>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
UNIVERSITY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
UNIVERSITY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 செப்டம்பர், 2018

அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு விடைத்தாள் நவம்பர் முதல் அமல்

காரைக்குடி அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு முறையிலான விடைத்தாள் பரீட்சார்த்த முறையில் நவம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.


தேர்வாணையர் சக்திவேல் கூறும்போது: அழகப்பா பல்கலையில் விடைத்தாள்கள் தற்போது பார்கோடு மூலம் திருத்தப்பணிக்கு செல்கிறது. இதைவிட அதிக பாதுகாப்பு மிக்க விடைத்தாளை உருவாக்கும் 'என்கிரிப்ட் கியூ ஆர் கோடு' முறையிலான விடைத்தாள்கள் வடிவமைக்கும் பணி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து அழகப்பா பல்கலை தேர்வு துறை கடந்த ஆறு மாதமாக மேற்கொண்டு வந்தது.

பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகின்ற நவம்பரில் அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இணைப்பு கல்லுாரி மற்றும் பல்கலையின் அனைத்து துறைகளுக்கு நடக்கும் தேர்வில் பரீட்சார்த்த முறையில் இந்த விடைத்தாள் பயன்படுத்தப்பட உள்ளது. மிகுந்த பாதுகாப்பு என்பதால் மாணவர்களுக்கு பயனளிக்கும். தமிழகத்தில் அழகப்பா பல்கலையில்தான் இது முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது, என்றார்

புதன், 25 ஏப்ரல், 2018

24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு.........

இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பட்டப் படிப்புகள் வழங்கத் தகுதி இல்லாதவை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) இன் படி, மத்திய அல்லது மாநில அரசு சட்டத்தால் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்கள், யுஜிசி சட்டம் பிரிவு (3) கீழ் அனுமதிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பட்டப் படிப்புகளுக்கான பட்டத்தை வழங்க முடியும்.
இந்தச் சட்டங்களின்படி உருவாக்கப்படாமல், யுஜிசியின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் இயங்கி வரும் 24 கல்வி நிறுவனங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படுகின்றன. அக்கல்வி நிறுவனங்கள் பட்டங்கள் வழங்கத் தகுதியில்லாதவை என யுஜிசி அறிவித்துள்ளது.
போலி பல்கலைக்கழகங்கள் எவை?
மைதிலி பல்கலைக்கழகம் (விஷ்வவித்யாலயா), பிகார்.
கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், தரியாகஞ்ச், தில்லி.
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.
தொழில்படிப்பு (வொக்கேஷனல்) பல்கலைக்கழகம், தில்லி.
ஏ.டி.ஆர். சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், புதுதில்லி.
இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புதுதில்லி.
விஸ்வகண்ணா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுதில்லி.
அதியாத்மிக் விஷ்வவித்யாலய, ரோஹினி, தில்லி.
பதகன்விசர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சமூகம், பெல்காம், கர்நாடகா.
புனித ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளம்.
ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாகபுரி.
இந்திய மாற்று மருந்து நிறுவனம், சவுரிங்கிசாலை, கோல்கத்தா.
இந்திய மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தகுர்புகுர் , கோல்கத்தா.
வரணசேயா சம்ஸ்க்ருத விஷ்வவித்யாலய, வாராணசி.
மஹிலா கிராம வித்யபீடம் (விஷ்வவித்யாலய - மகளிர் பல்கலைக்கழகம்), அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
காந்தி ஹிந்தி வித்யபீடம், அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப்பிரதேசம்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலை.), அலிகார், உத்தரப்பிரதேசம்.
உத்தரப்பிரதேஷ் விசுவ வித்யாலய, மதுரா, உத்தரப்பிரதேசம்.
மஹரானா பிரதாப் சிக் ஷா பரிஷத், பிரதாப்கர், உத்தரப்பிரதேசம்.
இந்திரபிரசாதா ஷிக் ஷ பரிஷத், நொய்டா (பகுதி-2) உத்தரப்பிரதேசம்.
நவபாரத் ஷிக்ஷ பரிக்ஷத், ரூர்கேலா.
வேளாண் மற்றும் தொழில்நுட்ப வடக்கு ஒடிஸா பல்கலைக்கழகம், மயூர்பஞ், ஒடிசா.
ஸ்ரீ போதி உயர் கல்வி அகாதெமி, புதுச்சேரி.

வியாழன், 1 பிப்ரவரி, 2018


TNOU - B.Ed., Spot Admissions - Date Extended - Reg.

The School of Education has extended the last date for B.Ed., spot admissions upto 28.02.2018.
The Joint Director to Govt., School Education Dept., has sent a letter to the Directors of Various Boards of School Education Dept., regarding to take up of B.Ed., degree programme by the in-service teachers.
The Director of Elementary Education, Chennai has also sent a letter to all the DEEOs of Tamil Nadu regarding the same.
With regards,
--
Head i/c,
School of Education,
Tamil Nadu Open University,
577-Anna Salai, Saidapet,
Chennai - 600 015.
Phone: 044-24306657/58.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

MADURAI KAMARAJ UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020

MADURAI KAMARAJ UNIVERSITY
DIRECTORATE OF DISTANCE EDUCATION
APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020

Cost of Application- RS.1000/-

Programme Fee- RS.18,500/- Per Year

Last date to submit the application - 28.02.2018

www.mkudde.org

Click Here

புதன், 20 டிசம்பர், 2017

புதன், 29 நவம்பர், 2017

சிறந்த கல்லூரிகள்: அகமதாபாத் 


ஐஐஎம் முதலிடம்!

எம்பிஏ பட்டப் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களில் அகமதாபாத் ஐஐஎம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக இன்று (நவம்பர் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

க்யூ.எஸ். குளோபல் ரேங்கிங் 2018 பட்டியலில் உலக அளவில் எம்பிஏ படிப்பு வழங்கும் சிறந்த 50 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஹார்வேர்டு (Harvard) மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. இன்சீட் (INSEAD)இரண்டாவது இடத்திலும், ஹெக் (HEC)மூன்றாவது இடத்திலும் உள்ளன. யேல் பல்கலைக்கழகம் 18ஆவது இடத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 19ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவிலிருந்து ஒரே ஒரு கல்லூரிக்கு மட்டும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் நிறுவனம் 49ஆவது இடத்தைப் பிடித்து இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 50ஆவது இடத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. 100 இடங்களுக்குள் இரு இந்திய நிறுவனங்கள் உள்ளன. ஐஐஎம் பெங்களூர் 58ஆவது இடத்திலும் இந்திய மேலாண்மைப் பள்ளி 93ஆவது இடத்திலும் உள்ளன.

திங்கள், 6 நவம்பர், 2017

நவம்பர் 3 அல்ல நவம்பர் 25 அன்று தேர்வுகள் நடைபெறும்!

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது

வெள்ளி, 28 ஜூலை, 2017

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை.....

 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- 1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம்பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமானகட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275

சனி, 3 ஜூன், 2017

தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல்: பல்கலை மானிய குழு வெளியிடுகிறது

உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.


மூன்று பிரிவுகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, கல்லுாரிகளை, அவற்றின் கல்வித் தரம் அடிப்படையில், மூன்று பிரிவாக பிரிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசிய தர மதிப்பீட்டுக் குழுவான, 'நாக்' மூலம், 3.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, முதல், 50 இடங்களுக்குள் வந்த கல்லுாரிகள், முதல் பிரிவில் சேர்க்கப்படும்.

நாக் மதிப்பீட்டில், 3.01 முதல், 3.49 வரை மதிப்பெண் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், 51 முதல், 100 இடங்களில் வந்த கல்லுாரிகள், இரண்டாம் பிரிவில் இடம்பெறும். இவற்றில் வராத கல்லுாரிகள், மூன்றாம் பிரிவில் இடம்பெறும்.

இந்த பிரிவுகளின்படி, கல்லுாரிகளின் தரம் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அவற்றுக்கான தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.நாக் மதிப்பீட்டையும், தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதையும், தொடர்ந்து கடைபிடிக்காவிட்டால், அந்த கல்லுாரிகள், பின்னுக்கு தள்ளப்படும். 


செயல் திறன் ஆய்வு :

இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் டிசம்பரில், கல்லுாரிகளின் செயல் திறன் ஆய்வு செய்யப்படும். அதே போல, இந்திய பல்கலைகளுடன் இணைய உள்ள, வெளிநாட்டு பல்கலைகளும், கல்லுாரிகளும், சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என, விதிகள் கொண்டு வர உள்ளதாக, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது. இது குறித்த வரைவு விதிகள், www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாளர்கள், பொது மக்கள், தங்கள் கருத்துக்களை, ஜூன், 15க்குள், feedback2ugc@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 28 மே, 2017

சென்னை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு.....

சென்னை பல்கலையின் தொலை நிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கு, ஜூன், 3 முதல், தேர்வுகள் துவங்க உள்ளன. வாரந்தோறும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தேர்வு நடக்கும். தேர்வு அட்டவணை, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கு,ஜூன், 13ல் தேர்வு துவங்கும். தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, மே, 27 இரவு, 8:00 மணி முதல், இணையதளத்தில்பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 14 மே, 2017

தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலை. மருத்துவமேற்படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ்) 562 இடங்கள், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்கள்உள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) 19 இடங்கள் உள்ளன.இந்நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான முதல்கட்ட கலந் தாய்வு கடந்த 8-ம் தேதி முதல் 11- தேதி வரை நடைபெற்றது.
இதில் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் மற்றும் பட்டயமேற்படிப்பில் 722 இடங்களும், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 17 இடங் களும் நிரப்பப்பட்டன. கலந் தாய்வு முடிவில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக உள்ளன.மருத்துவ பட்டமேற்படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 42 இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் நிரப்பப்படஉள்ளன.
இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நேற்று வெளியிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேர் இடம் பெற்றுள்ளனர். நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களின் இடங் களுக்கான தரவரிசைப் பட்டிய லில் 4,107 பேர் இடம் பிடித் துள்ளனர்.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,107 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

ஞாயிறு, 7 மே, 2017

திறந்தநிலை பல்கலை 'அட்மிஷன்' நீட்டிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.பல்கலை பதிவாளர் விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 37 இளநிலை, 32 முதுநிலை, 31 தொழிற்கல்வி மற்றும் ஐந்து சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர்களை சேர்க்க, ஏப்., 30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது, மே, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ள லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017


பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில்
இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.
இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம் என்று தெரிகிறது.
ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 24 ஏப்ரல், 2017


தமிழ்ப் பல்கலைக் கழகம்-தொலைநிலைக்கல்வி -2017-19 ஆம் கல்வியாண்டு இளங்கல்வியல் ( பி.எட் ) சேர்க்கை.விண்ணப்பிக்க கடைசி நாள்: 16/06/2017 - விளம்பரம் - விண்ணப்பம் - விவரக்கையேடு - முழு விவரம்.....

தமிழ்ப் பல்கலைக் கழகம்-தொலைநிலைக்கல்வி -2017-19 ஆம் கல்வியாண்டு இளங்கல்வியல் ( பி.எட் ) சேர்க்கை.விண்ணப்பிக்க
கடைசி நாள்: 16/06/2017 - விளம்பரம் - விண்ணப்பம் - விவரக்கையேடு -
 முழு விவரம்..... CLICK HERE

சனி, 8 ஏப்ரல், 2017


பட்டப் படிப்புகள்: பல்கலை அறிவிப்பு.

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராமு தெரிவித்துள்ளதாவது:
இளங்கலை, முதுகலை பட்டங்கள், பி.எட்., பி.எல்.ஐ.சி., எம்.எல்.ஐ.,சி., பி.ஜி.எல்., சான்றிதழ், பட்டய சான்றிதழ் படிப்புக்கு ஏப்., 2017ம் ஆண்டு நடக்கும் அல்பருவ தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்.,17 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இளங்கலைக்கு தேர்வு மே 5, முதுகலை ஜூன் 2, சான்றிதழ், பட்டய சான்றிதழ் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,விற்கு ஜூன் 12ம் தேர்வுகள் துவங்குகின்றன. ஏப்., 24 வரை அபராதத்துடன் விண்ணப்பம் பெறப்படும். கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்தி அதற்கான 'இ ரிசிப்ட்'யும் இணைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 மார்ச், 2017


ALAGAPPA UNIVERSITY* DDE - December 2016 Results Published today

Flash News
ALAGAPPA UNIVERSITY
DDE - December 2016 Results Published today

திங்கள், 27 பிப்ரவரி, 2017

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை நூலகர், உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர், பிரிவு அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, நர்ஸ், தனிப்பட்ட உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 44
கல்வித்தகுதி: இளநிலை பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டணம்:ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-
கடைசித் தேதி: 21.03.2017.
மேலும் விவரங்களுக்கு http://meta-secure.com/CUTN-Phase3/pdfs/notifications.pdf என்ற இணையதள முகவரியைபார்த்து தெரிந்துகொள்ளவும்.