>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 20 மார்ச், 2018

ரூபாய் 10ல் மாணவர்களுக்கு ஏ.டி .எம்.அட்டையுடன் SBI வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி...


பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை வழங்குதல் விழா


முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவக்கி எ .டி .எம்.அட்டையையும் ,வங்கி கணக்கு புத்தகமும் பெற்று கொடுத்து அசத்திய பள்ளி



ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதர,சகோதரிகளுக்கு வங்கி கணக்கு துவக்கி அசத்தல்


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை வழங்குதல் விழா நடைபெற்றது.

         
                           

                         விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் எ .டி .எம்.அட்டைகளை வழங்கி வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.மாணவர்கள் வெங்கட்ராமன்,ஐயப்பன்,ரஞ்சித்,காயத்ரி,சின்னம்மாள் ,சக்தி ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


                              முதல் வகுப்பு,   இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உட்பட பள்ளியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பெயரில்,அவர்கள் போட்டோ ஒட்டி குறைந்த பட்ச இருப்பு வெறும் 10 ரூபாயில் பாரத ஸ்டேட்   வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது .அவர்கள் அனைவருக்கும் எ .டி எம்.அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் போட்டோ ஒட்டி இளம் வயதில் வங்கி கணக்கு புத்தகத்தை பார்க்கும்போது அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.இதனால் சேமிப்பு பழக்கம் பெருகுவதுடன் அவர்களுக்கு வங்கி தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும்.பொதுவாக பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு ரூபாய்  2,000 ஆகும்.ஆனால்  பள்ளி மாணவர்களுக்கான ரூபாய் 10ல் இருப்பு உள்ள சிறப்பு திட்டத்தில் இதனை பள்ளியின் வழியாக முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.



பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை யை தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

மேலும் விரிவாக ;

                            தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை யை தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் வழங்கினார்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது ;

                                 எங்கள் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பாக தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் பத்து ரூபாயில் வங்கி கணக்கு துவக்கலாம் என்று சொன்னார்கள்.அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து ஆசிரியர்களின் உதவியுடன் வங்கிக்கு சென்று மாணவர்களுக்கு பள்ளியின் வழியாகவே கணக்கு துவக்க ஏற்பாடுகள் செய்தோம்.அதற்கு வங்கி மேலாளரும் எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்.அதன் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி உள்ளோம்.

                     
பொதுவாக முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நமது பெயரில் வங்கி கணக்கு நமது புகைப்படத்துடன் உள்ளதை பார்த்து மாணவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.கண்டிப்பாக இதன் வழியாக சேமிப்பு முயற்சி அதிகமாவதுடன் ,வங்கி தொடர்பாகவும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

 எட்டாம் வகுப்பு மாணவி சக்தி ; எனக்கு கணக்கு துவக்கியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி.எனது அக்காவிடம் நான் இதை சொன்னபோது , எனக்கெல்லாம் இதுவரை கணக்கு இல்லை.உனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது மிகப்பெரிய விஷயம்.அதுவும் பள்ளியின் வழியாகவே கணக்கு துவக்கி உள்ளது பாராட்டுக்கு உரியது என்று சொன்னார்கள்.

 முதல் வகுப்பு மாணவர் யோகேஸ்வரன்: எனக்கு எனது போட்டவுடன் வங்கி புக்கை பார்த்ததும் அவ்வளவு சந்தோசம்.நல்ல முறையில் சேமிப்பேன் என்று சொன்னார்.

 மூன்றாம் வகுப்பு திவ்யஸ்ரீ : வங்கி கணக்கு புத்தகத்தின் அட்டையில் டாக்டர்,என்ஜினீயர் ,வக்கீல் ,பெரிய நிறுவனத்தின் மேலாளர் போன்ற படங்கள் உள்ளன.அவை எனக்கு மிகவும் பிடித்து உள்ளன.எனது பெயரில் ஏ.டி .எம்.அட்டை உள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.என்று சொன்னார்.

 நான்காம் வகுப்பு வெங்கட்ராமன் : எனது பெயரில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது என்று சொன்னேன்.எனது அம்மா அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்.எனக்கெல்லாம் 30 வயதில் தான் வங்கி கணக்கு ஆர்மபிக்கப்பட்டது.உனக்கு நான்காவது படிக்கும்போதே வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது மிகுந்த சந்தோஷம் என்று சொன்னார்கள்.

 மூன்று குழந்தைகளுக்கு வங்கி கணக்கு புத்தகம் பெற்ற மாணவர்களின் தாயார்    அங்காள ஈஸ்வரி   :  எனக்கு மிகுந்த சந்தோசமாக உள்ளது.எனது மூன்று குழந்தைகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.மூன்று பேருக்கும் பள்ளியின் மூலம் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.பொதுவாக கணக்கு துவக்க வங்கிக்கு பலமுறை செல்ல வேண்டும்.ஆனால் இங்கு நாங்கள் அலையாமல் வங்கி கணக்கு குறைந்த இருப்பு தொகை  ரூபாய் 10ல் துவங்கப்பட்டுள்ளது.குறைந்த பட்சம் 2000 ரூபாய் இருந்தால் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவக்க முடியும்.ஆனால் வெறும் 10 ரூபாயில் வங்கி கணக்கு பள்ளியின் மூலமாக துவக்கப்பட்டுளத்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.

திங்கள், 19 மார்ச், 2018

பள்ளி பாதுகாப்பிற்கான ஆய்வு-உயர்நீதிமன்றம் உத்தரவு அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

பள்ளி கட்டிடங்கள் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளனவா பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப் பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் நடந்த தீ விபத்திற்கு பிறகு அனைத்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளையும், தேசியக் கட்டட விதிகளையும் செயல்படுத்த உத்தரவிடக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துப் பள்ளிகளும் தேசியக் கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளனவா குழந்தைகள் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்கப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர். இந்தக் குழுவினர் அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது

வாட்ஸ் அப்-ல் தற்போது வலம் வரும் செய்தியான ஜீன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்பது தவறான தகவல்....


வாட்ஸ் அப்-ல் தற்போது வலம் வரும் செய்தியான ஜீன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என்பது கடந்த ஆண்டு அமைச்சர்  அறிவித்த தகவல் ஆகும். அந்த செய்தி கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் காரணமாக அமைச்சர் அறிவித்த செய்தியாகும். தற்போது அதே செய்தி சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.  

தலைமை ஆசிரியர் இல்லாமல் தடுமாறும் 1,000 பள்ளிகள்

10th Exam Tips Maths - Video



https://youtu.be/ZksTDy4QcKo

மாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூடாது

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்




பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்
ப.க.பா. இயக்கம் , அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க கடந்து 3 மாதமாக செயல்பட்டு வருகிறது. அதில் மூத்த கல்வியாளர்கள் சுசீரா அவர்கள் , வசந்திதேவி அவர்கள் , JK அவர்கள் , ச.மாடசாமி அவர்கள் , தாய் மொழி வழிப் பள்ளியை வலியுறுத்தும் கல்யாணி ஐயா அவர்கள் , தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் , கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு தோழர் மூர்த்தி அவர்ககள் , பழங்குடி மக்களுக்கு களப் பணியாற்றும் நடராஜ் அவர்கள் , குழந்தை நேயப் பள்ளிகள் ஷ்யாம் தோழர் அவர்கள் , ஓய்வு பெற்ற யூனிசெப் அலுவலர் அருணா மா அவர்கள் , அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி அவர்கள் ,மற்றும் பலர் செயல்படும் உறுப்பினர்களாக இருக்கின்றனர் . தொடர்ந்து அரசுப் பள்ளிகள் சார்ந்த ஒரு கருத்துக் கேட்டு நடக்க இருக்கிறது. ஆகவே இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்தால் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். விபரங்களைத் தமிழில் தரவும்

பெயர் :
பள்ளி முகவரி :
மாவட்டம் :
தொடர்பு எண் :
மின்னஞ்சல் முகவரி :
முகநூல் அடையாளம் :

தொடர்புக்கு
உமா
9976986098
9080566115

ஒரு ஆசிரியர் தமது பணிக்காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்)மேற்கொள்ள முடியும்? RTI தகவல்

மலேசிய தமிழ் ஆசிரியர்கள், தமிழக பள்ளிகளை பார்வையிட்டனர்

Phontic English Unit 4


கேளம்பாக்கம் to மகாபலிபுரம் பாதையில் உள்ளது சூலேரிக்காட்டுக் குப்பம் என்ற ஊர்.படப்பிடிப்பு நடக்கும் பள்ளிக்கும் கடலுக்கும் 100 அடி இடைவெளி தான்.ஒரு டீ கடை கூட கிடையாது. சின்ன பெட்டிக் கடை தான் எங்களுக்கு சூப்பர் மார்க்கெட். 9 மணிக்கெல்லாம் காலை ஆசிரியர்களும்,மாணவர்களும் வந்து விட வேண்டும்.எல்லா ஆசிரியர்களுக்கும் வீட்டில் பள்ளி வயதுக் குழந்தைகள் தான்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத,இரக்கமில்லாத இயக்குநர் தனது தொழில்நுட்ப கலைஞர்களோடு 9.30 மணிக்கு வேலையைத் தொடங்கி விடுவார்.

அறையைக் கூட்டி சுத்தம் செய்து,10000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் shooting ஆரம்பிக்கும்.ஒரு சன்னல் கூட இல்லாத பூட்டப்பட்ட அறை.A.C மூன்று மாதம் கழித்து தான் கிடைத்தது.இருந்தாலும் செம வெட்கை.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே ஓடி வந்து முகம் கழுவியே ஆக வேண்டும்.
கடலோரமானதால்
அவ்வளவு வேர்வை.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட தவறானால் compromiseஏ கிடையாது.Re take தான்.ஒருவர் ஒரு dialogue கூட mistake செய்யக் கூடாது. ஒரு தப்பு செய்தாலும் எல்லாரும் பழைய positionலில் உட்கார வேண்டும். விக்கல்,இருமல் கூடாது.கொட்டாவி விடக் கூடாது. முன்னதான takeல் எப்படி உட்கார்ந்திருந்தார்களோ break விட்டு வந்தாலும் continuity miss ஆகாமல் மீண்டும் அப்படியே அமர வேண்டும்.ஒரே unitன் activity 2 மாதம் கழித்து எடுக்கப்பட்டால் முன்னர் என்ன costumes இருந்ததோ அதே தான் அணிந்து வர வேண்டும். தோடு,வளையல் கூட மாறக் கூடாது.

நீங்கள் DVD யில் கவனித்துப் பார்த்தால் தெரியும்.ஒரு unit ல் இருக்கும் seating arrangements அடுத்த unitல் இருக்காது.Background கூட பாடத்திற்கு ஏற்றவாறு தொலைவில் இருக்கும்.ஒவ்வொரு shot ற்கும் light, camera வேற ஆன்ங்கிள் மாற்ற வேண்டும்.set light ஐ on & off செய்ய வேண்டும்.shade விழுகக் கூடாது.கரும்பலகையில் எழுதும்போது உடலின் பின் புறம் தெரியக்கூடாது.side மட்டுமே தெரிய வேண்டும்.குழந்தைகளுக்கு ஒரு shot கூட உறுத்தாத வகையில் எடுக்க அதிக சிரத்தை எடுக்கப்பட்டது.

என்னடா...build up தூக்கலா இருக்குன்னு நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வரியும்,ஒவ்வொரு வலியும் உண்மை.ஆறு மாதங்கள் இந்த சித்ரவதை தான்.எந்தவித ஊக்க ஊதியமும் கிடையாது. சொந்தக் காசில் தான் பயணம்,சாப்பாடு,பவுடர் எல்லாமே.இந்தத் தியாகம் யாருக்கு வரும்.ஒரே ஒரு வரி எடுக்க அரை நாள் ஆன tension நிறைய உண்டு.

எல்லோரும் இடைநிலை ஆசிரியர்கள் தான்.ஒவ்வொரு உச்சரிப்பையும் துல்லியமாகச் சொல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்.நடிகர்கள் இல்லை தான்.ஆனால் action சொன்னவுடன் சிரிக்க வேண்டும்,நடிக்க வேண்டும், மற்றவர்கள் சிரித்து விடாமல்.

உங்களைப் போன்ற,உங்களில் ஒருவர் போல இருக்கும் இந்த ஆசிரியர்களின் வியர்வையும்,தியாகமும் தான் இந்த DVD.

பிரதிபலன் எதிர்பாராமல் பிறவிப்பயன் எனக் கருதிய இந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கும்,வணக்கத்துக்குமுரியவர்கள்.

இதற்கு கைம்மாறாக ஆசிரிய சமுதாயம் நாம் என்ன செய்யப் போகிறோம்.ஆங்கில அட்சயமான இந்த phonetic DVD எல்லோருக்கும் போய்ச் சேர வழி செய்ய வேண்டும்.face book,what's app எல்லாவற்றிலும் Share செய்யுங்கள். இதைப் பற்றியே ஒரு 43 நாட்கள் முதலில் எல்லோரும் அறியச் செய்வோம்.தனியார் பள்ளிகளை விட நிச்சயம் அரசுப்பள்ளிகளின் தரம் உயரும்.Dear teachers Pls share and subscribe.

நல்லது நடக்கட்டும்.நன்மைகள் தொடரட்டும்.நாலாவது அத்தியாயம் தொடங்கட்டும்.






அன்புடன்
அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்

2,195 பேருக்கு 63 அரசுப்பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி

தமிழக மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!!!

தமிழக மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
 செங்கோட்டையன் பெருமிதம்

 ”தமிழக மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்; எதையும் 
சந்திக்கக்கூடிய திறமைசாலிகள்,” என, பள்ளிக்கல்வி துறை
 அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம்,
 கரட்டடிபாளையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:கோபி
 தொகுதியில், ஜூன், இரண்டாவது வாரத்தில், தனியாரும்,
 அரசும் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. 

இளைஞர்களின் தகுதிக்கேற்ப, வேலை கிடைக்க, அரசு
 முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
மத்திய அரசு தேர்வை சந்திக்கும் வகையில், தமிழக பாடத்
 திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழக மாணவர்களை
 பொறுத்தவரை, அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும் 
சந்திக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்கள். கல்வியாளர்கள்,
 பெற்றோர்கள், மாணவர்களை கண்டு அச்சப்படத்
 தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுடன் போட்டி போட்டு விளையாடிய பொதுமக்கள்! - அரசுப் பள்ளி ஆண்டு விழா ருசிகரம்


அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் நடந்த ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியருடன் அவர்களது பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டதால், ஊர்த்திருவிழா போல களைக்கட்டியது ஆண்டுவிழா.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று, ஆண்டுவிழாவும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.


இதில், குழந்தைகளின் ஆர்வத்தையும் போட்டி மனப்பான்மையையும் தூண்டும் வகையில், பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில்,மாணவர்களுடன் சரிக்குச் சரி நின்று பெற்றோர்கள் போட்டி போட்டு விளையாடினார்கள். அவர்களுடன் ஊர் பொதுமக்களும், 'எங்க ஊர்...எங்க பள்ளி' என்று உரிமையுடன் போட்டிகளில்  கலந்துகொண்டு அசத்தினார்கள். ஏதோ ஊர்த் திருவிழா போல் நடைபெற்ற இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில், குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி, பெரியவர்களும் பெற்றோர்களும் தங்கள் வயதை மறந்தார்கள். அங்கே ஒரு 'ஜாலி ஹோலி'யே கொண்டாடப்பட்டது.


இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்சிம்சோன் பாஸ்டீன் சொல்லும்போது, "இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா, குளவாய்ப்பட்டி இளைஞர்கள், பொதுமக்களின் தன்னார்வத்தோடு கொண்டாடப்படுகிறது. ஆண்டு விழா என்று நான் சொன்னவுடன் ஊர்ப் பொதுமக்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் என்னிடம், ' குழந்தைகள் அனைவரும் மேடை ஏற வேண்டும். போட்டிகளை நீங்கள் நடத்துங்கள். அதற்குத் தேவையான உதவிகளையும் செலவுகளையும் நாங்கள் செய்துதருகிறோம் என்று கூறினார்கள். அந்த வார்த்தைகள் என் மனதிற்கு மிகுந்த தெம்பைக் கொடுத்தது. அத்துடன்,  இப்பள்ளியில் வேலைபார்த்து  ஓய்வுபெற்றுச் சென்றுள்ள முன்னாள் தலைமை ஆசிரியர்கள் வீரன்,கண்ணன் ஆகியோரையும் மேடையில் பாராட்ட வேண்டும் என்று ஊர்மக்கள் விரும்பினார்கள். அந்தப் பாராட்டு விழாவையும் ஆண்டு விழாவோடு சேர்த்துக்கொண்டோம். நம் பள்ளிக்கு ஊர்ப் பொதுமக்கள் இவ்வளவு ஒத்துழைப்பு தருகிறார்களே, அவர்களை நாம் ஏதாவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பானை உடைத்தல்,கயிறு இழுத்தல்,கோலப் போட்டி எனப் பல போட்டிகளை நடத்தினோம்.போட்டியில் ஊர்ப் பொதுமக்கள்  முழு ஈடுபாடோடு கலந்துகொண்டார்கள். இதுபோன்ற விழாக்கள்மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என்பதே எனது இலக்கு" என்றார்.

ஆண்டுவிழாகுறித்து அவ்வூரைச் சேர்ந்த சின்னாத்தாள் என்பவர் ரொம்பவே சிலாகித்துப் பேசினார்."பள்ளியில் ஆண்டுவிழா என்றதும்  குழந்தைகளைவிட, நாங்கள்தான் ரொம்பவும் ஆர்வமாக இருந்தோம். காரணம், அன்றைக்கு  எங்கள் குழந்தைகளின் தனித்திறமையை நாங்கள் நேரில் பார்க்கவும், பொதுமக்கள் அவர்களைப் பாராட்டுவதைக் கேட்கவும் முடியும். இங்கே வந்ததும் எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் எங்களுக்கும் பல்வேறு போட்டிகளை நடத்தி, ஆசிரியர்கள் அசத்திட்டாங்க. எங்கள் பிள்ளைகளுடன் போட்டிபோட்டதும் அவர்களிடம் விட்டுக்கொடுத்துத் தோற்றதும், அவ்வளவு பெரிய சந்தோஷத்தை எங்களுக்குக் கொடுத்தது" என்றார். 10 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பள்ளியில் சிறப்பாக நடந்தது ஆண்டுவிழா.

TRB தேர்வு மூலம் PG ஆசிரியர்களுக்கான 2000 காலியிடங்களை நிரப்ப கோரிக்கை


Demand to fill 2000 vacancies of PG teachers through TRB exam

ஞாயிறு, 18 மார்ச், 2018

யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?


"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.


சாட்சி கையெழுத்து

சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்

கேரன்டி கையெழுத்து

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.

கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.

ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?

நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.

அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?


"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.


சாட்சி கையெழுத்து

சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்

கேரன்டி கையெழுத்து

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.

கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.

ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?

நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.

அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?


"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.


சாட்சி கையெழுத்து

சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்

கேரன்டி கையெழுத்து

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.

கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.

ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?

நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.

அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை


நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார்.

எல்.ஐ.சி.,யின் புதிய திட்டம் அறிமுகம்....

சென்னை, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.'பீமாஸ்ரீ' திட்டம், பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்கேற்கும், குறிப்பிட்ட காலம் மட்டுமே, பிரீமியம் செலுத்தும் பாலிசியாகும்.
இதில், 8 வயது முதல் 55 வயது வரை, உள்ளவர்கள் சேரலாம். பாலிசி காலம் 14, 16 ,18 மற்றும் 20 ஆண்டுகள்; பிரீமியம் செலுத்தும் காலம், 10,12,14, மற்றும் 16 ஆண்டுகள் ஆகும்.
பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம். திட்டத்திற்கான, குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம்; அதிகபட்ச வரம்பு இல்லை.முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், 6வது ஆண்டில் இருந்து, பிரீமியம் செலுத்தும் காலம் வரை, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், விசுவாச தொகையும் அளிக்கப்படுகிறது.மேலும், திட்டத்தில் வாழ்வு கால பயன், முதிர்வு தொகை பயன், இறப்பு தொகை பயன் என, மூன்று விதமான பயன்கள் உள்ளன. வாழ்வு கால பயன்களை, குறித்த காலத்தில் பெற, பணம் தேவைப்படும் நேரத்தில் விண்ணப்பித்தால், 
பணமீட்பு தொகையுடன், வட்டியும் வழங்கப்படும்.
முதிர்வு தொகையை, மொத்தமாக பெற, மாற்றாக ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் அல்லது 15 ஆண்டுகளில், தவணை முறையாக மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தவணையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
அதே போல், இறப்பு உரிம தொகையையும், தவணை முறையிலோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை....


உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ -மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடல் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது:
மனதை ஒருமுகப்படுத்துவதென்பது கற்றலினால் வருவதல்ல. இறந்தகாலம் என்பது ஒரு சுமை; எதிர்காலம் என்பது கனவு; நிகழ்காலத்தில் தற்சிந்தனையுடன் வாழ்வதே மனதே ஒருங்கிணைக்க வழிவகுக்கும். 
உங்களிடமே போட்டி போடுங்கள்: மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களுடன் போட்டி போடுவதைவிட உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்யும் போதுதான், தன்னம்பிக்கை வளர்ந்து சிறந்த சாதனையாளராக உருவாக முடியும்.
மாணவ -மாணவிகள் நேரமே இல்லை என்று ஒருபோதும் கூறக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒருவர் தமக்கு நேரமே இல்லை என்று கூறுவாராயின், அவர் அவருடைய நேரத்தையும் வேலைகளையும் சரிவர திட்டமிடாதவராக கருதப்படுவார் என்று ஆளுநர் புரோஹித் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 50 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன. 
இதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வின்வெளியில் ஒரு வருடம் தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம்..நாசா கண்டுபிடிப்பு

வாஷிங்டன்:

வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.


இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த அஸ்ட்ரோநாட் ஸ்காட் கெல்லி என்பவர் சர்வதேச வின்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்தார். கெல்லி இரட்டையர்களில் ஒருவர்.

2016ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பூமிக்கு திரும்பி வந்தார். சர்வதேச வின்வெளி மையத்தில் ஒரு ஆண்டு தங்கியிருந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் கெல்லியின் ரத்த மாதிரி சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது மரபணுவில் 7 சதவீதம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. கெல்லியின் மற்றொரு சகோதரரின் டிஎன்ஏ.வுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாற்றம் உறுதியாகியுள்ளது.

இந்த தகவல் நாசாவின் இரட்டையர் ஆராய்ச்சி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து எனது மரபணுவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அறிந்து கொண்டதாக கெல்லி தெரிவித்துள்ளார்.

பள்ளி விழாவில் அலங்கார மின்விளக்குகளால் மாணவர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு....

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால், விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

ஏர்வாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் எஸ்.வி. இந்து தொடக்கப் பள்ளியில் 100}க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் அதிக திறன் கொண்ட அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விழாவில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இரவில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் நீர் வடியத் தொடங்கி, சிவந்தும் காணப்பட்டது. 
பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியை (பொறுப்பு) சித்ரா, ஆசிரியர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை காலை 83 குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர் உள்பட 117 பேர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இதுதவிர பாதிக்கப்பட்ட 13 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக கண் பார்வைத் திறன், கரு விழிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் கண்களில் மருந்திட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வலி நிவாரணம், எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
கோட்டாட்சியர் இல. மைதிலி, சார் ஆட்சியர் ஆகாஷ், அரசு மருத்துவமனை டீன் எஸ்.எம். கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், நான்குனேரி வட்டாட்சியர் வர்கிஷ் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆட்சியர் விசாரணை: மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள், பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ஏர்வாடி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியதால் குழந்தைகள், பெற்றோர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
அவர்களுக்கு கண் பார்வையில் எந்தவித பாதிப்பும் இல்லை. 2 தினங்களில் கண்ணில் ஏற்பட்ட எரிச்சல், பாதிப்பு குணமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஏர்வாடியில் அரசு மருத்துவக் குழுவினர் 2 தினங்கள் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களின்போது எந்த மாதிரியான விளக்குகள் பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து தகுந்த சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார் அவர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர், ஒலி ஒளி அமைத்தவர்கள் மீது ஏர்வாடி போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளிக்காண வீடியோ விளம்பரம் வெளியீடு .....


தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு

திருச்சி: பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.


ஏப்.,12-ல் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்து தர வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனி, 17 மார்ச், 2018

19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு

காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை  என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடியில் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு

ஏர்வாடியில் மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 60 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாளில் இது சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கண் எரிச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை சந்தித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Tamil Nadu school education invites all the Teachers to watch the updates of school education and to showcase their students talents to the world.

What should you do?
just click the below link and like the official page
1.CLICK the link
2.LIKE the page
share this information with others
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கத்தை நீங்கள் பார்க்கவும் உங்கள் மாணவர்களின் திறமையை உலகறிய செய்ய அருமையான வாய்ப்பு
கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து லைக் பட்டனை அழுத்தவும்.
பிறருடன் அவசியம் பகிரவும்

புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி!!!

பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக 
நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.new
 பத்தாம் வகுப்பு தேர்வையொட்டி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் நியமிக்கப்படுவர். இரண்டு ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாததால் முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்தில் சிக்கல் நீடித்தது.
இதனால் அப்பணிக்கு மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமிக்கப்பட்டனர். ஆனால் தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது போல் எழுத்தர், அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.,) ஒதுக்கீடு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.இதனால் கண்காணிப்பு பணியுடன் பேப்பர் பண்டல் பிரிப்பது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடிப்பது உட்பட ஓ.ஏ.,க்கள் பணியையும் அவர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இதனால் கண்காணிப்பு பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "தலைமையாசிரியர் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பட்டதாரி ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. அடுத்தாண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பற்றாக்குறை இருந்தாலும் கூடுதலாக தின ஊதியம் கொடுத்து, வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்தில் இரண்டு தலைமையாசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும். அந்த இடத்தில், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்," என்றார்.

வெள்ளி, 16 மார்ச், 2018

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்.....

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
அதன்படி கடந்த 7ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்தது. அன்றைய தினம் மொழி பாட தேர்வுகள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 27,994 மையங்களில் 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொது தேர்வை எழுதினர். அதில், 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர்.
இதேபோல், இன்று ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 1 பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நுழைவு தேர்வுக்கு தயார் ஆவதிலேயே முணைப்பு காட்டி வந்தனர். இந்நிலையில், பிளஸ் 1 படிப்பை பொது தேர்வாக நடத்த முடிவு செய்தது அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வைத்துள்ளது. 

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு/.....

பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு, ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.

அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 2017-18ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,மார்ச் 16  தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களில் 4,81,371 பேர் மாணவிகள், 4,83,120 பேர் மாணவர்கள், மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர். அதே போல், தனித்தேர்வர்களாக 11,098 பெண்கள், 25,546 ஆண்கள், 5 திருநங்கைகள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26,043 மாணவிகள் மற்றும் 24,713 மாணவர்கள் என 50,756 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மாணவிகள் 8,694 பேர், மாணவர்கள் 8,820 பேர் என மொத்தம் 17,514 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் மாணவர்கள் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 186 பேர் தேர்வு எழுத 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 3,659 மாற்றுத்திறனாளிகளில் 1,898 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படுகிறது. 1,067 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு  வழங்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்புத் தேர்வு: கைதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகிற 16/03/2018 அன்று துவங்கி 20/04/2018 வரை நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி என இந்தத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதில் தேர்வு எழுதும் 186 சிறை கைதிகள் மற்றும் 3,659 மாற்றுத் திறனாளிகளுக்கு எனப் பிரத்தியேக ஏற்பாடுகளைத் தேர்வு துறை செய்துள்ளது.

சிறை கைதிகள்:

இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 சிறைவாசிகள் எழுதுகிறார்கள். இவர்களுக்கான தேர்வு மையங்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசு விலக்களித்து உள்ளதால், தமிழ் வழியில் பயின்ற இவர்களிடமும் தேர்வு கட்டணம் வசூலிக்கப் படவில்லை. இவ்வாண்டு தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்த்து 5,55,621 ஆகும்.

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:

டிஸ்லெக்சியாவால்  பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  3,659 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 1898 பேருக்குச் சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதைத் தவிர 1067 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு மொழிப்பாடத்தில் இருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.