>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
JOP NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JOP NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க செயல்பட்டுவரும் மத்திய அரசு, தரமான கல்விதான் நல்ல குடிமகனை உருவாக்கும் என நம்புவதாக ஜவடேகர் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கல்வியைப்போல் விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியம் என்றும் வியர்வை சிந்தி விளையாடும் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் கேந்திரிய வித்யாலயாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த ஜவடேகர், விரைவில் காலியான அந்த இடங்கள் நிரப்பப்படும் என்றார்.

சனி, 25 பிப்ரவரி, 2017

" TET " தேர்வை தள்ளி வையுங்க! : ஆசிரியர்கள் கோரிக்கை

'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் களாக பணியில் சேர, மாநில அரசின், 'டெட்' அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில், வழக்குகள் காரணமாக, 2013க்கு பின், 'டெட்' தேர்வு நடக்கவில்லை.
அமைச்சர் அறிவிப்பு : சமீபத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்ததால், ஏப்ரல், 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடக்கும் என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆனாலும், அதிகார பூர்வ அறிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிட வில்லை. இந்நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
அவகாசம் தேவை : இது குறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: போட்டி தேர்வுக்கு தயாராக, மூன்று மாதம் அவகாசம் வேண்டும். தற்போது, 'டெட்' தேர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளில் பலர், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் களாகவும் பணியாற்றுகின்றனர். பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்பு களுக்கும், ஏப்., 30 வரை தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 'டெட்' தேர்வுக்கு தயாராக அவகாசம் இல்லை.
இந்த குறுகிய கால அவகாசத்தில், பள்ளி பணிகளை விட்டு விட்டு, 'டெட்' தேர்வுக்கு தயாராவது மிக கடினம். எனவே, தேர்வு தேதியை, ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வியாழன், 23 பிப்ரவரி, 2017

TNTET - 2017:ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:
ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் நடைபெறும் எனத்தெரிவித்தார்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? 

‘ஆம்’ எனில் நீங்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ‘டான்செட்’!தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்,இந்த தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகமண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

தகுதிகள்

எம்.பி.ஏ., படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பிற்கு கணிதப் பாடத்துடன் கூடிய இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளுக்கு ஒரு தேர்வு, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு தனித்தனி தேர்வு என மொத்தம் மூன்று தேர்வுகள் நடத்தப்படுகின்றன.எம்.பி.ஏ., படிப்பிற்கான தேர்வில் கணிதம், வர்த்தகம் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படும். எம்.சி.ஏ.,படிப்பிற்கான தேர்வில், குவாண்டிடேட்டிவ் ஏபிலிட்டி, அனாலிடிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவார்னஸ் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படும்.எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளுக்கான தேர்வில், இன்ஜினியரிங் மேத்மேடிக்ஸ், பேசிக் இன்ஜினியரிங் அண்ட் சயின்ஸ் மற்றும் துறைக்கு ஏற்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு, 1/3 என்ற வீதத்தில் மதிப்பெண் பிடிக்கப்படும்.

தேர்வு நாட்கள்:எம்.சி.ஏ., - மார்ச் 25 (காலை)எம்.பி.ஏ., - மார்ச் 25 (மதியம்)எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., - மார்ச் 26

சனி, 18 பிப்ரவரி, 2017

TNTET -2017: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பங்களை திருப்பி அனுப்ப உத்தரவு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில்  நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பவிநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும்என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மதுரையில் தினமலர் நடத்துகிறது.

தமிழக போலீஸ் துறையில், 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, மே 21ல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை முகாம், தினமலர் சார்பில் நாளை( பிப்.,18) மதுரையில் நடக்கிறது.
இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம் நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.,22. இத்தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 100. இதில் எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.எழுத்துதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடக்கும்.வாசகர்கள், எழுத்து தேர்வில் வென்றிடும்விதமாக வழிகாட்ட, ஆலோசனை நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது. நாளை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நிகழ்ச்சி நடக்கிறது.
அனுமதி இலவசம்.மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் டாக்டர் அருண்சக்திகுமார் துவக்க உரை நிகழ்த்துகிறார். தேர்வில் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள், முக்கிய கேள்விகள், பாடமுறைகள் குறித்து நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் விளக்குகிறார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின் அடிப் படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக் கப்பட்டது. இந்த நூலகங்கள் தற்போது பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. பல இடங்க ளில் நூலகங்கள் ரேஷன் கடைக ளாகவும், கிராம நிர்வாக அலுவலக மாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர் களும், பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங் களை பராமரித்து மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்''என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, ''தமிழகத்தில் 2006-ல் 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன"என்றார். இதையடுத்து, காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

SBI : 2736 OFFICER VACCANCIES FOR DEGREE HOLDERS

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில் 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரான ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
விதிகளும் முறைகளும்
எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 200 கேள்விகளும், ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் வினாக்களும் இடம்பெறும்.
தேர்வு நாட்கள்
முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 29, 30, மே 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதன் முடிவுகள் மே 17-ல் வெளியிடப்படும். அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வின் முடிவுகள் ஜூன் 19-ல் வெளியாகும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண்டுக்குமான ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்-ஐ ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஜூலை 10 முதல் தொடர்ந்து நடைபெறும்.
இலவசப் பயிற்சி
அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கவிரும்பும் பட்டதாரிகள் மார்ச் 6-ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின் (www.sbi.co.in/careers) மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், சிறுபான்மை யினருக்கு தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இது குறித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியில் நேரடி அதிகாரியாகப் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதிலேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.

DSE PROCEEDINGS- TNTET 2017 விண்ணப்பங்கள் மார்ச் 2017 முதல் வாரத்தில் விற்பனை துவக்கம்.

DSE PROCEEDINGS- TNTET 2017 விண்ணப்பங்கள் மார்ச் 2017 முதல் வாரத்தில் விற்பனை துவக்கம்.TNTET 2017- Application sales Starts From March-17 First Week.
           ஆசிரியர் தகுதித்தேர்வு  ஏப்ரல் 29 மற்றும் 30
தேதிகளில் நடைபெற உள்ளது .
அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது.  எனவே  அதன்  பின்னரே  விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் முதல் துவங்க உள்ளது . 
* விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50
* தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN)
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

TET' தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் (தினமலர்)

திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை, தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு, ஏப்., 29ம் தேதியும்; பட்டத்தாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, 30ம் தேதியும் நடக்கிறது. இத்தேர்வு எழுதுவோருக்கான விண்ப்ப வினியோகம், நாளை துவங்குகிறது.விண்ப்பங்கள் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, குமார் நகர் மாநகராட்சி பள்ளி, அனுப்பர்பாளையம், அவிநாசி, பல்லடம், கொடுவாய், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், வெள்ளக்கோவில் ஊத்துக்குளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ப்பம் வழங்கப்பட உள்ளது.விண்ப்பங்கள், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ப்பங்கள், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

"நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை எழுதிய கடிதம்:-
நாடு முழுவதும் மே 7-இல் நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கு மார்ச் 1-இல் கடைசி நாளாகும்.
இந்த நிலையில் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் பிரதமர் அவசரமாகத் தலையிட வேண்டும்.
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை நீட் தேர்வு நிச்சயம் பாதிக்கும். அறிவார்ந்த மருத்துவர்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
அதேசமயம் சிறந்த பொது சுகாதாரத்துக்காகவும், மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லவும் எளிய மருத்துவர்கள் தேவை என்பதும் மிக முக்கியமானது.
மாணவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, தமிழக அரசால் அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா திமுகவின் முழு ஆதரவுடன் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்வுத் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், அரசியல் சாசன நெருக்கடியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர பிரதமரின் ஒத்துழைப்பைக் கோருகிறேன். மேலும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் தான் டெட் தேர்வு தாமதத்திற்கு காரணம்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் தான் டெட் தேர்வு தாமதத்திற்கு காரணம்

இன்று முதல் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!

பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வான ‘செட்’ தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 12 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன் "நெட்' (பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு)
அல்லது "செட்' (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில்,2017 ஆம் ஆண்டிற்கான ‘செட்’ தேர்வு கொடைக்கனலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு,ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். இந்த தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறியாதவர்கள், அபராதமாக ரூ.300 செலுத்தி மார்ச் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
"செட்' தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,250-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ஆகவும் தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நெட் தேர்விற்கு 500 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அன்னைத் தெரசா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 11 பிப்ரவரி, 2017

TET - TRB தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். தேர்வு தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. 

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

TRB மூலம் கடைசியாக Computer Teachers தெரிவு செய்யப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட பதிவு மூப்பு நாள்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டம் -இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000

பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 என்ற வீதங்களில் ஒரு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி அமைந்திருக்கும் உள்ளூர் மற்றும் கிராமத்தில் உள்ள அந்தந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர்.
 பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை கல்வியாண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் பணியில் தொடர அனுமதிக்கப்படுவர். இது முற்றிலும் தாற்காலிகமானது.
 ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தாற்காலிகமாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு வரும் 11ஆம் தேதி திருச்சி மிளகுபாறை ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வாழவந்திநாடு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி ஆசிரியர் பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
 செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம், இயற்பியல் பாடங்களில் தலா 1 பணியிடம் காலியாக உள்ளது.
முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், சமூக அறிவியல் பாடத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் கணித பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் அதன் சான்றிதழ்
 இதரப் பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றுடன் காலை 8 மணிக்கு முன்னர் தேர்வு நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

Group I - HALL TICKET PUBLISHED..

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம்.

1. ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம்  துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்| பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017.
2.Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.
3.Paper I and Paper II Application Forms should be separated (two different colours).
4.Challans for Rs.250 and Rs.500 should be separated for Paper I and Paper II, and these separated Challans should be kept in four separate envelopes (Paper I – Rs. 250, Paper II - Rs. 250, Paper I - Rs. 500 and Paper II - Rs. 500).