>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 28 நவம்பர், 2018

 *NMMS 2018 - Best Study Materials  & Previous Year Question Papers & Answer Keys Download*



✅ *NMMS Exam 2018 - How to prepare - Tips?*
https://goo.gl/U1eT4F


✅ *NMMS Exam 2018 - _OMR_ Sheet (Sample)*
https://goo.gl/U1eT4F


✅ *NMMS Exam 2018 - Study Materials*
https://goo.gl/U1eT4F


✅ *NMMS Exam 2018 - Previous 6 Year Question Papers & Key Answers*
- 2017 Question & Answer
- 2016 Question & Answer
- 2014 Question & Answer
- 2013 Question & Answer
- 2012 Question & Answer

https://goo.gl/U1eT4F


 📲 *Android App for NMMS Scholarship Exams*
https://goo.gl/QwNEgZ


டிச 4-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்... போராட்டம் அவசியமா? பொறுப்பற்றச் செயலா?" SUNNEWS VIDEO

Tuesday, 28 November 2018

செவ்வாய், 27 நவம்பர், 2018

கஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018




திங்கள், 26 நவம்பர், 2018

NMMS - Online Model Test 1 to 5





NMMS - Online Model Test 1 - Mr Nagendran - Click here

NMMS - Online Model Test 2 - Mr Nagendran - Click here

NMMS - Online Model Test 3 - Mr Nagendran - Click here

NMMS - Online Model Test 4 - Mr Nagendran - Click here

NMMS - Online Model Test 5 - Mr Nagendran - Click here

................................................................................................................................................

கஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.

திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் மற்றும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஊராட்சி செயலாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21-மாத நிலுவைத் தொகையை உடனே வழங்குதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 26-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த பிரசாரம் மேற்கொள்ளவும், 30-ஆம் தேதி தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்குள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 4-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அறிவியல் விழிப்புணர்வு தேர்வை முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்


முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஸ்மார்ட் போனில், அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான்
பிரசார நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை இணைந்து, தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வை நடத்தி வருகின்றன. நேற்று நாடு முழுவதும் இந்த தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கஞ்சனுார் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், அந்த பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
அதே பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும், 25 மாணவர்கள் முதன் முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதினர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மாவட்டத்திலேயே கஞ்சனுார் அரசுப்பள்ளி மாணவர்கள், முதன்முறையாக ஸ்மார்ட் போன் மூலம் தேர்வெழுதி உள்ளனர். இதில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் பரிசு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.18



திருக்குறள்


அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்

திருக்குறள்:104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம்:

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

பழமொழி

Lamb at home and a lion at the cage

பார்த்தால் பசு ‌பாய்ந்தால் புலி

இரண்டொழுக்க பண்பாடு

1.பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்
2.  தினமும் ஒரு முறையாவது என்னாலான உதவியை செய்வேன்

 பொன்மொழி

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

  அன்னைத்தெரசா

பொதுஅறிவு

1.சித்தூர்கார்  கோட்டை எங்குள்ளது?

ராஜஸ்தான்

2. குவாலியர் கோட்டை எங்கு உள்ளது?

மத்திய பிரதேசம்


தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

முள்ளங்கி



1.  முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும். கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை முள்ளங்கி தடுக்கும்.

2. முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்கள் பிரச்னையில் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி முழு நிவாரணம் தரும். முள்ளங்கியை நன்றாக வேக  வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.

English words and meaning

Javelin.      ஈட்டி
Jester.       விகடன் Jury.   பஞ்சாயத்துகுழு
Jot.         சிறு அளவு
Jovial.       மகிழ்ச்சியான

அறிவியல் விந்தைகள்

சில புரட்சிகள் அறிவோம்
1. முட்டை உற்பத்தி அதிகரிப்பு - வெள்ளி புரட்சி
2. பால் உற்பத்தி அதிகரிப்பு - வெண்மை புரட்சி
3. வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு - பசுமை புரட்சி
4. கடல் சார் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு - நீல புரட்சி
5. பழங்கள் மற்றும் தேன் உற்பத்தி அதிகரிப்பு - தங்கப் புரட்சி

நீதிக்கதை

நீ எந்தக் காகம்?

பலராம் பிழைப்பதற்கு வழியின்றித் தவித்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை....ஒரு நாள் அறிவுமதி என்ற அறிஞரைச் சந்தித்தான். அவரிடம் தன் கஷ்டங்கைச் சொன்னான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் அறிவுமதி. அவர் பலராமிடம், ""இந்த பூமி பரந்து விரிந்து கிடக்கிறது....இந்த ஊரில் உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வெளியூர் சென்று வேலை தேடு...உன் முயற்சிக்கு ஏற்ப இறைவன் கூலி தருவான்...''

பலராமும் சம்மதித்துப் புறப்பட்ட மூன்றாம் நாள் ஊருக்குத் திரும்பினான்.

ஊருக்குத் திரும்பியவன், அறிவுமதியைச் சந்தித்தான்.

அவரிடம், ""தங்கள் அறிவுரைப்படி நான் கிளம்பிவிட்டேன்.....வழியில் பாலைவனம்!....ஒரே ஒரு மரம் மட்டும் தென்பட்டது....கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் அந்த மர நிழலில் அமர்ந்தேன்....அந்த மரத்தில் சிறகொடிந்த ஒரு நொண்டிக்காகம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது...அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம், தான் கொண்டு வந்த உணவை இந்த நொண்டிக் காக்கைக்கு ஊட்டி விட்டுச் சென்றது! எங்கோ பாலைவனத்தில் பசியால் கிடந்து துடிக்கும் ஒரு நொண்டிக்காக்கைக்கு மற்றொரு காகத்தின் மூலம் உணவை அளிக்கும் இறைவன், என்னை மட்டும் கை விட்டு விடுவானா....என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது!....திரும்பி வந்து விட்டேன்!...'' என்றான்.

அறிவுமதி சிரித்துக் கொண்டே, ""அது சரி!....நீ அதில் எந்தக் காகம்?'' என்று கேட்டார்.

""ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

""யாராவது உணவு தருவார்களா,....என்று பரிதவிக்கும் நொண்டிக் காகமா?....அல்லது .....பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு பிறருக்கும் வழங்கும் வலிமை உள்ள காகமா?...நீ எந்தக் காகமாக இருக்கு விரும்புகிறாய்?''
இப்போது நம்பிக்கையோடு உற்சாகமும் பலராமுக்கு ஏற்பட்டு விட்டது.

தற்போது அவன் வறுமை நீங்கி சந்தோஷமாக இருக்கிறான்!
✨✨✨✨


இன்றைய செய்திகள்

26.11.18

* கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

* சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அளவில், பயன்படுத்தாத நீரை தேக்கி வைக்கும் வகையில், மூன்று அணைகள் கட்டும் பணிகளை விரைவில் மேற்கொள்ள, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

* நிப்பான் பெயின்ட் நிறுவனம் பார்மால்டிஹைட் நச்சுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘கிட்ஸ் பெயின்ட்’ வகையை நேற்று சென்னையில் அறிமுகம் செய்தது

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

* டி20 பெண்கள் உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Today's Headlines

* The Tamil Nadu Health Division has issued a warrant against the tariff in the four state government hospitals in Tanjore, Nagapattinam, Thiruvarur and Pudukottai on December 15.

* The central government is seriously inclined to take up all three dams construction tasks to ensure the use of irrigation water in the Indus River Water Distribution Agreement.

* Nippon Paint Company introduced 'Kids' Paint' in Chennai yesterday to protect children from formaldehyde poisons

* In the 3rd T20 match against Australia, India won by 6 wickets and leveled the series 1-1.

* T-20 Women's World Cup Australian won the Women's Championship title for the 4th time

ஞாயிறு, 25 நவம்பர், 2018

NMMS Study Material Collection 2018 -19

NMMS Study Material Collection 

......................................................................................................................................................................................................................

6th,7th,8th & 9th std Lesson Plan Collection

 6th,7th,8th std Lesson Plan Collection

NOV 5th Week

NOV 4th Week



NOV 3rd Week





NOV 2nd Week


NOV 1st Week



    OCT 4th week


    Oct 3rd week

    OCT 2nd week


    OCT 1st week

    தொப்பையை குறைக்க கூடிய முன்னோர்களின் முறைகள்..!


    இப்போதெல்லாம் உடல் எடை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். உணவு கட்டுபாடின்றியும், தேவையற்ற அன்றாட பழக்கத்தாலும், ஆரோக்கியமற்ற சூழலாலும் இந்த நிலை அதிகமாகி கொண்டே செல்கிறது. இதன் விளைவாக தொப்பை என்கிற விரும்பாத பரிசு தான் நமக்கு கிடைக்கிறது.

    ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்க கூடிய முன்னோர்களின் முறைகள்..!
    இதனை சரி செய்ய ஏராளமான வழிகள் இருந்தாலும் நமது முன்னோர்களின் முறை சற்றே ஆற்றல் மிக்கது. எப்படியெல்லாம் நம் முன்னோர்கள் உடலை கச்சிதமான அமைப்புடன் வைத்து கொண்டார்கள் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

    ஆற்றல் மிக்க முறைகள்
    முன்னோர்கள் கடைபிடித்த ஒவ்வொரு முறைகளுக்கும் பல வித அர்த்தங்கள் இருந்ததாம். எல்லா வகையான முறைகளும் இயற்கையுடன் பின்னி பிணைந்துள்ளது என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் எடை பிரச்சினைக்கு மட்டுமன்றி பல வகையான பிரச்சினைகளுக்கும் இவர்களின் முறைகள் நன்கு உதவியது.

    புஜங்காசனம்

    பாம்பு படமெடுப்பது போன்ற தோற்றத்தை இந்த பயிற்சி முறை தரவல்லது. உடலின் தசைகளை இலகுவாக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொண்டு, தொப்பையை விரைவில் குறைக்க செய்யும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து எந்த வித பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமான உடல் நலத்தை தரும்.

    பயிற்சி முறை...

    முதலில் குப்புற படுத்து கொண்டு, இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொள்ளவும். பிறகு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை மெல்ல இழுத்து விடவும். அதன் பின், இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியால் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து எளிதில் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்.

    உஸ்ட்ராசனம்

    தொப்பையை குறைப்பதில் உஸ்ட்ராசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனம் உடலின் முழு நிலையையும் சீராக வைத்து, அதிக நலனை தருகிறது. இந்த பயிற்சியை தினமும் செய்து வருவதால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறைந்து, மிக சீக்கிரமாகவே தொப்பை குறையும்.

    ஆசன முறை...
    முதலில் கால்கள் உள்ளே மடங்குவது போன்று முழங்காலில் உட்கார்ந்து கொண்டு, மெதுவாக உடலை எழ செய்து பின்னங்கால்களை கைகளால் பிடித்து கொள்ளுங்கள். இந்த நிலையில் உடலை நன்றாக வலைத்து இருக்க வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை நன்கு இழுத்து வெளியே விடவும். இதனை தொடர்ந்து செய்யவும்.

    கும்பகாசனம்
    தொப்பையை குறைப்பதில் இந்த முறை முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது. கிட்டத்தட்ட "புஸ் அப்ஸ்" போன்ற நிலையில் தான் இதை நீங்கள் செய்ய வேண்டும்.

    பயிற்சி முறை

    குப்புற படுத்து கொண்டு தோல் பட்டையை மேலே தூக்கி நிறுத்து கொள்ளவும். அடுத்து கைகளை தோல் பட்டைக்கு நேராக நிறுத்தவும். இந்த நிலையில் கால்கள் பாதி முட்டி போடுவது போன்று இருக்கவும். அடுத்து உங்களின் உடலை மெல்ல மேலே எழும்ப செய்யவும். இந்த நிலையில் 10 நொடிகளுக்கு மேல் இருக்கலாம். பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.


    தனுராசனம்

    தனுராசனம் செய்வதால் உடலின் முழு செயல்படும் சீராக நடைபெறும். தொப்பையை முழுக்க குறைக்க இந்த தனுராசனம் பெரிதும் உதவும். தனு என்பதற்கு "வில்" என்ற அர்த்தம் உண்டு. ஆதலால், இந்த ஆசனத்தை செய்வதற்கு, வில்லை போன்று நம் உடலை வளைக்க வேண்டும்.

    பயிற்சி முறை...

    முதலில் குப்பற படுத்து கொண்டு, இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொள்ளவும். அடுத்து, மார்பு பகுதியை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உடலை வளைத்து தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையை விரைவில் குறைத்து விடலாம்.


    விருக்சாசனம்

    "விருக்ஷம்" என்பதற்கு மரம் என்று பொருள் உண்டு. மரத்தை போன்று நின்ற நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இந்த முறை வயிற்று தசைகளுக்கு அதிக வலிவை தந்து, தொப்பையற்ற வயிறாக மாற்றுகிறது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம்.


    ஆசன முறை...

    இந்த பயிற்சியை செய்ய, முதலில் இரு கால்களையும் சிறிது விரித்து வைத்து கொண்டு, வலது காலை மடக்கி, அதை மேலே உயர்த்தி அடிப்பாதத்தை இடது தொடையின் மேல் வைக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் நிலையாக நின்று கொள்ளவும்.பிறகு மெல்லமாக மூச்சை இழுத்து விடவும். அடுத்து கைகளை மேலே உயர்த்தி வணக்கம் சொல்வது போன்று வைத்து கொள்ள வேண்டும்.





    மேற்சொன்ன முன்னோர்களின் முறைப்படி எளிதில் உங்களின் தொப்பையை குறைத்து விடலாம் நண்பர்களே.

    அறிவியல்-அறிவோம்: அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்

    Thanks,
    (S.Harinarayanan, GHSS Thachampet
    Tiruvannamalai district )


    அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்
    (Unidentified Flying Objects -UFO)

    அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் UFO எனப்படுகின்றது. வானில் திடீரென தோன்றும் பறக்கும் பொருட்கள் தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு திடீரென தோன்றும் UFOக்கள் வேற்றுக்கிரகத்தில் வசிப்பவர்கள் பூமிக்கு வந்து செல்ல உபயோகிக்கும் பறக்கும் தட்டுகள் என்றே நம்பப்படுகின்றது.

    பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட அபூர்வமான பொருட்கள் ஆங்காங்கே காட்சியளிப்பதாக பன்னெடுங்காலங்களாக செய்திகள் பரவிவந்தாலும் 1947ம் ஆண்டுக்குப் பிறகுதான் இதைப்பற்றிய அதிகமான செய்திகள் உலகின் பார்வைக்கு வரத் துவங்கின.

    விண்ணில் பறக்கும் தட்டுக்கள் போன்ற விண்வெளி வாகனங்கள் அதிவேகமாக பறப்பதாகக் கூறப்படுகின்றது. அதில் வேற்றுகிரகவாசிகள் பயணிப்பதாகவும் சிலர் நம்புகின்றனர்.

    UFO தினம்:

     ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ம் தேதி உலக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தினம் 2001 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    1947 ஜூலை 2 ல் ரோஸ்வெல்லின் அடையாளம் தெரியாத பொருள் விபத்து நடந்ததின் நினைவாக இந்த தினம் அதிகாரப்பூர்வமாக உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது.

    வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

    இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின்  சிக்னல்களை கண்டறிந்து உள்ளனர்.

    வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
    இந்த ஆய்வுகள்
     குறித்து விசாரிக்க பல மில்லியன் டாலர் செலவிலான ரகசிய திட்டத்தை 'பென்டகன்' நடத்தி வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

    கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாம். இதுகுறித்து ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    விசித்திரமான அதிவேக விமானங்கள் பறப்பது மற்றும் விண்ணில் சில பொருட்கள் நகர்வதை இத்திட்டத்தின் ஆவணங்கள் விவரிப்பதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள், இது மாதிரியான விவரிக்க முடியாத சில சம்பவங்கள், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என கூறுகின்றனர்.

    இந்த ஆய்வை முன் நின்று நடத்தியுள்ள ஓய்வுபெற்ற ஜனநாயக கட்சி செனட்டர் ஹேரி ரீட், "நான் இத்திட்டத்தை நடத்தியதற்கு சங்கடமோ அல்லது வெட்கமோ படவில்லை. இதற்கு முன் யாரும் செய்யாததை நான் செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    முன்னதாக இந்த ஆண்டில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, லட்சக்கணக்கான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டது. விண்ணில், அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் பறக்கும் வட்டத்தட்டுகளை கண்டது குறித்த ஆவணங்களும் இதில் அடங்கும்.

    விரைவு ரேடியோ வெடிப்புகள் (Fast radio bursts) முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞையை பதிவு செய்தது.ராயல் வானியல் கழகத்தின் மாதாந்திர அறிக்கையில் 4 புதிய சமிக்ஞைகள் ஆராய்ச்சிக்காக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன என கூறபட்டு உள்ளது.

    இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நிகல் வாட்சன் கூறும் போது

    விண்வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு அபூர்வமான சமிக்ஞைகளும் எங்களுக்கு ஒரு வேற்று கிரக நாகரீகம் இருக்கும் என ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த சமிக்ஞைகளை கேட்கும் போது இந்த பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனியா இல்லை என எண்ண தோன்றுகிறது.
    .......
    ..................................................................................................................................................................................

    இன்ஸ்பயர்' விருதுக்கு 340 மாணவர்கள் தேர்வு

    இன்ஸ்பயர்' விருதுக்கான போட்டியில் பங்கேற்க,செயல்திட்டங்கள் அனுப்பியவர்களில், 340 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில்,'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்கும் மாணவர்கள் செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்யும் பட்சத்தில், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, ஆக., வரை அவகாசம் வழங்கப்பட்டது.பள்ளி வாரியாக சிறந்த, மூன்று படைப்புகள் மட்டுமே, இணையதள முகவரியில் (www.inspireawards-dst.gov.in) பதிவேற்றப்பட்டன. இதில், 300 மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுக்க, 3 ஆயிரத்து 275 பேர், விருதுக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு, டிச., முதல் வாரத்தில் கண்காட்சி நடத்தப்படும். இதுசார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

    NMMS - Online Model Test -NMMS Exam - Study Materials


    NMMS - Online Model Test -NMMS Exam - Study Materials

    Click here And Download

    ஞாயிறு, 18 நவம்பர், 2018

    5th Standard - November 4th Week Notes of Lesson for Teachers ( 19.11.2018 - 23.11.2018 )

    Sunday, November 18, 2018


    ................................