>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
பொது அறிவுச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது அறிவுச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க செயல்முறைகள்...

 *🔴அரசு துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க*



▪️ *முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQ2ltD


▪️ *அரசு கேபிள் டிவி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJb0PC


▪️ *பதிவுத் துறை சார்ந்த புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vwtR5N


▪️ *மின்சாரம்  தடையா வாட்ஸ் அப் மூலம் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wFyM68


▪️ *கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3zw971n


▪️ *வங்கிஅதிகாரிகள் மீதும் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3wvrbqu


▪️ *மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3cQAUjl


▪️ *வாட்ஸப் மூலம் உங்கள் பி.எப். புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vzg6nd


*▪️லஞ்ச ஒழிப்புக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3qa9p9V


▪️ *இணையதள குற்றங்களுக்கு புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3gJbcyk


▪️ *உணவு பாதுகாப்பு துறை புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/3vxLbrj


▪️ *ரேஷன் கடையில் உள்ள குறைகள் பற்றி புகார் அளிப்பது எப்படி*


https://bit.ly/2S9Y1hS



***************************************

மகாராஷ்டிராவில் இரும்பு வியாபாரி வீட்டில் அள்ள அள்ள பணம் ஜடி சோதனை- வீடியோ

 மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் வீடு, அலுவலகம், மற்றும் தொழிற்சாலையில் சுமார் 8 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்க நகைகள், ரூ.16 கோடி மதிப்புள்ள வைர மற்றும் முத்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை கணக்கிட அதிகாரிகளுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், சோதனை நடவடிக்கைக்காக மாநிலம் முழுவதும் இருந்து 260 அதிகாரிகளைக் கொண்ட ஐந்து குழுக்களை அமைத்து. இந்த நடவடிக்கையில் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு வியாபாரி வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள் மற்றும் சில பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததனர்.மேலும் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கட்டுகட்டாக மறைத்து வைத்த பணத்தை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/MohammedAkhef/status/1557586678243504128


******************************************************************************************************

சனி, 3 ஏப்ரல், 2021

வீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் ...

 வீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் ?





பொதுவாகவே ஒரு குடும்பத்தை, நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமை குடும்பத் தலைவிக்கு உள்ளது. அதாவது ஒரு வீட்டின் தலைமைப் பொறுப்பை எடுத்து நடத்தக்கூடிய அந்த பெண்ணாக பட்டவள், கட்டாயமாக புத்திக்கூர்மையோடும், தெளிவோடும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 




ஏனென்றால் அறிவாற்றலும், திறமையும் நிறைந்த ஒரு பெண்ணால் மட்டுமே குடும்பத்தை பக்குவமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி இருக்க, இத்தனை பொறுப்புகளை உடைய ஒரு பெண்ணின் புத்தி கூர்மையாக இருக்க வேண்டும் என்றாலும், அவள் வழிநடத்திச் செல்லும் குடும்பமானது எப்போதுமே தன தானியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றாலும், புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இந்த பரிகாரத்தை செய்யாத பெண்மணிகள் எல்லாம் புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் என்று சொல்ல வரவில்லை. புதன்கிழமை அன்று இந்த ஒரு விஷயத்தை செய்தால், அந்தப் பெண்ணின் புத்திக்கூர்மை மேலும் அதிகரிக்கும். அவருடைய அறிவாற்றல் மேலும் அதிகரிக்கும் என்பதை குறிப்பிடுவதற்காக இந்த பதிவு. நம்பிக்கையுள்ளவர்கள் இதை தொடர்ந்து 11 வாரங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் அளித்தால் வாழ்நாள் முழுவதும் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம்முடைய குடும்ப நன்மைக்குத் தானே!


புதன்கிழமை அன்று, பெண்கள் வெந்தய குளியலை எடுத்துக்கொள்வது, மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது செவ்வாய்க் கிழமை இரவே, சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு புதன்கிழமை, அந்த வெந்தயத்தை நன்றாக அரைத்து, காலை 6.00 மணியிலிருந்து 6.30 மணிக்குல், தலையில் தேய்த்து, தலைக்கு குளித்து விட வேண்டும். வெகுநேரம் தலையில் வெந்தயத்தை ஊற வைத்துவிட வேண்டாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்களுக்கு காய்ச்சல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி வாரந்தோறும் புதன்கிழமை அன்று வெந்தய குளியலை குளித்து வர, அந்தப் பெண்ணின் புத்தி கூர்மையையும் அதிகரிக்கும், அந்தப் பெண்மணி வசிக்கும் வீட்டின் தன தானிய திருக்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து புதன்கிழமை அன்று உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தால், மேலும் அதிக பலனை அடையலாம்.



அதாவது, வீட்டில் எதிர்பாராமல் ஏதாவது ஒரு பிரச்சனை என்று வந்தால், அதற்கான நல்ல முடிவினை எடுக்க வேண்டிய கடமை அந்த வீட்டின் குடும்பத் தலைவியான பெண்ணுக்குத்தான் உள்ளது. இப்படிப்பட்ட இந்தப் பெண், “எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்க வேண்டும். எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கக் கூடாது”. என்பதையும் தெளிவாக தீர்மானிக்க வேண்டும். தன் கணவர் தன் கையில் கொடுக்கும் வருமானத்தை வைத்து, சிக்கனம் பிடித்து, தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலோங்க செய்ய வேண்டும்?


இப்படி பல வகையான புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கும் இந்த வெந்தய குளியல் மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை நினைத்து, நெல்லிக்காயை தலைக்கு தேய்த்து குளித்தால் எவ்வளவு நல்லதோ, அதே போல் புதன்கிழமை வெந்தயக் குளியலிடேவது என்பது, ஒரு பெண்ணுக்கு மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும். திருமணம் ஆன பெண்கள் தான் வெந்தய குளியலிட வேண்டுமா? என்ற சந்தேகம் வேண்டாம். திருமணமாகாத பெண்களும் வெந்தய விழுதை தலையில் தேய்த்துக் குளிப்பதில் தவறில்லை.


..................................................................

வியாழன், 1 ஏப்ரல், 2021

SBI ல் ஈஸியான லோன் இதுதான் ... RS 20 இலட்சம் வரை கடன் ஒரு SMS போதும்..!!!!

 SBI bank Tamil News: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, அதன் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையில், எஸ்பிஐயின் வாடிக்கையாளர், ஒரு மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும், இந்த சேவையின் மொத்த விபரங்களும் கிடைத்து விடும்.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் பதிவில், 'கடன் குறைந்தபட்ச ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவை மூலம் கடன் பெற விரும்புவர்களுக்கு வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும்' என்று தெரிவித்துள்ளது. இது அனைத்து இந்திய வங்கிகளையும் விட மிகக் குறைவான ஒன்றாகும்.


இந்த சேவையில் எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர் ரூ .25,000 முதல் ரூ .20 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். கடன் பெரும் வாடிக்கையாளர், அவரது முதல் கடனில் ஈ.எம்.ஐ.களை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால், இந்த சேவை ரூ .5 லட்சம் முதல் ரூ .20 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் கடன் தொகையை வழங்குகிறது. ஒட்டுமொத்த கடன் ஈ.எம்.ஐ / என்.எம்.ஐ விகிதத்திற்கு 50 சதவீதத்திற்கு உட்பட்டு முதல் கடன் வழங்கப்பட்ட பின்னர், எந்த நேரத்திலும் இரண்டாவது கடன் தகுதி பெறுகிறது. சுவாரஸ்யமாக, இந்த எஸ்பிஐ தனிநபர் கடன் எந்த உத்தரவாதமும் அல்லது பாதுகாப்பும் இல்லாமல் வழங்கப்படும்.

எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சேவையைப் பற்றி ஒரு இணைப்பை வழங்கியுள்ளது. 'இது உங்கள் திருமணம் அல்லது விடுமுறை, திட்டமிடப்படாத அவசரநிலை அல்லது திட்டமிட்ட கொள்முதல், உங்கள் அனைத்து தேவைகளுக்கும் எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் மூலம் குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதல் மற்றும் உடனடி விநியோகத்தைப் பெறுங்கள், 'சேர்ப்பது,' எங்கள் தொடர்பு மையத்திலிருந்து திரும்ப அழைப்பைப் பெற 7208933142 என்ற எண்ணில் அல்லது 7208933145 இல் 'தனிப்பட்ட' என்று எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.' என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தனிநபர் கடனுக்கான தகுதிகள்

1] எஸ்பிஐ உடன் சம்பள கணக்கு கொண்ட நபராக இருக்க வேண்டும்.

2] குறைந்தபட்ச மாத வருமானம் மாதத்திற்கு ரூ .15000 மேல் இருக்க வேண்டும்.

3] EMI / NMI விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாக; மற்றும்

4] எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர் மத்திய / மாநில, மத்திய பொதுத்துறை நிறுவனம் மற்றும் லாபம் ஈட்டும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் வங்கியுடன் அல்லது இல்லாமல் தொடர்பில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.


..........................................................

ஞாயிறு, 28 மார்ச், 2021

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும்

 நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும்.....





நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.

சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது.அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.

இதற்கான வைத்திய முறைகள் சில,

ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும்.நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.


கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும்.தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கிய வாய்ப்பு உள்ளது.

..............................................................

ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்.!

 ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்.



ஞாபகமறதியை தீர்க்க சில எளிய வழிமுறைகள்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது ஞாபகசக்தி.இந்த ஞாபக சக்தியை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலம் கண்டிப்பாக அதிகரிக்க முடியும்.


ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரைக்கீரை முக்கிய பங்கு உண்டு.மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம்,துவையலாக சாப்பிடலாம்,ஜூஸாக சாப்பிடலாம். இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி வளரும். 
கேரட் சாறு,பால்,தேன் இவை மூன்றையும் சம அளவு எடுத்து குடித்து வந்தால் ஞாபக சக்தி நன்றாக வளரும்.
லவங்கப்பட்டை,சுக்கு இரண்டையும் பொடி செய்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து காலை,மாலை இரு வேளைகள் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையைப் இரவில் போட்டு வைத்து காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் மூளை பலம் பெருகும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு இருக்கிறது.இது நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும்,நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.எனவே தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும் இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு.அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.
வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மூளைக்கும் பலம் கூடும் குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். 
மாணவர்கள் நெல்லிக்காய் சாப்பிடும்பொழுது நினைவாற்றல் அதிகரிக்கும்.கண்பார்வை தெளிவாகும்,புத்திக்கூர்மையை ஏற்படுத்தும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பதில் வெண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்வதோடு நினைவாற்றலையும் அதிகப்படுத்தும்.

..................................................

செவ்வாய், 16 மார்ச், 2021

20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?

 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?






தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளை மாநில அரசு அளித்து வருகிறது. மானிய விலையில் பொருட்களைப் பெறுவதற்கும் ரேஷன் அட்டை அத்தியாவசியமானதாக இருக்கிறது. பொங்கல் தொகுப்பு பரிசுகளை வாங்குவதற்கு ரேஷன் அட்டைகளைத் தொலைத்திருந்தாலும், பதிவு செய்து வைத்திருக்கும் மொபைல் எண்ணைக் கொண்டு தொகுப்பு பரிசைப் பெறலாம் என்று அறிவித்திருந்த நிலையில், ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள் புது ரேஷன் கார்டு பெறுவது பெரிய சிக்கல் என்றே இது நாள் வரையில் நினைத்திருந்தார்கள்.

இப்படி புது ரேஷன் கார்டு பெறுவதற்கு தரகர்களிடம் சென்று பொதுமக்கள் அதிகளவில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.



இருபது ரூபாய் செலவில் நீங்கள் தொலைத்த ரேஷன் கார்டுக்கு பதிலாக டூப்ளிகேட் ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம்.



இந்த ரேஷன் அட்டைக்கான விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள், பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் அனைவருமே www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.



ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, இந்த இணையதளத்திற்குச் சென்று, ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு தயாரானது, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, உங்கள் புது ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

........................................

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?


LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?


கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது


மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.


ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை


ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்



 முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,


அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.


உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும், 


அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,
மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.

.........................................

ஞாயிறு, 8 மார்ச், 2020

நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய ஒரு ஆப்.!





மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் ஒன்றினை 2000ஆம் ஆண்டு வெளியிட்டது. கணினிகளில் இணையம் மூலம் இதனைப் பயன்படுத்தி ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்துகொள்ளும் வசதிஇது.

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷனில் தற்போது தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியிலிருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியின் மூலம் தற்போது தமிழ் உள்பட உலகின் 60 மொழிகளை மொழிபெயர்க்க முடியும் என்ற தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்ளிகேஷன் தற்போது ஆன்ட்ராய்டு மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை உலகின் பல்வேறு இடங்களில் வாழும் கோடிக்கணக்கானோர் பேசிவருகின்றனர். புதிய அப்டேட் மூலம் பயனர்கள் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் கொண்டு தமிழ் மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

ஸ்மார்ட்போனில் இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலையை மிகவும் எளிமையாக்குகிறது. இதுவரை நாம் ஒரு வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய கூகுள் டிரான்ஸ்லேட்டர் பயன்பாட்டை தான் அதிமாக பயன்படுத்தி இருக்கிறோம். மேலும் கூகுள் டிரான்ஸ்லேட்டர்-ல் பொதுவாக டெக்ஸ்ட் மட்டுமே வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது வந்துள்ள ஒரு ஆப் வசதியில் நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்ற முடியும். மேலும் வருங்காலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வரும் அவை கண்டிப்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்-என்ற ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து

இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ஆப் வசதியை பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்-ஆப் பயன்பாட்டில் உங்களுக்கு தகுந்த மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும், அதன்பின்பு மிக எளிமையாக நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய முடியும்.

Click Here Download


...........................................

வியாழன், 27 பிப்ரவரி, 2020

சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை


Thursday, February 27, 2020




சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது இந்தியாவின்i முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும். பள்ளி ஆசிரியை சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார். இதுவரை நான்கு பெண் படைப்பாளிகள் தான் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்கள். அதில் ஜெயஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி பாராட்டு இதனையடுத்து கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் இந்த மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருப்பது பெருமைக்குரியது. சாகித்ய அகாடமி விருது பெற உள்ள அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்


......................................

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

மாணவர்களுக்கு திருக்குறள் பற்றி சொல்ல சில செய்திகள்....



Friday, February 21, 2020


1. திருவள்ளுவர்  ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2.    திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்


3.    திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4.    திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6.    திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7.    திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8.    திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9.    திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10.    திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11.    திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12.    குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14.    நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15.    சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16.    திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.

18.    திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19.    திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20.    திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு

சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24.    திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25.    வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26.    வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28.    திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29.    திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30.    திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31.    திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32.    திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33.    திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34.    திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35.    திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36.    காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37.  திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39.  திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை

40.    திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41.    திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.



........................................

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி?




*#அழுக்கடைந்த #மற்றும் #கிழிந்த #ரூபாய் #நோட்டுக்களை #மாற்றுவது #எப்படி?*

*எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்*:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே அருகில் உள்ள வங்கிக்குச் சென்று உங்களுடைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.

*உங்களுடைய கட்டணங்களைச் செலுத்தலாம்* :

இது போன்ற ரூபாய் நோட்டுக்களை வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பலருக்குத் தெரியாது.

*வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்*

இது போன்ற பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். வங்கிகள் இந்த நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் அதே நோட்டுக்களை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

*பணமற்று மற்றும் சேமிப்பு வசதி இல்லாத வங்கிகளில் (non-chest banks) 30 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.*:

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி பணம் சேமிப்பு மற்றும் மாற்று வசதிகள் இல்லாத வங்கிகளில் (non-chest banks) கிழிந்த மற்றும் அழுக்கடைந்த நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றால், அவற்றை அந்த வங்கியில் டெபாசிட் செய்து ஒரு ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு 30 நாட்களுக்குள் ரசீதைக் காண்பித்துப் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

*மாற்றமுடியாத ரூபாய் நோட்டுக்கள்* :

சில சூழ்நிலைகளில் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்ற முடியாது. மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், சட்டப்படி பறிமுதல் செய்யக் கூடிய நோட்டுக்கள் ஆகியவற்றை வங்கிகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது.

*வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்*:

வேண்டுமென்றே வெட்டப்பட்டதாகவோ அல்லது சிதைக்கப்பட்டதாகவோ கருதப்பட்டால் அத்தகையை ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மாற்றித்தரவோ அல்லது டெபாசிட்டாக ஏற்கவோ மறுக்கலாம்.