பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 27.02.20

திருக்குறள்
அதிகாரம்:கல்வி
திருக்குறள்:391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
நிற்க அதற்குத் தக.
விளக்கம்:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நடக்கவேண்டும்.
பழமொழி
What the heart thinketh the tongue speaketh
உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில்
இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி
சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்….
பொது அறிவு
1.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
ஏழு
2.மனித கண்களின் எடை எவ்வளவு?
1.5 அவுன்சு.
English words & meanings
Camara – chamber, a separate room. தனி அறை.
Camera – an instrument used to take photos. புகைப்படக் கருவி
ஆரோக்ய வாழ்வு
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரகக் கற்கள் உருவாவது ,இதயநோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலை
தடுக்கும்.
தடுக்கும்.
Some important abbreviations for students
rpm – revolutions per minute
qt – quart
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
ஜூடோ பயிற்சியும் ஒற்றைக் கை சிறுவனும்
குறள் :
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
விளக்கம் :
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
கதை :
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான்.
சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் அவர்கள் நினைத்ததுதான் தவறு. வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். சிறுவனுக்கும், அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.
எப்படி குருவே என்னால் ஒரு கையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான்.
குரு சொன்னார், இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும்
என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.
என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.
நீதி :
நம்மிடம் உள்ள குறையை நிறையாக்குவது மிகப் பெரிய திறமைசாலிக்கான அடையாளம் ஆகும்.
நம்மிடம் உள்ள குறையை நிறையாக்குவது மிகப் பெரிய திறமைசாலிக்கான அடையாளம் ஆகும்.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவியல் & கணினி
அறிவியல் அதிசயங்கள்:
1. எறும்பு குழுவாக மிக கட்டுப்பாடுடன் வாழும் ஒரு உயிரி.
2. இது புவியின் தென் முனையில் மட்டும் காணப்படுவதில்லை.
3. இவைகள் தங்கள் உடல் எடையை காட்டிலும் 50 மடங்கு எடையை தூக்க வல்லது.
இன்றைய செய்திகள்
27.02.20
★அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலந்து மாசுபடுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு வசூலிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.
★இந்தி மொழி தெரியாத மாணவர், ஆள்மாறாட்டம் செய்து, இந்தியில் நீட் தேர்வு
எழுதி தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவரையும், அவருக்கு உதவிய அவரது தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
எழுதி தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவரையும், அவருக்கு உதவிய அவரது தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
★டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கயளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
★தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
★தில்லியில் கடந்த 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கோ-ரோமன் பிரிவில் இந்திய வீரா் சுனில் குமாா் தங்கம் வென்றுள்ளார்.
★சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று
வெளியிட்ட டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்து இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
வெளியிட்ட டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்து இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
Today’s Headlines
Subsequently, the student and his father, who assisted him, have been arrested by the CBCID police.
Prepared by
Covai women ICT_போதிமரம்
.................................