>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
பொது அறிவுச் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது அறிவுச் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 டிசம்பர், 2022

அடிக்கடி கை கால் மரத்து போகிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.....

 

அடிக்கடி கை கால் மரத்து போகிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்




 அடிக்கடி கைகால்கள் மரத்து போகும் அதற்கு காரணம் என்ன என்று தெரியுமா..! 


அல்லது அப்படி அடிக்கடி ஏற்பட்டால் உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று யாராவது யோசித்தது உண்டா அப்படி யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்..! கால் மரத்து போக காரணம்: ஒரு மனிதனுக்கு இயற்கையாக நிறைய விஷயங்கள் நடக்கும் அதில் ஒன்று தான் இதுவும். தும்மல், விக்கல் போன்ற பிரச்சனைகளை இயல்பாக அதிகம் மனிதனுக்கு வரக்கூடியவை அதில் ஒன்று தான் இந்த மரத்தல் பிரச்சனையும்.
கை கால் அடிக்கடி மரத்து போக காரணம் ஒரு மனிதனுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அமைதி கிடைத்தால் அவர்களுக்கு இந்த பிரச்சனை வராது. அப்படி ஒவ்வொரு மனிதனும் மனதளவில் பாதிக்கப்படும் போது தலைவலி மற்றும் தூக்கமின்மை, செரிமான பிரச்சனை ஏற்படும்

 இதனால் மனிதனுக்கு தசை பிடிப்பு, மனக்கவலை என சொல்லகூடிய ஆன்சைட்டில் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. எப்போவாது மட்டும் விறைப்பு தன்மை இருப்பதால் அதனால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் அடிக்கடி இது போன்ற விறைப்பு தன்மை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்வது நல்லது.

 அடிக்கடி மரத்து போனால்..?அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்:

அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர் சத்து குறைவாக இருக்கும் அதனால் நீரிழப்பு நோய்கள் ஏற்படும். உடலில் அளவுக்கு அதிகமாக வேர்த்துக்கொட்டினாலும் அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும் தசை பிடிப்பு ஏற்பட்டு மறைத்து போகும். மனிதன் அதிகளவு டிப்ரஷன், பதட்டம், படபடப்பு, கோவம் ஏற்படும் போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இரத்த நாளங்களில் அதிகப்படியான பாரம் ஏற்பட்டு தசைகள் சுருளும் வாய்ப்பு உள்ளது.


******************************************************************-***********************************

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!..

 



உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம்.


https://tafcop.dgtelecom.gov.in/


இந்த லிங்கை கிளிக் செய்தால்,உங்கள் போன் நம்பரை பதிவிட வேண்டும். பிறகு ரிக்வெஸ்ட் ஓடிபி என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போனிருக்கு ஓடிபி வரும்.அந்த ஓடிபியை பயன்படுத்தி கிளிக் செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் எத்தனை சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.



ஒருவேளை காட்டும் போன் நம்பரில் உங்கள் நம்பர் இல்லையென்றால் அதனை ரிப்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போனிருக்கு ஓர் ரெஃபரன்ஸ் ஐடி வரும்.அந்த ஐடியை மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்தால்,இந்த நம்பர் எந்த இடத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.


******************************************************************************************************

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது மிக சுலபம். இனி ஆதார் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை TNEB AADHAR LINK....

 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும். 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும். 

முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள் 

 https://www.tangedco.gov.in/

அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உள்ள 

TANGEDCO  link your service connection with aadhar 

அல்லது 

https://nsc.tnebltd.gov.in/adharupload/ 

இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும். ( 11 இலக்க எண்) 

அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.

அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில்  உரிமையாளர், அல்லது வாடகைதாரர் என அத்னை கிளிக் செய்யுங்கள்.

அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து ஆதாருடன் பதிவிட்டுள்ள மொபைல் எண்னுக்கு வரும் OTP யை பதிவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது அவ்வளவுதான்.

இதற்க்கு முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது..


******************************************************************************************************

புதன், 30 நவம்பர், 2022

கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?

 

கரும்பு சாகுபடி இயந்திரம்வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?





சாகுபடிக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காத நிலையில்விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதற்காகவேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பு 2022-2023ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்

தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம்இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திடவிவசாயிகள்தொழில் முனைவோர்கள்பதிவு செய்த விவசாய சங்கங்கள்உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராமவட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவமானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-2023ம் ஆண்டில் செயல்படுத்துவதற்காகரூ.150 கோடி ஒன்றியமாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படிமுதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வேலையாட்கள் தேவைப்படும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 40% மானியம் அதிகபட்சமாக ரூ.60 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பங்களிப்புத் தொகைக்கு 3 சதவிகித வட்டி மானியத்துடன் கடன் வசதி,வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் விவசாயக் குழுக்களுக்குமானியம் போக மீதமுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்குவங்கியின் மூலம் கடன் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும்இவ்வாறு பெறும் கடனுக்குவேளாண் உட்கட்டமைப்பு நிதியின் (Agriculture Infrastructure Fund) கீழ் மூன்று சதவிகித வட்டி மானியம் கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

ஆதார் அட்டையின் நகல்

புகைப்படம் (Passport Size Photo)

சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்

ஆதி திராவிடபழங்குடியின விவசாயிகளாக இருந்தால்சாதிச் சான்றிதழ் மற்றும் சிறுகுறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்

கிராமங்களில் சாகுபடிப் பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காமல் அவதியுறும் வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டுஅரசு மேற்கொண்டு வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.




**********************************