>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SYLLABUS. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SYLLABUS. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

வெள்ளி, 20 டிசம்பர், 2019

All Classes New Syllabus Textbooks - Pdf Download



முதல் பருவத்திற்கு தேவையான அனைத்து புதிய பாடப்புத்தகங்களும் 1 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக வரிசையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது ... பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!



1st Standard

Term -1

1st Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

1st Std New Syllabus Text Books - Maths/EVS - T/M  - Download Here

1st Std New Syllabus Text Books - Maths/EVS - E/M  - Download Here


2nd Standard

Term -1

2nd Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

2nd Std New Syllabus Text Books - Maths/EVS - T/M  - Download Here

2nd Std New Syllabus Text Books - Maths/EVS - E/M  - Download Here



3rd Standard

Term -1

3rd Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

3rd Std New Syllabus Text Books - Maths/Science/Social - T/M  - Download Here

3rd Std New Syllabus Text Books - Maths/Science/Social - E/M  - Download Here

4th Standard

Term -1

4th Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

4th Std New Syllabus Text Books - Maths/Science/Social - T/M  - Download Here

4th Std New Syllabus Text Books - Maths/Science/Social - E/M  - Download Here


5th Standard

Term -1

5th Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

5th Std New Syllabus Text Books - Maths/Science/Social - T/M  - Download Here

5th Std New Syllabus Text Books - Maths/Science/Social - E/M  - Download Here



6th Standard

Term -1

6th Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

6th Std New Syllabus Text Books - Maths - T/M  - Download Here

6th Std New Syllabus Text Books - Maths - E/M  - Download Here

6th Std New Syllabus Text Books - Science/Social - T/M  - Download Here

6th Std New Syllabus Text Books - Science/Social - E/M  - Download Here


7th Standard

Term -1

7th Std New Syllabus Text Books - Tamil  - Download Here

7th Std New Syllabus Text Books - English  - Download Here

7th Std New Syllabus Text Books - Maths - T/M  - Download Here


7th Std New Syllabus Text Books - Maths - E/M  - Download Here

7th Std New Syllabus Text Books - Science/Social - T/M  - Download Here

7th Std New Syllabus Text Books - Science/Social - E/M  - Download Here

8th Standard

Term -1

8th Std New Syllabus Text Books - Tamil  - Download Here

8th Std New Syllabus Text Books - English  - Download Here

8th Std New Syllabus Text Books - Maths - T/M  - Download Here

8th Std New Syllabus Text Books - Maths - E/M  - Download Here

8th Std New Syllabus Text Books - Science/Social - T/M  - Download Here

8th Std New Syllabus Text Books - Science/Social - E/M  - Download Here


9th Standard

Term -1

9th Std New Syllabus Text Books - Tamil/English  - Download Here

9th Std New Syllabus Text Books - Maths - T/M  - Download Here

9th Std New Syllabus Text Books - Maths - E/M  - Download Here

9th Std New Syllabus Text Books - Science - T/M  - Download Here

9th Std New Syllabus Text Books - Science - E/M  - Download Here

9th Std New Syllabus Text Books - Social - T/M  - Download Here

9th Std New Syllabus Text Books - Social - E/M  - Download Here

10th Standard

Term -1

10th Std New Syllabus Text Books - Tamil  - Download Here

10th Std New Syllabus Text Books - English  - Download Here
.
10th Std New Syllabus Text Books - Maths - T/M  - Download Here

10th Std New Syllabus Text Books - Maths - E/M  - Download Here

10th Std New Syllabus Text Books - Science - T/M  - Download Here

10th Std New Syllabus Text Books - Science - E/M  - Download Here

10th Std New Syllabus Text Books - Social - T/M  - Download Here

10th Std New Syllabus Text Books - Social - E/M  - Download Here

.......................................................

செவ்வாய், 15 அக்டோபர், 2019

வியாழன், 3 அக்டோபர், 2019

TERM II.  I Std to V Std. All Classes Monthwise Syllabus - Termwise (New Syllabus From 2019)



Tuesday, 25 June 2019


Term - 2


1 TO 5 TERM 2 NEW SYLLABUS

CLICK HERE TO DOWNLOAD

Term - 1

Term 1 Syllabus - 1st Standard - T/M - Download Here
Term 1 Syllabus - 2nd Standard -T/M -  Download Here
Term 1 Syllabus - 3rd Standard - T/M -  Download Here
Term 1 Syllabus - 4th Standard - T/M -  Download Here
Term 1 Syllabus - 5th Standard - T/M -  Download Here


Term 1 Syllabus - 1st Standard - E/M - Download Here
Term 1 Syllabus - 2nd Standard -E/M -  Download Here
Term 1 Syllabus - 3rd Standard - E/M -  Download Here
Term 1 Syllabus - 4th Standard - E/M -  Download Here
Term 1 Syllabus - 5th Standard - E/M -  Download Here

Term 1 Syllabus - 6th Standard -  Download Here
Term 1 Syllabus - 7th Standard -  Download Here
Term 1 Syllabus - 8th Standard -  Download Here

Term 1 Period Wise Syllabus

Term 1 Period Wise Syllabus - 1 to 5th - Tamil - Download Here
Term 1 Period Wise Syllabus - 1 to 5th - English - Download Here
Term 1 Period Wise Syllabus - 1 to 5th - Maths - Download Here
Term 1 Period Wise Syllabus - 1 to 5th - Science - Download Here
Term 1 Period Wise Syllabus - 3 to 5th - Social - Download Here

Term 1 Period Wise Syllabus - 6 to 8th - Tamil - Download Here
Term 1 Period Wise Syllabus - 6 to 8th - English - Download Here
Term 1 Period Wise Syllabus - 6 to 8th - Maths - Download Here
Term 1 Period Wise Syllabus - 6 to 8th - Science - Download Here
Term 1 Period Wise Syllabus - 6 to 8th - Social - Download Here


10th Standard Syllabus - All Month Full Portion -  Download Here
11th Standard Syllabus - All Month Full Portion  -  Download Here
12th Standard Syllabus - All Month Full Portion  -  Download Here

11 & 12th Standard Month Wise Syllabus (2019 - 2020) -  Download Here



6th to 10th Std New book Weekly syllabus  -  Download Here



........................................

திங்கள், 1 ஜூலை, 2019

1 to 5 std Tamil &English Medium Syllabus

Syllabus
--------------------------------------------------------------------

Thanks by RAJESH SGT 
PUMS SENGADU
MOTTUR.(WALAJA WEST)

__________________

திங்கள், 30 ஏப்ரல், 2018

1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது......! தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் வெளியிடுகிறார். அதன்படி, 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடத் திட்டங்களும் கணினி மயமாக்கப்படும். அரசு பள்ளிகளில் பயிலும்...

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

"பாடத்திட்டத்தை வகுப்பதில் தலையீடு ஏதுமில்லை': கல்வியியல் ஆராய்ச்சி இயக்குநர் அறிவொளி

பாடத் திட்டத்தை வகுப்பதில் முதல் முறையாக எந்தவொரு தலையீடும் இல்லை என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்ககத்தின் இயக்குநர் க.அறிவொளி கூறினார்.

தமிழ்நாடு மாணவர்- பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் திட்ட உருவாக்கம் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் க.அறிவொளி பேசியது:-
தலையீடு ஏதுமில்லை: பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு புதிய தடத்தை தமிழக அரசு பதித்திருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் பாடத்திட்டம் உருவாக்கத்தில் முதல் முறையாக எந்தவொரு தலையீடும் இல்லை. மாறாக ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்கான பாதையை வகுப்பதற்கு ரூ.40 கோடி நிதியை தமிழ்நாடு எஸ்சிஇஆர்டி-க்கு வழங்கப்பட்டது. 
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் அடைவு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியது. அதில் 5-ஆம் வகுப்பு வரை எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால் அதற்குப் பிறகு குழந்தைகளின் அடைவுத்திறன் படிப்படியாகக் குறைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நடுநிலை, உயர்நிலை வகுப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் அவர்கள் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த கணினி வழி கற்பித்தல் (ஐசிடி) முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அது பாடமாகவும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு புத்தகத்திலும் ஐசிடி கார்னர் என்ற ஒரு பகுதியும் இருக்கும். அதேபோன்று, அனைத்து பாடநூல்களிலும் க்.யு.ஆர் குறியீடு முறை இருக்கும். அதை செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்து பாடங்கள் குறித்து இணையதள தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஒரு பாடத்துக்கு இரண்டு க்யு.ஆர்.குறியீடுகள் இருக்கும்.
மின் நூல்கள்: புதிய பாடத்திட்டத்தில் மின்நூலை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் வழக்கமான பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைக் காட்டிலும் கூடுதலான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். புதிய பாடத் திட்டத்தை வகுப்பறைகளில் மாணவர்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதற்கு ஒரு தரமான வழிகாட்டுதல் தேவை.
அதற்காக ஆசிரியர் வழிகாட்டு கையேட்டை தயாரித்துள்ளோம். அதில் ஒவ்வொரு பாடங்களையும் எப்படி நடத்துவது, எவ்வளவு நேரம் நடத்த வேண்டும்; பாடத்துக்கான குறிப்புகளை தயார் செய்யும் முறை, மதிப்பீடு செய்யும் முறை என பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் பாடங்கள் குறித்து உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தரவுகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத் திட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங்களை மாணவர்கள் இரண்டு முறை படித்தாலே புரியக் கூடிய அளவில் எளிதான நடையில் எழுதப்பட்டுள்ளது. கல்வியிலும், சமுதாயத்திலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்தப்பாடத்திட்டம் இருக்கும் என்றார்.
கற்றலில் குறைபாடு: அரசு புதிய முயற்சி 
கற்றலில் குறைபாடு பிரச்னைகளைக் களைவது தொடர்பாக, தமிழக அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவொளி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் பேசியது:-
கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிவதற்காக அதில் புகழ்பெற்ற மருத்துவர்களைக் கொண்டு 10 இடங்களில் வகுப்பறைகளில் மாதிரி சோதனைகளை நடத்தியுள்ளோம்.
மாணவர்களிடத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதும் அது குறித்த விவரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அது குறித்து இங்குள்ள கல்வியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் என்ன தீர்வு என்பதை ஆசிரியருக்குப் பரிந்துரைத்தனர்.
இதை மூன்று மாதமாக செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று கற்றலில் குறைபாடு பிரச்னையைக் கண்டறிவது எப்படி, அதை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்துக்கு அரசு பெரும் நிதியை வழங்கியுள்ளது என்றார் அறிவொளி.

சனி, 28 ஏப்ரல், 2018

இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்'..

புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு - வெள்ளையில் இருந்து, வண்ணமயமாக மாறியுள்ளது.
புத்தகங்களின் வடிவம் மாற்றப்பட்டதுடன், பாடம் தொடர்பான, இணையதள வீடியோ இணைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக அரசு, 13 ஆண்டு களுக்கு பின், பாடத் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட கமிட்டியினர், பாடத் திட்டம் மற்றும் பாட புத்தக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகமாகிறது.இதில், ஒன்று, ஆறு, ஒன்பது ஆகிய வகுப்புகளுக்கு, முதல் பருவத்துக்கான புத்தகம் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், வண்ணமயமான அட்டைகள், புகைப்படங்கள், சித்திரங்கள், பார்கோடு ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 வகுப்புக்கு மொழி பாட புத்தகங்களின் தயாரிப்பு, முழுமையாக முடிந்துள்ளன. மற்ற பாடங்களுக்கு, புத்தகம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது அமலிலுள்ள, பழைய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாட புத்தகம், சிறிய அளவில், அதிக பக்கங்களை கொண்டதாகவும், கருப்பு - வெள்ளையிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகத்தில், பிளஸ் 1 புத்தகம், மற்ற வகுப்புகளைப் போல், 'ஏ - 4' அளவிற்கு மாற்றப்பட்டு, வண்ணமயமாக மாறியுள்ளது.இவற்றில், ஒவ்வொரு பாடத்திலும், அதன் பார்முலாக்கள், சமன்பாடுகள் வரும் இடங்களில், அதற்கான உதாரணங்கள், படங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள், காட்சிகளையே, உதாரணமாக்கி, படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.மேலும், குறிப்பிட்ட பாட அம்சத்திற்கான, 'வீடியோ' செயல் விளக்கமும், அதற்கான இணையதள, யூ.ஆர்.எல்., இணைப்பும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்தி, மாணவர்கள், 'யூ டியூப்' அல்லது இணையதள பக்கங்கள் வழியாக, தெரிந்து கொள்ள முடியும்.

சனி, 14 ஏப்ரல், 2018

Quick response code (QR CODE GENERATOR) app intro and guide tutorial


தமிழக அரசின் புதிய பாடநூலில் இடம் பெற இருக்கும் 
QR CODE ஐ SCAN செய்ய தேவையான app மற்றும் அதனை பயன்படுத்தும்
 வழிமுறைகள் அடங்கிய 
வழிகாட்டும் வீடியோ TUTORIAL தமிழில்




Thanks Shanmugasundaram

திங்கள், 9 ஏப்ரல், 2018

அரசு பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த பாடங்கள் தமிழ் வீடியோ மூலம் கற்பிப்பு: ஓர் நம்பிக்கை ஒளி....

சான் பிரான்சிஸ்கோ: சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் பெருமளவு இல்லாததால் படிப்பறிவு வேகமாக பரவுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது தமிழகம் முழுதும் அரசு பள்ளிகள் பெருவாரியான கிராமங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எளிதாக ஆகிவிட்டது. ஆனால் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனை நகர் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கல்வி தரத்தின் வேறுபாடு தான்.

உலகத் தரம் வாய்ந்த கல்வி

உலகத் தரம் வாய்ந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுதும் உள்ளது. 2006ம் ஆண்டு சல்மான் கான் என்ற அமெரிக்கர் இணையதளம் மூலம் பல்வேறு கணிணி மென்பொருள் கொண்டு பாடங்களை உருவாக்கி தன்னுடைய உறவினர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவரது உறவினர்கள் அதை எளிதாக புரிந்து கொண்டு அதை தனது தோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டனர். பல பேர் அதை உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், சல்மான் கான் தரம் வாய்ந்த பாடங்களை உலகில் உள்ள அனைவருக்கும் சென்றடைய கான் அகாடமி என்ற அமைப்பை தொடங்கி அதை உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தார். கூகிள், AT&T போன்ற நிறுவனங்களும் பேரளவு நிதி உதவி செய்து அனைத்து பள்ளி பாடங்களையும் காணொளிகளாக ஆங்கிலத்தில் தயார் செய்ய உதவின. தற்போது அமெரிக்க SAT, GMAT தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி வீடியோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் , தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், படிக்கவும், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயார் செய்யவும் கான் அகாடமி வீடியோக்களை பார்ப்பது வழக்கம்.

வெற்றிவேல் அறக்கட்டளை

கான் அகாடமியின் வீடியோக்கள் மற்றும் இணையதளம் இந்தி மற்றும் வங்காள மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழில் இல்லாமல் இருந்தது. கான் அகாடமியில் உள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் முழுமையான வலைதளத்தை தமிழில் மொழி பெயர்க்கும் சீரிய பணியை வெற்றிவேல் அறக்கட்டளை எடுத்து செய்து வருகிறது. வெற்றிவேல் அறகட்டளையின் நோக்கம் பற்றி திரு சொக்கலிங்கம் கூறுகையில், கான் அகாடமி வீடியோக்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனைத்து தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாட திட்டங்களை எளிதில் விளங்கும் படி தமிழ் காணொளி மூலம் அளித்து, அவர்களை உலகத் தரம் வாய்ந்த அறிவு சார் பொருளாதாரத்தில் போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டும் என்பதே என்றார்.

இதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சில ஆயிரம் வீடியோக்களை முழுமையாக தமிழ் மொழியாக்கம் செய்வதும், வலை தளத்தில் இருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழ் மொழி மாற்றம் செய்வதும் மிகவும் கடினமான காரியம். இதற்கு பல்லாயிரம் மனித நேரங்களும் , பொருட்செலவும் ஆகும். இந்த சீரிய பணியை வெற்றிவேல் அறகட்டளை எடுத்து செயல்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குறியது.

தற்போது வெற்றிவேல் அறக்கட்டளை கான் அகாடமி பாடத் திட்டங்களை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்பு வாரியாக வரிசை படுத்தியுள்ளது. தற்போது IIT போன்ற தேர்வுக்கு தேவையான பயிற்சி கூட கான் அகாடமி வீடியோக்களில் வர தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை முழுமையாக முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சென்றால் தற்போது தமிழகத்தில் நகர் புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூட எட்டாகனியாக இருக்கும் IIT படிப்பு , கிராமப்புறத்தில் தமிழ் வழி படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் கான் அகாடமியின் பயன் தெரிய வந்துள்ளது. வெற்றிவேல் அறக்கட்டளை, சான் பிராசிஸ்கோ தமிழ் மன்றம் நிதி உதவியுடன் Team India அமைப்பின் உதவியுடன் கான் அகாடமி தமிழ் படுத்தபட்ட வீடியோக்களை தமிழகத்தில் உள்ள சுமார் 10 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மற்றும் டிவி கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கான் அகாடமி வீடியோ காட்டப்படுகிறது. அதனால் பயன் பெறும் மாணவர்கள், ஆசிரியர் துணை இல்லாமலேயே கடினமான பாடங்களை காணொளி மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது என்கின்றனர். இது அவர்களது கல்வி தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் உதவுவோம்

ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவ வழி செய்து உள்ளோம். கான் அகாடமியை தமிழ் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கவும், எதிர் காலத்தில் பல மாணவர்கள் தனது தாய் மொழி (தமிழ்) வழி கல்வி தொடர வழி வகுக்கவும் வாய்ப்பாக இருக்கும். இந்த பணியை முழுமையாக செய்து முடிக்க பல தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் இந்த சேவைக்கு செலவிட்டாலே மாபெரும் மாற்றத்தை நாம் கொண்டு வர முடியும். நீங்கள் தன்னார்வலாராக உதவ விரும்பினால் info@vetrivelfoundation.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் Corporate Social Responsibility மூலம் உதவ முன் வந்தாலும் வெற்றிவேல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.

பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி; ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி!!!

பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.


சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.

வண்ண படங்கள்:

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய பாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.

தேடல்:

தற்போது, மாணவர்களும் தெரிவிக்கும் வகையில், புதிய பாடப்புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே, 'பாக்ஸ்' ஆக, இத்தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை, கல்வியில் புகுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், பள்ளி மாணவர்களின் தேடலை விரிவாக்கும். இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சனி, 27 ஜனவரி, 2018

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்புபணி நடந்துவருகிறது.
வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம்,கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலகவளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார்.
பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.

வியாழன், 4 ஜனவரி, 2018

Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.

Some important points alternative (Pedagogy) methodology:
Tamil Nadu Govt will implement alternative method instead of ABL. This method is calling Pedagogy.
(Kuzhandai Neya Katral).
This method will implement 2 schools in each block level as a trial from January 2018.
Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.
1 to 3 std mingle (for Asst tr)
4 and 5 std mingle (for HM)
Alternative method will introduce.
Name Pedagogy.
ABL cards not implement.
Text book, students work book and Teacher Guide will issue.
Low level black board,  kambi pandal, self attendance, Grouping, health chakra and whether chart will continue.
Each period 90 minutes only.
Daily 3 subjects will teach.
Period 1
9.30 to 11 am
Period 2
11.10 to 12.40
Period 3
2.00 pm to 3.30
Extra curricular and co curricular activities:
1.30 to 2.00 pm
&
3.40 to 4.10 pm.
Six groups reduced.  Only 4 groups.
QR code has in the text book.
Teacher scan the QR code, then video lesson will play in the mobile or tablet.
Many activities in the text book.
Teacher can teach each class separately.
But should give activity or written work to other class students.
More activity for bright students and minimum activity for slow learners in the text book and work book.
Students materials should display on the kambi pandal.
15 periods to a week.
All periods and subjects same to all classes in the school. Time table will design by Education Department.
In future student will evaluate through online with the help of tablet.
4 std No ABL.
4 and 5 std SALM methodology will implement.
Cards maybe use as  TLM.

புதன், 29 நவம்பர், 2017

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்:

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அளித்த மனு
பெறுநர்:
த. உதயச்சந்திரன் அவர்கள்,
செயலாளர் (புதியப் பாடத்திட்டம்),
பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு,
பள்ளிக்கல்வி வளாகம், சென்னை- 06
திரு. உதயச்சந்திரன் அவர்களுக்கு,
பொருள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான புதியப் பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை மீதான பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்கள் - பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக கல்வியின் நோக்கம் என்பது படித்த பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமல்ல. ஆழ்ந்து சிந்திக்கவும், ஆராய்ந்து விமர்சிக்கவும் கூடிய மனிதர்களை உருவாக்குவது தான் கல்வியின் முதன்மை நோக்கமாகும். அத்தகைய கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி  தொடர்ந்து உழைத்து வருகிறது. கல்வி சுகமானதாகவும், சுமையற்றதாகவும், கற்றல் மற்றும் அதைச் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு, தொழிற்பயிற்சி ஆகியவற்றை ஓர் அங்கமாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பம்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு பாடத்திட்டம் வலிமையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இத்தகைய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த காலங்களில்  ‘‘காலத்திற்கேற்ற கல்வித் திட்டம்’’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கம் நடத்தி அரிய ஆலோசனைகளை வழங்கியது உள்ளிட்ட ஏராளமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புதியப் பாடத்திட்டத்திற்கான வரைவை தயாரித்து பொதுமக்கள் பார்வைக்காக தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
இப்பணியை சிறப்பாக மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கும், இப்பணியை ஒருங்கிணைத்த பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதியப் பாடத் திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்களையும், யோசனைகளையும் வல்லுனர் குழுவின் ஆய்வுக்காக தாக்கல் செய்கிறோம்....
மேனிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம்
தமிழ்
1. தமிழ் மொழிப் பாடத்திற்கான கலைத் திட்டம் மாணவர்களின் மொழி அறிவைப் பெருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  அறிவியலும், தமிழும் இணைந்த மொழிக் கலைச்சொற்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.  அத்துடன் பிறமொழி கலப்பின்றி பேச பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் பயன்பாடு சார்ந்து அவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயரை மாணவர்கள் சூட்டும் வகையில் சொற்பிறப்பியலின் (Etymology) அடிப்படைகள்  மாணவ, மாணவியருக்கு கற்றுத்தரப்பட வேண்டும். இதன்மூலம்  தமிழில் புதிய சொற்கள் பிறக்கும்.
2.  மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் விளம்பர வாசகங்கள் எழுதுதல், செய்தி சேகரித்து எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றல் விளைவுகளாக இல்லாமல் தேர்வு மதிப்பீடுகளாக அமைய வேண்டும். அத்துடன் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்.
3.  துணைப்பாடமாக அரசு நிர்வாகம் சார்ந்த நாடகங்கள் சேர்க்கப்படும் என்று வழிகாட்டப்பட்டிருக்கிறது.  மன்னர் காலத்து அரசு நிர்வாகங்களை விளக்குவது மட்டுமின்றி, நிகழ்கால அரசியல், அரசு நிர்வாகம், நல்ல நிர்வாகம் அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கற்பிக்கப்பட வேண்டும்.
4.  தமிழ் மொழிப்பாடத்தின் செய்யுள் மற்றும் உரைநடையில் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை வெறும் பாடமாக மட்டும் நடத்தாமல் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வசதியாக களச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
5.  தமிழ் சார்ந்த கணினிப் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும். துணைப் பாடங்களில் நன்னெறியை போற்றும் பாடங்களை சேர்க்க வேண்டும்.
6. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கூட தமிழை முதன்மை மொழிப் பாடமாக படிப்பது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் தமிழ் மொழிப் பாடம் கடினமாக இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்பதும், பிரெஞ்ச், சமஸ்கிருதம் போன்ற பாடங்கள் மிகவும் எளிமையாகவும், அதிக மதிப்பெண் பெறக் கூடியதாக இருப்பதும் தான். இந்த நிலையை மாற்றி பிற மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் தமிழை முதன்மை மொழிப்பாடமாக கற்கும் வகையில் தமிழ் பாடத்தையும், தேர்வையும் எளிமையாக்கி அதிக மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஆங்கிலம்
1.  வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவம், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு படிவம் உள்ளிட்ட படிவங்களை நிரப்பும் பயிற்சி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் தாமதமானது ஆகும். உயர்நிலை வகுப்புகளிலேயே இந்தப் பயிற்சியை வழங்க வேண்டும்.
2.  தமிழ்நாட்டு மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராததும், நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிப்பதில் உள்ள தயக்கமும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் தடையாக உள்ளது. இக்குறையை போக்க அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுவதைப் போன்று ஆங்கிலத்தை சரளமாக பேசுதல், நேர்காணலில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல் ஆகியவற்றை செய்முறைத் தேர்வாக (PracticalExamination) நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கு மாணவர்கள் தயாராவதால் அவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் அதிகரிக்கும்.
3.  உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில மொழி வார்த்தைகளை சரியாக பேசுவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதற்காக மொழி ஒலிப்பியலை (Phonetics) ஆங்கிலப் பாடத்தின் ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்.
4. ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில்  செய்தி வாசித்தல், குழு விவாதம், நேர்காணல் பயிற்சி, நிகழ்ச்சி வர்ணனை, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான உரை தயாரித்தல் ஆகியவை குறித்த பயிற்சி வழங்கப்படுவது மகிழ்ச்சி. இதை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.
5.  ஆங்கிலம் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பாடமாகவே உள்ளது.  இதை மாற்றி மாணவர்கள் ரசிக்கும் வகையிலான கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
6. சென்னையிலும், பிற மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் ஆங்கில மொழி கருத்தரங்குகளில்  மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். அத்தகைய கருத்தரங்குகளில் பங்கேற்றதன் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டது என்ன? என்பதை மதிப்பிட வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள்
1. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கலைத்திட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கலைத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு.
2. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் முற்றிலும் புதுமையாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறனை சோதிக்கும் வகையிலும் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திற்கு பின்னால் உள்ள வினாக்கள் பட்டியலில் இருந்து மட்டும் தான் தேர்வில் வினா எழுப்பப்படும் என்ற நிலையை மாற்றி, பாடத்தில் எந்த பகுதியிலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வினா எழுப்பப்பட்டாலும் அவற்றுக்கு மாணவர்கள் உடனடியாக பதிலளிக்கும் வகையில் பாடம் எழுதப்பட வேண்டும்; நடத்தப்பட வேண்டும்.
3. அறிவியல் பாடங்கள் மிகவும் ஆழமாகவும், நிகழ்காலத் தேவைகளுடன் தொடர்புப் படுத்தியும் பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். உதாரணமாக ‘இராமன் விளைவு’ என்பது மிகவும் சாதாரணமாக சொல்லித் தரப்படுகிறது. அதன் சிறப்புகள் விளக்கப்படுவதில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இராமன் விளைவு எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து விரிவாக விளக்கப்படுவதுடன், நிகழ்காலத்  தேவைகளுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதும் கற்றுத் தரப்படுகிறது. அதன் மூலம் இராமன் விளைவு குறித்த அனைத்து விவரங்களும் மாணவர்கள் மனதில் பதிகின்றன. அதேபோன்ற பாடத் தயாரிப்பையும், கற்பித்தல் முறையையும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திற்கும் கொண்டுவர வேண்டும்.
4.  கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான சூத்திரங்களை மனப்பாடம் செய்யும் வழக்கம் தான் இன்று வரை நீடிக்கிறது. இதனால் அந்த சூத்திரங்களின் பயன்பாடுகள் பெரிதாக யாருக்கும்  புரிவதில்லை. இதற்கு மாறாக சூத்திரங்களை உதாரணங்களின் மூலமாகவும், செயல்முறை மூலமாகவும் மாணவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படவேண்டும்.
5.  செய்முறைத் தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் வெறும் சடங்குகளாகி விட்டன. தமிழகத்தில் பல பள்ளிகளில் செய்முறைக்கான ஆய்வகங்களே இல்லாத நிலையில், செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 100% மதிப்பெண் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.  எனவே, செய்முறைத் தேர்வுகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அனைத்து மாணவர்களின் செய்முறைத் திறனையும் தனித்தனியாக சோதித்து மதிப்பெண் வழங்கும் வகையில் செய்முறைத் தேர்வின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
வரலாறு
1.  மேனிலை வகுப்புகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்திற்கான கலைத்திட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விடுதலைப் போராட்டம், பக்தி இயக்கம், கிளர்ச்சி, மன்னர்கள் ஆகியவற்றின் பொதுவான வரலாற்றின்  ஒரு பகுதியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பு வருகிறதே  தவிர தமிழ்நாட்டு வரலாறு குறித்து விரிவாக எந்தப் பதிவும் செய்யப்படாதது பெரும் குறையாக உள்ளது.
2.  சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான் என்பது ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்த ஒன்றாகும்.  இந்தியாவின் பெரிய மாநிலங்களில் அதிக அளவில் இட ஒதுக்கீடு வழங்குவது தமிழ்நாட்டில் மட்டும்  தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரு அடுக்குகளாக 50% இட ஒதுக்கீடு வழங்குவதும் தமிழகம் மட்டும் தான். இத்தகைய சிறப்புகள் குறித்தெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டு வரலாறு குறித்து தனி அத்தியாயம் சேர்க்கப்பட வேண்டும்.
3.  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட தமிழக அரசியல் குறித்த அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் மேனிலை வகுப்புக்கான வரலாற்று பாடநூலில் தமிழக அரசியல் வரலாறு குறித்த எந்த பதிவும் இல்லாமல் இருப்பது தவறாகும். அதைப் போக்கும் வகையில்  தமிழக அரசியல் குறித்து தனி அத்தியாயம் வரலாற்றுப் பாடநூலில் சேர்க்கப்பட வேண்டும்.
4.  இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக அளவில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்சந்ல்லூர், கீழடி, புதுவையில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அவற்றில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் தெரியவந்த பொருட்கள் குறித்த அத்தியாயமும் பாடநூலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
5. தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான விதம், அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, அதுகுறித்த பாடமும் வரலாறு பாட நூலில் சேர்க்கப்படுவது நலமாக இருக்கும்.
ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை
தமிழ்
1.  தொடக்க நிலை (1&5 வகுப்புகள்), உயர்தொடக்க நிலை (6,7,8 வகுப்புகள்), உயர்நிலை (9,10 வகுப்புகள்) வகுப்புகளுக்கான தமிழ் பாடத் திட்டம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் வலிப்பிலேயே கணினி மூலம் பாடல்கள் கற்பிக்கப்படுவதால் அடுத்தடுத்த வகுப்புகளில் குழந்தைகள் அச்சமின்றி கணினிகளை கையாள உதவியாக இருக்கும்.
2.  மூன்றாம் வகுப்பில் சொல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகளின் மொழித்திறனை மேம்படுத்தும் முயற்சி நிச்சயம் பயனளிக்கும். நான்காம் வகுப்பில் விளம்பரங்களை உருவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்றவை குழந்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.
3. நான்காம் வகுப்பிலிருந்து திருக்குறள் கற்பிக்கப்படும் என்று கலைத்திட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல் வகுப்பிலேயே பாடல்கள் ஒலி வடிவில் கற்பிக்கப்படும் நிலையில், திருக்குறளை மூன்றாம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்வது மானவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
4.  உயர்தொடக்க வகுப்புகளில் கூட்டங்களில் உரையாற்றுதல், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், எந்த ஒரு பொருள் சார்ந்தும் அறிக்கை தயாரித்தல் போன்ற மொழித்திறன் பயிற்சிகள் உண்மையாகவே பயனளிப்பவை. எனினும் இவை ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது. இப்பயிற்சிகளால் மாணவர்கள் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய மதிப்பீடுகள் தேவை.
5. 9, 10 ஆகிய உயர்வகுப்புகளுக்கான துணைப் பாடம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதாகவும், நன்மை, தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைக்கப்பட வேண்டும்.
ஆங்கிலம்
1.  தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், தொடக்க வகுப்புகளில் ஆங்கிலத்தை எளிதாக கற்கும் வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
2. ஐந்தாம் வகுப்பிலிருந்து காணொலிக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுவது அவர்களின் மொழி பேசும் திறனை மேம்படுத்தும்.
3. சொல் விளையாட்டுக்கள் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் மனதில் தெளிவாக பதியும். முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்றுத்தரப்படுவதால் அம்மொழி குறித்து மாணவர்களிடையே நிலவி வந்த அச்சம் விலகும்.
4.  மேனிலை வகுப்புகளுக்கான பயிற்சியாக வைக்கப்பட்டுள்ள வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவங்களை நிரப்புதல், தொடர்வண்டி முன்பதிவு படிவங்களை நிரப்புதல் போன்றவை 9&ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
5.  ஒரு பாடத்தை படித்து முடித்தவுடன் அதை நாடகமாக மாற்றுதல், வானொலி நாடகத்திற்கான திரைக்கதையாக மாற்றுதல் போன்றவை மாணவர்களின் படைத்தல் திறனை மேம்படுத்தும்.
கணிதம், அறிவியல்
1.  கணிதம், அறிவியல் பாடங்களை தனித்த பாடமாக மற்றும் கற்றுத் தராமல் அன்றாட வாழ்க்கையுடன்  தொடர்பு படுத்திக் கற்றுத்தர வேண்டும்.  அப்போது தான் கணிதம், அறிவியல் ஆகியவற்றின் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும்.
2.  உதாரணமாக 17 & (3*4) என்ற கணிதத்தை அப்படியே கேள்வியாக வைப்பதற்கு பதிலாக  ஒருவரிடம் 17 கொய்யாப்பழங்கள் உள்ளன. அதை ஒவ்வொருவருக்கும் தலா 4 வீதம் 3 பேருக்கு கொடுத்தால் மிச்சம் எவ்வளவு இருக்கும்? என்று வினா எழுப்பலாம்.
3.  ஒன்றாம் வகுப்பிலேயே கணினி வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், தத்துவங்களை விளக்க கணினியை பயன்படுத்தி படக்கதைகளை சொல்லலாம்.
4. கணிதம், அறிவியல் பாடங்களைப் பொருத்தவரை மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில் பாட நூல்கள் எழுதப்பட வேண்டும்.
5.  அறிவியல், கணிதம் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பதை அறியும் வகையில் தேர்வு முறையும், வினாத் தாள்களும் அமைக்கப்பட வேண்டும்.
சமூக அறிவியல்
1. தொடக்கக் கல்வியில் சமூக அறிவியல் பாடம் மூன்றாம் வகுப்பில் தான் அறிமுகம் செய்யப்படுகிறது.  சமூக அறிவியல் பாடத்தை பயில சற்று பக்குவம் தேவை என்பதால் இது சரியான முடிவு தான்.
2.  சமூக அறிவியலின் ஓர் அங்கமான குடிமையியலில் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல தலைப்புகளில் பாடங்கள் தயாரிக்கப்படவிருப்பது பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி, உள்ளாட்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
3.  எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் ஒன்பதாவது பாடமாக மகளிரின் நிலை என்ற தலைப்பில் கடந்த காலங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து விளக்கப்படவுள்ளது.  சி.பி.எஸ்.பி பாடத்திட்டத்தில் மகளிர் நிலை குறித்த பாடத்தில் தான் நாடார் சமுதாயத்தை பிழைப்பு  தேடி வந்தவர்கள் என்றும், அவர்கள் பூர்வகுடிகள் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரிக்கும் பாடநூல்களில் இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4.  தமிழக அரசியல் குறித்தும், நீதிக்கட்சி வளர்ச்சி குறித்தும் பல பாடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து பாடங்கள் எழுதப்படவுள்ளன. இவற்றில் ஆட்சியாளர்களை துதிபாடும் வகையில் தவறான வரலாறு எதுவும் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5.  வரலாற்றுப் பாடத்தில் களப்பிரர்கள் காலம் வரையிலான பழங்காலத் தமிழகம் என்ற பாடத்தலைப்பு இடம் பெற்றிருக்கிறது. ஆனால், தற்கால நிலைமை குறித்து எந்தப் பாடமும் இடம்பெறாதது பெரும் குறை தான்.
பொதுவான பரிந்துரைகள்
1.  தமிழக அரசால் அமைக்கப்பட்ட கலைத்திட்டக் குழுவினர் தயாரித்துள்ள புதியப் பாடத்திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமானால் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
2.  கோத்தாரிக் குழு பரிந்துரைப்படி, கல்விக்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி ஆண்டுக்கு குறைந்தது ரூ.70,000 கோடி கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் ரூ.57,500 கோடி (5%) ஒதுக்க வேண்டும்.
3. புதியப் பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ளாவிட்டால் அவர்களால்   மாணவர்களுக்கு தரமாக கல்வி கற்பிக்க முடியாது. அதனால் புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
4. ஆந்திரம், இராஜஸ்தான் மாநிலங்களின் பாடத்திட்டம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று தரமானப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாநிலங்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களையும், பிற மாநில அரசு பள்ளி மாணவர்களையும் ஆண்டுக்கு ஒரு மாதம் பரிமாற்றம் செய்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கல்வித் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்களை கற்றுக் கொள்ள வகை செய்ய வேண்டும்.
5. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு செலவிலான கல்விச் சுற்றுலாவை கட்டாயமாக்க வேண்டும்.  வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
6. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் 4 தனிக்கல்வி வாரியங்கள் நீடிப்பது முறையல்ல. அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாட நூல்கள் பயன்படுத்தப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.
7. தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் சீர்திருத்தம் செய்யாமல் மாணவர்களின் கற்றலையும்,  புரிதலையும் மேம்படுத்த முடியாது. எனவே, தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
8 தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்குவது குறித்து வல்லுனர் குழு எந்த பரிந்துரையும் வழங்க வில்லை. கல்வி வணிகமாவதைத் தடுக்கும் வகையில் தமிழ் வழிக் கல்வியை பத்தாம் வகுப்பு வரையாவது முதல் கட்டமாக கட்டாயமாக்க வேண்டும்.
9. மாணவர்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்த வசதியாக நீதிபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப் பட வேண்டும். வாரத்திற்கு 5 பாட வேளைகள் விளையாட்டிற்கும், 3 பாட வேளைகள் தொழில் பயிற்சிக்கும், இரு பாட வேளைகள் நீதி போதனைக்கும் ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அத்துடன் யோகா பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
10. பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களாக ( School Management  Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.
11. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாகத் தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மாணவர்களுக்கான தனிநபர் கல்விச் செலவு உயர்த்தப்பட வேண்டும்.
12. பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குனர் (Director of School Standards) நியமிக்கப்பட வேண்டும்.
13.   புதியப் பாடத்திட்டம் அதற்குரிய பயனை அளிக்க வேண்டுமானால் பாடநூல்கள் தான் மிகவும் முக்கியமானவை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் சிறப்பாக அமையும் வகையில் பாடநூல்கள் வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.
14. பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge  Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
15. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
16. தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ள இந்த யோசனைகளை வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து பயனுள்ளவற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
                              
நன்றி!
                                                  
அன்புடன்,
                                 
(மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)