>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

TERM - III - ALL STUDY MATERIALS - (I TO V STD)









IV STD  - ALL SUBJECTS 

LEARNING OUT COMES - ALL SUBJECTS - ENGLISH MEDIUM

'4 STD தமிழ் கையெழத்து சொற்களஞ்சியம் பருவம் 3.pdf - click here  (NEW)

IV STD ENGLISH CURSIVE WRITING PRACTISE - TERM - III - CLICK HERE .......(NEW)

4- STD - FA a AND FA b - QUESTIONS - CLICK HERE - English (NEW)

4 - STD - FA a AND FA b - QUESTIONS - CLICK HERE -TAMIL 


4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள்

ENGLISH  4  STD BOOK BACK EXERCISES TERM 3 

ENGLISH 4 STD HARD WORDS  B&W VOCABULARY 

ENGLISH 4 STD HARD WORDS  VOCABULARY    

MATHS  4  STD BOOK BACK EXERCISES TERM 3

MATHS MIND MAP TERM 3   ENGLISH MEDIUM  

SCIENCE  4  STD BOOK BACK EXERCISES TERM 3 

SCIENCE 4 STD HARD WORDS  B&W VOCABULARY   

SCIENCE 4 STD HARD WORDS VOCABULARY  COLOUR TERM 3 

SCIENCE 4 STD MIND MAP TERM 3  

SOCIAL SCIENCE  MIND MAP TERM 3    EM 

SOCIAL SCIENCE 4  STD BOOK BACK EXERCISES TERM 3 

SOCIAL SCIENCE 4 STD HARD WORDS VOCABULARY  BW TERM 3 

SOCIAL SCIENCE MIND MAP TERM 3  IV STD   EM 

TAMIL 4  STD BOOK BACK EXERCISES  TERM 3 

TAMIL 4 STD MIND MAP TERM 3   






III STD -ALL SUBJECTS 

CLICK HERE TO DOWNLOAD - ENGLISH - BOOK BACK ANSWERS   


3rd STD - 3rd TERM - NEW WORDS WITH TAMIL MEANINGS FOR PRACTICE



V-STD - ALL SUBJECTS



LEARNING OUT COMES - ALL SUBJECTS





........................................................................................................................................................................................................................................................................................

I - ST WEEK - TERM - III - LESSON PLAN



SCHOOL MORNING PRAYER ACTIVITIES - 17.02.2018 MONDAY

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

உரை:

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

பழமொழி:

If you give an inch he will take all

இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்

பொன்மொழி:

வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.

பிராய்டு

இரண்டொழுக்க பண்பாடு :

1) எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.

2) பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.

பொது அறிவு :

1) மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
 ஈரல்

2) மலேசியாவின் கரன்சி எது ?
 ரிங்கிட்

நீதிக்கதை :

கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா


இன்றைய செய்தி துளிகள் : 

1) ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2) நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகளில் வரும் 21-ம் தேதிதாய்மொழி தினம் கொண்டாடமத்திய மனிதவளத்துறை அமைச் சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

3) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு

4) புல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் - பிரதமர்

5) தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நெஹ்வால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். 
.....................................................................................................................................................................................
என்ன செய்யப்போகிறாய்?

வார்த்தைகள் வரவில்லை
வெட்கத்தால் , வேதனையால் வார்த்தைகள் வரவில்லை..

எல்லையில் நின்று
எங்களைக் காத்தீர்!
எல்லைக்குள்ளே உம்மை பலிகொடுத்தோமே!

நாட்டுக்குள்ளேயே நயவஞ்சகர்களிடம் உம்மை பலிகொடுத்தோமே!

வீரமரணம் என்று
வீராப்பாய்  பேசி
இந்த நாளை கடக்கமுடியவில்லை..

கண்ணுறங்கிப் படுத்தால்
போடா! சுயநலவாதி என்று
கைகொட்டிச் சிரிக்கிறது
மனச்சாட்சி..

பனியிலும், வெயிலிலும்
மழையிலும், குளிரிலும்
எல்லையில் நின்றானே!
எல்லைச்சாமியாய்..
உன்னைக் காக்க..

ஆடுகளைப் போல அவர்களை
பலிகொடுத்துவிட்டு கல்லாய் நிற்கிறாயே!
இரக்கமில்லையா உன் இதயத்தில்..

உறக்கம் வருகிறதா? உன் உதிரத்தில் என
சாட்டை எடுத்து வீசுகிறது மனச்சாட்சி...

வெட்கித் தலை குனிகிறேன் வேதனையில்..
வெறுங்கையோடு நிற்பதால்..

கழுத்தறுத்து போட்டபோதும் கையாலாகாதவராய்  கடந்து வந்தோம்..

குருவியெனச் சுட்டு வீழ்த்திய பொழுதும் குற்ற உணர்ச்சியின்றி
குனிந்து நின்றொம்.

நாட்டுக்குள்ளே புகுந்துவிட்டான்.
நாசமும் செய்துவிட்டான்.

ஆட்சியாளனே! உன்
அறிக்கை அரசியலும்
எனக்கு வேண்டாம்-
அடிமைத்தனமும் அறவே வேண்டாம்.
[17/02, 9:33 pm] HM SARAVANAN TR HM: பிரிவினை வாதமும் வேண்டாம்- பிரித்தாளும்
சூழ்ச்சியும் வேண்டாம்.

தீவிரவாதம் தான் காரணமா?
தீவிரமாய்த் தாக்கு..
தீரும்வரை தாக்கு...

இப்பொழுதும் சொல்கிறேன்.
இதயத்தோடு சொல்கிறேன்..
கண்மூடித்தனமாக தாக்காதே!
அந்த தேசத்திலும் மக்கள் உண்டு.
எனது இலக்கு தீவிரவாதம் அழிய வேண்டுமென்பதே!

பாகிஸ்தானை  பந்தாடு என்பதல்ல நோக்கம் - பயங்கரவாதிகளை மட்டும் பந்தாடு- அதுவும்
பயம்கொள்ளும் வகையில் பந்தாடு,
பயங்கரமாய் பந்தாடு என்பதே!

ஆண்மை என்பது பிறப்பில் இல்லை
ஆளுமையில் இருக்கிறது..
ஆண்மையுள்ள அரசை எதிர்பார்க்கும் 130 கோடி மக்களில் ஒருவனாய் மண்டியிடுகிறேன்.
நியாயம் வேண்டி மன்றாடுகிறேன்..

இருந்தால் இறைவனிடம்..
இல்லையெனில் இயற்கையிடம்..

😔 *சிகரம் சதிஷ்குமார்*

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

I T  FORM  (2018..2019..NEW)

 Tax Calculation Excel Form 2018-2019 (19.1)

THANKS 
 | Mr. K. Arunagiri SIR.
தனியாக DOWNLOAD செய்து பயன்படுத்தவும்.
CLIK HEAR

வியாழன், 7 பிப்ரவரி, 2019

மதுவினால் ஏற்படும் தீமைகள்


தமிழகம் இன்று போதையால் தத்தளிக்கிறது. இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாத நாளே இல்லாமல்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் உடலில் உரம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. உடலில் பலம் குறைய குறைய மதுவின் பாதிப்புகள் அதிகமாகி விடும்.

வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் ,நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் கேள்விகள்.

ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.

கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும் என்கிற உச்ச நிலை உருவாகும். இது போன்ற தீவிர இறுதிக்கட்ட நிலைக்கு வந்து விடுவார்கள். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் “குடிநோய்” வரலாம்.

குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்து கொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும்.

கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்.

2000-ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகு வார்.

குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து,மரியாதையும் இழந்து போவார்கள்.

நாண் என்னும் நல்லாள் புறம்கொடுக்கும்,
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப்போய் விடுவாள். பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும்பயனில்லை…!!!

உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகம், மதுவின் தீமையை தெளிவாக விளக்கியுள்ளது. “போதை தரக்கூடிய பொருள்கள் உலகில் ஏராளம் உண்டு.அவைகள் திட, திரவ, வாயு எனும் மூன்று நிலைகளில் கிடைக்கிறது. ஆனாலும் அதிகம் போதை தரக்கூடியது, சமுதாயத்திற்கு பெரிதும் தீங்கிழைப்பது என்று அரசாங்கங்கள் கருதுவது திட வடிவில் உள்ள ஹெரோயின், கோகைன், ஹஷிஸ், கஞ்சா, அபின் போன்றவைகளைத்தான். பெரும்பாலான நாடுகள் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றன.

தமிழ்நாட்டில் ”டாஸ்மாக்” சாராய பாட்டிலை வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்தாலும், அரசுக்கு கவலையில்லை என்ற நிலை காணப்படுகிறது. அதே சமயம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தால் 10 வருட சிறை தண்டனை; அத்துடன் குண்டர் சட்டமெல்லாம் பாயும். ஏனென்றால் அரசின் செல்லப்பிள்ளையாக, வருவாய் ஈட்டித்தரும் மூத்த (குடி) மகனாக மதுவை அரவணைத்து, ஆசீர்வதித்து பட்டி தொட்டிதோரும், கவர்மென்ட் சரக்கை ஆறாக ஓடவிட்டு கஜானாவை நிறைக்கின்றனர். உலகில் நல்ல(குடி)மகனை உருவாக்க ஒவ்வொரு நாடும் பாடுபடுகின்றன. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளின் அரசாங்க கப்பல் மிதப்பது ”தண்ணீ” வருவாயில்தான்.

மது குடிப்பதை எல்லா குடியரசுகளும் சட்டபூர்வமாக்கி மக்களின் நல்வாழ்வை சீரழிக்கின்றன. இவர்கள் பார்வையில், மதுவை விட போதை மருந்துகள் பெரும் தீமையாகத்தெரிகிறது. இவைகளை தடுக்க கடும் சட்டம். ஆனால் பிராந்தி, விஸ்கி,ரம், ஜின், ஒயின் சாராயம் போன்றவை சமுதாய அங்கீகரிக்கப்பட்ட பானமாக ஆராதிக்கப்படுகிறது.

இன்றைய ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மது போதை தாராளமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கு தனித் துறை ஏற்படுத்தி “சேவை” செய்கிறது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 6800 சில்லறை கடைகள் 44000 ஊழியர்கள் 48 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. தெருக்குழாயில் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் ‘டாஸ்மாக்கில்’ தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது.

மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். தள்ளாடித்திரியும் தமிழர்கள் இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமானோர் மதுவால் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இந்த தற்கொலை சாவுகளில் 50% பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே. ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து – பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் – அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.

உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது. அரசே முன்னின்று மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் அரசுக்கு வருடந்தோறும் பண்டிகைக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் பல கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. அரசே இதை ஒழித்தால்தான் மதுவினால் ஏற்படும் சாவையும் குறைக்க முடியும்…!!!.
I T  FORM  (2018..2019..NEW)

 Tax Calculation Excel Form 2018-2019 (19.1)

 | Thanks sir  Mr. K. Arunagiri 
தனியாக DOWNLOAD செய்து பயன்படுத்தவும்.

CLIK HEAR

CLIK HEAR  
  

புதன், 6 பிப்ரவரி, 2019


I T  FORM  (2018..2019..NEW)

 Tax Calculation Excel Form 2018-2019 (19.1) | Mr. K. Arunagiri 

CLIK HEAR  
  

சனி, 2 பிப்ரவரி, 2019

தனி நபர் வருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க!



வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்து மக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுவரையிலான தனி நபர் வருமான வரி விதிப்பு என்பது ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5 சதவீதமாக இருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த வருவாய் பிரிவை நீக்குவதாக அறிவித்தார்.

அதன்படி, இனிமேல் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே வருமான வரி வசூலிக்கப்படும். ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும்.

சலுகைகள்

ஆனால் இதிலும் சலுகைகள் உள்ளன. அதாவது, 5 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் மேலும் சில வரி விலக்குகளை பெற முடியும். இந்த வரி விலக்குகளை அவர்கள் முழுமையாக பெற்றால் ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு அவர்கள் வரி கட்ட தேவையிருக்காது.

சேமிப்பு வரி விலக்கு

வருமான வரித்துறை சட்டப்பிரிவு 80சி-ன்கீழ், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். இதில் பெண் குழந்தைகளுக்கான சுகன்ய சம்ரிதி/செல்வமகள் சேமிப்பு திட்டம், பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளிட்டவை வந்துவிடும்.

நிலையான கழிவு அதிகரிப்பு

இதுதவிர நிலையான கழிவு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும். கடந்த வருடம்தான் நிலையான கழிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.40 ஆயிரம் என அறிவிக்கப்பட்ட நிலையான கழிவு தொகை இந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால், 7 லட்சம் ரூபாய் வரை கணக்கு காட்டி விலக்கு பெற்றுவிடலாம். இதுதவிர 80 சிசி பிரிவின்கீழ் வரும் முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு உள்ளதால், அதையும் சேர்த்தால் 9 லட்சம் வரையிலான வருவாய்க்கு கணக்கு காட்டிவிடமுடியும்.

பலனளிக்கும்
ஆனால் இதில் பெரும்பாலான மாதசம்பளதாரர்கள் 7.5 லட்சம் வரை எளிதாக கணக்கு காட்டிவிட முடியும். எஞ்சிய 2 லட்சத்திற்கு கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டி வரும். எப்படி இருந்தாலும், இது நடுத்தர வர்க்கத்து மாத சம்பளதாரர்களுக்கு பலனளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

இப்படி செய்தால் ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை

தனிநபரின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.6.5 லட்சம்
வரை உள்ளவர்களும் வருமான வரிவிலக்கு பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பொருளாதாரத்தில் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா உள்கட்டமைப்பில் தன்னிறைவு, சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
ஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றைச்சாளர முறை கடைபிடிக்கப்படும். 2030 இந்தியா என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும். வீடுகளற்ற, நாடோடி மக்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்காக தனிவாரியம் அமைக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வித் திட்டத்திற்கு ரூ.38,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதம் ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அரசின் பங்குகளை ரூ.8 லட்சம் கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேர் பயன்பெறுவர். இதுதவிர தனிநபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் நிரந்தர கழிவு வழங்கப்படும். 
 
ரூ.6.5 லட்சம் வரை மொத்த வருவாய் உள்ளவர்கள், வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் உள்ளிட்ட வரிசேமிப்பு திட்டங்களில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்திருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை. வாடகை வருவாய் வரிப்பிடித்த உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் அல்ல! Rebateல் தான் மாற்றம்!

மத்திய அரசின் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய சாராம்சம் என்னவென்றால் ..

உச்சவரம்பு 5 லட்சம் வரை வரி கிடையாது என்பது மறைந்திருக்கும் சூட்சமம்.

உதாரணமாக..
ஒரு தனிநபர் வருமானம்

எல்லா கழிவுகளையும் கழித்து 4.80 லட்சம் வரை வருமானம் இருந்தால்...

2.50 லட்சம் வரை வரி கிடையாது.

மீதி 2.30 லட்சத்திற்கும் 5% வரி 11,500 + EC வரும்
ஆனால்...

Rebate u/s 87 A 12,500 வரை கழித்து கொள்லலாம்.
அப்படி கழிக்கும் போது வரி வராது.

அதே சமயத்தில்
வருமானம் 5.25 லட்சமாக இருந்தால்...
2.50 லட்சம் போக மீதி முள்ள 2. 50 லட்சத்திற்கு 5 % வரி அடுத்து 25 ஆயிரத்திற்கு 20% வரி + EC

Rebate u/s 87 A ஐ கழிக்க முடியாது.

இது தான் மறைந்திருக்கும் மயக்க மாத்திரை

இது மாதிரி தான்
GST - ம்

No photo description available.