>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
CLASS ROOM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CLASS ROOM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூலை, 2017

மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்...

சென்னை மாநகராட்சி அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 70 உயர், மேல்நிலைப்பள்ளி மற்றும் 14 நடுநிலைப்பள்ளிகளில் வள வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளது. 
திரையின் மூலம் தொழில்நுட்பம் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும்போது, அது மாணவர்களை ஈர்க்க முடியும் என்ற நோக்கத்தில் சாம்சங் என்ற நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக 20 மேல்நிலை மற்றும் 8 நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் செய்து தர புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வகுப்பறையில் 1 எல்எப்டி ஸ்மார்ட் ஸ்கிரீன், 40 கணினிப் பலகைகள், பிரிண்டர், சர்வர், யுபிஎஸ் மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திற்கான மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வள வகுப்பறை பாடத்திட்டத்தின் மூலம் 29,596 மாணவ,மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.  இத்திட்டத்திற்கு ரூ.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.  

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!...

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 ஜூன், 2017

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR தமிழ் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை- BEd கற்றல் கற்பித்தல் பயிற்சியை விடுப்பின்றி அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்