>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

இன்று 03-09-2017 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி படங்கள்


































































































நீல திமிங்கல விளையாட்டுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது!!...


மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்று வழக்குகளை
விசாரித்தனர். அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “இணையதளத்தில் புளூவேல் எனப்படும் நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடி இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்“ என்று முறையிட்டார். ஆனால் இந்த பிரச்சினை குறித்து ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ–மோட்டோ) விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் இதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்யுமாறும், அதை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடுமாறும் ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவு வருமாறு:–
“புளூ வேல் விளையாட்டால் 19 வயது மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ரஷியாவில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 ஆபத்தான கட்டளைகளை தாண்டி தற்கொலை என்ற கட்டளையுடன் விளையாட்டு முடிகிறது.
மதுரையில் இறந்த மாணவர் விக்னேஷ், பி.காம் 2–ம் ஆண்டு படித்துள்ளார். ‘புளூவேல் ஒரு விளையாட்டு அல்ல, விபரீதம்‘ என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதோடு விளையாட்டில் நுழைந்தால், அதிலிருந்து வெளியே வர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகி இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளனர். ஆனால் இந்த மாணவர் விதிவிலக்காக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புளூவேல் விளையாட்டை நடத்தும் நிர்வாகி, மாணவன் விக்னேஷின் வீடு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வதற்கு ஏற்றதாக இல்லை என தெரிந்து வைத்திருக்கலாம். மதுரையில் இந்த விளையாட்டை 75 பேர் விளையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.
விளையாட்டில் நுழைபவர்களை அதன் நிர்வாகி மன ரீதியாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தற்கொலைக்கு தூண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் இணையதளத்தில் குழந்தைகள் என்ன விளையாடுகின்றனர் என்பது கண்காணிக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் உள்ள இன்டர்நெட் மையங்களில் இணையதளம் மூலம் புளூ வேல் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக தெரிகிறது.
இந்த விளையாட்டில் 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் தான் இரையாக்கப்படுகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை நடத்துபவர்கள் குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டின் தொடக்கம் மகிழ்ச்சியானதாகவும், முடிவு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி விடுகின்றனர்.
இதனால் இந்த விளையாட்டால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புளூவேல் விளையாட்டிலிருந்து மாணவர்கள், இளைஞர்களை பாதுகாக்க, அவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போலீசாரும், சமூக ஆர்வலர்களும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
குழந்தைகள் கணினி, செல்போனில் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியமான கடமையாகும். புளூவேல் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, செல்போனில் இருந்து இந்த விளையாட்டுகளை நீக்க வேண்டும். புற்றுநோய் போல் பரவி வரும் இந்த விளையாட்டின் கொடூர வளர்ச்சியை தடுக்க சரியான நேரம் வந்துள்ளது. இதில் பெற்றோரும், போலீசாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் இந்த விளையாட்டை தடுக்க போதிய அமைப்பு முறை இல்லை. இதனால் பொதுமக்களின் நலனை கருதி கோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிடுகிறது. ஐகோர்ட்டு இதனை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது.
இந்த வழக்கில், மத்திய தகவல்–தொடர்புத் துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை சைபர் கிரைம், சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை இயக்குனர்கள், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனுத்தாக்கல் செய்யவும், இந்த வழக்கை வருகிற 4–ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடவும் மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்.“
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

SCERT - STATE LEVEL POSTER PREPARATION COMPETION FOR 9th TO 12th STUDENTS - DIR PROC



செல்போன், கணினி பயன்படுத்தும் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள்:பெற்றோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்..


குழந்தைகள் செல்போன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ப்ளூ வேல்’ எனப்படும் மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டு, குழந்தைகள் மனதில் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளி மாணவர்கள் இணையதளத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சமீபகாலமாக மாணவர்கள் இணையதளங்களில் பயனற்ற, தேவையில்லாத மற்றும் மன அழுத்தம் தரக்கூடியவிளையாட்டுகளை விளையாடுவதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவது ஊடகங்கள் வழியாக தெரியவருகிறது. எனவே, மாணவர்கள் இணையதளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
* கணினி, செல்போன் வழி யாக இணையதளங்களில் உள்ள தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபற்றி அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பள்ளிகளில் தினமும் நடைபெறும் காலை வழிபாட்டு கூட்டத்தின்போது தலைமை ஆசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆலோசகர்கள் மூலம் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
* இணைய தளங்களில் தொடர்ந்து செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதால் ஏற்படும் உடல், மனரீதியிலான பாதிப்புகளைப் பள்ளி அறிவிப்பு பலகையில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தெரிவிக்க வேண்டும். புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு மைதானத்துக்குச் சென்று விளையாடுவது ஆகியவற்றில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
* தனிமைக்கு இடம்தராத வகையில், குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு, அவர்களோடு கலந்துரையாட வேண்டும். தனிமையில் இருக்கும்போதும், இணையதளம், குறுஞ்செய்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகும், அவர்களது நடத்தையில்மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
* அளவுக்கு அதிகமான இணையதளப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இணையதளப் பயன்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். தனி இடத்தில் அமர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்துவது கூடாது. அருகில் பெற்றோரோ, ஆசிரியரோ சென்றால் இணையதள முகவரியை மாற்ற முயல்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
* புதிய செல்போன் எண்கள், புதிய இணையதள முகவரிகளை தொடர்பு கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். சரியான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் மென்பொருளை கணினியில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

TNPSC : குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் செயலகத்தில் காலியாக உள்ள 50 குரூப்-V A பணியிடங்களான இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant in The Departments of Secretarit (other than Law and Finance)
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20.200 + தர ஊதியம் ரூ.5,2,600
தேர்வுக் கட்டணம்: ரூ.100
பதிவிக் கட்டணம்: ரூ.150. (ஒருமுறை பதிவை செய்யாதவர்களுக்கு மட்டும்) எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 31.08.2017 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_19_not_eng_Group_V_%20A.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

2017 ஆசிரியர் தின டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவின் அழைப்பிதழ் பத்திரிகை!!!



கிராமங்களுக்கு இணையதள வசதி!!!



நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 31,680 பஞ்சாயத்துகளுக்கு
மத்திய அரசு இணையதள சேவை வழங்கியுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளார்.
2019 மார்ச் இறுதிக்குள் நாட்டின் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் அதிவேக பிராட்பேண்ட் மூலம் இணைப்பதே பாரத் நெட் திட்டத்தின் இலக்காக உள்ளது.
இதுகுறித்து அவர், “பாரத் நெட் திட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 31,680 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
2017 ஜூலை நிலவரப்படி, 1 லட்சத்துக்கு 299 கிராம பஞ்சாயத்துகளை இணைக்க 2,21,925 கி.மீ. தொலைவுக்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் 25,426 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நேஷனல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கீகரிக்கப்பட்டது.
தமிழகக் கிராமங்களுக்கு ரூ.3,000 கோடி செலவில் இணையதள வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது!...

2017ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத் 
தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 374 ஆசிரியர்களுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கவுள்ளார்.
நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களின் பெயர் பட்டியல்:
1.ஏ.எடித் தேவ தயாநிதி - சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
2.சி.வாசுதேவராஜூ - பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி, அத்திமஞ்சேரி, திருவள்ளூர்.
3.டி.திருமலைவாசன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கவந்தண்டலம், காஞ்சிபுரம்.
4.பி.என்.அன்பழகன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செம்பூர், திருவண்ணாமலை.
5. டி.ராமசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பண்ணல், நாகப்பட்டினம்.
6. ஜெ.மேரி வினோதினி - எம்.டி. கிரேன் நடுநிலைப்பள்ளி, நேரு தெரு, விழுப்புரம்.
7.எஸ்.தங்கசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பொன்பரப்பி, அரியலூர்.
8.எம்.ஜான் பீட்டர் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, சாணார்ப்பட்டி, திண்டுக்கல்.
9.எஸ்.வெங்கடாசலம் - பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, செந்தாரப்பட்டி, சேலம்.
10.பி.வாசுகி - சிதம்பரம் நடுநிலைப்பள்ளி, பெரியவெண்மணி, பெரம்பலூர்.
11.ஆர்.தாமோதரன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செங்கமலநாச்சியார் புரம், சிவகாசி.
12.கே.நரசிம்மன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கெட்டுப்பட்டி, தர்மபுரி.
13.எஸ்.சுமதி - மெய்ப்பொருள் ஆரம்பப்பள்ளி, துர்காலயா சாலை, திருவாரூர்.
14.ஜி.விஜயராணி சுகிர்தாபாய் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பட்டர்புரம், திருநெல்வேலி.
15.ஏ.வாசுகி - பி.யு.பி. பள்ளி, சலங்கபாளையம், ஈரோடு.
16.டி.பாஸ்கரன் - சி.எஸ்.ஐ. போர்டிங் நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
17.ஜி.ஜெ.மனோகர் - சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
18.ஆர்.சிவகுமார் - அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பட்டி, புதுக்கோட்டை.
19.பி.ஜெயச்சந்திரன் - அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தல்லாக்குளம், மதுரை.
20.டி.சிவக்குமார் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எடையன்காட்டுவலசு, ஈரோடு.
21.ஆர்.பத்மநாபன் - ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.
22. ஏ.மோகனன் - அரசு மேல்நிலைப் பள்ளி, அருமனை, கன்னியாகுமரி....

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முழுவதுமாக (animated mixing with image) வரிக்கு வரி விளக்கங்களுடன் மாணவர் எளிதில் புரிந்துக் கொண்டு 100% மதிப்பெண்கள் பெறும்படி தயாரிக்கப்பட்டுள்ளது...

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முழுவதுமாக (animated mixing with image) வரிக்கு வரி விளக்கங்களுடன் மாணவர் எளிதில் புரிந்துக் கொண்டு 100% மதிப்பெண்கள் பெறும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. Smart class & தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. மனப்பாட முறையை தவிர்த்து மாணவர் பார்த்து, கேட்டு, புரிந்துக் கொள்ளும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு - ப.சு.இறையருள் - 8220087326

Click Here video

சனி, 2 செப்டம்பர், 2017

Wednesday, 30 August 2017

மருத்துவர்கள் சண்டையால் குழந்தை பலி!!

மருத்துவர்களின் சண்டையால் அறுவை சிகிச்சையின்போது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு உமைத் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தப் பெண் ஆப்ரேஷன் டேபிளில் காத்திருந்தபோது மருத்துவர்கள் இருவர் சண்டையிட்டுள்ளனர். இதில், மகப்பேறு மருத்துவர் அசோக் நயின்வால், பெண் உணவு சாப்பிட்டாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மற்றொரு மருத்துவர் எம்.எல்.தாக் முதலில் நீங்க பரிசோதனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுபோன்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளனர். கிட்டத்திட்ட ஆப்ரேஷன் தியேட்டரில் 30 நிமிடங்கள் சண்டை போட்ட கால தாமதத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதை மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு மருத்துவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

இதைத் தொடர்ந்து, அசோக் நைன்வால், எம்.எல் தாக் இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். “அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உமாத் மருத்துவமனையின் முதன்மை நிர்வாகி பாட் கூறியுள்ளார்.

இது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது
பால. ரமேஷ்.



தினம் ஒரு குட்டிக்கதை.

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.
“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

நீதி: வீண் சந்தேகங்களை, ஜோசியங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!
இன்றைய சிந்தனை..( நாள்..01.09.2017)..
…………………............

‘’தாழ்வு மனப்பான்மை..’’.
................................

தாழ்வுமனப்பான்மை பற்றி ஒரு கதை மூலம் விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

சர்க்கஸில் யானைகளை ஒரு சிறிய மேஜையின் மீது நிற்க வைப்பது உண்டு.

எப்படி அவ்வளவு பெரிய யானை அந்த சின்ன ஸ்டூல் மேல் நிற்கிறது?

வெவ்வேறு நாட்டினரிடமும் பதில் கேட்கப்படுகிறது

ஒருவர் இதெல்லாம் பிள்ளையார் மகிமை என்றார். அருகிலுள்ள பாகனிடமிருந்த பதில் அங்குசத்தால் என்றார்...

யானை தன் பலம் அறியவில்லை என்றார் மற்றொமொருவர்.

இதிலிருந்து நாம் அறிவது யானை தன் பலம் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

அவ்வாறு அறிந்திருப்பின் பாகன் நிலை என்னவாகி இருக்கும்?

ஆம்.,நண்பர்களே.,

இந்த யானைப் போலத்தான் நீங்கள் உங்கள் பலத்தை அறிந்து இருக்கவில்லை..

இதற்கு முதன்மையான காரணம் உங்களிடம் குடியிருக்கும் இந்த தாழ்வு மனப்பான்மையை போக்குங்கள்..தாழ்வுமனப்பான்மையை உங்களிடமிருந்து போக்க முடியாதா?

ஏன் முடியாது?

எவர் எதைச் சொன்னாலும், உலகமே உங்களை எதிர்த்தாலும் நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.

நீங்கள் உங்கள் மேல் வைக்கும் தன்னம்பிக்கையால் தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு ஓடி விடும்.

இந்த உலகம் உங்களைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்!

அவைகளைத் துச்சமென மதியுங்கள்,

உங்கள் மனதைப் பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மை என்ற அச்சம் கண் காணாத இடத்திற்குச் சென்றுவிடும்

.எந்தக் காலத்திலும் உங்களைப் பற்றிய தளராத நம்பிக்கையோடு நீங்கள் செயல்படுங்கள்.

தாழ்வு மனப்பான்மையை அடியோடு தகர்த்து எறியுங்கள்.

பின்பு பாருங்கள் வெற்றி எப்போதும்
 உங்களிடத்தில்தான்..
இனிய  காலை வணக்கம் 🌹🙏🌺
அனிதா தற்​கொ​லை
--------------------------------
நீட் ​தேர்​வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வ​ரை ​போராடிய அரியலுார் மாணவி அனிிதா இன்று தற்​கொ​லை ​செய்துள்ளார்.
           1176 மார்க் வாங்கி--கட் ஆப் 196.5 மார்க் இருந்தும்  மத்திய பாஜக அரசும்  தமிழகஅரசும்
இ​ணைந்து கிராமப்புற தலித் மாணவி​யை தற்​கொ​லைக்குத் துாண்டி விட்டனர். தா​யை இழந்து ஒரு ​லோடு​மேன் தந்​தையின் ஆதரவில் மருத்தவராகும் கன​வோடு இருந்தார்.
          க​டைசிவ​ரை ​போராடிப்பார்த்து இரக்கமற்ற அரசுகளால் தற்​கொ​லைக்குத் தள்ளப்பட்டார்.இதற்கு
அவகாசமின்றி நீட்​தேர்​வை  அடாவடியாக ​மோடி அரசு திணித்தது அடிப்ப​டையான காரணம்-அதற்கு
அடிபணிந்துகிடந்த அதிமுக அரசு​மே ​கொ​லைகாரர்
கள்.
           மாநில உரி​மை பறிப்புபற்றி தமிழக அரசு
வாய்திறக்காத நி​லை​யே க​டைசிக்காரணம்--ஒரு
வருடம் வாய்தா தருவதாய் கூறி ஏமாற்றியவர் ​மோடி...
          ​ரோகித் ​வெமுலா வுக்குப்பின் அனிதா மரணம்
என்​னை அளவிலா துயரத்தில் ஆழ்த்துகிறது.
உனக்கு அஞ்சலி மக​ளே....
---SAP

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

JACTTO GEO பேச்சு வார்த்தையில் பங்கேற்கும் அமைச்சர்கள் பட்டியல்....

04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில் ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை 
*04.09.2017  அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,
☀பள்ளி கல்வித்துறை அமைச்சர்  K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை
அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில்
☀ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
☀இதற்கு முன்னதாக, காலை 9:30 மணிக்கு ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும்
☀பேச்சுவார்த்தை ஒருபுறம் இருப்பினும், வேலைநிறுத்த ஆயத்தப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி களப்பணி ஆற்றிட ஜேக்டோ-ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.

JACTTO GEO 22.08..2017 STRIKE ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு. JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில அரசு தலைமை செயலாளர் ஆனைவெளியீடு. 22-08-2017 ல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் நடத்தப்பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியத்தினை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டுமென தமிழ்நாடு கருவூலக ஆணையர் அவர்களால் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. சென்ற மாதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான சான்று உண்டியலுடன் இணைக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்


சாலை பாதுகாப்பு வாரம் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல்...


50 சிறுவர்களுக்கான புத்தகங்கள் வெளியீடு - புக்ஸ் ஃபார் சில்ரன் செப்டம்பர் 1, காந்தி அருங்காட்சியகம், மதுரை, மாலை 5 மணி முதல்...

1 பேசும் யானையும் பாடும் பூனையும் -  க.விக்னேஸ் - ரூபாய் 40
2 புதிய கண்டுபிடிப்புகங் - ஆத்மா.கே.இரவி - ரூபாய் 70
3 தாத்தா பூ எங்கே போகிறது - லின் சாங்யிங்- ரூபாய் 45
4 மந்திரக் குள்ளர்கள் - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 50
5 செவ்விந்தியக் கழுகு - சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 40
6 ஆப்பிள் நரி - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 40
7 சிறு உயிரிகஙின் வாழ்முறை - ஆத்மா.கே.இரவி- ரூபாய் 25
8 பணம் வந்த கதை ஆத்மா.கே.இரவி- - ரூபாய் 25
9 உயிர்களும் தப்பிப் பிழைத்தலும் - ஆத்மா.கே.இரவி - - ரூபாய் 25
10 நரியும் பூரிக் கட்டையும் -  சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
11 சிவப்புக் கொண்டை சேவல்-  கொ.மா.கோ.இளங்கோ - ரூபாய் 45
12 அதிசயக்குதிரை -  சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
13 தங்கமீன் - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 45
14 தங்கத்தில் ஓரு பொடி டப்பா - சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 45
15 வேட்டைக்காரன் மெர்கேன் - கொ.மா.கோ.இளங்கோ- ரூபாய் 45
16 மாயமான்- சரவணன் பார்த்தசாரதி- ரூபாய் 45
17 அல்யோனுஸ்காவின் ஆட்டுக்குட்டி - சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
18 பறவை டாக்டர் - ஆதிவள்ளியப்பன்- ரூபாய் 45
19 நாட்டாமை ஹீபர்ட் - சரவணன் பார்த்தசாரதி - ரூபாய் 45
20 கும்பிடிபூச்சியின் பயங்கரப் பசி-   ஆதிவள்ளியப்பன் - ரூபாய் 45
21 டோபோ நாய்க்குட்டி - ஆர்.பத்மகுமாரி - - ரூபாய் 25
22 யாரங்கே பாடுவது -  ஆதிவள்ளியப்பன்- ரூபாய் 45
23 அமைதிக்கு ஓரு சிற்றேடு கமலாலயன்- ரூபாய் 45
24 13 லிருந்து 19 வரை - என். மாதவன் - ரூபாய் 55
25 சார்லஸ் டார்வின் - என். மாதவன் - ரூபாய் 50
26 மருதபுரியில் ராட்சத காளான்கள் - வா.மு.கோமு - ரூபாய் 35
27 குருவி நரியாரும் காட்டு ராஜாவும் - வா.மு.கோமு - ரூபாய் 35
28 நகரும் நாவல் மரமும் நண்பனும் - வா.மு.கோமு - ரூபாய் 35
29 கட்டெறும்பு - வா.மு.கோமு  - ரூபாய்35
30 பேசும் எலியும் குழந்தைப் பேயும் -  வா.மு.கோமு - ரூபாய் 35
31 பணியார மழையும் பறவைகளின் மொழியும்- கழனியூரன்- ரூபாய் 110
32 எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் - மருதன்- - ரூபாய் 45
33 உணவு மழைத் தீவு ஆல்பர்ட் - ரூபாய் 50
34 கி.ரா.தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள் - கழனியூரன்- ரூபாய் 60
35 எப்படி வந்தேன் தெரியுமா? - இரா. நடராசன்- ரூபாய் 40
36 வைத்தியர் மாருதி - கொ.மா.கோ.இளங்கோ- ரூபாய் 50
37 காலப் பயணிகள் -  விழியன் - ரூபாய் 35
38 மினர்வாவுக்குப் பறக்கத் தெரியாது.- மருதன் - ரூபாய் 25
39 என் கேள்விக்கு என்ன பதில்? - அ.வள்ளிநாயகம்- ரூபாய் 50
40 இளம் விஞ்ஞானி ஐடியா அகிலன் - இரா. நடராசன் - ரூபாய் 50
41 டிடெக்டிவ் ஆக வேண்டுமா? - மருதன் - ரூபாய் 45
42 கடல்ல்ல்ல் - விழியன் - ரூபாய் 40
43 வள்ளிச் சந்தம் - ஈரோடு தமிழன்பன் - ரூபாய் 50
44 வாசிக்கலாம் - இரா. நடராசன் - ரூபாய் 50
45 ஆங்கில வினைச் சொற்கள் - தே.இளவரசன்  - ரூபாய் 12
46 ராஜா வளர்த்த ராஜாளி - லியோ டால்ஸ்டாய்  - ரூபாய் 60
47 இது எங்கள் வகுப்பறை - சசிகலா உதயகுமார் - ரூபாய் 160
48 ஸ்பைடர் மேன் - க.சரவணன்  - ரூபாய் 70
49 அகிலாவும் பிரேசில் பெண்களும் - க.சரவணன் - ரூபாய் 150
50 கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா - ஸ்ரீரசா - ரூபாய் 110....

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக,தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. ஒதுக்கீடுஅரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளஅரசு ஒதுக்கீடு இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்கள் என, 3,532 இடங்கள் உள்ளன. அதேபோல், பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், 1,201 இடங்கள் உள்ளன.இவற்றில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 4,546 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்; 1,,434 இடங்கள், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.சமூக ஊடகங்களில், பிற மாநில மாணவர்கள் மற்றும் இரட்டைபூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் பரவி வருகின்றன.
ஜூலை, 30 வரை நடந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த, 4,090 மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, 428 வெளிமாநில மாணவர்கள்; பிற மாநிலத்தைச் சேர்ந்த, 8 - 12 வகுப்பு வரை, தமிழகத்தில் ஐந்தாண்டுகள் படித்த, 28 மாணவர்கள் என, மொத்தம், 4,546 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.உறுதிமொழிமேலும், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து ஆராய, குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெறவில்லை என, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ் வாங்குகிறோம். மாணவர்கள் வழங்கிய சான்றிதழ் அனைத்தும், மாவட்ட கலெக்டர்களால், அவற்றின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.
இரட்டை சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் படித்த மாநிலத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி, அம்மாநிலத்தில் மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனரா என்பது கண்டறியப்படும்.விதிகளை மீறி நடந்திஇருந்தால், மாணவர்களின் சேர்க்கைரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

G.O.(Ms) No.31 Dt: August 28, 2017  Welfare of Differently Abled Persons Department – Identification of suitable posts for Differently Abled Persons under Group A and B Categories as per section 33(i) of the Rights of Persons with Disabilities Act, 2016 – Orders - Issued.


காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு


தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கும், 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இங்கு, வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளுக்கான, 2,820 இடங்களுக்கு, ஜூன் 19 முதல், 24 வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,157 இடங்கள் நிரம்பின. 'நீட்' தேர்வு அடிப்படையிலான, மருத்துவ மாணவர் சேர்க்கையால், காலியிடங்களின் எண்ணிக்கை, 1,627 ஆக அதிகரித்தது. இதற்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த 28ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இறுதிநாள் கலந்தாய்வில் பங்கேற்க, 2,264 பேருக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில், 1,899 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். கலந்தாய்வில் பங்கேற்ற, 365 பேரில், 331 பேர் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.
வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது:இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வில் பங்கேற்றோர், உரிய கல்லுாரியில், கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம். அசல் கல்விச்சான்றிதழ்களை, வரும் 4 ம் தேதி வரை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

967 பேருக்கு பி.ஆர்க்., 'சீட்': அண்ணா பல்கலை அனுமதி....


தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ௯௬௭ பேருக்கு பி.ஆர்க்., எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலையில் இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் 'நாட்டா' எனப்படும் தேசிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மாணவர்கள் பங்கேற்க முடியும்.தமிழகத்தில் ௩,௦௪௩ பி.ஆர்க்., இடங்களுக்கு, ௨,௦௦௯ பேர் மட்டுமே, நாட்டா தேர்வில் தேர்ச்சி பெற்றனர். எனவே, ௧,௦௦௦ இடங்கள் வரை காலியாகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாட்டாவுக்குஇணையாக தமிழகத்தில் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மட்டும் நடத்தப்பட்டது; இதில் ௧,௧௨௨ பேர் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தத்திற்கு பின் ௯௬௭ பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அந்த ௯௬௭ பேருக்கு, நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் வழங்கலாம் என, அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது. அதனால் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில் காலியிடம் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பசித்தவருக்கு உணவளிக்கும் குளிர்சாதனப்பெட்டி பெண் டாக்டரின் முயற்சி...