>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SCHOLAR SHIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOLAR SHIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ 4000 /வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya ) திட்டம்- விண்ணப்பம் ,படிப்புச்சான்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் ( Mission Vatsalya Scheme Which Provides Rs 4000 Per month to children who have lost their parents - Application Bonafide Certificate Documents to be attached with application )

 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் - விண்ணப்பம், படிப்புச் சான்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்*


### விண்ணப்பம் ( APPLICATION)


### படிப்புச்சான்று ( BONAFIDE. CERTIFICATE)


### விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் ( Documents to be attached with application. )


### பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  மாதம் ரூ 4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா Mission Vatsalya)  திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் தமிழில்


.......................................

புதன், 28 ஆகஸ்ட், 2019

Minority scholarship - Password பெற்ற உடன் செய்ய வேண்டியது..


Wednesday, August 28, 2019




Minority scholarship:

Password  பெற்ற உடன் செய்ய வேண்டியது..

Chrome ல் சென்று NSP ( National scholarship portal ) என்று type seythu,  அதன் முகப்பு பகுதியில்
institute login ஐ கிளிக் செய்து,
User name
Pass word
Captcha code
Type செய்து
Login செய்தால்,
உங்கள் பள்ளியின் UDISE code மற்றும் பிற விவரங்கள் தெரிய வரும்..

முதலில் தெரியும்
Choose file ல் உங்கள் ஆதார் அட்டையை upload செய்து ( file size 200 kb (800 X 600 ) , மற்ற விவரங்களை சரிபார்த்து, nodal officer name மற்றும் phone number il மாற்றம் இருந்தால் செய்து விட்டு, final submit கொடுத்து print எடுத்து , nodal officer ன் photo ஒட்டி,  அலுவலகத்தில் ஒப்படைக்கவும்...

...........,.............................

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

How to register form filled and download in NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL). Detailed flow chart.


Tuesday, August 27, 2019


..............................................

சனி, 10 மார்ச், 2018

வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்!!!

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018


தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு...

தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு!!!

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, 
தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம்,தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புத்தொகை விண்ணப்புதவித் தொகை விண்ணப்ப படிவம்

புதன், 25 அக்டோபர், 2017

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசியத் திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதற்கு, மாவட்டந்தோறும் மையங்கள் அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் இதுசார்ந்த அறிவிப்பு மட்டுமே இடம்பெறுவதுதான் வழக்கம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை மேம்படுத்தப்பட்ட இணையதளம் வடிவமைத்த பின், அனைத்துக் கல்வித் துறை இணையப்பக்கங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் பொதுத் தேர்வு வினாத்தாள்களுடன், திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன.
கல்வித் துறை அதிகாரிகள், “கல்வி சார்ந்த அனைத்துச் சுற்றறிக்கைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்வையிட வேண்டும். திறனாய்வுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு மாநில அளவில், நவம்பர் முதல் வாரம் நடக்கிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 1,000 பேருக்கு, ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 19 அக்டோபர், 2017

ஏழை குழந்தைகளின் படிப்புக்கு ரூ.3 கோடி நிதி!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் பல குழந்தைகள் படிக்க முடியாமல்

தவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு இந்தியாவில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு, இந்தியாவிலுள்ள ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவும் நோக்கில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிதி திரட்டி வருகிறது.
சமீபத்தில் வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியில் பிரதாம் யு.எஸ்.ஏ. அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் 360 பேர் பங்கேற்றனர். அதில் நடிகர் ஆர்.மாதவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் 1.75 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
இவ்வாறு பிரதாம் யு.எஸ்.ஏ. அரசு சாரா அமைப்பு ஏழை குழந்தைகள் கல்வியறிவு பெற 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு RS:10,000 உதவித்தொகை!!!

புதன், 18 அக்டோபர், 2017

கல்வி உதவித்தொகை

தொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வாரிசுகளுக்கு, தொழிலாளர் நல வாரியம் வழியாக, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, பிளஸ் 1 முதல், கல்லுாரி படிப்பு வரை, புத்தகங்கள் வாங்க நிதி; தொழிற்கல்வி, பட்ட மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்தோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை - 6' என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட, தபால்தலை ஒட்டிய உறையுடன், அக்., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், தகவல்களுக்கு, 2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணைய தள முகவரியிலும், தெரிந்து கொள்ளலாம். இத்திட்டங்கள், தொழிலாளர் நல நிதி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்

வியாழன், 14 செப்டம்பர், 2017

புத்திசாலி மாணவர்களுக்கு மாதம் ரூ.75,000 ஊக்கத்தொகை

புதுடில்லி: உயர் கல்வி மையங்களில் படிக்கும், புத்திக் கூர்மையான மாணவர்களுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை, விரைவில் வழங்க உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: அறிவுக்கூர்மையான மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், நம் நாட்டுக்கு பாதிப்புஏற்படுவதை தடுக்கவும், நவீனத்துவத்தை ஊக்குவிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, உயர் கல்வி மையங்களில் பயின்று வரும், புத்திக்கூர்மை உள்ள மாணவர்களுக்கு, மாதந்தோறும், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொகை, ஐ.ஐ.டி., போன்ற, உயர் கல்வி மையங்களில் படிக்கும், 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், பிரதமர் கல்வி ஊக்கத் தொகை திட்டம் துவக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

திறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் - முழு தொகுப்பு....

8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்
10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும் பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்
இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா ?
இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள்
அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் .
என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE ) என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .
தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS
Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்
Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :
அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வுக்கட்டணம் ரூ. 50
Ø தேர்வு நடைமுறை:
ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
ü மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
இடைவேளை – 20 நிமிடங்கள்
ü பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
Ø தேர்ச்சி முறை:
MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .
(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).
மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.
நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS
Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம் வகுப்பு மாணவர்கள்
Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :
ஜூலை அல்லது செப்டமப்ர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வுக்கட்டணம் ரூ. 10
Ø தேர்வு நடைமுறை:
ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மனத்திறன் தேர்வு (MAT) - MENTAL ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
இடைவேளை – 20 நிமிடங்கள்
பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
Ø தேர்ச்சி முறை:
மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர்
.
வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.
தேசிய திறனாய்வுத்தேர்வு
( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE
Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்
NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும்
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :
ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வுக்கட்டணம் ரூ. 50
Ø தேர்வு நடைமுறை:
ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள்
பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
Ø தேர்ச்சி முறை:
ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.
ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.)
மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
NTSE - STAGE - 2 –
மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும்
தேர்வுக்கட்டணம்¸கிடையாது.
முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்
(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST
50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்
ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST –
50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்
பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
100 வினாக்கள் - 100 மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும்.
Ø தேர்ச்சி முறை:
 MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்).
ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது.
மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களில்
· 15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்
· 7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்
· 3% மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.
ü 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும்
ü இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது மாதந்தோறும் ரூ. 2000வீதமும்
ü முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் :
மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும் உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
படிப்பறிவுத்திறன் (SAT) தேர்வில்
அறிவியல்
கணிதம்
சமுக அறிவியல்
ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.
Ø பகுத்தாயும் திறன்
Ø காரணம் அறியும் திறன்
Ø சிந்திக்கும் திறன்
Ø முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன்
Ø முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன்
போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும்.
மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும்.
மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும்.
எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்
நன்றி சே. கணேஷ்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

MINORITY SCHOLARSHIPS 2017-2018 | இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018...

வெள்ளி, 19 மே, 2017

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.......

பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.
பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

வியாழன், 11 மே, 2017

பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி துவக்கம்.

தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
தமிழகத்தில், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக இருந்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிந்தது. அவர், 2016 - 17ம் கல்வி ஆண்டு வரை, 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்திருந்தார்.இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டியின் புதிய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், புதிய கல்வி ஆண்டுக்கான, கட்டண நிர்ணய பணிகளை துவக்கி உள்ளார். இரு வாரங்களுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகார கடிதம், அடிப்படை கட்டமைப்பு, வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்ய, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதன்படி, மே, ௮ முதல், பள்ளிகள் தரப்பில், விபரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
முதலில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பள்ளி முதல்வர்கள், முக்கிய நிர்வாகிகளை அழைத்து விசாரித்து, கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதை தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். 

சனி, 6 மே, 2017

மாணவர்களின் விபரங்களை நேரில் ஒப்படைக்க உத்தரவு !!

வெள்ளி, 3 மார்ச், 2017

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

'வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாதாந்திர உதவித் தொகை பெற, ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. வயது முதிர்த்த தமிழறிஞர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.
விண்ணப்ப படிவத்தை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூன், 6க்குள், சென்னை, எழும்பூர், தமிழ் சாலையில் அமைந்துள்ள, தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, வாழ்நாள் முழுவதும், மாதம், 2,000 ரூபாய், மருத்துவப்படியாக, 100 ரூபாயுடன், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.