>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

தனியார் பள்ளியில் இலவச கல்வி எனும் மாயையை விடுத்து, அரசு பள்ளியில் தரமான கல்வியினை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வோம்.

சில நாட்களாக தனியார் கல்வி நிறுவனங்களில் 25% இலவச கல்வி எனும் திட்டத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் நிறைய குறைகள் இருந்த போதும் இத்திட்டம் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வது நல்ல விழயம் தான். ஆனால் அதை விட அரசு பள்ளிகளில் பிள்ளைகளை.சேர்க்க விழிப்புணர்வை.அதிகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தினை அதிகரிக்க நாம் போராட வேண்டும். காரணம், அரசு பள்ளிகளுக்கு ஈடு இணை கிடையாது. அரசு பள்ளிகள் மதிப்பெண் முட்டைகளை மட்டுமே இடும் கோழிகளை உருவாக்கும் இடமல்ல. பன்முகத்தன்மை கொண்ட தளமே அரசு பள்ளிகள்.

தனியார் கல்வி நிறுவனத்தில் 25% பிள்ளைகளுக்கு இலவச கல்வி என்பதே பொய்யான கோஷம். உள்ளே நடக்கும் விழயங்கள் கூட வேண்டாம். மேலோட்டமாக பார்ப்போம். இந்த 25% மாணவர்களின் கல்விக்காகவும் அரசு, அந்த தனியார் பள்ளிக்கு கட்டணத்தை செலுத்தும் என்பதே இதன் சாரம் ஆகும். இப்படி 25% மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு பணத்தை செலவழிப்பதை விட அதனை அரசு பள்ளிகளின் தரத்திற்கு உபயோகப்படுத்தினால் அரசு பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.

அரசு பள்ளிகளை புறக்கணித்து தனியாரை நோக்கி நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு அரசு பள்ளி மூடப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தின் ஏழ்மை நிலை மக்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது என்பதை உணர்ந்தோமா? தரமானவற்றை தனியார் தான் அளிக்க முடியும் என்றால் அனைத்து துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்து விடலாமா?

நான் அரசு பள்ளியில் படித்தவன் தான். எனது பிள்ளைகளையும் அரசு பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். அரசு பள்ளிகளில் உள்ள குறைகளை களைய போராடுங்கள். அதை விடுத்து, தனியாருக்கு உங்கள் பிள்ளைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, பின் சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது தொடர் கதையாக மட்டுமே போகும்.

அரசு பள்ளிகள் தரமற்றவை இல்லை. அவை நம்மால் புறக்கணிக்கப்பட்டதால் அவ்வாறாக ஆக்கப்பட்டவைகள்.

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்...

புதுடில்லி; 'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.

அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும். 
இணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது.'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.

பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி

கோவை: ''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர்.வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர். ஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது.
பல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.மேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்

அனைத்து தாலுகாவிலும் அரசு கேபிள் சேவை?

தமிழகத்தில், 2007ல், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவக்கப்பட்டது. 2011 முதல், 70 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில், 100 சேனல்களை அளித்து வருகிறது.
2014 முதல், சென்னை உட்பட நான்கு மாநகரங்களில், டிஜிட்டல் முறையில், கேபிள், 'டிவி' சேவை தொடங்கப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும், 22 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்'கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கேபிள், 'டிவி' சேவை, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைப்பது, மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர், குமரகுருபரன் கூறியதாவது:தமிழகத்தில், 294 தாலுகாக்கள் உள்ளன; அவற்றில், 130ல் மட்டுமே, அரசு கேபிள், 'டிவி' சேவை கிடைக்கிறது. அனைத்து தாலுகாக்களிலும் சேவைகளை வழங்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரயில்டெல், பி.எஸ்.என்.எல்., மற்றும் வோடாபோன் நிறுவனங்களுடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். அனைவருக்கும், குறைந்த கட்டணத்தில், தரமான சேவை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த மாத இறுதிக்குள், 24 லட்சம், செட் -டாப் பாக்ஸ்கள், வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உரிமம் ரத்தாகும் : அரசு கேபிள், 'டிவி' சேவையில், 125 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, 200 சேனல்கள்; 175 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., செலுத்தி, 300 சேனல்கள் பெறும் வசதிகள் உள்ளன. அரசு நிர்ணயித்த, இந்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கும், ஆப்பரேட்டர்கள் குறித்து, புகார்கள் எழுந்தால், அவர்களின் கேபிள், 'டிவி' உரிமம் ரத்து செய்யப்படும் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் எச்சரித்துள்ளது.

'காஸ்ட்லி' ஆகிறது இலவச எல்.கே.ஜி.,! வருமான சான்றிதழுக்கு வசூல் வேட்டை

கோவை:இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வருமான சான்றிதழ் வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிக்கலாம். இதற்கு தமிழகம் முழுக்ககடந்த, 20ம் தேதி முதல், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி இணையதளத்தில், (www.dge.tn.gov.in) அந்தந்த மாவட்டத்திற்கு தனியாக, மெட்ரிக் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குடியிருப்பின் அருகாமையில் உள்ள, ஐந்து பள்ளிகளை பெற்றோர் தேர்வு செய்யலாம். ஏதேனும் ஒரு பள்ளியில் அட்மிஷன் உறுதி செய்யப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு, வருமான சான்றிதழ் தேவையில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியோராக இருந்தால், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம். இதற்கு, வருமான சான்றிதழ் பெறும் நடைமுறைகள், ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து இ - சேவை மையங்களிலும், விண்ணப்ப கட்டணம் செலுத்தினால், 15 நாட்களில், இச்சான்றிதழை இலவசமாக பெற முடியும்.
இதற்காக தகவல் வேண்டி, இ - சேவை மையம் செல்வோரை, இடைத்தரகர்கள் சூழ்ந்து கொண்டு, விரைவில் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'இ - சேவை மையங்களில் விண்ணப்பித்தால், விரைவில் சான்றிதழ் பெற முடியாது என கூறி, இடைத்தரகர்கள் மூளைசலவை செய்கின்றனர். படிக்க தெரியாதவர்கள், வீண் அலைச்சலுக்கு பயந்து, பணம் கொடுக்கின்றனர். இடைத்தரகர்கள் மூலமாக, இ - சேவை மையத்தை அணுகுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உரிய துறை அதிகாரிகள், இ - சேவை மையங்களில் ஆய்வு நடத்தினால், பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருக்காது. 
மே 18ம் தேதி வரை மட்டுமே, இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலும். எனவே, சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை, துரிதப்படுத்த வேண்டும்' என்றனர்.

10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு............

மானாமதுரை: சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் நடக்க உள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் 10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 10ம் வகுப்பிற்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்கள் எழுதிய கருத்தை உள்வாங்கி மதிப்பெண்களை வழங்குவர். ஆனால் பாடம் எடுக்காத ஆசிரியர்கள் 'கீ ஆன்சர்களை' மட்டும் கொண்டு மதிப்பெண் வழங்குவதால், மாணவர்கள் உரிய பதிலை கருத்தோடு எழுதியிருந்தாலும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கவாய்ப்புள்ளது. ஆங்கிலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாடங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் திருத்த வாய்ப்புள்ளதால் மதிப்பெண் குறைய வாய்ப்புஉள்ளது, என்றார்.
பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: விடைத்தாள்களுக்கு ஏற்பபட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது, பாடம் எடுக்காத ஆசிரியர்கள் இருந்தால்திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆங்கில பாடத்திற்கு ஆங்கில ஆசிரியர்களைகொண்டு திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது, என்றார்.

சீரானது அரசின் இணையதளம்


சென்னை: பராமரிப்பு பணி முடிந்த நிலையில், தமிழக அரசின் இணையதளம், நேற்று சீரானது.
தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான, www.tn.gov.in ஏப்ரல், 20ல் முடங்கியது. 

இதனால், அரசின், 'ஆன்லைன்' சேவைகளை பெற முடியாமலும், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகள், முக்கிய தகவல்களை அறிய முடியாமலும், மக்கள் தவித்தனர். தொழில்நுட்ப ரீதியான சில பிரச்னைகளே, அரசின் இணைய தளம் முடங்க காரணம் என, தெரிய வந்தது.இந்நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி முடிந்து, அரசின் இணைய தளம், நேற்று மீண்டும் செயல்பாட்டிற்குவந்தது.

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்!


நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.



 தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், பல்வேறு பிரிவுகளும் பலதரப்பட்ட சங்கங்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை, ஜாக்டோ-ஜியோ அமைப்பில் ஒருங்கிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது வழக்கம்.

சில அமைப்புகள் அதில் சேராமல் தாங்களாகவே சுயமாக, தனித்துப் போராடுவதும் வழக்கம். அப்படியொரு அமைப்புதான் தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்காக, தங்களது குடும்பத்துடன் சென்னையை நோக்கி ஏப்ரல் 22-ம் தேதி படையெடுக்க உள்ளனர். மறுநாள் காலை முதல், அதாவது, 23-ம் தேதி முதல் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள். 

30.6.2009-ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம்செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருக்கிறது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி. ஆனால், சம்பளத்தில் மட்டும் ஏன் இந்த இமாலய வித்தியாசம்? அதை, உடனடியாகக் களைய வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவு இடைநிலை ஆசிரியர்களின் கேள்வி. 

இதற்காக, இவர்கள் கடந்த 9 வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இது இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவதில் மனம் வெறுத்துதான், தங்களின் இறுதி முயற்சியாக குடும்பத்துடன் சாகும் வரை போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.


  
இதுகுறித்து, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட், "தமிழகத்தில் 6- வது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்தது. 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. 

இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், 10-ம் வகுப்பு கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஏனைய அரசு ஊழியர்களுக்குக்கூட ரூபாய் 9300-4200, 4400 என வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால், மாநில அரசு நியமிக்கும் ஒருநபர் அல்லது இருநபர் குழுக்களிடம் எங்களது ஊதியமுரண்பாட்டை விளக்கி ஊதியம் கோரும்போது, அவர்கள் 'இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு இந்தி தெரியாது; கணினி கற்றுக்கொள்ளவில்லை எனப் பல காரணங்களைக் கூறி, எங்களது நியாயமான கோரிக்கைகளை நிராகரித்துவிடுகிறார்கள்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - பகுதிநேர ஆசிரியர்கள் கவலை!

B.T TEACHERS WANTED - GOVT SALARY:

புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் வி

டைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்......



மதுரை: மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,'

என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.மதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், 'கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,' என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ''நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,'' என கேட்டால் "கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்," என்கின்றனர். இதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,

விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.

பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்.

சிவகங்கை: விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 210 வேலை நாட்களில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர், மாணவர்களுக்கு நற்சான்று வழங்கப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.2016-17க்கான வருகைப் பதிவேட்டை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. மாநிலத்தில் 45 ஆயிரத்து 120 பள்ளிகளில் பணிபுரியும் 2.21 லட்சம் ஆசிரியர்களில் 51 பேர்; 37.81 லட்சம் மாணவர்களில் 20 ஆயிரத்து 739 பேர் விடுப்பு எடுக்காதது கண்டறியப்பட்டன.இதில் பிப்., 12 ல் சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு மட்டும் நற்சான்று வழங்கினார். ஏப்., 20 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சான்று வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், ' மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தத்தான் 100 சதவீத வருகைக்கு நற்சான்று வழங்கப்படுகிறது. அதை குறித்த காலத்தில் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம்: நள்ளிரவிலும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்



சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக் கோரி தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவு கடந்தும் தொடர்ந்தது.

போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் தொடர்ந்து வற்புறுத்தியும் கூட ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியே செல்லவில்லை. மேலும் போலீஸார் கொடுத்த உணவைச் சாப்பிட அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்துக்குக் காரணம் என்ன? தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 30.6.2009-ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் உள்ளது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி; ஆனால், சம்பளத்தில் மட்டும் அதிக வித்தியாசம் உள்ளது. 
அதை உடனடியாகக் களைய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏராளமான ஆசிரியர்கள் திங்கள்கிழமை டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். ஆசிரியர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அவர்களை போராட்டத்தில் ஈடுபட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸார் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் காவலில் வைத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட் உள்ளிட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் கூறியது:- 'தமிழகத்தில் 6- ஆவது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. 6-வது ஊதியக் குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. 
ரூ. 15,000 வரை ஊதிய முரண்பாடு: 1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8,370-2,800 எனவும், 1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5,200-2800 எனவும் அடிப்படை ஊதியத்தில் 3,170 குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு ஒரு நாள் முன்பாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தற்போது மாதம் ரூ.42 ஆயிரம் வரையிலும், நாங்கள் (போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்) ரூ.26,500 வரையிலும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடி வருகிறோம். 
9 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை நாங்கள் கேட்கவில்லை; மாநில அரசின் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத்தான் கேட்கிறோம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு தற்போது குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

'எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்'

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், 'எட்டாம் வகுப்புக்கான தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை பெண்கள் உடுத்த வேண்டாம்' என்ற வரிகள் நீக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

திங்கள், 23 ஏப்ரல், 2018

ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்

சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். எனவே, கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்கான அரசாணையில், 'ஊதிய முரண்பாடுகளுடன், சிறப்பு ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான மனுக்களையும், ஒரு நபர் கமிட்டி பரிசீலிக்கும்' என, திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

சனி, 21 ஏப்ரல், 2018

M.phil / P.hd - படிப்பில் சேர மே 18-வரை விண்ணப்பிக்கலாம் - Tamilnadu open university

தொடக்கக் கல்வி - 2018/19 STAFF FIXATION - கட்டாயம் பணிநிரவல் உண்டு, EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம், உயர் தொடக்க வகுப்பில் 100 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே - DEEO செயல்முறைகள்


தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல்

























*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:*

*அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.*

 நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *மாநில தலைவர்* திரு.வெ.முருகதாஸ்  அவர்கள் தலைமையில் *இன்று  (21/04/2018)* காலை  மாண்புமிகு *பள்ளி கல்வித்துறை அமைச்சர்* அவர்களை  கோபிசெட்டிபாளையம் *தோட்ட இல்லத்தில்* சந்தித்தோம் அப்பொழுது நமது *பணியிட மாறுதல்* மற்றும் *ஊதிய உயர்வு* குறித்து *நினைவுப்படுத்தினோம் இது குறித்து நான் நேற்று கூட நிதித்துறை  செயலாளர்* அவர்களிடம் *விவாதித்ததாகவும்* இதற்கான *அறிவிப்பு மிகவிரைவில் வரும்* என்றும் , *பணியிட மாறுதல் குறித்து கேட்டதற்கு* பொது தேர்வு *விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு* பெற்றதும் அந்தந்த *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தாம் அலுவலக பணிக்கு திரும்பியதும் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்*

இப்படிக்கு

*பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வின் முன்னேற்ற பாதைக்கான களப்பணியில் இன்று கலந்து கொண்டவர்கள்* என்றும் உங்கள் உடன்
*வெ.முருகதாஸ்*
மாநில தலைவர்
*ப.ஜெகதீசன்* மாநில செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள்       *சு.இளவரசன், மாநில அமைப்பு செயலாளர்* *க.பெரியசாமி, சி.ஜவஹர், எஸ்.ஷகிலாதேவி அ.சீனுவாசன்,* மற்றும்
*ஈரோடு மாவட்ட*   *ராதாகிருஷ்ணன், சந்தோஷ்*
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்*

கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு காய்கறி















வெள்ளரி :

வெள்ளரி ஒரு குறைந்த கலோரி கொண்ட மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேடடே உள்ள ஒரு நீர் காய்கறி
நமது உடலின் உள் மற்றும் வெளி உஷ்ணத்தை  குறைக்கும் சக்தி கொண்ட   96 % சதவிகித நீர் காய்க்கறி இது.

நமது உடலின் உள்ள டாக்சினை வெளியேற்றுகிறது.  ஜிரனத்தை அதிக படுத்துகிறது.. குறைந்த கலோரி யாதலால் உடல் பருமன் குறைகிறது . மூட்டுகளுக்கு மிக நல்லது , உங்கள் மூளையை / .  நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது (fisetin )

உங்களின் நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கிறது இது ஒரு நல்ல ஆண்டி ஆகசிடன்ட்

இதில் இருக்கும் நமது உடலுக்கு தேவையான் ஊட்ட சத்துக்கள்

வைட்டமின் A
வைட்டமின்  B  ( B1, vitamin B5, and vitamin B7 (biotin))  உங்களின் மன அழுத்ததை  குறைக்கிறது.
வைட்டமின்  C
வைட்டமின்  K - எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
மினரல்கள்
எலக்ட்ரோ லைட்
மெக்னிஷியம்
பொட்டாசியம்

ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு ORDER COPY

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

வியாழன், 19 ஏப்ரல், 2018


                   APR
11


உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய 20 படிவங்கள்


Image result for forms

1.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி  பட்டியல் - format -1
2.2017 - 18 ஆம் ஆண்டின்  தேர்ச்சி பட்டியல் கடிதம்
3.2017 - 18 ஆம் ஆண்டின்  தேர்ச்சி விகிதம் கடிதம் 
4.2017 - 18 ஆம் ஆண்டின்  செயல்வழி கற்றல் அடைவு நிலை  விவரம்
5.2017 - 18 ஆம் ஆண்டின்  பருவத்தேர்ச்சி அறிக்கை 
6.2017 - 18 ஆம் ஆண்டின் பருவத்தேர்ச்சி சுருக்கம்
7.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படைச் செயல்கள்

8.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வருகை குறைவிற்கு  தவிர்ப்பு வழங்க வேண்டிய மாணவர்கள் பட்டியல்  
9.2017 - 18 ஆம் ஆண்டின் பள்ளி வேலை நாட்கள் விவரம்
10.2018 - 19 ஆம் ஆண்டின் 5+ மாணவர்கள் பட்டியல்
11.2017 - 18 ஆம் ஆண்டின்  அலுவலர்கள் பார்வை விவரம்
12.2017 - 18 ஆம் ஆண்டின் பள்ளியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
13.2017 - 18 ஆம் ஆண்டின்  crc,brc மற்றும் இதர  பயிற்சி விவரம் 
14.2017 - 18 ஆம் ஆண்டின்  ஆசிரியர்கள் விடுப்பு விவரம்
15.2018 -2019 மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் பட்டியல் 
16.2017 - 18 ஆம் ஆண்டின் இடைநின்ற மாணவர்கள் பட்டியல் - (6-14)
17.இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள் (6-10) பட்டியல்
18.இதுவரை பள்ளியில் சேராத குழந்தைகள் (11-14) பட்டியல்
19.குடிமதிப்பு கணக்கு சுருக்கம் 
20.செயல் திட்டங்கள் விவரம் 

பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை


கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை பள்ளி
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று
 வருகின்றன.

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு
 வாரத்திற்கு முன் முடிந்து விட்டன. 10-ம் வகுப்புக்கு நாளை
 (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

தமிழகத்தில் தனியார், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்
 பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கனவே
 முடிந்து விட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்
 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள்
 நாளையுடன் முடிவடைகிறது. எனவே நாளையுடன்
 மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.



வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு
 தேர்வுகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக
 அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடித்து விட்டனர்.

அதனால் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அரசு பள்ளி
 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 வழக்கமாக மே மாதம் மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும்
. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுடன் மே மாதம் விடுமுறை
 சேர்த்து 40 நாட்களுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுமுறை
 கிடைத்துள்ளது. ஜூன் 1-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்பட்ட
போதிலும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ந் தேதி வரை பள்ளிகளுக்கு
வரவேண்டும். அவர்களுக்கு வேலை நாட்கள் அடிப்படையில்
 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது- மாணவ-மாணவிகள் கருத்து

சென்னை:பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் சிலரிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘3 மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பதில் அளிக்கும்படி இல்லை. அந்த கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டவை. அவை அனைத்தும் சற்று கடினமாக இருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் எளிதாகத்தான் கேட்கப்பட்டிருந்தன’ என்றனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்

'மொபைல் ஆப்' வழியே முன்பதிவில்லா டிக்கெட்...........


சென்னை:'மொபைல் ஆப்' வாயிலாக, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதி, தெற்கு ரயில்வே முழுவதும், இன்று நடைமுறைக்கு வருகிறது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், டிக்கெட் கவுன்டர்களில், பயணியர் காத்திருப்பதை தவிர்க்கவும், ரயில்வேயில், 'யுடிஎஸ்' என்ற, 'மொபைல் ஆப்' வசதி, சென்னையில், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல்போனில், 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, 'யுடிஎஸ் - மொபைல் ஆப்'பை, பதிவிறக்கம் செய்யலாம்.அதிலுள்ள, 'ஆர் வாலட்'டில் இணையதள வங்கி தொடர்பை பயன்படுத்தி, டிக்கெட் பதிவு செய்யலாம்.இதன்படி, சென்னையில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில், முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கான, டிக்கெட் பெறும் வசதி உள்ளது.சென்னையில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த, இந்த, 'மொபைல் ஆப்' வசதி, இன்று முதல், தெற்கு ரயில்வே முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இவ்வசதியில் டிக்கெட் பதிவு செய்பவர், ரயில் நிலையத்தில் இருந்து, 25 மீட்டரை தாண்டியும், 5 கி.மீ., எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும். மொபைல் போனில் பதிவாகும், 'டிக்கெட்'டை காண்பித்து, ரயிலில் பயணம் செய்யலாம். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, இந்த பதிவை காட்டினால் போதும்.

தாம்பூலத்தட்டுடன் அழைப்பிதழ் : ஆண்டு விழாவில் அசத்தும் அரசுப்பள்ளி





சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தாம்பூலத்தட்டுகளை வழங்கி ஆண்டு விழாவுக்கு வருமாறு அரசுப்பள்ளி அழைப்பு விடுத்துள்ளது.
எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை ஏப்.17 ம் தேதி கல்வி கலைத் திருவிழாவாக நடத்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு, அழைப்பிதழுடனும் தாம்பூலத்தட்டையும் மாணவர்களிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.
தலைமையாசிரியர் ஆரோக்கியசெல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். இவ்வொன்றியத்திலேயே 250 கல்விப்புரவலர்களை கொண்ட முதன்மைப்பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. எனவே அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் செய்துள்ளோம். இது பள்ளியின் வளர்ச்சிக்கு மேலும் உதவும், என்றார்.

ஆசிரியர்கள் போராட்டம்: பிளஸ் 2 முடிவு அறிவிப்பில் சிக்கல்

மதுரை:தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், 'ஆசிரியர்கள், 50 சதவீதம் விடைத்தாள் திருத்தும் போராட்டத்தால்' தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதமாகும் என, சந்தேகம் எழுந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, 74 மையங்களில், ஏப்.,11 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாள் ஒன்றுக்கு மொழிப் பாடங்களுக்கு, 24; அறிவியல் பாடங்களுக்கு, 20 என, ஒரு ஆசிரியருக்கு விடைத்தாள் வழங்கப்படும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், 8,000 பேர் உள்ளனர். இச்சங்கம் சார்பில், ஏப்., 11 முதல் நுாதன போராட்டம் நடக்கிறது. இதன்படி ஆசிரியர்கள்,முகாமில் வழங்கப்படும் மொத்த விடைத்தாளில், 50 சதவீதம் மட்டும்திருத்தி, மீதமுள்ளதை நிலுவை வைத்து, மறுநாள் திருத்துகின்றனர். க்ஷ
இதனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருத்தும் பணி முடியாது. இதனால், கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது போல், மே 16ல் முடிவு வெளியிடுமா என, சர்ச்சை எழுந்து உள்ளது. இது குறித்து, சங்கத்தின்மாநில நிர்வாகிகள் கூறுகையில், 'கல்வித் துறை செயலர், பிரதீப் யாதவ் எங்களை அழைத்து பேச வேண்டும். மிரட்டும் செயலில் ஈடுபட்டால் பணியமாட்டோம். போராட்டம் இன்னும் தீவிரமாகும்' என்றனர்.

அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு............

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வித்துறையில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா ?

Image may contain: text

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள்அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!


பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது என்றும் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்

DA 7% EXCEL CALCULATION SHEET WITH SURRENDER ....