>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
BSNL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BSNL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 மே, 2017

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி 333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்யும் சலுகையை வழங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் எஸ்டிவி 333, 339 349, 395 ஆகிய 4 டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதில், எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 3 ஜிபி அளவுக்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டுமே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டத்தில் அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாயப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 3 மே, 2017

அதிவேக பிராட்பேண்ட் சேவை BSNL அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.675 கட்டணத்துக்கு அதிக வேகத்துடன் செயல்படும் பிராட் பேண்ட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் குறைந்த பட்ச பதிவிறக்க வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதுதவிர, பல்வேறு திட்டங்களில் பதிவிறக்கம் செய்யும் அளவு 250 சதவீதம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 20 ஜிபியில் இருந்து 70 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.1199 காம்போ திட்டத்தில் பதிவிறக்க வேகம் 2 எம்பிபிஎஸ்-ல் இருந்து 4 எம்பிஎஸ் ஆக 20 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கு குறை வாகவே உள்ளது.இத்திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள வாடிக்கையாளர் களுக்கு இந்த புதிய பிராட்பேண்ட் சேவை மே 1-ம் தேதி முதல் வழங் கப்படும். இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும், இத்திட்டத்தில் குடும்ப நண்பர்கள் இடையே 3 தரைவழி தொலைபேசி எண்களுக்கு அளவில்லா அழைப்பு வசதியும் உண்டு. இதுகுறித்து கூடுதல் விவரங்களை 1800-345-1500என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.chennai.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 3 ஏப்ரல், 2017


பிஎஸ்என்எல் அதிரடி : ஒரு ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா.!


ஒருவழியாக ஜியோவின் ஆக்கிரமிப்பு சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஜியோ

அடுத்த 3 மாதங்களுக்கான அதன் "கிட்டத்தட்ட" இலவச சேவைகளை அறிவித்துள்ளதை தொடர்ந்து மீண்டும் இந்திய தொலைத்தொடர்பு துறைகளுக்குள் கட்டண யுத்தம் கிளம்பியுள்ளது. முதலில் ஐடியா நிறுவனம் இன்று அதன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.300/- கட்டண சேவை சலுகையை முன்னெடுத்துள்ளது. மறுபக்கம் மாநிலத்தின் டெல்காஸ் நிறுவனமான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள சலுகைகள் பயனர்களுக்கு திருவிழாக்காலம் ஆரம்பித்துள்ள ஒரு மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.339/-

நாள் ஒன்றிற்கு 10ஜிபி எம்டிஎன்எல் இப்போது அதன் ரூ.319/- திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்கும் அதன் திட்டத்தை அறிவித்துள்ளது மறுபுறம் பிஎஸ்என்எல் நாள் ஒன்றிற்கு 10ஜிபி அளவிலான தரவை வழங்கும் அதன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
2ஜிபி எம்டிஎன்எல் வழங்கும் ரூ.319/- திட்டத்தின் கீழ், பயனர்கள் எம்டிஎன்எல் பிணையத்தில் உள்ள வரம்பற்ற குரல் அழைப்புகளோடு சேர்த்து ஒரு நாளைக்கு 2ஜிபி தரவையும் அனுபவிக்கலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ரூ.319 திட்டமானது தற்போது தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் உள் எம்டிஎன்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மறுபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 10ஜிபி அளவிலான தரவு இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வரம்பற்ற இலவச அழைப்புகளை (எந்த நெட்வொர்க்குடனும்) வழங்குகிறது.
ரூ.339/- இந்த பிஎஸ்என்எல் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளும் ஒரு திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேபோல 28 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா வழங்கும் ரூ.339/- திட்டமும் பிஎஸ்என்எல் ஜியோவிற்கு எதிராய் வெளியிட்ட சிறந்த கட்டண சலுகைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 மார்ச், 2017

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையைதற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது:பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டிசேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது.
இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டாசேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம்.
இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (வாய்ஸ் கால்) நன்கு தெளிவாக கேட்கும்.இவ்வாறு கலாவதி கூறினார்.