>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
MBBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MBBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜூன், 2019

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


 மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்,  14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.
இன்று வெளியீடு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை புதன்கிழமை (ஜூன் 5) வெளியிடுகிறது. இந்த முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா,  இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 6 மே, 2019

NEET Exam 2019 - Full Question Paper & Answer Key

NEET Exam 2019 - Biology Question with Answer Key

NEET Exam 2019 - Question Paper and Key Answer

  • Answer Key for English Medium
  • NEET Exam 2019 - Biology Question with Answer Key | Mr. S. Thiyagarajan - Click Here For Download

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!





இன்று நடைபெற்ற நீட்தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் கூறிய நிலையில் வழக்கம் போல் தமிழக பாடத்திட்ட மாணவர்கள் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் எம்பிபிஎஸ் லட்சியத்தில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் நீட் தேர்வை எழுதினர். வழக்கம் போல் கடுமையான கெடுபிடிகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு தேர்வறைக்குள் முன்பு போல் கெடுபிடி காட்டப்படவில்லை என்று மாணவர்கள் கூறினர். இதனால் எந்த சஞ்சலமும் இன்றி நீட் தேர்வை எழுதியதாக தமிழக மாணவர்கள் தெரிவித்தனர்.

னால் தேர்வு தான் மிகவும் கடினமாக இருந்ததாகமாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.

இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சிரமமாக இருந்ததாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் நீட் தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

NEET EXAM 2019 - ORIGINAL QUESTION PAPER AND ANS KEY [ Exam Date :05.05.2019 ]


...............................................................................................................................................

திங்கள், 22 ஏப்ரல், 2019

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


NEET dress code: Light, half-sleeve clothes, no belts


The National Testing Agency (NTA), which recently released admit cards for National Eligibility-cum-Entrance Test (NEET) for undergraduate (UG) medical and dental seats, has laid down a dress code for candidates to minimise instances of cheating. In a recently released circular, the NTA asked candidates to wear only light clothes with half sleeves and open footwear. 



 Those wearing customary dresses including burqas or turbans have been asked to mention the same in their application form and report to the exam centre at least one and a half hours early to complete the frisking procedure. 'Students who have to wear a burqa or a turban during exams have already mentioned the same in their application form and this will be mentioned in their admit card. We've requested them to report to the exam centre early so that their frisking process is over in time,' said the circular. 

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


 Any metal objects, including belts or digital watches, will not be allowed in the exam centre. According to registration figures made public by NTA, close to 15.19 lakh students registered for NEET-UG this year, compared to 13.26 lakh in 2018. There are close to 67,000 UG medical seats in government-run and private institutes in the country, which means at least 23 students will be vying for one medical and dental seat this year. 




Like last year, most NEET-UG registrations in the country have come from Maharashtra, where 2.19 lakh students will be appearing for the exam, followed by Uttar Pradesh and Tamil Nadu, with 1.57 lakh and 1.40 lakh students respectively. From Rajasthan, 99,711 have registered for NEET-UG and another 84,443 students registered from Bihar. NEET 2019 will be held across the country on May 5.

NEET dress code: Light, half-sleeve clothes, no belts 

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று 15.04.2019 மாலை 5 மணிக்கு வெளியாகிறது

இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

CLIK HEAR

சனி, 30 மார்ச், 2019

Latest NEET Exam Study Materials Download

NEET Exam Study Materials Download

NEET Exam Study Materials
Latest - Study Materials

NEET Exam - Model Question Papers
Physics - Study Materials
Chemistry - Study Materials

Botany - Study Materials
Tamil Medium Translation for NCERT CBSE Books

செவ்வாய், 26 ஜூன், 2018

மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்....

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 28ல் வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு, ஏழு, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஐந்து, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்

பட்டு வந்தன. நடப்பாண்டில், 10, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 19 ஜூன், 2018

AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!


AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!


குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்! எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையங்களில் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்கான நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது. இத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தற்போது நுளைவுதேர்வுகளுக்கான முடிவுகள் aiims exams.org என்ற இணையதளத்தில்...

TENTATIVE SCHEDULE FOR ONLINE COUNSELING (ALLOTMENT PROCESS) FORNEET 15% AIQ/DEEMED CENTRAL UNIVERSITIES & ESIC (MBBS /BDS) SEATS 2018

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 43,935 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 43,935 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் மாலை 5 மணி வரை 43,935 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 21 மார்ச், 2018

நீட் தேர்வுப் பயிற்சிக்குப் புதிய செயலி!...




                                                   LETS ACT
சென்னையில் நீட் தேர்வுப் பயிற்சிக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மையங்களை அரசு நடத்திவருகிறது. அது போன்று, தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், காணொளி மூலம் நீட் தேர்வுப் பயிற்சிக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார். அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாகக் கிடைப்பதில்லை.
ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அங்கே சேருவதற்கான விண்ணப்பத்தை ரூ.1400 கொடுத்து வாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில்தான் அதிக மாணவர்கள் உள்ளனர்.
அதனால், அனைத்து மாணவர்களும் எளிதில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற LETS ACT என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறோம்; அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார் ராம் பிரகாஷ்

சனி, 10 மார்ச், 2018

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது!!!

மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது.
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150 இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு மே 6-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாழன், 8 மார்ச், 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சனி, 3 மார்ச், 2018

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள்மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அவர்கள்உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சனி, 27 ஜனவரி, 2018

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.....

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டுநீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது.
தமிழகம் ஓராண்டுக்கு விலக்கு பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் மே 7ம் தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் 11,35,104 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 103 மையங்களில் 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 88,000 மாணவர்களில், 15,206 பேர் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல்,இந்த ஆண்டு நீட் 2018 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஜனவரிஇறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமுதல் அடுத்த 30 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதை சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு விதிமுறைகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவரின் ஆதார் எண், உபயோகத்தில் உள்ள மொபைல் எண், உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி அவசியம்.
கடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விதிமுறைகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வியாழன், 25 ஜனவரி, 2018

பிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்...

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து பாடத் திட்டங்களையும் பின்பற்றி, வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. தேர்வுக்கான பயிற்சியில், தமிழக மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்கும் என, பல மாணவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., விதிகளில் கூறப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களில் பொது பிரிவினர், இயற்பியல், வேதியியல், உயிரியலில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். மற்ற பிரிவினர், 45 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என, 'நீட்' தேர்வு விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

செவ்வாய், 19 டிசம்பர், 2017

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!


நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த
திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​
​மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.​