>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
VAO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VAO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

TNPSC Group 2 & Group 4 & VAO Exam Study Materials




Latest - TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Tamil Study Material | Manidhaneyam -  Click Here For Download
* TNPSC Group 4 - State Government - Study Material | JBM -  Click Here For Download
* TNPSC Group 4 - Question Paper 1 | Haritha -  Click Here For Download
* TNPSC Group 4 - History Study Material | Valavan -  Click Here For Download
* TNPSC Group 4 - Zoology Study Material | Tamilanraj -  Click Here For Download
* TNPSC Group 4 - Science - Question with Answer Key | Srimaan -  Click Here For Download
* TNPSC Group 4 - General Studies - Study Material | Kaviya -  Click Here For Download
* TNPSC Group 4 - Simple Interest - Study Material | Santhana -  Click Here For Download
* TNPSC Group 4 - General Tamil Study Material | Kaviya -  Click Here For Download
* TNPSC Group 4 - Study Material After Mouriyar | Valavan -  Click Here For Download

திங்கள், 13 நவம்பர், 2017

திங்கள், 6 நவம்பர், 2017

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு ரத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு....

'வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை' என்ற, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலர், செல்வம் கூறியதாவது:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., பதவிக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில், வி.ஏ.ஓ., பதவியில் பராமரிக்கப்படும், 'கிராம கணக்குகளும், நடைமுறைகளும்' என்ற தலைப்பில், 25 கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய அறிவிப்பில், இந்த கேள்விகள் இடம்பெறாது.குரூப் - 4 தேர்வுக்கு, 18 வயது நிரம்பினால் போதும்.
ஆனால், வி.ஏ.ஓ.,வுக்கு, 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பையே கல்வி தகுதியாக கொண்டு, இரண்டு தேர்வையும் இணைத்துநடத்துவது, வி.ஏ.ஓ.,க்களை மேன்மைப்படுத்துவதற்கு பதில் குறைக்கும் செயல்.மண்ணையும், மனிதனையும் அடையாளம் காட்டும் அடிப்படை அலுவலராக, வி.ஏ.ஓ., உள்ளார். 
பொதுமக்களிடம் நேரடி தொடர்புள்ள பதவிக்கு, 21 வயது தான் சரியாக இருக்கும். அதை விடுத்து, 18 வயது என, அரசு நிர்ணயம் செய்திருப்பது, வயதுக்கு மீறிய பதவியில் அமர்த்தும் செயலாகும்.வி.ஏ.ஓ.,வுக்கு தனி தேர்வு நடத்தினால், 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர்.ஒவ்வொரு நபரும், விண்ணப்ப கட்டணம் தனியாக செலுத்துகின்றனர். 
அதன் மூலமே தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வால் அரசுக்கு, 15 கோடி ரூபாய் செலவாகிறது என்பது முற்றிலும் தவறானது.எனவே, டி.என்.பி.எஸ்.சி., எடுத்துள்ள வி.ஏ.ஓ., மற்றும் குரூப் - 4 ஆகியவற்றை இணைத்து, தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும். இல்லையேல், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு...

வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர்.
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல்,வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.

குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது..


சென்னை,
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனிதனித்தாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,  விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி,  CCSE-IV என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

வியாழன், 7 செப்டம்பர், 2017

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

TNPSC VAO Study Material 

TNPSC VAO Exam - Useful Study Materials - 
Schedule 9

* TNPSC VAO Study Material - 5 | Kalamin 

Vidaigal  Group

புதன், 17 மே, 2017

TNPSC - VAO பணியிடங்களுக்கு 19 -இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (மே 19) சென்னையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் எம்.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காலியாக உள்ள 147 விஏஓ பணியிடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மே 19 -ஆம் தேதி நடைபெறும்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள், தரவரிசை அடங்கிய கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாகவும் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.