>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 10 ஏப்ரல், 2019

 மாதிரி வாக்குப்பதிவு-Mock poll

தேர்தல் நடைமுறைகளில் மிக மிக முக்கியமான நிகழ்வு மாதிரி வாக்குப்பதிவு.

இதனை முறையாக  நடத்தாவிடில் ஒட்டு மொத்த வாக்குப்பதிவும் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்த நடைமுறைகளை கவணமாக கையாளவும்.

Mock poll என்பது வாக்குப்பதிவு எந்திரம் முறையாக வேலை செய்கிறது என வாக்குப்பதிவு அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் அறிந்து கொள்வதற்கான நடைமுறை ஆகும்.

இது வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு  முன்பு துவங்கப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களுக்கு Mock poll வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்  துவங்குவது குறித்து  தொடர்பான எழுத்துப்பூர்வமாக தெரிவித்திட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு துவங்கும் போது குறைந்தபட்சம் இரு வேட்பாளர்களுடைய வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

முகவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் அடுத்த 15 நிமிடங்கள் வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் காத்திருக்க வேண்டும்.

அவகாசம் அளிக்கப்பட்ட நேரத்திற்கு பின் ஒரு முகவர் மட்டும் வந்திருந்தாலோ அல்லது எவரும் வரவில்லை என்றாலோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மாதிரி வாக்குப் பதிவினை தொடர்ந்து நடத்தலாம்.

இந்நிகழ்வில் வாக்குச்சாவடி முகவர்களின் வருகை இன்மை குறித்து மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழில் Mock poll certificate ல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் குறிப்பிட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவின் போது ஒரு வாக்குப்பதிவு அலுவலரும் ஒரு முகவரும் வாக்களிப்பதற்கான மறைவிடத்தில் இருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு ஏதும் பதிவாகி இருக்கவில்லை என்பதையும் VVPAT உள்ளே வாக்கு பதிவு செய்யப்பட்ட சீட்டுகள் எதுவும் இல்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்த பின்னர் Ballot பட்டனை அழுத்தி  ஒவ்வொரு முகவரையும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்க    வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவில் குறைந்தது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

எந்த ஒரு வேட்பாளருக்கான தேர்தல் முகவர் இல்லையோ அந்த  வேட்பாளருக்கு பதிலாக வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவரோ அல்லது வருகை தந்திருக்கும் முகவர்களில் ஒருவரோ வாக்களிக்க வேண்டும்.

எல்லா வேட்பாளருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

நேரமிருப்பின் 50 ற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்கலாம்.

அனைத்து முகவர்களையும் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட பின் கட்டுப்பாட்டு எந்திரத்தில் Close பட்டனை அழுத்தி Result பட்டனை அழுத்தி பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விபரம் , வேட்பாளர் வாரியாக பெற்றவாக்குகளின் விபரம் , VVPAT ல் அச்சாகியுள்ள வாக்குகளின் விபரம் ஆகியவற்றை சரிபார்த்து முகவர்களிடம் உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவிற்கு இடையில் VVPAT அல்லது  வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டாலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் *Clear*  பட்டனை அழுத்தி எந்த வாக்காளர்களுக்கும்  வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்யவும்.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கையேடு Annexure 14 ல் உள்ளவாறு Mock Poll Certificate தயார் செய்து வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பம் பெற்று *வாக்குச்சாவடி தலைமை அலுவலர். நேரம் மற்றும் தேதியுடன் ஒப்பமிடவும்*

மாதிரி வாக்குப்பதிவு என்பது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதை கவணத்தில் வைத்து முறையாக இதனை நடத்துவது வாக்குச்சாவடி தலைமை அலுவலரின்  கடமையாகும்.

Mock Poll முடிச்சாச்சு..

இனி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு Seal வைப்பது தான்...

நமக்கு வாக்குப்பதிவு பொருள்களோடு வழங்கப்பட்ட  Green paper seal, SPL Tag, Address tag, Strip seal இவைகளை எடுத்துக்கோங்க...

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
.........................................................................................................................................................................................

Challenged Votes ஓர் பார்வை....


வாக்காளர் ஒருவர் வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வரும் பொழது Po I அவரது    வ. எண் மற்றும் பெயரை வாசிக்கும் பொழது முகவரால்     எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முகவரிடமிருந்து ரூ 2/- பெற்றுக் கொண்டு வாக்காளரைபற்றி விசாரனை செய்ய வேண்டும் உண்மையான வாக்காளர் இல்லை எனில் ரூ 2 ஐ முகவரிடம் திருப்பி கொடுத்து விட்டு காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எனில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

49 0
வாக்காளர் வாக்களிக்க வருகிறார் அவரது பெயரை PoI வ.எண், பெயரை வாசிக்கிறார் முகவர்களிடமிருந்து ஆட்சேபனை ஏதுமில்லை எனில் Po2 வாக்காளர் கொண்டு வரும் அடையாள அட்டை விபரத்தினை 17 A பதிவேட்டில் பதிந்து வாக்காளரிடம் கையொப்பம் (அ) ரேகை பெற்றுக் கொண்டு பின் வாக்காளரின் இடது ஆட்காட்டி விரலின் நகம் மற்றும் சதையுடன் சேர்த்து அழியா மையிடுகிறார்.
    ஆனால் வாக்காளர் வாக்களிக்க விரும்பவில்லை என கூறினால் 17 A பதிவேட்டின் குறிப்பு கலத்தில் வாக்களிக்க விரும்பவில்லை என குறிப்பிட்டு வாக்காள ரிடம் கையொப்பம் (அ) ரேகை பெறவேண்டும். அவரது கையொப்பத்தின் கீழ் ProOffi கையொப்பமிட வேண்டும்.
49 M
வாக்காளர் ஒருவர் Po1, Po2 , Po3 ஆகியோரிடம் பணியை முடித்து வாக்களிக்க செல்லும் முன் வாக்கு பதிவு ரகசியத்தை மீறுகிறார் எனில் அவரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. 17 A பதிவேடு குறிப்புக் கலத்தில் Refused to vote என எழதி Pro offi
கையொப்பமிட வேண்டும்.
49 MA
வாக்காளரின் வாக்கினை ஏற்கனவே பதிவாகி விட்ட தெனில் அவரை வாக்கு சீட்டில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர் நியமனம்

இந்தப்பகுதி வாக்குப்பதிவு நாளில் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செய்ய வேண்டிய பணிகளை  பற்றி விளக்க இருக்கிறது.

இந்த நடைமுறைகள் சட்டப்பூர்வமானவை.

இதில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் தேர்தல் பாதிக்கப்படும், மறு தேர்தல் கூட நடத்திட உத்தரவிடப்படலாம் என்பதையும் தாண்டி கடுமையான தண்டனைக்கு ஆட்படுவோம் என்பதால் மிகுந்த கவணத்தோடு இப்பணிகளினை செய்திட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வாக்குச்சாவடி முகவர்களை நாம் நியமனம் செய்திடவும் அவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திடவும் வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்களை பொறுத்தவரையில் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் முகவராக  படிவம் 10ல் ஒருவரை நியமனம் செய்து வழங்கி இருப்பார்.

அவர் அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராகவோ அல்லது அந்த தொகுதியில் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதியானவராகவோ இருப்பது அவசியம்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர் ஒருவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முன்பாக அறிவிப்பு  ஒன்றில் ஒப்பமிட வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு வாக்குச்சாவடி முகவரும் இரு  மாற்று வாக்குச்சாவடி முகவரும் நியமனம் செய்யப்படலாம்.

எனினும் ஒரு சமயத்தில் ஒரே ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியினுள் இருக்க இயலும்.

வாக்குச்சாவடியினுள் இருக்கும் முகவர் ஒருவர் உள்ளே இருந்து வாக்காளர் பட்டியலையோ அல்லது துண்டுச்சீட்டுகளையோ வெளியில் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

வாக்குச்சாவடியினுள் முகவர்கள் வாக்குச்சாவடியினுள் நுரையும் வாக்காளர் வெளியில் செல்லும் வரையிலான  நடைமுறைகளை பார்க்கும் வண்ணம் அமரவைக்கப்பட வேண்டும்.

உள்ளே அமரவைக்கப்படும் முகவர்கள் முதலில்

அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சியின் வேட்பாளர்கள்

மாநில கட்சிகளின் முகவர்கள்

பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டு பொது சின்னத்தில் இந்த மாநிலத்தில் போட்டியிடும் கட்சிகளின் முகவர்கள்..

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி  வேட்பாளரின் முகவர்கள்...

சுயேட்சை வேட்பாளர்கள் என அமரவைக்கப்பட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் முகவர்களை நியமிக்க கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை ஆதலால் எந்த நேரத்திலும் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கலாம்.

வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மிக முக்கியமானது.

தேர்தலின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களின் பங்களிப்பு தேவைப்படும்..

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
..............................................................................................................................................................................................

வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரையிடல்

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் VVPAT ஆகியவற்றை சீல் வைக்கும் பணி.

பொறுமையுடனும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலம் இது.

Mock poll முடிந்த பின்னர் VVPAT ல் அச்சாகி விழுந்திருக்கும் சீட்டுகளை எடுத்து அதன் பின்புறம் rubber stamp உதவியுடன் *MOCK POLL SLIP* என முத்திரையிட்டு அதற்கென வழங்கப்பட்ட கருப்பு நிற கவரில் வைத்து அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.

அந்த கவரின் மேல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பமிட்டு *VVPAT  Paper slips of MOCK POLL* என எழுதி வைக்க வேண்டும்.

VVPAT ல் இருந்த paper slipகள் எடுக்கப்பட்ட பின்னர் காலியாக இருக்கும் VVPAT முகவர்களுக்கு காண்பிக்கப்பட்டு அந்த பகுதி அரக்கு முத்திரை இடப்பட வேண்டும்.

அடுத்தபடியாக முத்திரையிட வேண்டியது Control unit.
Control unit என்பது Green paper seal, special tag, மற்றும் ,Strip seal ஆகியவற்றால் சீலிடப்பட வேண்டும்.

green paper seal, SPL Tag Strip seal ஆகியவை வரிசை எண்கள் வழங்கப்பட்டவை என்பதாலும் அவை குறித்த பதிவுகள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அவர்களின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்பதாலும் மிக கவணமாக கையாளப்பட வேண்டும்.

Control unit ஐ சீலிடுவது எப்படி?

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
................................................................................................................................................................................................

GREEN PAPER SEAL

வாக்குப்பதிவு அலுவலராக பணிக்கு வந்து இரண்டாம் நாளில் வாக்குப்பதிவிற்கு முந்தைய பணிகளில் இருக்கிறோம்.

வாக்குப்பதிவிற்கு முந்தைய பணிகள் *மிக கவனமாக* மேற்கொள்ள வேண்டியவை பதட்டத்தில் ஒரு தவறு இழைத்துவிட்டால் தொடர்ந்து எல்லா வேலைகளும் பதட்டமானவை ஆகிவிடும்.  எனவே நிதானமாக அதே சமயத்தில் உறுதியுடன் செய்ய வேண்டியது  வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி..

வாக்குப் பதிவு எந்திரத்தில் Control  Unit ,ல் Green paper Sealஐ   எப்படி பயன்படுத்துவது  என்பதை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

Control Unit ஐ பொறுத்தமட்டில் முதலில் நாம் முத்திரையிடுவது Result section.

Result ,Clear, Print என்ற மூன்று பகுதிகள் உள்ள Result Section ன் மூடி போன்ற பகுதியில் உள்ள Frame ல்Green paper seal னை நுழைத்து Green Paper seal ன் இரு முனைகளும் சமமாக இருக்கும் வண்ணம் வைத்துக் கொள்ளவும்.

பிறகு Result Section பகுதியினை மூடி விடவும்.

Green paper seal ஐ பயன்படுத்தும் முன்னர்  அதன் Serial No ஐ குறித்துக் கொண்டு Serial no அருகில் வெள்ளை பக்கத்தில்  வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்பமிடவும் முகவர்களிடமும் ஒப்பம் பெறவும் வேண்டும்.

Result section சீல் வைக்கும் போது பேப்பர் சீலின் எண் மேல் பக்கம் தெரியுமாறு வைக்கவேண்டும்.

பயன்படுத்துகையில் சேதமான green Paper Seal களை பயன்படுத்தக்கூடாது.
பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகையில் சேதமடைகிற Green paper seal களின் எண்களைகுறித்து வைத்து படிவம் 17 C ல்  பகுதி 1 இனம் 10ல் குறிப்பிட வேண்டும்.

பயன்படுத்தாத Green paper seal கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் பயன்படுத்தியுள்ள Green Paper Seal ன் வரிசை எண்ணை முகவர்கள் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அடுத்தது SPL seal மற்றும் Strip seal  பயன்பாடு...

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
...............................................................................................................................................................................................
SPL seal & Strip seal.

வாக்குப்பதிவு துவங்கும் முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முத்திரை இடும் பணியினை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Result section ல் Green paper seal வைத்த பின்னர்  Outer cover பகுதியினை முழுவதுமாக பாதுகாக்கும் பொருட்டு Special seal மற்றும் Strip seal கொண்டு  வைக்கும் பணியினை இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

Outer cover ன் பகுதியில் Close button இருக்கும். பகுதியினை திறப்பாக வைத்து. SPL seal வைக்கப்படும்.

result section inner cover ல் உள்ள துளையில் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்ட நூலினை நுழைத்து அதில் special seal ஐ பொறுத்தி  அதில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும்.

அரக்கு முத்திரை வைக்கும் முன்பாக special seal ல் Control unit ன் வரிசை எண்ணை குறித்தும் அதன் பின்புறம் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையொப்பம் இட்டு முகவர்களின் ஒப்பத்தினையும் பெற வேண்டும்.

special tag ல் உள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தாமும் குறித்துக்கொண்டு சத்தமாக வாசித்து முகவர்களையும் குறித்துக்கொள்ள தெரிவிக்கவும்.

பின்னர் special tagஐ வாக்குப்பதிவு எந்திரத்தின் close பொத்தானுக்கு இடையுறு இல்லாமல் பொறுத்து outer cover ஐ மூடி அதனையும் நூல் கொண்டு  address tagஐ வாக்குச்சாவடி விபரங்களை பூர்த்தி செய்து இணைத்து அரக்கு முத்திரை இடவும்.

சேதமடைந்த Special tag னை எந்த காரணத்தினை கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
அடுத்த படியாக Result section inner cover ல் இணைத்திருக்கும் Green paper seal ஐ strip seal உடன் இணைக்கும் பணி.

Strip seal, 1 inch அகலமும் 23.5" நீளமும் A,B,C,D என ஏற்கனவே பசையிடப்பட்ட நான்கு பகுதிகளையினை கொண்டிருக்கும்.

இதற்கென உள்ள வரிசை எண்ணை நீங்களும் குறித்துக்கொண்டு முகவர்களுக்கும் சொல்லுங்கள்..

strip seal ன் A என்ற பகுதியினை ஏற்கனவே inner cover ல் வைத்துள்ள green paper seal க்கு மேல் பகுதியில் Close பட்டனுக்கான ரப்பர் உறைக்கு கீழாகவும் வைத்து green paper seal கீழ் முனையினை Strip sealன் A. என்ன பகுதியில் ஒட்டவும்.

பின்னர் strip seal ன் B என்ற பகுதியினை மடித்து A பகுதியின் மீது வைக்கப்பட்ட green paper seal மீது ஒட்டவும்.

green paper seal ன் outer cover ல் மேல் இருக்கும் பகுதியினை எடுத்து இப்போது Strip seal ன் C என்ற பகுதி மீது ஒட்டவும்.

இப்போது strip seal னை Control unitனை சுற்றி close பட்டனுக்கு கீழாக சுற்றி D என்ற பகுதியினை Green paper seal ன் மடித்து வைக்கப்பட்ட பகுதி மீது ஒட்டிவிடவும்.

வாசிக்கும் போது குழப்பமாக இருக்கும் இம்முறையினை பயிற்சி வகுப்பினில் கவனமாக அறிந்து ஒருமுறை செய்து பார்த்துக் கொண்டால் வாக்குச்சாவடியில் எளிதாக இருக்கும்.

இப்போது சீல் வைக்கும் பணி நிறைவடைந்து வாக்குப் பதிவிற்கு தயாராகும் நேரம்.

வாக்குப்பதிவினை துவங்க தயாராகும் முன் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
....................................................................................................................................................................................................

வாக்குப்பதிவு அலுவலர்களின் பணி.

இந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்களின் பணியினை பற்றியது.

*வாக்குப்பதிவு அலுவலர் 1*

இவர் Marked copy of electoral roll க்கு பொறுப்பானவர்.

இந்த பணியோடு வாக்காளர்களை அடையாளம் காணும் பணியும் இவருடையது தான்.

ஒரு வாக்காளர் உள்ளே நுழைந்ததும் இவரைத்தான் அணுகுவர்.

தேர்தல் ஆணையம் வாக்காளர் கொண்டு வரவேண்டிய ஆவணங்களில் ஒன்றினை அடையாளச் சான்றாக கொண்டு வருவதை சரிபார்க்க வேண்டும்.

*வாக்குப்பதிவு அலுவலர் 2*
இவர் அழியாதமைக்கு பொறுப்பானவர்.

இவர் முதல் அலுவலர் அடையாளத்தை உறுதி செய்தபின் இடது கை ஆட்காட்டி விரலில் மையிடுவார்.

அத்துடன் படிவம் 17A (Register of voters) ஐ  பராமரிக்கும் பணியும் இவருடையதே.

படிவம் 17A வில் உரிய பதிவுகள் செய்து வாக்காளரின் ஒப்பம் அல்லது இடது பெருவிரல் ரேகையினை அதில் பெறுவார்.

அடையாள மை வைத்த பின்னரே படிவம் 17A வில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

படிவம் 17A வில் பதிவுகளை செய்த பின் வாக்காளருக்கு Voters slip ஒன்றை  வழங்க வேண்டும்

அடையாள மை காய்வதற்கான நேரத்தினை எடுக்கவே இந்த நடைமுறை.

*வாக்குப்பதிவு அலுவலர் 3*

இவர் Control Unitக்கு பொறுப்பானவர்.

*இரண்டு தேர்தல்கள் நடைபெறும் இனங்களில்*

மூன்றாவது அலுவலர்  voters slip க்கும்,

நான்காவது அலுவலர் மக்களை தேர்தலுக்கான control Unit ற்கும்

ஐந்தாவது அலுவலர் சட்டமன்ற தேர்தலுக்கான Control unitற்கும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
..........................................................................................................................................................................................................................................................................................................................................................................

வாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்..

*வாக்குச்சாவடியினுள் நுழைய அதிகாரம் பெற்றவர்கள்*

தேர்தல் துவங்கியாச்சு...

யாரெல்லாம் நுழையலாம் இது தான் இந்தபகுதி.


வாக்குப்பதிவு அலுவலர்கள்...

வேட்பாளர், மற்றும் அவரது தேர்தல் முகவர்.

தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்.

தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட பொது ஊழியர்கள்.
(எகா) தேர்தல் பார்வையாளர்கள்.

Micro observers, Photographer/ photographers/ web casting staff/

வாக்காளர் கையில் கொண்டுவரும் குழந்தை

பார்வையற்ற/ நலிந்தவாக்காளருடன் வரும் உதவியாளர்.

அடையாளம் காட்டும் அலுவலர்...

வேட்பாளர்கள் அவருக்கென தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்.

வேட்பாளர் வழங்கிய தேர்தல் முகவர்கள் நியமன கடிதத்தில் புகைப்படம் ஒட்டி அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றொப்பம் செய்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடி காவல் அதிகாரி தேவை என வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் அன்றி வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது.

வேட்பாளர் அல்லது தேர்தல் முகவருடன் பாதுகாப்பிற்காக வரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது.

Z+ பாதுகாப்பில் உள்ளவருடன் வரும் பாதுகாப்பு அலுவலர் சாதாரன உடையுடன் ஆயுதங்களை மறைத்து வரலாம்.

மத்திய மாநில அமைச்சர்கள் public servants in duty என்கிற அளவீட்டில்வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது.

பாதுகாப்பு படையினருடன் வரும் மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்களின் பாதுகாப்பு அலுவலர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி இல்லை.

அவர்கள் வாக்குச்சாவடியில் வாயிலில் நிறுத்தப்பட வேண்டும்.

அடையாளம் காட்டும் அலுவலரும் வாக்குச்சாவடிக்குள் அமர வைக்கப்படக்கூடாது.

தேவை ஏற்படும் சமயத்தில் உள்ள வர ஏதுவாக வெளியில் அமரவைக்கப்பட வேண்டும்...

இப்படி கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் வாக்குப்பதிவு அமைதியாக போகும்...

அமைதியா நடத்த தயாராவோம்...

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*

.............................................................................................................................................................

STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAM ( X - STD ) (NOV - 2018) - RESULT



...................................................................................................................................................................................

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.04.19

திருக்குறள்


அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

பழமொழி

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு

Known is a drop unknown is an ocean

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.

   - ஔவையார்

 பொது அறிவு

1.வெப்ப குடுவை(THERMO FLASK)யை கண்டுபிடித்தவர் யார்?

 சர் ஜேம்ஸ் டீவேர்

2.  நாடாளுமன்றம் இந்தி மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சன்சத் பவன்

விலைமதிப்பற்ற நம் உணவுக் கலாச்சாரம்

பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது. இந்த நாகரிக வளர்ச்சியால் நாம் இழந்தது நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல விலைமதிப்பற்ற நமது ஆரோக்யத்தையும்
தான்.

1. செரிமானக்கோளாறு
சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

2. அதிகமாக சாப்பிட தூண்டுதல்
மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிக சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடுகலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

3. வீக்கம்
விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

English words and Meaning

Rampart   கோட்டை, மதிற்புறம்
Obscene.  ஒழுங்கற்ற மரியாதையற்ற,
Pincers  இடுக்கி,குறடு
Mishap.  இடையூறு,
விபத்து
Pole துருவம்

அறிவியல் விந்தைகள்

ஒருவித்திலைத் தாவரம்
*இது பூக்கும் தாவர (அங்கியோஸ்பேர்ம்கள்) வகையைச் சேர்ந்தது. தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளில் இதுவும் ஒன்று.
*மற்றொன்று இரு வித்திலைத் தாவரம் ஆகும்.
*ஒரு வித்திலைத் தாவரங்கள் சல்லி வேர் தொகுதியை கொண்டவை.
*வேளாண்மைத் தாவரங்களில் பெரும்பாலானவை ஒருவித்திலையிகள் ஆகும். (எ.கா) தானியங்கள், புல், வாழை
*பூக்களுக்காகப் பயிரிடப்படும் பல தாவரங்களும் ஒருவித்திலைத் தாவரங்களே. லில்லிகள்,  ஆர்க்கிட்டுகள், மணிவாழைகள், துலீப்புகள்  இவ்வாறானவை.

Some important  abbreviations for students

* NCA    -    Nuclear Command Authority

* NCC    -  National Cadet Corps

நீதிக்கதை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.
அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

இன்றைய செய்திகள்

10.04.2019

* வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்..: உலக வங்கி தகவல்.

* தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

* தேசிய அளவிலான நிறுவனங்களின் கட்டமைப்புக்கான தரப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

*  தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மெக்சிகோவில் நடைபெற்ற அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 Indians continue to be the first to send money from overseas to foreign countries: World Bank Information.

🌸 The Matric Schools Director suggested that summer camp should not be held on summer holidays in any schools, including private schools.

🌸Anna University is ranked 7th in the  National level institution regarding configuration. It is noteworthy that last year it was ranked 4th.

🌸 The Elections will be held on May 19 for the four constituencies in Tamilnadu which was Tiruparankundram, Ottapidaram, Sulur and Aravankurchi   state assemblies

🌸 In the women's singles section of the Abeirdo Open Tennis Championships in Mexico, current champion Carbini Muguruza (Spain) retained the trophy.
🌹🌹🌹🌹🌹🌹🌹

🎊Have. a nice day🎊😊

Prepared by
Covai women ICT_போதிமரம்

...................................................................................................................................................................................

EMIS  COMMON  DOUBTS 


செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வாக்காளர் அடையாள அட்டை: இணைய சேவை மைய விவரங்கள் வெளியீடு

Tuesday, April 9, 2019

வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படும் ஆவணமான வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து இலவசமாக அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்தவர்களும், புதிதாக புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற விரும்புவோரும் தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் இருந்து ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவை மையங்கள் இயங்கக் கூடிய இடங்கள் குறித்த விவரங்களும் தேர்தல் துறை (www.elections.tn.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.04.19

Tuesday, April 9, 2019


திருக்குறள்



அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்:

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

பழமொழி

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

Don't measure the worth of a person by their size or shape.

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

     - கதே

 பொது அறிவு

1.நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் யார் ?

சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர்.

2. தென்னாட்டு ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்?

 அஞ்சலை அம்மாள்

சிப்ஸ் என்னும் நஞ்சு



பெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ்! சரி. இது உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை' என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.

1. "எண்ணெயில் தயாரிக்கப்படும் எல்லா உணவுகளுமே, உடலுக்குக் கேடு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தப் புரிதலை மீறி, ஒருவரை ஓர் உணவு ஈர்க்கிறது அல்லது கவர்கிறது என்றால், அதற்கு அதன் சுவைதான் முக்கியக் காரணம். இப்படி சுவைக்கு அடிமையாகவைக்கும் ஒரு ஸ்நாக்ஸில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்து, சோடியம் என்ற மூன்று வகை சத்துகள் மட்டுமே இருக்கின்றன. இவையும்கூட, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உடல் உபாதைகளை ஏற்படுத்துபவை.

2. எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்துகளை, ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பாக மாற்றிவிடும். ட்ரான்ஸ் ஃபேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய அடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

3. கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும்சிப்ஸ் பாக்கெட்களில், ட்ரான்ஸ் ஃபேட் அளவு வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என சிலர் நினைக்கலாம். அதன் உண்மைத் தன்மை, பல நேரங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பின் சுவை, சாப்பிடுபவரை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தம், எலும்புப்புரை, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

English words and Meaning

Scout.  வேவுக்காரன்,
ஒற்றன்
Scrap.   சிறு துண்டு
Limekiln. சுண்ணாம்பு காளவாய்
Gossip.  வீண்பேச்சு
Esteem.  பெருமதிப்பு, வெகுமதி

அறிவியல் விந்தைகள்

நுண்ணுயிரி
*நுண்ணுயிரி என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய  உயிரினங்கள் ஆகும்.
*. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது.
*இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும்.
* நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன. அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம்
* இவை நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், தீமை செய்யும் நுண்ணுயிரிகள் என இரு வகையாக பிரிக்கலாம்.

Some important  abbreviations for students

* NASA    -   National Aeronautics and Space Administration (of the U.S.A.)

* NATO    -   North Atlantic Treaty Organisation

நீதிக்கதை

பிறந்த நாள் பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

இன்றைய செய்திகள்

09.04.2019

* சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தியதும் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.

* தமிழகத்தில் 75 மையங்களில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கியது: பயிற்சியாளர்கள் பற்றாக்குறையால் 338 மையங்கள் முடக்கம்.

* உலக வங்கியின் புதிய தலைவராக டேவிட் மால்பாஸ் ஒருமனதாக தேர்வு: அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மெக்சிகோவில் நடைபெற்று வரும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) தகுதி பெற்றார்.

* 73 வயதில் தொழில்பூர்வ கால்பந்து போட்டியில் கோல்  கீப்பிங் :  ‘இரும்பு’ முதியவர் ஐசக் ஹயீக் உலக சாதனை.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸The Chennai High Court has ordered the cancellation of the order of Government of Tamil Nadu regarding Salem-Chennai 8 waytrack highway

🌸Free training for NEET Examination in 75 centers started: 338 centers have been frozen because of lack trainers.

🌸David Malpas unanimously selected as the new Chairman of the World Bank: It is noteworthy that he is close to President Trump.

🌸The current champion Carbini Muguruza (Spain) qualifies for the women's singles event at the Abeirdo Open tennis tournament in Mexico.

🌸At the age of 73, soccer football tournament  goal keeper: 'Iron' elderlu Isaac Heike made world record.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎊Have a best day🎊

Prepared by
Covai women ICT_போதிமரம்....

Election 2019 - Poll Monitoring System - Presiding Officer Mobile App [ Download Before 17.04.2019 ]



PO க்கள் இந்த App-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்....
தேர்தல் முதல் நாள்
தேர்தல் நாள் அன்று ரிப்போர்ட் இதன் மூலம் தான் கொடுக்கவேண்டும்.
CLIKHEAR 
Poll Monitoring System - Presiding Officer Mobile App - Download Link...
https://drive.google.com/file/d/1mCK4O1-C_Btrs-KsX8YGoGh6T48h8mB5/view.


...................................................................................................................................................................

.................................................................................................................................................................................

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, புதிய பாடத்திட்ட நூல்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

Tuesday, April 9, 2019

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டப் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்கட்டமாக 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் நிகழ் கல்வியாண்டில் அறிமுகமானது. மீதமுள்ள வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டமாக மாற்றப்பட உள்ளன. இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் அண்மையில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடத் திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு போன்ற முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தங்கள் படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறப்பம்சங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஞ்சிய வகுப்புகளிலும் இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக முன்கூட்டியே புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
9-ஆம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை மாற்றப்பட்டுள்ளதால் புத்தகங்கள் ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளன. இதுதவிர கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டம் அதிகமாகவும், கடினமாகவும் இருப்பதாக பரவலாக கருத்துகள் வந்தன. அதை ஏற்று கலை, தொழில் பிரிவுகளில் சில கூடுதல் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
2.30 கோடி இலவச பாடநூல்கள் தயார்: அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.3 கோடி புத்தகங்கள் பாடநுல் கழகம் மூலம் அச்சிடும் பணிகள் முடிந்துவிட்டன. அவற்றை இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு பாடநூல்கள் பிரித்து அனுப்பப்படும். கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளிகள் திறக்கப்படும்போது எல்லா மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்படும் என்றனர்

ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

Tuesday, April 9, 2019


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகைச்சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதில் பதிவான மொத்த ஒப்புகை சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக உட்பட நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்போது ஒரு தொகுதியில் 1% ஒப்புகைச் சீட்டு மட்டுமே எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்

Tuesday, April 9, 2019

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 38,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநில அளவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதத்தில் இணையதளம் வழியாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 ஆனால், மக்களவைத் தேர்தல் வரும் 18-இல் நடைபெற இருப்பதால், அதுதொடர்பான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இப்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாதது, பல ஆண்டுகளாக பணி மாறுதலை எதிர்பார்த்து வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்தது.
 இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மக்களவைத் தேர்தல் முடிந்தப் பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும். மேலும், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. எந்த முறைகேடுகளும் இன்றி இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என்றனர்.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

Tuesday, April 9, 2019

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும். பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தால், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
சேலத்தில் நேற்று முன்தினம், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சென்ற, பள்ளி ஆசிரியை, நித்யா, மாரடைப்பால் இறந்தார். அவரது குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சனி, 6 ஏப்ரல், 2019

*தேர்தல் 2019 - எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும் கீழ்கண்ட link மூலம் நீங்கள் பணியாற்றப் போகும் இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம்.*

Presiding officer order கிடைத்தவுடன்
எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும்
கீழ்கண்ட link மூலம்
நாம் பணியாற்றப்
போகும்

*வாக்குச் சாவடி அமைவிடம்
*மொத்த வாக்காளர்
*வாக்காளர் பட்டியல்
*திருத்தப் பட்ட பட்டியல்
*வாக்குச் சாவடி அமைவிடம்
*(Google map)

அனைத்தும் இந்த link ல் கிடைக்கப் பெறும்

பயன் பெறுங்கள் நண்பர்களே...

உங்கள் வாக்கு சாவடி வாக்காளர் பட்டியல் PDF வடிவில்
Click hear

புதன், 3 ஏப்ரல், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.04.19

Wednesday, April 3, 2019


திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

பழமொழி

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

Think before you spend your resources

இரண்டொழுக்க பண்புகள்

 1.பள்ளி பொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.
2.தே‌சிய சின்னங்கள், தே‌சிய கொடி மற்றும் தே‌சிய பாடலுக்கு உ‌ரிய மரியாதை அளிப்பேன்.

பொன்மொழி

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.

   - சாக்ரடீஸ்

பொது அறிவு

1.திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

 வீரமாமுனிவர்

2. மாநிலங்களவையின் தலைவர் யார்?

 திரு வெங்கைய நாயுடு அவர்கள்

குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாத உணவுகள்


1. வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து சுத்தமாக கிடையாது. இதை பலரும் ப்ரிட்ஜில் வைத்து இருப்பார்கள். அதற்கு பதிலாக நவதானியங்களால் ஆன பிரட்டை சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது.

2. கொழுப்பு குறைவான தயிர் மற்றும் பால் ஆரோக்கியமானது என்று எண்ணி ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் போது தீங்கு விளைவிக்கக்
கூடியதாக மாறி விடுகிறது.

3. அனைவரது வீட்டிலும் சோடா இருக்கும். இதை ப்ரிட்ஜில் வைத்து பருகுவதால் நச்சுத்தன்மை மிக்கதாக மாறிவிடும். இதற்கு பதிலாக பழச்சாறுகளை சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.

4. இறைச்சிகளை பதப்படுத்தி வீட்டில் வைக்க கூடாது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கார்சினோஜெனிக் என்னும் புற்று நோய் உண்டாக்கும் பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.

English words and Meaning

Lot/lottery.  அதிர்ஷ்டம் ,
பங்கு  ,திரள்
Spread.  பரவுதல்,
விரிதல்
Demolish. அழித்தல், இடித்தல்
Contempt. அவமதிப்பு
Beware ,எச்சரிக்கை
ஜாக்கிரதை

அறிவியல் விந்தைகள்

புதைபடிவ எரிமங்கள்

 Fossil fuels என்று சொல்லப் படும் புதைபடிவ எரிபொருள்கள் இறந்து புதைந்த உயிரிகளின் உயிரற்ற சிதைவு போன்ற இயற்கை நிகழ்வுகளால் புவிக்கடியில் தோன்றிய எரிமங்களாகும்.
* இவை பண்டைய ஒளிச்சேர்க்கை ஆற்றலைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன
*உயிரிகளின் வயதும் அது புதைந்து உருவாக்கப் பட்ட எரிமங்களின் ஆயுளும் பல மில்லியன் ஆண்டுகளாகும்
* இவற்றில் பொதுவாக கரிமம் அதிகம் இருக்கும்.
* இவை உருவாக பல மில்லியன் ஆண்டுகள் ஆவதால் இவை புதுப்பிக்க இயலா எரி பொருளாகவே காணப்படுகிறது.
எனவே எரி பொருட்களை சிக்கனமாக உபயோகிப்பது மாணாக்கர்கள் நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

Some important  abbreviations for students

* MLA    -  Member of Legislative Assembly

* MLC    -   Member of Legislative Council

நீதிக்கதை

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.
கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.

மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான்.
கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.

நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன்.
வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான்.
அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன்.
எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.

உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான்.

அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்.
சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.

அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான்.
குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான்.
அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.

இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது.
திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன்.
முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான்.
உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.
தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.

இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.

திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான்.
எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்.
முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.

ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.

நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான்.
உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.

அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.
அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.

நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான்.
அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.

எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன்.
வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.

நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர்.
அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.

வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது.
உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி.
அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட
ஒரு காவலன் வந்தான்.

நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன்.
புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.

அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான்.
சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.

அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன்.
உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான்.
புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது.
அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில்
கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான்.
பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி.
பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான்.
கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.

உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.
எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.

இன்றைய செய்திகள்
03.04.2019

* தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

* மரங்களை அதிகரித்ததால் பாலைவன பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை பெய்கிறது.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளார்.

* அமெரிக்காவில் நடைபெற்ற மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் சாம்பியன் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

* தமிழ் திரையுலகின் மூத்த திரைப்பட இயக்குனர்,  யதார்த்த சினிமாவின் இயக்குனர் சி.மகேந்திரன் காலமானார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Retired Supreme Court Judge P. Devdas has been appointed as the head of  Lok Ayukta

🌸 In the United Arab Emirates, the desert there was sleet   hailing because of the increase in trees.

🌸 Rahul Dravid, the Great Wall of India cricket, will be appointed to the post of chairman of the National cricket academy.

🌸Swiss star Roger Federer won the 4th time champion in men's singles competition in the Miami Open tennis tournament in the United States.

🌸 Senior film director of Tamil cinema and Cinematographer of real cinema Mr. Mahendran died.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🎊 Have. a nice day🎊😊

Prepared by
Covai women ICT_போதிமரம்

..................................................................................................................................