>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PAN CARD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAN CARD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

பான் கார்டு (PAN CARD ) வைத்து இருப்பவர்களா நீங்கள் ? இந்த பதிவை பின்பற்றுங்கள் இல்லை என்றால் Rs 10000// அபராதம்...

 பான் கார்டு (PAN CARD ) வைத்து இருப்பவர்களா நீங்கள் ? இந்த பதிவை பின்பற்றுங்கள் இல்லை என்றால் Rs 10000// அபராதம்...


வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272 பி இன் கீழ், பயன்பாட்டில் இல்லாத பான் கார்டை 

நான்(PAN- PERMANENT ACCOUNT NUMBER) வைத்திருப்பவர்கள் அனைவரும் பான் கார்டுடன் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.


மேலும் இதற்காக கடைசி தேதி 2021 மார்ச் 31ம் தேதி என கூறியுள்ளது. அவ்வாறு இணைக்கவில்லை என்றால் உங்கள் கார்டு செல்லாமல் போய்விடும் மேலும் முக்கிய பிரச்சனையாகஉங்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இணைப்பதற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு தொடர்பான தவறான தகவல்களை வழங்கினால், ரூ .10,000 அபராதம் விதிக்கப்படுவதாக வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் தெரிவித்திருந்தார்.

மேலும், சில பரிவர்த்தனைகளில், பான் அட்டை (PAN CARD) தொடர்பான தகவல்களை நிரப்புவது கட்டாயமாகும், அங்கு பான் அட்டை விவரங்களை வழங்காததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். முறையாக பான் கார்டு ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோர் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

முன்னதாக வருமான வரித் துறை ஆதார் இல்லாத பான் கார்டை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யலாம் என்று கூறியிருந்தது. மேலும், வரி செலுத்துவோர், வருமான வாரியை தாக்கல் செய்யவும் முடியாது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் கீழ், வருமான வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரு குடிமகனும் பான் மற்றும் ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பது அவசியம்.

இரண்டு ஆவணங்களும் இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோரின் வரி ஏற்றுக்கொள்ளப்படாது மேலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.உங்கள் பான் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்ப்பது எப்படி? இதை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அணுகலாம்.

www.incometaxindiaefiling.gov.in

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறைஉங்கள் தொலைபேசியில், IDPN என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு ஆதார் எண் மற்றும் பான் எண்ணை உள்ளிடவும்.

இந்த தகவலை 567678 அல்லது 56161 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும். ஆதார் பான் அட்டையை ஆன்லைன் மூலமாகவும் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று சுலபமாக இணைக்கலாம்....


............................

வியாழன், 5 மார்ச், 2020

PAN எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஈஸி!! வழிமுறை இது தான்!!




ஒருவர், பல PAN கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர்.



1. http://www.incometaxindiaefiling.gov.in/home  என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.


2. Link Aadhaar Here என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், PAN எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.


4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.


5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.


இதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்து விடும்.

..............................

சனி, 14 டிசம்பர், 2019

PAN card நகலை ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்:


நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு எனப்படுவது ,முக்கியமான நிதி ஆவணங்களில் ஒன்றாகும். நிலையான வைப்பு, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு போன்ற பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை நடத்த பான்எண் தேவைப்படுகிறது.

படி 1: https://www.tin-nsdl.com/ க்குச் செல்லவும் 
படி 2: முகப்புப்பக்கத்தில், 'reprint of pancard ' என்பதைக் கிளிக் செய்க. முகப்புப்பக்கத்தில் இணைப்பை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், 'services ' என்பதைக் கிளிக் செய்து, 'pan ' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணினித் திரையில் புதிய வலைப்பக்கம் திறக்கப்படும்.


படி 3: உங்கள் கணினித் திரையில் புதிய வலைப்பக்கம் திறக்கப்படும். உங்கள் பான், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை பதியவும் . உங்கள் பான் கார்டை மறுபதிப்பு செய்வதற்கான நோக்கத்திற்காக ஆதார் தரவைப் பயன்படுத்த அனுமதிக்க பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்
படி 4: கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க.
படி 5: உங்கள் ரகசிய தனிப்பட்ட விவரங்கள் உங்கள் கணினித் திரையில் காண்பிக்கப்படும்.
படி 6: நீங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெற விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதாவது மின்னஞ்சல், மொபைல் அல்லது இரண்டிலும். மின்னஞ்சல் ஐடி அல்லது / மற்றும் மொபைல் எண் ஆகியவை உங்கள் அசல் பான் விண்ணப்பத்தில் வருமான வரித் துறைக்கு நீங்கள் வழங்கியவை.
வருமான வரித் துறையில் கிடைக்கும் விவரங்களின்படி உங்கள் பான் அட்டை அச்சிடப்படும் என்பதை உறுதிப்படுத்த பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.


படி 7: ஜெனரேட் ஓடிபி என்பதைக் கிளிக் செய்க. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் OTP அனுப்பப்படும் அல்லது இரண்டுக்குமே அனுப்பப்படும் .. 
படி 8: விரும்பிய பெட்டியில் OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க. 
படி 9: OTP சரிபார்க்கப்பட்டவுடன். கட்டணம் செலுத்துமாறு கேட்கப்படுவீர்கள். கட்டணம் செலுத்த 'Pay Confirm' என்பதைக் கிளிக் செய்க. 
படி 10: கட்டணம் செலுத்துங்கள். விண்ணப்பதாரர் ரூ .50 கட்டணம் (வரி உட்பட) செய்ய வேண்டும். மறுபதிப்பு செய்யப்பட்ட பான் அட்டை வெளிநாட்டு முகவரிக்கு வழங்கப்பட வேண்டுமானால், தனிநபர் ரூ .959 (வரி உட்பட) செலுத்த வேண்டும்..

.............................................

வியாழன், 14 டிசம்பர், 2017

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.
அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
*எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது?*
வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.
பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.
டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லதுயூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.
பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும்.
அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.
யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினைரீபிரிண்ட் செய்திட முடியும்.

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.
அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
*எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது?*
வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.
பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.
டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லதுயூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.
பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும்.
அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.
யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினைரீபிரிண்ட் செய்திட முடியும்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்..

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.
வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
என்ன செய்யலாம்? : இதுவரை இணைக்காதோர், 'income taxindiaefiling.gov.in' என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.
இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இணைக்க முடியும்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு


பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது.
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.

How to link PAN card with Aadhaar online...

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
1.On the website, click on the link on the left saying Link Aadhaar.
2.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.

3.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. 
4.Enter the OTP and click on Save to continue.
5. You can also link the details after logging in to the income tax website. 
Log in as you normally would and then click on Profile Settings in the top menu.
6. Next, find Link Aadhaar.
7.Enter your Aadhaar number and click on Save to continue.


This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சர்வர் முடக்கம்: ஆதார் - பான் இணைப்பில் சிக்கல்....

ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைக்க ஏராளமானோர் முயன்றதால், வருமான வரித்துறை இணையதள, 'சர்வர்' முடங்கியது. வருமான வரி அலுவலகத்தில், காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஜூலை, 31, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, காலக்கெடு, ஆக., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஏமாற்றம் : முன்னதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், ஆதார் - பான் எண்களை இணைக்க, நேற்று, கவுன்டரில், கூட்டம் குவிந்தது. எனினும், ஒரே நேரத்தில், பலரும் வருமான வரித்துறை இணையதளத்தில் நுழைந்ததால், 'சர்வர்' பல மணி நேரம் செயல் இழந்தது.
இதனால், வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆதார் - பான் இணைப்பதில், பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை, வருமான வரி தலைமை அலுவல கத்தில், 'பயோ மெட்ரிக்' கருவி வைக்கப்பட்டுள்ளது.

அதிக கூட்டம் : இணையதளத்தில், ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 'பயோ மெட்ரிக்' கருவியை பயன்படுத்தலாம். இதில், கைவிரலை பதித்தால், அது, ஆதார் அட்டையின் போது, பதித்த ரேகையுடன் ஒப்பிட்டு, உடனே, இரு எண்களையும் இணைத்து விடுகிறது. அதனால், இங்கும் அதிக கூட்டம் குவிகிறது.

How to link PAN card with Aadhaar online..

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
On the website, click on the link on the left saying Link Aadhaar.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. Enter the OTP and click on Save to continue.You can also link the details after logging in to the income tax website. Log in as you normally would and then click on Profile Settings in the top menu.Next, find Link Aadhaar.Enter your Aadhaar number and click on Save to continue.
This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு..

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைத்த பிறகே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண் வைத்திருக்கும் ஏராளமானோர், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காததால், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது....

புதன், 12 ஜூலை, 2017

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெள்ளி, 30 ஜூன், 2017

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?

ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

 அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.
முக்கியக் குறிப்பு:
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் இரண்டும் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்புச் செய்ய முடியாது.
 இணையதளம்:
இணையதளம் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கப் புதிய இரண்டு இணைப்புகளை வருமான வரி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தம்:
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தித் திருத்தவும் செய்யலாம்.
 சரிபார்ப்பு:
இணைப்பிற்கான படிகளைச் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு Y என்று பதில் அளிப்பதன் மூலம் எளிதாக இணைப்பைச் சரிபார்க்க முடியும்.

சனி, 10 ஜூன், 2017

வருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை....

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் எண் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரித் தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தங்கள் மனுக்களில் "ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் 'பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, 'போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வியாழன், 1 ஜூன், 2017

'பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க எஸ்.எம்.எஸ்., வசதி

பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமாக இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு இல்லாமல் அதை செய்ய முடியாது.
அந்த பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, வருமான வரித்துறை அறிவித்தது. பின், வருமான வரித்துறையின் இணையதளத்தின் மூலமாக, பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்கும் வசதி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவற்றை, மொபைல் போனில் இருந்து, எஸ்.எம்.எஸ்., வழியாக இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
 இதன்படி, UIDPAN என அடித்து, இடைவெளி விடாமல், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், ஒரு எழுத்து இடைவெளி விட்டு, பான் கார்டு எண்ணையும் டைப் செய்து, அதை, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்
 உடனே, பான் கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு விடும். ஆனால், பான் கார்டில் உள்ள பெயருக்கும், ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் சிறிய வித்தியாசம் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., வசதியை பயன்படுத்த முடியாது
 அவ்வாறு பெயரில் சிறிய மாற்றம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்ல அறிவுறுத்தி, எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பப்படும்.

திங்கள், 29 மே, 2017

கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!.....

கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை.
பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சனி, 13 மே, 2017

'பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி

புதுடில்லி: வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தத் தின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. மேலும்,ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. 

இதுவரை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன், 1.18 கோடி பேர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளதால், மீதமுள்ளவர்களும் தங்கள் விபரங்களை தாக்கல் செய்வதற்காக, புதிய, எளிமையான வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள செய்தி:

வருமான வரித்துறையின் இணையதளத்தில், தங்கள்பான் கார்டு, ஆதார் எண், ஆதாரில் குறிப் பிடப்பிட்டுள்ள பெயர் ஆகியவற்றை பதிவு செய் தால் போதும். உடனடியாக, பான் கார்டுடன், ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். ஆதார்விபரங்களில் சிறு தவறுகள் இருந்தால், ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப் படும். அதை பதிவு செய்தால், இணைக்கப்பட்டு விடும்.

பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டிலுமே, ஒரே பாலினம் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டி ருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 6 மே, 2017

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கும் வழிமுறை

Adhaar card and Pan linking option now 

activated on income tax website whereby

 now, name as per Adhaar card also to be 

given. Both get linked even if there is difference

 in name.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017


PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.
பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது.
இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..
இணைய முகவரி
இந்த இணைய முகவரிக்குச் சென்று (https://tin.tin.nsdl.com/pan/changerequest.html)PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
 
முக்கிய விபரங்கள்
உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.
கட்டணம்
உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).
கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம்
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.
ரசீது
கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்.
புகைப்படங்கள்
தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.
விண்ணப்பம்
இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முகவரி
NSDL e-Governance Infrastructure Limited, 5th floor,
Mantri Sterling, Plot No. 341,
Survey No. 997/8, Model Colony,
Near Deep Bungalow Chowk,
Pune - 411016'.
பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).