>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 31 ஆகஸ்ட், 2016

GRATUITY - பணிக்கொடை -

*GRATUITY - பணிக்கொடை - *DCRG * அறிந்து கொள்ளுங்கள்*



_பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)
பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும்.

 பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது.


*அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை*


பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது


இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.


*பணிக்காலம் கணக்கிடுதல்*

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.
32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.


*பணிக்கொடை கணக்கீடு*


மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 10 இலட்சம்.
பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

க தை

💥♦💥 இன்னைக்கு உங்களுக்கு மூணுக தை சொல்லப் போறேன்.

1.முதல் கதையில ஒரு அப்பா ஆபீஸ் விட்டுக்கு வர்றாரு.

வீட்டுக்குள்ள நுழையும் போது அவரு பொண்ணு போகோ சேனல் பாத்துகிட்டிருக்கிறா. அடுத்த நாள் பரீட்சை. அவ என்ன செய்தா காலையில இருந்து படிச்சிட்டு இருந்தா.

அப்புறம் அம்மா கிட்ட கேட்டுட்டு பத்து நிமிசம் ரிலாக்ஸ் பண்ண டிவி பாத்துகிட்டு இருந்தா. ஆனா அவ அப்பா கண்ணுல என்ன பட்டுச்சி. டிவி பாக்குறது மட்டும்தான் பட்டுச்சி. சட்டுன்னு வந்தாரு. படிக்காம டிவியா பாக்குறன்னு அவர் பையால டிவி மேல வீசினார்.

அது டிவி மேல பட்டு டிவி ரிப்பையர் ஆகுது.

2.இரண்டாவது கதையில ஒரு அம்மா தன் குட்டிக் குழந்தையோட ஒரு கீரிப்பிள்ளையையும் வளக்குறாங்க.

ஒருநாள் குழந்தைக்கு காவலா கீறிப்பிள்ளைய வெச்சிட்டு ஆத்துல தண்ணி எடுக்கப் போறாங்க. அப்போ குழந்தைக்கு பக்கதுல ஒரு பாம்பு கொத்த வருது. உடனே கீரிப்பிள்ள பாம்பு கூட சண்டைப் போட்டு கடிச்சி கிழிச்சி போட்டிருது. கீரிப்பிள்ளை வாயெல்லாம் ரத்தம்.

ஆத்துல இருந்து குடத்த எடுத்துகிட்டு வந்த அம்மாவ நோக்கி கீரிப்பிள்ள ஒடிவருது. அம்மா பாக்குறா.

கீரிப்பிள்ள வாயில இருந்து ரத்தம். வாய் ரத்தம். ரத்தம் வாய். உடனே முடிவு செய்யுறா. ஆஹா நம்ம குழந்தையைத்தான் கீரி கொன்னுட்டு வருதுன்னு என்ன பண்றா.

அந்த தண்ணிக் குடத்த கீரி மேலப் போடுறா. தண்ணி குடம் எவ்வளவு வெயிட்டு, அதுவும் பூமி கீழ இழுக்கிற வேகமும் சேர்ந்து பெரிய எடையா கீரிபிள்ள தலையில் விழுது. கீரிப்பிள்ள அடிபட்டு கிடக்குது. உள்ளப் போய் பாத்தா அங்க பாம்பு கிழிஞ்சி கிடக்குது. குழந்தை தூங்கிகிட்டிருக்கு.

3.மூணாவது கதையில ஒருத்தன் ஒரு நாய ஆசையா வளத்துட்டு வந்தானாம். அவனுக்கு ரொம்ப கஷ்டம் வர, அந்த நாய அடமானம் வெச்சி காசு வாங்கினான்.

நாயை வைச்சிகிட்டு காசு கொடுத்த வியாபாரி கேட்டாராம் “என்னப்பா நாய என்கிட்ட விட்டுட்டு போற. அது என்ன விட்டு உன்கிட்ட ஒடிவந்திராத” அப்படின்னார்.

உடனே இவன் அப்படி வராதுன்னு, நாய் கண்ணப் பாத்து அப்படி வந்திராதன்னு பார்வையில கெஞ்சினான். அன்னையில இருந்து நாய் வியாபாரிக்கு ரொம்ப விசுவாசமா இருந்துச்சி.

ஒருநாள் வியாபாரி இல்லாத நேரம் ஒரு திருடன் வர, நாய் திருடன கடிச்சி விரட்டிட்டாம். உடனே வியாபாரி நாய் மேல அன்பு அதிகமாகி “சரி நீ இனிமே உன் எஜமானன் கிட்டையே போயிரு. எனக்கு சேவை செய்தது போதும். நான் கடன் பத்திரத்த கிழிச்சிப் போட்டிரேன்னு அனுப்பி வெச்சான்.

நாய் ஆசை ஆசையா எஜமானன தேடி வருது. இங்க நம்ம ஆள் நாயை மீட்டுக்கிறதுக்கு காசு சேத்துட்டு வேகமா வர்றான். எதுத்தாப்புல நாய் வால ஆட்டிக்கிட்டு வருது.

அதப் பாத்து தப்பா நினைச்சிர்ரான் “ஏய் நாயே. நாந்தான் உன்ன நா வர்ற வரைக்கும் வியாபாரிக்கி விசுவாசமா இருன்னு சொன்னேனே, நீ துரோகம் பண்ணிட்டு தப்பிச்சி ஒடிவர்றியா”என்று சொல்லிட்டு தன் கையில இருக்கிற கம்ப வெச்சி நாய் மேல ஒரே அடி.

நாய் பாவமா அடிபட்டு தரையில கிடக்குது.

இதுல பாருங்க மூணு கதையிலையுமே நாம் கண்ணால பாக்குற காட்சிய அப்படியே நம்புறோம். கண்ணு பாக்குது, டக்குன்னு முடிவெடுக்குறோம்.

அப்பா பொண்ணு மேல கோபப்படுறார்.
அம்மா கிரிப்பிள்ள மேல குடத்தைப் போடுறாங்க.
எஜமானன் நாய் மேல கம்பு வீசுறான்.

இன்னொன்னயும் கவனிங்க மூணு பேரையுமே மூணுபேருக்கும் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவுக்கு பொண்ணப் பிடிக்குது.
அம்மாவுக்கு கீரிபிள்ளைய பிடிக்குது. அதனாலத்தான் குழந்தைக்கு காவலா வெச்சிட்டு போறாங்க.
எஜமானனுக்கு நாயை ரொம்ப பிடிக்குது.

இவ்வளவு பிடிச்சிருந்தாலும் ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னு யோசி.

ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள ரொம்ப நம்பல.

ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கை இல்லை.

என்னைக்குமே நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல நம்பிக்கை வைக்கனும். நமக்கு பிடிக்காத ஒண்ண அவுங்க செய்தாக கூட டக்குன்னு அந்த அப்பா மாதிரியோ, அந்த அம்மா மாதிரியோ, அந்த எஜமானன் மாதிரியே டக்குன்னு உணர்ச்சிவசப்பட்டிரக் கூடாது.

பொறுமையா அவுங்கள நம்பி மெல்லமா அன்பா விசாரிக்கனும்.

அவசரப்பட்டா அது பெரிய இழப்புல கொண்டு விட்ரும்.

இதுதான் இன்னைக்கு   உங்களுக்கு சொல்ல விரும்புற கதை.....
பொறுமை கடலினும் பெரிது.

UNESCO. வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள்

UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள் - வருடங்கள்:-
🎯 அஜந்தா குகை - 1983
🎯 எல்லோரா குகை - 1983
🎯 ஆக்ரா கோட்டை - 1983
🎯 தாஜ்மகால் - 1983
🎯 சூரியனார் கோயில் - 1984
🎯 மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1985
🎯 கியோலேடியோ தேசிய பூங்கா - 1986
🎯 கஜுராஹோ சிற்பங்கள் - 1986
🎯 ஃபதேபூர் சிக்ரி - 1986
🎯 எலிஃபென்டா குகைகள் - 1987
🎯 தஞ்சை பெரிய கோயில் - 1987
🎯 தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986
🎯 ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986
🎯 பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987
🎯 சுந்தரவன பூங்கா - 1987
🎯 நந்தாதேவி தேசிய பூங்கா - 1988
🎯 சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989
🎯 ஹுமாயூன் கல்லறை - 1993
🎯 குதுப்மினார் - 1993
🎯 இமாலயன் இரயில்வே - 1999
🎯 புத்தகயா மகாபோதி கோயில் - 2002
🎯 பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003
🎯 கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004
🎯 ஐராதீஸ்வரர் கோவில் - 2004
🎯 குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004
🎯 சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004
🎯 நீலகிரி மலை இரயில்வே - 2005

அறிவியல் வினா விடை



அறிவியல் வினா - விடை -

1) வளி மண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும்
    கருவி - பாரமானி.
2). பாதரசம் பயன்படுத்தப்பட்ட பாரமானியை முதலில்
     அமைத்தவர் - டாரி செல்வி.
3). யுரேனஸ் சூரியனைச் சுற்றும் காலம் - 84வருடம்
     7 நாட்கள்.
4). நெப்தியூன் சூரியனைச் சுற்றும் காலம் - 164 ஆண்டு
     9 மாதம் 14 நாட்கள்.
5). ( Cr ) குரோமியத்தின் அணுநிறை - 52.0
6). ( Cu ) தாமிரத்தின் அணுநிறை - 63.5.
7). புரோட்டோபிளாசத்தில் உள்ள ஹைட்ரஜன் ( H )
     விகிதம் ( எடை மூலம் ) - 10.0.
8). புரோட்டோபிளாசத்தில் உள்ள நைட்ரஜன் ( N )
     விகிதம் ( எடை மூலம் ) - 2.5.
9). ரத்தத்திலிருந்து எந்த சுவர்களின் மூலம் சுத்தமான
     திரவம், அதாவது நிணநீர் கசிகிறது -
     மெல்லிய தந்துகிச் சுவர்களின் மூலம்.
10). ரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையில் ' மத்திய
      மனிதனாக' அமைந்துள்ளது - நிணநீர்.
11). ஒவ்வொரு குரோமோசோமிலும் உள்ள  குரோ-
        மாட்டிகள் - இரண்டு.
12). பாலினப் பெருக்க உறுப்புகளில் கேமீட்டுகளை
       உருவாக்க நடைபெறும் சிறப்புத்தனமை வாய்ந்த
      செல்பிரிதல் - மையோசிஸ்.
13). லைகெனாலஜி ( Lichenology ) என்றால் - லைகென்
       களின் வளரிடம், பரவியிருத்தல், வகைப்பாடு,
        உடல் அமைப்பு ( வெளி மற்றும் உள் அமைப்புகள்)
      பூஞ்சை பாசிக்கும் இடையேயுள்ள உறவு, இனப்
      பெருக்க முறைகள் மற்றும் உபயோகங்கள்
      ஆகியவற்றை விளக்குகின்ற பிரிவுக்கு லைகெனா-
      லஜி என்று பெயர்.
14). தாவர நோயியல் என்றால் - தாவர நோய்களையும்
        அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும்
       விளக்குகின்ற தாவர நோயியல் ( Plant Pathology )
       என்று பெயர்.
🌙🌙🌙🌙🌙🌙🌙

சனி, 27 ஆகஸ்ட், 2016

உலகின் தந்தைகள்

1..வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை? தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
12..மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப்
போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்
தந்தை?
ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்
தந்தை?
அவினாசி மகாலிங்கம்

உலகின் முக்கிய தினங்கள்

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴                           *உலகின் முக்கிய தினங்கள்*

*ஜனவரி*
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

*பிப்ரவரி*
14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

*ஏப்ரல்*
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

*ஜீன்*
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க  c தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

*ஆகஸ்ட்*
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

*அக்டோபர்*
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

*டிசம்பர்*
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்
---------------------------------          💐💐💐💐💐💐💐💐💐💐

மனிதனின் உடல்

உடலைப் பற்றிய வியத்தகு ‪#‎உண்மைகள்‬ !
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் ‪#‎நேரம்‬
*கண்கள் 31 நிமிடங்கள்
*மூளை 10 நிமிடங்கள்
*கால்கள் 4 மணி நேரம்
*தசைகள் 5 நாட்கள்
*இதயம் சில நிமிடங்கள்......

மனிதனின் உடல்

உடலைப் பற்றிய வியத்தகு ‪#‎உண்மைகள்‬ !
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் ‪#‎நேரம்‬
*கண்கள் 31 நிமிடங்கள்
*மூளை 10 நிமிடங்கள்
*கால்கள் 4 மணி நேரம்
*தசைகள் 5 நாட்கள்
*இதயம் சில நிமிடங்கள்......

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தமிழ் கவிஞர்கள் ஊர்

 தமிழ் கவிஞர்கள் ஊர்
1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்
3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?
உத்தமதானபுரம்
4.பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி
6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை
7.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி
8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை
9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு
10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்
11.திரு.வி.க பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)
12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி
13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்
14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்
15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து
16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்
17.குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
18.வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்
19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்
20.மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு
21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
22.கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு
24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை
25.க• சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை
26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை
28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்
29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி
காஸ்திக்கிளியோன்
30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்
31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்
32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி
33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
34.கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்
35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை
36.சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்
37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்
38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை
39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு
40.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
சமுத்திரம்
41.மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை
42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
43.சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்
44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்
46.நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்
47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி
48.சிற்பி பிறந்த ஊர் எது?
ஆத்துப் பொள்ளாச்சி
49.நா.காமராசன் பிறந்த ஊர் எது?
போடி மீனாட்சிபுரம்
50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது?
சிதம்பரம்
51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது?
தாரமங்கலம்
52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
ஆலந்தூர்
53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?
மதுரை
54.சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்
55.பொய்கையார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்
56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
காவேரிப்பாக்கம்
57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது?
ஒலவலசு
58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது?
சூலூர்
59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குறையலூர்
60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது?
குளத்தூர்
61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது?
தென்காசி
62.இரட்டையர் பிறந்த ஊர் எது?
இலந்துரை
63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது?
வஞ்சி
64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது?
உடுமலை
65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது?
ஆலப்புழா(கேரளா)
66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்
67.சூரியநாராயண சாஸ்திரி பிறந்த ஊர் எது?
விளாச்சேரி
[21/08, 3:12 PM] ‪+91 95247 89285‬: இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலக்கெடு நீடிப்பு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., பதவிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற, சென்னை ராணிமேரி கல்லுாரி மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில்,இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
இம்மையங்களில், நடப்பாண்டு பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஆக., 8 என, அறிவிக்கப்பட்டிருந்தது; தற்போது, 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரம் அறிய, 044 - 2844 4995; 0452 - 2534 988 ஆகிய டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

10,12 வது காலாண்டுத் தேர்வு காலஅட்டவணை

QUARTERLY EXAM TIME TABLE

புதிய மாற்றியமைக்கப்பட்ட

பத்தாம் வகுப்பு

 காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை...
08.9.16 - தமிழ்  I
10.9.16 - தமிழ்  II
12.9.16 - ENGLISH I
14.9.16 - ENGLISH II
16.9.16 - கணிதம்
19.9.16 - அறிவியல்
23.9.16 -சமூகஅறிவியல்.                        
பன்னிரெண்டாம்  வகுப்பு காலாண்டுத்தேர்வு 2016-17

12.9.16 - தமிழ் முதற்தாள்
13.9.16 - பக்ரீத் விடுமுறை
14.9.16 - தமிழ் இரண்டாம் தாள்.
15.9.16 - ENGLISH I
16.9.16 - ENGLISH II
17.9.16 - COMMERCE
18.9.16 - ஞாயிறு
19.9.16 - MATHS/ZOOLOGY/ACCOUNTANCY &AUDITING THEORY
20.9.16 - PHYSICS  ECONOMICS  ELECTRICAL  MACHINE  & APPLIANCE
21.9.16 - COMPUTER SCIENCE
22.9.16 - CHEMISTRY ACCOUNTANCY
23.9.16 - BIOLOGY/ BOTANY/HISTORY BUSINESS MATHS.

மக்களின் எண்ணங்கள்

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?

 உயர்நீதிமன்ற உத்திரவுப்படி #ஹெல்மெட்
#வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
 லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...



கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்...

புதன், 24 ஆகஸ்ட், 2016

ஆசிரியர்களின் அச்சம்


  1. *ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்..
  2. முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது
  3. தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  4. கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
  5. ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
  6. இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
  7. அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
  8. மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
  9. *மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா?* பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? *பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா?* மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.
  10. தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். *காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி* அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது
  11. ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் *வீண்பழி*யால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க *இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை*.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
  12. அதுபோல, *தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை*. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் *கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்                                                               .
  13.  தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே *தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான்* எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
  14. தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.
  15.  திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. *ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது*. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாத
  16. *ஆசிரியர்-மாணவர் உறவென்பது* ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.                                        நன்றி : தினமணி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

விரல்களின் ஆரோக்கியம்

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!

🌷 உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

🔵 கட்டை விரல்;

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

🔵ஆள்காட்டி விரல்;

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

🔵நடுவிரல்;

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

🔵மோதிரவிரல்;

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

🔵சிறுவிரல்;

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

🔵உள்ளங்கை;

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

🔵மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
GOOD MORNING FRIENDS

புதன், 17 ஆகஸ்ட், 2016

இந்திய தேசியக்கொடியின் வரலாறு

இந்திய தேசியக் கொடி-வரலாறு...!

இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும். இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.
கொடியின் அம்ச பொருள் விளக்கம்
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது. விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார். சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1 6300 × 4200
2 3600 × 2400
3 2700 × 1800
4 1800 × 1200
5 1350 × 900
6 900 × 600
7 450 × 300
8 225 × 150
9 150 × 100
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது. காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சுதந்திர தின வாழ்த்துக்கள்

🇵🇾🇹🇯🇵
.🇹🇯🇵🇾🇹
🍎🍀வாசகர்கள் அனைவருக்கும் 70 வது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
Happy Independence Day -

🍎🍀தில்லு முல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்: போராட்டம் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி

🍎🍀பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்…

🍎🍀மாணவர் களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்

🍎🍀நகை மதிப்பீட்டாளர் ஓராண்டு பட்டயப்படிப்பு

🍎🍀அரசு ஐ.டி.ஐ.,யில் 11,500 இடங்களுக்கு ஆள் இல்லை

🍎🍀காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இட நிரவல் கூட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் குளறுபடி மாவட்ட கல்வி அதிகாரியை முற்றுகை

🍎🍀MHRD Swachh Puraskar Award Result published

🍎🍀BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016

🍎🍀கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல்.

🍎🍀பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

🍎🍀தமிழில் பெயர் ‘இனிஷியல்’

🍎🍀TNPSC:குரூப் – 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு.

🍎🍀பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி -பி-எட்-பயிற்சிக்கு-

🍎🍀வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம் -

🍎🍀தேர்வு கட்டணம் பாக்கி பி.இ., ‘ரிசல்ட்’ நிறுத்தம் -தேர்வு-கட்டணம்-பாக்கி-
📒📕📒📕📒📕📒📕
HAPPY INDEPENCE DAY

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மூலிகை பொடிகளின் பயன்பாடு

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

தலைவர்களின் புனைப்பெயர்கள்


புனைப்பெயர்கள்

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

அலகுகள் பற்றிய செய்திகள்

: அலகுகள் பற்றிய சில தகவல்கள்:-

🚀 மின்தடை - ஓம்

🚀 மின்கடத்துத் திறன் - ஸிமன்ஸ்

🚀 மின் காந்தத் தூண்டல் - ஹென்றி

🚀  மின்னூட்டம் - கூலும்

🚀 மின்தேக்கு திறன் - பாரட்

🚀 மின் திறன் - வாட்

🚀 மின்னோட்டம் - ஆம்பியர்

🚀 காந்தப்புலம் - வெப்பர்

🚀 காந்தப்புல அடத்தி - டெஸ்லா

🚀  கதிரியக்கம் - பெக்கொரல்

🚀 அழுத்தம் - பாஸ்கல்

🚀  ஒளிச்செறிவு - கேண்டிலா

🚀 ஒலிசெறிவு - டெசிபல்

🚀 அதிர்வெண் - ஹெர்ட்ஸ்

🚀 பொருள் - மோல்

🚀   நீளம் - மீட்டர்


  1. 🚀 வெப்பம் - கெல்வின் (அ) செல்சியஸ்

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

*இயற்கை மருத்துவம்**

*பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்*

*வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்*

*வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்*

*வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.*

*வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்*

*வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.*

*லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.*

*ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.*

*உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்*

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

RL LIST 2∅16

*R.L 2016 List*

ஆகஸ்ட்
02.08.16 செவ்வாய் - ஆடிப்பெருக்கு
12.08.16 வெள்ளி -வரலஷ்மி விரதம்
18.08.15 வியாழன்- ரிக்உபகாரமா ,யஜூர் உபகர்மா
19.08.15 வெள்ளி - காயத்ரிஜெபம்
செப்டம்பர்
05.09.16 திங்கள் -சாமஉபகர்மா
12.09.16 திங்கள் - அர்பா
13.09.16 செவ்வாய் - ஓணம் பண்டிகை
அக்டோபர்
03.10.16 திங்கள்-ஹிஜ்ரி 1438ஆம் வருட பிறப்பு
29.10.16 சனி-தீபாவளி நோன்பு
நவம்பர்
02.11.16 புதன்-கல்லறைத் திருநாள் 04.11.16 திங்கள் - குரு நானக் ஜெயந்தி
டிசம்பர்
02.12.16 திங்கள் - திருக் கார்த்திகை தீபம்
24.12.16 சனி- கிருஸ்துமஸ் ஈவ்
31.12.16 சனி-நியூ இயர்ஸ் ஈவ்

பயிற்சி

🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
*BRC LEVEL TRAINING*
🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
🌼 *தொடக்க நிலை* (Primary) ஆசிரியர்கள்
தலைப்பு : *கணித உபகரணப் பெட்டியை பயன்படுத்தி அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்*

பயிற்சி நாட்கள் : *29.08.2016, 30.08.2016*
*2 நாட்கள்*

🌼 *உயர் தொடக்க நிலை* (Upper Primary) ஆசிரியர்கள்

தலைப்பு : *உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி அறிவியல் கற்பித்தல்*

நாள் : *O6.09.2016 முதல் 08.09.2016 வரை*
*3 நாட்கள்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

CCE பதிவேடு

Dear Friends..
New *CCE E-Register (I-VIII)* Excel Software

Go with this 👇🏼👇🏼👇🏼👇🏼 Link
https://drive.google.com/open?id=0B-3ReewWcBULdWphVHVQVC1Ddnc

வாழ்த்துகள்

வாழ்த்துக்கள்:

நாளை 07.08.2016 அன்று நடைபெறவுள்ள *அகில இந்திய குடிமைப் பணி* "*முதல்நிலைத்_தேர்வு*" எழுதவுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அனைவரும் 2016-ம் ஆண்டிற்கான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மூன்று நிலைகளிலும் வெற்றிபெற வேண்டும்.

நாளை தேர்வு எழுதவுள்ள வருங்கால குடிமைப் பணி அதிகாரிகள் அனைவருக்கும் கல்வி சிகரம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ரியோ 2016 ஒலிம்பிக் திருவிழா

ரியோ '2016 ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது.*
* 31 வது ஒலிம்பிக் போட்டி .
* தென் அமெரிக்கா நாடுகள் நடத்தும் முதல் போட்டி .
* பிரேசில் - ரியோ டி ஜெனீரோ.
* 206 நாடுகள் பங்கேற்பு.
* 11, 239 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.
* ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டு வீரர்கள் முதலில் அணிவகுப்பு.
* போர்ச்சுக்கல் மொழி அகர வரிசைப்படி நாடுகள் அணிவகுப்பு.
* ஒலிம்பிக் வரலாற்றில் அதிக அளவில் இந்திய வீரர்கள் (120) பங்கேற்பு.
* 95வது நாடாக இந்திய அணி அணி வகுப்பு .

நீங்களும் ஆகலாம் அப்துல்கலாம்

அறிஞ்சனாகலாம்
ஆர்வமாகலாம்
இனிமையாகலாம்
ஈடுபாடாகலாம்
உழைக்கலாம்
ஊக்கமாகலாம்
எழிலாகலாம்
ஏற்றமாகலாம்
ஐக்கியமாகலாம்
ஒற்றுமையாகலாம்
ஓங்கலாகலாம்
ஔடதமாகலாம்
கற்கலாம்
காட்சியாகலாம்
கிழமையாகலாம்
கீர்த்தியாகலாம்
குணமாகலாம்
கூர்மையாகலாம்
கெட்டியாகலாம்
கேட்கலாம்
கைவண்ணமாகலாம்
கொள்கையாகலாம்
கோலகலமாகலாம்
சரித்திரமாகலாம்
சாந்தமாகலாம்
சிந்திக்கலாம்
சீராக்கலாம்
சுத்தமாக்கலாம்
சூத்திரமாகலாம்
செழிப்பாகலாம்
சேர்க்கலாம்
சைவமாகலாம்
சொல்லாகலாம்
சோதனையாகலாம்
ஞானமாகலாம்
தரமாகலாம்
தானமாகலாம்
திறமையாகலாம்
தீபமாகலாம்
துணையாகலாம்
தூய்மையாகலாம்
தெளிவாகலாம்
தேர்ச்சியாக்கலாம்
தைரியமாகலாம்
தொன்மையாகலாம்
தோழமையாகலாம்
நன்மையாகலாம்
நாதமாகலாம்
நிறைவாகலாம்
நீதியாகலாம்
நுட்பமாகலாம்
நூலாகலாம்
நெறியாகலாம்
நேர்த்தியாகலாம்
நையாண்டியாகலாம்
நொய்யலாகலாம்
நோக்கமாகலாம்
பண்பாகலம்
பாசமாகலாம்
பிரியமாகலாம்
பீடாகலாம்
புதுமையாகலாம்
பூரிப்பாகலாம்
பெரியோராகலாம்
பேராசிரியராகலாம்
பையலாகலாம்
பொருமையாகலாம்
போற்றலாகலாம்
மகிழ்ச்சியாகலாம்
மாண்பாகலாம்
மிதமாகலாம்
மீட்பாகலாம்
முத்தாகலாம்
மூர்த்தியாகலாம்
மென்மையாகலாம்
மேன்மையாகலாம்
மையமாகலாம்
யுக்தியாகலாம்
யூகிக்கலாம்
யோசிக்கலாம்
ரம்மியமாகலாம்
லட்சியமாகலாம்
வணங்கலாம்
வாசமாகலாம்
விருட்சமாகலாம்
வீரனாகலாம்
வெற்றியாக்கலாம்
வேதமாக்கலாம்
வையமாகலாம்.
🙏👍💐👍🙏
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

பிரபலங்களின் இயற்பெயர்கள்

பிரபலங்கள் அவர்களின் இயற்பெயர் :-
📚 பாரதியார் - சுப்பிரமணியன்
📚 பாரதிதாசன் - கனக சுப்புரத்தினம்
📚 கண்ணதாசன் - முத்தையா
📚 நா. பிச்சமூர்த்தி - வேங்கட மகாலிங்கம்
📚 சுரதா - இராசகோபாலன்
📚 வாணிதாசன் - எத்திராசுலு (எ) அரங்கசாமி
📚 முடியரசன் - துரைராசு
📚 வீரமாமுனிவர் - ஜோசப் பெஸ்கி
📚 சாலை இளந்திரையன் - மகாலிங்கம்
📚 சுந்தரர் - நம்பியாரூரர்
📚 திருநாவுக்கரசர் - மருள்நீக்கியார்
📚 குணங்குடி மஸ்தான் - சுல்தான் அப்துல் காதர்
📚 பரிதிமாற் கலைஞர் - சூரிய நாராயண சாஸ்திரி
📚 பெருஞ்சித்திரனார் - துரை மாணிக்கம்
📚 ஆண்டாள் - கோதை நாட்சியார்
📚 மு. வரதராசனார் - வளவன்
📚 காளமேகப் புலவர் - வரதன்
📚 சேக்கிழார் - தொண்டர் சீர் பரவுவார்
📚 சாலை இளந்திரையன் - கனகசவுந்தரி
📚 அம்பேத்கர் - பீமாராவ் ராம்ஜி
📚 ஈரோடு தமிழன்பன்  ஜெகதீசன்
📚 விவேகானந்தர் - நரேந்திர நாத் தத்
📚 திருமங்கையாழ்வார் - களியன்

படிப்புகளும் தமிழ் பெயர்களும்

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..! (Ology)

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்.

பறவைகளின் அறிவியல் பெயர்கள்

* பறவைகளின் அறிவியல் பெயர்>-

1). பச்சைக் கிளி - பிதோண்டிடே சிட்டாசிபோர்ம்ஸ்.

2). கடல் காகம் - லாரஸ் கேன்ஸ்.

3). கிலி - அப்பெரிக்ஸ் அப்டெரிஜிபோர்ம்ஸ்.

4). ஹாக் - டையர்நஸ் அசிபிடிரிடே.

5). டிரையேசிலிடே அபாடிபோர்ம்ஸ்.

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
✨செடி வளர்ச்சியின் வேகத்தை அளக்க உதவுவது-
கிரஸ்கோகிராஃப்.

✨ஒளியின் அலகு - லக்ஸ்.

✨மின்சாரத்தின் அலகு- ஆம்பியர்.

✨குரோனோட்ரான் என்றால் - நேர இடவெளியை
  அளக்கும் கருவி.

✨ஃப்ரிக்வன்சி என்றால் - ஒரு நொடியில் நடக்கும்
 துடிப்புகள்.

சனி, 6 ஆகஸ்ட், 2016

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

தினம் ஒரு திருக்குறள்

P.M.ELUMALAI BT Tr.

காலை வணக்கம்.


தினம் ஒரு திருக்குறள்.


குறள்.  131.  தேதி. 5.8.2016.



ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம் :

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்  அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

அல்லது :

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

PM.ELUMALAI BT Tr. ஆண்ட்ராய்டு செயலி, யூ டியூப் வகுப்பறைகள்!' -அரசுப் பள்ளிகளின் 'ரூட்டை' மாற்றும் ஆசிரியர்கள்

http://www.asiriyar.com/2016/08/blog-post_72.html?m=1

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

புதிய கல்வி கொள்கை.

P.M.ELUMALAI BT Tr.                   ✅ புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகள்: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக...


http://www.asiriyar.com/2016/08/blog-post_86.html?m=1
P.M.ELUMALAI BT Tr.    சிந்தனை துளிகள்...
1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
3. நல்லவர்களோடு நட்பாயிருங்கள். நீங்களும் நல்லவராவீர்கள்
4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்
6. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
7. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறியுங்கள்
9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
10. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
P.M.ELUMALAI BT Tr.             நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇
தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
நகரம் - சண்டிகார்,
உலோகம் - செம்பு,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,
சிகரம் - கஞ்சன் ஜங்கா,
பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார்,
கோயில் - சூரியனார்,
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில்,
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி,
விலங்கு - புலி,
மலர் - தாமரை,
விளையாட்டு - ஹாக்கி,
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

*தமிழனின் சாதனை பட்டியல்கள்*...
P.M.ELUMALAI BT Tr
*கல்லணை* :-

உலகிலுள்ள அணைகளுக்கு
முன்னோடியான கல்லணை
கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை,
கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டினான்.

***

*மாமல்லபுரம்* :-

கடற் சீற்றத்திற்கு இடையே,
கடற்கரையோரமாக 1400
ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்
பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் நரசிம்ம பல்லவ மன்னனால்
உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள்.

மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில்
தூண்கள் செதுக்கப்பட்டன.

மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.

***

*அங்கோர்வாட் கோயில்*:-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட்
என்ற இடத்தில் இக்கோயிலை
கட்டியுள்ளான்.

இன்று வரை உலகில்
கட்டப்பட்ட வழிபாட்டுத்
தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.

40 ஆண்டுகளில் இது கட்டி
முடிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக
ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

***

*திருநள்ளாறு காரி ஈசன் கோயில்* :-

எந்த ஒரு செயற்கைகோளும்
தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3 வினாடிகள் செயலிழந்து
விடுகிறது.

அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித
பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதை பற்றி நாசா அறிவியலாளர்கள்
ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த
கோவிலின் மீது விழுந்து
கொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த
கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.

விண்வெளியில் சுற்றி
கொண்டிருக்கும்
செயற்கைகோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு
எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை.

இன்றைய அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும்
காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி
என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன
வென்று சொல்வது.

***

*கடல் நடுவே ராமேசுவரம்*:-

கடலுக்கு நடுவே உள்ள
ராமேசுவரம் தீவில் மலைகளோ
பாறைகளோ கிடையாது.

ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது. 1212 மிகப் பெரிய
தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை
மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க
முடியும். பெரும் பாறைகளை
பாம்பனிலிருந்து கடற்கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு
சென்றிருக்க முடியும் என்பது வியப்பை தருகிறது

***

*தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்*:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு
கட்டினான் என்பது புரியாத புதிர்.

கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில்
கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.

சுமார் 80 ஆயிரம் கிலோ
எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில்
நிறுவியிருக்க முடியும்.

பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம்
ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே
தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக
யுனேசுகா அறிவித்துள்ளது.

***

*தொல்காப்பியமும், திருக்குறளும்*:-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு
முன்னோடியாக விளங்குகிறது.

தமிழ் நாட்டின் எல்லைகளை
வரையறைத்து கூறியுள்ளது.

ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.

பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம்
என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக
இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள்
உலகின் 26 மொழிகளில்
வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள்
தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற்செழுமை வாய்ந்த
நூல்களை பிறமொழிகளில் இயற்ற முடியமா?

தமிழர்கள் சிந்திக்க
வேண்டும் ?

***

*அணு* :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை
...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை
அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி
எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள்,
பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல
காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்.

ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால்
கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு
என்று சொல்கிறார்கள்.

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.

அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட
பேரண்டங்களை இயக்கிக்
கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அணுவை சுற்றி மின்
காந்தம் அமைத்திருப்பதை
கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அவ்வை பாட்டியும் அணுவைத்
துளைத்து................... என்று பாடி உள்ளார்.

***

*சித்தர்கள்*:-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள்,
அறிவியலாளர்கள், மக்களை
நல்வழிப்படுத்தும் சான்றோர்கள்.

நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.

அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி
விட்டோம்.

தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு
உண்டு.

கடந்த ஆண்டு டெங்கு
காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக
அரசு அறிவித்த பொழுதே
தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள்
ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி
வைத்துள்ளனர்.

***

*வானியல்அறிஞர்கள்*:-

பூமி உருண்டை என்றும்,
சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும்,
அதைத் தொடர்ந்து நிகழும்
கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும்
அன்றே கணித்த வானியல்
வல்லுனர்கள் தமிழர்களே!

சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள
துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே
இருக்கும்.

தமிழர்கள் என்றோ
கண்டுபிடித்ததை மற்றவர்கள் இன்று கண்டறிந்து
கூறுவதை நாம் உயர்வாக
மதிக்கிறோம்.

*பூம்புகார் உலகின் தொன்மையான நகரம்*:-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட
கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும்.

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்.

அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா,
மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப்
பழமையானவை ஆகும்.

பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை
ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச்
சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.

அதில் மண் கல்லான
கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்
சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள்,
வீட்டு முற்றங்கள் ஆகியவை
காணப்படுகின்றன.

***

*உலகை கட்டி ஆண்ட தமிழன்*:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன்
அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று
போற்றி புகழும், மக்கள்
வாக்களித்து தலைவனை
தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன்
பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது
சிறப்பான ஆட்சி புரிந்து,
அம்மக்களை விடுதலையோடு வாழ
வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க
நெறிகளோடு வாழ்ந்தவர்கள்
தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன்
முப்பாட்டனின் பெருமைகள் நாம்
இவற்றை பாதுகாப்பு அழியாமல்
காப்பாற்றினாலே போதும்.

நிறைய பகிருங்கள் நமது
வரலாற்றை நமக்கு அடுத்துவரும்
தலைமுறையினர் தெரிந்து
கொள்ளவும் நமது முன்னோர்கள்
எவ்வளவு சிறப்பான
வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள்
என்பதை அறிய இது உதவும்.

நன்றி, வணக்கம்.
P.M.ELUMALAI BT Tr.   *உறவுகள் மேம்பட A to Z*

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.