேர்வு நெருங்கும்போது, (15 நாட்களுக்கு முன்பிருந்து) இரவு அதிகநேரம் கண் விழித்துப் படிக்காதீர்கள். அப்படிச் செய்தால், பகலில் உடல் சோர்வாகி, தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம்.
* உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் தேர்வுக்கு தயாராவதில் முக்கியமான அம்சம். உங்களுக்கு எவ்வளவு பிடித்தமான உணவு என்றாலும், உடலுக்கு ஒவ்வாமை தரும் என்றால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.
* பொதுவாக, 'விடைகளை எழுதிப் பாருங்கள்' என யோசனை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை எழுதிப் பார்க்கும் நேரத்தில், அதிக வினாக்களுக்கான விடைகளைப் படித்துவிடலாம் என்பேன். ஏனெனில், பல ரிவிஷன் தேர்வுகளில் பதில்களை எழுதிக்கொண்டிருப்போம். அதனால் அதையே திரும்பச் செய்ய வேண்டியதில்லை. வேண்டுமானால், ரிவிஷன் தேர்வு விடைத்தாளில் நாம் செய்த தவறுகளை கவனத்தில் கொண்டு, மீண்டும் அதேபோல வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
* ஆசிரியர்களின் உதவியைப் பெற எந்தத் தயக்கமும் கொள்ளாதீர்கள். சிலருக்கு எந்தப் பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது என்பதில் குழப்பம் இருக்கும். பாடத்தின் சில பகுதிகள் புரியாதவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டல் அவசியம்.
* பொதுத்தேர்வின்போது, இரண்டு பேனாக்கள் வைத்திருப்பது தொடங்கி, என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருப்பீர்களோ அதை ரிவிஷன் தேர்வுகளிலிருந்தே செய்யத் தொடங்குங்கள்.
* தேர்வு அறைக்குள் செல்லும் நிமிடம் வரை படிப்பதால் தேவையற்ற பதட்டமே வரும். அதற்கு முந்தைய 15 நிமிடங்களுக்கு புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, அமைதியான மனதுடன், தேர்வை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.
* ஒரு மதிப்பெண் வினாக்களைத் தனி கவனம் எடுத்து படியுங்கள். அதில் அதிக குழப்பமே, நான்கு ஆப்ஷனில் ஏதோ இரண்டு சரியான விடைகள் போல நமக்குத் தோன்றுவதுதான். அதனால் முதலில் அந்தக் கேள்வியை மட்டும் படியுங்கள். அதற்கான பதிலை உங்களின் நினைவிலிருந்து தேடி, கண்டுபிடியுங்கள். பிறகு, ஆப்ஷன்களைப் இப்படிச் செய்யும்போது குழப்பங்கள் பெருமளவு தீர்ந்துவிடும்.
* பெரிய வினாக்களை தேர்வு செய்யும்போது 'பிராப்ளம்' சால்வ் செய்யும் விதமான வினாக்களைத் தேர்தெடுக்கலாம். ஏனெனில் எல்லாம் எழுதி முடித்த பிறகு, சரியான முறையில் சால்வ் பண்ணியிருக்கிறோமா என்று நாமே செக் பண்ண முடியும்.
* சில வினாக்களுக்கான விடைகள் படிக்கும்போதே சிரமமாக இருக்கும். அவற்றை உங்கள் நண்பர்களோடு சேர்ந்து படிக்கலாம், விவாதிக்கலாம். அப்போது, அவர்கள் சொல்வது, அவற்றைப் புரிந்து படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
* தேர்வு நேரம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே நாம் அனைத்து விடைகளையும் எழுதி முடித்திருக்க வேண்டும். சென்ற ஆண்டு, இயற்பியல் தேர்வு எழுதி முடிக்க நேரம் போதவில்லை. அதனால் சற்று பதற்றமாகி விட்டேன். அதுபோல உங்களுக்கும் நேராதிருக்க, ரிவிஷன் தேர்விலேயே குறிப்பிட்ட நேரத்துக்குள் பரிட்சையை முடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
* தேர்வு எழுதி முடித்தவுடனே, சிலர் விடைத்தாளை அழகாக்கும் விதத்தில் பார்டர் வரைய ஆரம்பித்துவிடுவார்கள். அது தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு, வினா எண்களைச் சரியாக எழுதியிருக்கிறோமா, விடைகளில் ஏதேனும் தவறுகள் இருக்கின்றனவா என்பதை செக் பண்ண வேண்டும். அவற்றைச் செய்தபின்னும் நேரம் இருந்தால், அதை அழகுபடுத்தச் செலவிடலாம்.
அப்பறம் நண்பர்களே... இந்த ஆலோசனைகள் பொதுவானவை. ஆனால் உங்களுடைய பலம், பலவீனம் இரண்டும் ஒருவருக்கு மட்டுமே நன்றாக தெரியும். அவர், நீங்கள்தான். அதனால் பலவீனங்களை எப்படி குறைப்பது, பலத்தை இன்னும் எப்படி அதிகப்படுத்துவது என்ற வழிகள் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

Dangal Hindi Movie - குழந்தைகளுடன் பாருங்கள் பெற்றோர்களே!

Dangal Hindi Movie - குழந்தைகளுடன் பாருங்கள் பெற்றோர்களே!

இந்திய சினிமாவின் பெருமிதப் பதிவுகளில் ஒன்றாக  “டங்கல்” படம் இடம் பிடித்திருக்கிறது. 

விளையாட்டுத் துறையில் இந்திய தேசத்தை பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு வெற்றிக்காக இரண்டு தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம்... இவையே படத்தின் பிரதான களம். படம் பார்த்து வெளிவருவோரின் சில துளி கண்ணீரும், சில நிமிட  அமைதியும் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான சாட்சி... அப்படி ஓர் அழுத்தமான படைப்பை நம் முன் வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்/நடிகர் அமீர்கான்.
இந்தியாவுக்காக சர்வதேச மல்யுத்தக் களத்தில் ஒரு தங்க மெடலையேனும் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சிய விதையை மகள்களின் மனதில் விதைத்து, அதை விருட்சமாக வளரச் செய்து, அது நனவாகும் சமயம் உண்டாகும் சிக்கல்களை அமீர் கானால்  சமாளிக்க முடிகிறதா என்பதே  படம். 2010- ல் காமல்வெல்த் விளையாட்டில் பதக்கங்கள் வென்ற கீதா - பபிதா சகோதரிகள் வாழ்வில்,  உண்மையாகவே நடந்த நிகழ்வை, திரைக்கதையாக்கி, படமாக நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
1988 காலகட்டம்... அமீர்கான் பணிபுரியும் அலுவலகத்தின் டிவியில் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் டேபிள், சேர்கள் ஓரம் வைக்கப்படுகின்றன. ஒலிம்பிக்கின் பின்னணி வர்ணனையில் அமீர்கானும், சக ஊழியரும் மல்யுத்தம் போடும் அந்த முதல் காட்சியிலேயே நம்மைப் படத்திற்குள் இழுத்துவிடுகிறார்கள். அங்கு தொடங்கும் லயிப்பு படத்தின் இறுதி நொடி வரை பற்றிப் பரவுகிறது. 
படம் ஒரு நாவல் வாசிப்பு போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது. ஹரியானா நமக்கு அந்நியம் தான் என்றாலும், அந்த வீடும், அவர்கள் சாப்பிடும் அந்த ரொட்டியும் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. தனக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறப்பதில் விரக்தியாக அமீர்கான் இருக்கும் காட்சிகள் நம்மையும் கனக்க வைக்கின்றன. ஏன் ஆண்தான் வேண்டும்?  பெண்களையே மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுகிறேன் என அமீரின் அந்த முடிவு... அந்த நேரத்தில் இறுக்கமான முகத்தில் இருந்து அவர் வெளிப்படுத்தும் ஒரு சின்ன சிரிப்பு படத்தின் உணர்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறது.
அமீர்கானின் நடிப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. உறுதியான உடல், பார்வையிலேயே மிரட்டுவது, வயோதிகத்தின் காரணமாக களத்தில் தடுமாறும்போது வெளியிடும் அந்தப் பெருமூச்சு என கிளாசிக்கல் நடிப்பு. தன்னை முன்னிலைப்படுத்தாமல், மகள்களின் கதாபாத்திரத்தையும் கதையையும் முன்னிறுத்தியதிலேயே நம் மனதில் விஸ்வரூபமாய் நின்று பிரமிக்க வைக்கிறார் அமீர்கான். ஒரு சூப்பர் ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொள்ள எந்த ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியையும் வைக்கவில்லை. மிகக் குறைந்த நிமிடங்களே வருகிற ஒரு காட்சிதான் இருக்கிறது. அதே சமயம் அமீர் கான் மட்டுமே படத்தின் கவன ஈர்ப்பு மையம் அல்ல. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்ரூப வார்ப்பு.  
கீதா, பபிதாவாக சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்ரா வாஸிம், சுஹானி பட்நாயகருக்கும் சரி, சிறிது வளர்ந்த கீதா, பபிதாவாக நடித்திருக்கும் ஃபாத்திமா சானா, சான்யா மல்ஹோத்ராவுக்கும் சரி, வேறுபாடுகளே தெரியாத உடல்மொழி. ஃபாத்திமா சனா, பயிற்சி பெறும் காட்சிகள், இளவயதுக்கே உரிய ஆர்வங்கள், அப்பாவுடனான உரசல் என்று ஒவ்வொன்றும் ஒருவித நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். நேஷனல் அகாடமி கோச்சாக வரும் கிரீஷ் குல்கர்னி கண்ணசைவிலேயே தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். 
மணலில் போடும் யுத்தத்திலும், போட்டியில் சிந்தெடிக் மேட்டில் நடக்கும் போட்டியின் போது அந்த மேட்டில் உரசி வரும் ”கிறீச்...” சத்தங்கள் உட்பட பின்னணி இசையில் அத்தனை நுணுக்கம். “டங்கல் டங்கல்...” பாட்டில் நம் நரம்புகள் சூடேறுகின்றன. இசை ப்ரீத்தம்!!! படம் முழுக்க உணர்வுபூர்வமாக காட்சிகள் பல. ஆனால், அவற்றில் முழ நீள வசனங்கள் எதுவும் இல்லை. ட்விட்டர் ஸ்டேட்டஸ் போன்ற பியூஷ் குப்தா, ஷ்ரேயாஸ் ஜெய்ன், நிகில் மல்ஹோத்ரா மற்றும் நிதேஷ் திவாரி குழுவின் வசனங்கள், அழுத்தமாக விதைக்கப்படுகின்றன! 
பெண் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டங்கள், வறுமைச் சூழ்நிலையில் உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான அடித்தளம், பயிற்சியும் முயற்சியும் தாண்டி மனதிடம் எவ்வளவு அவசியம் என பலப்பல அத்தியாயங்களை அதனதன் அழகு, ஆக்ரோஷத்துடன் மனதில் பதித்துச் செல்கிறது படம். அதிலும் மல்யுத்தக் காட்சிகளின் காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் உலகத் தரம். இரண்டே நிமிடங்களில் நடக்கும் அந்தப் போட்டிகளின் உக்கிரத்தை ஒரு கீற்று கூட குறையாமல் கடத்துகிறார்கள். சர்வதேச போட்டிகளின் அரை இறுதி, இறுதி போட்டிகளுக்கு வித்தியாசமான சவால்கள் வைத்து அதை கீதா எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு ரசிகரும் பதறுவது... ஆவ்ஸம் ‘டங்கல்’ மேஜிக்! இதற்காக  உழைப்பைக் கொட்டிய ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராம் மற்றும் மல்யுத்தப் பயிற்சியாளர் கிருபா ஷங்கர் படேல், சண்டைப் பயிற்சியாளர் ஷ்யாம் கௌஷல் ஆகியோருக்கு சிறப்பு சபாஷ்!   
தான் அடைய விரும்பிய ஒரு லட்சியத்தை தன் பெண்கள் அடைய வேண்டும் என்ற வெறியில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரியாகவே காட்சியளிக்கிறார் அமீர்கான். அந்தப் பெண்களின் சின்ன, சின்ன சிறிய ஆசைகள் கூட இரும்புக் கூண்டில் பூட்டி வைக்கப்படுகின்றன. முதலில் எந்தவொரு மோட்டிவேஷனுமே இல்லாமல் இருக்கும் கீதாவும், பபிதாவும் தங்கள் தோழியின் திருமணத்தின் போது, “ உங்கப்பா மாதிரி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்... அவர் உங்களுக்காக சிந்திக்கிறாரே...” என்று சொல்வதன் மூலம் தான் விளையாட்டில் தன்னார்வம் காட்டத் தொடங்குகிறார்கள்..
ஒரு பெற்றோரின் விருப்பங்களைத் திணிக்காமல்,பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டும் என்ற கருத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அதற்கு முரண்பட்டவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக் காட்டிற்கு தன்னுடைய விருப்பமான ”போட்டோகிராபியை” படிக்க விரும்பும் ஒரு பிள்ளை இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்... அவரின் அப்பா அவரை “எஞ்சினியரிங்” படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள். படம் முடிந்து அப்பா, அவர் மகனைப் பார்க்கும் பார்வையில் “ பார்... நான் சொல்வது, நீ செய்வது எல்லாம் உனக்கு கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் உனக்கு அது தான் நல்லது. நான் சொல்வதைக் கேள்...” என்பது போல் இருக்கும். ஏனென்றால், எல்லாப் பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும், புழுக்கங்களுக்கும் இறுதி விடையாக “வெற்றி” நிற்கிறது. இன்னொன்றையும் சொல்லலாம், டாக்டர் வீரர், எஞ்சினியரிங் வீரர் என்றெல்லாம் சொல்வதில்லையே.. விளையாட்டு வீரர் என்ற பதத்தைப் பெற வேண்டுமனால், சிறு வயதுமுதலே இப்படியான மனக்கட்டுப்பாடுகளோடுகூடிய பயிற்சிகளைப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதும் உண்மை. ஒருவர், தன் 18 வயதில் கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்று நினைத்தால் ஆகமுடியுமா? அதற்கெல்லாம் சிறுவயதுமுதலே அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது. அதையே படம் உணர்த்துகிறது.
ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இழைத்துச் செதுக்கியிருக்கும் படக்குழுவுக்கு எத்தனை பூங்கொத்துகள் பரிசாய் அளித்தாலும் தகும். படத்தில் அமீர் கேட்கும், 'நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு ஒவ்வொரு வீரனும் நெனைக்கறான். ஆனா அந்த வீரனுக்கு எதாவது செய்யணும்னு நாடு நெனைக்கறதில்ல' என்ற ஆதங்கத்திற்கு இனியாவது பதில் கிடைத்தால் நலம்.  
படத்தில், சிறுவயது கீதாவை முதன்முதலில் மல்யுத்தக் களத்தில் இறக்குவார் அமீர். நான்கு ஆண்கள் நின்று கொண்டிருக்க, 'இருப்பதிலேயே ஒல்லியாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்தால் இந்தப் பெண் கொஞ்சம் வலியோடு தப்பிக்கலாம்' என்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் பேசிக்கொள்வார்கள். கீதாவோ, இருப்பதிலேயே வலிமையான ஒரு வீரனை தேர்வு செய்வார். 
கிட்டதட்ட அமீர்கானும் அப்படித்தான். பலரும் நோஞ்சான் கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, ஆழமான கதையைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்குப் பரவசமளிக்கும் இந்தப் பயணம் பன்னெடுங்காலம் தொடரட்டும்! 
திரு.அமிர்கான் அவர்களே!!!!
இந்தியப் பெற்றோர்கள் - ‘உன் வாழ்க்கை... உன் கையில்’னு சொல்லிட்டு பசங்க அவங்களா முன்னேறிக்கணும்னு இருந்துட்டு இருக்கோம். ஆனால், பசங்க எதிர்காலத்துல பெத்தவங்களோட பங்கு எவ்வளவு முக்கியம், அதுக்காக காலம் முழுக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கும்னு பொளேர்னு புரிய வைச்சுட்டீங்க.
பாலிவுட்டின் சின்சியர் நடிகர்கள் - ‘ஒரு ஏழைக் குடும்பஸ்தனாக தொந்தியும் தொப்பையுமாக நடித்தது சரி. ஆனால், அதன்பின் படத்துக்காக இறுக்கி முறுக்கி செமத்தியான ‘சிக்ஸ் பேக்’ ஃபிட் உடம்பைக் கொண்டு வந்தீர்கள். ஆனால், அந்த ஃபிட் உடலுனான மல்யுத்தக் காட்சிகள் திரையில் வருவதென்னவோ... மிகச் சில நொடிகள்... அதிகபட்சம் சில நிமிடங்கள். இப்படி சில நிமிடங்களுக்காக அவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளீர். சூப்பர்
இந்தியப் பொதுமக்கள் - ’அமீர் கான் நாட்டுப் பற்று இல்லாதவர்’ என்று கோஷம் போட்ட மக்கள், டங்கல் படத்திற்கு முன் திரையரங்குகளில் கட்டாயமாக ஒலிபரப்படும்  தேசிய கீதத்திற்கு உண்மையான உணர்வோடு எழுந்து நின்றார்களோ இல்லையோ, படத்தின் இறுதிக் காட்சியில் பாடப்படும் தேசிய கீதத்திற்கு தானாக எழுந்து நின்றார்கள். அவர்கள், ‘நாங்க என்ன பண்ணாலும், ஏதோ பண்ணி ஸ்கோர் பண்ணிடுறீங்களே அமீர்.
Well Done Aamir khan..! 
---D.ராமராஜ்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் கல்வி தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வேறு பள்ளிக்கு TC கொடுத்து அனுப்பக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் கல்வி தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வேறு பள்ளிக்கு TC கொடுத்து அனுப்பக்கூடாது.NOMINAL ROLL -ல் எவர் பெயரும் விடுபடக்கூடாது. பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

திங்கள், 26 டிசம்பர், 2016

எலும்பு தேய்மானத்தை எவ்வாறு தடுக்கலாம்?







எலும்புத் தேய்மானம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை                 கால்சியம் சத்துக் குறைபாடு, உடற்பயிற்சியின்மை, துரித                              உணவுவகைகள் என காரணங்கள் உள்ளன.மனித உடலில் 206                               எலும்புகள் உள்ளது. எலும்புகளை எலும்பிலுள்ள புரதங்கள் வலுவடைய செய்கிறது.கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புபை வலுவடையசெய்கிறது.

           எலும்புபை வலுவடையசெய்ய பால் மற்றும் பச்சைக்                                       காய்கறிகள் தேவையான அளவு எடுத்துகொள்ளவேண்டும்                       . உடற்பயிற்சிகளை தினமும் செய்வதனால் உணவில் உள்ள                                      சத்துக்களை உடல் உறிந்துகொள்ளும். எலும்புகளுக்கு அளவுக்கு                             அதிகமாக அழுத்தம் கொடுபதனால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம்                 உள்ளது.  விபத்துத்தினால் ஏற்படும் காயத்தால் ரத்த கசிவு ஏற்பட்டு                        எலும்பு முறிவு ஏற்படும்.


           எலும்பு வலு குறையும் போது முதுகு தண்டு வலையதுடங்கும்                             அப்போது நமது  உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது                 இதனால் மூட்டு வலி, மூட்டு இணைப்பு பகுதி வலி(JOINT PAIN),                               மூட்டுகளுக்கு இடையேயான ஆயில்(Lubricants) குறைவது, உடலில்                                  நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

ஆதலால் உடற்பயிற்சியை தவறாமல் செய்து தசைப்பகுதியையும்,                     எலும்பையும் உறுதியுடன் வைத்துகொள்ள வேண்டும். யோகா                            செய்வதனால் நாள் பட்ட மூட்டு வலி குணமாகும்.35 வயது கடந்தவர்கள்           எலும்பின் தன்மை குறித்த பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள                                   வேண்டும். எலும்பில் தாதுக்களின் குறைபாடு ஏதேனும் இருந்தால்                                     தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால்                         எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு                  உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும்              அவசியம்.
இப்போது எலும்பு பாதுகாப்பு முறை பற்றி பார்போம்:
1) 20 வயது மேற்பட்டவர்கள் உடற்பயிற்சியை தொடங்கவேண்டும் அது நடைப்பயிற்சியோ, சைக்கிள்  ஓட்டுவதோ, பளு தூக்குவதோ, யோகா               செய்வதோ என எதுவென்றாலும் செய்யலாம். இதனால் எலும்பின்                                     உறுதி மேம்படும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு செய்யவேண்டும்.
2) ஓட்ஸ் கஞ்சியை  காலை உணவாக எடுத்து கொள்ளும் போது                           எலும்பின் தசைகளுக்கு தேவையான வழ வழப்பு தன்மை கிடைத்து                                    மூட்டு வலி பறந்தோடும். மூட்டு வலி வருவதை தடுக்கும்
3) பொன்னாங்கன்னிக் கீரையுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு                                          வர மூட்டு வலி குறையும்.மூட்டு வலி வருவதை தடுக்கும்.
4) பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை, சிறுதானியங்கள், ஓட்ஸ்,                         நிலக்கடலை உணவில் சேர்த்து சாப்பிட எலும்பு வலுவடையும்.
5) ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து                          அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால்                                        மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.
6) உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து                       பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம்,                                மூட்டு வலி குணமாகும்.
7) ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல்                                    குடைச்சல் குணமாகும்.

5500 கி.மீ சென்று எதிரியை தாக்கும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி



இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 5500 கி.மீ சென்று எதிரியை தாக்கும் அக்னி 5 வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. ஒரிசா அருகே வங்கக்கடலில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 1500 எடை வரை அணு ஆயுதங்களை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் உடையது இது. ஏற்கனவே அக்னி வரிசையில் மூன்று ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ளன. அக்னி 4 மற்றும் 5 ஏவுகணைகள் சீனாவின் வடக்கு பகுதி வரை சென்று தாக்கும் திறன் உள்ளதால் பாதுகாப்பு தொடர்பான மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன.
அக்னி ஏவுகணை டிஆர் டிஓ எனப்படும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஏவுகணைகளை தடுக்கும் போர் தடுப்பு முறைகளையும் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. அக்னி ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததன் மூலம் ஏவுகணை தொழில்நுட்ப திறன் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டே சேர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

NMMS தேர்வுக்கு விடுமுறை நாட்களிலும் இலவச பயிற்சி அளிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்



அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் பயிலும் 70 மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. 





இப்பயிற்சியை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடத்தில் நிதியுதவியும் செய்து நடத்தும் ஆசிரியர் திரு.ர.ஜாபர்சாதிக் அவர்களுக்கும்,வினாக்களை தட்டச்சி செய்து தந்து உதவும் ஆசிரியர் திரு.குமரவேல் அவர்களுக்கும், மேலும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வரும் ஆசிரியர்களான திரு.மணிகண்டன் திரு.தமிழ்வேல், திரு.பாலகிருஷ்ணன். ஆசிரியைகளான திருமதி .பூங்கொடி, திருமதி.சிவசக்தி, திருமதி.சிவானந்த விஜயலெட்சுமி, திருமதி.விஜயா மற்றும் திருமதி.சிவகாமி போன்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாணவர்களுக்கு பரிசுகள், தேனீர்,பிஸ்கட்கள், வினா மற்றும் விடைத்தாள்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவைகளுக்கு நிதியுதவி அளித்துவரும் ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.

நன்றி: திரு.மணிகண்டன் அவர்கள்

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும்..

ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது.
மிகச்சிறிய பட்டை நமது புகைப்படங்கள் மட்டுமில்லாமல் வீடியோ, பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள உதவுகிறது.

நம் நினைவுகளை பல நாட்கள் கழித்து மீண்டும் திரும்ப பார்க்க புகைப்படங்கள் வழி செய்கின்றன. இது போல் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் மெமரி கார்டில் இருந்து அழிந்து போனால் அதனை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..

முதலில் செய்யக் கூடாதவை:

மெமரி கார்டில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்கள் அழிந்து போனதை உறுதி செய்ததும், மெமரி கார்டினை எதுவும் செய்யாதீர்கள். புகைப்படங்களை புதிதாக சேமித்து வைப்பது, மெமரி கார்டினை ஸ்கேன் செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. 

ரிக்கவரி மென்பொருள் தேவை:

அடுத்து ஆன்லைனில் கிடைக்கும் 'ரிக்கவரி சூட்', அதாவது அழிந்து போனவற்றை மீட்க பிரத்தியேகமாக கிடைக்கும் மென்பொருளினை டவுன்லோடு செய்ய வேண்டும். விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினியாக இருப்பின் ரெக்குவா மென்பொருளையும், மேக் இயங்குதளம் கொண்டிருக்கும் பட்சத்தில் போட்டோரெக் மென்பொருளையும் பயன்படுத்தலாம். 

இவை இரண்டும் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் ஆகும். இவை இல்லாமல் பல்வேறு மென்பொருள்களும் சந்தையில் கிடைக்கின்றன. 

இன்ஸ்டால்:

நீங்கள் கணினியில் டவுன்லோடு செய்த மென்பொருளினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதன் பின் புகைப்படங்களை மீட்க துவங்க முடியும். 

ரெக்குவா மென்பொருள்:

விண்டோஸ் இயங்குதளத்தில் ரெக்குவா இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை ஸ்டார்ட் செய்ய வேண்டும். பின் நீங்கள் தொலைத்த தரவு எது என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

ரெக்குவா மென்பொருளில் அனைத்து தரவுகள், புகைப்படங்கள், இசை, கோப்புகள், வீடியோ, சுறுக்கப்பட்டவை மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மீட்க முடியும். 

பின் நீங்கள் பார்க்க வேண்டிய இடத்தை ரெக்குவா தெரிவிக்கும் வரை மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து கார்டு ரீடரை கணினியில் இணைத்து, உங்கள் கேமரா புகைப்படங்களை பதிவு செய்யும் ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும்.

ஒருவேலை வேறு ஃபைல்களை மீட்க முயற்சித்து அவை மீட்கப்படவில்லை எனில் ரெக்குவாவின் "Switch to advanced mode" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த அனைத்து தரவுகளையும் மீட்க முடியும். 

அழிந்து போன அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து பின் ரிக்கவர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ரிக்கவர் செய்யப்பட்ட ஃபைல்களை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். 

போட்டோரெக் மென்பொருள்:

போட்டோரெக் மென்பொருளை ஸ்டார்ட் செய்து, பாஸ்வேர்டு கேட்கப்படும் பட்சத்தில் பதிவு செய்து தொடர வேண்டும். பின் நீங்கள் மீட்க வேண்டிய ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து என்டர் பட்டனை கிளிக் செய்து FAT16/32 தேர்வு செய்து, மீண்டும் என்டர் பட்டனை கிளிக் செய்து அடுத்த மெனுவிற்கு செல்ல வேண்டும். இனி அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

அடுத்த ஆப்ஷனில் நீங்கள் பல்வேறு ஃபைல்களை கையாள வேண்டியிருக்கும். ஒரு வேலை மெமரி கார்டு கரப்ட் ஆகி இருந்தால் "Whole" தேர்வு செய்ய வேண்டும். கரப்ட் ஆகாத பட்சத்தில் "Free" ஆப்ஷனை கிளிக் செய்யலாம். மீண்டும் என்டர் பட்டனை கிளிக் செய்து மீட்கப்பட்ட புகைப்படங்களை சேமிக்கும் ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும். இதனை உறுதி செய்ய C பட்டனை கிளிக் செய்து, ரிக்கவரியை துவங்கலாம்.

இனி ஸ்கேன் செய்து மீட்கப்பட்ட ஃபைல்களை பார்க்க வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த புகைப்படங்களை பார்க்க முடியும். முந்தைய மெனுவில் புகைப்படங்களை மட்டும் ரிக்கவர் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் ஃபைல்களின் பெயர் JPEG என்ற ஃபார்மேட்டில் காணப்படும். 

ஒருவேலை வேறு ஃபைல் ஃபார்மேட் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் மெனுவின் "FileOpts" கமாண்ட் பயன்படுத்தி சில ஃபைல்களை தேடலாம். சில ஃபைல்கள் .tiff என நிறைவுற்றிருப்பதை பார்க்க முடியும். 


இனி மீட்கப்பட்ட ஃபைல்களை பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்ளுங்கள்.