>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 30 நவம்பர், 2017

இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி- ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்பு

நேற்று 28-11-2017 இந்தியாவில் முதல்முறையாக Space Science technology gallery,  VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இது குறித்த இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்த (Space Science and technology) Bangalore exposure education (BEE ) என்ற program Activity Educator நிறுவனம் மூலம் முதலில் பதிவு செய்யும் 20 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கோடு, வணிக நோக்கம் இல்லாமல் செயல்படுத்த முன்வந்துள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் அடையும் பயன்:
1. வான் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச அளவிலான அறிவை பெற இயலும்
2. உலக அளவில் அதிக வேலை வாய்ப்பு, அதிக சம்பளம்,  மற்றும் மதிப்பு வாய்ந்த தங்களது மேற்படிப்பை Space Science and technology , Aviation, Astronant, Aerospace, Astronomy, Aeronautical, Astro Physics,  போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உந்துதல் அடிப்படை அறிவு மற்றும் ஆர்வத்தை உண்டாக்கும்
3. கற்றலுக்கான சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்
4. சுய கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும்
5ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும்.
கல்வி நிறுவனங்கள் பெறும் பயன்:
1, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் தங்களது கல்வி நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முறையான பயிற்சிகள் வழங்கப்படும்
2. தங்களது கல்வி நிறுவனத்தில் அறிவியல் வள மையம் துவங்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் அறிவியல் விழிப்புணர்வு களப்பணி செயல் திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகார சான்று பெறுவதற்கும் தொடர்பணிக்கும் செயல் திட்டங்கள் கொடுப்பதன் மூலம் தங்களது நிறுவனம் நற்பெயர் ஈட்டும்
3 .உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அறிவு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்பட வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
4. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் பரப்புதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவற்றிற்காக தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது.
பதிவு செய்ய விரும்பும் கல்வி நிறுவனங்கள் கீழ்கண்ட முகநூல் பக்கத்தில் இது குறித்த விபரங்களை காணலாம்.
www facebook.com/groups/ISCOPE
Email முகவரி indiaiscope@gmail.com
கைபேசி எண்: 7892898919

ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்'

'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள்விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின், 'தீன்தயாள் ஸ்பேர்ஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
இதன்படி, இந்தியா முழுவதும், அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 920 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டிற்கு, 6,000 ரூபாய், உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழக மாணவர்கள், 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துமாணவர்கள், டிச., 12க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து, எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மற்றொரு, செயல் திட்டம் தரப்படும். அதை சிறப்பாக செயல்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை, tamilnadupost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்துக்கும், 200 லிருந்து, 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு, முன்னோட்டமாக, அனைத்து பாடங்கள் உள்ளடக்கி, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 7 முதல், 23 வரை, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
வழக்கமாக, பிளஸ் 1 வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும், வேறு வேறு தேதிகளிலும், காலை, மாலை என மாற்றி நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2வுக்கு தேர்வு நடக்கும், அதே நாளில், அதே நேரத்தில்,பிளஸ் 1க்கும் தேர்வு நடத்தப்படுகிறது, டிசம்பர், 7 - தமிழ் முதல்தாள், டிசம்பர், 8- தமிழ் இரண்டாம்தாள், டிச., 11- ஆங்கிலம் முதல்தாள், டிசம்பர் 12- ஆங்கிலம் இரண்டாம்தாள், டிச., 14- கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டிச., 15- உயிரியல், தாவரவியல், வரலாறு, டிச., 18 - கணிதம், விலங்கியல், டிச., 19 - வணிகவியல், புவியியல்,டிச., 21- வேதியியல், கணக்கு பதிவியல், டிச., 23- இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடக்கின்றன.பிளஸ் 2, பிளஸ் 1 இரு வகுப்புகளுக்கும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:15 மணி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூர் CEO-BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி

புதன், 29 நவம்பர், 2017

SABL, ALM, SALM TIMETABLE - PRINTOUT MODEL TO PASTE IN CLASSROOMS

8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!

மாணவனுக்கு தண்டனை: 


ஆசிரியை கைது....

திருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே ஊரைச் சேர்ந்த, 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். 


நவ., 25ல் வழக்கம் போல், மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். பணியில் இருந்த ஆசிரியை விஜயா, 47, அந்த மாணவனை கூப்பிட்டு, ஏன் தலைமுடி நீளமாக வைத்துள்ளாய்? என, கேட்டுள்ளார். பின், சக மாணவரைவிட்டு முடியை வெட்ட சொல்லியுள்ளார். அன்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவன், பள்ளியில் நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறியுள்ளான்.  
அவர், கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில், இச்சம்பவம் உண்மை என, தெரியவந்ததையடுத்து, விஜயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புகாரையடுத்து, கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, விஜயாவை நேற்று கைது செய்தனர்.

10th English Model Question Paper and Study Materials

10th New Study Material
  • 10th English Model Question Paper and Study Materials | R. Anbarasu - English Medium 

R.ANBARASU.M.A.,B.Ed.,
P.G.Asst in English.,
KIDS PARK.MAT.HR.SEC.SCHOO, COVAI-POLLACHI MAON ROAD,
KINATHUKADAVU, COIMBATORE

வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்!



18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரவேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், எளிதில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ள 18 வயது பூர்த்தியானஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நாள் அன்று வாழ்த்துக்கள் வருவதுடன் வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் இணைவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். அந்த லிங்க்க்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டால் போதும், உடனே உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைந்துவிடும்இந்த புதிய முறையால் வாக்காளர் பட்டியலில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்.....

தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது.


இதில், 24 புகார் மனுக்கள் இருந்தன. தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, தர்மபுரி டவுன் மகளிர் போலீசார் சார்பாக, 15ம் தேதி, புகார் பெட்டி வைக்கப்பட்டது.
இதில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் வெளியில் சொல்ல முடியாத புகார்களை, மாணவியர் பெயர் குறிப்பிடாமல், மனுவாக எழுதி போடலாம் என, அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ், எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, இந்த பெட்டியை திறந்தார். இதில், 24 புகார்கள் இருந்தன. அதில், பள்ளிக்கு வரும் மாணவியரை கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள், பஸ்சில் பயணம் செய்யும் போது தொந்தரவு கொடுப்பவர்கள்... மேலும், தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ள, 'பஸ் பாஸ்' கொண்டு வரும் மாணவியரை, தரக்குறைவாக பேசும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் என்பது உட்பட, 24 புகார்கள் இருந்தன.''இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்து, அதன் அடிப்படையில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கூறினார்.

TNPSC Group 2 Exam, 'ரிசல்ட்' வெளியீடு

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7 முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில், 49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.


அவரை மக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பள்ளியின் கட்டடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளது. கட்டடங்கள் கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாததால் கட்டடம் கட்ட முடியாமல் உள்ளது.
இதனையடுத்து இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.பெங்களூருவில் இன்ஜினியராக பணி
புரியும் கிருஷ்ணன் கூறியதாவது: எனது சொந்த ஊர் சாத்தனுார். ஆண்டு தோறும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளோம். எங்கள் கிராமத்து இளைஞர்கள் பள்ளி கட்டடத்தை சீரமைத்து கொடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லாத நிலை குறித்து தெரியவந்தது. பள்ளிக்கு பின்புறம் எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கி பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளேன். இதே போன்று அந்தந்த பகுதியில், வசிக்கும் வசதி படைத்தவர்கள் தங்களது கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டும், என்றார்.

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர். 


இவர்களை ஆசிரியர் திட்டியதால், நவ.,24ல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்ட கல்வி அலுவலர், அமுதா, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியைகள், மாணவியரை மிகவும் அசிங்கமாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதும் தெரியவந்தது.

பட்டியல் தயாரிப்பு : இதைடுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பள்ளியில் பணியாற்றும், 48 ஆசிரியைகளில், 18 பேர் தற்காலிகமாக பணியாற்றி வருவது தெரியவந்தது.தற்காலிக ஆசிரியர்கள், 18 பேரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று கூண்டோடு டிஸ்மிஸ் செய்தார். மேலும், இவர்கள் வேறு எந்த அரசு பள்ளியிலும் பணியாற்றவும் தடை விதித்துள்ளார்.மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பலர் காரணமாக இருந்துள்ளதால், அவர்கள் பனப்பாக்கத்தை விட்டு செல்லவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, தனிப்படை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வீடுகளில் டியூஷன் : இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியைகள் சிலர், தங்கள் வீடுகளில், 'டியூசன்' எடுத்து வருவதாகவும், இதில், மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவியரை சேரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் விசாரணையில் மாணவியர் கூறினர்.
இதையடுத்து, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், யாரும் தங்கள் வீடுகளில் டியூசன் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா எச்சரித்துள்ளார்.வேலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நல மருத்துவர் நேற்று பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பு, பிளஸ், 1, பிளஸ் 2 மாணவியரை தனித்தனியாக அழைத்து 'கவுன்சிலிங்' செய்தார்.

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை

🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
🏛  விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
🏛 விதி 110 - பணமசோதா
🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
🏛 விதி 112 - பட்ஜெட்
🏛 விதி 117 - நிதி மசோதா
🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்

🍄குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-
🏛 விதி 52 - குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 53 - குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்
🏛 விதி 54 - குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 55 - குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை
🏛 விதி 56 - குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 57 - குடியரசு தலைவர் மறுநியமணம்
🏛 விதி 58 - குடியரசு தலைவர் தகுதிகள்
🏛 விதி 60 - குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி
🏛 விதி 61 - குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 62 - குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்
🏛 விதி 63 - துணை குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 64 - துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி
🏛 விதி 65 - குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்
🏛 விதி 66 - துணை குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 67 - துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 69 - துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்
🏛 விதி 67b - துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 72 - குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்

🍄அரசு நெறிமுறை கொள்கைகள்:-
🏛 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
🏛 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
🏛 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
🏛 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
🏛 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b),  39(d), 39(e), 41, 42, 43(A), 45
🏛 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
🏛 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
🏛 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
🏛 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
🏛 விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
🏛 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
🏛 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
🏛 விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
🏛 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
🏛 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
🏛 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
🏛 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
🏛 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
🏛 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
🏛 விதி 51 - உலக அமைதியில் நாட்டம்

🍄 மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-
🏛 மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை
🏛 விதி 152 - மாநிலம் என்பதை வரையறை
🏛 விதி 153 - மாநில ஆளுநர் பதவி
🏛 விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்
🏛 விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்
🏛 விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 157 - ஆளுநரின் தகுதிகள்
🏛 விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.

சிறந்த கல்லூரிகள்: அகமதாபாத் 


ஐஐஎம் முதலிடம்!

எம்பிஏ பட்டப் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களில் அகமதாபாத் ஐஐஎம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக இன்று (நவம்பர் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

க்யூ.எஸ். குளோபல் ரேங்கிங் 2018 பட்டியலில் உலக அளவில் எம்பிஏ படிப்பு வழங்கும் சிறந்த 50 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஹார்வேர்டு (Harvard) மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. இன்சீட் (INSEAD)இரண்டாவது இடத்திலும், ஹெக் (HEC)மூன்றாவது இடத்திலும் உள்ளன. யேல் பல்கலைக்கழகம் 18ஆவது இடத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 19ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவிலிருந்து ஒரே ஒரு கல்லூரிக்கு மட்டும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் நிறுவனம் 49ஆவது இடத்தைப் பிடித்து இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 50ஆவது இடத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. 100 இடங்களுக்குள் இரு இந்திய நிறுவனங்கள் உள்ளன. ஐஐஎம் பெங்களூர் 58ஆவது இடத்திலும் இந்திய மேலாண்மைப் பள்ளி 93ஆவது இடத்திலும் உள்ளன.

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

Flash News: கனமழை காரணமாக இன்று 29.11.2017 விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!

கனமழை செய்தி☔ 


  •  திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.17) விடுமுறை அறிவிப்பு -ஆட்சியர்

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...

வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை.
ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்? இதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம்.
இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். 
ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது. 2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம்.
காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும்! பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்! அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய்! சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா?
இரத்த அழுத்தம் இருக்கிறதா? நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை? பணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது?
பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள்? ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே.
உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா? சற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா? ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான். இவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும்.
அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா? நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள்.
இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான்.
இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம்.
குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள். ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு.
இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள். இப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்' இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.
மனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். 
வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது? அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது? கஷ்டங்கள் எதில் தான் இல்லை?
இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.
- சந்தோஷ் ஸ்ரீ....

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்:

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அளித்த மனு
பெறுநர்:
த. உதயச்சந்திரன் அவர்கள்,
செயலாளர் (புதியப் பாடத்திட்டம்),
பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு,
பள்ளிக்கல்வி வளாகம், சென்னை- 06
திரு. உதயச்சந்திரன் அவர்களுக்கு,
பொருள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான புதியப் பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை மீதான பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்கள் - பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக கல்வியின் நோக்கம் என்பது படித்த பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமல்ல. ஆழ்ந்து சிந்திக்கவும், ஆராய்ந்து விமர்சிக்கவும் கூடிய மனிதர்களை உருவாக்குவது தான் கல்வியின் முதன்மை நோக்கமாகும். அத்தகைய கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி  தொடர்ந்து உழைத்து வருகிறது. கல்வி சுகமானதாகவும், சுமையற்றதாகவும், கற்றல் மற்றும் அதைச் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு, தொழிற்பயிற்சி ஆகியவற்றை ஓர் அங்கமாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பம்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு பாடத்திட்டம் வலிமையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இத்தகைய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த காலங்களில்  ‘‘காலத்திற்கேற்ற கல்வித் திட்டம்’’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கம் நடத்தி அரிய ஆலோசனைகளை வழங்கியது உள்ளிட்ட ஏராளமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புதியப் பாடத்திட்டத்திற்கான வரைவை தயாரித்து பொதுமக்கள் பார்வைக்காக தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
இப்பணியை சிறப்பாக மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கும், இப்பணியை ஒருங்கிணைத்த பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதியப் பாடத் திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்களையும், யோசனைகளையும் வல்லுனர் குழுவின் ஆய்வுக்காக தாக்கல் செய்கிறோம்....
மேனிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம்
தமிழ்
1. தமிழ் மொழிப் பாடத்திற்கான கலைத் திட்டம் மாணவர்களின் மொழி அறிவைப் பெருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  அறிவியலும், தமிழும் இணைந்த மொழிக் கலைச்சொற்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.  அத்துடன் பிறமொழி கலப்பின்றி பேச பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் பயன்பாடு சார்ந்து அவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயரை மாணவர்கள் சூட்டும் வகையில் சொற்பிறப்பியலின் (Etymology) அடிப்படைகள்  மாணவ, மாணவியருக்கு கற்றுத்தரப்பட வேண்டும். இதன்மூலம்  தமிழில் புதிய சொற்கள் பிறக்கும்.
2.  மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் விளம்பர வாசகங்கள் எழுதுதல், செய்தி சேகரித்து எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றல் விளைவுகளாக இல்லாமல் தேர்வு மதிப்பீடுகளாக அமைய வேண்டும். அத்துடன் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்.
3.  துணைப்பாடமாக அரசு நிர்வாகம் சார்ந்த நாடகங்கள் சேர்க்கப்படும் என்று வழிகாட்டப்பட்டிருக்கிறது.  மன்னர் காலத்து அரசு நிர்வாகங்களை விளக்குவது மட்டுமின்றி, நிகழ்கால அரசியல், அரசு நிர்வாகம், நல்ல நிர்வாகம் அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கற்பிக்கப்பட வேண்டும்.
4.  தமிழ் மொழிப்பாடத்தின் செய்யுள் மற்றும் உரைநடையில் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை வெறும் பாடமாக மட்டும் நடத்தாமல் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வசதியாக களச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
5.  தமிழ் சார்ந்த கணினிப் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும். துணைப் பாடங்களில் நன்னெறியை போற்றும் பாடங்களை சேர்க்க வேண்டும்.
6. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கூட தமிழை முதன்மை மொழிப் பாடமாக படிப்பது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் தமிழ் மொழிப் பாடம் கடினமாக இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்பதும், பிரெஞ்ச், சமஸ்கிருதம் போன்ற பாடங்கள் மிகவும் எளிமையாகவும், அதிக மதிப்பெண் பெறக் கூடியதாக இருப்பதும் தான். இந்த நிலையை மாற்றி பிற மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் தமிழை முதன்மை மொழிப்பாடமாக கற்கும் வகையில் தமிழ் பாடத்தையும், தேர்வையும் எளிமையாக்கி அதிக மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஆங்கிலம்
1.  வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவம், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு படிவம் உள்ளிட்ட படிவங்களை நிரப்பும் பயிற்சி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் தாமதமானது ஆகும். உயர்நிலை வகுப்புகளிலேயே இந்தப் பயிற்சியை வழங்க வேண்டும்.
2.  தமிழ்நாட்டு மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராததும், நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிப்பதில் உள்ள தயக்கமும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் தடையாக உள்ளது. இக்குறையை போக்க அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுவதைப் போன்று ஆங்கிலத்தை சரளமாக பேசுதல், நேர்காணலில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல் ஆகியவற்றை செய்முறைத் தேர்வாக (PracticalExamination) நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கு மாணவர்கள் தயாராவதால் அவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் அதிகரிக்கும்.
3.  உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில மொழி வார்த்தைகளை சரியாக பேசுவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதற்காக மொழி ஒலிப்பியலை (Phonetics) ஆங்கிலப் பாடத்தின் ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்.
4. ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில்  செய்தி வாசித்தல், குழு விவாதம், நேர்காணல் பயிற்சி, நிகழ்ச்சி வர்ணனை, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான உரை தயாரித்தல் ஆகியவை குறித்த பயிற்சி வழங்கப்படுவது மகிழ்ச்சி. இதை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.
5.  ஆங்கிலம் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பாடமாகவே உள்ளது.  இதை மாற்றி மாணவர்கள் ரசிக்கும் வகையிலான கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
6. சென்னையிலும், பிற மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் ஆங்கில மொழி கருத்தரங்குகளில்  மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். அத்தகைய கருத்தரங்குகளில் பங்கேற்றதன் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டது என்ன? என்பதை மதிப்பிட வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள்
1. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கலைத்திட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கலைத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு.
2. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் முற்றிலும் புதுமையாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறனை சோதிக்கும் வகையிலும் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திற்கு பின்னால் உள்ள வினாக்கள் பட்டியலில் இருந்து மட்டும் தான் தேர்வில் வினா எழுப்பப்படும் என்ற நிலையை மாற்றி, பாடத்தில் எந்த பகுதியிலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வினா எழுப்பப்பட்டாலும் அவற்றுக்கு மாணவர்கள் உடனடியாக பதிலளிக்கும் வகையில் பாடம் எழுதப்பட வேண்டும்; நடத்தப்பட வேண்டும்.
3. அறிவியல் பாடங்கள் மிகவும் ஆழமாகவும், நிகழ்காலத் தேவைகளுடன் தொடர்புப் படுத்தியும் பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். உதாரணமாக ‘இராமன் விளைவு’ என்பது மிகவும் சாதாரணமாக சொல்லித் தரப்படுகிறது. அதன் சிறப்புகள் விளக்கப்படுவதில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இராமன் விளைவு எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து விரிவாக விளக்கப்படுவதுடன், நிகழ்காலத்  தேவைகளுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதும் கற்றுத் தரப்படுகிறது. அதன் மூலம் இராமன் விளைவு குறித்த அனைத்து விவரங்களும் மாணவர்கள் மனதில் பதிகின்றன. அதேபோன்ற பாடத் தயாரிப்பையும், கற்பித்தல் முறையையும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திற்கும் கொண்டுவர வேண்டும்.
4.  கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான சூத்திரங்களை மனப்பாடம் செய்யும் வழக்கம் தான் இன்று வரை நீடிக்கிறது. இதனால் அந்த சூத்திரங்களின் பயன்பாடுகள் பெரிதாக யாருக்கும்  புரிவதில்லை. இதற்கு மாறாக சூத்திரங்களை உதாரணங்களின் மூலமாகவும், செயல்முறை மூலமாகவும் மாணவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படவேண்டும்.
5.  செய்முறைத் தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் வெறும் சடங்குகளாகி விட்டன. தமிழகத்தில் பல பள்ளிகளில் செய்முறைக்கான ஆய்வகங்களே இல்லாத நிலையில், செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 100% மதிப்பெண் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.  எனவே, செய்முறைத் தேர்வுகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அனைத்து மாணவர்களின் செய்முறைத் திறனையும் தனித்தனியாக சோதித்து மதிப்பெண் வழங்கும் வகையில் செய்முறைத் தேர்வின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
வரலாறு
1.  மேனிலை வகுப்புகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்திற்கான கலைத்திட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விடுதலைப் போராட்டம், பக்தி இயக்கம், கிளர்ச்சி, மன்னர்கள் ஆகியவற்றின் பொதுவான வரலாற்றின்  ஒரு பகுதியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பு வருகிறதே  தவிர தமிழ்நாட்டு வரலாறு குறித்து விரிவாக எந்தப் பதிவும் செய்யப்படாதது பெரும் குறையாக உள்ளது.
2.  சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான் என்பது ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்த ஒன்றாகும்.  இந்தியாவின் பெரிய மாநிலங்களில் அதிக அளவில் இட ஒதுக்கீடு வழங்குவது தமிழ்நாட்டில் மட்டும்  தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரு அடுக்குகளாக 50% இட ஒதுக்கீடு வழங்குவதும் தமிழகம் மட்டும் தான். இத்தகைய சிறப்புகள் குறித்தெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டு வரலாறு குறித்து தனி அத்தியாயம் சேர்க்கப்பட வேண்டும்.
3.  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட தமிழக அரசியல் குறித்த அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் மேனிலை வகுப்புக்கான வரலாற்று பாடநூலில் தமிழக அரசியல் வரலாறு குறித்த எந்த பதிவும் இல்லாமல் இருப்பது தவறாகும். அதைப் போக்கும் வகையில்  தமிழக அரசியல் குறித்து தனி அத்தியாயம் வரலாற்றுப் பாடநூலில் சேர்க்கப்பட வேண்டும்.
4.  இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக அளவில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்சந்ல்லூர், கீழடி, புதுவையில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அவற்றில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் தெரியவந்த பொருட்கள் குறித்த அத்தியாயமும் பாடநூலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
5. தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான விதம், அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, அதுகுறித்த பாடமும் வரலாறு பாட நூலில் சேர்க்கப்படுவது நலமாக இருக்கும்.
ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை
தமிழ்
1.  தொடக்க நிலை (1&5 வகுப்புகள்), உயர்தொடக்க நிலை (6,7,8 வகுப்புகள்), உயர்நிலை (9,10 வகுப்புகள்) வகுப்புகளுக்கான தமிழ் பாடத் திட்டம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் வலிப்பிலேயே கணினி மூலம் பாடல்கள் கற்பிக்கப்படுவதால் அடுத்தடுத்த வகுப்புகளில் குழந்தைகள் அச்சமின்றி கணினிகளை கையாள உதவியாக இருக்கும்.
2.  மூன்றாம் வகுப்பில் சொல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகளின் மொழித்திறனை மேம்படுத்தும் முயற்சி நிச்சயம் பயனளிக்கும். நான்காம் வகுப்பில் விளம்பரங்களை உருவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்றவை குழந்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.
3. நான்காம் வகுப்பிலிருந்து திருக்குறள் கற்பிக்கப்படும் என்று கலைத்திட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல் வகுப்பிலேயே பாடல்கள் ஒலி வடிவில் கற்பிக்கப்படும் நிலையில், திருக்குறளை மூன்றாம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்வது மானவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
4.  உயர்தொடக்க வகுப்புகளில் கூட்டங்களில் உரையாற்றுதல், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், எந்த ஒரு பொருள் சார்ந்தும் அறிக்கை தயாரித்தல் போன்ற மொழித்திறன் பயிற்சிகள் உண்மையாகவே பயனளிப்பவை. எனினும் இவை ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது. இப்பயிற்சிகளால் மாணவர்கள் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய மதிப்பீடுகள் தேவை.
5. 9, 10 ஆகிய உயர்வகுப்புகளுக்கான துணைப் பாடம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதாகவும், நன்மை, தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைக்கப்பட வேண்டும்.
ஆங்கிலம்
1.  தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், தொடக்க வகுப்புகளில் ஆங்கிலத்தை எளிதாக கற்கும் வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
2. ஐந்தாம் வகுப்பிலிருந்து காணொலிக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுவது அவர்களின் மொழி பேசும் திறனை மேம்படுத்தும்.
3. சொல் விளையாட்டுக்கள் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் மனதில் தெளிவாக பதியும். முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்றுத்தரப்படுவதால் அம்மொழி குறித்து மாணவர்களிடையே நிலவி வந்த அச்சம் விலகும்.
4.  மேனிலை வகுப்புகளுக்கான பயிற்சியாக வைக்கப்பட்டுள்ள வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவங்களை நிரப்புதல், தொடர்வண்டி முன்பதிவு படிவங்களை நிரப்புதல் போன்றவை 9&ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
5.  ஒரு பாடத்தை படித்து முடித்தவுடன் அதை நாடகமாக மாற்றுதல், வானொலி நாடகத்திற்கான திரைக்கதையாக மாற்றுதல் போன்றவை மாணவர்களின் படைத்தல் திறனை மேம்படுத்தும்.
கணிதம், அறிவியல்
1.  கணிதம், அறிவியல் பாடங்களை தனித்த பாடமாக மற்றும் கற்றுத் தராமல் அன்றாட வாழ்க்கையுடன்  தொடர்பு படுத்திக் கற்றுத்தர வேண்டும்.  அப்போது தான் கணிதம், அறிவியல் ஆகியவற்றின் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும்.
2.  உதாரணமாக 17 & (3*4) என்ற கணிதத்தை அப்படியே கேள்வியாக வைப்பதற்கு பதிலாக  ஒருவரிடம் 17 கொய்யாப்பழங்கள் உள்ளன. அதை ஒவ்வொருவருக்கும் தலா 4 வீதம் 3 பேருக்கு கொடுத்தால் மிச்சம் எவ்வளவு இருக்கும்? என்று வினா எழுப்பலாம்.
3.  ஒன்றாம் வகுப்பிலேயே கணினி வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், தத்துவங்களை விளக்க கணினியை பயன்படுத்தி படக்கதைகளை சொல்லலாம்.
4. கணிதம், அறிவியல் பாடங்களைப் பொருத்தவரை மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில் பாட நூல்கள் எழுதப்பட வேண்டும்.
5.  அறிவியல், கணிதம் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பதை அறியும் வகையில் தேர்வு முறையும், வினாத் தாள்களும் அமைக்கப்பட வேண்டும்.
சமூக அறிவியல்
1. தொடக்கக் கல்வியில் சமூக அறிவியல் பாடம் மூன்றாம் வகுப்பில் தான் அறிமுகம் செய்யப்படுகிறது.  சமூக அறிவியல் பாடத்தை பயில சற்று பக்குவம் தேவை என்பதால் இது சரியான முடிவு தான்.
2.  சமூக அறிவியலின் ஓர் அங்கமான குடிமையியலில் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல தலைப்புகளில் பாடங்கள் தயாரிக்கப்படவிருப்பது பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி, உள்ளாட்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
3.  எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் ஒன்பதாவது பாடமாக மகளிரின் நிலை என்ற தலைப்பில் கடந்த காலங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து விளக்கப்படவுள்ளது.  சி.பி.எஸ்.பி பாடத்திட்டத்தில் மகளிர் நிலை குறித்த பாடத்தில் தான் நாடார் சமுதாயத்தை பிழைப்பு  தேடி வந்தவர்கள் என்றும், அவர்கள் பூர்வகுடிகள் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரிக்கும் பாடநூல்களில் இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4.  தமிழக அரசியல் குறித்தும், நீதிக்கட்சி வளர்ச்சி குறித்தும் பல பாடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து பாடங்கள் எழுதப்படவுள்ளன. இவற்றில் ஆட்சியாளர்களை துதிபாடும் வகையில் தவறான வரலாறு எதுவும் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5.  வரலாற்றுப் பாடத்தில் களப்பிரர்கள் காலம் வரையிலான பழங்காலத் தமிழகம் என்ற பாடத்தலைப்பு இடம் பெற்றிருக்கிறது. ஆனால், தற்கால நிலைமை குறித்து எந்தப் பாடமும் இடம்பெறாதது பெரும் குறை தான்.
பொதுவான பரிந்துரைகள்
1.  தமிழக அரசால் அமைக்கப்பட்ட கலைத்திட்டக் குழுவினர் தயாரித்துள்ள புதியப் பாடத்திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமானால் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
2.  கோத்தாரிக் குழு பரிந்துரைப்படி, கல்விக்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி ஆண்டுக்கு குறைந்தது ரூ.70,000 கோடி கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் ரூ.57,500 கோடி (5%) ஒதுக்க வேண்டும்.
3. புதியப் பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ளாவிட்டால் அவர்களால்   மாணவர்களுக்கு தரமாக கல்வி கற்பிக்க முடியாது. அதனால் புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
4. ஆந்திரம், இராஜஸ்தான் மாநிலங்களின் பாடத்திட்டம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று தரமானப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாநிலங்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களையும், பிற மாநில அரசு பள்ளி மாணவர்களையும் ஆண்டுக்கு ஒரு மாதம் பரிமாற்றம் செய்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கல்வித் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்களை கற்றுக் கொள்ள வகை செய்ய வேண்டும்.
5. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு செலவிலான கல்விச் சுற்றுலாவை கட்டாயமாக்க வேண்டும்.  வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
6. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் 4 தனிக்கல்வி வாரியங்கள் நீடிப்பது முறையல்ல. அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாட நூல்கள் பயன்படுத்தப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.
7. தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் சீர்திருத்தம் செய்யாமல் மாணவர்களின் கற்றலையும்,  புரிதலையும் மேம்படுத்த முடியாது. எனவே, தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
8 தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்குவது குறித்து வல்லுனர் குழு எந்த பரிந்துரையும் வழங்க வில்லை. கல்வி வணிகமாவதைத் தடுக்கும் வகையில் தமிழ் வழிக் கல்வியை பத்தாம் வகுப்பு வரையாவது முதல் கட்டமாக கட்டாயமாக்க வேண்டும்.
9. மாணவர்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்த வசதியாக நீதிபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப் பட வேண்டும். வாரத்திற்கு 5 பாட வேளைகள் விளையாட்டிற்கும், 3 பாட வேளைகள் தொழில் பயிற்சிக்கும், இரு பாட வேளைகள் நீதி போதனைக்கும் ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அத்துடன் யோகா பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
10. பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களாக ( School Management  Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.
11. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாகத் தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மாணவர்களுக்கான தனிநபர் கல்விச் செலவு உயர்த்தப்பட வேண்டும்.
12. பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குனர் (Director of School Standards) நியமிக்கப்பட வேண்டும்.
13.   புதியப் பாடத்திட்டம் அதற்குரிய பயனை அளிக்க வேண்டுமானால் பாடநூல்கள் தான் மிகவும் முக்கியமானவை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் சிறப்பாக அமையும் வகையில் பாடநூல்கள் வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.
14. பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge  Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
15. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
16. தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ள இந்த யோசனைகளை வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து பயனுள்ளவற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
                              
நன்றி!
                                                  
அன்புடன்,
                                 
(மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)

TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.
#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?
எந்த ஒரு தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி என்னவோ அதை தமிழ் வழியில் படித்திருந்தால் நீங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறமுடியும். குருப் 4 தேர்வைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தான் கல்வித்தகுதி எனவே 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும். எ.கா நீங்கள் 9 வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்திருந்தாலும் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்தான்.
#அப்படியென்றால் , கல்லூரியில் வாங்கவா அல்லது பள்ளியில் வாங்கவா?
10 ஆம் வகுப்பு எங்கு படித்தீர்களோ அந்த பள்ளியில் வாங்கவேண்டும். ஏற்கனவெ வாங்கியிருந்தால் தேவையில்லை . தனியராக தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து பள்ளிக்கல்வித்துறையில் வாங்க வேண்டும்.
மாதிரி படிவம்: