>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 25 டிசம்பர், 2016


*IAS தேர்வு என்றால் என்ன ?*

IAS மற்றும் IPS உள்ளிட்ட
24 பணிகளுக்காக
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

*F.A.Q*
*IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

*IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?*
குறைந்தபட்ச வயது :
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர்
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

*ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

*ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

*IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

*IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
*என்னால் முடியுமா ?*
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.
உண்மையான போட்டியாளர்கள்
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

*IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*
*தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?*
முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

*IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

*IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

*IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*
இல்லை.
அப்படி எதுவும் இல்லை..
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும்
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
இளைஞர்களுக்கு உற்சாகப் படுத்துங்கள்.
நமது ஊரில் IAS. IPS. போன்ற வேலைக்கு *நமது இளைய தலைமுறை ஆர்வம் கொள்ள செய்வோம்.*

                 கல்விச்

                                 சிகரம் களின்
                                           கிருஸ்துமஸ்   வாழ்த்துகள் !!

மின்னணு முறையில் பணப்பரிமாற்றம்.... மத்திய அரசின் பரிசுத்திட்டம் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் இரு பரிசுத் திட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.


             மின்னணு முறையில் பணப்பரிமாற்றம்.... மத்திய அரசின் பரிசுத்திட்டம்
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் இரு பரிசுத் திட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன் படி மின்னணு முறையில் பணம் செலுத்தும் 15 ஆயிரம் பேர் நாள் தோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இதோடு வாரம் தோறும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 5 ஆ‌யிரம் ரூபாயும் வழங்கப்படும். வரும் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் மெகா குலுக்கலில் பொது மக்களில் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய், 50 லட்ச‌ம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வியாபாரிகள் 7 ஆயிரம் பேர் வாரம் தோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர தனியாக 3 வியாபாரிகள் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி நடக்கும் மெகா குலுக்கலில் 3 வியாபாரிகளுக்கு 50 லட்சம், 25 லட்சம், 12 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தாண்டு நவம்பர் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 13ம் தேதி வரை 50 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலான மின்னணு பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்பவர்களுக்கு இப்பரிசுகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
யுபிஐ, யுஎஸ்எஸ்டி, ஆதார், ரூபே கார்டு முறைகளிலான பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எனினும் இத்திட்டம் நாட்டின் 100 முக்கிய நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும். 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது

      5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி
நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்.
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாற்றம் செய்வதற்கான மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைகிறது என மனிவதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது. தற்போது 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையானது நடைமுறையில் உள்ளது.
தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பி.இ) கடந்த வருடம் டெல்லியில் கூடியது. அப்போதைய மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது 8–வது வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாய தேர்ச்சி முறை வேண்டாம் என்று மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
அப்போது ஸ்மிருதி இரானி பேசுகையில், 8-ம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர் என்று தெரிவித்து இருந்தார். 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் பெயில் ஆக்க கூடாது என்ற திட்டம் முந்தைய காங்கிரஸ் தலையிலான அரசினால் கொண்டுவரப்பட்டது.

53 வயதை கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–
அரசுக்கு பரிந்துரை
2003–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 53 வயதை கடந்த நிலையில் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
அவர்கள் இதுவரை பணியாற்றிய அனுபவமே போதுமானது என்பதாலும், பயிற்சி முடித்துவிட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கூட பணியாற்ற முடியாமல் போவதால் அரசுக்கு பண விரயம் உண்டாகும் எனவும், 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பதவியில் இருந்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் பவானிசாகரில் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று பயிற்சி துறைத்தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
விலக்கு அளிக்கபடுகிறது ;
தமிழ்நாடு அரசு தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் சங்கத்தின் கோரிக்கை மற்றும் பயிற்சி துறைத்தலைவரின் பரிந்துரை ஆகியவற்றை அரசு கவனமாக பரிசீலித்தது. இந்த பரிந்துரையை ஏற்கலாம் என்று முடிவெடுத்து உள்ளது.
அதன்படி 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெறும்போதும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பெறும் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.  இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜா நன்றி தெரிவித்து உள்ளார்

பள்ளிகளுக்கு 3-ஆம் பருவ பாடப் புத்தகம் அனுப்பி வைப்பு.

பள்ளிகளுக்கு 3-ஆம் பருவப் பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன.
அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஜன.2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகின்றன.பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கைகளுக்கு கிடைக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.அதன்படி 3-ஆம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அண்மையில் வந்தடைந்தன.
இந்தப் புத்தகங்களை தற்போது பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியில் கல்வித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் ஆதிதிராவிட நலத் துறை பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது.மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் புத்தகம் வழங்கப்படுகிறது.
வியாழக்கிழமை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர்கள் மாவட்ட கல்வித் துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து, மாணவர்களுக்கான புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.இந்த புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

EMIS இந்த ஆண்டு 11ஆம் வகுப்பிற்கும் பதிவு செய்து முடிக்க வேண்டும்.

மாணவர்கள் சிந்தித்து படிப்பதற்கு ஏற்ப கல்வி கற்பிப்பது எப்படி? சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

பள்ளிக்கூட மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து படிப்பதற்கு ஏற்ற கல்வியை வழங்கும் வகையில் சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மனப்பாடம் செய்யாமல்...
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். அவர்கள் புத்தகத்தின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் முடிவு செய்தது.
இதனையடுத்து நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
104 ஆசிரியர்கள்
பயிற்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நிபுணத்துவம் பெற்ற 104 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு எப்படி பாடங்களை கற்பிக்க வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் மாணவர்கள் பாடம் தொடர்பாக அவர்களாகவே சிந்தித்து கேள்விகள் கேட்க வேண்டும். மனப்பாடம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த பாடத்தை கற்பிக்கிறாரோ? அந்த பாடம் தொடர்பாக பார்த்தல், கேட்டல், பேசுதல், படித்தல், படைப்பாற்றல் ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
வல்லுனர்கள்
இந்த பயிற்சி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. மற்ற பாடங்களுக்கும் விரைவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
நேற்று நடைபெற்ற தமிழ் பாடத்திற்கான பயிற்சியை வல்லுனர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த எல்.ராமமூர்த்தி, ந.நடராஜபிள்ளை, பி.ரத்தினசபாபதி, மு.பாலகுமார், து.சேதுபாண்டியன், வி.இளங்கோவன், சாம் மோகன்லால், மதுரை புலவர் சங்கரலிங்கனார் உள்பட பலர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து இருந்தார்.

தமிழகத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டமானது RMSA உடன் இணைக்க மத்திய அரசு முடிவு.

ஆசிரியர்களுக்கு 2016-17 ஆம் கல்வி ஆண்டில் இன்று வரை நடைபெற்றுள்ள‌ 5 CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடு செய்யும் விடுப்பின்காலாவதியாகும் தேதியின் விவரங்கள்..

தலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள்?

தலைமைச் செயலாளருக்கு இருக்கும் பொறுப்புகள் கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா? 
1. மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராக இருப்பவர். அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவர். மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமைச் செயலாளரின் முக்கியப் பணி. 
2. அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் இவர்தான். அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதும் தலைமைச் செயலாளரின் பொறுப்பு. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.
3. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.
4. குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் ஆகியவற்றையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும். 
5. மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமைச்செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார். 
6. தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யார் யாருக்கு எந்த அறை? என்று ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமைச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு. 
7. மைய ஆவணக் காப்பகம், தலைமைச் செயலக நூலகம் ஆகியவற்றையும் நிர்வகிப்பார். தலைமைச் செயலகத்தில் உள்ள காவலாளிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர். 
8. முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும். 
9. எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு. 
10. அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும். 
இவ்வளவு அதிகாரங்கள் தலைமைச் செயலாளருக்கு இருக்கின்றன.

வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பள்ளியிலேயே, போட்டித் தேர்வு முறைகளை தெரிந்து கொள்ள, பயிற்சி வினாத்தாள் மூலம் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, வாரந்தோறும், புதிய வினாத்தாள்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் வைக்கப்படுகின்றன.
போட்டி தேர்வுகள் போல வினாக்களுக்கு, அப்ஜெக்டிவ் என்ற கொள்குறி வகையில் குறிப்புகள் வழங்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய, மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இத்தேர்வு முறையில், இன்னும் தரமான வினாத்தாள்களை தயாரிக்கவும், மாணவர்கள் புரிந்து, சிந்தித்து, விடைகளை தேர்வு செய்யும் வகையிலும், வினாத்தாள்கள் தயாரிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடந்த பயிற்சியில், மைசூரில் உள்ள, இந்திய மொழிகள்
நிறுவனத்தைச் சேர்ந்த, சாம் மோகன்லால், நடராஜ பிள்ளை, பாலகுமார் உட்பட, பல பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.

EMIS இந்த ஆண்டு 11ஆம் வகுப்பிற்கும் பதிவு செய்து முடிக்க வேண்டும்.

மாணவர்கள் சிந்தித்து படிப்பதற்கு ஏற்ப கல்வி கற்பிப்பது எப்படி? சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

பள்ளிக்கூட மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து படிப்பதற்கு ஏற்ற கல்வியை வழங்கும் வகையில் சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மனப்பாடம் செய்யாமல்...
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். அவர்கள் புத்தகத்தின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் முடிவு செய்தது.
இதனையடுத்து நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
104 ஆசிரியர்கள்
பயிற்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நிபுணத்துவம் பெற்ற 104 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு எப்படி பாடங்களை கற்பிக்க வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் மாணவர்கள் பாடம் தொடர்பாக அவர்களாகவே சிந்தித்து கேள்விகள் கேட்க வேண்டும். மனப்பாடம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த பாடத்தை கற்பிக்கிறாரோ? அந்த பாடம் தொடர்பாக பார்த்தல், கேட்டல், பேசுதல், படித்தல், படைப்பாற்றல் ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
வல்லுனர்கள்
இந்த பயிற்சி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. மற்ற பாடங்களுக்கும் விரைவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
நேற்று நடைபெற்ற தமிழ் பாடத்திற்கான பயிற்சியை வல்லுனர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த எல்.ராமமூர்த்தி, ந.நடராஜபிள்ளை, பி.ரத்தினசபாபதி, மு.பாலகுமார், து.சேதுபாண்டியன், வி.இளங்கோவன், சாம் மோகன்லால், மதுரை புலவர் சங்கரலிங்கனார் உள்பட பலர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து இருந்தார்.

DEE PROCEEDINGS- DATE:5/12/1016- PANCHAYAT UNION TPF ACCOUNT CHANGE TO AG OFFICE -CLARIFICATION REG




அரைச் சம்பள விடுப்பு ஊதியம் கணக்கிடுதல் குறித்து விளக்கம்


DSE - CAREER GUIDANCE BOOKLET FOR 10 TH STD STUDENTS...

Flash News: முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல் (Clear Copy )