>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PHONE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PHONE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 மார்ச், 2020

Phone Contacts-களை மெமரி கார்டுகளில் காப்பி செய்வது எப்படி ?....







ஞாயிறு, 5 ஜனவரி, 2020

திருட்டுப்போன மொபைல்களைக் கண்டுபிடிக்க புதிய வழி!' - நடைமுறைக்கு வந்த அரசின் திட்டம்




ஞாயிறு  5, ஜனவரி, 2020



திருடு போன மொபைல் போன்களைப் பற்றி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு அந்தப் புகார் படிவத்துடன் Central Equipment Identity Register என்ற அரசின் இணையதளத்தில் பதிவு செய்து நமது மொபைலை நாமே ட்ராக் செய்துகொள்ளலாம்

ஸ்மார்ட்போன்கள் பெருகிவிட்ட இன்றைய காலத்தில், அந்த போன்கள் திருடு போவதும் சகஜமாகிவிட்டது. தற்போது அதற்கான தீர்வை அளிக்கத் தொலைத் தொடர்பு அமைச்சகம் முன் வந்துள்ளது. தொலைந்த அல்லது திருடு போன மொபைல் போன்களைப் பற்றி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, அந்த புகார் படிவத்துடன் Central Equipment Identity Register என்ற அரசின் இணையதளத்தில் பதிவு செய்து நமது மொபைலை நாமே ட்ராக் செய்துகொள்ளலாம் என ஏற்கெனவே அறிவித்திருக்கிறது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.



இந்தத் திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தி அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு செயலாளர் பேசியபோது, ``தற்போது டெல்லியில் உள்ளவர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். திருடப்பட்ட மொபைலைப் பற்றி காவல்துறையில் புகார் கொடுத்து, அந்தப் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டையைச் சேர்த்து பதிவேற்றம் செய்து மொபைலை நீங்களே ப்ளாக் அல்லது அன்ப்ளாக் செய்யலாம்" எனக் கூறியுள்ளார்.


அந்த இணையதளத்தின்படி திருடப்பட்ட மொபைலின் IMEI நம்பர், உங்கள் மொபைல் நம்பர், தொலைந்த இடம், தேதி, காவல்துறை புகார் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டை ஆகியவற்றைப் பதிவேற்றுவதன் மூலம் உங்கள் மொபைலை திருடியவர் எந்த வகையிலும் உபயோகிப்பதிலிருந்து தடுக்க முடியும். மேலும், அந்த மொபைலே எங்கேயாவது பயன்படுத்தப்பட்டால் அதை ட்ராக் செய்யவும் முடியும்.

தற்போது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் இந்தியா முழுவதும் விரிவு படுத்தப்படவிருக்கிறது.

இணையதள முகவரி: https://ceir.gov.in/Home/index.jsp




...................................................

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களுக்கும் video ,file,Audio, document அனுப்பும் பிரமாண்ட App



ஒரே நேரத்தில் ultra Sound மூலம் இயங்கும் இந்த App ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுக்கும் videos , file , document,Audio Share செய்ய முடியும். அனைவரும் இந்த App download செய்து open செய்து அனைவருக்கும் ஒரு வரிடம் உள்ள வீடியோ , file,Audio Share செய்ய முடியும்.

இது முற்றிலும் ultra Sound மூலம் இயங்கக் கூடிய ஒரு பிரமாண்ட App.
பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தை உணருங்கள்.

வாட்ஸ் அப்பில் இனி ரிப்ளை செய்வது ஈஸி!


மெசெஞ்சிங் சேவையில் முக்கிய செயலிகளுள் ஒன்றான வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


சமூக வலைதளங்களில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டு பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் தனது அடுத்த அப்டேட்டில் Dark Mode, ‘Swipe To Reply’ அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. Dark Mode வசதியில் வாட்ஸ் அப் செயலியின் நிறம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இருட்டின் பின்னணியில் தெளிவான எழுத்துக்களைக் கொண்டு படிப்பவர்களுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும். ட்விட்டரில் இந்தச் சேவை முன்பே அறிமுகமாகிவிட்ட நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

மற்றொரு வசதியான ‘Swipe To Reply’ முன்பே iOS பயனர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப்பில் ரிப்ளை செய்யும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டு மெசெஞ்சிங் சேவையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 1 செப்டம்பர், 2018

அதிரடியாக விலை குறைக்கப்பட்ட Vivo Cell Phones




இந்தியாவில் விவோ ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரிடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக விவோ நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 ஆகியோ மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி முதல் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ரூ.22,990, ரூ.14,990 மற்றும் ரூ. 35,990 ஆக இருந்த விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 மாடல்களின் விலை தற்போது ரூ.18,990, ரூ. 13,990 மற்றும் ரூ.31,990 ஆக குறைந்துள்ளது.
எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்களுக்கு இன்னும் குறைவான விலையிலும் கூட கிடைக்கும். பொதுவாக சொன்னால் இது செம்ம ஜாக்பாட்.

சனி, 21 ஜூலை, 2018

உறுதி! வதந்திகள் பரவுவதை தடுக்க, 'வாட்ஸ் ஆப்' ... தகுந்த மாறுதல் செய்யப்போவதாகவும் அறிவிப்பு

புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை,தேர்தல்கள் நடப்பதற்கு முன் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ள, அந்த நிறுவனம், 'போலி தகவல் களை சரிபார்த்து பகிரும் வகையில், வாட்ஸ் ஆப்பில் தக்க மாற்றங்கள் செய்யப்படும்' என்று, கூறியுள்ளது.


 வதந்திகள், பரவுவதை,தடுப்பதாக,வாட்ஸ் ஆப், நிறுவனம்,உறுதி,தகுந்த, மாறுதல்களை, செய்யப்போவதாகவும், அறிவிப்பு 


நாட்டின் பல்வேறு பகுதிகளில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும், பசுக்களை கொன்றதாக வும் குற்றஞ்சாட்டி, உள்ளூர்வாசிகள் கும்பலாக திரண்டு தாக்குதல் நடத்தியதில், பலர் உயிர் இழந்து உள்ளனர்.அதேபோல், சமீப காலமாக, குழந்தைகளை கடத்த வந்துள்ளதாக சந்தேகத்தில், அப்பாவிகள் பலர், விஷமக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

அதிர்வலைகள்

மஹாராஷ்டிராவில் ஐந்து பேர், தமிழகத்தில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர், என, குழந்தைகளை திருட வந்ததாக, சந்தேகத்தில் பலர் அடித்துக்கொல்லபட்டது,நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவங்களை விசாரித்த போலீசார், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில், வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்பட்ட வதந்திகள் காரணமாக இருப்பதை அறிந்தனர். இதையடுத்து, வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தளத்தில், வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர்,இ - மெயிலில் அளித்துள்ள பதில்:

அடுத்தாண்டு துவக்கத்தில், இந்தியாவில் பல தேர்தல்கள் நடக்க உள்ளன.அதற்கு முன், வாட்ஸ் ஆப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துடனும், அரசியல் கட்சி ஒருங்கிணைப்பாளர்களுடனும், வாட்ஸ் ஆப் நிர்வாகிகள் பேசினர்.வாட்ஸ் ஆப் என்பது, தனிப் பட்ட மற்றும் சிறு குழுக்கள் இடையே, தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.

மாற்றங்கள்

எங்கள் தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவோரை தடை செய்வதிலும், பொய் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதிலும் உறுதியாக உள்ளோம். வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், தேர்தல்கள் நடப்பதற்கு முன் எடுக்கப்படும்.போலி தகவல்களை, வதந்திகளை சரிபார்த்து பகிரும் வகையில், வாட்ஸ் ஆப்பில் தக்க மாற்றங்கள் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வருகிறது, 'வெரிபிகடோ'
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ, தென் அமெரிக்க நாடான பிரேசில் ஆகியவற்றில், சமீபத்தில் தேர்தல்கள் நடந்தன. அப்போது, வதந்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், 'வெரிபிகடோ' என்ற, தகவல் உறுதி செய்யும் வசதி, வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டது.பொய் தகவல்களுக்கு எதிராக, இந்தியாவில் எதிர்ப்புகள் வலுத்து வருவதால், இந்தியாவில் பயன்படுத்தப்படும், வாட்ஸ் ஆப்பிலும், வெரிபிகடோ வசதி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, இந்தியாவில், 'சாட்' எனப்படும், குறுந்தகவல்களை, ஒரு தடவையில், ஐந்துக்கு மேல் அனுப்புவதற்கு, வாட்ஸ் ஆப் கட்டுப்பாடு விதித்துள்ளது.வெளிநாடுகளில், இந்த கட்டுப்பாடு, 20சாட்களாக உள்ளது. தவிர, வாட்ஸ் ஆப்பில், விரைவாக, 'பார்வேர்டு' செய்வதற்கான பட்டனை அகற்றுவது குறித்தும், வாட்ஸ் ஆப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

உ.பி.,யில் ‛டிஜிட்டல் ஆர்மி'
உ. பி மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தியை நம்பி, நாடு முழுவதும் பலர், பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர்.இதையடுத்து, 'சமூக வலைதளங் களில் வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில், சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை கண்டுபிடிக்க, 'டிஜிட்டல் ஆர்மி' என்ற அமைப்பை, போலீசார் துவக்கி உள்ளனர்.இது குறித்து, உ.பி., மாநில, டி.ஜி.பி., - ஓ.பி.சிங் கூறியதாவது:சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, ஏராளமானோர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை கண்டுபிடிக்க, டிஜிட்டல் ஆர்மி என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது; இதில், 3.67 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்படுவர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஒரு, 'வாட்ஸ் ஆப்' குரூப் உருவாக்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகளுடன், அந்த குழு இணைக்கப்படும்; இது, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கண் காணிக்கப்படும்.இதன் மூலம், சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவது தடுக்கப் படும். மேலும், வதந்தி பரப்புவோரை எளிதாக கைது செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 15 ஜூலை, 2018

வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?



உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கியமான தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.





"வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?"

தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் தங்களது குறிப்பிடத்தக்க நேரத்தை குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பில்தான் செலவிடுகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால், மற்ற சில செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கே சவால்விடும் வகையிலான புதுப்புது வசதிகளை பயனர்களுக்கு அளித்த வண்ணம் உள்ளன. எனவே, வாட்ஸ்ஆப் நிறுவனமும் தனது போட்டி செயலிகளான டெலிகிராம், ஸ்நேப்சாட், ஹைக் போன்றவை ஏற்கனவே அளித்துக்கொண்டிருக்கும் வசதிகளை தனது பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாக கூறுகிறது.

அந்த வரிசையில், ஒவ்வொரு வாட்ஸ்ஆப் பயனருக்கும் பயனுள்ளதாகவும், அதே சமயத்தில் தலைவலியாகவும் இருக்கிறது குரூப்களில் பகிரப்படும் எண்ணற்ற குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகள். அவற்றை தடுப்பதற்கு அட்மின்கள் படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. இந்நிலையில், அதற்கான தீர்வை அளித்துள்ளது வாட்ஸ்ஆப் செயலியின் புதிய வசதி.

உதாரணத்திற்கு, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 133 பேர் உள்ளதாகவும், அதில் அட்மின்களாக உள்ள மூன்று பேர், அந்த குரூப்பில் தாங்கள் மட்டுமே தகவல்களை பகிர வேண்டுமென்று விரும்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கனவாக இருந்த அட்மின்களின் இந்த விருப்பம் தற்போது சாத்தியமாகியுள்ளது.



இதை எப்படி செய்வது?

1. நீங்கள் அட்மினாக இருக்கும் ஏதாவதொரு குரூப்புக்குள் நுழையுங்கள்.

2. அதில் குரூப்பின் பெயரையோ அல்லது 'Group info' என்பதையோ தெரிவு செய்யவும்.


3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.

5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.


அவ்வளவுதான்! இனி உங்கள் குரூப்பில் பத்து பேரோ, நூறு பேரோ அல்லது இருநூறு பேர் இருந்தாலும், அட்மின்களால் மட்டும்தான் குரூப்பில் தகவல்களை பதிவிடவோ அல்லது பகிரவோ முடியும்.

திங்கள், 28 மே, 2018

புதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ்! பள்ளி கல்வித்துறை புது உத்தரவு இனி ஸ்மார்ட் போன் இல்லைன்னா நடவடிக்கை!!


செவ்வாய், 22 மே, 2018

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?


இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்அப் ஆன்லைன் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம் பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும். இந்த ரீடவுன்லோடு அப்டேட் பொறுத்தவரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

விரைவில் வாட்அப் செயலியில் புதிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய வசதி.!


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில் உதவும் புதிய பாட்காஸ்ட் பிளேயர். ஆண்ட்ராய்டு பயனாளிகள் பிற பிளேயர்ஸ்களை பணம் கொடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் கூகுள் தற்போது எவ்வித கட்டணமும் இன்றி இந்த பிளேயரை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே மியூசிக் அளவிற்கு உள்ள இந்த பிளேயரை நீங்கள் எந்த செயலியின் உதவியின்றி கூகுள் சியர்ச் மூலமே பயன்படுத்தலாம் என்பது சிறப்பு தகவல்.
கூகுள் நிறுவனம் இந்த பாட்காஸ்ட் நிறுவனமான பசிபிக் குறித்த தகவல்களையும் சியர்ச் ரிசல்ட்டில் அளித்துள்ளது. இந்த சியர்ச் தகவல் மூலம் இந்த பாட்காஸ்ட் ஆண்ட்ராய்டு பயனாளிக்கு மிகுந்த பயனளிக்கின்றது என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியை அறிமுகம் செய்த முதல் நாளிலேயே சியர்ச் மூலம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. எனவேதான் இந்த வசதியை நாங்கள் ஆண்ட்ராய்டு பயனாளிகள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று கூகுள் பாட்காஸ்ட் புரடொக்சன் மேனேஜர் ரெனுவ் வெடன் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளிகள் தற்போது கூகுள் சியர்ச் என்ற வசதியின் மூலம் மிக எளிதாக இந்த பாட்காஸ்ட் பிளேயரை அடைய முடியும். நீங்கள் ஒரு ஷோ பெயரை டைப் செய்தால் முதலிடத்தில் பாட்காஸ்ட் உங்களுக்கு தெரியும். அதன் மூலம் நீங்கள் லேட்டஸ்ட் பகுதியினை கேட்க முடியும். மேலும் இதன் ஷார்ட்கட் வடிவமும் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
மேலும் இந்த பாட்காஸ்ட் பிளேயரை நீங்கள் கூகுள் ஹோமில், கூகுள் அசிஸ்டெண்ட் மூலமும் பெற முடியும். ஒரே ஒருமுறை ஓகே கூகுள் என்று கூறி பாட்காஸ்ட் பெயரை மட்டும் நீங்கள் குரலில் கூறினால் போதும், உடனே உங்களின் விருப்பத்திற்குரிய இசையை உங்களால் கேட்க முடியும்,. மேலும் நீங்கள் எந்த இடத்தில் விட்டு சென்றீர்களோ மீண்டும் அந்த இடத்தில் இருந்து நீங்கள் விட்டதை கேட்கும் வசதிஊம் உண்டு.
ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் டிவைசில் பாட்காஸ்ட் வசதியை அளித்தது என்றாலும், அது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை. பெரும்பாலான ஐபோன் பயனாளிகள் இந்த பாட்காஸ்ட் மூலம் இசையை கேட்கின்றார்கள் என்றாலும் இனிவரும் காலத்தில் ஆண்ட்ராய்ட் பயனாளிகளும் அதற்கு இணையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாட்காஸ்ட் புரடொக்சன் மேனேஜர் ரெனுவ் வெடன் தெரிவித்துள்ளார்.

புதன், 21 மார்ச், 2018

போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புது அறிவிப்பு..

தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போது டிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இது குறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு... இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 1 ஜனவரி, 2018

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே 

கண்டுபிடிக்கலாம்..அனைத்தையும் லாக் கூட 

செய்யலாம்...

செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த  இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி  கவலை  கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

*find my device*

*find my device* மூலம்இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் *android.com/find*  என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  *log in* செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே *play sound,lock ,erase* என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  *map* மூலமாக தெரியவரும்.

*play sound* கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

*lock* ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

*erase* ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த  அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.....

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்

செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண்
இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி பயன்படுத்தி வரும் அனைவரும் தங்கள் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் உள்ளது.
ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவன மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
எனினும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், நோய்வாய்பட்டிருப்பவர்கள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமம் உள்ளது.
எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தவிர செல்லிடப்பேசி செயலி, இணையதளம் மூலம் ஆதாரை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வசதிகளைப் பயன்படுத்தி ஆதார் எண் பெறும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை மிக எளிதாக இணைக்க முடியும்.
ஏனெனில் ஆதார் எண் பெறும்போது சுமார் 50 கோடி பேர் தங்கள் செல்லிடப்பேசி எண்ணை அளித்துள்ளனர். அவர்கள் அந்த எண்ணை மிக எளிதாக ஆதாருடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதாரணமாக வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எளிதாக ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.
செல்போன் செயலியில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்?
எந்த செல்போன் நிறுவனத்தின் சிம்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அந்த நிறுவனத்தின் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அந்த செயலியை திறந்து, அதில்  KYC என்ற வசதியை க்ளிக் செய்து, அதில் 10 இலக்கங்கள் கொண்ட உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யுங்கள். தொடர்ந்து உங்கள் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி என்பது, நீங்கள் ஆதார் அட்டை பெறும் போது அதில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத்தான் அனுப்பி வைக்கப்படும்.
செயலியில் அளிக்கப்படும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடிபியை பதிவு செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஓடிபியை பதிவு செய்ததும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான குறுந்தகவலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

ரூ. 20 க்கு ஒரு ஜி.பி டேட்டா - செக்க போடு போடும் வை பை டப்பா...!

குறைந்த கட்­ட­ணத்­தில், தொலை தொடர்பு சேவை­களை வழங்கி வரும், ரிலை­யன்ஸ் ஜியோ­வுக்கு போட்டி போடும் வகையில் அதி­ர­டி­ ஆஃபரை இறக்கியுள்ளது பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னம்.

‘வை பை டப்பா’ எனும் நிறுவனத்தை சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகி­யோ­ர் துவங்கியுள்ளனர். இந்­நி­று­வ­னம், 2, 10 மற்­றும் 20 ரூபா­யில், அதி­வேக இன்­டர்­நெட் சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

முதற்­கட்­ட­மாக இந்த சேவையை கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. அதாவது ரூ. 2 க்கு 100 எம்.பி. ரூ. 10 க்கு 500 எம்.பி. ரூ. 20 க்கு 1 ஜி.பி. வீதம் டேட்டா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி.

தேநீர் விடுதி மற்­றும் பல­த­ரப்­பட்ட கடை­களில், ‘வை பை டப்பா’ டோக்­கன் விற்­கப்­படும் எனவும் இதை வாங்கி மொபைல் எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. நெம்பரை பதிவுசெய்து டேட்டாவை பெற­லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்­க­ளூரு முழு­வ­தும், 350 வழித்­த­டங்­களில், ‘வை பை டப்பா’ பயன்­பாட்­டிற்­கான, ஒருங்­கி­ணைப்பு வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

வியாழன், 16 நவம்பர், 2017

மொபைல் - ஆதார் இணைப்பு : 3 புதிய வசதிகள் அறிவிப்பு

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.

மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:
மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. 
செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்

புதன், 1 நவம்பர், 2017

ஆஹா வந்தாச்சு: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!


வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக
எதிர்பார்க்கப்பட்ட, அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் அம்சம் (Delete for Everyone) தற்போது வெளியாகியுள்ளது.
இந்தச் செயலியினை ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ஒரு தனி நபருக்கோ அல்லது குரூப்புக்கோ தவறாக அனுப்பிய மெசேஜ்களை இதன்மூலம் Delete செய்து கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த மெசேஜ் அனுப்புபவர் வாட்ஸ்அப்பின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் GIF, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட்ஸ் ஆகியவற்றை உடனடியாக அழித்துக் கொள்ள முடியும்.
இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது?

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்க, அந்த மெசேஜை Long Press செய்ய வேண்டும். அப்போது ‘Delete For Me’, ‘Delete For Everyone’ என்ற Option உங்கள் முன் தோன்றும். அதில் ‘Delete For Everyone’ Option-ஐ Click செய்யும்போது குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் மட்டுமே அனுப்புநருக்குச் சென்றடையும். ஆனால் Broadcast பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிக்க முடியாது.
மெசேஜ் அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த வழிமுறையைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் சிம்பயான் Operating System கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ; மாஸ்டர் பிளான்...


5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும்
முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது.
இதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார்.
இது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார்.
அதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!


இந்த ஸ்மார்ட்போன் 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும். இந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,399 என நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
கார்பன் A40 சிறப்பு அம்சங்கள்:
# 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே,
# 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி,
# 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 0.3 எம்பி செல்ஃபி கேமரா,
# டூயல் சிம் ஸ்லாட், 1400 எம்ஏஎச் பேட்டரி திறன்.
ஏர்டெல் சலுகைகள்:
ரூ.169 விலையில் அன்லிமிட்டெட் காலிங் மற்றும் தினமும் 0.5 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும்.
முதலில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ.2,899 பணம் செலுத்தி தொடர்ச்சியாக 36 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் 18 மாதங்களுக்கு பின் ரூ.500 திரும்ப பெறுவதோடு 36 மாதங்களுக்கு பின் ரூ.1000 என மொத்தம் ரூ.1,500 வரை சலுகை பெற முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட பல விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதேபோல, செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அப்படி இணைக்கபடாத சிம் கார்டுகள் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 2018 பிப்ரவரியில் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.