>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 19 ஜூலை, 2018

School Morning Prayer Activities - 19.07.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

பழமொழி :

A little pot is soon hot

சிறிய பானை சீக்கிரம் சூடாகும்

பொன்மொழி:

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

-மாத்யூஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்

2.எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்

நீதிக்கதை :

நாயும் அதன் நிழலும்
The Dog and His Shadow Moral Story in Tamil

முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.


செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.

செல்லும் வழியில் ஒரு பாலத்தை வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.

அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.

அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.

அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.

நீதி: பேராசை பெரு நஷ்டம்

இன்றைய செய்தி துளிகள் : 

1.நீர்மட்டம் 106.220 அடியை எட்டியது: மேட்டூர் அணை நாளை திறப்பு

2.தொலைநிலைக் கல்வி தொடர்பான விதியை யூ.ஜி.சி. திருத்தியதற்கு இடைக்கால தடை


3.சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது: உச்ச நீதிமன்றம்

4.20 ஆண்டுகால சேவையை நிறுத்திக் கொண்டது யாஹூ மெசஞ்ஜர்!

5.டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு!

5, 8ஆம் வகுப்புகளுக்கு 'அனைவரும் தேர்ச்சி' திட்டம் ரத்து

11th - Economics - Unit Test Model Question Paper 2018

🎀 "No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER

காலையில் பில் மாலையில் பணம்............


ஞாயிறு, 15 ஜூலை, 2018

வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?



உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கியமான தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.





"வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?"

தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் தங்களது குறிப்பிடத்தக்க நேரத்தை குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பில்தான் செலவிடுகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால், மற்ற சில செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கே சவால்விடும் வகையிலான புதுப்புது வசதிகளை பயனர்களுக்கு அளித்த வண்ணம் உள்ளன. எனவே, வாட்ஸ்ஆப் நிறுவனமும் தனது போட்டி செயலிகளான டெலிகிராம், ஸ்நேப்சாட், ஹைக் போன்றவை ஏற்கனவே அளித்துக்கொண்டிருக்கும் வசதிகளை தனது பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாக கூறுகிறது.

அந்த வரிசையில், ஒவ்வொரு வாட்ஸ்ஆப் பயனருக்கும் பயனுள்ளதாகவும், அதே சமயத்தில் தலைவலியாகவும் இருக்கிறது குரூப்களில் பகிரப்படும் எண்ணற்ற குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகள். அவற்றை தடுப்பதற்கு அட்மின்கள் படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. இந்நிலையில், அதற்கான தீர்வை அளித்துள்ளது வாட்ஸ்ஆப் செயலியின் புதிய வசதி.

உதாரணத்திற்கு, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 133 பேர் உள்ளதாகவும், அதில் அட்மின்களாக உள்ள மூன்று பேர், அந்த குரூப்பில் தாங்கள் மட்டுமே தகவல்களை பகிர வேண்டுமென்று விரும்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கனவாக இருந்த அட்மின்களின் இந்த விருப்பம் தற்போது சாத்தியமாகியுள்ளது.



இதை எப்படி செய்வது?

1. நீங்கள் அட்மினாக இருக்கும் ஏதாவதொரு குரூப்புக்குள் நுழையுங்கள்.

2. அதில் குரூப்பின் பெயரையோ அல்லது 'Group info' என்பதையோ தெரிவு செய்யவும்.


3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.

5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.


அவ்வளவுதான்! இனி உங்கள் குரூப்பில் பத்து பேரோ, நூறு பேரோ அல்லது இருநூறு பேர் இருந்தாலும், அட்மின்களால் மட்டும்தான் குரூப்பில் தகவல்களை பதிவிடவோ அல்லது பகிரவோ முடியும்.

HOW TO e-FILE INCOME TAX - STEP BY STEP VIDEO

காமராஜர் கட்டுரை மற்றும் கவிதை ,பாடல் மற்றும் திரைப்படம்



Image result for காமராஜர்

பெற்றோரை செருப்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்...

சேலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவனின் பெற்றோரை செருப்பால் அடித்த கணித ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேலம் 4 ரோட்டில் அரசு உதவிபெறு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவர்
ஒருவர், கடந்த இருதினங்களுக்கு முன்பு வகுப்பில் பேசிக்கொண்டிருந்தார். இதனை முதுகலை கணித பட்டதாரி ஆசிரியை ஒருவர், கண்டித்துள்ளார். 

மேலும், அவரது குடும்பத்தினரை பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் இதுபற்றி கேட்டனர். அப்போது, அவர் சம்பந்தப்பட்ட  ஆசிரியையிடம் அவர்களை அனுப்பி வைத்தார். நடந்த சம்பவம் குறித்து ஆசிரியையிடம், பெற்றோர் பேசிக்கொண்டிருந்தனர்.



அப்போது திடீரென கோபமடைந்த ஆசிரியை, பெற்றோர்களை கடுமையான சொற்களால் பேசியுள்ளார். மேலும் இருதரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பள்ளியிலிருந்து பெற்றோர் திரும்பிச் செல்ல முயன்றபோது, அந்த ஆசிரியை தனது செருப்பை கழற்றி வீசியுள்ளார். இது பெற்றோரின் முதுகில் பட்டு கீழே விழுந்தது.

தொடர்ந்து செருப்பை எடுத்த ஆசிரியை, பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்,

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரித்தனர். இதனிடையே பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கணித ஆசிரியையை சஸ்பெண்ட் செய்துள்ளது.
............................................................................................................................................................................................................

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி
(டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.


அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

1st standard EVS - Training introduction for text book training Videos



1st standard English - Training introduction for text book training Videos


1st standard Maths- Training introduction for text book training Videos



1st standard Tamil- Training introduction for text book training Videos


Eleventh Standard - All - Training Intro videos




Eleventh Standard - Tamil - Training Intro videos - Click here .......

Eleventh Standard -Advance  Tamil - Training Intro videos - Click here .......

Eleventh Standard - English  - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Maths - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Physics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Botany - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Economics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Zoology - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Geography - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Mathematics & Statistics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Statistics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Computer - Training Intro videos - Click here .......

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து மறு தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

கோவை:நாடு முழுவதும், கடந்த ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன.
நடப்பாண்டு, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகளுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 18 முதல், ஜூன், 3ம் தேதி வரை நடந்தது.நாடு முழுவதும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, ஜூன், 22ம் தேதியும்; இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 23ம் தேதியும் நடந்தன.
சென்னை, தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் நடந்த, இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, 32 மாணவர்களும், வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி, முத்தமிழ் செல்வன் கூறியதாவது:ஐ.சி.ஏ.ஆர்., சார்பில் நடப்பாண்டு நடத்தப்பட்ட, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள், அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு தேர்வுகளுக்கான தேதி, ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகள் தொடர்பான தகவல்களுக்கு, 011 - 25843635, 011 - 25846033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

'பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு'

கோவை:''பொறியியல் சேர்க்கைக்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன; எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரலாம்,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆலோசகர், திலீப் மால்ஹெடே தெரிவித்தார்.

கோவையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் கடந்து, தொழில்முனைவோராக உயர்த்த, ஹெக்கத்தான் போன்ற, பலவிதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' நிதிகளும் வழங்கப்படுகின்றன.
பொறியியல் கல்லுாரிகளில், மாணவர்களுக்கான, 'கிரெடிட்' புள்ளிகள், 190 என்பதிலிருந்து, 160 என்ற அளவில் குறைக்கப்பட்டதால், ஆசிரியர், மாணவர்களுக்கான எண்ணிக்கை விகிதமும் மாற்றப்பட்டது. தனியார் கல்லுாரிகளில், கூடுதலாக ஆசிரியர்கள் தேவை எனும்பட்சத்தில், அவர்கள் வைத்துக் கொள்வதற்கு தடையில்லை.
ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், பொறியியல் பிரிவின் கீழ், பாடத்திட்டங்களை தரம் உயர்த்தி, அறிமுகப்படுத்தியுள்ளோம். சில கல்வி நிறுவனங்கள், இப்பாடத்திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.இதை அடிப்படையாக வைத்து, மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து பதில் அளிக்கும் வகையில், தேர்வு முறைகளிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, எஸ்.எஸ்.பி.சி.ஏ., எனப்படும் ஆராய்ச்சி திட்டத்தில், இந்தியாவில் இருந்து, 10 அணிகள், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை, அமெரிக்க மாணவர்களும், நான்காம் இடத்தை இந்திய மாணவர்களும் வென்றனர் என்பது பெருமைக்குரியது.
பொறியியல் சேர்க்கையின் கீழ், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தயார்படுத்திக் கொள்வதில், மனதளவில் மாணவர்கள் பல்வேறு அழுத்தங்களை சந்திப்பது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் செலவிடும் நிலை உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த, ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இது சார்ந்த இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில், நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

'நீட்' தேர்வு முடிவு: இன்று வெளியீடு...

சென்னை:உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.நாடு முழுவதும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., போன்றவற்றை படிக்க, அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 1,215 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு, ஜூலை, 6ல் நடந்தது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட, நாடு முழுவதும், 42 நகரங்களில் தேர்வு நடந்தது.தேர்வு முடிவுகள், www.nbe.edu.in என்ற இணையளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.
கவுன்சிலிங் அட்டவணை உள்ளிட்ட விபரங்கள், www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு பள்ளியில் பதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு வசதி

சென்னை:'பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, https://tnvelaivaaippu.gov.in என்ற, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில், நேரடியாக பதிவு செய்யும் வசதி, 2011 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அன்று முதல், 30ம் தேதி வரை, 15 நாட்களுக்கு, ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, பள்ளியிலேயே, இணையதளம் வழியே பதிவு செய்யலாம். 
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம் அல்லது தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம்.பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே பதிவு செய்துள்ள மாணவர்கள், அந்த பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில், தாங்கள் படித்த பள்ளிகளை அணுகி, பிளஸ் 2 கல்வித் தகுதியை, கூடுதலாக பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, புதிதாக பதிவு செய்யும் மாணவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் ஆகிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி, பதிவு மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.