>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
FLASH NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FLASH NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளம் வழியே தெரிந்துகொள்ளலாம் - மாநில தேர்தல் ஆணையம்!

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளம் வழியே தெரிந்துகொள்ளலாம் - மாநில தேர்தல் ஆணையம்!



..........................................................................

செவ்வாய், 19 நவம்பர், 2019

FLASH NEWS :- தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு!!

வெள்ளி, 16 நவம்பர், 2018

Flash news :- கஜா புயல்: 22 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை (updated )



சென்னை: கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்ததையடுத்து கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கஜா புயல் காரணமாக 

1.தஞ்சை, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
2.நாகை, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
3.கடலூர், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
4.ராமநாதபுரம், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
5.புதுக்கோட்டை, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
6.திருவாரூர்,இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
7.அரியலூர் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
8. சிவகங்கை இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
9.தேனி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
10.மதுரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

11.விருதுநகர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

12.சேலம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

13.தூத்துக்குடி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

14.திருச்சி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
15. திருப்பூர் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

16.ஈரோடு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

17.திண்டுக்கல் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

18.கரூர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

19. பெரம்பலூர் மாவட்டம் - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

20.கோவை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

21.தஞ்சாவூர் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

22.புதுச்சேரி,காரைக்கால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

23. திருவண்ணாமலை இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 உள்ளிடட் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதே போன்று புதுச்சேரியிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது.

புதன், 15 நவம்பர், 2017

100 இடங்களில் நுழைவு தேர்வு இலவச பயிற்சி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.

மத்திய அரசின், 'நீட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு,தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.நடவடிக்கை : முதற்கட்டமாக, சென்னை உட்பட, 100 இடங்களில், இந்த பயிற்சி துவக்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 25 இடங்களில் பயிற்சியைதுவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.பொது தேர்வில் தரப்பட்டியல் ஒழிப்பு, எஸ்.எம்.எஸ்., வழியே தேர்வு முடிவு அறிவித்தல், பிளஸ் 1க்கு பொது தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 2,373 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் என, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.இந்த பயிற்சி திட்டத்தில், 73 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பயிற்சி நடக்கும்.தேர்வு விடுமுறை மற்றும் பொது தேர்வு விடுமுறையில், தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மொத்தம், 30 புத்தகங்கள் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பு : இந்த பயிற்சிக்கு, 'ஸ்பீட் அகாடமி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. முதலில், 100 மையங்கள் திறக்கப்படுகின்றன; பின், கூடுதலாக, 312 மையங்கள் திறக்கப்படும்.நாங்கள் தரும் இலவச பயிற்சியை பெற்று, நீங்களும் முயற்சித்து, மத்திய அரசின் எந்த தேர்வானாலும், அதில், தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''மத்திய அரசு எத்தனை நுழைவு தேர்வுகளை நடத்தினாலும், அதை தகர்த்தெறிந்து, தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், இந்த திட்டத்தில் பயிற்சிஅளிக்கப்படும்.''வகுப்பில் மட்டுமல்ல, வீட்டிலும் பயிற்சி பெறும் வண்ணம், பயிற்சி வகுப்புகள் அடங்கிய, சி..,யும், மாணவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், மாணவியர் பங்கேற்றனர்.'ஜெட் வேகத்தில் கல்வித்துறை' - துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், தற்போதைய போட்டி தேர்வு பயிற்சியும், மாணவர்களை முன்னேற்றும்.பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஜெட் வேகத்தில், துறையில் வளர்ச்சிபணிகளை மேற்கொண்டு வருகிறார்,'' என்றார்.

புதன், 17 மே, 2017

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,
1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.
7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:
1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.
4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

செவ்வாய், 9 மே, 2017

வெளியானது முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பு

Date of Notification : 09.05.2017 
Commencement of submission of application through online mode : 10.05.2017
Last date for submission of application through online mode : 30.05.2017 | 
Date of Written Examination : 02.07.2017

செவ்வாய், 25 ஏப்ரல், 2017


தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜூலை, 25ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் !!

இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 31 சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட வேண்டும். அந்த வகையில், 784 எம்.பி.,க்கள், 4,114 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.
2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் - 1974ன் கீழ், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு,
'எலக்ட்ரோல் காலேஜ்' என, பெயர். இதன்படி ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708. ஆனால், ஒரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு, அவர் சார்ந்த சட்டசபையின் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி, உ.பி., எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு, 208. மிக குறைந்த ஓட்டு மதிப்பு கொண்டது சிக்கிம் மாநில எம்.எல்.ஏ., தான். அவரது ஓட்டு மதிப்பு, 7 .
3. நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறமும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றொரு புறமும் உள்ளன. இதுதவிர இந்த இரண்டு தரப்பையும் விருப்பாமல், அ.தி.மு.க., உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகள் மூன்றாவது தரப்பில் உள்ளன.
4. பா.ஜ., கூட்டணியில், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், மொத்தம், 1,691 எம்.எல்.ஏ.,க்கள், 418 எம்.பி.,க்கள் உள்ளனர். ஓட்டு மதிப்புபடி பார்த்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,41,757 ; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு,2,95,944 என, மொத்தம், 5,37,683 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 48.64 சதவீதமாகும்.
5. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், 1,710 எம்.எல்.ஏ.,க்கள், 244 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,18,987; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 1,73, 460 என மொத்தம், 3,91,739 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 35.47 சதவீதம்.
6. இரண்டு கூட்டணிகளிலும் சேராத தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி, அரியானாவை சேர்ந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகியவை தனியாக உள்ளன. இவர்களிடம், 510 எம்.எல்.ஏ.,க்கள், 109 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த தரப்பின், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, 71,495; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 72,924 என மொத்த ஓட்டுக்களின் மதிப்பு, 1,44,302. இது ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில், 13.06 சதவீதமாகும்.
7. இந்த கணக்குபடி பார்த்தால், காங்., கூட்டணியை விட, பா.ஜ., கூட்டணிக்கு, 13 சதவீத ஓட்டு மதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் நடந்த உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல்களில் பா.ஜ., கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை பெற்றது அந்த கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை, 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
8. காங்., கூட்டணியுடன், எந்த கூட்டணியிலும் சேராத ஆறு கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை சேர்த்தால் கூட, பா.ஜ., சற்று முன்னிலையில் தான் உள்ளது. பா.ஜ., கூட்டணி ஓட்டு மதிப்பு, 48.64 சதவீதம்; காங்., கூட்டணியின் ஓட்டு மதிப்பான, 35.47 சதவீதத்துடன், ஆறு கட்சிகளின் ஓட்டு மதிப்பான, 13.06 சதவீதத்தை சேர்த்தால் கூட, 48.53 சதவீதம் தான் வரும். இது பா.ஜ.,வை விட சிறிதளவு குறைவு தான்.
9. ஜனாதிபதி தேர்தலில் மெஜாரிட்டி ஓட்டுக்களை பெற, ஆறு கட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளை இழுத்தால் கூட, பா.ஜ., சாதித்து விடும். ஆனால், இந்த ஆறு கட்சிகளை தங்கள் வசம் இழுத்தால் கூட காங்., கூட்டணியால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமே.
10 பா.ஜ., கூட்டணி, காங்., கூட்டணி, ஆறு கட்சிகள் தரப்பு என மூன்று தரப்பையும் சேராத சிறு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு போட உள்ளன. இந்த கட்சிகளிடம், ஓட்டு மதிப்பில், 3 சதவீதம் உள்ளது. வழக்கமாக இதுபோன்ற சிறிய கட்சிகள், ஆளும் கட்சிக்கே சாதகமாக ஓட்டு அளிக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

வியாழன், 20 ஏப்ரல், 2017


FLASH NEWS :- கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22ம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை


ஞாயிறு, 16 ஏப்ரல், 2017


பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.1.04 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 
பெட்ரோல், டீசலின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கிடையே, மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் கொண்டு வரும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டணம்,  ஆந்திரா,  உதய்பூர்,  ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் வருகிறது. இதன் பிறகு மற்ற பகுதிகளுக்கும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.
இந்நிலையில், தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.39 பைசாவும், டீசல் விலை ரூ. 1.04 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 31-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 31 மார்ச், 2017


FLASH NEWS : TWO WHEELER - களுக்கு ரூ. 22,000 வரை தள்ளுபடி! - இருசக்கர வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு.* -உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி

நாட்டின் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை, ஆய்வு செய்து விதிமுறைகளை வகுத்து வருகின்றன.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

தமிழக அரசு ஊழியர்கள் " passport" பெறுவதற்கான வழிமுறைகள் -முழு விபரங்கள்..

அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெறவேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அனைத்துத் துறை
செயலாளர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோருக்குபணியாளர்- நிர்வாகச்சீர்திருத்தத் துறை செயலாளர்பி.டபிள்யூ.சி.டேவிதார்அனுப்பியுள்ள கடிதம்: அரசுத்துறைகளில் பணியாற்றும்அதிகாரிகள், பணியாளர்கள்,பொதுத் துறைகளைச்சேர்ந்தவர்கள்கடவுச்சீட்டுகளைப் பெற சிலகடினமான நடைமுறைகள்பின்பற்றப்படுகின்றன. இந்தநடைமுறைகளை எளிதாக்கவெளியுறவுத் துறை அமைச்சகம்முன்வந்துள்ளது. கடவுச்சீட்டுக்குவிண்ணப்பிக்கும்போது அரசுத்துறைகளின் அதிகாரிகள்,அலுவலர்கள், பணியாளர்கள்உள்ளிட்டோர் தங்களது பணி,தாங்கள் யார் என்பதைத்தெரிவிக்கும் அடையாளச்சான்று அல்லது அரசுத்துறைகளில் இருந்துஆட்சேபணையின்மைச்சான்றினைச் சமர்பிக்கவேண்டும் என்று ஏற்கெனவேதெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச்சான்றிதழ்களைப் பெறுவதுகடினமாக இருப்பதால் இந்தநடைமுறை இப்போதுஎளிதாக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடவுச்சீட்டைப்பெறுவதற்குவிண்ணப்பிப்பதற்கு முன்னதாக,அதுகுறித்த முன்னறிவிப்புக்கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயரதிகாரிக்குத்தெரிவித்தால் போதும்.ஆட்சேபணை ஏதும் இருந்தால்சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரிமண்டல கடவுச்சீட்டுஅலுவலகத்துக்கு அதைத்தெரிவித்து கடவுச்சீட்டுவிண்ணப்பத்தை திரும்பப்பெற்று விடலாம் என்று தனதுகடிதத்தில் டேவிதார்தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்பெறுவது இனி ”ஈசி” -எளிதாக்கப்பட்ட புதியநடைமுறை அறிமுகம்
சென்னை: தமிழக அரசுஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும்முறையில் மாற்றங்கள்கொண்டு வரப்பட்டுள்ளதாகதமிழக பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத்துறைசெயலாளர் சுற்றறிக்கைஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின்அனைத்து துறை செயலாளர்கள்மற்றும் அதிகாரிகளுக்குபணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத்துறை செயலாளர்டேவிதார் அனுப்பியசுற்றறிக்கையில், "பாஸ்போர்ட்டுகளை அரசுஊழியர்கள், அதிகாரிகள் மற்றும்பொதுத்துறைகளைச் சேர்ந்தஊழியர்கள்பெற்றுக்கொள்வதில் கடினமானநடைமுறை இருந்தது. இதைமத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகம் தற்போதுஎளிதாக்கியுள்ளது.
முன்பு பாஸ்போர்ட்டை அவர்கள்பெறவேண்டுமானால், அரசுத்துறையின்ஆட்சேபனையின்மைச் சான்று,அடையாளச் சான்றுபோன்றவற்றை வாங்கிசமர்ப்பிக்க வேண்டும். இந்தநிலை தற்போதுமாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பாஸ்போர்ட் கேட்டுமண்டல அலுவலகத்திடம்விண்ணப்பிப்பதற்கு முன்பதாக,அவர் பணியாற்றும் துறையின்உயர் அதிகாரிக்குமுன்னறிவிப்பு கடிதத்தைகொடுத்தால் மட்டும்போதுமானது. அவருக்குபாஸ்போர்ட் வழங்கக்கூடாதுஎன்றால், மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு துறையின்உயர் அதிகாரி கடிதம் மூலம்ஆட்சேபனைகளைத் தெரிவித்து,விண்ணப்பத்தை திரும்பப்பெற்றுவிடலாம்" என்றுகூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அப்ளை செய்யதேவையான ஆவணங்கள்,கட்டணங்கள், விதிமுறைகள்என்ன? எப்படி செய்வது?
ஒரு நாட்டைக் கடந்து மற்றொருநாட்டிற்கு செல்கிற எவரும்கடவுச்சீட்டு (Passport) பெறவேண்டியது அவசியமாகஉள்ளது. அதனால் பாஸ்போர்ட்நமக்கு தேவை என்றால் முதலில்நாம் அணுகுவது இடைதரகர்களை தான், ஆனால்தற்போது எந்த இடைதரகர்களும் இல்லாமலே நாமேநேரடியாக பாஸ்போர்ட் எடுக்கஇந்திய அரசாங்கம் வழிவகைசெய்துள்ளது. பாஸ்போர்ட்விண்ணப்பிக்கும் செயல்முறைஇப்போது ஆன்லைனில்மாறிவிட்டது. புதியதாகநிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட்சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிறசெயல்பாட்டின் மூலம்,ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30நாட்களுக்குள்ளேயே உங்களதுபாஸ்போர்ட்டைப் பெற்றுவிடலாம். அந்த அதிகாரப்பூர்வஇணையதளம் இப்போது டாடாகன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம்பராமரிக்கப்படுகிறது. நம்மில்பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட்எடுக்க விருப்பம் இருந்தாலும்அதற்கான வழிமுறைகள்தெரியாததால் தரகர்களிடம்சென்று எடுக்கிறோம், இனிஅந்த அவசியம் தேவையில்லை.உங்கள் பாஸ்போர்ட்டைஆன்லைனிலேயே நீங்கள்அப்ளை செய்யும்செயல்முறையையும்,பாஸ்போர்ட் எடுக்க என்னவிதிமுறை மற்றும் வழிமுறைஅனைத்தையும் தெரிந்துகொள்ள போகிறோம்.
1) பாஸ்போர்ட் எத்தனைவகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமானபாஸ்போர்ட்கள்வழங்கப்படுகின்றன. Ordinaryபாஸ்போர்ட் சாதாரணகுடிமக்களுக்கும், Officialபாஸ்போர்ட் அரசாங்கஊழியர்களுக்கும்,Diplomaticபாஸ்போர்ட் முதல்வர், பிரதமர்போன்ற உயர்மட்டத்தலைவர்களுக்கும், Jumboபாஸ்போர்ட் வியாபாரநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுசெல்பவர்களுக்கும்வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில்எத்தனை முறைகள் உள்ளன?
பாஸ்போர்ட் பெறுவதில்எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன.ஒன்று ஆர்டினரி (Ordinary),மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும்பாஸ்போர்ட்டை எத்தனைவருடங்களுக்குப்பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்தபாஸ்போர்ட்டைப் பத்துவருடங்களுக்குப்பயன்படுத்தலாம். மீண்டும்அதை அதற்கான கட்டணத்தைக்கட்டிப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஒன்பதுவருடங்கள் முடிந்தவுடன்எப்போது வேண்டுமானாலும்புதுப்பித்துக் கொள்ளலாம்.மீண்டும் 10 வருடங்களுக்குவழங்கப்படும். இப்படிபுதுப்பிக்கும்போது, 15நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட்கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்கதேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டுஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவதுஇரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்தஒரு வருடமாக பணம் எடுக்கவும்போடவும் செய்து அதை பதிவுசெய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள்பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கானரசீது (உங்கள் பெயரில் இருக்கவேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவதுஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89அன்றைக்கு பிறந்த அல்லதுஅதற்குப் பிறகு பிறந்தவராகஇருந்தால் மட்டும் நகராட்சிஆணையாளரால் அல்லதுபிறப்பு & இறப்பு பதிவாளர்அலுவலகத்தில் கொடுக்கும்பிறப்பு/இறப்பு சான்றிதல்ஏற்கதக்கதாகும்.என்றால்அரசாங்கத்தால் தரும் பிறப்புசான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும்சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்)ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால்ECNR முத்திரை இருக்காது,அதற்காக கடைசியாக எதைபடித்து முடித்தீர்களோ அதனைகொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம்மாறும்போது/ எண்கணிதமுறையில்) மாற்றி இருந்தால்அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும்போது திருமணம் ஆகாமல்இருந்து, பழையது முடிந்துரினிவல் பாஸ்போர்ட் அப்ளைசெய்ய போனாலும் மேற்கன்டஅனைத்தையும் கொண்டுபோகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ்இணைக்க வேண்டும் அல்லதுமாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரிபப்ளிக் மூலமாக கணவனும்மனைவியும் சென்றுவாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டைகொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப்படித்திருந்தால் அல்லதுபடிக்கவே இல்லை என்றால்நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட்பெற்று விண் ணப்பிக்கலாம்.26.01.1989-ம்ஆண்டுக்குப் பிறகுபிறந்திருந்தால் பிறப்புசான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டுஎடுக்க விரும்பினால்,பெற்றோர்கள் கடவுச்சீட்டுஇருப்பவராக இருந்தால்,காவல்துறை அறிக்கைதேவைப்படாது. பெற்றோர்க்குகடவுச்சீட்டு இல்லாவிட்டால்அவர்தம் விண்ணப்பங்களும்காவல் துறைக்கு அனுப்பிஅறிக்கை பெற்ற பின்னரேகடவுச்சீட்டு அளிப்பர்.
5) இணையதளம் மூலம்விண்ணப்பிபதால் என்னபயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டாரபாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ளஅதற்குரிய அலுவலரிடம்சமர்ப்பிக்கவேண்டியதற்கானதிட்டமிட்ட தேதி, நேரம்,தேவையான ஆவணங்கள்மற்றும் கட்டணம்ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய தேவையில்லை
6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கானகட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்துகொள்ள:http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ(சாதரணமான முறை)
• காணாமல் போனால் –சேதமடைந்தால் – 1500 ரூ(பாஸ்போர்டு முடிந்து இருந்தால்– Expired)
• காணாமல் போனால் –சேதமடைந்தால் – 3000 ரூ(பாஸ்போர்டு Expireஆகவில்லைஎனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில்500 ரூபாயைச் சேர்த்துக்கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம்புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெறவேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள்.அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட்பாஸ்போர்ட் வழங்கப்படும்.இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய்மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய்கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட்விண்ணப்பங்களை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தில்செலுத்தி 30 நாள்களில்பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடுகின்றன. அவசரமாகவெளிநாடு செல்பவர்க்குஉதவியாக விரைந்துபாஸ்போர்ட் பெறவும்வகையிருக்கிறது. இதற்கு“தட்கல் திட்டம்” என்ற புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தில்சிறப்புரிமை அடிப்படையில்விரைந்து பாஸ்போர்ட் பெறமுடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும்அனைத்து பாஸ்போர்ட்களைச்சார்ந்த காவல்துறையின்சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட்வழங்கிய பின் இருக்கும் கீழேசொல்லப்பட்ட பட்டியலிலிருந்துமூன்று ஆவணங்களைசமர்ப்பிப்பதன் மூலம் தட்கால்திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்பெறுவதற்கு விண்ணப்பதார்ர்பெறமுடியும். மூன்றுஆவணங்களில் ஒன்றுபுகைப்படைத்துடன் கூடியஅடையாள அட்டையாக இருக்கவேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட்பெற விழைவோர் ரூ.2500/-கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாகசமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின்பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாகசமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாளஅட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கானரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும்பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி)சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா,பதிவுசெய்யப்பட்டஒப்பந்தபத்திரங்கள் இன்னும்பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களால் வழங்கப்பட்டமாணவர்களுக்கான புகைப்படஅடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களானமுன்னாள் இராணுவ வீரரின்ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம்செலுத்துவதற்கான ஆணை,முன்னாள் இராணுவ வீரரின்விதவை/சார்ந்தவர்கள்சான்றிதழ்கள், முதியோர்ஓய்வூதிய ஆணை, விதவைஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால்வழங்கப்பட்ட பணிக்கானபுகைப்பட அடையாள அட்டை,பொது நிறுவனங்கள், உள்ளூர்அமைப்புகள் அல்லது பொதுவரையறை நிறுவனங்கள் வழங்கிய ஆணை.

திங்கள், 30 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, உடனடியாக அவசரச் சட்டம் சட்டமாக ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த சட்டத்தில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு, தமிழக மக்களின் போராட்டத்துக்கு முழு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெறப்பட்டதை அடுத்து, இந்த சட்டம், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் சாசனத்தில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவாக தீர்ப்பளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு எழுதப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததை அடுத்து, ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தீர்ப்பளிக்கக் கூடாது என்று தடை பெற்றது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 28 ஜனவரி, 2017

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ?


பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)
வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3. வருமான வரி
ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
4. கார்ப்பரேட் வரி
கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.
5. ரெயில்வே
ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
6. விவசாயம்
ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .
7. தொழில்துறை, உற்பத்திதுறை
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.
8. அன்னிய முதலீடு
வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.
9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை ்3 ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிபட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல காலம் பொறந்தாச்சு..
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நவம்பர் 8ஆம்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியது. அதன் மூலம் சாமாணியர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்பது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அறிவிக்க உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளகாரர்களுக்கு அதிகளவிலான வரிச் சலுகைகள், தளர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள்அதிகளவில் தெரிகிறது.
2014ஆம் ஆண்டுக்குப் பின் மேலும் வர்த்தகச் சந்தையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிக்கையாகப் பட்ஜெட்2017உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டில் (இந்தியாவில் மட்டும்) கருப்பு பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளை 80 சதவீதம் அளவிற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் களையப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்து சில திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   வருமான வரி விதிப்பு அளவீடுகள் கடைசியாக மத்திய அரசு வருமான வரி விதிப்புஅளவீடுகளை மாற்றியது 2014-15ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில். இதன் பின் தற்போது மத்திய நிதியமைச்சர் வருமான வரியை குறைக்கத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
புதிய வரி விதிப்பு
இந்நிலையில் சந்தை வல்லுனர்களின்கணிப்பு மற்றும் ஆய்வுகளின் படி தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வரியில்லா வருமான அளவுகளை4 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தலாம் எனத் தெரிவித்துள்ளது. பழைய வரி விதிப்பு கடந்த 2 வருடமாக நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு அளவுகள் இது.
மூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுடையவர்களுக்குத் தற்போது 3,00,000 வரையில் வரி விதிப்புக் கிடையாது. அதேபோல் 80 வயதை தாண்டியவர்களுக்கு 5,00,000 வரை வருமான வரி கிடையாது. பட்ஜெட் 2017 அறிக்கையில் அதன் அளவுகளை 4,00,000 மற்றும் 6,50,000 லட்சம் தத்தம் அளவுகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது.   கொடுப்பனவு மற்றும் சலுகைகள் மாத சம்பளகாரர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் அனைத்து பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தற்போது முழுமையாக மாற்றவும் நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிகிறது. குழந்தைகள் கல்வி மாத சம்பளக்காரர்களுக்குத் தற்போது குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவில் மாதம் 100 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை வரிச் சலுகை பெறலாம். 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன்அளவீடுகளை மாதம் 1,000 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாத 5000 ரூபாய் conveyance allowance பிரிவில் தற்போது மாதமாதம் 1,600 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாதம் 5,000 ரூபாய் வரை உயர்த்ததிட்டமிட்டு வருகிறது நிதியமைச்சகம்.
மருத்துவச் செலவுகள் திரும்பப் பெறுதல் மாத சம்பளகாரர்களுக்கு மருத்துச் செலவு செய்ததைத் திரும்பப் பெற சலுகையின் கீழ் வருடம் 15,000 ரூபாய் அளவிற்குச் சலுகை அளிக்கப்படுகின்றது. அதனை 50,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.     வீட்டு வாடகை மெட்ரோ நகரங்கள் அல்லாத இடங்களில் மாத சம்பளகாரர்களுக்குத் தங்களுடைய வருமானத்தில் 40 சதவீதம் அளவிற்கு வீட்டு வாடகையின் கீழ் வரிச் சலுகைபெறலாம். தற்போது இதன் அளவீடுகளை 50 சதலவீதம் வரை உயர்த்தவும் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. 
விடுமுறை பயணக் கொடுப்பனவு இப்பிரிவின் கீழ் இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்வதற்கு மட்டுமே கொடுப்பனவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அளவை வெளிநாடுகளுக்கு வரிவாக்கம் செய்யவும், வருடத்திற்கு 1,00,000 வரையில் வரிச் சலுகை அளிக்கவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இது 4 வருடத்தில் 2 முறை மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் எனக் கட்டுப்பாடுகள் வைக்கப்படுகிறது.   வீட்டுக் கடன் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் எனப் பிரதமரின் புத்தாண்டு நாள் பேச்சின் வாயிலாகத் தற்போது வீட்டு கடனுக்கு வருடத்திற்கு அளிக்க 2,00,000 ரூபாய் அளவிலான வரி சலுகையை 5,00,000 வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிகிறது.
80சி மேலும் 80சி பிரிவின் கீழ் தற்போது வரிச் சலுகை பெறும் அளவுகள் 1,50,000 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் இதனை 3,00,000 ரூபாய் வரை உயர்த்தவும் ஆலோசனை செய்யப்படு வருவதாகத் தெரிகிறது. பிற திட்டங்கள் மேலும் என்பிஎஸ், 80சிசிடி, ஈபிஎப் அல்லது பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்களிலும் வருமானவரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை வரும் ஜனவரி 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவால் தமிழகத்தில் வீடு மற்றும் மனை விற்பனை முடங்கியதால் பத்திரப் பதிவும் கடும் பாதிப்பை சந்தித்தது. இவ்வழக்கு கடந்த 2016 அக்டோபர் 21-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 20 வரை பதிவான மனைகளின், மறு விற்பனையை அனுமதிப்பதற்கான அரசாணை நகல் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் நிலங்களின் வகைப்பாட்டு விவரங்களை பட்டியலிட்டு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் அடுத்தடுத்து நவம்பர் 16 மற்றும்  டிசம்பர் 5-ம் தேதிகளில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, அங்கீகாரமில்லாத மனைகளை வரன் முறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட செயலாக்கம் குறித்த, முழு விபரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று அதாவது ஜனவரி 9-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது  நிலங்களை வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். நிலங்களை வகைப்படுத்த மேலும் 2 வார காலம் அவகாசம் கேட்டு அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி தடையை ஜனவரி 30-ம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மறுபரிசீலனை செய்ய கோரிக்கை:
பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தரப்பு வாதிட்டது. மேலும் பிரச்சனைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் கோரினர். நிபந்தனைகளுக்குட்பட்டு பத்திரப்பதிவு செய்ய உத்தரவிடுமாறும் நீதிபதிகளிடம் ரியல் எஸ்டேட் தரப்பினர் வாதிட்டனர்.      

திங்கள், 9 ஜனவரி, 2017

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே 7ம் தேதி இந்த தேர்வு நாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.
இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்த பிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.
இந்த தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினம் : கொடியேற்றும் வாய்ப்பு பன்னீருக்கு!

குடியரசு தினம் : கொடியேற்றும் வாய்ப்பு பன்னீருக்கு!

குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும், ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர்களும் கொடியேற்றும் நடைமுறை இருந்து
வருகிறது.தமிழகத்தில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சரும், கடற்கரை காமராஜர் சாலையில் காந்திசிலை அருகில் கவர்னரும் கொடியேற்றுவார்கள். இந்த ஆண்டு வருகிற 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் கொடியேற்ற மாட்டார் என்றும் அவருக்கு பதில் முதலமைச்சர் கொடியேற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு தனியாக இன்னும் கவர்னர் நியமிக்கப்படவில்லை. மராட்டிய கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். அவர் வருகிற 26-ஆம் தேதி மராட்டிய கவர்னர் என்ற முறையில் மும்பையில் கொடியேற்ற இருப்பதால் சென்னையில் அன்றைய தினம் அவர் கொடியேற்றவில்லை.
எனவே வருகிற 26-ஆம் தேதி சென்னையில் கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னருக்கு பதில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கவர்னருக்கு பதில் முதலமைச்சர் கொடியேற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த 1974-ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் கவர்னர்கள் கொடியேற்றும் முறை கொண்டு வரப்பட்டது. அது முதல் கவர்னர்களே சென்னையில் கொடியேற்றி வருகிறார்கள். தற்போது தமிழகத்துக்கு தனியாக கவர்னர் நியமிக்கப்படாததால் முதல் முறையாக கவர்னருக்கு பதில், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடியரசு தினத்தன்று கொடியேற்றுகிறார். தமிழகத்தில் குடியரசு தினத்தன்று இதுவரை எந்த முதலமைச்சரும் கொடியேற்றியது கிடையாது. முதல் முறையாக அந்த வாய்ப்பு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016


*IAS தேர்வு என்றால் என்ன ?*

IAS மற்றும் IPS உள்ளிட்ட
24 பணிகளுக்காக
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

*F.A.Q*
*IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

*IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?*
குறைந்தபட்ச வயது :
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர்
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

*ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

*ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

*IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

*IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
*என்னால் முடியுமா ?*
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.
உண்மையான போட்டியாளர்கள்
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

*IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*
*தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?*
முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

*IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

*IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

*IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*
இல்லை.
அப்படி எதுவும் இல்லை..
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும்
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
இளைஞர்களுக்கு உற்சாகப் படுத்துங்கள்.
நமது ஊரில் IAS. IPS. போன்ற வேலைக்கு *நமது இளைய தலைமுறை ஆர்வம் கொள்ள செய்வோம்.*

வியாழன், 1 டிசம்பர், 2016

Flash News:⛈ கனமழை - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை (2.12.2016) கீழ்கண்ட 7         
மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

1.விழுப்புரம்(பள்ளிகளுக்கு விடுமுறை)
3.சென்னை (பள்ளிகளுக்கு விடுமுறை)
4.திருவள்ளூர் (பள்ளிகளுக்கு விடுமுறை)
5.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு விடுமுறை)
6.நாகை (பள்ளிகளுக்கு விடுமுறை)
7.கடலூர்  (பள்ளிகளுக்கு விடுமுறை)