>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 1 மே, 2017

C-TET - தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு

மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்காண் தேர்வு (சி-டெட்) முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வு, இனிமேல் ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தைச் (சிபிஎஸ்இ) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சி-டெட் தேர்வு ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பு நடத்தவுள்ளது. இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சிபிஎஸ்இ அமைப்பு தெரிவித்துவிட்டது.
அதில், ஜேஇஇ-மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால், தனக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் சி-டெட் தேர்வை ஒருமுறை மட்டுமே நடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎஸ்இ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிபிஎஸ்இ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
சி-டெட் தேர்வு தற்போது ஆண்டுதோறும் பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 9 லட்சம் பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட போதிலும், எந்த மாதத்தில் அதை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.
முன்னதாக, துணை பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேசிய அளவில் நடத்தப்படும் தகுதிக்காண் தேர்வை (நெட்) இனிமேல் நடத்துவதில்லை என்று சிபிஎஸ்இ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

*ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான  EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.

இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து ELகணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.

 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.

கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.

எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,

ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று(மே 1) துவங்குகிறது. 

அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மே, 31 வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான அறிவிக்கை மற்றும் விதிகள், நேற்று வெளியிடப்பட்டன. 

ஆன்லைன் வழியே, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்தோர், அதன் பிரதியை நகல் எடுத்து, செயலர், தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை, அண்ணா பல்கலை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

AEEO VACANCY NEWS :உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு!!

தலைமை இன்றி தத்தளிக்கும் எஸ்.எஸ்.ஏ., திட்டம்! தட... தடக்குது தொடக்க கல்வித்தரம்

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், தொடக்க கல்வி மாணவர்கள் கல்வித்தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்ற பின் இரண்டு ஆண்டுகளாக இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மாறாக, அந்தந்த மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் இத்திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.

தவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் என மூன்று பெரும் பொறுப்பையும் ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் கண்காணிப்பதால் கடும் பணிச்சுமையில் தவிக்கின்றனர்.
'கவலை' கல்வித்தரம்: தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை கண்காணிப்பது, மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது போன்ற முக்கிய பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 'தலைமை' இல்லாததால் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், பல கோடி ரூபாய் திட்டங்களில் நடக்கும் வகுப்பறை கட்டடப் பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிகள் குறித்து அத்திட்ட அலுவலர் காட்டும் ஆவணங்களில் மட்டும் கையெழுத்திடும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது.

மறுக்கப்படும் சி.இ.ஓ., வாய்ப்பு: 

இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிமூப்பு பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே 40 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் மே யில் ஓய்வுபெற உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 

இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவை தொடர்ந்து காலியாக இருக்கக்கூடாது. சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கமான கல்வி பணிகளில் 'ரெகுலர்' சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயச்சந்திரன் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

4% *DA Arrear Software Download (Excel File )

TET தேர்வெழுத வந்த பெண்ணுக்கு சுக பிரசவம்

தியாகதுருகம் அரசு பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, அந்தோணிராஜ் என்பவரின் மனைவி, நோயல் ரோஸ்மேரி, 24. நிறைமாத கர்ப்பிணியான இவர், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்காக, நேற்று காலை, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்திருந்தார்.காலை, 10:00 மணிக்கு, தேர்வு துவங்கியது. 10:15 மணியளவில், ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

எனினும், 25 கேள்விகளுக்கு பதில் எழுதிய நிலையில், வலி கடுமையானதால், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் நிலைமையை கூறினார்.முதன்மை கண்காணிப்பாளர் சசிகலாதேவி, உடனடியாக, 108 ஆம்புலன்சை வரவழைத்து, ரோஸ்மேரியை, தியாகதுருகம் வட்டார சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தார்.அங்கு, ரோஸ்மேரிக்கு, காலை, 11:00 மணியளவில், சுக பிரசவத்தில், அழகான பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்து, கணவர் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தேர்வை முழுமையாக எழுத முடியாமல் போனது, ரோஸ்மேரிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ரோஸ்மேரிக்கு இது, இரண்டாவது பிரசவம்.

TRANSFER NEWS : பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடு.

தொடக்கக் கல்வித்துறை பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கவுன்சிலிங் மே 19 ல் துவங்கி மே 29 வரை நடக்கிறது. 

இதற்கான விண்ணப்பங்கள் ஏப்., 24 முதல் மே 5 வரை பெறப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங் மட்டும் இணையதளம் வழியாக நடந்தது. இந்த ஆண்டு அனைத்து மாறுதல்களும் இணையதளம் வழியே நடக்க உள்ளன.

கடந்த காலங்களில் ஒருவர் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என, மூன்று மாறுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ஏதாவதொன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் கடந்த காலங்களில் பொதுமாறுதல் கவுன்சிலிங் அன்று முன்னுரிமை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தால்போதும். இதில் சிலர் சமர்ப்பித்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஆவணங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யும் வகையில், விண்ணப்பிக்கும்போதே அவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNTET 2017 Exam - Paper I | ORIGINAL QUESTION PAPER WITH ANSWER KEY | TNTET 2017 Exam - Paper I


TET Paper 1 Exam Date - 29.04.2017


TNTET 2017 - Paper I - Answer Key - Vellore Vidiyal
TNTET 2017 - Paper I Maths Answer Key - Mr K.Pratheep


TNTET 2017 - Paper I - Answer Key - Kanchi TNPSC Academy 



TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre

TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Tamil - Cick here

TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - English - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Maths - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Science - Click here (soon)


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Social Science - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - Psychology (soon)


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre -maths - work sheet-01 - Click here


TNTET 2017 - Paper I - Answer Key - Puthiya Vidiyal Coaching Centre - maths - work sheet-02 - Click here

TNTET 2017 Exam - Paper 2 | All Subjects Answer key - Original Question Paper

TNTET 2017 Exam - Paper II Tentative Answer key


TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | CLICK HERE TO DOWNLOAD | ALL SUBJECTS ANSWER KEY

TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI | CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE | TNTET 2017 - Paper II - Original Question Paper


TN TET PAPER II MATHS & SCIENCE VELLORE VIDIYAL TENTATIVE ANSWER KEYS EXAM 30-04-2017


TN TET PAPER II SOCIAL STUDIES VELLORE VIDIYAL TENTATIVE ANSWER KEYS EXAM 30-04-2017

CLICK HERE TO DOWNLOAD | TET - PAPER 2 - ANSWER KEY | TNTET - 2017 Paper 2 | Tamil & Social Answer Key - Pudiya Vidiyal


CLICK HERE TO DOWNLOAD - ANSWER KEY | ENGLISH | AAKASH IAS ACADAMY


CLICK HERE TO DOWNLOAD | MATHS ANSWER KEY | PAPER - 2


TAMIL,ENG,SOCIAL - ALL IN ONE SINGLE FILE | PUTHIYA VIDIYAL


CLICK HERE TO DOWNLOAD | MATHS - ANSWER KEY - THENKUDU

மே தின நினைவுச் சின்னங்கள்


மே முதல் தேதி உலகம் முழுவதிலும் தொழிலாளர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வேலை நேரத்தை முறைப்படுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் முக்கியமானது ஆஸ்திரேலியாவில் நடந்த போராட்டம். 1856-ம் ஆண்டு நடந்த போராட்டம் கட்டுமானத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை என்பதை வலியுறுத்திய இந்தப் போராட்டம் வெற்றியும் பெற்றது. தொழிலாளர் போராட்ட வரலாற்றில் இந்தக் கட்டுமானத் தொழிலாளர் நடத்திய போராட்டம் முத்திரை பதித்தது.
அமெரிக்காவில் சிக்காகோ நகரில் ஹேமார்க்கெட்டில் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற அமைதியான பேரணி, கலவரமாக ஆனது. காவல் துறை, போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் 1886-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் பொருட்டு முதன் முதலில் அமெரிக்காவில் மே தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் நினைவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திலும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. 1923-ம் ஆண்டு சென்னையில் மெரினா கடற்கரையில்தான் இந்தியாவின் முதல் மே தின விழா கொண்டாட்டப்பட்டது. தொழிலாளர் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. இதை நினைவுகூரும் வகையில் அந்த இடத்தில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. இதைச் சிற்பி தேவி பிரசாத் ராய் செளத்ரி வடிவமைத்தார்.
இதேபோல் நியூயார்க் நகரத்தில் பெண் தொழிலார்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளையைக் கண்டு மிரளாத சிறுமியின் சிலை அது. பணியிடத்தில் பெண்களுக்கான இடம், பாலினச் சமத்துவம் ஆகியவற்றை இந்தச் சிலை சித்திரிக்கிறது. இதுபோல உலகின் பல பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் சிலைகளின் ஒளிப் படத் தொகுப்பு இது.

ஃபியர்லெஸ் கேர்ள், அமெரிக்கா


ஹேமார்க்கெட் ட்ராஜெடி, அமெரிக்கா

எம்மா மில்லர், ஆஸ்திரேலியா


மானுமெண்ட் டூ லேபர், அமெரிக்கா


சர்வதேசத் தொழிலாளர் சங்கத் தலைமையிடச் சிலை, சுவிட்சர்லாந்து


ஸ்பிரிட் ஆஃப் சாலிடாரிட்டி, அமெரிக்கா


உழைப்பாளர் சிலை, சென்னை



தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது.

வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அமைச்சர்செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:- போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளிவீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும். 'நீட்'தேர்வு 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் கண்டிப்பாக வெளியிடப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் உதவி மூலம் கிராமப்புறங்களில் அனைத்து பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு போதுமான பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க 13 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை

பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வியில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
சில மாநிலங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், பொது தேர்வு முறை உள்ளது. மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது.
அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது.
இதனால், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்ப்பதில், கல்வி நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மனிதவள அமைச்சகம் சார்பில், மாநில கல்வி அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நடத்தப்பட்டது.
அப்போது, தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களின் கற்றல், சிந்தனை திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், வினாத்தாள் தயாரித்தல் விஷயத்தில், கூடுதல் அக்கறை காட்டவும் வலியுறுத்தப்பட்டது.
சி.பி.எஸ்.இ., போன்று, நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை, விடைத்தாள் திருத்த முறையை கொண்டு வருவது குறித்தும், அந்த
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடு.

தொடக்கக் கல்வித்துறை பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கவுன்சிலிங் மே 19 ல் துவங்கி மே 29 வரை நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஏப்., 24 முதல் மே 5 வரை பெறப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங் மட்டும் இணையதளம் வழியாக நடந்தது. இந்த ஆண்டு அனைத்து மாறுதல்களும் இணையதளம் வழியே நடக்க உள்ளன.
கடந்த காலங்களில் ஒருவர் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என, மூன்று மாறுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ஏதாவதொன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் கடந்த காலங்களில் பொதுமாறுதல் கவுன்சிலிங் அன்று முன்னுரிமை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தால்போதும். இதில் சிலர் சமர்ப்பித்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஆவணங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யும் வகையில், விண்ணப்பிக்கும்போதே அவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி விடுமுறைக்கு தடை

கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவது குறித்து உண்டு உறைவிட பயிற்சி வருகிற 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திண்டுக்கல், திருச்சியில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் தலா 50 ஆசிரியர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பள்ளி திறந்த பிறகு, மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மே மாத தொடக்கத்திலோ, கடைசியிலோ பயிற்சி வைக்காமல், இடைப்பட்ட தேதியில் வைப்பதால், இதில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் : மே மாதத்தில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு கிடையாது. தற்போது 'டெட்' தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், இந்த மாதம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மே மாதம் குடும்பத்துடன் வெளி ஊர்களுக்கு செல்லவோ, விசேஷங்கள் நடத்தவோ ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பார்கள்.
தற்போதைய உத்தரவால் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் பயிற்சி நடத்தியும் பிரயோஜனம் இல்லை. பெண் ஆசிரியர்கள் ஐந்து நாட்கள் தொடர் பயிற்சியில் பங்கேற்றால், அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோரை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும். இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனரிடம் எங்கள் சங்கம் சார்பில் முறையிட்டுள்ளோம். அவர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். மாவட்ட அளவில் உத்தரவை வழங்கியுள்ளனர். எனவே, மறுபடியும் இயக்குனரை சந்திக்க உள்ளோம், என்றார்.

NEW CREATION POSTSஐ மே-2017 பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்க கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் போதும் காலிப்பணியிடமில்லை என்று தென் மாவட்ட ஆசிரியர்கள் ஏமாற்றமடைகின்றனர்..ஆனால் அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் பணி நியமனம் நடைபெறும் போது புதிதாகப் பணியேற்கும் ஆசிரியர்களுக்கு NEW CREATION POSTS உருவாக்கப்பட்டு  கலந்தாய்வில் காட்டப்படுகின்றன...இதனால் மூத்த ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்...இளையோர் நேரடியாகச் சொந்த மாவட்டங்களில் பணிபுரிகின்றார்கள்....
எ.கா: 2009 ம் ஆண்டு தொடக்கக்கல்வித்துறையில்  பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்   கடந்த 8 ஆண்டுகளாக வட மாவட்டங்களில் பணியாற்றிவரும் சூழலில் , 2012 &   2014ல்      புதிதாகப்   பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தென் மாவட்டங்களில் பணிநியமனம் பெற்றனர்....2012 TET தேர்வாசிரியர்கள்  வட மாவட்டங்களில் பணியாற்றிவரும் சூழலில் ,  2014ல்      புதிதாகப்   பணிநியமனம் பெற்ற  ஆசிரியர்கள் தென் மாவட்டங்களில் பணிநியமனம் பெற்றனர்... எனவே 2017 TET தேர்வெழுதிய ஆசிரியர்களுக்காக  NEW CREATION POSTS உருவாக்கப்பட வாய்ப்புள்ளது...எனவேNEW CREATION POSTSஐ மே-2017  பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்கிவிட்டு, அவற்றை 2017-மே பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று  கோரிக்கை எழுந்துள்ளது.

4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!

4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது தங்களுக்கு போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது தங்களுக்கு போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதனால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இது போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
குறைந்தபட்சம் 6 சதவீதம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமும், ஜூலை மாதம் முதல் 7 சதவீதமும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்சம் 6% அளவுக்காவது அகவிலைப்படி உயர்வு வழங்குவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.
ஆனால், அரசு எந்த அடிப்படையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கியிருக்கிறது என்பது தெரியவில்லை.
இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
மத்திய அரசின் நடைமுறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி அவர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் இணைக்கப்பட்டு அதில் 274% புதிய அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பழைய அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்ட அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டு, புதிய அடிப்படை ஊதியத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 சதவீதமும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
7-ஆவது ஊதியக் குழு எங்கே?
ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகியும், தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.
இதனால் தமிழக அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டிருந்தால், தமிழக அரசின் 'ஏ' பிரிவு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருந்தாலே அவர்களின் மாத ஊதியம் ரூ.2422 உயர்ந்திருக்கும்.
ஆனால், இப்போது 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டும் கூட ரூ.1768 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும்.
இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5.5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ரூ.27,562 இழப்பு
தமிழக அரசில் 'ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.37,600 அடிப்படை ஊதியம், ரூ. 6600 தர ஊதியம், 136% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,10,500 ஊதியம் வழங்கப்படுகிறது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் இவர்களுக்கு ரூ.1,21,108 அடிப்படை ஊதியம், 4% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,38,062 ஊதியம் கிடைத்திருக்கும்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படாததால் மாதம் ரூ.27,562 இழப்பு ஏற்படுகிறது.
15 சதவீத இடைக்கால நிவாரணம்
எனவே, அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில், அகவிலைப்படி உயர்வை 6% ஆக திருத்த வேண்டும்.
அடுத்த 3 மாதங்களில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
அதுவரை 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்;
அத்துடன் அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

TETதாள் 2 எப்படி இருந்தது?

நேற்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக ஒரளவு எளிமையாக இருந்தது.
உளவியல் : கடினம்
தமிழ் : எளிமை
ஆங்கிலம் :எளிமை
கணிதம் : புரிந்து கொண்டு விடையளிப்பவர்களுக்கு எளிமை
அறிவியல் : சற்றே கடினம்
சமூக அறிவியல் : எளிமை

மே 1 உழைப்பாளர் தினம் பற்றிய தகவல் !!!!

இன்று உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும்  கல்விச்சிறகுகளின் வாழ்த்துகள்
எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும் முக்கியமாக கட்டிடம் கட்டும் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் போன்ற கடின உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து, அவர்களது உழைப்பின் கடினத்தை உணர்ந்து நம்முடைய நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.
அதோடு இந்த உழைப்பாளர் தினம் எப்படி வந்தது? என்று சில நாட்களுக்கு முன் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
உழைப்பாளர்கள் தினம்!
தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம்தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
உழைக்கும் உழைப்பாளிகளுக்கு கல்விச்சிறகுகளின் வாழ்த்துக்கள்.............
இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே தினம் !!!

NMMS – 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) !!!

மாவட்ட வாரியான பட்டியல் 

NMMS – 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) !!!
உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும். 
  1.   சென்னை 
  2.   திருவள்ளூர் 
  3.  காஞ்சிபுரம்
  8.  சேலம்
  9. விழுப்புரம்
10.  கடலூர்
11.  பெரம்பலூர்
12.  அரியலூர்
13.  நாகப்பட்டினம்
14.  நாமக்கல்
15.  ஈரோடு
16. நீலகிரி
17. கோயம்புத்தூர்
18.  திருப்பூர்
19.  கரூர்
20.  திருச்சிராப்பள்ளி
21.  தஞ்சாவூர்
22.  திருவாரூர்
23.  புதுக்கோட்டை
24.  திண்டுக்கல்
25.  தேனி
26.  மதுரை
27.  சிவகங்கை
28.  இராமநாதபுரம்
29.  விருதுநகர்
30.  தூத்துக்குடி
31.  திருநெல்வேலி
32.  கன்னியாகுமரி

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு 2½ லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான முதல்தாள் தேர்வு நடந்தது. இதற்கு கல்வி தகுதி ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.
இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 598 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக அரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வாளர்கள் செல்போன், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது.
அவர்களின் தீவிர கண்காணிப்பில் தேர்வு நடந்தது. தேர்வையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நாளை பட்டதாரி ஆசிரியர்களுக்காக 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

ஸ்காலர்ஷிப் பெற கட்டாயமாகிறது ஆதார்

கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானிய குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகையான ஸ்காலர்ஷிப்களை பெற்று வருகின்றனர். தற்போது அதற்கான பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சமர்ப்பிக்க ஜூன் இறுதி
இந்நிலையில், ஸ்காலர்ஷிப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆதார் எண் பெறாதோர், ஜூன் மாத இறுதிக்குள், தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறை, அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு பொருந்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தஞ்சை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை இதனை அறிவித்துள்ளார்.

P.F., வட்டி 8.65 சதவீதம் : மத்திய அரசு ஒப்புதல்.

இ.பி.எப்., எனப்படும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு, 2016 - 17ம் ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, அறங்காவலர் குழு முடிவு செய்யும்.
அறங்காவலர் குழு முடிவிற்கு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எப்., அமைப்பு தன்னாட்சியாக செயல்படுவதால், அறங்காவலர் குழு பரிந்துரைகளை, மத்திய அரசு, அப்படியே ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், 2015- - 16-ம் நிதி ஆண்டில், பி.எப்.,கான வட்டி விகிதத்தை, 8.8 சதவீதமாக, அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சகம், இதை, 8.7 சதவீதமாகக் குறைத்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வட்டிவிகிதம், 8.8 சதவீதமாக மீண்டும் நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்றபடி, பி.எப்., வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் குறைக்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, நிதிஅமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம், பி.எப்., அறங்காவலர்கள் குழு கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடந்தது. இதில், 2016 - -17ம் நிதி ஆண்டுக்கான, பி.எப்., வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய, பரிந்துரைக்கப்பட்டது.அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் கூறுகையில், '2016 - 17ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி சதவீதத்தை, 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யமத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்' என்றார்.
இந்நிலையில், பி.எப்., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2016 - 17ம் ஆண்டுக்கான, பி.எப்., வட்டி சதவீதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த உத்தரவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நான்கு கோடி சந்தாதாரர்களின் கணக்கில், வட்டித் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறியுள்ளது.

11 - ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா?

10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், வரும் கல்வி ஆண்டிலிருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவிருக்கிறது எனும் செய்தி உலவுகிறது.
இதை கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்றாலும் கல்வி வட்டாரப் பகுதிகளில் இந்தச் செய்தி பரவலாக பேசப்படுகிறது. அப்படி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப் பட்டால் என்னவாகும்? குறிப்பாக, மாணவர்களுக்கு அது என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்... சாதகமா அல்லது பாதகமா? என்பது குறித்து கல்வியாளர், பேராசிரியர் கல்விமணி அவர்களிடம் கேட்டோம்.
"நீங்கள் குறிப்பிடும் விஷயம் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், அதை ஒட்டி சிலவற்றை அலசலாம் என நினைக்கிறேன். முதலில், 9-ம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறையை நடைமுறைப் படுத்திவிட்டு 10-ம் வகுப்புக்கு ஒரே தேர்வு என வைத்திருப்பது முறையானது அல்ல. ஏனெனில் ஒன்பது ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட தேர்வு முறைக்கு மாணவர்கள் தயாராகி வரும் சூழலில் ஒரே ஆண்டுக்குள் அதை மாற்றிச் செய்வது மாணவர்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல. அந்தத் தேர்வுக்கு தயாராவது பல மாணவர்களுக்கு சுமையாகவே இருக்கிறது. இது ஒருபுறம் வைத்துக்கொள்வோம். சில பள்ளிகளில் (தனியார் மற்றும் அரசுப் பள்ளி இரண்டையும் சேர்த்தே சொல்கிறேன்) 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் குவிப்பதற்காக 11- ம் வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை.
10-ம் வகுப்பு முடித்து பள்ளிக்குச் செல்லும் மாணவர் ஒருவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 12-ம் வகுப்பு பாடங்களையே திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாகிறது. எவ்வளவுதான் பிடித்த பாடம் என்றாலும் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப படிப்பது சோர்வூட்டச் செய்யும். மேலும், மேல்நிலைக் கல்வியில் ஓர் ஆண்டு பாடங்களைப் படிக்காமல் கடப்பது, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிய தீங்கு. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்கும்பட்சத்தில் கட்டாயம் அந்த ஆண்டுக்கு உரிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டுதான் மேல் படிப்புக்குச் செல்கிறார்கள் எனும்போது அதுவே போதுமே என சிலர் நினைக்கலாம். முன்பே சொன்னதுபோல, ஓர் ஆண்டுக்கான பாடங்களை மாணவர் படிக்காமல் கடந்துசெல்லக்கூடாது. மேலும், 11-ம் வகுப்புப் பாடங்களின் தொடர்ச்சிதான் 12-ம் வகுப்புப் பாடங்கள். எனவே, அடிப்படையைத் தெளிவாக படிக்காமல் அடுத்த நிலைக்குச் செல்லும்போது, மேல் வகுப்புப் பாடங்களைப் புரிந்துகொள்வதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படி புரிந்துகொள்ள முடியாமல் போகிறபோதுதான், அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்ய வேண்டியதாகிறது. இதுவும் மாணவரின் கற்றலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடியதே.
மாணவர்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும்போது, அந்தப் பாடப் பிரிவை மேற்படிப்புக்கு எடுத்தால் கற்றலில் கடும் பின்னடவை எதிர்கொள்வர். 12-ம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களும்கூட மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படிக்கையில் தேர்ச்சி மதிப்பெண்களை எடுக்கவே சிரமப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதற்கு, முக்கியக் காரணம் அடிப்படையான பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததே.
மேற்படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் சோபிக்க முடியாமல் போவதற்காக காரணம். 11-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடியாமல் போனதே. ஏனெனில் நுழைவுத் தேர்வுகளில் 11-ம் வகுப்பு பாடங்களிலிருந்தும் வினாக்கள் கேள்விகள் கேட்கப்படுவதால், அந்த வினாக்களுக்கு இவர்களால் பதில் அளிக்கமுடியாமல் போய்விடுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு ஏறக்குறைய வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் வர விருக்கின்றன. அதையெல்லாம் மாணவர்கள் எதிர்கொள்ள 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரும்பட்சத்தில் உதவியாக இருக்கும்.
நுழைவுத் தேர்வுகள் தமிழிலும் நடக்கவிருப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையையும் மன அழுத்தத்தையும் கொடுக்காதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இப்போதைய சூழலிலேயே மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், வாரத் தேர்வு, மாதாந்திர தேர்வு என பல வித அழுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், கூடுதலான அழுத்தமாக இருக்கட்டும் என்பதாக கூறவில்லை. புதிதான அழுத்தம் வரப் போவதில்லை என்பதற்காக சொல்கிறேன். மேலும், இதன் மூலம் மேற்படிப்புக்கான அடிப்படைப் பகுதிகளைக் கூடுதல் கவனமாக படிக்கும் சூழல் உருவாகும்.
இந்த விஷயத்தில் எனக்கு இன்னொரு கருத்தும் இருக்கிறது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதாக இல்லாமல், மேல்நிலைக் கல்வி எனக்கொண்டு 11 மற்றும் 12  வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்." என்றார் கல்விமணி.
11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை வருவதைப் பலரும் வரவேற்ற சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். அதற்கு மாற்றாக, மாணவர்களுக்கு சுமைக்கூடக்கூடும் எனும் கருத்துகளையும் பதிந்துவருகிறார்கள். கல்வி அதிகாரிகள் இரண்டு பார்வைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மிகுந்த சிரமங்களிடையே படிக்கும் மாணவர்கள் உயர்வு பெற வேண்டும்.

TET - முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.


ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்கள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. அந்த பணி யிடங்களில் பாடப்பிரிவுகள் வாரி யான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில்தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன.
துறைவாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.மேற்குறிப்பிட்ட பணி நியமனத் துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர் கள் தனியாக ஏதும் விண்ணப் பிக்கத் தேவையில்லை. அவர் களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது. முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்பு வோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் !!

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.
போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட போலியோ
சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்.,2ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 1000 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.