>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 30 ஜூலை, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:-31-07-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

 உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பழமொழி :

A teacher is better than two books

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்

பொன்மொழி:

ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்

2.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22

நீதிக்கதை :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.

கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

இன்றைய செய்தி துளிகள் : 

1.கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2.பள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்!

3.கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

4.செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

5.1000-மாவது டெஸ்டில் களமிறங்க உள்ள இங்கிலாந்து..... வாழ்த்து தெரிவித்த ஐசிசி

வெள்ளி, 27 ஜூலை, 2018

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; ஜூலை 31-ம் ேததியுடன் முடிவடைய இருந்த அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு


புதன், 25 ஜூலை, 2018

"Inspire Award " Projects For School Students


  • Click Here - "Inspire Award " Project - 1



  • Click Here - "Inspire Award " Project - 2


  • Click Here - "Inspire award 3


  • Click Here - "Inspire Award " Project - 4





  • Click Here - "Inspire Award " Project - 5


  • Click Here - "Inspire Award " Project - 6

  • Click Here - "Inspire Award " Project - 7

..........................................................................................................................................................................

செவ்வாய், 24 ஜூலை, 2018

School Morning Prayer Activities - 24.07.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:




திருக்குறள்:



நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.


பழமொழி :



A pen is mightier than a sword



கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது



பொன்மொழி:



அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.



- புத்தர்.



இரண்டொழுக்க பண்பாடு :


1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .



2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .



பொது அறிவு :



1.கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?



பெரியார்



2.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?



காலா காந்தி



நீதிக்கதை :



ஆமையும் இரண்டு வாத்துகளும்
The Tortoise and the Ducks Story




அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.



ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.



“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.



“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.




“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து.



அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை



“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.



அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.



இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.



சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.



செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.



கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.



நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.



இன்றைய செய்தி துளிகள் : 


1.மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கடலில் வீணாகப் போகிறது காவிரி நீர்...குடிநீருக்கும் பயன்படாத அவலம்



2.லாரி ஸ்டிரைக் 4வது நாளாக தொடர்கிறது: மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்ப்பு

3.18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பு வாதம்

4.பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு



5.சொந்த மண்ணில் சாதித்த இலங்கை...... டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது

ஆசிரியர் தகுதித் தேர்வை தனியாகவும், நியமனத்துக்கான போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறையை அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு







No comments:

திங்கள், 23 ஜூலை, 2018

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத்

 தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.!!!

 தரவிறக்கம் செய்ய…


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ளஇணைப்பில் புதிய   அடையாள அட்டையைத் தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD THE NHIS CARD

பயனர்எண் :
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் &எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)

கடவுச்சொல் :
பிறந்த தேதி
...............................................................................................................
*Scan செய்யதேவையில்லை*

*எளியமுறையில் ஒன்றாம் வகுப்பு *Video*


*பாடம்: தமிழ்*

*வரிசையாக புத்தக பக்கஎண்களின் படி*

*பக்கம் எண்: 2*

📌https://youtu.be/7U99TEn9q3A

*பக்கம் எண்: 4*
📌https://youtu.be/pSg31IALtrE

*பக்கம் எண்: 7*
📌https://youtu.be/kg_FmhAV7hc

*பக்கம் எண்: 17*
📌https://youtu.be/nDylMQA5R30

*பக்கம் எண்: 18*
📌https://youtu.be/qvgHXM87lNM

*பக்கம் எண்: 19*
📌https://youtu.be/CPhzawPJUOo

*பக்கம் எண்: 25*
📌https://youtu.be/vwKX-cdsbss

*பக்கம் எண்: 26*
📌https://youtu.be/ZU7jiI9wz2c

*பக்கம் எண்: 30*
📌https://youtu.be/ivQqLHAAFbE

*பக்கம் எண்: 32*
📌https://youtu.be/fhXWrNnkzl4

*பக்கம் எண்: 35*
📌https://youtu.be/5Yn_e7v0I2Q

*பக்கம் எண்: 36*
📌https://youtu.be/6fRit5pwvIM

*பக்கம் எண்: 40*
📌https://youtu.be/xRJE5ZT0qSU

*பக்கம் எண்: 41*
📌https://youtu.be/FTsklrSjLos

*பக்கம் எண்: 45*
📌https://youtu.be/FTsklrSjLos

*பக்கம் எண்: 46*
📌https://youtu.be/aiQ6XWL-pts

*பக்கம் எண்: 47*
📌https://youtu.be/kzBWmzkJqGg

*பக்கம் எண்: 48*
📌https://youtu.be/YVUgpdG7Il8

*பக்கம் எண்: 50*
📌https://youtu.be/pSB62NM2r-I

*பக்கம் எண்: 52*
📌https://youtu.be/hFUaCL91_Tc

*பக்கம் எண்: 57*
📌https://youtu.be/UPhtFDEAGUA

*பக்கம் எண்: 62*
📌https://youtu.be/461wd7FSA08

*பக்கம் எண்: 66*
📌https://youtu.be/FB7FhJbmWTE

Subscribe our Channel for New Updates
👇👇👇
https://www.youtube.com/c/thodakkakalviraja
👆👆👆

Sooooon
More videos
Thanku🙏🙏
முதல் வகுப்பு பருவம்

1 தமிழ் பாடம்

(பக்கம் 1 முதல் 66 வரையுள்ள வீடியோ இணைப்புகள்)

*1st std tamil term 1 page 2*
https://youtu.be/vp6kJwABz80

*1st std tamil term 1 page 4*
https://youtu.be/G_OFQPdCweY

*1st std tamil term 1 page 7*
https://youtu.be/VZQu5gqAUxI

*1st std tamil term 1 page 17*
https://youtu.be/WMhVqrwR1zk

*1st std tamil term 1 page 18*
https://youtu.be/pkta6S889q8

*1st std tamil term 1 page 19*
https://youtu.be/h5eFGQNRQWc

*1st std tamil term 1 page 25*
https://youtu.be/7SzhBIwOE4I

*1st std tamil term 1 page 26*
https://youtu.be/AGcm-m5eS6k

*1st std tamil term 1 page 30*
https://youtu.be/RVavvB1EScI

*1st std tamil term 1 page 32*
https://youtu.be/MjpL20iZi3E

*1st std tamil term 1 page 35*
https://youtu.be/kvRTiXGBo6w

*1st std tamil term 1 page 40*
https://youtu.be/4gyi_HFSHNo

*1st std tamil term 1 page 36*
https://youtu.be/2_JTGP17Mgo

*1st std tamil term 1 page 41*
https://youtu.be/arjYC8HpF3Y

*1st std tamil term 1 page 47*
https://youtu.be/byA8R3d5oh4

*1st std tamil term 1 page 46*
https://youtu.be/rvvjKsKL_M4

*1st std tamil term 1 page 48*
https://youtu.be/D42kJdUDJms

*1st std tamil term 1 page 50*
https://youtu.be/McyVzvFbLe4

*1st std tamil term 1 page 52*
https://youtu.be/w1pM-dtPMf8

*1st std tamil term 1 page 57*
https://youtu.be/2oPav-WRfOs

*1st std tamil term 1 page 62*
https://youtu.be/H9L421i7I8w

*1st std tamil term 1 page 66
https://youtu.be/9PvCVSvC1Rk
.

சனி, 21 ஜூலை, 2018

1 ST STD NEW TEXT BOOK WORK BOOK FOR ALL SUBJECTS!!!

1 ST STD NEW TEXT BOOK WORK BOOK FOR ALL SUBJECTS

மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி வேலை நேரத்திற்கு முன் /பின் சிறப்பு வகுப்புகள் தவிர்க்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தல்

GO Ms.No. 145 Dt: July 17, 2018 School Education - Tamil Nadu Recognised Private Schools (Regulation) Rules - 1974 - Amendment - Orders - Issued

GO MS. NO. 93 DT: JULY 17, 2018-EXAMINIATIONS – TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION – COMPETITIVE EXAMINATIONS – ENHANCEMENT OF UPPER AGE LIMIT FOR GROUP-I, I-A AND I-B SERVICES EXAMINATIONS – ORDERS – ISSUED.!!!

School Team Visit - 23.07.2018 அன்று பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் மீளாய்வு கூட்டம் நடத்துதல் குறித்து - CEO செயல்முறைகள்!


11th - English - Prose 1 - The portrait of a Lady - Full Notes - Study Material



TAMIL READING PRACTISE - FOR SLOW LEARNERS


TAMIL READING PRACTISE - FOR SLOW LEARNERS -

'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

புதுடில்லி, 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

புதுடில்லி, 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சி.ஏ., இறுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை, சி.ஏ., படிப்புக்கான அடிப்படை, முதன்மை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' என்ற, சி.ஏ., படிப்புக்கான தேர்வுகள், மே மாதம் நடத்தப்பட்டன.
இதற்கான முடிவுகளை, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., நேற்று வெளியிட்டது. இதில், சி.ஏ., இறுதி தேர்வில், பழைய முறை தேர்வு; புதிய முறை தேர்வு என, இரண்டு தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பழைய முறைப்படியான தேர்வில், 9.09 சதவீதம் பேரும், புதிய முறைப்படி நடந்த தேர்வில், 9.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இறுதி தேர்வுகளில், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் மாணவர்கள் முதலிடமும், அகமதாபாத், பெங்களூர் மாணவர்கள், இரண்டாமிடமும், சூரத் மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர்.அதேபோல், அடிப்படை தேர்வு மற்றும் பொது திறன் தேர்வான, சி.பி.டி., ஆகியவற்றுக்கும், தேர்வு முடிவு வெளியானது. பொது திறன் தேர்வில், 28.06 சதவீதமும், அடிப்படை தேர்வில், 19.24 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பட்டய கணக்காளர் - சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில்,கோவை, வேடப்பட்டியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், 400க்கு, 288 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 21வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி பெற்றோர் எதிர்ப்பால் மூடபோவதாக அறிவிப்பு

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் செயல்படும், எஸ்.எஸ்.எம்., பள்ளி நிர்வாகம், இரண்டு லட்ச ரூபாய், 'டிபாசிட்' தொகை கேட்டதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளியை மூடப்போவதாக அறிவித்த பள்ளி நிர்வாகம், பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரூ.2 லட்சம்,டிபாசிட்,கேட்ட,சி.பி.எஸ்.இ., பள்ளி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்கு சொந்தமாக, குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்துாரில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு பள்ளி மற்றும் சென்னை கோபாலபுரத்தில் சாரதா செகண்டரி பள்ளி ஆகியவை செயல்படுகின்றன.

ரூ.2 லட்சம், 'டிபாசிட்'

இதில், ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு பள்ளி களில், ஒவ்வொரு மாணவருக்கும், 'டிபாசிட்' தொகையை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி, பள்ளி நிர்வாகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது.இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் பேசி, டிபாசிட் தொகை உயர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரினர்; பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதையடுத்து, பெற்றோர் ஏராளமானோர், குரோம்பேட்டை மற்றும்பெருங்களத்துாரில் உள்ள பள்ளிகளை, நேற்று திடீரென முற்றுகையிட்டனர். இது குறித்து, தகவல் அறிந்த போலீசார், பெற்றோரை பள்ளியின் அருகே விடாமல் தடுத்தனர்.போராட்டம்

குறித்து கேள்விப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தனியார் பள்ளிகளுக்கான மெட்ரிக் இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர், நரேஷ் ஆகியோர், அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தினர். 

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி,ஆஞ்சலோ இருதயசாமி, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.போராட்டம் நடத்தியவர் களிடமும், பள்ளியின் தாளாளர், சந்தானத்துடனும் பேச்சு நடத்தினார். பள்ளியின், 'டிபாசிட்' குறித்த சுற்றறிக்கையை ரத்து செய்யும்படி அறிவுறுத்தப் பட்டது.

திடீர் அறிவிப்பு

இந்நிலையில், பள்ளிகளின் தாளாளர், கே.சந்தானம், திடீரென, இணையதளத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை:குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்துார் பள்ளிகளின் முன், பெற்றோர் என்ற போர்வையில், கட்டுக்கடங்காத கூட்டத்தினர், சட்டவிரோதமாக கூடினர். போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியை நாங்கள் நாடினோம். அவர்களோ, பள்ளியின் மதிப்பையும், கவுரவத்தையும் எண்ணாமல், கூட்டத்தை சமாளிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டனர். 

பள்ளி முன் கூடிய கூட்டத்தினர், வளாகத்தில் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை காட்டினர்.பள்ளி வளாகத்தில் மாணவ - மாணவியர், ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான, இதுபோன்ற அசிங்கமான, சட்ட விரோதமான நிகழ்வுகளை தாங்கி கொள்ள முடியாது.எனவே, கனத்த இதயத்துடன், ஆக., 1ல், இரண்டு விதமான முடிவுகளில், ஒன்றை எடுக்க உள்ளோம்.

* முதலாவதாக, சட்டம் அனுமதித்தால், இந்த கல்வி ஆண்டின் பாதியிலேயே, இரண்டு பள்ளிகளையும், மூட உள்ளோம். அந்த நிலை ஏற்பட்டால், மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோருக்கு அவகாசம் தருவோம்.


* இல்லாவிட்டால், இந்த கல்வி ஆண்டின் இறுதியில்,2 பள்ளிகளை மூட உள்ளோம். இதற்கு, சட்டம் அனுமதிக்கும் என, நம்புகிறேன்

* இரண்டாவதாக, இதுபோன்ற மன வேதனை, சித்ரவதைகள் எங்கள் மாணவர்களுக்கு நேரா மல் இருக்கும் வகையில், பள்ளி நிர்வாகத்தை, வேறு ஒரு அமைப்பிடம் மாற்றுவது குறித்து ஆய்வு செய்வோம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'நம்பகத்தன்மையைகுலைக்கும் செயல்'

பள்ளியின் அறிவிப்பு குறித்து, கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி நிர்வாகத் திடம் பேசி வருகிறோம்; 'டிபாசிட்' தொகை கேட்க பள்ளிக்கல்வி விதிகளில் இடமில்லை. பள்ளி அங்கீகாரம், தடையில்லா சான்று மற்றும் சி.பி.எஸ்.இ., இணைப்பு பெறும்போது, 'மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு தருகிறோம்; பள்ளியை இடையி லேயே மூடமாட்டோம்' என, எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்த பிறகே, அங்கீகாரம் தரப்படுகிறது.

இதனால், திடீரென பள்ளியை மூடுவோம் என்று அறிவிப்பது, நிறுவனத்தின் மீதான நம்பகத் தன்மையை குலைப்பதாகவும், விதியை மீறுவதாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

தேனி, கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை உள்ளன. முதற்கட்டமாக மலையாளம் தவிர்த்து, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப பாட புத்தகங்களை கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உதவியுடன் வெளியிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் நிதியையும் பெற்றுள்ளது. அதனை பயிற்றுவிக்க மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட, தமிழ் தெரிந்த ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.ஆனால் தமிழகத்தில் தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிடாமல், மத்திய அரசின் நிதியை வீணாக வேறு பணிகளுக்கு செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தேனி மாவட்டச் செயலாளர் சங்கீதா கூறுகையில், ''கம்ப்யூட்டர் அறிவியல் படித்துவிட்டு பணியில்லாமல் நீண்டகாலமாக காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்காமலும், தகவல் தொழில்நுட்பத்திற்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்காமலும் உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கும் நிதியும் என்ன ஆகிறது எனத்தெரியவில்லை. கேரளா போல ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

உறுதி! வதந்திகள் பரவுவதை தடுக்க, 'வாட்ஸ் ஆப்' ... தகுந்த மாறுதல் செய்யப்போவதாகவும் அறிவிப்பு

புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை,தேர்தல்கள் நடப்பதற்கு முன் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ள, அந்த நிறுவனம், 'போலி தகவல் களை சரிபார்த்து பகிரும் வகையில், வாட்ஸ் ஆப்பில் தக்க மாற்றங்கள் செய்யப்படும்' என்று, கூறியுள்ளது.


 வதந்திகள், பரவுவதை,தடுப்பதாக,வாட்ஸ் ஆப், நிறுவனம்,உறுதி,தகுந்த, மாறுதல்களை, செய்யப்போவதாகவும், அறிவிப்பு 


நாட்டின் பல்வேறு பகுதிகளில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும், பசுக்களை கொன்றதாக வும் குற்றஞ்சாட்டி, உள்ளூர்வாசிகள் கும்பலாக திரண்டு தாக்குதல் நடத்தியதில், பலர் உயிர் இழந்து உள்ளனர்.அதேபோல், சமீப காலமாக, குழந்தைகளை கடத்த வந்துள்ளதாக சந்தேகத்தில், அப்பாவிகள் பலர், விஷமக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

அதிர்வலைகள்

மஹாராஷ்டிராவில் ஐந்து பேர், தமிழகத்தில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர், என, குழந்தைகளை திருட வந்ததாக, சந்தேகத்தில் பலர் அடித்துக்கொல்லபட்டது,நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவங்களை விசாரித்த போலீசார், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில், வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்பட்ட வதந்திகள் காரணமாக இருப்பதை அறிந்தனர். இதையடுத்து, வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தளத்தில், வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர்,இ - மெயிலில் அளித்துள்ள பதில்:

அடுத்தாண்டு துவக்கத்தில், இந்தியாவில் பல தேர்தல்கள் நடக்க உள்ளன.அதற்கு முன், வாட்ஸ் ஆப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துடனும், அரசியல் கட்சி ஒருங்கிணைப்பாளர்களுடனும், வாட்ஸ் ஆப் நிர்வாகிகள் பேசினர்.வாட்ஸ் ஆப் என்பது, தனிப் பட்ட மற்றும் சிறு குழுக்கள் இடையே, தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.

மாற்றங்கள்

எங்கள் தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவோரை தடை செய்வதிலும், பொய் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதிலும் உறுதியாக உள்ளோம். வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், தேர்தல்கள் நடப்பதற்கு முன் எடுக்கப்படும்.போலி தகவல்களை, வதந்திகளை சரிபார்த்து பகிரும் வகையில், வாட்ஸ் ஆப்பில் தக்க மாற்றங்கள் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வருகிறது, 'வெரிபிகடோ'
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ, தென் அமெரிக்க நாடான பிரேசில் ஆகியவற்றில், சமீபத்தில் தேர்தல்கள் நடந்தன. அப்போது, வதந்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், 'வெரிபிகடோ' என்ற, தகவல் உறுதி செய்யும் வசதி, வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டது.பொய் தகவல்களுக்கு எதிராக, இந்தியாவில் எதிர்ப்புகள் வலுத்து வருவதால், இந்தியாவில் பயன்படுத்தப்படும், வாட்ஸ் ஆப்பிலும், வெரிபிகடோ வசதி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, இந்தியாவில், 'சாட்' எனப்படும், குறுந்தகவல்களை, ஒரு தடவையில், ஐந்துக்கு மேல் அனுப்புவதற்கு, வாட்ஸ் ஆப் கட்டுப்பாடு விதித்துள்ளது.வெளிநாடுகளில், இந்த கட்டுப்பாடு, 20சாட்களாக உள்ளது. தவிர, வாட்ஸ் ஆப்பில், விரைவாக, 'பார்வேர்டு' செய்வதற்கான பட்டனை அகற்றுவது குறித்தும், வாட்ஸ் ஆப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

உ.பி.,யில் ‛டிஜிட்டல் ஆர்மி'
உ. பி மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தியை நம்பி, நாடு முழுவதும் பலர், பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர்.இதையடுத்து, 'சமூக வலைதளங் களில் வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில், சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை கண்டுபிடிக்க, 'டிஜிட்டல் ஆர்மி' என்ற அமைப்பை, போலீசார் துவக்கி உள்ளனர்.இது குறித்து, உ.பி., மாநில, டி.ஜி.பி., - ஓ.பி.சிங் கூறியதாவது:சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, ஏராளமானோர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை கண்டுபிடிக்க, டிஜிட்டல் ஆர்மி என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது; இதில், 3.67 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்படுவர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஒரு, 'வாட்ஸ் ஆப்' குரூப் உருவாக்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகளுடன், அந்த குழு இணைக்கப்படும்; இது, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கண் காணிக்கப்படும்.இதன் மூலம், சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவது தடுக்கப் படும். மேலும், வதந்தி பரப்புவோரை எளிதாக கைது செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.