>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 31 அக்டோபர், 2016

வருகின்ற 05-11-2016 அன்று குறுமைய அளவிலான கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற " பொம்மலாட்ட வழி கல்வி கற்பித்தல் " பயிற்சிக்கு பயன்படும் வீடியோ

இந்த வீடியோ ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் வரும் பெண் கல்வி பாடலை ஒரு விழிப்புணர்வு நாடகமாக (பொம்மலாட்டத்தில்) நடத்தப்பட்டது.இந்த வீடியோ பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.சரியாக 30 நிமிடங்கள் ஓடக்கூடியது......
Click Here

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்

இந்தியா-பாகிஸ்தான்  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கோப்பயை கைப்பற்றியுள்ளது.
 தென்கொரிய அணியை வீழ்த்தி இறுதிப் பொட்டியில் நுழைந்த  இந்திய அணி , அசத்தலாக விளையாடி இன்று இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில்  பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

தேசிய உறுதி ஏற்பு நாள் பள்ளிகளுக்கு உத்தரவு!

(NATIONAL UNITY DAY) HEADMASTERS ARE INSTRUCTED TO PLEDGE TAKING CEREMONY @ 11.00AM ON 31ST OCTOBER 2016. (PLEDGE ATTACHED WITH THE LETTER)

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 
 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 
இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு, பொதுத் தேர்வை எதிர்கொள்ள, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தருகின்றன. இந்நிலையில், 2017 மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. பல்வேறு வகை வினாத்தாள்கள் பாட வாரியாக பெறப்பட்டுள்ளன. 
இதில், ஐந்து வகை வினாத்தாள் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் இறுதி யில், இந்த பட்டியலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும், அச்சிடப்பட உள்ளது. இந்த வினாத்தாளில், எந்தவித மாற்றமும் இன்றி, முந்தைய ஆண்டுகளின் படியே வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், விரைவில் சுற்றறிக்கை வெளியிட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு



ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
 சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்க, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 
'தாயெனப்படுவது தமிழ்' என்ற, இந்த வீடியோ தொகுப்பு, இணையதளத்தில், 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் நடனத்துடன், தமிழகத்தின் பல ஊர்களில், 40 பாடங்களும், பாடல்களாக படமாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ தொகுப்பு, 'சிடி'யை, 35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்ப, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, வீடியோ, 'சிடி'யை இலவசமாக தர, மாவட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர். 'தமிழகத்தின் பல கிராமங்களிலும், அரசு தொடக்க பள்ளிகளை விட, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு பலன் தரும் வகையில், பாடல், 'சிடி'யை இலவசமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

2020: இந்தியாவில் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள்!!

வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்று ஜி.எஸ்.எம். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள மொபைல் ஆபரேட்டர்களின் நலனுக்காக கடந்த 1995ஆம் ஆண்டு ஜி.எஸ்.எம். (குரூப் ஸ்பெஷல் மொபைல்) அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த
அமைப்பில் உலகளவில் உள்ள சுமார் 800 ஆபரேட்டர்களும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள, ‘இந்தியா 2016: மொபைல் பொருளாதாரம்’ அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 616 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் மொபைல் சந்தையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொபைல் சேவைகளை அதிகரிப்பது, மொபைல் கட்டணத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உயர்ந்து வரும் சூழலால் வரும் 2020க்குள் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 670 மில்லியனாக உயரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அடுத்ததாக இந்தியாவில் உள்ள மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகளவில் 3G சேவையில் இருந்து 4G சேவைக்கு தங்களை மாற்றி வருகின்றனர். இதையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 280 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் 4G சேவையைப் பயன்படுத்த உள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு முடிவில் இந்தியாவில் 4G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மூன்று மில்லியன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜி.எஸ்.எம். அமைப்பின் இயக்குநர் மாட்ஸ் கூறுகையில், ‘இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவலும் இந்தியாவில் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் மொபைல் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் சந்தை அதிகரிப்பதன் மூலம் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு இது உதவும்’ என்றார்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை நடத்துகிறது

திருவள்ளூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருவள்ளூரில் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இடையே பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மேல்நிலை வகுப்புகள்
அந்த வகையில், நடப்பாண்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நவம்பர் 2-ம் தேதி திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடக்கும் இந்த போட்டிகளில், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாயும், 2-ம் பரிசு 7 ஆயிரம் ரூபாயும், 3-ம் பரிசு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
PUPPET SONGS PUMSCHOOL GUDIYATTAM LINK;https://www.youtube.com/watch?v=Zl_OzibtVEQ

CPS:ஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.
இத்திட்டத்தில், ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும், அரசு தரப்பில் செலுத்தப்படும் தொகைக்கும், அக்., 1 முதல், டிச., 31 வரை, 8 சதவீதம்வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை,நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய...

Step:1
www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும்.
தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password
ஐடைப் செய்து Loginசெய்யவும்.
Step:2
Bill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள
Edit Installment என்பதைகிளிக் செய்யவும்.
Step:3
Do you want to edit installment Oct-2016 to Nov-2016?
Yes No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும்.
Edit Installment successfullyஆன பிறகு Logout செய்யவும்.
Step:4
பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்
Password ஐடைப் செய்துLogin செய்யவும்.
Step:5
Bill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்
உள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.
Step:6
Pay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation
என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து
Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்தபின் OK
கொடுக்கவும்.
Step:7
Pay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல் Bill Selectசெய்து
Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்Pay Statement
ஐ download செய்துகொள்ளவும்.
Schedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல் Bill Selectசெய்யவும் பிறகு
View Option-ல் All Schedule-ஐClick செய்து பின்னர் View Report என்பதை
கிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.
Step:9
ECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல் Bill Selectசெய்யவும்
பிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்
ECS Report ஐ download செய்துகொள்ளவும்.
Step:10
Download செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய Bill உடன்
சரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்
செய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த Bill-ல்உள்ளனர்
என்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற
பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out
செய்யவும்.
Step:11
பின்னர் தோன்றும்திரையில் D login-க்கான User Name மற்றும்
Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை
கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Bill Approval
என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து Bill Approval கொடுக்கவும்.
Bill Approved Successfully எனவந்த பின் Log Out செய்யவும்.
Step:12
பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்
Password ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை
கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill
Type-ல் Bill Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக்
செய்யவும். Bill Generate ஆனபிறகு Download SES File என்பதைகிளிக்
செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும்.
பின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான் Bill Ready.
குறிப்பு:
Form 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து
கொள்ள வேண்டும்.

பள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்மை பதிவில் குளறுபடி !!

இ.எம்.ஐ.எஸ்.,(எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகிறது.
அதாவது பள்ளி துவங்கிய நாள், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் பள்ளி வாரியாக சேகரிக்கப்படுகிறது.
இதேபோல், மாணவர்களின் பிறந்த தேதி, தந்தையின் பெயர், ரத்தவகை, வங்கி கணக்கு எண், ஆதார் விவரங்கள், ஆசிரியர்கள் பள்ளியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி வாரியாக தொகுக்கப்பட்ட விவரங்கள், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன.
இதற்காக பிரத்கேயமான முறையில், பள்ளிக்கல்வித்துறை, https:/emis.tnschools.gov.in என்ற தகவல் மேலாண்மை முறை இணையதளத்தை உருவாக்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இம்முறையில், பல்வேறு கோல்மால் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த சில கல்வியாண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட, தகவல் மேலாண்மை முறையை, ஆசிரியர்கள் தங்கள் சுயலாபத்துக்காக பதிவு செய்துள்ளனர். அதாவது தாங்கள் பணிபுரியும் பள்ளியை தக்க வைக்க, ஆன்-லைனில் பதிவு செய்தபோது, மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து பதிவேற்றம் செய்தனர்.
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் பணி நியமிக்க வேண்டும் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதே பள்ளியை தக்க வைத்த, ஆசிரியர்களின் விவரங்கள், பள்ளி கல்வித்துறைக்கு தெரிய வந்தது.
வகுப்பறை வருகை பதிவேட்டையும், ஆன்லைன் விவரங்களையும் ஒப்பிட்டபோது, மாணவர்களின் எண்ணிக்கை வேறுபட்டது. நடப்பு கல்வியாண்டில், தகவல் மேலாண்மை முறையில் பதிவு செய்த விவரங்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதாச்சார முறையை முறைப்படுத்தும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இதில், ஆன்-லைனில் ஆதார் எண் டபுள் என்ட்ரி, போலியான பதிவு இருந்தால் அதன் விவரங்கள் அழிக்கப்படுகிறது.
இறுதியாக தகவல் மேலாண்மையில், உறுதிபடுத்தப்பட்ட விவரங்களை, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், இனி ஒரே பள்ளியை ஆசிரியர்கள் தக்க வைக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:
பொது அறிவு பகுதி
புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.
nவிபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.
nபகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம்.
நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து 10 முதல் 15 வினாக்கள் கேட்கப்படலாம். விண்வெளி நிகழ்வுகள், தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள், சமீபத்திய விருதுகள், உலகின் முக்கிய அமைப்புகளின் சமீபத்திய மாநாடுகள், நடைபெற்ற இடங்கள் (குறிப்பாக ஐ.நா., செய்திகள்) விளையாட்டுச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், நியமனங்கள், பாதுகாப்பு சிறப்பம்சங்கள்.
nவரலாறு பாடத்தில் கால வரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரையிலான காலங்களில் நடந்த போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்கள், போர் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்.
nஉலகை வலம் வந்த பயணிகள், அவர்கள் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள்.
nவரலாற்று புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசிய காங்.,தோற்றம், மாநாடுகள், நடந்த இடம், தலைமை வகித்தவர், முக்கிய தீர்மானங்கள்.
இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், அதன் பயன்கள் மற்றும் அறிவியல் மதிப்புகள்.
nவேதியியலில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணையின் சிறப்பு, அன்றாட வாழ்வில் பயன்படும் வேதிச் சேர்மங்கள்.
nதாவரவியலில் செல் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுருப்பிகளின் பணிகள், தாவர பாகங்கள், வளர்ச்சி காரணிகள், வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடல்.
nமனித உடலியியலில் ரத்த வகைகள், ரத்த செல்களின் சிறப்பம்சம், இதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமிள்ளா சுரப்பிகளின் சிறப்புகள், வைட்டமின், எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் முக்கிய எலும்புகளின் பெயர்கள், நரம்பு மண்டலத்தில் மூளையின் அமைப்பு, அதன் பணிகள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதை ஏற்படுத்தும் கிருமிகள்.
nபுவியியலில் மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்கு சரணாலயங்கள், அமைந்துள்ள மாவட்டம், மாநிலங்கள், அங்கு புகழ்பெற்ற விலங்குகள், முக்கிய ஆறுகளின் பிறப்பிடம், சேருமிடம், துணையாறுகள், பயனடையும் மாநிலங்கள், அணைகளை வரிசைப்படுத்தி படிக்கவும். போக்குவரத்து அமைப்பை, உணவு பயிர்களில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.
nசூரியன் மற்றும் சூரியக் குடும்ப 8 கோள்களின் தனிச்சிறப்புகள், வானிலை, பருவகால காற்றுகள்.
nஇயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பனிப்பாறை வீழ்ச்சி, பாதிப்புகள்.
nஇந்திய அரசியல் அறிவியலில் அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணைகள், முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத் திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமர், முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பம்சங்கள், சமீபத்திய அரசியல் மாற்றம், தேர்தல் கமிஷன்.
nபொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், பொருளாதார வார்த்தைகளின் அர்த்தம், ஐந்து ஆண்டு திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.
பொதுத்தமிழ்
இதுவரை குரூப் - 4 தேர்வில் உள்ள கேள்விகளைப் பார்த்து, அதில் உள்ளவற்றிக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்ற தெளிவு கிடைக்கும்.
பகுதி (அ) இலக்கணம் : இலக்கணத்தில் முக்கியமானது தொடரும் தொடர்பும், அறிதல், பிழை திருத்தம், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், எவ்வகை
வாக்கியம் எனக் கண்டெழுதுதல், எதுகை, மோனை, இயைபு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முயற்சியுடன் விடையளிக்க வேண்டும். இதற்கு பயிற்சி மிக முக்கியம். இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
nபொதுத்தமிழ் பாடப்பகுதிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது. தமிழ் இலக்கண எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பகுதிகளில் தற்போது யாப்பு, அணி பகுதிகளில் இருந்து அதிகம் வினாக்கள் கேட்கப்படுகிறது.
nதுணைப்பாடத்தில் முக்கிய கூற்றுகளை கவனிக்கவும், புணர்ச்சி விதி, சந்திப்பிழைகளை நன்கு படிக்கவும்.
nநுாலின் வேறு பெயர்கள், நுாலாசிரியர் பெயர், அவரின் சிறப்பு பெயர், அறிஞர்களின் கூற்றுகள், புகழ் பெற்ற தொடர்களை கூறியவர்கள் மற்றும் இடம்பெற்ற நுால்கள்,
இலக்கண குறிப்பு.
பகுதி (ஆ) இலக்கியம் : இதிலிருந்து 30 வினாக்களுக்கு மேல் கேட்கப்படும். இதை எளிமை என அலட்சியம் கூடாது. சமயம், பண்பாடு, காலாசாரம், நாகரிகம் இப்பகுதியில் அடங்கியுள்ளது. முக்கியமானது பதிணென் மேற்கணக்கு, பதிணென் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம். புரிந்து தெளிவாக விடையளிக்க வேண்டும்.
சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம், புதுக்கவிதை வரை உள்ள நுால்,- நுாலாசிரியர்கள், குறிப்புகள், அவர்களின் பிற இலக்கியப் படைப்புகள்.
பகுதி(இ) தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டு மறுமலர்ச்சிக் காலம் என்பது தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டாற்றியவர்களும் ஆவர். இவர்கள் உலக நாடுகளுக்கு தமிழ் சென்றடைய முக்கியமானவர்கள். இதில் மிக முக்கியமானது பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, புதுக்கவிதை கவிஞர்கள், கலைகள், சிற்பம், உரைநடை, உ.வே.சாமிநாத அய்யர், தேவ நேயப்பாவாணர், ஜி.யு. போப் வீரமாமுனிவர், தமிழ் பெண்கள், தமிழர் வணிகம், உணவே மருந்து, திரு.வி.க.,வை மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்க்கை சிறப்புகளை வியந்து பார்த்து படித்தால் தெளிவு கிடைக்கும்.
- பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்,
மதுரை. 90470 34271.
டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்...
*ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட “பால் பாயின்ட் பேனா” மூன்று அல்லது நான்கு கொண்டு செல்க.
*தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் பதற்றத்தை தவிர்க்கலாம்.
*கைக்கடிகாரம் அணிந்து அடிக்கடி நேரத்தை சரிபார்க்கவும்.
*தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு துாங்கவும். துாக்கமின்றி சென்றால், யோசிக்கும் திறன் குறையும்.
*கவனச் சிதைவு இன்றி முழு கவனத்துடன் கேள்விகளை படித்து பார்க்கவும்.
*தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சி, முயற்சியே போட்டித் தேர்வுகளில் வெற்றியை தேடித்தரும். இதை மனதில் வைத்து படித்து நீங்களும் அரசு ஊழியராக வாழ்த்துகள்!

CPS - INTEREST CALCULATION WORKSHEETS..2009 - 2016

Thanks: Mr.Saravanan,Asst Teacher,
Sholinghur,
 Vellore district.

DSE : PAY ORDER FOR 210 BT's & 500 PGT's UPTO 30.06.2017

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்
2. 'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்
3. கம்பர் தாம் இயற்றிய காப்பியத்திற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
4. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்
5. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர் - வரத நஞ்சையப் பிள்ளை
6. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
7. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் - பதினொன்று
8. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு
9. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65
10. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்
11. பரிபாடல் என்னும் நூல் - அக, புறப் பொருள் பாடல்களைக் கொண்டது.
12. அகநானூறு மணிமிடை பவளத்தில் உளஅள பாடல்களின் எண்ணிக்கை - 180
13. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை - 13 முதல் 31 அடி வரை
14. நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
15. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை - 9 - 12 அடி வரை
16. கபிலரை "வாய்மொழிக் கபிலர்" எனப் போற்றியவர் - நக்கீரர்
17. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்
18. குறட்பா என்பது - ஈரடி வெண்பா
19. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38
20. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9
21. கொண்டாடப்பெறும் திருவள்ளுவர் ஆண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.13
22. பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஒழிபியல்
23. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை
24. வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்
25. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று
26. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை
27. சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்
28. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
29. தேனிலே ஊறிய செந்தமிழின் ... தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
30. வரி என்பது எந்த வகையைச் சார்ந்தது - இசைப்பாடல்
31. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு - 96
32. உத்தர காண்டத்தைப் பாடியவர் - ஓட்டக்கூத்தர்.
33. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 6
34. சுந்தர காண்டம் இராமாயணத்தில் - ஐந்தாம் காண்டம்
35. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுவபர் - அனுமன்
36. "சிறிய திருவடி" என்று அழைக்கப்படுபவர் - அனுமன்
37. தனயை என்ற சொல்லின் பொருள் - மகள்
38. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி
39. சீதாபிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் - ஒருதிங்கள்
40. வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி
41. கொன்ஸ்டான் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்
42. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகாதி
43. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துச் தந்தது - இலத்தீன்
44. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் - சூசைமாமுனிவர்
45. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
46. புரட்சிக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் - பாரதிதாசன்
47. பாண்டியன் பரிசைக் கைப்பற்ற நினைத்தவன்  - நரிக்கண்ணன்
48. பாரதிதாசன் எழுதிய நூல்களுள் ஒன்று - குறிஞ்சித்திட்டு
49. சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்ற பாரதிதாசனின் நூல் - பிசிராந்தையார்.
50. கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சகன் என்றெல்லாண் புகழப்படுபவர் - ஓட்டக்கூத்தர்.
 51. திவ்விய கவி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் - பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.
51. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக் கலம்பகம்
52. புலன் - என்னும் இலக்கிய வகை - பள்ளு
53. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் - கலம்பகம்
54. பிரபந்தம் என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டப்பட்டது
55. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை - சிந்துப்பா
56. வடமொழியில் பாரதம் பாடியவர் - வியாசர்
57. அந்தாதிக்கு வழங்கப்படும் வேறு பெயர் - சொற்றொடர் நிலை
58. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
59. "வாழ்வில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு - புதுவை அரசு
60. பாஞ்சாலி சபதத்திலுள்ள சருக்கங்களின் எண்ணிக்கை - 5
61. நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்று பாடியவர் - பாரதியார்
62. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - பாரதியார்
63. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் - பாரதிதாசன்
64. பிரெஞ்சுக் குடியரசுத்தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர் - வாணிதாசன்
65. கவிஞரேறு, பாவலர் மணி முதலிய பட்டங்களைப் பெற்றவர் - வாணிதாசன்
66. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - வாணிதாசன்
67. சுரதாவின் நூல்களுள் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசினைப் பெற்ற நூல் - தேன்மழை
68. உவமைக்கவிஞர் - சுரதா
69. கிறித்துவக் கம்பர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
70. "சின்னச் சீறா" என்ற நூலை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்
71. சுந்தரர் தேவாரம் - ஏழாந்திருமுறை
72. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் - பெரிய வாச்சான் பிள்ளை
73. தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் நினைவுப்பரிசினை முதலில் பெற்ற கவிஞர் - சுரதா
74. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர் - அபதுல் ரகுமான்
75. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவரா - சுந்தரர்
76. இரட்சயணிய யாத்திரகம் என்ற நூலை எழுதியவர் - எச்.ஏகிருஷ்ணமூர்த்தி
77. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - வள்ளல் சீதக்காதி
78. உமறுப்புலவரின் மற்றொரு நூல் - முதுமொழி மாலை
79. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
80. கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்பெறும் நூல் - தேம்பாவணி
81. சிற்றிலக்கிய வகைகள் - 96
82. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் - வான்மீகி
83. திருக்குறளில் பொருட்பாலின் அதிகாரங்களின் எண்ணிக்கை - 70
84. மருகி என்னும் சொல்லின் பொருள் - மருமகள்
85. கம்பர் பெருமையைச் சுட்டும் தொடர்கள் - கவிசக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன் இவை கம்பரின் பெருமையைச் சுட்டும் தொடர்கள்.
86. கம்பர் இயற்றிய வேறு நூல்கள்: சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம்.
87. நாடோறும் எதனைப் பாடுதல் வேண்டும்? - இந்திய நாடு என்னுடைய தாய்நாடு என்று இந்தியர் ஒவ்வொருவரும் நாள்தோறும் பாடுதல் வேண்டும்.
88. எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு.
89. புறநானூற்றால் அறியப்படும் செய்திகள்: முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், படைவீரர்கள், கடையேழு வள்ளல்கள், கடைச்சங்க புலவர்கள், பலருடைய வரலாற்றுக் குறிப்புகள், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, நாகரீகம், அரசியல், போர்த்திறம், சமுதாயப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றைப் புறநானூற்றால் நன்கு அறியலாம்.
90. அகநானூறு எத்தனை பகுதிகள் உள்ள அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. அவையாவன.
களிற்றியானை நிரை - 120 பாடல்கள்
மணிமிடைப்பவளம் - 180 பாடல்கள்
நித்திலக்கோவை - 100 பாடல்கள்
91. சிலம்பு கூறும் மூன்று உண்மைகள்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
92. தேம்பாவணி பொருள் - தேம்பா + அணி எனப் பிரித்தால் வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்தால் தேன் போன்ற பாக்களை அணியாக உடையது என்றும் பொருள்படும்.
93. உலா என்பதன் பொருள் -  உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள். தலைவன் வீதியில் உலா வர ஏழு வகை பருவப் பெண்களும் அவன் மீது காதல் கொள்வதாகப் புனைந்து பாடுவது உலாவாகும்.
94. அந்தாதி விளக்குக? - ஓவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ, சீரோ, அடியோ அதற்கடுத்து வரும் பாடலின் முதலாய் வரும்படி அமைத்துப்பாடுவது அந்தாதி எனப்படும்.
95. கலம்பகம் - பெயர்க்காரணம்: கலம்பகம் =  கலம் + பகம் எனப் பிரிக்கலாம். கலம் - பன்னிரண்டு பகம் - பாதி ஆறு ஆக 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவதால் கலம்பகம் எனப்பெயர் பெற்றது.
96. முக்கூடலில் கூடும் ஆறுகள்: தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு.
99. துன்பம் எவ்வாறு சிதறிப்போகும்? - தந்தை பெரியார் போல அளவாய், தகுதிக்கேற்ப ஒவ்வொரு நாளும் செலவு செய்து வாழ்ந்தால், பாறாங்கல் மீது விழுந்த மழைநீர் உடனே சிதறிவிடுவது போலத் துன்பம் பறந்தோடும்.
100. தேவார மூவர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
101. சுந்தரர் தம்பிரான் தோழர் என அழைக்கப்படக் காரணம் - சிவன், சுந்தரரைத் தம் தோழராய்க் கொண்டமையால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கபபட்டார்.
102. எச்.ஏ கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள் - இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள், இரட்சணிய சமயநிர்ணயம்,போற்றித் திருவகவல் ஆகியன.
103. பாவேந்தர் நூல்களுள் நான்கின் பெயர்: குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, பிசிராந்தையார் நாடகம்.
104. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்: செந்ந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், சதுரகராதி, பரமார்த்த குரு கதை, வேதியர் ஒழுக்கம், கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம்.

சனி, 29 அக்டோபர், 2016

மாத சம்பளம் தயார்செய்யும் முறை  https://tnepayroll.blogspot.in/?m=1

தமிழகத்தில் சுற்றுலா 'கைடு' தகுதி அடிப்படையில் தேர்வு

தகுதியும், திறமையும் உள்ள சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் உரிமம் வழங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா கைடுகளுக்கான உரிமம் புதுப்பித்து கொடுப்பது வழக்கம்.
பல இடங்களில் இந்த கைடுகளின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை. இது தொடர்பாக வௌிநாட்டு பயணிகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்துள்ளனர். இதனை தொடந்து தகுதியும், திறமையும் உள்ள நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கினால் போதும் என அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இது தொடர்பாக நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. தென்மாவட்ட அளவில், 110 கைடுகள் பங்கேற்கும் நேர்காணல் நேற்று மதுரையில் நடந்தது.
இதில் அவர்களின் மொழி அறிவு மற்றும் சுற்றுலா தலங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமம் வழங்கப்படும்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ குறுந்தகடு தயார் !

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே ! ,
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் முழுவதும் காணொளி வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளன. பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி வரை அனைத்தும் [கணிதம் நீங்கலாக] ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் உள்ளன. இது மாணவர்களின் இனிமையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. ஆசிரியர்களின் பணியை பெருமளவு எளிதாக்குகிறது. வார்த்தைகளால் விளக்க முடியாத பல கருத்துகள் வீடியோ மூலம் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படித்தல் திறனில் மட்டும் கவனம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த DVD  தேவைப்படாது. மாறாக படித்தல் திறனுடன் பாடக் கருத்துகளையும் விளக்க நினைக்கும் ஆசிரியர்களுக்கு இது அரிய பொக்கிஷமாக இருக்கும்.
                        இக்குறுந்தகடு, திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி என்பவரால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பில் உருவானது.
இரண்டாம் பருவ DVD-யின் விலை ரூ.300. [முதல் பருவ DVDs  ரூ.400 , மூன்றாம் பருவ  DVDs ரூ.300 ]. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற குருமூர்த்தி ஆசிரியரின் எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். DVD Professional courier ல் அனுப்பிவைக்கப்படும்.
இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் !

பி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை

தீபாவளியை முன்னிட்டு, 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'டாக் டைம், இன்டர்நெட் டேட்டா' உடன் கூடிய புதிய சலுகையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம்அறிவித்துள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
'பிரீடம்' என்ற, இந்த புதிய சலுகையை பெறுவதற்கு, 135 ரூபாய் கொடுத்து முதலில், 'ரீசார்ஜ்' செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள், உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகள், தரைவழி தொலைபேசி ஆகியவற்றிற்கு,
நிமிடத்திற்கு, 25 காசு கட்டணத்தில் பேசலாம். இதில், மூன்று வகையாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது. முதலில், 577 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், முழு டாக் டைம், 30 நாள், 'வேலிடிட்டி' உடன் கூடிய ஒரு, 'ஜி.பி., இன்டர்நெட் டேட்டா' கிடைக்கும். இதுதவிர, 377 ரூபாய் மற்றும், 178 ரூபாய் ரீசார்ஜ் வசதிகளும் உள்ளன. அவற்றில், இன்டர்நெட் டேட்டா அளவு, 300 எம்.பி., மற்றும், 200 எம்.பி., ஆக இருக்கும். இந்த, பிரீடம் சலுகை, 730 நாட்கள் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி

தற்போது வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகள் இளைஞர்களை சீரழித்து வருகிறது என்று கூறி வந்தாலும், சிவகங்கையில் 'வாட்ஸ் ஆப்' குரூப்பால் அரசு பள்ளி வாழ்வு பெற்றுள்ளது.
சிவகங்கை அருகே மலம்பட்டி ஊராட்சி கன்னிமார்பட்டியில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1968ல் துவங்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளை நெருங்கும் இந்த பள்ளியில், கடந்த ஆண்டு 18 மாணவர்களே இருந்தனர். தேவையான வசதி இல்லாததே மாணவர்களின் குறைவுக்கு காரணம் என, தெரியவந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், அன்புச்செல்வன், முருகன் சேர்ந்து 'பயர்வே' என்ற 'வாட்ஸ்ஆப்' குரூப்பை துவக்கி 100 இளைஞர்களை ஒருங்கிணைத்தனர். இதன் மூலம் வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களும் தங்களால் முடிந்த நிதியை அளித்தனர். 3 லட்சம் ரூபாய் வரை சேர்ந்தது. அதன் மூலம் பள்ளி கட்டடத்தை சீரமைத்தனர். ஊஞ்சல், சறுக்கல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி கொடுத்தனர். அவர்களே வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தனர். ஆங்கில வழிக்கல்வியும் துவங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு தமிழ் வழியில் 25 மாணவர்கள், ஆங்கில வழியில் 30 மாணவர்கள் படிக்கின்றனர். அனைவருக்கும் சீருடை,டை,ஷூ,அடையாள அட்டை இலவசமாக கொடுத்தனர். பாடம் எடுப்பதற்கு கூடுதலாக இரு ஆசிரியர்களை நியமித்தனர். அவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுத்தனர்.அன்புச்செல்வன், முருகன் கூறியதாவது: வாரத்தில் ஒரு நாள் யோகா, புதன், வியாழன் சிலம்பாட்டம் சொல்லி கொடுக்க தனியாக ஆசிரியர்களை நியமித்துள்ளோம். அவர்களுக்கு மாதம் 4 ஆயிரம் செலவழிக்கிறோம். மேலும் ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு வழங்கப் படுகிறது.
மற்ற மாணவர்களுக்கு நாங்களே உணவு வழங்குகிறோம். பள்ளி விழாக்களுக்காக தனியாக நிதி ஒதுக்கியுள்ளோம். ஏற்கனவே உள்ள பழைய கட்டடத்தையும் புதுப்பிக்க உள்ளோம்.
இதன் மூலம் எங்கள் ஊர் சிறுவர்கள் வெளியூர் சென்று படிப்பது குறையும், என்றனர்.

அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு வாரம்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும், 31ம் தேதி முதல், நவ., 5 வரை, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றுபட்டு, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, அரசுக்கு பெருமை சேர்ப்பதுடன், மக்களுக்கு சேவைகள் புரிவோம். எவ்வித அச்சமும், தயவுமின்றி, மனசாட்சி காட்டும் நெறியின்படி, கடமையை ஆற்றுவோம் என, அரசு ஊழியர்கள், உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம் வருவோரிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளம்பரப் பலகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தேர்வுத்துறையின், http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என,தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்.
இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு
தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு : களம் இறங்கிய பள்ளி மாணவர்கள்

மரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில் தேனி பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் மண்டலத்தில் ஓட்டையால் பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் என பல வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இயற்கையை அழிக்கும் நிகழ்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் தேனி அருகே பள்ளி மாணவர்கள் பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வளர்க்க புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சின்னமனுார் அருகே காமாட்சிபுரம் இந்து நாடார் தொடக்க பள்ளி வளாகத்தில் வேப்பமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல், மே, ஜூனில் மரங்களில் இருந்து விழுந்த வேப்பம் பழத்தை சேகரித்து விற்று பள்ளிக்கு பொருட்கள் வாங்கினர்.
புதிய முயற்சி : பள்ளி ஆசிரியை கனிமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பள்ளி வளாகத்தில் விழும் வேப்பம் பழங்களை மாணவர்கள் மூலம் சேகரித்து உலர வைத்து, விதைப்பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இத் திட்டத்தினை ஜனவரி முதல் செயல்படுத்தினார்.
தயாரிப்பு முறை : விதைப்பந்து தயாரிப்பில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நிவேதா, காயத்திரி, தேர்கரசன், கோபிநாத், வெங்கடேஷ் ஈடு பட்டனர். இவர்கள் முளைப்பு திறனுக்கு ஏற்ற மண், உலர்ந்த எரு குப்பை, நீர் சேர்த்து பிசைந்து உருண்டையாக்கி அதனுள் உலர்ந்த வேப்ப விதைகள் வைத்து பந்து வடிவமாக மாற்றினர். ஒவ்வொரு உருண்டையிலும் 6 முதல் 8 வேப்ப விதைகள் இருக்கும். இதனை மைதானத்தில் சில நாட்கள் உலர வைத்து விதைப்பந்து தயார் செய்தனர்.
விதை வினியோகம் : இந்த விதைப்பந்துகளை காகித பைகளில் வைத்து மாணவர்களிடம் கொடுத்தனர். இப்பையினை அவ்வழியாக கார், பைக், டிராக்டரில் செல்வோரிடம் மாணவர்கள் கொடுக்கின்றனர். 
அப்போது மாணவர்கள், “அதிக மரம் வெட்டியதால் வெப்பம் அதிகரித்துள்ளது. பூமியை பசுமையாக்குவது நம் கடமை. எனவே, இந்த விதைப்பந்தினை நீங்கள் போகும் வழியில் நீர் ஆதாரமான கண்மாய் கரை, ஓடைகள், ஆற்றோரங்களில் வீசி எறியுங்கள். ஈரப்பதமானசூழ்நிலையில் பந்தில் உள்ள விதை முளைத்துவிடும். அங்கு மரக்கன்று வளர்ந்து மரமாகிவிடும்,” என, வேண்டுகோள் வைக்கின்றனர். இதனை தட்டாமல் பலரும் வாங்கி செல்கின்றனர். அதனை பல இடங்களில் வீசிச்செல்கின்றனர். இப்படி வீசி சென்ற விதைகள் ஒரு சில இடங்களில் முளைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பசுமை ஆக்குவோம் : தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி, ஆசிரியை கனிமதி கூறுகையில், “இந்த ஆண்டில் 200 வேப்ப விதைப்பந்து கொடுத்துள்ளோம். சில இடங்களில் முளைத்துள்ளதை கணக்கெடுக்க உள்ளோம். வரும் ஆண்டில் ஒரே வகையான விதை இன்றி பலவகை விதைகளை சேர்த்து விதைப் பந்து தயாரிக்க பயிற்சி அளிக்க உள்ளோம். கிராமத்தை சுற்றி மரங்கள் வளர்த்து பசுமையாக்குவதே நோக்கம்,” என்றனர்

HAPPY DIWALI


வெள்ளி, 28 அக்டோபர், 2016

தேசிய ஒற்றுமை நாள் :- 31.10.16 கொண்டாடுதல் - உறுதிமொழி!

தமிழ்நாடு பல்கலை சிண்டிகேட் எப்போது? : 6 மாதங்களாக மாணவர்கள் காத்திருப்பு.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஆறு மாதங்களாக முடங்கியுள்ள, சிண்டிகேட் குழு கூட்டம், எப்போது கூடும் என, மாணவர்களும், பேராசிரியர்களும் எதிர்பார்த்து உள்ளனர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், துணைவேந்தர், உயர்கல்வி செயலர், பதிவாளர் உட்பட, 13 பேர், சிண்டிகேட் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும், சிண்டிகேட் கூட்டம் நடக்க வேண்டும்; தவறினால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.அடுத்த கூட்டம் : ஏப்., 1ல், இக்கூட்டம் நடந்தது. ஆறு மாதங்களாகியும், அடுத்த கூட்டம் நடத்தப்படவில்லை. சிண்டிகேட் முடிவுகளுக்காக, பேராசிரியர்கள், மாணவர்கள் காத்திருக்கின்றனர். இது குறித்து, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அரசு பல்கலைகளின் பதிவாளர் களுக்கு, 58 வயதுடன் பணிக்காலம் முடிந்து விடும். ஆனால், தமிழ்நாடு பல்கலையில் மட்டும், 60 வயது வரை, பதிவாளருக்கு வயது வரம்பு உள்ளது.
 இந்த விதி, தமிழ்நாடு நிர்வாக பணியாளர் சட்டத்திற்கு மாறாக உள்ளதால், பதிவாளர் வயதை, 58 ஆக குறைத்து, விதிகள் மாற்றப்பட உள்ளன. இதற்கான முன்வடிவு, பல்கலையின் வேந்தரான, தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும், கவர்னரின் ஒப்புதலை பெற, பல்கலை நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.புகார் : அதனால், பழைய விதிப்படி, 58 வயதை தாண்டியும், பதிவாளர் விஜயன் பதவியில் தொடர்கிறார். சில பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், பல்கலையில் இருந்து திடீர் பணி நீக்கப்பட்டதாக புகார் உள்ளது. இது குறித்து, சிண்டிகேட் கூட்டத் தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முன், விவாதிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்டு உள்ளனர். எனவே, பிரச்னையை சமாளிக்க, சிண்டிகேட் கூட்டத்தை நடத்தாமல், பல்கலை நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.