>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
EB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது மிக சுலபம். இனி ஆதார் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை TNEB AADHAR LINK....

 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும். 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும். 

முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள் 

 https://www.tangedco.gov.in/

அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உள்ள 

TANGEDCO  link your service connection with aadhar 

அல்லது 

https://nsc.tnebltd.gov.in/adharupload/ 

இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும். ( 11 இலக்க எண்) 

அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.

அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில்  உரிமையாளர், அல்லது வாடகைதாரர் என அத்னை கிளிக் செய்யுங்கள்.

அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து ஆதாருடன் பதிவிட்டுள்ள மொபைல் எண்னுக்கு வரும் OTP யை பதிவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது அவ்வளவுதான்.

இதற்க்கு முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது..


******************************************************************************************************

வியாழன், 27 ஜூலை, 2017

மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு...



தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மின் வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன.
இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வரு கிறது. ஊழியர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி 325 உதவி பொறி யாளர்கள், 300 தொழில்நுட்ப உதவி யாளர்கள், 250 இளநிலை உதவி யாளர்கள், 400 உதவியாளர்கள், 300 கணக்கீட்டாளர்கள் என, 1,925 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார்.
இந்நிலையில், முதற்கட்டமாக 250 இளநிலை உதவியாளர்கள் - கணக்கு, 300 தொழில்நுட்ப உதவியாளர்கள், 400 உதவியாளர் கள் என 950 காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பு வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனமின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

ஞாயிறு, 21 மே, 2017

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, ஏப்ரலில் நேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்து மற்றும் நேர்காணலில் அதிக மதிப்பெண் எடுத்து, வேலைக்கு தேர்வாகி உள்ள, 200 நபர்களின் பட்டியலை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, 200 நபர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அடுத்ததாக, 10 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தேர்வானோர், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையில் சேராவிட்டால், காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு, வரிசைப்படி வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

ஞாயிறு, 7 மே, 2017

மின் வாரிய உதவி பொறியாளர் பணி சேராதவர் பட்டியல் வெளியாகுமா?

மின் வாரியத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 375 உதவி பொறியாளர்களில், சிலர் வேலைக்கு சேராமல் இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை, எழுத்து மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தது.
பல ஆண்டுகளுக்கு பின், அரசியல் குறுக்கீடுகளுக்கு இடம் கொடுக்காமல், திறமையின் அடிப்படையில் தேர்வான, உதவி பொறியாளர்களுக்கு, மார்ச் இறுதியில், பணி ஆணை வழங்கப்பட்டது.
அவர்கள், பணியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், சிலர் இதுவரை வேலையில் சேரவில்லை என, கூறப்படுகிறது. இதனால், 375 பேரில், வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்களின் விபரங்களை, மின் வாரியம் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீண்ட நாட்களுக்கு பின், நேர்மையான முறையில், உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பலர் இளம் வயதினர். அவர்கள் ஏற்கனவே, தங்கள் கல்லுாரி வளாக நேர்காணலில் பங்கேற்று, முன்னணி தனியார் நிறுவனங்களில், வேலை செய்கின்றனர்.
மின் வாரியம் தர உள்ளதை விட, அங்கு அவர்கள், அதிக சம்பளம் வாங்குகின்றனர். இருப்பினும், மொத்தம், 375 பேரில், 95 சதவீதம் பேர் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.
எஞ்சியவர்கள், வேலையில் சேருவதற்கு, தகுந்த காரணங்களை தெரிவித்து, அவகாசம் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காலத்துக்கு பின், யாரும் வரவில்லை எனில், காத்திருப்போர் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும். இதுகுறித்து, முழு விபரமும் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 26 ஏப்ரல், 2017


வாரிய தேர்வு: விடை குறிப்பு வெளியீடு

உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் வெளியிட்டது.தமிழ்நாடு மின் வாரியம், 10 பதவிகளில், 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், 2016 ஜூன், ஆக., மாதங்களில்,
எழுத்துத் தேர்வு நடத்தியது. அதில், மூன்று பதவிகள் தவிர, எஞ்சிய பதவிகளுக்கு, தற்போது, நேர்காணல் நடந்து
வருகிறது.இந்நிலையில், அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் இணையளத்தில் வெளியிட்டுள்ளது.