>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 30 மார்ச், 2021

ஞாயிறு, 28 மார்ச், 2021

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும்

 நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும்.....





நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.

சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது.அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.

இதற்கான வைத்திய முறைகள் சில,

ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும்.நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.


கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும்.தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கிய வாய்ப்பு உள்ளது.

..............................................................

ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்.!

 ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்.



ஞாபகமறதியை தீர்க்க சில எளிய வழிமுறைகள்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது ஞாபகசக்தி.இந்த ஞாபக சக்தியை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலம் கண்டிப்பாக அதிகரிக்க முடியும்.


ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரைக்கீரை முக்கிய பங்கு உண்டு.மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம்,துவையலாக சாப்பிடலாம்,ஜூஸாக சாப்பிடலாம். இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி வளரும். 
கேரட் சாறு,பால்,தேன் இவை மூன்றையும் சம அளவு எடுத்து குடித்து வந்தால் ஞாபக சக்தி நன்றாக வளரும்.
லவங்கப்பட்டை,சுக்கு இரண்டையும் பொடி செய்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து காலை,மாலை இரு வேளைகள் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையைப் இரவில் போட்டு வைத்து காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் மூளை பலம் பெருகும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு இருக்கிறது.இது நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும்,நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.எனவே தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும் இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு.அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.
வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மூளைக்கும் பலம் கூடும் குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். 
மாணவர்கள் நெல்லிக்காய் சாப்பிடும்பொழுது நினைவாற்றல் அதிகரிக்கும்.கண்பார்வை தெளிவாகும்,புத்திக்கூர்மையை ஏற்படுத்தும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பதில் வெண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்வதோடு நினைவாற்றலையும் அதிகப்படுத்தும்.

..................................................

சனி, 27 மார்ச், 2021

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க link - மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி

 பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க link - மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி










உங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே சென்று இணைவிடுங்கள். ஏனெனில் மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி. ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுத்த அரசு, இந்த முறையும் மீண்டும் அவகாசம் கொடுக்குமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆக உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன்


இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை கெடு விதித்திருந்தது? உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும். கூட 10,000 ரூபாய் அபாதாரமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது.




👉பான் ( PAN ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா? எவ்வாறு தெரிந்துகொள்வது? click here



👉     Add aadhaar with pan link - click here

பலமுறை அவகாசம் ஆனால் கொரோனா காரணமாக இதுவரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. . ஆனால் இன்று வரை பலர் இணைக்கவில்லை என்பதே உண்மை. ஏற்கனவே பல முறை போதிய அவகாசம் கொடுத்த நிலையில் மீண்டும் அவகாசம் கிடைக்குமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆக இதுவரை இணைக்காவிடில் உடனே சென்று இணைத்து விடுங்கள். ஏனெனில் உங்கள் பான் எண் செல்லாமல் போக கூட வாய்ப்புள்ளது.

பல சிக்கல்கள் வரலாம் ஆதார் பான் எண் இணைக்காவிடில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான் கார்டை 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக


பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். ஆக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். எனினும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.

pan-aadhaar-1593013367




உங்கள் பான் எண் செயலற்று போகலாம் ஆக செயலற்ற பான் எண்ணை வைத்திருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்று தான். அதன் பின்பு மீண்டும் நீங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட பின்பு தான், உங்களது பான் எண் உயிர் பெறும். சரி ஆதார் பான் எண்ணுடன் எப்படி இணைப்பது, குறிப்பாக இணையம் மூலம் எப்படி இணைப்பது. எஸ் எம் எஸ் மூலம் எப்படி இணைக்கலாம், வாருங்கள் பார்க்கலாம்.

 

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம் 

ஆதார் எண் பான் எண் மூலம் எப்படி எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது? இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.


இணையம் மூலம் எப்படி இணைப்பது? 

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in/ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்.


ஆதார் மையம் மூலம் இணைக்கலாம்

ஒரு வேளை உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது மொபைல் எண் மூலமாக இணைக்க தெரியாவிட்டால், நேரிடையாக ஆதார் மையத்திற்கு சென்று இணைக்கலாம். இதற்காக Annexure-I என்ற பார்மில் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே ஆன்லைனில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.




................................ 

வெள்ளி, 26 மார்ச், 2021

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள்....

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள்....

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள்

ELECTION CLASS TRAINING VIDEOS


1) DUTY OF PRESIDING OFFICERS TAMIL



2 ) EVM Training - Part1 in Tamil



3 ) EVM Training - Part 2 in Tamil


4 ) Polling Officers Training



5) EVM -VVPAT



6) POLLING DAY PREPARATION




7) CLOSE OF POLL



Video courtesy : 
Election commission of India / YouTube
CEO tamilnadu / YouTube
Tme/ YouTube
VT WHAT I LEARN / YOUTUBE

CONTENT DISCLOSURE : மேற்காணும் காணொளிகள் EDUCATION PURPOSE க்காக பகிரப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து நடைமுறைபடுத்தவும், உங்கள் பயிற்சியில் மற்றும் கட்டகத்தில் உள்ளதை பின்பற்றவும்

.....................................................

புதன், 24 மார்ச், 2021

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது 

இதற்க்கான  அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை 'சி-விஜில்' செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது


கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.

லிங்க்

https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil


இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,

பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,

திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது,

வாக்காளர்களை மிரட்டுவது,

வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது,

வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,

பொய்யான செய்திகளைப் பரப்புவது,


போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.

புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்

உங்கள் பகுதியில் தேர்தல் முறைகேடு நடந்தால் இந்த ஆப் மூலம் போட்டோ வீடியோ எடுத்து அனுப்பினா போதும்


.......................................

திங்கள், 22 மார்ச், 2021

தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்

 தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்!


தமிழகத்தில் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது. 





ஒரு பள்ளி அல்லது ஒரு கல்லூரியை வாக்குப்பதிவு மையம் என்று அழைக்கிறார்கள். இதில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் பதவி நிலை ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் நான்கு பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள். ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களது சின்னங்கள் உள்ளிட்ட விவரங்கள் வாக்குச் சாவடிகளில் ஒட்டப்பட்டிருக்கும்.



வாக்குச் சாவடி மையங்களுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, அதற்கான பூத் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பெண் ஊழியர் ஒருவரை பணியில் ஈடுபடுத்தும்.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அச்சுப் பதிவு இயத்திரம் ஆகியன வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.


நிலை ஒன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர் வாக்காளர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களுடைய அடையாள அட்டையை சரி பார்த்தப் பின்னர் வாக்களிக்க அனுமதிப்பார். நிலை இரண்டில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டை குறித்த விவரங்களை பதிவு செய்துகொண்டு, அதற்கான படிவத்தில் வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிப்பார்.




நிலை மூன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் கைவிரலில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதிப்பார். இவை அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரங்களை தெரிந்துவைத்துள்ள நபராக வாக்குப்பதிவு தலைமை அலுவலர் இருப்பார்.






இத்தகைய தேர்தல் பணிகளில் காலமுறை ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களை தேர்தல் ஆணையம் முழுமையாக பயன்படுத்துகிறது. இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். அதிலும், குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது.


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என இருந்தது. அது, பின்னர் 59 என்றும், 60 என்றும் உயர்த்தப்பட்டுவிட்டது. அடுத்து வரும் அரசு ஓய்வு பெறும் வயதை 61 உயத்திவிடுமோ என அஞ்சுகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டாலும் அரசு அதனை தர மறுக்கிறது என வேதனைப்படுகின்றனர். 50 வயதை கடந்த பெரும்பாலான அரசு ஊழியர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு உள்ளனர்.



ஒரு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொடர்ந்து 35 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தேர்தலுக்காக, 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர்தல் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.


தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தாங்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிக்கு வெளியே, வேறு ஒரு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப் பெட்டிகளை முறையாக ஒப்படைத்துவிட்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீடு திரும்ப வேண்டும்.



தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு உணவு, மருத்துவம், தூங்கும் வசதியுடன் கூடிய தங்குமிடம், சுத்தமான கழிப்பிடம், குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. இவற்றுக்காக சில இடங்களில் அங்குள்ள அரசியல் கட்சியினரை சார்ந்து தேர்தல் பணிசெய்யவேண்டிய நிலை அரசு ஊழியர்களுக்கு எழுகிறது.


அதேபோல உடனடியாக வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்வதற்கும், நள்ளிரவு பணி முடித்து வீடு திரும்புவதற்கும், போதுமான போக்குவரத்து வசதி கிடைப்பதில்லை. இதில் பெண்களும், கர்ப்பிணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



'இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளிலேயே தேர்தல் பணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்களையும், கர்பிணிகளையும் ஈடுபடுத்தக்கூடாது. வாக்குச் சாவடிக்கு வெளியே பெண் ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது. பூத் சீட்டு கொடுப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்க காவல்துறையினரை நியமிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


......................................................................

பாதத்தை வெச்சே நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்ல முடியும் தெரியுமா? உங்க பாதம் இதுல எந்த மாதிரி?

 பாதத்தை வெச்சே நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்ல முடியும் தெரியுமா? உங்க பாதம் இதுல எந்த மாதிரி?


CLIK HEARE

http://dhunt.in/dDLtj?s=a&uu=0xb33871b2259c29bf&ss=pd


அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும் வழி முறைகள்

 *அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும்

முறை*

CLIK HEARE

https://drive.google.com/file/d/1SWds0S7E1WtvfV7vaOBLAfqvO-SWRafD/view?usp=drivesdk

அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும்

*முடிந்தவரை பகிருங்கள்*

ELECTION TRAINING VIDEOS

ELECTION TRAINING VIDEOS

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள் - 

ELECTION CLASS TRAINING VIDEOS 

1.) DUTY OF PRESIDING OFFICERS TAMIL 


2.) EVM PART 1 

3.) EVM PART 2


4.) CONDUCTING MOCK POLL 


5.) EVM/VVPAT 

6.) POLLING DAY PREPARATION

7.) CLOSE OF POLL 

Video courtesy : 
Election commission of India / YouTube
CEO tamilnadu / YouTube
Tme/ YouTube
VT WHAT I LEARN / YOUTUBE
                

CONTENT DISCLOSURE : மேற்காணும் காணொளிகள் EDUCATION PURPOSE க்காக பகிரப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து நடைமுறைபடுத்தவும், உங்கள் பயிற்சியில் மற்றும் கட்டகத்தில் உள்ளதை பின்பற்றவும்.


...............................

பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link

 Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link



உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஆணையில் உள்ள சரியாக உள்ளதா? - சரிபார்த்துக் கொள்ளவும் - தவறாக இருந்தால் உங்கள் வாக்கு பதிவாகாத நிலை ஏற்படும்

* ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே  விண்ணப்பம் கொடுக்கவும்


*தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை  எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.



*அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்




*Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை



*1.Voter ID xerox

*2.election order xerox

*3.Part No and Serial No

*எடுத்து செல்க





*இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உங்கள் பாகம் எண் வரிசை எண் அறிந்து கொள்ளலாம்.



Part no மற்றும் Serial no அறிந்துகொள்ள :


Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப  "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link









.................................................

உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை பற்றி தெரிந்துகொள்ள CLIK HEARE

 போர் அடிச்சா... 

CLIK HEARE

affidavit.eci.gov.in 

இந்த வெப்சைட் போங்க... உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவங்க வேட்புமனுவை டவுன்லோட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க... உங்க தொகுதி வேட்பாளரோட ஜாதகமே கிடைக்கும்.


.........................................

புதன், 17 மார்ச், 2021

நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்

நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்

 
நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்
  • நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில் CLICK HEER

செவ்வாய், 16 மார்ச், 2021

20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?

 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?






தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளை மாநில அரசு அளித்து வருகிறது. மானிய விலையில் பொருட்களைப் பெறுவதற்கும் ரேஷன் அட்டை அத்தியாவசியமானதாக இருக்கிறது. பொங்கல் தொகுப்பு பரிசுகளை வாங்குவதற்கு ரேஷன் அட்டைகளைத் தொலைத்திருந்தாலும், பதிவு செய்து வைத்திருக்கும் மொபைல் எண்ணைக் கொண்டு தொகுப்பு பரிசைப் பெறலாம் என்று அறிவித்திருந்த நிலையில், ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள் புது ரேஷன் கார்டு பெறுவது பெரிய சிக்கல் என்றே இது நாள் வரையில் நினைத்திருந்தார்கள்.

இப்படி புது ரேஷன் கார்டு பெறுவதற்கு தரகர்களிடம் சென்று பொதுமக்கள் அதிகளவில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.



இருபது ரூபாய் செலவில் நீங்கள் தொலைத்த ரேஷன் கார்டுக்கு பதிலாக டூப்ளிகேட் ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம்.



இந்த ரேஷன் அட்டைக்கான விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள், பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் அனைவருமே www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.



ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, இந்த இணையதளத்திற்குச் சென்று, ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு தயாரானது, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, உங்கள் புது ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

........................................

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?


LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?


கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது


மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.


ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை


ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்



 முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,


அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.


உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும், 


அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,
மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.

.........................................