>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
BANK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BANK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஏப்ரல், 2021

SBI ல் ஈஸியான லோன் இதுதான் ... RS 20 இலட்சம் வரை கடன் ஒரு SMS போதும்..!!!!

 SBI bank Tamil News: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, அதன் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையில், எஸ்பிஐயின் வாடிக்கையாளர், ஒரு மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும், இந்த சேவையின் மொத்த விபரங்களும் கிடைத்து விடும்.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் பதிவில், 'கடன் குறைந்தபட்ச ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவை மூலம் கடன் பெற விரும்புவர்களுக்கு வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும்' என்று தெரிவித்துள்ளது. இது அனைத்து இந்திய வங்கிகளையும் விட மிகக் குறைவான ஒன்றாகும்.


இந்த சேவையில் எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர் ரூ .25,000 முதல் ரூ .20 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். கடன் பெரும் வாடிக்கையாளர், அவரது முதல் கடனில் ஈ.எம்.ஐ.களை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால், இந்த சேவை ரூ .5 லட்சம் முதல் ரூ .20 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் கடன் தொகையை வழங்குகிறது. ஒட்டுமொத்த கடன் ஈ.எம்.ஐ / என்.எம்.ஐ விகிதத்திற்கு 50 சதவீதத்திற்கு உட்பட்டு முதல் கடன் வழங்கப்பட்ட பின்னர், எந்த நேரத்திலும் இரண்டாவது கடன் தகுதி பெறுகிறது. சுவாரஸ்யமாக, இந்த எஸ்பிஐ தனிநபர் கடன் எந்த உத்தரவாதமும் அல்லது பாதுகாப்பும் இல்லாமல் வழங்கப்படும்.

எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சேவையைப் பற்றி ஒரு இணைப்பை வழங்கியுள்ளது. 'இது உங்கள் திருமணம் அல்லது விடுமுறை, திட்டமிடப்படாத அவசரநிலை அல்லது திட்டமிட்ட கொள்முதல், உங்கள் அனைத்து தேவைகளுக்கும் எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் மூலம் குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதல் மற்றும் உடனடி விநியோகத்தைப் பெறுங்கள், 'சேர்ப்பது,' எங்கள் தொடர்பு மையத்திலிருந்து திரும்ப அழைப்பைப் பெற 7208933142 என்ற எண்ணில் அல்லது 7208933145 இல் 'தனிப்பட்ட' என்று எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.' என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தனிநபர் கடனுக்கான தகுதிகள்

1] எஸ்பிஐ உடன் சம்பள கணக்கு கொண்ட நபராக இருக்க வேண்டும்.

2] குறைந்தபட்ச மாத வருமானம் மாதத்திற்கு ரூ .15000 மேல் இருக்க வேண்டும்.

3] EMI / NMI விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாக; மற்றும்

4] எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர் மத்திய / மாநில, மத்திய பொதுத்துறை நிறுவனம் மற்றும் லாபம் ஈட்டும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் வங்கியுடன் அல்லது இல்லாமல் தொடர்பில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.


..........................................................

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்!

அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்!


இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்துகொள்ள குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளளாம்.

பாரத ஸ்டேட் வங்கி தனதுவாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும்.

எஸ்பிஐ.யின் “யோனோ’’ செயலி மூலம் இந்த கடனுக்குவாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டி 10.5 சதவீதமாகும். இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.இந்த கடன் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு சுலபதவணை தொகையை செலுத்தலாம்.

இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்துகொள்ள குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளலாம். PAPL (space)என டைப் செய்து தங்களது வங்கிக்கணக்கின் கடைசி 4 இலக்கை எண்ணையும் சேர்த்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ செயலியானயோனோ (YONO) செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியாக அளிக்கப்படும். தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம். உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் (பாஸ்வேர்டு) அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும். அதை அனுப்பியவுடன் நீங்கள் கோரிய கடன் தொகை வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியை 15 புள்ளிகள் குறைத்துள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான வட்டியை அதிகரித்துள்ளது. ‘எஸ்பிஐ வி கேர் டெபாசிட்’ என்ற பெயரிலான இந்த சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் ஏடிஎம் என்னும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் நடைபெறும் மோசடியைத் தடுப்பதற்குப் பாரத ஸ்டேட் வங்கி, ஓடிபி என்னும் ஒருமுறை பயன்படக்கூடிய இரகசிய குறியீட்டெண் வசதியைக் கைக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.சில ஆண்டுகளாக குளோனிங் மற்றும் ஸ்கிமிங் என்னும் மோசடி முறைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் அட்டைகளை போலியாகத் தயாரித்துச் செய்யப்படும் மோசடி அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க வங்கிகள் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

வியாழன், 5 மார்ச், 2020

PAN எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஈஸி!! வழிமுறை இது தான்!!




ஒருவர், பல PAN கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர்.



1. http://www.incometaxindiaefiling.gov.in/home  என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.


2. Link Aadhaar Here என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், PAN எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.


4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.


5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.


இதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்து விடும்.

..............................

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்



நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும்


அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.



SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை 


ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .

SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை


1. கவரிங் லெட்டர்
2. பேங்க் புக் ஜெராக்ஸ்
3. ஆதார் அட்டை நகல்
4. பான் கார்டு நகல்
5. ஆன்லைன் பே ஸ்லிப்

இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் ...



.......................

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

Pay your tax through online mobile banking




வருமானவரி தகவல்...

சம்பளத்தை விட அதிகமாக tax வருபவர்கள் அல்லது ஊதியத்தில் பிடித்தம் செய்யாமல் நேரடியாக செலுத்துவதற்கு...
👇👇👇👇👇👇👇👇

ஆன்லைன் மூலமாக வருமானவரி செலுத்துபவர்கள் தங்கள் செல்போன் மூலம் கீழ்கண்ட லிங்க் பயன்படுத்தி செலுத்தலாம்...




அல்லது

Challan No 280 பயன்படுத்தி நேரடியாக SBI வங்கியில் செலுத்தலாம்.






................................................

வெள்ளி, 27 டிசம்பர், 2019

ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உங்கள் கணக்கை SGSP க்கு மாற்றிவிடுங்கள்.


27.12.2019. Friday

ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கைSGSP மாற்றிவிடுங்கள். 

இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை 

1. கவரிங் லெட்டர் 

2. பேங்க் புக் ஜெராக்ஸ் 

3. ஆதார் அட்டை நகல் 

4. பான் கார்டு நகல் 

5. ஆன்லைன் பே ஸ்லிப் இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள் தாமதிக்க வேண்டாம்..

.....................

திங்கள், 15 ஏப்ரல், 2019

SBI BANK - ல் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் "ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது*
*💢💢இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*🎈🎈மொத்த காலியிடங்கள்: 8,653*
*💠💠பணி: Junior Associate (Customer Support & Sales)*
*♦♦தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*
*💎💎வயதுவரம்பு*
*01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.*
*🔰🔰சம்பளம்: மாதம் ரூ.13,075 - 31,450*
*💎💎தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்*
*♦♦தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*
*முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு*
*🔮🔮விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*
*மேலும் முழுமையான விவரங்கள் அறிய*
*https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf எ ன்ற லிங்கில் சென்றுதெரிந்துகொள்ளவும்*
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா?? உடனடியாக இரகசிய எண்ணை பெற... ›



ATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா?? உடனடியாக இரகசிய எண்ணை பெற... ›



வியாழன், 22 மார்ச், 2018

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகள் மார்ச் 31க்குப் செல்லாது..

மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை

புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம்
இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
ஆர்.சந்திரன்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.

எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.

மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

புதன், 13 டிசம்பர், 2017

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து.வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து 

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை 
புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்
- மத்திய அரசு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இனி வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் நகல்களுடன், அதன் அசலையும் எடுத்துச் செல்ல வேண்டும். போலியான அடையாள ஆவணத்தின் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நிதி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களைப் பெறும்போது, அசல் ஆவணத்தையும் பார்த்து உறுதி செய்வதுடன், அந்த ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்களை இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை முகவர்கள், சீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றத்துக்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரன்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
மின்னணு முறையில் வெளிநாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது; ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையாத சொத்துகளை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றுக்கும் இந்த விதிகள் உண்டு.
மேலும், இருப்பிடத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், போஸ்ட் பெய்டு செல்லிடப்பேசி கட்டணம், காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

வியாழன், 19 அக்டோபர், 2017

அரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்....

அரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.
 அதன் விபரம்:
கடன் விபரம் வட்டி  சதவீதம்  வீடு கட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை 5   50 ஆயிரம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை 6.50  1.50 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை 8.50  ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் 9.50  கார் வாங்க பெறும் கடன் 11டூவீலர் கடன் 8.50  சைக்கிள் கடன் 5  கம்ப்யூட்டர் கடன் 9.50  இதர கடன் 9.50அபராத வட்டி 2.50  அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில், வளர்ச்சி பணிகளுக்கு வழங்கும் கடன் 11  முதலீட்டு கடன் 13  கூட்டுறவு வங்கி மற்றும் நில வள வங்கி 9.50

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்விக்குமா எஸ்.பி.ஐ?

எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்’ என்ற நடைமுறையைத் தளர்த்துவதுகுறித்து தற்போது ஆலோசித்துவருகிறது.
'ஏப்ரல் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ கூறியிருந்தது.
அதன்படி, பெருநகரங்களில் மினிமம் பேலன்ஸைவிட 75 சதவிகிதம் குறைவாக இருந்தால், 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். மினிமம் பேலன்ஸ் 50-75 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால் 75 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். 50 சதவிகிதத்துக்குக் கீழ் இருந்தால், 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். நகரப் பகுதிகளில் மினிமம் பேலன்ஸைவிட குறைவாக இருந்தால், 20 முதல் 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தொடர் புகார்களை அடுத்து, தனது அபராத விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்துவதுகுறித்து எஸ்.பி.ஐ ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், அது மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மட்டுமானதாகக் கொண்டுவரப்போவதாகவே வங்கி வட்டாரம் கூறுகிறது.

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

Bank holidays in August 2017

*12.08.17* (2nd Saturday)
*13.08.17* Sunday
*14.08.17* Monday (Krishna Jayanthi)
*15.08.17* Tuesday (Independence day)
And again
*25.08.17* Friday (Vinayaka Chathurthi)
*26.08.17* (4th Saturday)
*27.08.17* Sunday.
Plan your Banking work accordingly 

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை...

இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்  உள்ளது.
வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதத்தில் குறைந்தபட்சம் 2  முறை சனி, ஞாயிறு என்று ெதாடர்ச்சியாக விடுமுறை நாட்களாக  வருகிறது. இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை விட்டாலே பெரும்பாலான  ஏடிஎம்கள் இயங்காத நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. மறுபடி  திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகுதான் ஏடிஎம்கள் சரியாகும்  நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. அதாவது, வருகிற 12ம் தேதி இரண்டாவது  சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ெஜயந்தி, 15ம் தேதி செவ்வாய் கிழமை சுதந்திர தினம் என  தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். மறுபடியும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ம் தேதி 4வது  சனிக்கிழமை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள். 
வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம்  மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி நிர்வாகமும்  ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதன், 12 ஜூலை, 2017

பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்....

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.


உடனடி பணப்பரிமாற்ற சேவை எனப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத் துவக்கத்தில், வங்கிப் பணியில் தனது 62வது ஆண்டினை நிறைவு செய்திருக்கும் எஸ்பிஐ, ரூ.1000 வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்ய எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.
அதே சமயம், ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரிக்கு அப்பாற்பட்டது. அதே போல, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்பிஎஸ் முறையில் 24X7 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதே சமயம், பணப்பரிமாற்றத்துக்கான கோரிக்கை செல்போன் அல்லது இணையதளம் மூலமாக வைக்கப்பட்டதுமே, உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

திங்கள், 26 ஜூன், 2017

உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!....

நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வணிக வங்கிகள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குப் புத்தகங்களின் போதுமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது. 'சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வங்கிக் கணக்குகளில் இடப்படும் உள்ளீடுகள் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை வழங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.

இருந்தாலும், இப்போதும் நிறைய வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.

வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீடு
வங்கிகள் 'வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீட்டு' விவரங்களுடன் காப்பீட்டு வரம்பு விவரங்களையும் கணக்குப் புத்தகங்களின் முன்பக்கத்தில் அளிக்க வேண்டும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தியாவில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் சேர்த்து, வைப்புநிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத நிறுவனத்தினால் (DICGC) காப்புறுதி தரப்படுகிறது. ஒரு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுத் தோல்வியடைந்தால், DICGC வங்கி வைப்புத் தொகைகளைப் பாதுகாக்கிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்/அவள் வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டி இரண்டிற்குமான அதே அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது.

ஆர்பிஐ சுற்றறிக்கை
ஜுன் 22 தேதியிடப்பட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையில், வங்கிகள் கணக்குப் புத்தகத்தில் சேர்க்க வேண்டிய பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை அளிக்கிறது. இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

மூன்றாம் தரப்பினருக்குப் பணம் செலுத்துதல்:
(i) பணம் பெறுபவரின் பெயர், 

(ii) பணப் பரிவர்த்தனையின் முறைமை, தீர்வாக வங்கி வணிக நடவடிக்கைகள், இடை - கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், காசோலை (எண்) 

(iii) பணம் செலுத்தல் வங்கித் தீர்வகம்/வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே செய்யப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

வங்கிக் கட்டணங்கள்:
(i) பரிவர்த்தனையின் தன்மை - கட்டணம்/தரகு/அபராதம்/தண்டனைத் தொகை மற்றும் பல. 
(ii) கட்டணங்களுக்கான காரணங்கள், விரிவாக - உதாரணமாக. காசோலை திருப்பம் (எண்), வெளியிடப்பட்ட வரைவோலைக்கான தரகு/கட்டணம்/பணம் அனுப்புதல் (எண்), காசோலை சேகரிப்புக்கான வசூல் கட்டணங்கள் (எண்), காசோலை புத்தகம் வழங்கல், குறுஞ்செய்தி எச்சரிக்கை, ஏடிஎம் கட்டணங்கள், கூடுதல் பணத்தைத் திரும்பப் பெறுதல், மற்றும் பல..

தவறாகப் பெறப்பட்ட வரவுத் தொகைகளைத் திரும்பச் செலுத்துதல்:
(i) வரவு நுழைவு திருப்பிச் செலுத்தப்பட்ட தேதி 

(ii) திருப்பிச் செலுத்தியதற்கான காரணங்கள், விரிவாக.

கடன்/கடன் மீது வட்டி ஆகியவற்றின் தவணை மீட்பு:

(i) கடன் கணக்கு எண் 

(ii) வங்கிக் கடன் கணக்குதாரரின் பெயர். 

நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை உருவாக்கம்: நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வங்கிக் கணக்கு/ரசீது எண் 

(ii) நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வைத்திருப்பவரின் பெயர்.

POS-ல் பரிவர்த்தனை (விற்பனை புள்ளி):

(i) பரிவர்த்தனை தேதி, நேரம் மற்றும் அடையாள எண் 

(ii) POS இன் அமைவிடம்
பண வைப்பு
(i) அது 'பண வைப்பு' என்பதைச் சுட்டிக்காட்டும் 

(ii) பண வைப்பீட்டாளரின் பெயர் - தன்னுடைய/மூன்றாம் தரப்பு.

மூன்றாம் தரப்பிலிருந்து ரசீது:
(i) பணம் அனுப்பியவர்/பணம் மாற்றியவர் பெயர் 

(ii) பரிவர்த்தனையின் - தன்மை, இடை கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், மற்றும் பல. 

(iii) பணம் செலுத்தல் வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே பெறப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.