>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 27 ஜூன், 2017

[26/06, 6:47 AM] ‪+91 97907 88333‬: குரூப் -2அ தேர்வுக்கான வேதியியல்

* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி

* இரும்பின் தாது - மாக்னடைட்

* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்

* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்

* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை

* நீரில் கரையாத பொருள் - கந்தகம்

* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்

* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி

* வெப்ப கடத்தாப் பொருள் - மரம்

* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு

*இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்

* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்

* கலவைப் பொருள் என்பது - பால்

*கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்

* கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

* தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

*போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

* அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

* கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

* 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

* 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

*100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

* பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

* மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

* எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

*செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

* கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

* மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

*அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்

*பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

* சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+

* சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

*ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை

* எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

* எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

* நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7

* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

*எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான்  (ஃபோம்மைட்)

*ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4

*உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3.

*ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12

* காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

* அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

* காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

* குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

*சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

*பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்

*நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை - தேனிரும்பு

* நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்

*பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்

* சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்

*இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்

* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்

* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

*அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்

* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்

* இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

* வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

* பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

* யூரியாவின் உருகு நிலை - 135o C

* இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்

* இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்

* இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

* புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்

* நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்

* எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C

* கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்

*நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்

* ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு

* நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை

* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்

* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்

* ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை

* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
[26/06, 6:56 AM] ‪+91 97907 88333‬: # கால்நடைகளுக்கு வரும் பாக்டீரிய நோய்களில் ஓன்று – ஆன்த்ராக்ஸ்.
# கால்நடைகளின் வாய் மற்றும் பாதங்களைத் தாக்கும் வைரஸ் நோய்
கோமாரி நோய்
# குடிநீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள் – கால்சியம்
குளோரோ ஹைப்போ குளோரைட்.
# சின்ன அம்மைக்குத் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் – எட்வர்டு
ஜென்னர்.
# எலும்புருக்கி நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து – ஐஸோநியாசிட்
# DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் – டிப்தீரியா, கக்குவான், இரண ஜன்னி
# BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் – காச நோய்
# காலரா பரவக் காரணமான நுண்ணுயிர் – விப்ரியோ காலரே
# நலம் என்பதன் முப்பரிமாணங்கள் – உருப்பரிமாணம், உளப்பரிமாணம் மற்றும் சமூக பரிமாணம்
# அக்காலிபா இண்டிகா என்பது எத்தாவரம் – குப்பை மேனி
# அகாலிபா எனும் மருந்து எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது – குப்பை மேனி
# கடத்திகளின் மூலம் கடத்திகளின் மூலம் பரவும் நோய் – ரேபிஸ்
# எலும்புருக்கி நோய் – தொற்றும் தன்மையுடைய நோய்
# குழந்தைகளின் தைராய்டு சரப்பி சரிவர வேலை செய்யாவிட்டால்
தோன்றும் நோய் – கிரட்டினிசம்
# புகையிலையில் இருக்கும் நச்சுப் பொருள் – நிக்கோடின்.
# ஈரடுக்கு உயிரிகள் என்பவை – குழியுடலிகள்
# கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை – வெப்பச் சலன மழை
# காற்றில் உள்ள நீராவியின் அளவே – ஈரப்பதம்
# வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று – லூ
# ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் – கரிசல் மண்
# நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் – வண்டல் மண்
# மணல் ஆறு என குறிப்பிடப்படுவது – கடற்கரை
# புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் – செம்மண்.
# செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் – அதில் உள்ள இருந்பு
ஆக்சைடு.
# ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது – தொழுநோய்
# DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் – டிப்தீரியா,
கக்குவான், இரண ஜன்னி
# BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் – காச நோய்
[26/06, 6:56 AM] ‪+91 97907 88333‬: பொது அறிவு - புவியியல் - இயற்கைப் பேரழிவுகள் :

1. படிப்படியாக நடைபெறுகிற ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்படுவது? - வறட்சி

2. திடீரென தோன்றுகின்ற இடர் எது? - நிலநடுக்கம்

3. இந்தியாவில் நிலநடுக்கம் அதி அபாய நேர்வு மண்டலத்தில் உள்ள பகுதி எது? - கட்ச் வளைகுடா

4. தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது எப்போது? - 2004, டிசம்பர் 26

5. இந்தியாவில் எந்த மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காலந்தவறாமல் ஏற்படுகிறது? - உத்திரப் பிரதேசம், பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம்

6. தொழிற் புரட்சிக்குப் பின்னர் வாழ்க்கைத் தர உயர்வுக்குச் சிறப்பான காரணம் என்ன? - அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி

7. தீ விபத்து ஏற்பட எளிதான இட அமைவு எது? - பட்டாசுத் தொழிற்சாலை

8. அணுசக்திப் பொருள் கசிவினால் விபத்து ஏற்பட்ட இடம் எது? - செர்னோபில்

9. போபால் விஷவாயு கசிவு பேரிடர் ஏற்பட்டது எப்போது? - 1984, டிசம்பர் 2

10. போபால் விஷவாயு மரணத்திற்குக் காரணமான நிறுவனம் எது? - யு னியன் கார்பைடு

11. போபால் விஷவாயு மரணத்திற்குக் காரணமான வாயு எது? - மீத்தைல் ஐசோசயனேட்

12. பேரிடர் தாக்கத்தை குறைக்கும் அனைத்து நடவடிக்கைகள் பற்றிக் கூறும் சொல் எது? - பேரிடர் ஆயத்தபடல்

13. இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் இந்திய கடலோர சு றாவளி கண்டுபிடிக்க ................ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? - ராடார்

14. ஒவ்வோர் ஆண்டும் உலகப் பேரிடர் குறைப்பு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? - அக்டோபர் 13

15. தேசிய பேரிடர் மேலாண்மை தலைவர் யார்? - பிரதமர்

16. மாநில பேரிடர் மேலாண்மை தலைவர் யார்? - மாநில முதலமைச்சர்

17. புயல்கள் எப்போது ஏற்படுகிறது? - மே - ஜூன்,
அக்டோபர் - நவம்பர்

பிரபலங்களின் இயற்பெயர் :-

1. அன்னை தெரசா - ஆக்னஸ் கோன்க்ஸ் பொஸாகி

2. விவேகானந்தர் - நரேந்திரநாத் தத்தா

3. ராமகிருஷ்ண பரமஹம்சர் - கங்காதர் சட்டர்ஜி

4. புதுமைப் பித்தன் - விருத்தாச்சலம்

5. வீரமாமுனிவர் - கான்ஸ்டன்டைன் ஜோஸப் பெஸ்கி

6. பாரதிதாசன் - கனகசுப்புரத்தினம்

7. காரைக்கால் அம்மையார் - புனிதவதி

8. மறைமலை அடிகள் - வேதாசலம்

9. பரிதிமாற் கலைஞர் - சூரிய நாராயண சாஸ்திரி

10. கல்கி - கிருஷ்ணமூர்த்தி
[26/06, 6:58 AM] ‪+91 97907 88333‬: புராணங்கள் இயற்றியவர்கள்:-
------------------------------

🎻 கந்த புராணம் - கச்சியப்ப சிவாசாரியார்
🎻 பாகவத புராணம் - செவ்வைச் சூடுவார்
🎻 கூர்ம புராணம் - புகழேந்தி
🎻 லிங்க புராணம் - புகழேந்தி
🎻 விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர்
🎻 அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர்
🎻 ஆதி புராணம் - மண்டல புருடர்
🎻 மேரு மத்தர புராணம் - வாமன முனிவர்
🎻 கோயில் புராணம் - உமாபதி சிவாசாரியார்
🎻 பெரியபுராணம் - சேக்கிழார்
🎻 சீரா புராணம் - உமறுப்புலவர்
[26/06, 12:03 PM] ‪+91 90429 51105‬: 🎉அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்...!🎉


சர்வதேச போதை ஒழிப்பு தினம்


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள், உடல் நலக்கோளாறு, மனநல நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1988ஆம் ஆண்டுமுதல் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச ஆதரவு தினம்


சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா.சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது.

சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர் கைதிகள்வரை தொடர்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக 1997ஆம் ஆண்டில் ஐ.நா.சபை ஜூன் 26ஆம் தேதியை சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் (அ) சர்வதேச ஆதரவு தினமாக அறிவித்தது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி


வந்தேமாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் பிறந்தார்.

இவரது முதல் நாவலான துர்கேஷ் நந்தினி 1865-ல் வெளிவந்தது. நமது தமிழ் இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வும், பெருமிதமும் மக்கள் மத்தியில் பரப்பினார்.

வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம் என்பார் தாகூர். 1882-ல் வெளிவந்த வந்தேமாதரம் பாடல் இடம்பெற்ற இவரது ஆனந்தமட் நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.

தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 56-வது வயதில் (1894) மறைந்தார்.
ம.பொ.சிவஞானம்


விடுதலைப் போராட்ட வீரர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஞானப்பிரகாசம்.

வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு என்பது உட்பட ஏராளமான நு}ல்களை எழுதியுள்ளார். எனது போராட்டம் என்ற சுயசரிதையையும் எழுதினார்.

இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நு}லுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் முக்கியப் பங்காற்றியவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 89வது வயதில் (1995) மறைந்தார்.
1950ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்டத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இந்திரா காந்தி, இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
[26/06, 1:19 PM] ‪+91 90429 51105‬: தியாகத் திருநாள்!..



🌉 தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

பண்டிகை வரலாறு :

🌉 இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தான். இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.

🌉 இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார்.

🌉 மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

நல்வழி காட்டும் ரம்ஜான் நோன்பு! :

🌉 முஸ்லிம்களுக்கான ஐந்து கடமைகள் முக்கியமானது. கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்துமே அந்த கடமைகள். நோன்பு உங்களுக்கு கேடயமாக இருக்கிறது என்கிறது இஸ்லாம்.

🌉 தீமைகள் பக்கம் செல்வதை தடுத்து, நன்மைகளின் பக்கம் அது வழிநடத்துவதால் அதை கேடயம் என்கிறது இஸ்லாம். உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது போல், நோன்பு உங்களுக்கும் விதியாக்கப்பட்டுள்ளது என குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

🌉 இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும்.

மனிதனை பக்குவப்படுத்தும் ரம்ஜான் நோன்பு !!

🌉 நோன்பு இருக்கும்போது உணவை மட்டுமல்ல, பொய் மற்றும் புறம் பேசுதல், மோசடி செய்வது, கெட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது, உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கிறோம்.

🌉 நபிகள் நாயகம், ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமை. மற்றபடி நாள், மாதக் கணக்கில் நோன்பு வைக்க வேண்டாம். உங்கள் உடல் நலத்தையும் குடும்பத்தையும் கவனிப்பது அவசியம் என்றார். அதனால் நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான். அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

🌉 ஆன்மிக வழிகாட்டுதல் மட்டுமே இஸ்லாமியத்தின் நோக்கம் கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. தண்ணீரை வீண் விரயம் செய்யக் கூடாது என குர்ஆனில் வசனம் வருகிறது. இந்த வசனத்துக்கும் மனிதனின் பக்குவப்பட்ட செயல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

🌉 இன்றைய காலகட்டத்தில் வட்டி வட்டத்துக்குள் விழாமல்கூட ஒருவரால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். ஜெயிக்க முடியும். அப்படி சந்தோஷமாக இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால்தான், வட்டி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு நிம்மதி தரும் என இஸ்லாம் கூறுகிறது. இதிலும் ஆன்மிகத்தை தாண்டிய சமூகப் பார்வை இருப்பதை அறியலாம்.

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.....!!!
[26/06, 10:00 PM] ‪+91 97907 88333‬: விருதுகள் பற்றிய ஒரு அலசல் :-

🏅 உலகில் மிக உயரிய விருது - நோபல்

🏅 நோபல் பரிசு எப்பொழுதுலிருந்து வழங்கப்பட்டு வருகிறது - 1901

🏅 நோபல் பரிசு அறிமுகம் செய்தவர் - ஆல்பிரட் நோபல்

🏅 நோபல் பரிசு வழங்கப்படும் நாடு - ஸ்வீடன்

🏅 நோபல் பரிசு வழங்கப்படும் தினம் - டிசம்பர் 10

🏅 இருமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் - மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன்

🏅 சினிமா விருதில் உயரிய விருது - ஆஸ்கர்

🏅 ஆஸ்கர் சிலையின் உயரம் - 13.5 அங்குலம்

🏅 ஆஸ்கர் விருது கலவை - தங்கம், பிளாட்டினம்

🏅ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் - பானு அத்தகையா

🏅 இலக்கியத்தில் உயரிய விருது - புக்கர் விருது

🏅புக்கர் விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் - சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், வி. எஸ். நைபால்

🏅 சல்மான் ருஷ்டி எழுதிய நூல் - Midnight Children (1981)

🏅 அருந்ததி ராய் எழுதிய நூல் - God of Small Things (1997)

🏅 வி. எஸ். நைபால் எழுதிய நூல் - In a Free State(1971)

🏅அறிவியல் துறையில் உயரிய விருது - கலிங்கா

🏅 கலிங்க விருது வழங்கும் அமைப்பு - UNESCO

🏅 இசைத்துறைக்கான உயரிய விருது - கிராமி விருது

🏅 கிராமி விருது வழங்கும் நாடு - அமெரிக்கா

🏅 கணதத்திக்கான உயரிய விருது - ஏபல் விருது

🏅 ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் விருது - ராமன் மகசேசே விருது

🏅 பத்திரிகை துறையில் உயரிய விருது - புலிட்சர் விருது

🏅 புலிட்சர் விருது வழங்கப்படும் நாடு - அமெரிக்கா