>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 19 செப்டம்பர், 2016

செய்தி துளிகள்

🌍📡காலை  செய்திகள் 📡🌍

            🌍📡19\09\2016.


🌍கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 5-ம் வகுப்பு மனைவி பலி

கரூர்: கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 5-ம் வகுப்பு மனைவி உயிரிழந்துள்ளார். தான்தோன்றிமலையில் நடந்த விபத்தில் தந்தையுடன் சென்ற மாணவி லத்திகா உயிரிழந்துள்ளார்.




🌍மழைநீர் கால்வாய் பணியால் மக்கள் தவிப்பு

சென்னை: வியாசர்பாடி சாலமா நகர் இ.எச். நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதி குடியிருப்புவாசிகள் மரக்கம்புகளால் பாதை அமைத்து செல்கின்றன




🌍பயங்கர
வாதத்துக்கு ஒரு நாடே காரணம்: ஹமீத் அன்சாரி

போர்லாமர் : இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நாடுதான் காரணம் என துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பாகிஸ்தானை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.




🌍உரி ராணுவ முகாம் தாக்குதல்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தது.ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் உள்ள, ராணுவப் படைப்பிரிவு முகாமிலுள்ள கூடாரத்தில், டோக்ரா ரெஜிமென்டை சேர்ந்த வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதலில், அந்த கூடாரம் தீப்பற்றி எரிந்தது; அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும், மளமளவென தீ பரவியது. இத்தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதி யில், தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. தாக்குதலில் காயமடைந்த 30 வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த வீரர்களில் மேலும் 3 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்தனர். இதனையடுத்து பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் உரியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரீக்கர், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து விளக்கமளிக்க உள்ளார்.




🌍காஷ்மீருக்குள் ஊடுருவ 200 தீவிரவாதிகள் திட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருளவதற்கு 200 தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி விகாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகளம் அவர் கூறினார்.




🌍துப்பாக்கியை காட்டி எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். இவர் இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.




🌍ராம்குமார் மரணம் தொடர்பாக நீதி விசாரணை தொடங்கியது

சென்னை: ராம்குமார் மரணம் தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நீதி விசாரணை தொடங்கியது. திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணையை தொடங்கினார்.




🌍டெங்கு காய்ச்சலால் 7 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசம் மாநிலம், ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.




🌍அரியலூர் அருகே வி.கைகாட்டியில் தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்து: 30 பேர் காயம்

அரியலூர் : அரியலூர் அருகே வி.கைகாட்டியில் தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த மாணவர்கள் 30 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




🌍சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை உடலை வாங்க மறுப்பு: ராம்குமார் தந்தை

சென்னை: ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது தந்தை பரமசிவம் தெரிவித்துள்ளார்.



🌍ஜம்மு-காஷ்மீரில் 73 நாளாக ஊரடங்கு உத்தரவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை 73 நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.




🌍சென்னையில் சொகுசுக்கார் மோதி காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவர் பலி

சென்னை: சென்னையில் சொகுசுக்கார் மோதி காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவர் உயிரிழந்தார். அரசு மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் உயிரிழந்துவிட்டார்.





🌍ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் முறையீடு

ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையிடுகிறார். உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் இன்று காலை 10.30 மணிக்கு முறையீடு செய்கிறார். ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.





🌍சென்ட்ரல் -அரக்கோணம் வழித்தடத்தில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்

சென்னை பேசின்பாலம் - சென்ட்ரல் இடையே புதிதாக 5, 6வது ரயில்பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, ெசன்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நேற்று முன்தினமும், நேற்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. புறநகர் ரயில்நிலையம் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று முதல்  அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.




🌍மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் அதிரடி மாற்றம். செய்தியாளர் நீதிராஜனை தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மண்டல ஆனையாளர் சைலேந்திரபாபு அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு மாற்றம் செய்த அவர்களுக்கு மதுரை மாவட்டம் மற்றும் தாலுகா செய்தியாளர்கள் சார்பாக நன்றி.




🌍சென்னை வேளச்சேரியில் கடைக்கு சென்று வீடு திரும்பிய ஜெயா(வயது 38)  கழுத்தில் அனிந்திருந்த 5 சவரன் தங்க சங்கலியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்றனர்.




🌍ஈரோடு
போக்குவரத்து நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றுள்ளனர்




🌍ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேதபரிசோதனை நடைபெறுகிறது .
இதையொட்டி மருத்துவமனை வளாகத்தை சுற்றி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



🌍காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் தொடர்பாக விவாதிக்க காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று மீண்டும் கூடுகிறது.



🌍என் மகன் சாவுக்கு காவல் துறையே பொறுப்பு என்றார் ராம்குமாரின் தந்தை பரமசிவம்.




🌍சென்ட்ரல் -அரக்கோணம் வழித்தடத்தில் இன்று முதல் ரயில்கள் இயக்கம்



🌍பெங்களூருவில் காவிரி போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 270 பேர் கைது




🌍ஜம்மு காஷ்மீரில் புதிதாக கலவரத்தை உருவாக்குவதற்காகவும், பிராந்தியத்தில் போர் போன்ற சூழலை ஏற்படுத்தவும் திட்டமிட்டே உரி தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது --காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி




🌍ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.




🌍தீவிரவாதி சக்திகளுக்கு உதவுவது மற்றும் உடந்தையாக இருப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்-சீதாராம் யெச்சூரி



🌍வீரர்களை பலி கொண்ட உரி தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.




🌍இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நாடுதான் காரணம் என துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பாகிஸ்தானை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.




🌍தமிழக மக்களுக்கு காவிரி தண்ணீர் தான் வேண்டுமா? இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கடல் தண்ணீரில் உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடகத்துடன் தகராறு செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக தமிழ்நாடு கடல் நீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்-பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி




🌍காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் நடத்தி வருகிறது-- மத்திய அமைச்சர் அனந்த்குமார்



🌍காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடுமாறு கோருவது சரியல்ல என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.




🌍காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடக அரசின் நிலை வருத்தத்துக்குரியது-- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி




🌍ராம்குமார் தற்கொலையில் சந்தேகம்-சிபிஐ விசாரணை வேண்டும்- திருமாவளவன்




🌍தமிழகத்தில் உள்ள 350 பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகளில் ரூ.1.54 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப தொட்டுணர் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்




🌍அருணாச்சலில் 26 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலர்களாக முதல்வர் பீமா கண்டு நியமித்துள்ளார்.




🌍உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து, நிர்வாணமாக அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் அந்த பெண்ணின் கால் துண்டானது.



🌍பாதுகாப்புக் குறைபாடே தாக்குதலுக்கு காரணம்-- ஏ.கே.அந்தோணி



🌍விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



🌍அருணாச்சலில் 26 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலர்களாக முதல்வர் பீமா கண்டு நியமித்துள்ளார்.




🌍உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



🌍உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் நகரில் சந்திரோதயா மந்திர் (கோயில்) கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற சாதனை படைத்த துபையில் உள்ள புர்ஜ் கலிஃபாவைக் காட்டிலும் உயரமாகக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது




🌍இந்திய விமானப்படைக்கு, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், வரும், 23ம் தேதி கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



🌍தலாக் விவாகரத்து முறை: உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க மத்திய அரசு முடி வு




🌍கட்டுமான திட்டங்களை கள ஆய்வு செய்வதை நேரடியாக கண்காணிக்க, புதிய, 'ஆப்' எனப்படும் செயலியை உருவாக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.




🌍சேலம் சூரமங்கலம் பகுதியில் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி பெண்கள் ேபாலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



🌍உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து இன்று முதல் 22-ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்படுகிறது




🌍சர்வதேச செலாவணி நிதியம் - உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.




🌍ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் மாநில எல்லைகளில் உள்ள 80 சோதனைச் சாவடிகளை ரூ.4,000 கோடி செலவில் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



🌍தாய்லாந்தில் ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்



🌍டி.என்.பி.எல்., கிரிக்கெட்: தூத்துக்குடி அபார வெற்றி; முதல் கோப்பையை கைப்பற்றி சாதனை.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

University of Madras-Institute of Distance Education

University of Madras-Institute of Distance Education
December 2016 - UG/PG/DIPLOMA Courses           Examinations Online Registration
*LAST DATE FOR ONLINE EXAMINATION          REGISTRATION IS
14-10-2016 (WITHOUT PENALTY )
*21-10-2016 (WITH PENALTY )
www.ideunom.ac.in

சனி, 17 செப்டம்பர், 2016

இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங்! தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங்! தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

தனி ஒருவன்
காட்டையே உருவாக்கிய தனி மனிதரின் கதை !
யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி
முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்
2008-ஆம் ஆண்டு வரை விளம்பர வெளிச்சம் எதுவுமில்லாமல் ஒருகாடு பரப்பளவிலும் உயரத்திலும் அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது. கடந்த 2008-ஆம் ஆண்டில், 115 யானைகள் இந்தக் காட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்டன. அவற்றைத் துரத்தி வந்த வனத்துறையினர் இந்தக் காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர்.
"அரசுப் பதிவேட்டில் இடம்பெறாத இந்தக் காடு, இங்கே எப்படி உருவானது?' என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தனது வளர் இளம் பருவத்தில் இந்தப் பணியைத் தொடங்கியவருக்கு இன்றைக்கு வயது 50!
காட்டிற்குள்ளேயே மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்வதற்குப் போதுமான சிறிய குடில் ஒன்றை அமைத்திருக்கிறார். வருமானத்திற்காக, சில மாடுகளை வளர்த்து அதன் பாலை விற்று குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்கிறார்.
மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் பரவியிருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன. 100 யானைகளுக்கும் மேற்பட்டவை ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. பறவைகள், விலங்குகளின் சொர்க்கபுரிதான் இந்த "முலாய் காடுகள்'.

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது.
இந்த தேர்வுக்கு, 11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும், முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்.

மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு !

மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு !

இன்று சனி (17-09-2016) பள்ளி வேலை நாள்.*
*முதல்பருவத் தேர்வுகள்*
*19 (திங்கள்) தமிழ்,*
*20 (செவ்வாய்)* *ஆங்கிலம்,*
*21 (புதன்) கணிதம்,*
*22 (வியாழன்) அறிவியல்,*
*23 (வெள்ளி) சமூக அறிவியல்.*
*24-09-2016 முதல் 02-10-2016 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை.*
*08-10-2016 (சனி) விடுமுறை,*
*09-10-2016 (ஞாயிறு) விடுமுறை,*
*10-10-2016 (திங்கள்) ஆயுத பூஜை விடுமுறை,*
*11-10-2016 (செவ்வாய்) விஜயதசமி விடுமுறை,*
*12-10-2016 (புதன்) மொகரம் விடுமுறை.*
*15-10-2016 (சனி) விடுமுறை,*
*22-10-2016 (சனி) விடுமுறை,*
*29-10-2016 (சனி) தீபாவளி விடுமுறை,*
*28-10-2016 வெள்ளி அன்று பட்டியலின் படி வேலை நாள். ஆனால் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைத்து விடுமுறையை எதிர்பார்க்கலாம்.*
*இந்த விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலில் உள்ளவை.*

ஆசியாவின் டாப் 25 மியூசியங்கள் பட்டியல்: இந்தியாவிலிருந்து 5 மியூசியங்கள் தேர்வு

ஆசியாவின் டாப் 25 மியூசியங்கள் பட்டியல்: இந்தியாவிலிருந்து 5 மியூசியங்கள் தேர்வு



ஆசியாவின் டாப் 25 மியூசியங்கள் பட்டியல்: இந்தியாவிலிருந்து 5 மியூசியங்கள் தேர்வு
ஆசியாவின் டாப் 25 மியூசியங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 5 மியூசியங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிய நாடுகளின் முதன்மையான 25 மியூசியங்கள் பட்டியலில் இந்திய நாட்டைச்சேர்ந்த 5 மியூசியங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீரின் ஹால் ஆப் பேம் மியூசியம் முதல் இடத்திலும், பாகூர் கி ஹவேலி (உதய்பூர்) மியூசியம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
3- வது இடத்தில் கொல்கத்தாவின் விக்டோரியா மெமொரியா ஹால், 4-வது இடத்தை ஐதராபாத்தின் சலர் ஜங் மியூசியம், 5-வது இடத்தில் ஜெய்சல்மர் வார் மியூசியம் இடம்பெற்றுள்ளன. மியூசியங்களின் தரம், அளவு மற்றும் உலக மக்களிடமிருந்து கிடைத்த விமர்சனங்களின் அடிப்படையில் இந்த மியூசியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரம் உலகின் டாப்-25 மியூசியங்கள் பட்டியலில் இந்தியாவின் எந்தவொரு மியூசியமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் டாப்-25 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த மியூசியங்கள் இந்தியாவின் டாப்-5 மியூசியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள் மியூசிங்களுக்கு டிரிப்அட்வைசர் நிறுவனம், டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.

CCE - GRADE FORM

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசின் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை
பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான இந்த வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகச் சங்கம் தனது கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி, இணைச் செயலாளர் ஹரி சங்கர், பொருளாளர் மகேந்திரன் தலைமையிலான குழு நிபுணர் குழுவிடம் மனு அளித்தது.
பல்வேறு பிரிவினரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஒய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நலத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்கனவே பெற்று வந்த ஒய்வூதியத்தை, 1.4.2003 முதல் புதியதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்க இயலாது என்பது முற்றிலும் சமூகப் பாதுகாப்பிற்கு எதிரானது. அரசு ஊழியருக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் திட்டமான பங்களிப்புடன் கூடிய புதிய ஒய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப்படுத்த
வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் மாலை 5.30 வரை நடைபெற்றது.

TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.

TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (செப்.17) நடைபெற உள்ளது.
டிஆர்பி சார்பில்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை, இளநிலை விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னை மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 2,443 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.
செல்லிடப்பேசி, மின்னணு கணக்கிடும் கருவி, மின்னணு கடிகாரம் ஆகிய சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது.
டிஆர்பி-யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையெனில், இணைப்புத்தாளில் புகைப்படம் ஒட்டி முழுமையாகப் பூர்த்தி செய்தோ அல்லது 2 புகைப்படங்களையோ எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் மையத்துக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

kalvi news

📗RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
📙பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு.
📘அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
📚குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி
📘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டிற்கு பகுதி நேர பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🌺Sub Inspector எழுத்துத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
🍀TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்.
🎯அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு
📗தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்
📗ஆசிரியர்கள் தேவை (நிரந்தர பணியிடம்)
📘அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு
🌺அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26-ல் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்
📚அரசு பள்ளிகள் ஆய்வகங்களுக்கு 4,362 உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வு நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்
📘தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு
ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்
📙கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்
📚கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது
📗இரண்டாம் நாளாக வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீது தாக்குதல்
🌺துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
🌺பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!
🍀தமிழக அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி.

உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க !

உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க !

*உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட முகவரியில்*
1. உங்கள் PF / CPS number ஐ பதிவிடவும்
2. SELECT SUFFIX : PTPF
3. உங்கள் பிறந்த தேதி
இவற்றை பதிவிட்டு , பெறலாம்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!

மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.
பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:
காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.
மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.
மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று!!!

சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.
தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

 'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 
தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.
பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!



உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.
அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 
இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

7th Pay commission pay and arrears calculator - Excel Download

7th Pay commission pay and arrears calculator - Excel Download

7th Pay commission pay and arrears calculator :Download

உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்: பின்னுக்குத் தள்ளப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள்

உலக அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்: பின்னுக்குத் தள்ளப்படும் இந்திய கல்வி நிறுவனங்கள்

உலக அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்ற நிறுவனம், உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், மண்டலவாரியான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.
சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிவு எண்ணிக்கை, புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
நிகழாண்டின் உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக, அமெரிக்காவின் மஸாச்சஸ்டஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.) முதலிடம் பிடித்துள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 2-ஆம் இடமும், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 3-ஆம் இடமும் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் 5 கல்வி நிறுவனங்களும், பிரட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களும், சீனாவின் ஈத் ஸýரிச் கல்வி நிறுவனமும் இடம்பிடித்துள்ளன.
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்: கடந்த ஆண்டு 147 ஆவது இடத்திலிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 152 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த முறை 179-ஆவது இடத்திலிருந்த தில்லி ஐஐடி இம்முறை 185 இடத்துக்கும், 202-ஆவது இடத்திலிருந்த மும்பை ஐஐடி 219-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.
இதேபோல் குவாஹாட்டி ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. 701 ரேங்குகள் வரையிலான இந்தப் பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.
ஆறுதல்: அதேசமயம் 254 -ஆவது இடத்திலிருந்த சென்னை ஐஐடி, 5 இடங்கள் முன்னேறி 249 -ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

CEO OFFICE PHONE NUMBERS

CEO OFFICE PHONE NUMBERS

1. CHENNAI 0442432735

2. COIMBATORE 04222391849

3.CUDDALORE 04142 286038

4.DHARMAPURI 04342 260085,261872

5. DINDIGUL 0451 2426947

6. ERODE 0424 2256499,9442205805

7. KANCHEEPURAM 044 27222128

8. KANYAKUMARI 04652 227275

9. KARUR 04324 241805

10. KRISHNAGIRI 04343 239249

11. MADURAI 0452 2530651

12. NAGAPATTINAM 04365 243354

13. NAMAKKAL 04286 232094

14. PERAMBALUR 04328 224020

15. PUDUKOTTAI 04322 222180

16. RAMNAD 04567 220666

17. SALEM 0427 2450254

18. SIVAGANGAI 04575 240408

19. TANJORE 04362 237096

20. NILGIRIS 0423 2443845

21. THENI 04546 250315

22. THIRUVANNAMALAI 04175 224379

23. TIRUVARUR 04366 225903

24. TRICHY 0431 2708900

25. TIRUNELVELI 0462 2500702

26. TUTICORIN 0461 2326281

27. VELLORE 0416 22526690

28. VILLUPURAM 04146 220402

29. VIRUDHANAGAR 04562 252702

மத்திய அரசின் புதிய முக்கிய திட்டங்கள்

மத்திய அரசின் புதிய முக்கிய திட்டங்கள்

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்/Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)- அக்டோபர் 2009:

 2. சுவர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா/Swarnajayanti Gram Swarozgar Yojana (SGSY) (SGSY)- ஏப்ரல் 1999:

 3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா/ Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)- டிசம்பர் 2000:

 4. இந்திரா அவாஸ் யோஜனா/ Indira Awaas Yojana (IAY)- 1985:

மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள  http://goo.gl/WScvbm  கிளிக் செய்யவும்

GATE - 2017 தேர்வு

GATE - 2017 தேர்வு

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள IIT நிறுவனங்கள், Indian Institute of Science நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் 23 விதமான பொறியியல், அறிவியல் பாடப்பிரிவுகளில் M.Tech., Ph.D. படிப்புகளுக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வே Gate (Graduate Aptitude Test for Engineering) தேர்வாகும்.

மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள  http://goo.gl/m6njxz கிளிக் செய்யவும்
*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*
📫 _ஆன் லைனில் அனைத்தும்_
👉🏼 http://www.elections.tn.gov.in/
*புதிதாக வாக்களர் அட்டை பெற*
👉🏼 http://104.211.231.134/ereg/
*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx
*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx
*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👉🏼 http://104.211.231.197/electoralservices/
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.

புதன், 7 செப்டம்பர், 2016

மெல்லச் சாகும் அரசு பள்ளிகள்*

*மெல்லச் சாகும் அரசு பள்ளிகள்*

💥💥💥💥💥💥💥💥💥இன்றைய தீக்கதிர்

மதுரை, செப்.5-

தமிழகத்தில் கணக்கிலேயே வராமல் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; பாழடைந்த கட்டிடங்களில் குழந்தைகள் படித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், பள்ளிக்கல்வியின் தரம் மேலும் உயர வழிவகை செய்யப்படும் வகையில் நடப்பாண்டில் 5 புதியதொடக்கப்பள்ளிகள் தொடங்கப் படும் என்று விதி 110 ன் கீழ் முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.

*“ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி வசதி சதவீதம் 98.30 ஆகவும், நடுநிலைப்பள்ளி வசதி90சதவீதமாகவும் உள்ளது இதைமேலும் மேம்படுத்தும் வகையில் நடப்பு கல்வியாண்டில் 5 புதியதொடக்கப்பள்ளிகள் தொடங்கப் படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கு 10 இடைநிலை ஆசிரியர்பணியிடங்களும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு 95 ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்*

*மேலும் இப்பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வகுப்பறைகள், கழிவறைகள், சமையலறைகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற் படுத்தித் தரப்படும். இதற்காக 28 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்*

 என்று அவர்அறிவித்தார். பள்ளி கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், சமையலறை, அறிவியல் ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் கலை மற்றும் கைத்தொழில் அறைகள், கணினி அறைகள், நூலக அறைகள் மற்றும் பழுது சரிபார்த்தல் போன்றவற்றிற்காக 60 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத் தப்படும்; சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடுகள் இழந்த மக்களுக்குமாற்று குடியிருப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளது.

எழில் நகர்ப்பகுதியிலும் பெரும்பாலான பகுதியிலும் இரு தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு கையாள்வதில் புதிய தொட்டுணர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத் தப்படும் என விரிவான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.இந்த அறிவிப்புகள் தொடக்கக் கல்வியில் தன்னிறைவை பெற்றது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிகின்றது.

_முதல்வர் முன்வைத்துள்ள தொடக்கக்கல்வி குறித்தஇந்த கூற்று உண்மைதானா?_

 உண்மையில் தமிழக தொடக்கக் கல்வியின் இன்றைய நிலையை அரசு மூடி மறைக்கிறது. பள்ளிக் கல்வி குறித்த ‘மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பள்ளி கல்வியின் முழுமையான நிலை குறித்த விபரங்களை வெளிப்படைத் தன்மையோடு அரசு முன்வைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக புள்ளி விபரங்களின் அடிப்படையில் மிகைப்படுத்தப்பட்ட மோசடி விபரங்களையே அரசு அளித்து வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

*உண்மை நிலை என்ன?*
தமிழகத்திலுள்ள 23,928 அரசு தொடக்கப் பள்ளிகள்; 5,053 உதவி பெறும்தொடக்கப்பள்ளிகள் மற்றும் 7,260அரசு நடுநிலைப்பள்ளிகள்; 1656 அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 37, 797 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 1,26,000 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

அதேநேரத்தில் 7130 சுயநிதி நர்சரி மற்றும்நடுநிலைப்பள்ளிகளில் 67,785 ஆசிரியர்கள் உள்ளனர் என்ற புள்ளிவிபரம் தெரிய வருகின்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகப்பெருமளவில் குறைந்துள்ளது. 18,000 அரசுதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. ஓராசிரியர் -

ஈராசிரியர் மட்டுமே கொண்டுள்ள இப்பள்ளிகளில் எப்படி தரமான ஆரம்பக் கல்வியை கொடுக்க  முடியும்? ஓராசிரியர் பள்ளியில் கற்பித்தல் நிலைமை மிகவும் பரிதாபம்.

*விரயமாகும் பணி நேரம்*

ஓராண்டுக்கு 220 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன. இதில்14 வகையான இலவசத் திட் டங்களை செயல்படுத்துவதற்காக கல்வித்துறை அலுவலகத்திற்கு செல்வதற்கும் அதுகுறித்த பதிவேடுகளை பராமரிக்கவும், மாதம்ஒருமுறை தலைமையாசிரியர் ஆய்வு கூட்டங்களுக்கு சென்றுவரவும், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்ப்பு, ஆடு, மாடுகள், கோழிகள் கணக்கெடுப்பு மற்றும் சமூக நல திட்டங் களை செயல்படுத்தவும் மற்றும் பள்ளியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் என ஒரு ஆசிரியரின் பணிநேரம் முழுமையும் விரயமாகி விடுகிறது. ஒரு ஆசிரியர் மட்டுமே 5 வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்கும் எப்படி வகுப்பெடுக்க முடியும் என்பதற்கான விளக்கத்தையும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கலாம் என ஆசிரியர் இயக்கங் கள் விமர்சிக்கின்றன.

*பாழடைந்த கட்டிடங்களில் பச்சிளங்குழந்தைகள்*

அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் அடிப்படைகட்டமைப்பு வசதிகளும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. மாநிலம் முழுவதும் 10,000 த்திற்கும்மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாழடைந்து இடியும் நிலையில் கட்டிடங்களும் வகுப்பறைகளும் உள்ளன. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செங்குத்தாக சரிந்து வருவதை தடுப்பதற்காக தனியார் பள்ளிகள் போன்று ஆங்கில வழி வகுப்புகளை துவங்கி வகுப்பறைகளிலிருந்து தாய்மொழியை விரட்டும் பணியை மேற்கொண்ட பெருமையும் முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். ஆனாலும் அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தபாடில்லை.

ஆரம்பக்கல்வி தாய்மொழி வழிக்கல்வியாகத்தான் இருக்க வேண்டுமென்ற அறிவியல் பூர்வமான உலக நாடுகளின் நடைமுறைக்கு எதிரான இத்தகைய அணுகுமுறை எதிர்கால தலைமுறையை சுய சிந்தனை அற்றவர்களாக உருவாக்கிடவே வழிவகுக்கும்.அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்டமைப்பினையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் இதைச் செய்யாமல், இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சாதனை படைத்துவிட்டோம் என்று பேசுவதில் எவ்வித பயனும் இல்லை. 14 வகையான இலவச பொருட்கள் மற்றும்உபகரணங்களை வழங்கி வருவதால் அரசு பள்ளிகள் மேம்பட்டு விட்டனவா? மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்து விட்டதா? இது எதுவும் நிகழவில்லையே ஏன்? மாறாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் கல்வி வணிகமும் பெருகி வருகின்றது.

*மூடப்படும் அரசுப்பள்ளிகள்*

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால்அரசு உண்மை விபரத்தை வெளியிட மறுத்துவருகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒற்றைப்படையில்தான் மாணவர் சேர்க்கை இருப்பதாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

*ஒரே மாவட்டத்தில் 70 பள்ளிகள் மூடல்*

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருஒன்றியத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து தொடக்கப் பள்ளிகள் வீதம் மொத்தம் 14 ஒன்றியத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 70 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று அரசுப்பள்ளி ஆசிரியர்களே கூறுகின்றனர்.புதிதாக திறக்கப்பட்ட பள்ளிகள், ‘தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என ஒவ்வொரு ஆண்டும் அரசுஅறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால்ஏற்கெனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் இன்றைய நிலையை கல்வி அதிகாரிகள் வெளிப் படையாக கூற

.“திருவள்ளூர் மாவட்டம் கொல்லமதுராபுரத்தில் செயல் பட்டுவந்த தொடக்கப்பள்ளி சிலஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதால் வேலன் கண்டிகை தொடக்கப் பள்ளிக்குத்தான் எங்கள் கிராமத்தைசேர்ந்த குழந்தைகள் செல்ல வேண்டியுள்ளது.

ஏரிக்கரை மீது இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி அனுப்ப முடியும். பெற்றோர்கள் கூடவே செல்லவும் முடியாது. ஆகவே உள்ளூரில்மீண்டும் பள்ளியை திறந்து செயல் பட வைத்தால் எங்களுக்கு பெரும் நிம்மதி” என்று அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.

அதேபோன்று திண்டுக்கல்மாவட்டம் ஆத்தூர் தொகுதிக் குட்பட்ட அய்யங்கோட்டை தொடக்கப்பள்ளி மூடப்பட்டுவிட்டது. மேலும் அய்யங்கோட்டை புதூர் தொடக்கப்பள்ளியும் மற்றும்சிறுமலை தொடக்கப்பள்ளியும் மூடப்பட்டு விட்டன. அய்யங் கோட்டை துவக்கப்பள்ளியில் தற்போது பால்வாடி நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள அடைய கருங்குளத்தில் தனியார் மூலம் 1934ல் தொடங்கப்பட்ட பள்ளி பின்னர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது.

இப்பள்ளியை சுற்றி புதிய புதியதனியார் பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் ஆசிரியர் எண்ணிக்கை இப்பள்ளியில் குறைந்ததாலும் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து இந்தாண்டு 2 மாணவர்கள் மட்டுமேபயின்றதாகவும் அம்மாணவர் களும் வேறு பள்ளிக்கு மாற்றப் பட்ட நிலையில் அப்பள்ளி நடப்பாண்டு மூடப்பட்டுள்ளது என்று கருங்குளம் கிராமத்து பொதுமக்கள் கூறுகின்றனர். இப்படி கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிமுகவும்- திமுகவும் போட்டி போட்டு மூடியுள்ளன.கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்கவும், தனியார் கல்வி முதலாளிகளை பாதுகாக்கவும் வேண்டும்என்பதே அரசின் திட்டம்.

அந்ததிட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு குறித்து திமுக கேள்விகேட்டால், திமுகவை சேர்ந்த கல்வி முதலாளிகளுக்கு பிரச்சனையாகி விடுமல் லவா? ஆகையால் இரண்டு கட்சிகளும் இப்பிரச்சனையில் வாய்திறப்பதில்லை என்பதே ஊரறிந்த ரகசியம் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இயக்கத்தின் மூத்த ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

அறிவியல் வினா விடை

1. கார்டியோகிராப் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - இருதய செயல்பாட்டை
2. நீர்மூழ்கி கப்பல் இயங்க காரணமான விதி - கார்டியன் டைவர் விதி
3. ஒளி மிகுந்த கிரகம் - வீனஸ்
4. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி - கிரிஸ்கோகிராப்
5. கலோரி என்பது எதன் அலகு - வெப்பம்
6. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது - பைன்
7. நிலநடுக்கத்தைப் பற்றி படிப்பது - சீஸ்மோலஜி
8. அராக்கிஸ் ஹைபோஜியா எனும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவரக் குடும்பம் - பேபிலியோனேசி
9. புறை நோய் பாதிப்பது - கண்
10. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
11. ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர்
12. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனை பயன்படுத்தி அழிக்க முடியும் - பூஞ்சை
13. செரிகல்சர் என்பது - பட்டுபூச்சி வளர்ப்பது
14. இரட்டை மினிட் குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன - புற்று செல்கள்
15. வைட்டமின் 'D' குறைவினால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ்
16. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம் - மைட்டோகானடிரியா
17. சாதாரண உப்பின் வேதியியல் பெயர் - சோடியம் குளோரைடு
18. அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம் - லாமினேரியா
19. ரஷ்ய விண்வெளி வீரர்களை எவ்வாறு அழைப்பர் - காஸ்மோநட்கள்
20. "SCP" என்று அழைக்கப்படும் உயிரினம் - குளோரெல்லா
21. பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் எந்த தாவரத்தில் காணப்படுகிறது -  ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினா
22. DDT கண்டறிந்தவர் - பால் முல்லர்
23. பக்க வேர்களைத் தோற்றுவிப்பது எது - பெரிசைக்கிள்
24. டெலிகிராபிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மார்ஸ்
25. டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி எங்கு அமைந்துள்ளது - RNA பாலிமெரேஸ்
26. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர் - ஷாக்லி
27. டெர்மினலைசேஷன் எந்த நிலையில் நடைபெறும் - டயாகைனசிஸ்
28. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - பெயர்டு
29. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன்
30. ரேடார் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - பறக்கும் பொருளை
31. குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது - தாவரங்கள் ஒளிச்சேர்க்கை
32. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் - பிரேகுலட்
33. புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம் - பொட்டாசியம்
34. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரிவிளைவு உண்டு இது நியூட்டனின் எந்த விதி - மூன்றாம் விதி
35. பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம் - மீஸோஸோம்
36. பெளர்ணமி எப்போது ஏற்படுகிறது - நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலிருக்கும்போது
37. அமீபா சுழிச்சலை உண்டாக்குவது - என்டமீபா
38. PV=RT என்பது - பாயில் விதி
39. நாடாப்புழுவின் தலைப்பகுதியின் பெயர் - ஸ்கோலக்ஸ்
40. மைக்காலஜி என்பது - காளான் தொடர்புடையது
41. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது - ஈஸ்ட்
42. அமோனியா எதனுடைய ஹைட்ரஜன் கலவை - நைட்ரஜன்
43. உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம் - மூங்கில்
44. இன்சுலின் சுரப்பது - கணையம்
45. உப்பின் அளவு மிக அதிகமா இருக்கும் - சாக்கடல்
46. இயற்கை வாயுவில் முக்கியமாக உள்ளவை - மீத்தேன்
47. வெண்கடல் அமைந்துள்ள இடம் - வடரஷ்யா
48. மின்சார பல்பின் இழை எதில் செய்யப்படுகிறது - டங்ஸ்டன்
49. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - டார்ஜிலிங்
50. வெள்ளியின் தாது - ஆர்ஜென்டிரெட்
1. கார்டியோகிராப் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - இருதய செயல்பாட்டை
2. நீர்மூழ்கி கப்பல் இயங்க காரணமான விதி - கார்டியன் டைவர் விதி
3. ஒளி மிகுந்த கிரகம் - வீனஸ்
4. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி - கிரிஸ்கோகிராப்
5. கலோரி என்பது எதன் அலகு - வெப்பம்
6. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது - பைன்
7. நிலநடுக்கத்தைப் பற்றி படிப்பது - சீஸ்மோலஜி
8. அராக்கிஸ் ஹைபோஜியா எனும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவரக் குடும்பம் - பேபிலியோனேசி
9. புறை நோய் பாதிப்பது - கண்
10. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
11. ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர்
12. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனை பயன்படுத்தி அழிக்க முடியும் - பூஞ்சை
13. செரிகல்சர் என்பது - பட்டுபூச்சி வளர்ப்பது
14. இரட்டை மினிட் குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன - புற்று செல்கள்
15. வைட்டமின் 'D' குறைவினால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ்
16. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம் - மைட்டோகானடிரியா
17. சாதாரண உப்பின் வேதியியல் பெயர் - சோடியம் குளோரைடு
18. அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம் - லாமினேரியா
19. ரஷ்ய விண்வெளி வீரர்களை எவ்வாறு அழைப்பர் - காஸ்மோநட்கள்
20. "SCP" என்று அழைக்கப்படும் உயிரினம் - குளோரெல்லா
21. பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் எந்த தாவரத்தில் காணப்படுகிறது -  ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினா
22. DDT கண்டறிந்தவர் - பால் முல்லர்
23. பக்க வேர்களைத் தோற்றுவிப்பது எது - பெரிசைக்கிள்
24. டெலிகிராபிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மார்ஸ்
25. டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி எங்கு அமைந்துள்ளது - RNA பாலிமெரேஸ்
26. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர் - ஷாக்லி
27. டெர்மினலைசேஷன் எந்த நிலையில் நடைபெறும் - டயாகைனசிஸ்
28. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - பெயர்டு
29. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன்
30. ரேடார் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - பறக்கும் பொருளை
31. குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது - தாவரங்கள் ஒளிச்சேர்க்கை
32. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் - பிரேகுலட்
33. புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம் - பொட்டாசியம்
34. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரிவிளைவு உண்டு இது நியூட்டனின் எந்த விதி - மூன்றாம் விதி
35. பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம் - மீஸோஸோம்
36. பெளர்ணமி எப்போது ஏற்படுகிறது - நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலிருக்கும்போது
37. அமீபா சுழிச்சலை உண்டாக்குவது - என்டமீபா
38. PV=RT என்பது - பாயில் விதி
39. நாடாப்புழுவின் தலைப்பகுதியின் பெயர் - ஸ்கோலக்ஸ்
40. மைக்காலஜி என்பது - காளான் தொடர்புடையது
41. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது - ஈஸ்ட்
42. அமோனியா எதனுடைய ஹைட்ரஜன் கலவை - நைட்ரஜன்
43. உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம் - மூங்கில்
44. இன்சுலின் சுரப்பது - கணையம்
45. உப்பின் அளவு மிக அதிகமா இருக்கும் - சாக்கடல்
46. இயற்கை வாயுவில் முக்கியமாக உள்ளவை - மீத்தேன்
47. வெண்கடல் அமைந்துள்ள இடம் - வடரஷ்யா
48. மின்சார பல்பின் இழை எதில் செய்யப்படுகிறது - டங்ஸ்டன்
49. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - டார்ஜிலிங்
50. வெள்ளியின் தாது - ஆர்ஜென்டிரெட்

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்...!

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்...!

APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி
JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்
KIWI - பசலிப்பழம்
LYCHEE - விளச்சிப்பழம்
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PINEAPPLE-அன்னாசிப்பழம்
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்
TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்
UGLI FRUIT - முரட்டுத் தோடை
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE – விளாம்பழம்

மாநிலங்கள் - நடனங்கள்

மாநிலங்கள் - நடனங்கள்

*தொகுப்பு:*

1. உத்தராஞ்சல் – குமயோண், ஜகர்ஸ், சோலிய, தாலி – ஜட்ட
2. அரியானா – ஸ்வாங், கோரியா, குக்க நடனம், லூர், சங், தாம
3. குஜராத் - கர்பா, தாண்டியா, ராஸிலா, திப்பனி, பாவை
4. கேரளா - கதகளி, ஒட்டன் துள்ளல், மோகினி ஆட்டம், சகிர கூத்து, சவிடு நாடகம், கைகொட்டி கலை, கூடியாட்டம், கிருஷ்ண வட்டம், முடியேட்டு
5. பீகார் - ஜதடஜதின், பிதஸிய, பாகுன, புர்பி
6. ராஜஸ்தான் - கயால், காம்கோர், சமர்கினாட்,சக்ரி, லீலா, சுசினி, கல்பேலியா,
7. பஞ்சாப் - பங்கிரா, கிடா, தாமன் மழவை, ஜ்ஹுமார், கர்தி, கிக்லி, சம்மி, லுடி, டண்டாஸ்
8. ஒடிசா – ஒடிசி, சவரி, ஹுமர, பைக, சாஹு, gotipua, சம்பல்பூர்
9. அசாம் – பிஹீ, ஒஜபலி, அங்கிய நட்
10. மேற்கு வங்காளம் - காதி, ஜாத்
11. உத்திரபிரதேசம் - கதக், காரண், சப்பேலி, குமயோண், நௌடாங்கி
12. மிசோரம் – சிராக் (மூங்கில் நடனம்)
13. ஜம்மு காஷ்மீர் - சாக்ரி, ரௌஃப்
14. மகாராஷ்டிரம் - தமாஸா, லாவனி, தாஹிகால, லேசிம்
15. கர்நாடகம் – யக்ஷகானம், பயலடா, சிம்ஹா நுடர்யா, தொல்லு குனித, வீரகசே
16. ஆந்திரா பிரதேசம் - குச்சிப்பிடி, கொட்டம்
17. மத்திய பிரதேசம் - மாச்சா, லோத்தா, பாண்ட்வானி, தேர்டாளி, சர்குல, ஜவரா, மட்கி, ப்ஹுல்பட்டி, மான்ச், கிரிட கூர் மரிய
18. இமாச்சல் பிரதேசம் - லூட்டி, காயம்கா, முன்ஜர, கணயலா, ஹிகட்
19. தமிழ் நாடு - பரதநாட்டியம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம்
20. அருணாச்சல பிரதேசம் – அஜி லாமு, பர்டோ சஹம், போபிர், சலோ, சிங்கம் & மயில் நடனம்
21. சட்டீஸ்கர் – பந்தி, ராட் நச்சா,
22. கோவா – புக்டி, தேஹன்னி, தரங்கமல், தலோ
23. ஜார்கண்ட் - கர்மா
24. லட்சத்தீவுகள் - லவா
25. புதுச்சேரி - கரடி
26. சிக்கிம் - சிங்ஹி சாம், யாக் சாம், மருனி, ரேசுங்க்மா
27. தெலுங்கானா – பெரிணி தாண்டவம், தப்பு, லம்பாடி
28. திரிபுரா – ஹோஜகிரி, கோரிய, லேபங் பூமணி,
29. மணிப்பூர் – தங் டா, மணிபுரி, தொல் சொலோம்
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

தேனீக்கள்

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝 🐝
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
 .............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்.

🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

🐝மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

🐝புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

🐝அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

🐝ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

🐝இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

🐝பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.   தேனீ பற்றி 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ளது.🌙

IAS தேர்வு என்றால் என்ன ? IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக

IAS தேர்வு என்றால் என்ன ?
  IAS  மற்றும் IPS  உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

IAS  தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?

                                ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS  தேர்விற்கான வயது வரம்பு என்ன ?

                குறைந்தபட்ச வயது : 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

                அதிகபட்ச வயது   :   பொதுப்பிரிவினர் (GENERAL) : 32

                                                                பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

                                                                ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : 37

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?

   பொதுப்பிரிவினர் (GENERAL)                    : 6 முறை

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC)        : 9 முறை

    ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST)   : எண்ணிக்கை இல்லை(Unlimited)

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?

சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்புஆளுமை அதிகாரம்பெருமதிப்பிற்குரிய பணிசமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை   மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?

                                இல்லை.அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?

                                முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?

                                இல்லை.ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.என்னால் முடியுமா ?

                                கண்டிப்பாக முடியும். இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.உண்மையான போட்டியாளர்கள் என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?

                                இல்லை. IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.அந்தப் பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?

                                முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?

                                IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.அது ஓர் போட்டித் தேர்வு.ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?

                                முற்றிலும் தவறான கருத்து.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?

                                இல்லை.நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்சரியான திட்டமிடல்திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்மாதிரித் தேர்வுகள் எழுதுதல்சரியான வழிகாட்டல்இறுதியாக முழு நம்பிக்கையோடு இருத்தல்

                                இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் ஒர் IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..🌙🌙🌙🌙🌙🌙

புவியியல்; - வளிமண்டலமும் சூரிய ஆற்றலும்

 புவியியல்; - வளிமண்டலமும் சூரிய ஆற்றலும்
1. ட்ரோப்போஸ்பியரைப் போன்று எந்த அடுக்கில் நீராவி காணப்படுவதில்லை - ஸ்ட்ரடோஸ்பியர்

2. ஆகாய விமானங்கள் மிக வேகமாக பறப்பதற்கு ஏற்ற சாதகமான சு+ழ்நிலை எந்த அடுக்கில் நிலவுகின்றது - ஸ்ட்ரடோஸ்பியர்

3. ஸ்ட்ரடோஸ்பியருக்கு மேல் ................ கி.மீ. முதல் .............. கி.மீ. வரை மீஸோஸ்பியர் பரவியுள்ளது - 50 கி.மீ. முதல் 80 கி.மீ.

4. விண்வெளியில் இருந்து ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு புவியை நோக்கி விழும் விண்கற்கள் எந்த அடுக்கினுள் நுழையும்பொழுது அங்குள்ள காற்றுடன் ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகிறது - மீஸோஸ்பியர்

5. மீஸோஸ்பியருக்கு மேலே சுமார் ............... முதல் சுமார் ................ வரை தெர்மோஸ்பியர் அமைந்துள்ளது - 80 கி.மீ. முதல் சுமார் 1600 கி.மீ.

6. வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சிகள் எப்பகுதியில் உள்ள அயனிகளால் பிரதிபலிக்கப்படுவதால் தான் புவியில் நாம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க முடிகின்றது - தெர்மோஸ்பியர்

7. தெர்மோஸ்பியரின் மேல் ............. முதல் .............. வரை எக்ஸ்ஸோஸ்பியர் பரவியுள்ளது - 1600 கி.மீ. முதல் 10000 கி.மீ.

8. ..................... அடுக்கில் புறஊதாக் கதிர்களை உட்கிரகித்துக் கொள்கின்ற ஓசோன்படலமும் அமைந்துள்ளது - ஸ்ட்ரடோஸ்பியர்

9. ............... ஆக்ஸிஜனின் ஒரு வடிவமாகும் - ஓசோன் வாயு

10. ஓசோன் வாயு ............. ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது - மூன்று

11. வளிமண்டலத்தில் காணப்படும் ................. இரண்டு அணுக்களால் ஆனது - ஆக்ஸிஜன் வாயு

12. வேதியியல் விதிப்படி ஒரு தனித்த ஆக்ஸிஜன் அணுவானது ............... தன்மையைக் கொண்டிருக்கும் - நிலையற்ற

13. ட்ரோப்போஸ்பியரில் .............. காற்றை மாசுபடுத்துவதால் தீமைகளை விளைவிக்கிறது - ஓசோன்வாயு

14. ஆக்ஸிஜன் மூலக்கூறிலிருக்கும் அணுக்களின் பிணைப்பை ............ கதிர்களின் ஆற்றல் உடைத்து விடுகின்றன - புறஊதா

15. புவியின் வளிமண்டலத�

IMPORTANT DAYS IN SEPTEMBER:(WITH SHORTCUTS)

IMPORTANT DAYS IN SEPTEMBER:(WITH SHORTCUTS)

SEPTEMBER 5 - National Teachers day (ஆசிரியர் தினம்)

SEPTEMBER 6 - Forgiveness day (மன்னிப்பு தினம்)

SEPTEMBER 8 - U.N.Literacy Day (எழுத்தறிவு தினம்)

SEPTEMBER 14 - First Aid, Hindi day (முதல் உதவி தினம்,ஹிந்தி தினம்)

SEPTEMBER 15 - Engineer's day (பொறியாளர் தினம்)

SEPTEMBER 16 - Ozone day (ஒசானே தினம்)

SEPTEMBER 21 - International Day of Peace (உலக அமைதி தினம்)

SEPTEMBER 21 - Biosphere day (உயிர்கோளம்தினம்) Alzheimer's day(மறதி நோய்)

SEPTEMBER 24 - Heart disease, Deaf day(காது கேளாமை மற்றும் இருதய நோய்)

SEPTEMBER 25 - Social Justice Day(சமூக நீதி தினம்) ,

SEPTEMBER 27 - Happiness day,(சந்தோஷ நாள்) Tourism day((சுற்றுலா தினம்)

செப்டம்பர் மாதம் இருக்ககூடிய முக்கிய தினங்களை எளிதில் நினைவில் வைத்துகொள்ள கீழ்க்கண்ட சிறுகதையினை படிக்கவும்

SHORTSTORY:

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்.ஆசிரியர்கள் அனைவருக்கும் மன்னிக்கக்கூடிய பண்பு உண்டு(மன்னிப்பு தினம் SEPTEMBER 6)

ஆனால் எழுதி எழுதி படிக்க வேண்டும் என்று அறிவுரை
கூறுவார்கள்(எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8).

என்ன படிக்க வேண்டும் என்று கேட்டால் முதலில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.(முதல் உதவி தினம், ஹிந்தி தினம் செப்டம்பர் 14)

ஹிந்தி படித்து அனைவரும் இன்ஜினியர் (பொறியாளர் தினம் செப்டம்பர் 15) ஆகிறார்கள்.

அப்போது ஓசோனில் ஓட்டை விழுந்து விடுகிறது(ஒசானே தினம் செப்டம்பர் 16)

அதனால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் பயந்து, உலக அமைதி கெட்டு விடுகிறது.(உலக அமைதி தினம் செப்டம்பர் 21 )
...
ஓசோனில் ஓட்டை விழுந்ததினால் உயிர்கோளம்(உயிர்கோள தினம் SEPTEMBER 21) பாதிக்கப்பட்டு பலருக்கு மறதி நோய்(SEPTEMBER 21) காது கேளாமை மற்றும் இருதய நோய்SEPTEMBER 24) வந்து விடுகிறது.

கடைசியாக படித்து முடித்த என்ஜினியர்கள், யாரும் கவலை படவேண்டாம், இந்த சமூகத்திற்கு நாங்கள் நீதி கொடுக்கிறோம்(சமூக நீதி தினம் செப்டம்பர் 25), நாங்கள் வேலைக்கு செல்கிறோம் என்று கூறுகிறார்கள்.

என்ஜினியர்கள் படித்து உடனே வேலைக்கு செல்வது என்பதை விட சந்தோசமான விஷயம் இந்த உலகத்தில் வேறொன்றும் இருக்க முடியாது(சந்தோஷ நாள் செப்டெம்பர் 27).

அதனால் சந்தோசத்தை கொண்டாட அனைவரும் சுற்றுலா (tour) செல்கிறார்கள்(சுற்றுலா தினம் செப்டம்பர் 27)

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படிப்போர் www.tngdc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.50-உடன் ஆகஸ்ட்31-க்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்திலேயே அறியலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்தின் இயக்குநர்

தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

நான்கின் புதிர் அமைப்பு

0 = 44-44
1 = 44/44 or (4+4)/(4+4) or (4/4) / (4/4) or [(4! - 4)/ 4] - 4
2 = 4/4+4/4
3 = (4+4+4)/4
4 = 4*(4-4)+4
5 = (4*4+4)/4
6 = 4*.4+4.4
7 = 44/4-4
8 = 4+4.4-.4
9 = 4/4+4+4
10 = 44/4.4
11 = 4/.4+4/4
12 = (44+4)/4
13 = 4!-44/4
14 = 4*(4-.4)-.4
15 = 44/4+4
16 = .4*(44-4)
17 = 4/4+4*4
18 = 44*.4+.4
19 = 4!-4-4/4
20 = 4*(4/4+4)
21 = (4.4+4)/.4
22 = 44*sqrt(4)/4
23 = (4*4!-4)/4
24 = 4*4+4+4
25 = (4*4!+4)/4
26 = 4/.4+4*4
27 = 4-4/4+4!
28 = 44-4*4
29 = 4/.4/.4+4
30 = (4+4+4)/.4
31 = (4!+4)/4+4!
32 = 4*4+4*4
33 = (4-.4)/.4+4!
34 = 44-4/.4
35 = 44/4+4!
36 = 44-4-4
37 = (sqrt(4)+4!)/sqrt(4)+4!
38 = 44-4!/4
39 = (4*4-.4)/.4
40 = 44-sqrt(4*4)
41 = (sqrt(4)+4!)/.4-4!
42 = sqrt(4)+44-4
43 = 44-4/4
44 = 44.4-.4
45 = 4/4+44
46 = 44-sqrt(4)+4
47 = 4!+4!-4/4
48 = 4*(4+4+4)
49 = (4!-4.4)/.4
50 = 4!/4+44

CPS News:


▶CPS News:

முதலில் Cps ல் சேர்ந்தவர்களுக்கு Cps Number Allotment Letter தந்திருக்கமாட்டார்கள். அவர்கள் தற்போது Cps கணக்கில் login செய்து Allotment letter என்பதை click செய்து download செய்துகொள்ளுங்கள். உங்கள் கணக்குத்தாளையும் download செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இதனை கிளிக் செய்து login செய்யுங்கள்.
http://cps.tn.gov.in/public/

திங்கள், 5 செப்டம்பர், 2016

ஆசிரியர் தினம் விருது

              இன்று ஆசிரியர்தினம் நாடு முழுவதும்கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்தமிழ்நாட்டில் 379 ஆசிரியர்கள்டாக்டர்ராதா கிருஷ்ணன்விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.டாக்டர்ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி,ஆசிரியர் தினம் நாடு
முழுவதும்கொண்டாடப்படுகிறது.ஆசிரியர் பணியில் சிறப்பாகசேவையாற்றியவர்களுக்கு  தேசிய அளவில் இன்றுகுடியரசுத் தலைவர் தேசியநல்லாசிரியர் விருதுவழங்குகிறார். தமிழகத்தை
சேர்ந்த 23 பேர் தேசியநல்லாசிரியர் விருதுபெறுகின்றனர்.இதையடுத்து, தமிழக அரசின்சார்பில் 15 ஆண்டுகளுக்கும்மேலாக சிறப்பாக
பணியாற்றியஆசிரியர்களுக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன் விருது
வழங்கப்படுகிறது. இந்தவிருது பெறும்ஆசிரியர்களுக்கு வெள்ளிப்
பதக்கம், பாராட்டுப்பத்திரம்,அத்துடன் ரொக்கம் ₹5 ஆயிரம்
வழங்கப்பட்டு வந்தது.இந்த ஆண்டு ரொக்கம் 10ஆயிரமாக
உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன்பாராட்டுச் சான்று, வெள்ளிப்பதக்கம் பெறுகின்றனர். இந்தஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்379 பேருக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன் விருதுஇன்று மாலை 4 மணிக்குவழங்கப்பட்டன. இதற்கானவிழா சென்னை சாந்தோமில்உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில்
நடக்கிறது. தொடக்க,நடுநிலைப் பள்ளிகளைசேர்ந்த ஆசிரியர்கள் 201,
உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளை சேர்ந்தஆசிரியர்கள் 134, மெட்ரிக்
பள்ளிகளை சேர்ந்தஆசிரியர்கள் 30, ஆங்கிலோஇந்தியன் பள்ளிகள் 2 பேர்,
சமூக பாதுகாப்பு துறைபள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்–்கள் 2 விருதுகள்
பெறுகின்றனர். இது தவிரமாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி) சார்பில் ஆசிரியர்பயிற்சி பள்ளிகளில்
பணியாற்றும்பேராசிரியர்கள் 10பேருக்கும் விருதுகள்வழங்கப்படுகிறது

TNPSC குரூப் 4 தேர்வுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆகஸ்டு மாத மிக முக்கியமான தமிழ் நடப்பு நிகழ்வுகளின் வினாக்கள்

TNPSC குரூப் 4 தேர்வுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட  ஆகஸ்டு மாத  மிக முக்கியமான தமிழ் நடப்பு நிகழ்வுகளின்  வினாக்கள் மற்றும் விடைகள் காண கீழே உள்ள Link ஐ http://goo.gl/g2LPRV கிளிக் செய்யவும் http://goo.gl/g2LPRV

AVALURPET MURUGAPERUMAN.


📢📢 அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியை பெற்று வளமான வாழ்வும், மகிழ்ச்சியும் பெற என்னுடைய விநாயகர் சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்.📢📢
மனதினிய
ஆசிரியர் தின வாழ்த்துகள் .....

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?



எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம் 

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை 

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள் 

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள் 

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள் 

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள் 

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள் 

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள் 

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.