>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
ATM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ATM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா?? உடனடியாக இரகசிய எண்ணை பெற... ›



ATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா?? உடனடியாக இரகசிய எண்ணை பெற... ›



செவ்வாய், 20 மார்ச், 2018

ரூபாய் 10ல் மாணவர்களுக்கு ஏ.டி .எம்.அட்டையுடன் SBI வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி...


பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை வழங்குதல் விழா


முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவக்கி எ .டி .எம்.அட்டையையும் ,வங்கி கணக்கு புத்தகமும் பெற்று கொடுத்து அசத்திய பள்ளி



ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதர,சகோதரிகளுக்கு வங்கி கணக்கு துவக்கி அசத்தல்


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை வழங்குதல் விழா நடைபெற்றது.

         
                           

                         விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் எ .டி .எம்.அட்டைகளை வழங்கி வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.மாணவர்கள் வெங்கட்ராமன்,ஐயப்பன்,ரஞ்சித்,காயத்ரி,சின்னம்மாள் ,சக்தி ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


                              முதல் வகுப்பு,   இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உட்பட பள்ளியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பெயரில்,அவர்கள் போட்டோ ஒட்டி குறைந்த பட்ச இருப்பு வெறும் 10 ரூபாயில் பாரத ஸ்டேட்   வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது .அவர்கள் அனைவருக்கும் எ .டி எம்.அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் போட்டோ ஒட்டி இளம் வயதில் வங்கி கணக்கு புத்தகத்தை பார்க்கும்போது அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.இதனால் சேமிப்பு பழக்கம் பெருகுவதுடன் அவர்களுக்கு வங்கி தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும்.பொதுவாக பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு ரூபாய்  2,000 ஆகும்.ஆனால்  பள்ளி மாணவர்களுக்கான ரூபாய் 10ல் இருப்பு உள்ள சிறப்பு திட்டத்தில் இதனை பள்ளியின் வழியாக முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.



பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை யை தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

மேலும் விரிவாக ;

                            தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை யை தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் வழங்கினார்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது ;

                                 எங்கள் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பாக தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் பத்து ரூபாயில் வங்கி கணக்கு துவக்கலாம் என்று சொன்னார்கள்.அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து ஆசிரியர்களின் உதவியுடன் வங்கிக்கு சென்று மாணவர்களுக்கு பள்ளியின் வழியாகவே கணக்கு துவக்க ஏற்பாடுகள் செய்தோம்.அதற்கு வங்கி மேலாளரும் எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்.அதன் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி உள்ளோம்.

                     
பொதுவாக முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நமது பெயரில் வங்கி கணக்கு நமது புகைப்படத்துடன் உள்ளதை பார்த்து மாணவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.கண்டிப்பாக இதன் வழியாக சேமிப்பு முயற்சி அதிகமாவதுடன் ,வங்கி தொடர்பாகவும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

 எட்டாம் வகுப்பு மாணவி சக்தி ; எனக்கு கணக்கு துவக்கியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி.எனது அக்காவிடம் நான் இதை சொன்னபோது , எனக்கெல்லாம் இதுவரை கணக்கு இல்லை.உனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது மிகப்பெரிய விஷயம்.அதுவும் பள்ளியின் வழியாகவே கணக்கு துவக்கி உள்ளது பாராட்டுக்கு உரியது என்று சொன்னார்கள்.

 முதல் வகுப்பு மாணவர் யோகேஸ்வரன்: எனக்கு எனது போட்டவுடன் வங்கி புக்கை பார்த்ததும் அவ்வளவு சந்தோசம்.நல்ல முறையில் சேமிப்பேன் என்று சொன்னார்.

 மூன்றாம் வகுப்பு திவ்யஸ்ரீ : வங்கி கணக்கு புத்தகத்தின் அட்டையில் டாக்டர்,என்ஜினீயர் ,வக்கீல் ,பெரிய நிறுவனத்தின் மேலாளர் போன்ற படங்கள் உள்ளன.அவை எனக்கு மிகவும் பிடித்து உள்ளன.எனது பெயரில் ஏ.டி .எம்.அட்டை உள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.என்று சொன்னார்.

 நான்காம் வகுப்பு வெங்கட்ராமன் : எனது பெயரில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது என்று சொன்னேன்.எனது அம்மா அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்.எனக்கெல்லாம் 30 வயதில் தான் வங்கி கணக்கு ஆர்மபிக்கப்பட்டது.உனக்கு நான்காவது படிக்கும்போதே வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது மிகுந்த சந்தோஷம் என்று சொன்னார்கள்.

 மூன்று குழந்தைகளுக்கு வங்கி கணக்கு புத்தகம் பெற்ற மாணவர்களின் தாயார்    அங்காள ஈஸ்வரி   :  எனக்கு மிகுந்த சந்தோசமாக உள்ளது.எனது மூன்று குழந்தைகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.மூன்று பேருக்கும் பள்ளியின் மூலம் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.பொதுவாக கணக்கு துவக்க வங்கிக்கு பலமுறை செல்ல வேண்டும்.ஆனால் இங்கு நாங்கள் அலையாமல் வங்கி கணக்கு குறைந்த இருப்பு தொகை  ரூபாய் 10ல் துவங்கப்பட்டுள்ளது.குறைந்த பட்சம் 2000 ரூபாய் இருந்தால் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவக்க முடியும்.ஆனால் வெறும் 10 ரூபாயில் வங்கி கணக்கு பள்ளியின் மூலமாக துவக்கப்பட்டுளத்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது.

திங்கள், 30 ஜனவரி, 2017

FLASH NEWS : 01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு - எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.


 
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது

சனி, 14 ஜனவரி, 2017

ஏ.டி.எம்.களுக்கு ரூ.9000 கோடி சப்ளை: பணத்தட்டுப்பாடு 2 வாரத்தில் நீங்கும்


ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பண புழக்கத்தில் 86 சதவீதம் இந்த நோட்டுகளே இருந்தன. இவ்வளவு நோட்டுகளையும் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவித்த அதே நேரத்தில், அதற்கு ஈடாக புதிய ரூ. 2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. 100 ரூபாய் நோட்டும் போதுமான அளவுக்கு புழக்கத்தில் இல்லை.
எனவே, பண தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஆரம்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏ.டி.எம்.களில் எடுக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது ரூ.4,500 ஆக உயர்த்தி உள்ளனர். ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் பல இடங்களில் ஏடி.எம்.களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட கியூவில் நிற்கும் நிலையே நிலவுகிறது.
ஆரம்பத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடி இருந்த நிலையில் இப்போது ஓரளவு ஏ.டி.எம்.கள் இயங்குகின்றன. எனவே, எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம் நிலைமை முற்றிலும் சீராகி விடும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் 2 லட்சத்து 24 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ரூபாய் நோட்டுகள் இல்லாததால் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஏ.டி.எம்.கள் மட்டுமே இயங்கி வந்தன.
தற்போது ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ஏ.டி.எம்.கள் இயங்கி வருகின்றன.
வழக்கமாக ஏ.டி.எம்.களுக்கு நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பப்படும். ஆனால், கடந்த 2 மாதமாக ஏ.டி.எம்.களுக்கு 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி வரை மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது. சமீப காலமாக பணம் அதிகமாக அனுப்பப்படுகிறது. தற்போது ரூ.9 ஆயிரம் கோடி வரை அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, பண தட்டுப்பாடு பெருமளவு நீங்கி விட்டது. பிப்ரவரி மாதத்தில் முற்றிலும் நிலைமை சீராகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.