>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
JEE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JEE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2019

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் கலக்கிய சபரி! அரசுப்பள்ளியில் உருவான 'முத்து



திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன், வருங்கால விஞ்ஞான உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சமீபத்தில் வெளியான ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 91.29 சதவீதம் மதிப்பெண் பெற்று திருப்பூரில் தேர்ச்சியான ஒரே மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.அவரிடம் பேசியதிலிருந்து...அப்பா  பொன்னுசாமி, அம்மா தனலட்சுமி இருவரும் நெசவுத்தொழில் பண்றாங்க. ஒண்ணாம் வகுப்புல இருந்து அரசு பள்ளியில்தான் படிக்கிறேன். எதையும் மனப்பாடம் செய்ய பிடிக்காது. கருத்தை உள்வாங்கி புரிஞ்சு படிப்பேன். பத்தாம் வகுப்பில், 484 மார்க் கிடைச்சதும். பிளஸ்2 தேர்விலும் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.மொழிபாடங்கள் பிரச்னை இல்லை.











இயற்பியல், வேதியியல், கணக்கு பாடத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்தேன். காலை, 8:00 மணி - மாலை, 6 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ். ஆசிரியர் சொல்லித்தர்றது மட்டும்தான். ஜூன் மாசமே கல்வித்துறை, 'தொடுவானம்' மூலமா ஒவ்வொரு அரசு பள்ளியில் ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு தகுதியுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்தாங்க.
திருப்பூரில் ஜே.இ.இ., தேர்வுக்கு தேர்வாகிய இரு மாணவர்களில் நானும் ஒருவன்.பொதுத்தேர்வுக்கு தயாராகிட்டே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கும் படிச்சேன். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என்னை உற்சாகப்படுத்துனாங்க. கான்செப்ட் சொல்லிக்கொடுத்து, ஒவ்வொரு கேள்வியையும் என்னையே தயாரிக்க சொன்னாங்க. இந்த பயிற்சி, பப்ளிக் தேர்விலும் கிரியேட்டிவ் டைப் கேள்விகளுக்கு பதிலளிக்க சுலபமாக இருந்துச்சு.


இதனாலே, பிளஸ்2வில், 573 மார்க் எடுத்து ஸ்கூல் பர்ஸ்ட் எடுக்க முடிந்தது; ஜே.இ.இ., தேர்விலும், 2 லட்சம் பேர்ல, 28 ஆயிரத்து 206 இடம் கிடைச்சது.ஜே.இ.இ., தேர்வை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழியில மட்டும்தான் எழுத முடியும். இதனாலேயே அரசு பள்ளி மாணவர்கள் பயப்படுறாங்க.கணக்கு, வேதியியல் பாட கேள்விகள் ஆங்கிலத்திலும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இயற்பியல் பாடத்தை மட்டும்தான் படிக்கும்போது ஆங்கிலத்திலும் அர்த்தத்தை புரிந்து படித்தால் ஜே.இ.இ., தேர்விலும் அசால்டாக அடிக்கலாம்,' என்கிறார்.மாதம், 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதே அரிதாகிபோன, கைத்தறி நெசவாளி குடும்பத்தில் பிறந்த இவர், அடுத்த, அட்வான்ஸ் தேர்வுக்கு ரெடியாகி வருகிறார். ஐ.ஐ.டி.,யில் நிச்சயம் நுழைந்து இஸ்ரோவில் பணிபுரிவதே லட்சியமாக கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் சபரிநாதன்..!

.........................................................................................................................................................................

திங்கள், 30 ஏப்ரல், 2018

JEE ENTRANCE RESULT PUBLISHED JOINT ENTRANCE EXAMINATION (MAIN) - 2018 RESULT...



               CLIK HEAR

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் நாளை வெளியீடு


மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட உள்ளன.

ஜே.இ.இ. தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல்நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். அதோடு, முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 2 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். 
இதில் முதல்நிலைத் தேர்வில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1-ன் நேரடி எழுத்துத்தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை ஜே.இ.இ. இணையதளத்தில் (www.jeemain.nic.in) பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதில், பி.ஆர்க். படிப்புக்கான தாள்-2 தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மே 20-இல் முதன்மைத் தேர்வு: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20 இல் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்குரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி, மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும்.

திங்கள், 27 நவம்பர், 2017

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.
கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்-லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

2018 ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பு!!!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி
நிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது. அதன்படி, 2018 ஏப்ரல் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும், கணினி வழியிலான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஏப்ரல் மாதம் மத்தியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஇஇ பிரதான தேர்வு 2018 தாள் 1 (பிஇ / பிடெக்) முதல்தாள் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழியிலான தேர்வு நடத்தப்படும். தாள் 2 (பி.ஆர்ச் / பி.ப்ளான்) கணினி வழியிலான தேர்வு மட்டும் நடத்தப்படும்.
தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ பிரதான தேர்வு இந்தியாவில் 104 நகரங்களிலும், 9 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும்.
இந்தியாவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), 23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் 20 அரசு நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள 24,323 இடங்களை நிரப்ப ஜேஇஇ பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வை எழுத ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
2016 ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ பிரதான தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 ஜூன், 2017

ஜே.இ.இ., தேர்வில் ஹரியானா மாணவர் முதலிடம் : மண்டல அளவில் கேரள மாணவர் சாதனை..


.கேரள மாணவர், தென் மண்டல அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.ஐ.டி.,யில் படிக்க, ஜே.இ.இ., பிரதான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே, 21ல் நடத்தப்பட்டது. சென்னை - ஐ.ஐ.டி., நடத்திய, இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம், 1.72 லட்சம் பேர் விண்ணப்பித்து,1.59 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 50 ஆயிரத்து, 455 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த மாணவர் சர்வேஷ் மேத்தானி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஐ.ஐ.டி.,யின் மண்டல அளவில், தென் மண்டலமான சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த மாணவர்களில், கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த, ஷகில் மாஹின், தேசிய அளவில் நான்காம் இடமும், மண்டல அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவில், ஐதராபாத்தை சேர்ந்த ரம்யா நாராயணசாமி என்ற மாணவி, பொது பட்டியலில் தேசிய அளவில், 35ம் இடத்தையும், பெண்கள் பிரிவில், தேசிய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
தேர்ச்சி விபரங்கள் வருமாறு:
● ஐ.ஐ.டி.,யின் ஏழு மண்டலங்களில், சென்னை - ஐ.ஐ.டி., மண்டலத்தில் அதிகபட்சம், 10 ஆயிரத்து, 240 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 90 சதவீதத்திற்குமேற்பட்டோர், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்
 ● ஐ.ஐ.டி., - மும்பை மண்டலத்தில், 9,893 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். ஐ.ஐ.டி., - டில்லி, 9,207; ஐ.ஐ.டி.,- கான்பூர், 6,809; கரக்பூர், 6,138; ரூர்க்கி, 5,050;குவகாத்தி, 3,118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
● 'டாப் - 10' பட்டியலில், 10 பேர்; 'டாப் - 100'ல், 100 பேர்; 'டாப் - 500'ல், 500 பேர்; இடம் பெற்றுள்ளனர்.
தலித் மாணவர்கள் 'டாப்'
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில், ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டின் படி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது. தேர்ச்சி சதவீதத்தில், ஆதிதிராவிட மாணவர்கள்,54 சதவீதம் தேர்ச்சி பெற்று, முதலிடத்தில் உள்ளனர். பழங்குடியினர், 47 சதவீதத்துடன் இரண்டாம் இடம்; பொதுப்பிரிவினர், 34 சதவீதத்துடன் மூன்றாம் இடம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்டோரில், 15 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில், பொதுப்பிரிவு மாணவர்கள், 23 ஆயிரத்து, 390 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிட மாணவர்கள், 13 ஆயிரத்து, 312 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடத்தில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 9,043 பேர் தேர்ச்சி பெற்று, மூன்றாம் இடத்திலும், பழங்குடியின மாணவர்கள்,4,710 பேர் தேர்ச்சி பெற்று, நான்காம் இடத்திலும் உள்ளனர்.