>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 3 மார்ச், 2018

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள்மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அவர்கள்உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 2 மார்ச், 2018

24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்...


கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள்,
தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 வழியாக தொடர்பு கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்.

AEEO-நேரடி நியமனம் -57 பதவிகளுக்கான தேர்வு தேதி 15-9-2018 என அறிவிப்பு-Aeeo syllabus


13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு...

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும்எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில்வெளியாகும்.
ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள்காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம்பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வுகள் எப்போது பதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள்'ரிசல்ட்' நாள்
 வேளாண் பயிற்றுனர் 25 ஏப்.,ஜூலை, 14 ஆக.,
பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,
கலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம்சான்றிதழ் ஆய்வு
ஜூலை உதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15
அக்.,'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,
*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்.

+2 தமிழ் வினாத்தாளில் இதுவரை கேட்கப்படாத கேள்வி!!!

'நாட் ரீச்சபிள்' ஆன கல்வி அதிகாரிகள் : பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் 'சோதனை'

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி., அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெரும் சிரமம் ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர், தலைமையாசிரியர் வரை எளிதிலும், செலவின்றியும் தொடர்புகொள்ள ஏர்செல் அலைபேசியில் சி.யு.ஜி., இணைப்பில் உள்ளனர்.அதிகாரிகள், தலைமையாசிரியர் 'வாட்ஸ்ஆப் குரூப்'கள் ஏற்படுத்தி தகவல்கள், அறிவுறுத்தல், கல்வி செய்தியை பரிமாற்றம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சில நாட்களாகவே ஏர்செல் அலைபேசி சேவையில் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், "நேற்று முதல் (மார்ச் 1) ஏர்செல் அலைபேசி செயல்படாது," என அதன் தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் அறிவித்தார். இந்நிலையில் சென்னை, மதுரை உட்பட பல இடங்களில் அலைபேசி சேவை செயலிழந்தது. இதனால் அதிகாரிகளால் தேர்வு மையப் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமையாசியர்கள், அலுவலர்களை எளிதில் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:சேவை பாதிப்பால் தேர்வு துவங்கிய முதல் நாளில், பெரும் சிரமம் ஏற்பட்டது. மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பிய பின் அது சேர்ந்ததா, இல்லையா, தேர்வு துவங்கியதா, ஆப்சென்ட் மாணவர் விவரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.பறக்கும் படை மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் பலரின் அலைபேசி 'நாட் ரீச்சபிள்...' ஆகியது. சிலரிடம் மட்டும் அவர்களின் மற்றொரு அலைபேசிஎண்ணை பெற்று தகவல்கள் பெறப்பட்டது. தேர்வுக்கு முன்பே இதுகுறித்து எச்சரிக்கப்பட்டது.
இருப்பினும்,சில இடங்களில் நெட்வொர்க் கிடைத்து இணைப்பு இருந்ததால், அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாளில் இந்த சிரமம் ஏற்பட்ட பின் தேர்வு பணியில் ஈடுபடும் முக்கிய அதிகாரிகள், மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் மற்றொரு அலைபேசி எண்களை கேட்டு பெற்றுள்ளோம், என்றனர்.

TRB & TET - Annual Planner 2018 Published 

வியாழன், 1 மார்ச், 2018

+2 Exam - தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி



பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாகவே இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் 
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசுப்பள்ளிகளில் DEPUTATION?

TRB & TET - Annual Planner 2018 Published 

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் தலைமைப் பண்பு பயிற்சி - 5.3.18 to 9.3.18

ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் 
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.

புதன், 28 பிப்ரவரி, 2018

பகுதி நேர ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறி?


DGE-மார்ச்/ஏப்ரல் 2018- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -Centerwise NR ,Seating Plan and CSD Form பதிவேற்றம் செய்தல் சார்பு

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்...


கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள்,
தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 வழியாக தொடர்பு கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்.

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!!

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் 
பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து தேர்வெழுதும் மாணவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்வுத் துறை விதித்துள்ளது. அதன் விவரம்: 
தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் பக்க எண்ணிக்கையை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத் தாளின் முகப்பு பக்கத்தில் புகைப்படம், பெயர் ஆகியவை தங்களுடையதுதானா என்றும், தேர்வு எழுத உள்ள பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். தேர்வுக் கூடத்துக்கு துண்டுச் சீட்டுகள் எடுத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் தேர்வு எழுதும் போது விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்களில் எழுதுவதற்கு முன்னதாக கூடுதல் விடைத் தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் அந்தந்த பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர "ஓவர் சாய்சில்' எழுதிய விடைகளைக் கோடிட்டு அடித்தால், அந்த விடை தன்னால் எழுதப்பட்டது என்று குறிப்பு எழுத வேண்டும். அதில் அறைக் காணிப்பாளர் கையொப்பம் இடக்கூடாது. மேலும் மாணவர்கள் வராத இடத்தில் வேறு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதக் கூடாது.
தேர்வு அறைக்குள் நுழையும் முன்பே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபார்த்து காலணி, பெல்ட் ஆகியவற்றை வெளியில் விட்டுவிட்டு இருக்கையில் சென்று அமர வேண்டும். தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தாங்கள் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தாமே அடித்து விட்டால் அது ஒழுங்கீனச் செயலாக கருதப்படும். விடைத் தாளில் விடைகள் எழுதி முடித்த பிறகும் மீதம் உள்ள வெற்றுப் பக்கங்களில் குறுக்கே கோடிட வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகள் தேர்வுத் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO???

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு...

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
சென்னை நகரில் போராட்டத்துக்கு தடை கோரி நயினா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர் நயினா முகமது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்!

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்



ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

சனி, 24 பிப்ரவரி, 2018

Non-Teaching Staff Profile - Online Entry Form

 

TRB - வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு

DEE PROCEEDING-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு


மானிய ஸ்கூட்டி திட்டம் இன்று (24.02.2018) தொடக்கம்!


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி
சென்னை கலைவாணர் அரங்கில் நாளைக் காலை அம்மா ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
பணிக்குச் செல்லும் பெண்களுக்கான ஸ்கூட்டி மானியத் திட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. சென்னையில் மட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து முதல் கட்டமாகத் தற்போது 1000 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
சென்னையில் நாளை மாலை 5.30 மணிக்குக் கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் `அம்மா ஸ்கூட்டி திட்டம்' தொடக்க விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்கூட்டி மானியம் வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
தற்போது 1000 ஸ்கூட்டிகளும் கலைவாணர் அரங்கத்தின் பின்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டி மானிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அனைவருக்கும் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை பிரதமர் மோடியிடமிருந்து பயனாளிகள் ரூ.25 ஆயிரம் மானியம் பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கூட்டியை எடுத்துச் செல்வார்கள். மோடியை வரவேற்கும் விதமாக கலைவாணர் அரங்கத்தின் இருபுறமும் வரவேற்பு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுவருகின்றன. பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு ஆலோசிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2 மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக அரசு 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
இந்த உத்தரவால்

பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.
தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., உள்ளது. இந்த வாரியத்தில், பள்ளிக் கல்வித் துறையினர் மட்டுமேஇருப்பதால், உயர் கல்வித்துறை பணி நியமனங்களை மேற்கொள்ள, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு, தனி அமைப்பை உருவாக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், புதிய பணியிடங்களை நிரப்ப, புதிய திட்டங்களை யோசித்து வருகிறோம். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பேராசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்; இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
தற்போதைய சூழலில், ஆசிரியர்கள்பற்றாக்குறையை போக்க, அண்ணா பல்கலையில் இருந்து, உபரி பேராசிரியர்களை, அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லுாரிகளுக்கு மாற்றி வருகிறோம். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,640 பணியிடங்களை, விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

DSE PROCEEDINGS-பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு நீக்க நாள்-உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

இன்ஜினியர் கவுன்சிலிங்- ஆன்லைனில் எவ்வாறு நடைபெறும்?

ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்கவேண்டிய 'றெக்கை' - சிறார் கலகல மாத இதழ்



ஐந்து முதல் பதினைந்து வயது வரையிலான குழந்தைகள் வாசிக்க, விளையாட, வரைய ஏற்ற மாத இதழ்... வண்ணத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது...

சிறுகதைகள், துணுக்குகள் என்று குழந்தைகளை படிப்பதில் ஈடுபடுத்தும் விஷயங்கள்...

பெற்றோர்களே குழந்தைகளுக்கு வாசித்துக்காண்பியுங்கள்...


ஆண்டு சந்தா ரூ.400.


வங்கிக் கணக்கு:

THOORIKA THE CREATIVE STUDIO,

A/c No: 357201010036527,

Union Bank of India,

Besant Nagar Branch,

IFSC: UBIN0552721


ஆண்டு சந்தா செலுத்துவோர் வங்கிக் கணக்கு எண்ணுக்கு ஆன்லைனில் தொகையை பரிமாற்றம் செய்து, அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டை 9884208075 எண்ணுக்கு வாட்ஸப் செய்க. பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றைத் தெளிவாக அனுப்புங்கள்.


rekkaimagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.

விரைவில் 16000 தலைமை ஆசிரியர்களுக்கு நற்பண்பு கற்பிக்கும் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்




நீட் தேர்வில் வெற்றிக்கான சில ஆலோசனைகள்




தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி



பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!!!

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்து ஏற்கெனவே அரசாணை
வெளியிடப்பட்டது. அதில்

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்!!!

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் 
மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும்,
அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு மட்டும் நேரடியாக கவுன்சிலிங் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அமைச்சர் கூறியதாவது: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 21 ஆண்டுகளாக பொறியியல் கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போது மாணவர்கள் வசதிக்காக, அவர்கள் சந்தேகங்களை முழுமையாகத் தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆண்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதற்கான வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்காக மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு இடத்திலும் பெரிய மாவட்டமாக இருந்தால் 2 இடங்களிலும் கவுன்சிலிங் மையங்கள் செயல்படும்
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்டில் இருந்தபடி, 'அட்மிஷன்' பெறலாம்!!!

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள்

அமைத்து, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்தப்படுவது வழக்கம். வரும் கல்வி ஆண்டில்,

மானிய ஸ்கூட்டி திட்டம் இன்று (24.02.2018) தொடக்கம்!


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி
சென்னை கலைவாணர் அரங்கில் நாளைக் காலை அம்மா ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
பணிக்குச் செல்லும் பெண்களுக்கான ஸ்கூட்டி மானியத் திட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. சென்னையில் மட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து முதல் கட்டமாகத் தற்போது 1000 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
சென்னையில் நாளை மாலை 5.30 மணிக்குக் கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் `அம்மா ஸ்கூட்டி திட்டம்' தொடக்க விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்கூட்டி மானியம் வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
தற்போது 1000 ஸ்கூட்டிகளும் கலைவாணர் அரங்கத்தின் பின்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டி மானிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அனைவருக்கும் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை பிரதமர் மோடியிடமிருந்து பயனாளிகள் ரூ.25 ஆயிரம் மானியம் பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கூட்டியை எடுத்துச் செல்வார்கள். மோடியை வரவேற்கும் விதமாக கலைவாணர் அரங்கத்தின் இருபுறமும் வரவேற்பு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுவருகின்றன. பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 
தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.