>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
LIC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LIC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 மார்ச், 2018

எல்.ஐ.சி.,யின் புதிய திட்டம் அறிமுகம்....

சென்னை, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.'பீமாஸ்ரீ' திட்டம், பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்கேற்கும், குறிப்பிட்ட காலம் மட்டுமே, பிரீமியம் செலுத்தும் பாலிசியாகும்.
இதில், 8 வயது முதல் 55 வயது வரை, உள்ளவர்கள் சேரலாம். பாலிசி காலம் 14, 16 ,18 மற்றும் 20 ஆண்டுகள்; பிரீமியம் செலுத்தும் காலம், 10,12,14, மற்றும் 16 ஆண்டுகள் ஆகும்.
பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம். திட்டத்திற்கான, குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம்; அதிகபட்ச வரம்பு இல்லை.முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், 6வது ஆண்டில் இருந்து, பிரீமியம் செலுத்தும் காலம் வரை, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், விசுவாச தொகையும் அளிக்கப்படுகிறது.மேலும், திட்டத்தில் வாழ்வு கால பயன், முதிர்வு தொகை பயன், இறப்பு தொகை பயன் என, மூன்று விதமான பயன்கள் உள்ளன. வாழ்வு கால பயன்களை, குறித்த காலத்தில் பெற, பணம் தேவைப்படும் நேரத்தில் விண்ணப்பித்தால், 
பணமீட்பு தொகையுடன், வட்டியும் வழங்கப்படும்.
முதிர்வு தொகையை, மொத்தமாக பெற, மாற்றாக ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் அல்லது 15 ஆண்டுகளில், தவணை முறையாக மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தவணையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
அதே போல், இறப்பு உரிம தொகையையும், தவணை முறையிலோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 19 அக்டோபர், 2017

பள்ளியில் காப்பீடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது. 

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடுகள் வழங்கப்படும்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற, 54 ஆயிரம் வினா மற்றும் விடைத் தாள் அடங்கிய பதிப்புகள் வெளியிடப்படும்.
பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வினாத்தாள் மாதிரி வெளியிடப்படும். மேலும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் அச்சம் நீங்கி, எந்த தேர்வையும் எதிர்கொள்ள திறமை மாணவர்களுக்கு ஏற்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

திங்கள், 14 நவம்பர், 2016

பயணிகளின் மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் : ரயில்வே அதிரடி தொடர்கிறது

ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92 பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு, இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய,