>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
YOGA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
YOGA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஏப்ரல், 2018

பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க உத்தரவிட முடியாது : பொது நல மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய யோகா கொள்கைகளை வகுத்து நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை அதனை கட்டாய பாடமாக போதிக்க வேண்டும் என கூறி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா மற்றும் டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஜே சி சேத் ஆகியோர் இந்த பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாணவர்களின் நலன் காக்கும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும்  யோகாவை கட்டாயமாக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகாவால் மாணவர்களின் உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். எனவே யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் என வாதிட்டார். வழக்கை விசாரித்த மதன் பீமாரவ் லோகூர் தலைமையிலான அமர்வு, மாணவர்களின் உடல் நலனை காப்பது என்பது அடிப்படை உரிமை. அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை ஏற்று கொள்கிறது.  ஆனால் இது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினர்.
பள்ளிகளில் என்ன பாடத்தை கற்பி்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என கூறி நீதிபதிகள் பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்கும் எண்ணம் இல்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

செவ்வாய், 11 ஜூலை, 2017

தமிழகத்தில் முதன்முறையாக யோகா ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறுகிறது.

வியாழன், 22 ஜூன், 2017

கொண்டாட்டம்! சர்வதேச யோகா நாடு முழுவதும் கோலாகலம் கொட்டும் மழையில் ஆசனம்: மோடி அசத்தல்...

புதுடில்லி: மூன்றாவது சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கொட்டும் மழையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 51 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், மக்கள் உற்சாகமாக பங்கேற்று, யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.


மத்திய அரசின் முயற்சியை ஏற்று, 'ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும்' என, ஐ.நா., சபை அறிவித்தது. அதன்படி, 2015 முதல், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவது சர்வதேச யோகா தினம், நேற்று நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் லக்னோ வில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மாநில கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட, 51 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நாடுகள் இணைப்பு


யோகா தின நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பல்வேறு நாட்டு மக்களுக்கு, நம் மொழி, கலா சாரம், பாரம்பரியம் பற்றி தெரியாது. ஆனால், யோகா என்ற அற்புத கலையின் மூலம், தற் போது உலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்துள்ளன. யோகா பயிற்சிகள், நம் உடல், மனம், ஆன்மாவை இணைக்கிறது; 
தற்போது, உலக நாடுகளையும் இணைத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். டில்லி யிலும்,அதிகாலையில் மழைபெய்த போதும், கன்னாட் பிளேஸ்,இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில், மக்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில்,50 ஆயிரம் பேர், கன்னாட் பிளேசில், 10 ஆயிரம் பேர் என, டில்லியில் நடந்த நிகழ்ச்சிகளில், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, விஜய் கோயல், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கன்னாட் பிளேசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கில், உறைபனி யில், இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


விழா துளிகள்


* லக்னோவில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியின்போது, திடீரென மழை பெய்தது. ஆனாலும், அதை பொருட்படுத்தாது, பிரதமரும், மக்களும் யோகா பயிற்சியை தொடர்ந்தனர்
* ஆனால், திடீரென மழை வலுக்கத் துவங்கியதால், அதில் இருந்து தப்பிக்க, 'யோகா மேட்'டை தலைக்கு வைத்துக் கொண்டனர்
* 'யோகா வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மட்டும் நாம் உலகுக்கு உணர்த்தவில்லை. யோகா மேட், மழையில் இருந்து எப்படி நம்மை காக்கிறது என்பதையும் உணர்த்தியுள்ளோம்' என, பிரதமர் மோடி, நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்
* லக்னோவில் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, மாணவ, மாணவியருடன் இணைந்து, 45 நிமிடங்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்
* நிகழ்ச்சிகள் முடிந்த பின், மாணவ, மாணவியர் உள்ளிட்டோருடன் கைகுலுக்கி வாழ்த்து கூறினார் மோடி.


3 லட்சம் பேருடன் உலக சாதனை


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், யோகா குரு ராம்தேவ் தலைமையில் நிகழ்ச்சி களு க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., தலைவர் அமித் ஷா, 

சர்வதேச,யோகா தினம், நாடு,முழுவதும்,கோலாகலம், கொண்டாட்டம்!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல்உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

''இங்கு நடந்த நிகழ்ச்சியில், மூன்று லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், அதிகமானோர் யோகா செய்யும் புதிய கின்னஸ் சாதனையை நாம் புரிந்துள் ளோம். இது குறித்து, அதிகாரிகள் முறைப்படி அறிவிப்பர்.

முதல் சர்வதேச யோகா தினத்தை யொட்டி, 2015ல், டில்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், 35 ஆயிரத்து, 985 பேர் பங்கேற்றதே இதுவரை சாதனையாக இருந்தது,'' என, யோகா குரு ராம்தேவ் கூறினார்.


ஐ.நா.,விலும் யோகா


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., சபையின் தலைமையகத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'யோகா நம்மை அமைதி படுத்துகிறது; இதன் மூலம் மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மிகப் பெரும் சக்தியாக யோகா விளங்குகிறது. உலக அமைதிக்கும் வித்திடு கிறது' என, ஐ.நா., சபை பொதுச் செயலரின் செய்தி, நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐ.நா., சபையில் சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், சையது அக்பருதீன், ஹிந்து மதத் தலைவர் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, சாத்வி பகவதி சரஸ்வதி, சுவாமி சிவதாசனந்தா, பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


உலகெங்கும்


சர்வதேச யோகா தினம், உலகெங்கும் பரவலாக சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டது. அமெரிக்காவில், நியூயார்க் நகரில், இந்தியத் துாதரகம் சார்பில் மிக பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியினர் தவிர, அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.
தென் ஆப்ரிக்காவின் செவோடோ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், 1,200 பேர் பங்கேற்று, யோகா பயிற்சிகளை செய்தனர். சீனா, ரஷ்யா, பிரான்ஸ் என, உலகின் பல்வேறு நாடுகளிலும், சர்வதேச யோகா தினத்தை யொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புதன், 21 ஜூன், 2017


ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: ஜூன் 21 இன்று உலக யோகா தினம்...

ஐ.நா., அங்கீகாரம்
இப்போது தமிழகம்மட்டுமின்றி, உலகம் முழுவதும் யோகாவை விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், ஆழ்ந்தசிந்தனையுடனும் நம் முன்னோர்கள் செய்து வந்த யோகாசனம், உடற்கூறு விஞ்ஞான கலை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த இனிய மார்க்கமாகவே யோகாசனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.சபையே ஜூன் 21ஐ உலக யோகா தினமாக கொண்டாடவும் கட்டாயம் மனித குலத்திற்கே மருந்தில்லா மருத்துவ பயிற்சி யோகாசனமே என்பதை பறைசாற்றியுள்ளது.
🦋நம்மை அறியாமலே பயன்
நம் முன்னோர்கள் முழுமையாக செயல்திறன் மிக்கவர்கள். இதை தான் யோ கர்மஸீ கெளலசம் (பகவத்கீதை) - செயலில் திறமையே யோகம் - என்கிறது. உடல் ஆரோக்கியமாக, வலிமையாக இருந்தால் மனதிடம் அதிகமாகும். மனதிடம்அதிகமானல் செயல்திறன் கூடும். உடல், மனம், எண்ணம் ஒருங் கிணைந்து செயல்பட்டால் நாம் ஒழுக்க சீலராக வாழ்வோம். நம் திறமை மேம்பட்டு நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். இதுவே உன்னதமான வாழ்வாக அமையும். நம்மை அறியாமலே இது அனைத்தையும் யோகாசனப் பயிற்சி மூலம் நமக்கு கிடைக்கும்.
🦋வெற்றிக்கு வழி
யோகாசனத்தின் முழுபலன் நோயற்ற தன்மை, நோய்களை போக்கும் தன்மை, மனதை அடக்கி ஆளும் தன்மை ஒருங்கே அமையப்பெற்றது. இதை தான் ஒருங்கிணைத்தல் என்று சொல்வர். இதையே யோகா, யோக், யோகம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆசனம் என்பது இருக்கை நிலைகள்.
ஆசனத்தில் அமர்ந்து மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவதால் யோகாசனம் என்று கூறுகிறோம். மிகவும் எளிதான பயிற்சிகள் உண்டு. யோகாசனம் செய்தால் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தன்மை கூடுகிறது. நரம்பு மண்டலம் புத்துணவு பெறுகிறது. தசைநார்கள் உறுதியடைந்து ரத்த நாளங்களின் செயல்திறனை கூட்டுகிறது. நாள்முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மனம், உடல் வலிமை பெறும். வேறென்ன வேண்டும் நமக்கு. உழைக்க உடம்பும், மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.