>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 3 நவம்பர், 2016

அரசு துறை சேவைகளை ஒருங்கிணைக்க 'ஆப்



அனைத்து அரசு துறை சேவைகளையும், ஒருங்கிணைக்கும் மொபைல், 'ஆப்'பை, 2017 மார்ச்சில், மத்திய அரசு அறிமுகம் செய்தது. பாஸ்போர்ட் சேவை, நிலம் தொடர்பான ஆவணப்பதிவுகள், வருமான வரி, இ - போஸ்ட், பெண்கள் பாதுகாப்பு, உதவித்தொகை உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட, மத்திய அரசு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், மொபைல், 'மாஸ்டர் ஆப்'பை, அரசு தயாரித்து வருகிறது. இந்த, 'ஆப்' அடுத்தாண்டு மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும். 
இந்த, 'ஆப்' உடன், எஸ்.எம்.எஸ்., சேவை, குரல் மூலம் பதிலளிக்கும் சேவையையும் இணைக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் வெளியிடப்படும், இந்த, 'ஆப்'புக்கு, 'யுமாங்' என, பெயரிடப்பட்டு உள்ளது. வரும், 2019க்குள், 'யுமாங்' தளத்தின் கீழ், 200 'ஆப்'கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம், 1,200 வகை சேவைகள் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றின் மூலம், தனியார் துறையின் சேவைகள் சிலவும் வழங்கப்படும். 'யுமாங்' ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் கிடைக்கும்.
மின்னணுவியல் சேவை : மத்திய அரசு, 'இ - கவர்னன்ஸ்' எனப்படும், மின்னணுவியல் முறை நிர்வாக நடவடிக்கைகளின் கீழ், 'மைகவ்.இன்' என்ற இணையதளத்தை துவக்கி உள்ளது. அரசின் பல்வேறு கொள்கைகள் உருவாக்கலில், பொதுமக்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த இணையதளம் செயல்படுகிறது. அதே போன்று, அரசின் மின்னணுவியல் சேவைகள் தொடர்பான, மக்களின் கருத்துக்களை பெறும் வகையில், அதிவிரைவு மதிப்பீடு முறை அடிப்படையில், மற்றொரு இணையதளத்தை உருவாக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. 

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: 15ல் மீண்டும் துவக்கம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்டோபர் முதல், மாநில அரசு ஏற்றுள்ளது. அதனால், செப்டம்பர் வரை, ஆதார் பதிவு பணிகளை மேற்கொண்ட, மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் விலகியது. இதனால், அரசுப் பள்ளிகளில் நடந்து வந்த மாணவ, மாணவியருக்கான, ஆதார் பதிவு பணிகள் நின்று போயின. அப்பணிகளை மீண்டும் தொடரும்படி, பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, ஆதார் விபரம் பதிவு செய்யாத மற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. தற்போது, பல சிக்கல்களுக்கு பின், பொது மக்களுக்கான ஆதார் பதிவு பணிகளை, முழு வீச்சில் துவங்கி விட்டோம். பள்ளிகளில், ஆதார் பணிகளை, நவ., 15ல் துவங்கவுள்ளோம்; 
பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இப்பணியில், 500 பேர் ஈடுபடுவர். பொதுவாக, அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் தான், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளுக்காக, மனு செய்கின்றனர். அதனால் தான், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஆதார் பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நவ., 3, காலை, 10:00 மணிக்கு பின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு: 'தமிழகத்தில், 5,720 பள்ளி களில் கழிப்பறை வசதி இல்லை' என, 2014 ஆக., 8 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, 2014ல் உத்தரவிட்டனர். 
இந்த வழக்கை நேற்று, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர்கள் குழுவினர் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதில், கழிப்பறைகள், தண்ணீர் வசதி, துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லை. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. 
சில பள்ளி களில் மின் கட்டணத்தை ஆசிரியர்கள் சொந்த பணத்திலிருந்து செலுத்துகின்றனர். அதை கல்வித்துறையே ஏற்று, மின்வாரியத்திற்கு செலுத்தலாம். நாப்கின் வசதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: பல்வேறு குறைபாடுகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட பள்ளிகளிலேயே இந்நிலை எனில், மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை பற்றி உங்களுக்கே தெரியும். 
வழக்கறிஞர் கமிஷனர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் நவ., 8ல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்

ஒரே வாரத்தில் பி.எஃப். பணம்!

‘தொழிலாளி இறந்தால் அவரது வாரிசுக்கு ஒரே வாரத்தில் பி.எஃப். செட்டில்மென்ட் பணம் வழங்கப்படும்’ என மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்தார். தொழிலாளர்களின்
பி.எஃப். கணக்குகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நிர்வகித்து வருகிறது. தற்போது பி.எஃப். சந்தாதாரராக உள்ள தொழிலாளி மரணம் அடைந்தால், அவரது பி.எஃப். செட்டில்மென்ட், பென்ஷன், இன்சூரன்ஸ் பலன்களை அவரது குடும்பத்தினருக்கு அல்லது வாரிசுக்கு வழங்குவதற்கு ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பி.எஃப். தொடர்பாக நடந்த ஆலோசனையின்போது, பி.எஃப். செட்டில்மென்ட் வழங்க இவ்வளவு நாள் தாமதம் ஆகக்கூடாது என்றும், குறிப்பாக தொழிலாளர்கள் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக செட்டில்மென்ட் கிடைக்கச்செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“தொழிலாளி மரணம் அடைந்த பிறகு அவரது மனைவி அல்லது வாரிசுதாரரால் சமர்ப்பிக்கப்படும் பி.எஃப். கோரிக்கைகளை விண்ணப்பம் பெற்ற ஒரே வாரத்தில் பரிசீலித்து செட்டில்மென்ட் செய்ய வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தொழிலாளியின் கணக்கு உள்ள பி.எஃப். அலுவலகம் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, தொழிலாளியின் இறப்புக்குப் பிறகு விண்ணப்பிக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.
‘தொழிலாளியின் இறப்புக்குப் பிறகு வைக்கப்படும் கோரிக்கையாக இருந்தால் இங்கு அணுகவும்’ என்று ஆங்கிலம், இந்தி அல்லது அந்தந்த பிராந்திய மொழியில், விண்ணப்பம் பெறும் கவுண்டரில் தெளிவான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்”. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பி.எஃப். கோரிக்கைகள் தாமதமாவது குறித்து பேட்டியளித்த ஆணையர் ஜாய், ‘‘சில கோரிக்கை விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் வருகின்றன. இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இருப்பினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம்’’ என்றார்.

தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்!!!!

புதன், 2 நவம்பர், 2016

ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது

நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.
கருவூலச்செய்தி;
அனைத்து  அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுடைய   SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும்  கருவூலத்தில்  SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது

TRB - 38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நேரடி நியமனம்

தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுமூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர். சம்பளப்பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன்,பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம்போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள்மேற்கொள்கிறார்கள்.
நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமனமுறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை. 
இந்த நிலையில், 38உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய,ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாகதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். நேரடிஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில்சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள்இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது எல்காட் நிறுவனம்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-12, 12-13ம்ஆண்டு களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கலை, அறிவியல் கல் லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து 2013-14 நிதியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர் களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பில், 2011 முதல் 2016 வரை 33 லட்சம் மடிக்கணினிகள் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
இதற்காக 5 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணியில் எல்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.முதல்கட்டமாக இதற்கான ஒப்பந்தத்தை எல்காட் நிறு வனம் கோரியுள்ளது. தகுதி யான நிறுவனங்கள் தரும் மடிக்கணினிகள் அரசு வகுத்துள்ள வரம்புக்குள் இருக்கும்பட்சத்தில், அவை கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

பள்ளி மாணவரை ஆதார் மூலம் பின்தொடர மத்திய அரசு முடிவு.



நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் சுமார் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் பலருக்கு படிப்பை பாதியில் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகளால் கண்காணித்து தடுக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையை போக்க மத்திய அரசு அவர்களின் ஆதார் எண்களைப் பதிவு செய்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கு அதை அவர்கள் பெறும் வரை 18 இலக்கம் கொண்ட சிறப்பு எண் அளிக்கப்பட உள்ளது. இந்த எண்ணைப் பதிவுசெய்து குழந்தைகளைத் தீவிரமாகப் பின்தொடரும் பணியை, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Educational planning and Administration) செய்ய உள்ளது. இதற்கு, 'கல்விக்கான ஒருங்கிணைந்த - மாவட்ட தகவல் முறை (Unified -District Information System for Education (U-DISE)' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள்  கூறும்போது, 'தற்போது, பள்ளியில் சேரும் குழந்தைகள், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் உட்பட சில தகவல்கள் மட்டுமே மத்திய அரசால் தொகுக்கப்பட்டு வருகிறது. இந்தப் புள்ளி விவரங்களில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகளின் விவரம் துல்லியமாக இருப்பதில்லை. எனவே இந்த விவரம் மற்றும் பிற குறைபாடுகளையும் புதிய திட்டத்தின் மூலம் அறிந்து அதை போக்கும் நடவடிக்கைகளை எடுப்பது எங்கள் திட்டம் ஆகும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்தனர்.
 இந்த முறையை சண்டீகர் மற்றும் சில மாநிலங்கள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைத்து தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைத் கவனத்தில் கொண்ட மத்திய அரசு நாடு முழுவதிலும் தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகள் விவரம், அவர்களின் பின்னணி, பள்ளிகளின் குறைபாடு உட்பட அனைத்து விவரங்களையும் தொகுத்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மத்திய அரசின் 2014-15 கல்வியாண்டு கணக்கெடுப்பின்படி தற்போது, நாடு முழுவதிலும் பள்ளியைப் பாதியில் விடும் குழந்தைகள் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. சுமார் 13 லட்சம் அரசுப் பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக உள்ளன. சுமார் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதற்கு காரணம் ஆகும். பிளஸ் 2-க்கு பிறகு தற்போது 25 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர். 

NTSE 2016 - Hall Ticket Download revised Instructions



NAMAKKAL CEO PROCEEDINGS- பள்ளிக்கல்வி- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசிகளை உபயோகிக்கக்கூடாது என்பது கட்டாயம் அமல் செய்தல் சார்பு

உணவு பாதுகாப்பு சட்டம் அமல் : ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு!!

உணவு பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக ரேஷன் கடைகளில், 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நேற்று முதல் அமல்படுத்தியது.
அதன்படி, நான்கு பேருக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு, தற்போது ரேஷனில் வழங்கப்படும் அதே அளவில் இலவச அரிசி வழங்கப்படும்.
25 கிலோ இலவச அரிசி
ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு வழங்கப்படும், 20 கிலோ அரிசிக்கு பதில், 25 கிலோ இலவசம்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு
உறுப்பினருக்கும், தலா, ஐந்து கிலோ அரிசி, கூடுதலாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து,ரேஷன் கடைகளில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்து உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு நிர்ணயித்துள்ள அளவில், ஊழியர்கள், அரிசியை வழங்குகிறார்களா என்பதை கண்காணிக்க ஆய்வு செய்யப்படுகிறது. மொத்தமாக அரிசியை எடுத்து செல்ல முடியாதவர்கள், இரண்டு தவணைகளில் பெறலாம். இந்த சட்டத்தால், அரிசி மானியத்துக்காக, மாநில அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரசீது வழங்க கருவி :
ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் வாங்கும் போது, காகித ரசீது வழங்கப்படுகிறது. இதில், முறைகேடுநடப்பதால், நவீன கருவியில், ரசீது போட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தற்போது, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரசீது போடும் போது, அந்த விபரம் கார்டுதாரருக்கு,
எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். நேற்று முதல், அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவி மூலம் ரசீது போடும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 34 ஆயிரத்து, 776 ரேஷன் கடைகள் உள்ளன; அதில், 70 சதவீத கடைகளில், அக்., 1 முதல், பாயின்ட் ஆப் சேல் கருவியில் ரசீது போடப்பட்டது. நேற்று முதல் அனைத்து கடைகளிலும், கருவி மூலம் தான் ரசீது போடப்படும். எனவே, ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் மொபைல் போன் எண்ணை, ரேஷன் கடைகளில் உடனே பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுக்கு 11 விதிமுறைகளுடன் கல்வித்துறை அதிரடி உத்தரவு !

மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன்,
‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கல்வித்துறையின் 11 விதிமுறைகள்: 
* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும். 
* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். 
* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும். 
* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. 
* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. 
* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும். 
இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு 12,75,000 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்

06.11.2016 அன்று நடைபெற உள்ள குரூப் - 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,75,000 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

Puppet Making video

Click Here

அறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்

How to Create Own Website for You?

1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.


2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக்செய்யுங்கள்.


3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

4. ஆரஞ்சு நிற சின்னத்தோடு Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.


5.create your blog என ஆங்கிலத்திலுள்ளதை க்ளிக் செய்யுங்கள்.

6,create a new blog கீழ் Title என்னுமிடத்தில் எந்த தலைப்பின் கீழ்நீங்கள் செயல்பட விரும்புகிறீர்கள் என கொடுக்கவும். (இது இணையமுகவரி அல்ல.தலைப்பு மட்டுமே)

7.Address என்ற பகுதியில் வழங்க விரும்பும் முகவரியைகொடுக்கவும்.(இதுதான் நீங்கள் அனைவருக்கும் பகிரப் போகும்உங்களது ப்ளாக்கர் முகவரிஎல்லாம் small letters இடைவெளியின்றிதர வேண்டும்.என்ன வார்த்தை கொடுத்தாலும் அதன் பின்.blogspot.com என்பது default ஆக வரும் Example: (www.padasalai.blogspot.com). எனவே மிக எளிதாகத் தரவும்.

8.Template(எப்படி தோன்ற வேண்டும்என்பதில் ஏதேனும் ஒன்றைதேர்ந்தெடுக்கவும்.

9.create blog என்பதை க்ளிக் செய்யவும்.

10.இடது மூலையில் தென்படும் new post  க்ளிக் செய்யவும்.

11.எழுதப் போகும் பதிவிற்கான தலைப்பை post title என்ற பகுதியில்கொடுக்கவும்.

12.compose பகுதியில் கீழ் தெரியும் பெரிய தாள் போன்ற பகுதிக்குள்மேல் கொடுத்த தலைப்பு தொடர்பான படைப்பை பதிவு செய்யவும்.

13.பதிவில் எழுத்துகளை பெரிதாக்க,சிறிதாக்க,தடித்த,சாய்ந்தஎழுத்துகளை பயன்படுத்தஅவற்றின் நிறத்தை மாற்றஅடிக்கோடிட,படங்களை,வீடியோக்களை இடைச் செருகஒரு இணைப்பைவேறொரு பக்கத்திலிருந்து இங்கே வழங்கஇது போன்றசெயல்களுக்கு நீங்கள் எழுத ஆரம்பிக்கும் இடத்திற்கு மேலே உள்ளவிருப்பங்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம்.

14.பதிவை முடித்த பிறகு பதிவு சார்ந்த குறிப்பினை வழங்க வலதுபக்கம் தோன்றும் lables என்பதை க்ளிக் செய்ததும் தோன்றும் சிறியபெட்டிக்குள் குறிப்பினை கொடுக்கவும்பின்னர் கீழே உள்ள Done என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

15,இறுதியாக Post Title க்கு வலது புறம் தோன்றும் Publish என்றவார்த்தையை க்ளிக் செய்யஉலகத்தின் எந்த இணையஇணைப்புள்ள ஒரு கணினியிலிருந்தும் உங்கள் ப்ளாக் முகவரிதெரிந்த எவரும் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும்.


-முனைவர்.ஜெயபிரபு,பட்டதாரி ஆசிரியர்,தஞ்சாவூர்.

Income Tax 2016-17 – All Salaried Employees to declare deductions and savings under Form 12BB

1 2BB – Download Form 12BB as a Word, Excel or PDF file- All Employees to file Declaration under Form 12BB to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10
The Finance Act, 2015 had introduced section 192(2D) of the Income-tax Act, 1961 (the Act) wherein the person responsible for making payment of salary (employer) was obliged to collect the necessary evidence or proof in the prescribed form and manner to allow any claim for any deduction and/or tax saving investments. However, the relevant rules and form were yet to be prescribed. The Central Board of Direct Taxes (CBDT) has come out with the relevant rules1 and also prescribed the form i.e. Form 12BB, in which salaried employees would now be required to furnish evidence of claims and tax saving investments to the employer.
Till Finance Act 2016, there was no standard format for salaried employees for filing declaration with their employer to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10. In the absence of single declaration form, employees had to submit proof for each investment made in the year.
As a relief to employees and also to employer, Income Tax Department has introduced a new Form 12BB. This form, applicable from June 1, 2016, will act as a single entity that you can use to declare your to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10.
Deductions that can be declared under Form 12BB:
The standard Form 12BB is for all salaried Employees to claim tax deductions. You use can use it to claim deductions for leave travel allowance (LTA/LTC), house rent allowance (HRA), interest paid on home loans, and all other tax deductions pertaining to Chapter VI-A of the Income Tax Act.
House Rent Allowance (HRA):
With form 12BB, you can claim any HRA tax deductions under Section 10 (13A) of the Income Tax Act. Along with 12BB you will need to provide the relevant rent receipts for this deduction. You will also need to submit the name and address of the landlord. In the event the aggregate rent paid by you exceeds Rs 1 lakh, you will also need to submit the Permanent Account Number (PAN) of your landlord.
Amount claimed under Leave travel Concession (LTC)
With Form 12BB, you need to furnish amount and provide evidence of expenses made towards your travel. Unlike in the past, it is now mandatory to provide proof of all travel expenses in the form of receipts for your claim.
Interest on home loan under Section 24:
Earlier to claim deduction for interest paid on home loan, we have to submit interest certificate from the concerned bank. Now, in addtion to the same we will have to fill up Form 12BB to claim deductions under Section 24 of the Income Tax Act.
Savings / deductions under Chapter VI-A:
All tax deductions under Section 80C, Section 80CCC, and Section 80CCD, as well as other sections like 80E, 80G, and 80TTA come under Chapter VI-A of the IT Act. For deductions, fill up Form 12BB and provide details and proof of your investments and expenditures incurred related to the relevant section you are seeking deductions under.

MINORITY SCHOLARSHIP-பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

NATIONAL ELIGIBILITY TEST (NET) - JAN 2017

தமிழ் ஆசிரியர்கள் பணி வரன்முறை ஐந்தாண்டு காத்திருப்புக்கு தீர்வு



பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள், 2,000 பேர், ஐந்தாண்டு காத்திருப்புக்கு பின், பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், 2011 முதல், பல கட்டங்களாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 
அவர்களை பணி வரன்முறை செய்வதில், கால தாமதம் ஏற்பட்டது. ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், தமிழ் தவிர, இதர பாட ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர்; தமிழ் ஆசிரியர்கள் மட்டும் வரன்முறை செய்யப்படவில்லை.
இதனால், அரசின் சலுகைகள் கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டனர்; அரசுக்கு தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, 2011 முதல், 2015 வரையில் நியமிக்கப்பட்ட, பட்டதாரி தமிழ் ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, பள்ளிக்கல்வித் துறை, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 
இதனால், 2,000 ஆசிரியர்கள் பலனடைவர். 'பணி வரன்முறை உத்தரவால், தமிழ் ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பயிற்சி காலம் முடிவுக்கு வரும். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஊக்க ஊதியம், உயர்கல்வி ஊக்க ஊதியம் போன்ற சலுகைகள் கிடைக்கும்' என, ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

போஸ்ட்மேன் வேலை நவ., 15 கடைசி

'தமிழகத்தில், காலியாக உள்ள, 310 போஸ்ட்மேன்கள், மெயில் கார்டு பணி இடங்களுக்கு, நவ., 15க்குள், விண்ணப்பிக்கலாம்' என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள, 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, பிளஸ் 2 முடித்தோர், ஆன்லைன் வழியே, நவ., 15க்குள் விண்ணப்பிக்கலாம். 21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். பொது பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும், அரசாணைகளின்படி, வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.
வயது வரம்பு, 2016, நவ., 15ஐ அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். விண்ணப்பங்கள் பெறவும், மேலும் விபரங்களுக்கும், www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

"இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விவரம்:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in)   இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, தேசிய வங்கியிலிருந்து கடன் பெறவும் உதவி செய்யப்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனஅழுத்தம் போக்க கல்வித்துறையில் யோகா

மாநில அளவில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நவ.,7 பொள்ளாச்சியில் துவங்குகிறது.
ஆசிரியர்கள் மனஅழுத்தம் குறைய, திறன் மேம்பாடு, ஆளுமை திறன் அதிகரிப்பு, மாணவர் - ஆசிரியர் உறவு மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நவ.,7 முதல் 2017 டிச., வரை 17 கட்டங்களாக பொள்ளாச்சி ஆழியார் மனவளக்கலை யோகா மையத்தில் நடக்கிறது.
இதில் அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 950 பேர் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்காக முதன்மை கல்வி அலுவலகங்கள் வாரியாக தலைமையாசிரியர் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்," என்றார்

மாணவர்களுக்கு ''வாட்ஸ் அப்'' வரமா.... சாபமா

அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'வாட்ஸ் ஆப்' செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 'வாட்ஸ் ஆப்' செயலி உருவாக்கப்பட்டது.
ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் 'பேஸ்புக்' நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் 'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பர் என கணித்து, 'வாட்ஸ் ஆப்' செயலியை உருவாக்கியதுதான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம். 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத 'பேஸ்புக்' நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
மைனர்களுக்கு தடை 
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 'வாட்ஸ் ஆப்' குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.
80 கோடி பேர்
உலகில் 80 கோடி நுகர்வோர் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
'ஸ்மார்ட் போனுடன் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. 
இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்'க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.
அரட்டைக்காக பயன்படும் அவலம் 
'ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் 'மதுரை ஐடியன்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. 
மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்'” பயன்படுத்துவதாக தெரிவித்தனர். 
மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக்கான பயன்பாடு குறைவு 
மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும் 
ஒப்புக்கொண்டனர். 
நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது 
அவசியம் என்பது தெரிகிறது. 'வாட்ஸ்ஆப்' செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும் 
கல்வியின் தரம் 
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர். 
மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை 'வாட்ஸ்ஆப்' பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன. 
அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.
'வாட்ஸ் ஆப்' போதை
உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி 'வாட்ஸ்ஆப்' மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.
'டிவி' மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல 'ஸ்மார்ட்போன்' உதவியுடன் 'வாட்ஸ்ஆப்' என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது. 
எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது 'வாட்ஸ் ஆப்' செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன்
கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111

மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 
இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர்.  தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது

நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.
கருவூலச்செய்தி;
அனைத்து  அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுடைய   SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும்  கருவூலத்தில்  SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை

இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறோம். அதேபோல், கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசுத்துறை
கோப்புகளில், தமிழில் எழுத வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதையும், ஆய்வு செய்ய வேண்டும். தமிழில் எழுதாதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். 

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும்

அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர். 
இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர். ஆனால், திருவள்ளூர், பூண்டி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருமழிசை உட்பட பல பகுதிகளில் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். எனவே, அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காதல் மயக்கம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், சினிமாவும், டிவியும் பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, காதல் வயப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாணவிகளுடன் சிலர் செல்கின்றனர். ‘’பிள்ளையை காணவில்லை’ என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம் என்றார்.

மாணவர்களுக்கு வீட்டு பாடம் முதல் வகுப்பறை சோதனைத்தேர்வுவரை தினமும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வாரத்திற்கு ஒருவருக்கு நட்சத்திர மாணவர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் பள்ளிக்குளம் ஆசிரியர் பன்னீர்



எங்க பள்ளிகுளம் பள்ளிக்கு புதுசா வந்திருக்கிற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு. பன்னீர் தினமும் காலை 8.30 க்கே
தன்னோட கணக்கை தொடங்குவார். வகுப்பறைக்குள் அவர் நுழைந்தாலே   பசங்களுக்கு கொண்டாட்டம்தான்.
அவர் வந்த பிறகு பள்ளியோட வளர்ச்சி நல்ல வேகமெடுத்து இருக்கு.
மாணவர்கள் நலசார்ந்த பல திட்டங்கள செயல்படுத்தராரு. அதில் என்னை ரொம்ப கவர்ந்த திட்டம் 'நட்சத்திர மாணவர்'
( STAR STUDENT).
அதாவது மாணவர்களுக்கு வீட்டு பாடம் முதல் வகுப்பறை சோதனைத்தேர்வுவரை தினமும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வாரத்திற்கு ஒருவருக்கு நட்சத்திர அடையாளத்தை கொடுக்கிறார். அந்த மாணவர்கள் தினமும் தன்னோட நெஞ்சிப்பகுதியில அந்த Start Batch யை  குத்திக்கிட்டு தான் பள்ளிக்கு வராங்க. போலீஸ் மாதிரி ஒரு Star....நெஞ்சில குத்தியிருப்பது பசங்களுக்கு பெரிய கௌரவத்த கொடுப்பதால மாணவர்களுக்குள்ள நல்ல போட்டிமனப்பான்மை வளர்ந்து நிறையபேர் நல்லா படிக்க ஆரம்பிச்சி இருக்காங்க.
இது ரொம்ப நல்லா இருக்கேனு கொஞ்சம் மேல போயி Star Batch வாங்குற மாணவர்களோட பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து திங்கட்கிழமை காலை வழிபாட்டுல தேசிய கொடிய ஏற்ற வெச்சி கௌரவிக்கலானு செயல்படுத்தினோம்.
கொடியேற்ற வர பெற்றோர்கள் ரொம்பவே பூரிச்சிதா போராங்க. 
அந்த வகையில இன்னைக்கு கொடி ஏற்ற வந்த வெற்றிவேலிலின் அப்பா சார் ஒன்னுமே புரியல கையிலா படபடனு அடிச்சிகிது. எங்க ரொம்பவும் கௌரவிச்சிட்டிங்க சார்னு சொல்லுபோது அடடா இதுவும் நல்லாதா இருக்கேனு தோனுது...
By
கி.தமிழரசன்.
பள்ளிகுளம்
விழுப்புரம்