>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 31 ஜூலை, 2017

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது...



ஞாயிறு, 30 ஜூலை, 2017

Flash News: High school HM Promotion Regarding Chennai High Court Judgment Copy.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்போது விடுக்கப்பட்டுள்ள ஆணை.

Click here - High school HM Promotion Regarding Chennai High Court Judgment Copy...

எழுத்து தேர்வில் அசத்தியவர்கள் உடற்தகுதி தேர்வில் 'அவுட்'

போலீஸ், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற, இன்ஜினியரிங் பட்டதாரிகள், உடற்தகுதி தேர்வில், வெற்றி பெற முடியாமல், பரிதாபமாக அவுட்டாகி வெளியேறி உள்ளனர்.6.32 லட்சம் பேர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, போலீஸ், சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள, 15 ஆயிரத்து, 711, இரண்டாம் நிலை காவலர்கள், காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வுக்கு, ஜன., 23ல் அறிவிப்பு வெளியானது.

தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; மே, 21ல் நடந்த எழுத்து தேர்வில், 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, ஜூலை, 7ல், இணையதளத்தில் வெளியானது.
வெற்றி பெற்றவர்களில், 18 சதவீதத்தினர், அதாவது, 16 ஆயிரத்து 185 பேர், இன்ஜினியரிங் பட்டதாரிகள்; 20 சதவீதத்தினர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள்.
வெற்றி பெற்ற, 90 ஆயிரத்து, 185 பேருக்கு, உடல் தகுதித் தேர்வுகளுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது; ஜூலை, 27ல், 
உடல் தகுதி தேர்வுதுவங்கியது.
கடந்த மூன்று நாட்கள் நடந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட, இன்ஜினியரிங் பட்டதாரிகளில், பெரும்பாலானோர், தோல்வியை சந்தித்து வெளியேறி உள்ளனர்.
தேர்வு பணியில் ஈடுபட்டு வரும், டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது, எழுத்துத் தேர்வில், இன்ஜினியரிங் பட்டதாரிகள், முதுகலை, இளங்கலை பட்டதாரிகள், அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களால், உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
3 சதவீதத்தினர் தேர்ச்சிஉடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டஇன்ஜினியரிங் பட்டதாரிகளில், 3 சதவீதத்தினர் 
மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 400 மீ., ஓட்டத்திலும், வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று நாட்கள் நடந்த தேர்வில், பிளஸ் 2, விளையாட்டு வீரர்கள், ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் தான், அதிக அளவில் தேர்ச்சி பெற்று
உள்ளனர்.குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப் புற மாணவர்கள் தான், அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.

ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை...

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
இப்பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், கலந்தாய்வு அறிவிக்கப் படாமலேயே மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 3 லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் நேர்மையானவர். அவருக்கு தெரியாமல் ஒரே நாளில் பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும்' என்றார்

மின்சாரத்திலிருந்தும் உணவு தயாரிக்கலாம்...விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மின்சாரம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை பயன்படுத்தி புரோட்டின் கலந்த உணவைத் தயாரித்துள்ளது.

'அரிசியை வாட்ஸாப்பில் டவுன்லோட் செய்து கொள்ள முடியுமா?', 'உணவை இயந்திரத்தால் உற்பத்தி செய்து கொடுக்க முடியுமா' என்ற வாசகங்கள் விவசாயத்தின் அருமையை சொல்லிப் பெருமைப்பட வைத்தன. ஆனால், இப்போது அதையெல்லாம் உடைக்கும் விதமாகச் செயற்கையான முறையில் உண்ணும் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பின்லாந்திலுள்ள ஆராய்ச்சிக் குழு நிகழ்த்திக் காட்டியுள்ளது. மின்சாரம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை உபயோகப்படுத்தி உணவைத் தயார் செய்திருக்கிறார்கள். மறுசுழற்சிக்கான ஆற்றலாக இருக்கும் சோலாரை உபயோகப்படுத்தி உணவில் புரோட்டீனை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
தயார் செய்யப்பட்ட உணவானது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கக் கூடிய வகையில் தயாராவது இதன் ஸ்பெஷல். முடிவாகக் கிடைத்த உணவில் 50 சதவிகிதம் புரோட்டீன், 25 சதவிகிதம் கார்போஹைட்ரேட் என சத்துக்களைக் கொண்டதாக உற்பத்தி செய்துள்ளது. இதற்கான மூலப்பொருட்கள் எல்லாம் காற்றில் இருந்து பெறப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த உணவானது ஒரு மாற்று உணவாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உணவைத் தயாரிக்கும் பணியில் பின்லாந்தின் வி.டீ.டி மற்றும் எல்.யூ.டி யுனிவர்சிட்டி ஆகியவை இணைந்து பணியாற்றுகிறது. உணவானது பூமியில் உற்பத்தி செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் சீர்குலைந்து விடும் என்பதும் அதே அறிவியலாளர்களின் கருத்துதான். இதில் எந்தக் கருத்து வெல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..!

பொறியியல் படிப்புக்கான ஏழாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் இன்று ஏழாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது. ஏழாவது நாள் கலந்தாய்வில் 7,261 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 2,390 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
இதுவரையில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகமாக இ.சி.இ துறை மற்றும் மெக்கானிக்கல் துறையில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவருகின்றனர். இதுவரையில் இ.சி.இயில் 6,631 பேருக்கும் மெக்கானிக்கலில் 5,191 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான ஏழு நாள்கள் கலந்தாவில் 27 % பேர் கலந்து கொள்ளவில்லை. அதனால், கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு அதிக இடங்கள் காலியாக இருக்கும் என்று கல்வியலாளர்கள் கருதுகின்றனர்.

31ம் தேதி உங்களுக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன்.. மாணவர்களுக்கு செங்கோட்டையன் தகவல்!


திருவண்ணாமலை: மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் வரும் 31ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலைக்கு இன்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு ஏற்படுத்தி தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், வரும் 31ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார். சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
வரும் 31 தேதி வெளியிடப்படவுள்ள தேர்வு குறித்த அறிவிப்பை மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

English to Tamil - Animals, Birds, vegetables, Fruits, Relations Names For Primary & Upper Primary Students...

Mobile Learning | ICT Resources | Android Based Mobile Applications - LSRW---ENGLISH.

CLICK HERE TO DOWNLOAD - Mobile Learning | ICT Resources | Android Based Mobile Applications - LSRW SKILL BASED MOBILE APP

Thanks:-Mr.Vijayakumar,
                ICT NATIONAL AWARDEE,
                B.T.ASST,G.H.S.S.Somandarkudi
                VILLUPPURAM District.

2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம்...

சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...

சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன்வாடி பணியாளர் (158 காலி பணியிடங்கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது ‘மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18’ என்ற முகவரியில் அணுகலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடுகள் வழங்கப்படும்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற, 54 ஆயிரம் வினா மற்றும் விடைத் தாள் அடங்கிய பதிப்புகள் வெளியிடப்படும்.
பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வினாத்தாள் மாதிரி வெளியிடப்படும். மேலும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் அச்சம் நீங்கி, எந்த தேர்வையும் எதிர்கொள்ள திறமை மாணவர்களுக்கு ஏற்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

DEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செலுத்தியர்கள் விவரம்- தேவைப்பட்டியல் கோருதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்!!

GPF வட்டி குறைப்பு!

GPF வட்டி குறைப்பு!
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது. ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி, தமிழகஅரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் ( கணக்கு நீங்கலாக ) வீடியோ வடிவில்..... புதுப்பொலிவுடன்.....

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் ( கணக்கு நீங்கலாக ) வீடியோ வடிவில்..... புதுப்பொலிவுடன்.....
ஆங்கில வழிக் கல்வியில் பாடங்களை கற்பிப்பதும், புரிந்துகொள்வதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினம். அவற்றை   
இந்த வீடியோ பாடங்கள் மூலம் எளிதாக விளக்கலாம். திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராகப்  பணிபுரியும் 
இரா. குருமூர்த்தி ஆகிய நான் மாணவர்களின் பாடப்பொருள் அறிவை மேலும் வலுவூட்டும் வண்ணம் பாடங்களை காணொளிகளாக உருவாக்கியுள்ளேன். 
ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பாடங்கள்  தனித்தனி குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். நன்றி.

NO PAY COMISSION IN FUTURE !!

The central government is mulling not to form any
Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future.
The report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.
 
No new commission may be formed in future for increasing salaries of central government employees, a senior Finance Ministry official told The Sen Times on condition of anonymity.
“The government is going to take a policy decision in this regard,” official told our reporters after cabinet nod of the 7th Pay Commission allowances.
Presenting an idea about an alternative arrangement, he said that the 7th Pay Commission Chairman Justice A K Mathur had earlier told The Financial Express in an interview, “The government should review the salary of central government employees every year looking into the data available to it and based on the price index.”
The 7th Pay Commission recommended that the pay matrix may be reviewed periodically without waiting for the long period of ten years. It can be reviewed and revised on the basis of the Aykroyd formula which takes into consideration the changes prices of the commodities that constitute a common man’s basket, which the Labour Bureau at Shimla reviews periodically.
The Pay Commission also suggested that this should be made the basis for revision of that pay matrix periodically without waiting for another Pay Commission.
So, it will not be necessary to form a new pay Commission after every 10 years for central government employees and pensioners and whether any change is required regarding pay and allowances would be made considering inflation.
Accordingly, the central government is to follow this proposal of the Pay Commission and to discontinue the practice of appointing pay commissions in future to suggest salary structure and other perks for all central government employees and pensioners, the official gave his views.
The official said the report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.
He added the changes regarding pay and allowance would be made considering inflation,,....

என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை....

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 287 சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014 பிப்ரவரியில், தனியார் பதிப்பகப் புத்தகங்கள் வாங்க அனுமதித்த சிபிஎஸ்இ, இப்போது வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஜூலை-28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கக் கூடாது எனவும், தனியார் பதிப்பக புத்தகங்களின் தரம், விலை குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஒரே மனுவில் 287 பேர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றத்துக்கு வரும் ஸ்டாம்ப் கட்டண வருவாய் பாதித்துள்ளது. எனவே 287 பள்ளிகளும் தலா 1000 ரூபாய் வீதம் 2 .87 ஆயிரம் ரூபாயை நீதிமன்ற கட்டணமாக செலுத்தி ஒரு வாரத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்மந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

2017-18 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு வழங்கப்பட்ட விலையில்லாபாடப்புத்தகங்களின் விவரம் கோருதல் சார்ந்து...

சனி, 29 ஜூலை, 2017

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017 – Orders – Issued..

TRB - Polytechnic Engineering Lectures Post Recruitment - New Notification Published

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18
          
Dated:28-07-2017
Chairman

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி- இயக்குனர் உத்திரவு...



உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்போது விடுக்கப்பட்டுள்ள ஆணை....

CIVIL SERVICES EXAMINATION–II (2017-2018) (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) !!

Memorandum of Admission (Hall Ticket) for the Written Examination (Objective Type) to the Post of COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (2017-2018) 
(NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
....https://www.tnpsconline.com/TNPSCACGRP2ALive/FrmLogin102017.aspx

ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி..

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
யோகா பயிற்சி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு மன நலமும், உடல் நலமும் நன்றாக இருக்கும். இதற்காக யோகாவில் நிபுணத்துவம் பெற்ற சமுதாய சேவை மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 67 கல்வி மாவட்டங்களிலும் தலா 85 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 695 ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவர்கள் யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஆக இருக்கவேண்டும். மேலும் விருப்பம் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். பயிற்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நாட்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த (ஆகஸ்டு) மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் யோகா பயிற்சி முடிவடையும்.
இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார். 

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்....

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
 அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக விவாதித்தோம்.
இடைக்கால நிவாரணம் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி அளித்துள்ளார்.
மாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSA-BRTEs - All Subject Final Seniority List 28.07.2017..

வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்' அறிமுகம்...

உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. பல மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆப்ஸ் தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் இல்லாத வசதி : 
கைசாலா ஆப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்சில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.
கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.
அரசுகளின் வரவேற்பு : 
சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலின் போது கைசாலா ஆப்சை பயன்படுத்தியே தேர்தல் கமிஷன் கருத்துகணிப்புக்களை நடத்தி உள்ளன. ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆப்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறார். 
பல வர்த்தக நிறுவனங்கள், மீடியாக்களும் கைசாலா ஆப்சை பயன்படுத்த துவங்கி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட அரசு துறைகள், அரசு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்டோர் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றனர். புரோ கைசாலா என்ற மற்றோரு ஆப்ஸ் மாதத்திற்கு ரூ.130 என்ற கட்டணத்தில் தொழில்துறை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

காஞ்சிபுரம்: ''பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,'' என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்படி இருக்குமோ என்ற அச்சம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ளது. எனவே, மாதிரி வினாத்தாள்கள், திங்கட்கிழமை வெளியிடப்படும். பின், தேர்வை எப்படி எழுதலாம் என்ற வழிமுறை உருவாக்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
அதை மாற்றியமைக்க, கல்வியாளர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள், இன்னாள் துணைவேந்தர்களும் இடம் பெற்றுள்ளனர். கல்வியில் முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவதற்கு ஏற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.வரும், 2018- -19ம் கல்வியாண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2019 - -20ம் கல்வியாண்டில், 2, 7, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், 2020 - -21ம் கல்வியாண்டில், 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. இதற்காக, 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தயார் செய்து வருகிறோம்.'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.காமராஜர் சாலையில், கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின், நிதியமைச்சர் ஜெயகுமாரிடம், 'அரசுக்கு எதிராக நடிகர் கமல் கருத்து தெரிவித்து வருகிறாரே...' என, நிருபர்கள் கேட்டனர்.அதற்கு, ''எத்தனை கமல்ஹாசன், ஸ்டாலின் வந்தாலும் எங்கள் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. கமல்ஹாசன் கருத்துகளை பார்க்கும் போது, 'மூன்றாம் பிறை' படத்தில் வரும், 'கிளைமாக்ஸ்' காட்சி ஞாபகத்திற்கு வருகிறது,'' என்றார், அமைச்சர் ஜெயகுமார்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்....

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.            இதுகுறித்து தமிழக அரசு தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு: நடப்பு கல்வி ஆண்டில் 150 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை தொடக்க பள்ளியாக மாறுவதால், தலா ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வீதம் 150 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர்கள், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற விரும்பினால், அவரிடம் விருப்பக் கடிதம் பெற்று, பட்டதாரி ஆசிரியராக பணியிறக்கம் செய்ய அனுமதிக்கலாம். மேலும், தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியராக அனுமதிக்கலாம். இப்பணிகளை ஆக.,3, 4 தேதிகளுக்குள் முடிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஜூலை, 2017

TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு...

பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆண் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியான பணிநாடுநர்களிடமிருந்து இன்று 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.05/2017
தேதி: 26.07.2017
பணி: சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்)
காலியிடங்கள்: 1325
பதவிக்குறியீடு 17ST
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்: அரசாணை எண் 242 உயர்கல்வி (பி1) துறை நாள்.18.12.2012 ன்படி 10+2+3+2/10+3+3+2/ 11+2+3+2 என்ற முறையில் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு இறுதி நாளுக்கு (18.08.2017) முன்னதாகவே அனைத்து தகுதிகளுக்கான சான்றிதழ்களும் கண்டிப்பாக பெறப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ,500. (எஸ்சி,எஸ்ஏ,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.250) இதனை கடன் அட்டை, பற்று அட்டை, இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இதற்குரிய trbonlineexams.in/spl/ என்ற இணைப்பினை பயன்படுத்தி இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வானது 2 மணி மற்றும் 30 நிமிடங்கள் நேரத்திற்கு, 95 கொள்குறி வினாக்களைக் கொண்டு (ஒரு தாள்) நடத்தப்படும். 95 மதிப்பெண்கள் கொண்டது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.09.2017
மேலும் பணிநாடுநர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான முழுமையான விளக்கம் அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/SPL2017/26072017/TNotification.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

TNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திவெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.10.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் 4413 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-IV தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
The Written Examination for the post of Junior Scientific Officer in Tamil Nadu Forensic Science Subordinate Service was held on 16.10.2016 FN& AN. Totally 4413 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, followingthe rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 15 candidates (List-IV) those who have been provisionally admitted to Certificate Verification to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 04.08.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்புகளின் புதிய பட்டியல் !!












+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

11ம் வகுப்பு பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும்  என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

TNPSC GROUP-2A HALL-TICKET PUBLISHED (EXAM DATE : 06/08/2017)...

அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான்’’ மத்திய அரசு ஒப்புதல்!!!


அந்தரங்க உரிமை என்பது அரசியல் சட்டம் வரையறுத்த அடிப்படை உரிமைகளில்
சேருமா? இல்லையா? என்பது குறித்த பிரச்சினை, கடந்த 2015–ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு 9 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்பட்டது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த பிரச்சினையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அரசியல் சட்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, மத்திய அரசின் நிலையை எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது:–
அந்தரங்க உரிமை என்பது அரசியல் சட்டம் வரையறுத்த அடிப்படை உரிமைதான். ஆனால், அது முழுமையானது அல்ல, அதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. அந்தரங்க உரிமையுடன் தொடர்புடைய சில அம்சங்களை அடிப்படை உரிமைகளாக கருத முடியாது.

உதாரணமாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தரங்க உரிமையை ஒற்றை உரிமையாக கருத முடியாது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத 7 கோடி பேரின் அடிப்படை உரிமைகளை ‘அந்தரங்க உரிமை’ என்ற பெயரில் சிலர் மீறி வருகிறார்கள். வீடு இல்லாமல், நடைபாதையில் தூங்கும் ஏழைகள் அங்கேயே இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமை என்ன ஆனது? எனவே, அந்தரங்க உரிமையானது, ஏழைகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது.
சுதந்திர இந்தியாவில், நெருக்கடி நிலை பிரகடனம் மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்வு. அதுபோன்ற நிலைமை மீண்டும் வராது என்று நம்புகிறோம். நெருக்கடி நிலையின்போது, மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டது. முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் கூட கொடுமைகளை சந்தித்தனர். அதனால், நெருக்கடி நிலையை அமல்படுத்திய அப்போதைய ஆளுங்கட்சி, அதன்பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை.

இவ்வாறு கே.கே.வேணுகோபால் கூறினார்.

அவர் இன்றும் தனது வாதத்தை தொடருகிறார்.

இந்த விசாரணையின்போது, பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் புதுச்சேரி, கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையாக கொள்ளலாம்’ என்று வாதிட்டார்

மத்திய வேலைவாய்ப்பு மையங்களில் வேலை: ஆகஸ்ட் 14க்குள் விண்ணப்பிக்க அழைப்பு...


மத்திய வேலைவாய்ப்பு மையங்களான சென்னை, சென்னை, கான்பூர், புதுச்சேரியில் 2017 - 2018 ஆண் ஆண்டிற்கான
பயிற்றுவிப்பாளர், செவிலியர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணியிடம்: சென்னை, கான்பூர், புதுச்சேரி

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Instructor (Stenography) English - 01
2. Staff Nurse Grade-I - 02
3. Pharmacist (Allopathic) - 04
4. Pharmacist (Ayurvedic) - 02
5. Pharmacist cum Clerk (Homeopathic) - 01
6. Lab Technician - 01
7. Vocational Instructor (General Electronics) - 01
8. Vocational Instructor (Maintenance Mill Wright) - 01
9. Vocational Instructor (Engineering Drawing) - 01
10. Instructor (Processing) - 01

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.employmentnews.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“SREO, National Career Service Centre for SC/ST, UNDER THE DIRECTORATE GENERAL OF EMPLOYMENT, MINISTRY OF LABOUR & EMPLOYMENT, No.56 Santhome High Road, Chennai, Kanpur. Puducherry-600004”

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2017

மேலும் வயதுவரம்பு, தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.employmentnews.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு




யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.

புதுடெல்லி:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக முதல்நிலை தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைப்பெற்றது.

இந்நிலையில், யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குடியுரிமை மற்றும் வனத்துறையில் உள்ள 980 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. அடுத்தக்கட்டமான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது

இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?

இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?
இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?
அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் இதுவரை  27 இலட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கி உள்ளது தமிழக அரசு. ஆனால்  இதன் பயன் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா.
உயர்கல்வியில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும் கணினி அறிவியல் பாடம் ஓர் அங்கமாக இருக்கும் போது ..
இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர். இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாகும்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, ஓரளவு தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளனர்.
அடிப்படை கணினி கல்வி கூட அரசுப்பள்ளிகள் இல்லை என்பது வேதனை...
கல்வியில் மற்றம் வேண்டின் கலைத்திட்டம் மற்றம் பெற வேண்டும்..
கல்வி பொதுவுடமை என்றால்
தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் கணினி அறிவியல் பாடம் எதற்கு..?
அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மேல்நிலைப்பள்ளியில் குறிப்பிட்ட பாடப்பிரிவுவை தேர்வு செய்து படித்தால் மட்டும் தான் இல்லையெனில்
அடிப்படை கணினி கல்வி  அறிவு கிடைக்கப்பெறுவதில்லை என்பதே இன்றய நிலை..
அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் மடிக்கணினி மட்டும் வழங்கி என்ன பயன்..
தமிழக அரசு 27 இலட்சம் மாணவர்களுக்கும் இதுவரை மடிக்கணினி வழங்கியது இருவருக்காது இதன் பயன் பற்றி கற்றுக் கொடுக்கவில்லை ஏன்..?
அரசுப்பள்ளிகள் சமச்சீர் கல்வியல்  கணினி அறிவியல் பாடபுத்தகம்
2011ஆம்  ஆண்டு அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங் கப்படவில்லை.இன்று இதன்
நிலையை யார் அறிவார்..(குப்பையில் உறங்கும் 6-10 கணினி அறிவியல் பாடபுத்தகம்)தமிழ்நாடுபாடநூல் கழகம் RTIயில் தந்த அதிர்ச்சியான தகவல்.
ஏழையின் கல்வியில்  மட்டும்  பாகுபாடு  ஏன்..?
இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர் களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக் கின்ற மாணவர்களுக்கு கிடைத் துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.
எனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளி லும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளியில் ஆரம்ப பள்ளியிலே கணினி பாடம் கற்றுத்தர்படுகிறது நாம் அண்ட மாநிலம் கணினி கல்வியில் சிறந்து விளங்குகின்றன.கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியல்.பாண்டிச்சேரியில் அரசுப்பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்..
தமிழகத்தில் மட்டும் இலவச மடிக்கணினி வழங்கும் தமிழக அரசு.
கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள தமிழக அரசாங்கம், அரசுப்பள்ளிகள் அனைத்திலும்
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப்படமாக
கொண்டுவர மாண்புமிகு கல்வி அமைச்சர் மதிப்புமிகு செயலாளர் தமிழகத்தில் கணினி கல்வியை ஆறாம் வகுப்பிலிருநதே ஆறாவது பாமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டம்.
எதிர்கால மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு...
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள் சங்கம்.655/2014.