>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
RAIL WAY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RAIL WAY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஏப்ரல், 2017


ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.

ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:

தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.

இதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 1 பிப்ரவரி, 2017

இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறை இரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளன. அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின் நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சில பத்திகள் கூடுதலாக இடம்பெறும் என்று தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது, ரூ.20,000 கோடி மதிப்பில் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இது தவிர, புதிய இருப்புப்பாதைகளை அமைப்பது, டீசல் ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றுவது, நவீனமயம், தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து ரயில் நிலையங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றுவது, மத வழிபாட்டுத் தலங்களுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

வியாழன், 17 நவம்பர், 2016

ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..!

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
விளம்பரம் எண்: 01/2016
அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி)
பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3)
மொத்த காலியிடங்கள்: 23,801
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் இணையதள ஐடி:
கொல்கத்தா - 2038 (www.rrbkolkata.gov.in)
பெங்களூர் - 1172 (www.rrbbnc.gov.in)
அஜ்மீர் - 771 www.rrbajmer.org)
அகமதாபாத் - 546 www.rrbahmedabad.gov.in)
அலகாபாத் - 1527 www.rrbald.gov.in)
புவனேஸ்வர் - 1538 www.rrbbbs.gov.in)
போபால் - 326  www.rrbbpl.nic.in)
பிலாஸ்பூர் - 1680 www.rrbbbs.gov.in)
சென்னை - 1666 www.rrbchennai.gov.in)
கோரக்பூர் - 78 www.rrbgkp.gov.in)
சண்டிகர் - 1161 www.rrbcdg.gov.in)
கவுகாத்தி - 538 www.rrbguwahati.gov.in)
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் - 475 www.rrbjammu.nic.in)
மால்டா - 373 www.rrbmalda.gov.in)
செகந்திராபாத் - 2839 www.rrbsecunderabad.nic.in)
மும்பை - 4155 www.rrbmumbai.gov.in)
முசாபார்பூர் - 1153 www.rrbmuzaffarpur.gov.in)
சிலிகுரி - 345 www.rrbsiliguri.org)
ராஞ்சி - 2621 www.rrbranchi.org)
திருவனந்தபுரம் - 294 www.rrbthiruvananthapuram.gov.in)
பாட்னா RRB 1271 (www.rrbpatna.gov.in)
மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.