>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கல்வி மாவட்டம், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.முனுசாமி அவர்கள் ஆணைப்படி, நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் 24.09.2018 முதல் 30.09.2018 வரை கடப்பனந்தல் கிராமத்தில் நடைபெற உள்ளது. திட்ட தொடக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.P.M.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுரை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் தாழை.மு.தேவராசன் (முதுகலை விலங்கியல் ஆசிரியர்) வழங்கினார். நாட்டு நலப் பணித் திட்ட உதவி அலுவலர் திரு.மாரி(முதுகலை தமிழ் ஆசிரியர்) நன்றி நவிழ தொடக்க நாள் விழா சிறப்புடன் நிறைவுற்றது.



சம்பள விபரம் தெரிந்து கொள்ளுங்கள்  PAY ECS

CLIK HEAR
http://treasury.tn.gov.in/Public/gpf.aspx  

சனி, 29 செப்டம்பர், 2018

NMMS 2017 Study Material

OMR Sheet For NMMS Exam

NMMS SAT Model Question Paper

NMMS MAT Model Question Paper

NMMS MAT Question and Answer

NMMS SAT Maths Model Question Paper

NMMS SAT Science Question and Answer

NMMS SAT Social Science Question and Answer

NMMS Maths question and answer

தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும் எழுதவும் பயிற்றுவிக்கும் சிறந்த ஆப் Best app for learning to read and write tamil 247 letters



.....................................................................................................................................

தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |ஸ்பீடு இன்ஸ்டிடியூட்" நடத்தும் செயற்கைக்கோள்வழி பயிற்சி வகுப்புகள் கால அட்டவணை!!



வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா`

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா` வெளியானது!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீமராஜா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் தற்போது விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

5 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை உமேஷ் இயக்கியுள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் சிவா.

தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு, சிவகார்த்திகேயன் தன் பங்கிற்கு உதவும் வகையில் இப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் இப்படத்தில் நடித்துள்ளார்


..................................................................................................................................

வியாழன், 27 செப்டம்பர், 2018

PF - வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.


1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும்.

எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது?
ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.

EDLI பிரீமியத்தினை எப்படிச் செலுத்துவது?
EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.

நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பு எப்படிப் பிரிகிறது?
பிஎப் கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும் என்றும் பொதுவாக நாம் அறிவோம். ஆனால் நிறுவனம் நமக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் 8.33 சதவீதம் பென்ஷனுக்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் பங்களிப்பு, 0.51 சதவீதம் EDLI பிரீமியம், 0.85% ஈபிஎப் அட்மின் கட்டணங்கள், 0.01% EDLI கட்டணங்களாகச் செல்கிறது.

EDLI காப்பீடு எப்படிக் கணக்கிட்டு அளிக்கப்படுகிறது?
EDLI காப்பீடு பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் பொனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும்.

பிஎப் சந்தாதார் இறக்க நேர்ந்தால் EDLI காப்பீடு தொகையைப் பெறுவது எப்படி?
ஈபிஎப் கணக்குச் சந்தாதரகள் இறக்க நேர்ந்தால் நாமினிக்கள் இந்தக் காப்பீட்டுப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும். ஒருவேலை நாமினி இல்லை என்றால் சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு தொகையினைத் திரும்பப்பெறலாம்.
அதற்கு நாமினி அல்லது சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் படிவம் 5-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீடு தொகையைத் திரும்பப் பெறும் போது கவணிக்க வேண்டியவை?
EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும். படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும். நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.

தேவையான ஆவணங்கள்
1) இறப்புச் சான்றிதழ்
2) நாமிக்கள் மேஜராக இல்லாத போது பாதுகாவலர் நிலை சான்றிதழ் கட்டாயம்.
3) கேன்சல் செய்யப்பட்ட செக்

உதாரணம்
பாபுவின் மாத சம்பளம் 15,000 ரூபாய். ஈபிஎப், ஈபிஎஸ், EDLI திட்டங்களில் இவரது பெயரில் பங்களிப்புகள் உள்ளது. பணிக் காலத்தில் இவர் இறந்துவிடுகிறார். இவரது நாமினி EDLI காப்பீடு தொகையினைப் பெற முயலும் போது (30 x Rs.15,000) + (Rs.1,50,000) = Rs.6,00,000 அல்லது இதற்கு இணையான ஒரு தொகையினைக் காப்பீடாகப் பெறலாம்.

ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்


புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதே இதற்கு காரணம் என்றும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும், தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக மையம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகளில், 6 - 8 வரையுள்ள வகுப்புகளில், ஆசிரியர்கள், ஒரு ஆண்டுக்கு, 220 நாட்கள், கல்வி போதிக்க வேண்டும். ஆனால், 2015 - 16ம் ஆண்டில், 42 நாட்கள் மட்டுமே, கல்வி போதிக்கப்பட்டுள்ளது; இது, மொத்த கல்வி நாட்களில், 19 சதவீதம் மட்டுமே. 

மீதமுள்ள நாட்களில், தேர்தல் பணி, அரசுக்கு தேவையான ஆய்வுகளை நடத்துதல், போலியோ சொட்டு மருந்து முகாம், மதிய உணவு திட்டத்துக்கான பதிவேடுகளை பராமரித்தல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் செய்ய வேண்டி உள்ளது.

அரசு ஆசிரியர்களின் பணி நேரத்தில், 81 சதவீதம், பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது. இதில், 42.6 சதவீதம், தேர்தல் பணி போன்ற, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது. 31.8 சதவீத நேரம், பள்ளி சார்ந்த, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது.

தேர்தல் சார்ந்த பணிகளில், ஆசிரியர்கள் பெருவாரியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளை விட, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அதிக நேரம், கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது.

Departmental examination official notification December...2018

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

7th Pay Commission: Diwali gift for CG employees, but is it enough

7th Pay Commission: Diwali gift for CG employees, but is it enough By Vicky Nanjappa

Image result for 7 pay commission


New Delhi, Sep 24: There is finally some good news for the Central Government employees regarding the 7th Pay Commission.

7th Pay Commission: Diwali gift for CG employees, but is it enough
In what could be called as a Diwali gift, the government has extended LTC benefits for the CG employees. The Department of Personnel and Training said that the scheme allowing government servants to travel by air to the North East Region, Jammu and Kashmir and Andaman and Nicobar Islands is extended for a further period of 2 years with effect from September 26 2018 to September 25 2020.

    "LTC for visiting NER, J&K and A&N in lieu of a Home Town LTC."
    " Facility for air journey to non-entitled Government servants for NER, J&K and A&N."
    "Permission to undertake journey to J&K, NER and A&N by private airlines."

The Union government had previously extended the LTC benefits for Central government employees in 2014.

Also Read | 7th Pay Commission: Rs 1,500 crore assistance sought even as govt mulls disciplinary action

It may be recalled that the 7th Pay Commission had recommended to retain and rationalise the Leave Travel Allowance. The LTC facilitates CG employees' home travel as well as travel to different parts of the country, The 7th Pay Commission had noted the the demand for increase the frequency of LTC especially for All India visits and foreign countries too.
The 7th Pay Commission had said:

On splitting hometown LTC, the pay panel said, "The proposal to split hometown LTC has merit and can be considered. Hence, it is recommended that splitting of hometown LTC should be allowed in case of employees posted in North East, Ladakh and Island territories of Andaman, Nicobar and Lakshadweep. This will enable these employees and their families to meet more often."

Also Read | 7th Pay Commission latest news: CG employees could lose money, here is why

    For CAPF, Indian Coast Guard: "Presently, personnel of Defence forces serving in field/high altitude/CI Ops areas are granted one additional free railway warrant. This should be extended to all personnel of CAPFs and the Indian Coast Guard mutatis mutandis."
    For SSB Personnel: "The facility of Additional LTC should be extended to SSB personnel, at par with other CAPFs."
    For Railways staff: "Regarding bringing Railway employees (and employees whose spouses are Railway servants) into the fold of LTC, the following is recommended:

        No hometown LTC will be admissible to Railway employees, only "All India" LTC will be granted once in four years.
        b. For the grant of LTC, all passes for the current year will have to be surrendered.
        c. If the employee has already availed of a pass in any year, then LTC will not be allowed in that year.

This comes as some relief for CG employees who have been struggling to get the government to extend benefits relating to a pay hike. While the above

announcement may not be the much sought soother, it still is some good news for CG employees who have been demanding a hike of Rs 26,000 as opposed to the Rs 18,000 recommended by the 7th Pay Commission.

             

                    TRUST EXAMINATION - 2017 Question And Answer


                        TRUST Exam 2017 | Question & key Answer - Mr K.Pratheep   



TRUST EXAM-QUESTION PAPERS OF TRUST EXAMINATION

வியாழன், 20 செப்டம்பர், 2018

அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு விடைத்தாள் நவம்பர் முதல் அமல்

காரைக்குடி அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு முறையிலான விடைத்தாள் பரீட்சார்த்த முறையில் நவம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.


தேர்வாணையர் சக்திவேல் கூறும்போது: அழகப்பா பல்கலையில் விடைத்தாள்கள் தற்போது பார்கோடு மூலம் திருத்தப்பணிக்கு செல்கிறது. இதைவிட அதிக பாதுகாப்பு மிக்க விடைத்தாளை உருவாக்கும் 'என்கிரிப்ட் கியூ ஆர் கோடு' முறையிலான விடைத்தாள்கள் வடிவமைக்கும் பணி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து அழகப்பா பல்கலை தேர்வு துறை கடந்த ஆறு மாதமாக மேற்கொண்டு வந்தது.

பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகின்ற நவம்பரில் அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இணைப்பு கல்லுாரி மற்றும் பல்கலையின் அனைத்து துறைகளுக்கு நடக்கும் தேர்வில் பரீட்சார்த்த முறையில் இந்த விடைத்தாள் பயன்படுத்தப்பட உள்ளது. மிகுந்த பாதுகாப்பு என்பதால் மாணவர்களுக்கு பயனளிக்கும். தமிழகத்தில் அழகப்பா பல்கலையில்தான் இது முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது, என்றார்

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அவகாசம் குறைவு:அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான காலஅவகாசம் குறைந்து வருவதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் மாணவர் விகிதம் அடிப்படையில், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டது.


இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளின் பட்டியல் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சமாக, 4 பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றன.

மேலும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், மாணவர் எண்ணிக்கை குறைவான பள்ளிகளில் இருந்த கூடுதல் ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளிகளை இணைப்பதனால், மீண்டும் 'சர்ப்பிளஸ்', அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு, தீர்வாக, மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம், ஆசிரியர்களுக்கான மாறுதல் மட்டுமின்றி, பள்ளிகளை இணைக்கும் திட்டத்தையும் அரசு கைவிடும் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான சேர்க்கை நடத்த, ஆக., மாதம் வரை மட்டுமே வழக்கமாக அவகாசம் வழங்கப்படும். நடப்பாண்டில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, செப்., மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில், 'கிண்டர் கார்டன்', வகுப்புகளும் பள்ளிகளில் துவக்கப்படும் என்ற அறிவிப்புகளும், பள்ளி நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். சில பகுதிகளில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பள்ளிகளிலும் சரிந்துள்ளது. அரசு வழங்கிய அவகாசம் நிறைவு பெற குறுகிய நாட்கள் மட்டுமே உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பள்ளிகளில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கை அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது,'' என்றார்.

ஆசிரியர்கள் கண்காணிப்பு : மாணவர்களுக்கு பாதுகாப்பு

கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டுமின்றி, நகரப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும், பஸ்சில் நெருக்கடியான பயணங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே சில கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பதோடு, படிக்கட்டில் நின்று அபாயகரமான பயணங்களையும் செய்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதிகள் இல்லாததால், அந்தந்த நேரத்துக்கு வரும் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால், வேறுவழியின்றி, படிக்கட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு முதன்மையாக இருப்பதால், ஆபத்தான பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென, கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாலையில் பள்ளி முடியும் நேரத்தில், பஸ் பயணம் செய்யும் மாணவர்களை நேரடியாக கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவை,
பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.


இதன் துவக்க விழா ஈ.வெ.ரா., பள்ளியில் நடந்தது. கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி பேசுகையில், ''மாநகராட்சியின் 54 பள்ளிகளிலும் இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அதன்படி சம்பளம் வழங்கப்படும்,'' என்றார். கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்

'கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

QR Code முறை தெரியாத ஆசிரியர்கள் மதுரையில் தொடக்க பள்ளிகளில் 'கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 6, 7, 8 ம் வகுப்பு மாணவரின் எழுத்து, வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கான அடிப்படை செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது: பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முதலில் ஆசிரியர் பின்பற்றி மாணவருக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். நான்கு மற்றும் 6ம் வகுப்பு மாணவரின் கல்வித் திறனை அதிகரிக்க அடிக்கடி தேர்வு நடத்தி கண்காணிக்க வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர்.,கோடு முறையை பயன்படுத்தி பாடங்களை ஆடியோ - வீடியோவாக கற்பிப்பதை சில ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என தெரிகிறது. இதை ஆசிரியர் பயிற்றுனர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்: முதன்மைச் செயலர் சு.ஜவஹர்...!!

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய பணி பதிவேட்டை தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கமுடியும் என தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.


தென்காசியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது.

 தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 9 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம், 7 லட்சம் அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கி வருகிறோம்.

ஓய்வூதியர்களுக்காக பலசிறப்பு திட்டங்கள் உள்ளன.  ஏற்கெனவே இருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் 2018  அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சமாக இருந்த தொகை 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம்  முழுவதும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் என 12 லட்சம் பேர் பயனடைவர்.

கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் தமிழகம் முழுவதும் அனைத்துஅரசு திட்டங்களுடைய வரவு செலவுகளை 294 அலுவலகம் மூலம் செயல்படுத்தி வருகிறோம்.

சென்ற நிதியாண்டில் அரசின் செலவு 1 லட்சத்து 70ஆயிரம் கோடியாகும். முக்கிய செலவினம் என்பது அரசு ஊழியர்களுடைய மாத ஊதியம், ஓய்வூதியம், அரசின் நலத் திட்டங்களுடைய செலவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சாலை வசதி, பொதுப்பணித்துறை கட்டடங்கள்கட்டுவது உள்ளிட்டவையாகும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுதிட்டத்தின் மூலம் 15 நிமிடத்தில் பணிகள் முடியும். காலையில் பில் மாலையில் பணம் என்பது தான் எங்கள் நோக்கம்.

 இத்திட்டத்தின் சிறப்பம்சம் தமிழக அரசில் பணியாற்றும்,  கருவூலம் மூலம் ஊதியம் பெறும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணி பதிவேடு கணினி மயமாக்கப்படும். அதன் மூலம் பணி பதிவேடு தீ விபத்து, தொலைந்து விட்டது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்.

தங்களுடைய பணி பதிவேடுகள் குறித்த விவரங்களை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்.

அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணி ஓய்வு நாளன்று அனைத்து சலுகைகளும், ஓய்வூதியத்துக்கான உத்தரவும் வழங்கப்படும் என்றார்

EMIS இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!

சில பள்ளிகளில் நாங்கள் சரியான அளவில் ( 150 x 175 , below 25 kb ) போட்டோவை ரீசைஸ் செய்து அப்லோடு பண்ணும் போது அப்லோட் ஆகிவிட்டதாக தகவல் வருகிறது..ஆனால் 

பழைய போட்டோவே டிஸ்பிளே ஆகிறது என்று ஒரு இடர்பாட்டை நமக்கு கொண்டு வந்தார்கள்...இதற்கான தீர்வை விளக்கப்படங்கள் மூலம் விளக்கியுள்ளோம்...பார்த்துப் பயன் அடையவும்..

CLICK HERE TO DOWNLOAD -EMIS PHOTO UPDATES AND DOUBTS......

DA ARREARS CALCULATOR - JULY 2018

CLICK HERE TO DOWNLOAD D.A ARREARS EXCEL SHEET ........... 




SEPARATE SHEET FOR SURRENDER FOR 15 DAYS AND 30 DAYS ....
THANK YOU... .

SSA - 20 DAYS TRAINING FOR TEACHERS - SPD PROC விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்க CEO - களுக்கு உத்தரவு


போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!!

போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!! - மத்திய அரசு

போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்’!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 19) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.




இதனையடுத்து, அரசு ஊழியர்கள் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தெரிவித்திருப்பதாவது:

“அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் நடத்தை விதிகள் 1964இன் பிரிவு 7ஆவது விதிமீறலாகக் கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.”

என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC-RESULT PUBLISHED-LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE,2016-2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.09.18


திருக்குறள்


வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.


விளக்கம்:

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பழமொழி

Coming events cast their shadows before

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

இரண்டொழுக்க பண்பாடு

1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.

2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.

 பொன்மொழி

 ஒன்றை பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு .... விளைவுகளையோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே!!
        - விவேகானந்தர்

பொது அறிவு

1.தாவரங்களின் வளர்ச்சியை
 அளவிட உதவும்  கருவி எது?

  கிரிஸ்கோகிராப்

2. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

 ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்)

English words and Meanings

Humble.     தாழ்மையான
Hub.            மையமாக
Herbal.        மூலிகை
Hurricane சூறாவளி
Heal.       குணமடை

 தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*புதினா*

1.ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

2.பசியைத் தூண்டுகிறது.

நீதிக்கதை

நாய் வால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.  ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.  நமக்கு ஒரு ‘வால்’  கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

இந்த மனிதனை இழுத்துக்  கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும்  திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

இன்றைய செய்திகள்

20.09.18

* மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது.

* தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

* மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா மற்றும் விதா்பா பகுதிகளில் உள்ள 17 மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

* இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன ஓபன் முதல் சுற்றில் டென்மார்க் வீரரை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

* இலங்கையுடனான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸The Metur dam is continuously  lasting for more than a hundred feet in the 62nd day⭐

🌸10 IAS officers in Tamil Nadu have been officially displaced  ⭐

🌸 In 17 districts in Maharashtra, Marathwada and Vidhba regions, water shortages have been evolved⭐

🌸 India's leading Badminton player Gimpi Srikanth advanced to the 2nd round of the Chinese Open batminton in the first round by defeating Denmark player⭐

🌸 Indian women's cricket team won by 13 runs in the first T-20 match against Sri Lanka🤝🎖

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அரசு பள்ளியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய நான் தயார்! பணி வழங்க தமிழக அரசு தயாரா?






DSE PROCEEDINGS-School Education-Students Skills Development- Certificate Courses Organised by Tamilnadu Open University through Public Private Partnership (PPP)-Instructions to give circular to Headmaster to make the students to know about the skill training courses offered by TNOU-Reg