>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
NET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

நெட்' தேர்வுக்கு ஆதார் வேண்டாம்

சென்னை : 'பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டு உள்ளது.


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது, 'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டுக்கான நெட் தேர்வை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்த உள்ளது. டிச., 9 முதல் 23 வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்., 1ல் துவங்கி, செப்., 30ல் முடிகிறது.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், அடையாள அட்டை எண் பதிவிட அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் 'ஆதார் எண்ணை பதிவிடலாம்' என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, தேர்வர்களால் பல்வேறு புகார்கள் கூறப்பட்ட நிலையில் 'ஆதார் கட்டாயம் இல்லை' என என்.டி.ஏ., அறிவித்துள்ளது. 


பாஸ்போர்ட் எண், வருமான வரித்துறை பான் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 6 நவம்பர், 2017

'நெட்' தேர்வு: 7 லட்சம் பேர் பங்கேற்பு!!!

சென்னை: நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில்,
ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நேற்று நாடு முழுவதும், 91 நகரங்களில் உள்ள, 1,700 மையங்களில் நடந்தது.
இதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். மொத்தம், 84 பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது. தேர்வு பணிகளில், ௨,௦௯௧ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். இத்தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

நெட்' தேர்வு: ஹால் டிக்கெட்

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியராக சேர, 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதேபோல், முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின் உதவித்தொகையுடன், ஆராய்ச்சி படிப்பில் சேரவும், 'நெட்'தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., ௫ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், ௯௧ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட் ெவளியிடப்பட்டது. அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, அவர்களின் விண்ணப்பம் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் பிழைகள், மாற்றங்கள் இருந்தால், திருத்தி கொள்ளலாம்.
இதற்கான அவகாசம், இன்று முதல், வரும், ௨௫ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.திருத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், cbsenet.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளலாம்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்...

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் பலர், ஆதார் எண் விபரங்களை குறிப்பிடாமல் உள்ளனர்.

இது குறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களின் சுய விபரங்களில் தவறு ஏற்படாமல் இருக்க, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விபரங்கள், கட்டாயம் தேவை. காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தவர் மட்டும், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. பேராசிரியர் பணியில் சேரும் தகுதிக்கான, 'நெட்' நுழைவுத்தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும் இத்தேர்வுக்கு,

செவ்வாய், 22 நவம்பர், 2016

ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான

வியாழன், 17 நவம்பர், 2016

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 
 நெட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த நவம்பர் 24ம் தேதி கடைசி நாளாகும் என சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது.