>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 1 பிப்ரவரி, 2017

உங்கள் முடி வெள்ளையாக மாறுவதற்கு இதுதான் காரணம் !!


நீங்கள் இளம் வயதில் நரைமுடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் எனில் நீங்கள் ஒரு நல்லட்ரைக்காலஜிஸ்ட்டை அணுகி நரைமுடிக்கான காரணத்தைக் கண்டறியுங்கள்
 இள வயதில் நரைமுடி வருவது இன்று வளர்ந்து வரும் பிரச்சனையாகும்.10 வயது குழந்தைகள்முதல் இந்த நரைமுடி பிரச்சனை ஆரம்பமாகிறது.முன்பு இது அரிதாக அங்கொன்றும்இங்கொன்றும் ஆக நடந்தது.ஆனால் ஒவ்வொரு நாளாக இந்த பிரச்சனை வளர்ந்து வருகிறது.
குழந்தை பருவம் மகிழ்ச்சியான பருவம் என்று சொல்வார்கள் உண்மை தான் அது இந்தநரைமுடி வரும்வரை மட்டுமே.குழந்தை பருவத்திலேயே நரைமுடி வருவதால் குழந்தைகளுக்குமன அழுத்தம் ஏற்படுகிறது.நரைமுடி வராமல் தடுக்க முதலில் அதை பற்றி நன்கு தெரிந்துகொள்வோம்.
முடியின் நிறம்:
முடியின் இயற்கையான நிறம் மெலனின் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறதுதலையில்உள்ள தோலின் அடியில் நுண்ணறைகள் உள்ளன.இவற்றில் முடிக்கு நிறத்தை அளிக்கக்கூடியமெலனோசைட்ஸ் உள்ளதுநுண்ணறையிலிருந்து முடி வளரும் போது மெலனோசைட்ஸ்மெலனின்- உற்பத்தி செய்கிறது.இந்த மெலனின் முடிக்கு நிறத்தை கொடுக்கிறது.
  வெள்ளை நிறத்திற்கு காரணம் :
மெலனின் 2 வகையாக உள்ளன.அதில் ஒன்று யூமெலனின் ஆகும்.இதுவே கருப்பு மற்றும்பழுப்பு நிறத்திற்கு காரணம் ஆகும்.வயது அதிகமாக ஆக ஆக இந்த மெலனின் உற்பத்திகுறைகிறது.மெலனின் குறைவதால் முதலில் முடி சாம்பல் நிறமாகவும் பின்புவெள்ளையாகவும் மாறுகிறது.
இள நரை :
ஆனால் சில சமயங்களில் அதிகப்படியான உடல்நலக்குறைவு,அதிக அழுத்தம்,போதுமானஊட்டச்சத்து எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் சிறு வயதிலேயே இந்தமெலனின் உற்பத்தி குறைகிறது.இதுவே இளவயதில் நரை முடி வருவதற்கு காரணம்.சிலசமயங்களில் இது மரபணுவை பின்பற்றியும் வருகிறது.
மற்ற காரணங்கள் :
இது மட்டுமின்றி சிலர் நரைமுடியை மறைக்க கெமிக்கல் கலந்த சாயங்கள்உபயோகிக்கின்றனர்இது முடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.இந்த சாயங்கள் ஸ்கல்ப்பைசுத்தமாக வைக்காமல் அசுத்தப் படுத்துகின்றன மற்றும் இதில் கெமிக்கல் அதிக அளவுஇருப்பதால் முடி பொலிவின்றி மாறும்.
பரிசோதனை :
நீங்கள் இளம் வயதில் நரைமுடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் எனில் நீங்கள் ஒரு நல்லட்ரைக்காலஜிஸ்ட்டை அணுகி நரைமுடிக்கான காரணத்தைக் கண்டறியுங்கள்.

சிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..!



     நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி,  உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பலவகைகளில்  துணைபுரிவது சிறுநீரகம். "இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்என்கிறது சுகாதாரதுறை அமைச்சகம்இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால்பலர் தங்களுக்குசிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்நோய்முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள்இதுவளரவிடக் கூடாத பிரச்னைவளர்ந்தால் டயாலிசிஸ்சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச்செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும்
சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும்அந்த அறிகுறிகளில் சில...
சிறுநீர் பிரச்னை 
 
நுரைபோன்ற சிறுநீர் வருவதுஇயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது,சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதுசிறுநீர் தொற்று ஏற்படுவதுஅடிக்கடி சிறுநீர் கழிப்பதுசிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும்சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.    
வீக்கம் / அதைப்பு 
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல்போகும்போது கணுக்கால்கால்பாதம்கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்புஏற்படும்.
சோர்வு / ரத்தசோகை
சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறதுஇதுஆக்சிஜன்ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறதுசிறுநீரகம்பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும்இதனால் ரத்தசிவப்பு அணுக்கள்ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும்இதனால்தான் சோர்வும்ரத்தசோகையும் ஏற்படுகின்றன.
தடிப்பு 
சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும்இதனால்தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
மூளையின் குறைந்த செயல்பாடுகள்
மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதிகவனமின்மைதலைசுற்றல் ஆகியவைஉண்டாகும்.
குளிர்
ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும்சிலருக்கு வெயில்சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.
மூச்சுத்திணறல் 
சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும்தேவையற்ற திரவம்குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
முதுகுவலி 
பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும்இன்னும்சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும்இந்த அறிகுறி வெகு சிலருக்குமட்டுமே  தெரியும்.
குமட்டல் 
சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும்அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால்சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
சுவாசத்தில் வாடை
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும்இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும்இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாகமாற்றும்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தோன்றினால்உடனே சிறுநீரகசிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்
நன்றி-ஆனந்த விகடன்

TNTET - மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் TET தேர்வு எழுதலாம்


     இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை  ஏப்ரல் 29-ம் தேதியும்,
பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்முடிவுசெய்துள்ளதுஇதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படிஒன்று முதல் 8-ம் வகுப்புவரை பணிபுரியும் இடைநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர்தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்புஆசிரியர் தேர்வு வாரியத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி..) விதிமுறைஆனால்நீதிமன்ற வழக்குகள்காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில்இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல்பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல்30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர்தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர்தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர்அறிவுறுத்தியுள்ளார்இதைத்தொடர்ந்துஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை(தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை(தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமைநடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்திட்டமிட்டுள்ளதுதேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும்இவ்வாறு அந்த கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்பிசிஎம்பிசிஎஸ்சிஎஸ்டி ஆகியஇடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும்ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும்தமிழகத்தில் முதலாவதுடெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும்அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாகதேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தைஅதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும்அதைத்தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளனமாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்ததுபொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளனஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம்   இடைநிலைபட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

ஆண்டுகள் செல்லத்தக்கது

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லைவெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்அதன்படிடெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும்பிளஸ் 2, பட்டப் படிப்புபிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்புமதிப்பெண்கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வுதேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும்எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள்மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும்டெட் தேர்வு எழுதலாம்

Jio வுக்கு சவால் விட இணைகின்றன idea & Vodafone, அதிர்ச்சியில் Air Tel & Jio நிறுவனங்கள்.

இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் idea செல்லுலார் மற்றும் Vodafone ஆகிய நிறுவனங்கள்
இணைந்திட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
 இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும் என்பதால் முதல் இடத்தில் இருக்கும் Air Tel நிறுவனமும் சரி, புதிதாய் களமிறங்கியுள்ள Jio வும் அதிர்ச்சியில் உள்ளன.
 இந்த இணைப்பின் மூலம் idea நிறுவனத்தின் பங்குகளை Vodafone பெற உள்ளது.
 Vodafone இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் மத்தியிலான பேச்சுவார்த்தையில், Vodafone இந்தியா (இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் இதன் 42 சதவீத முதலீடு இதில் சேர்க்கப்படாது) நிறுவனத்தை முழுமையாக idea செல்லுலார் பங்குகள் வாயிலாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
 இதற்காக Vodafone இந்தியா, idea செல்லுலார் நிறுவனத்தின் பங்குகளைப் பெற உள்ளது.
 தற்போதைய நிலையில், Air Tel 27 கோடி வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் Jio 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள நிலையில் Vodafone மற்றும் idea இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.
 இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக அளவுகளின் படி 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் Vodafone மற்றும் idea நிறுவனங்கள் இணைவதன் மூலம் டெலிகாம் சந்தையில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் Jio வின் வர்த்தக வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
 Vodafone மற்றும் idea இணைப்பில் இக்கூட்டணி நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்கும், Jio வின் விரைவான வளர்ச்சி மற்றும் Aircel இணைப்பின் மூலம் Jio கூட்டணி 2வது இடத்தைப் பிடிக்க உள்ள நிலையில், Air Tel நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 3வது இடத்திற்குச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 Vodafone மற்றும் idea நிறுவனத்தின் இந்திய டெலிகாம் சந்தையில் புதிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது. 
 வர்த்தக ரீதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படும் என்பது உறுதி.
 இப்புதிய வர்த்தகப் போட்டியின் காரணமாக டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இனி குறைவான விலையில் மிகச்சிறந்த சேவை கிடைக்கும். 
 இன்றைய நிலையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவில்லை என்றால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது. 
 இதுவே சிறப்பான சேவை அளிக்க முக்கியக் காரணமாக அமையும்.

EMIS- ல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.

Step-1.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக மாணவர்களின்  Total இருக்கும்.
Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open  ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.
Step-3.
அதை Click செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.
Step-4.
Save ஆன File யை Open செய்யவும் Excel Format  இருக்கும். அதில் ஒரு வகுப்பில் நாம் செய்த அனைத்து மாணவர்களின் தகவல்களும் இருக்கும். அதை சரி பார்த்து மீண்டும் Update செய்யலாம். இதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பையும்  Print எடுத்து சரிபார்த்து Update செய்தால் நம்மால் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க முடியும்.

நெல்லை மாவட்டத்தில் 1669 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு 465 பேர் பள்ளியில் சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி செல்லாத 1669 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 465 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.
குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இப்பேரணியை வ.உ.சி. மைதானத்தில்
ஆட்சியர் மு. கருணாகரன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியது: 14 வயதுள்ள குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2015-16 ஆம் ஆண்டில் 1669 குழந்தைகள் பள்ளி செல்லாத குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பு பயிற்சி மையங்களிலும், முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 465 குழந்தைகள் 15 இடங்களில் நடைபெறும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வில் பல்வேறு இடங்களில் பேப்பர் பொறுக்குதல், பிச்சை எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட 32 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் 10 குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 8 குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவிடமும், 4 குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். பேரணி பிரதானச் சாலை, தெற்கு பிரதான வீதி வழியாக இக்னேசியஸ் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 400 மாணவிகள் பங்கேற்றனர்.
பேரணியில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், தொழிலாளர்துறை இணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் ஹேமலதா, தொழிலாளர் ஆய்வாளர் பு. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக  கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் 2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன் படி சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது.
 இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.
இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில் இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. 
ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும் இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

NEET EXAM - மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 80 இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு எழுதுவோர்  இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நீட் தேர்வு எழுதாமல் பழைய முறைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்?

விரிவான பதில் பதிவு :
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )
அரசு பணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்
TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாட திட்டம் யாது?
பாட திட்டம் :
தாள் 1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள் 2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூக அறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுய குறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட் மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது
வாழ்த்துகளுடன் -
பிரதீப் பட்டதாரி ஆசிரியர், பூங்குளம்

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம் அரசாணை


EMIS மற்றும் AADHAR பதிவு பற்றி தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலக மீளாய்வு கூட்டத்தில் கூறப்பட்ட விபரங்கள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை!!

அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார்.
இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)
📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.
📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.
📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.
📘School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது.
📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது.
📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.
📘Taxable income 5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.5000/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.
📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும் ......

இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறை இரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளன. அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின் நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சில பத்திகள் கூடுதலாக இடம்பெறும் என்று தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது, ரூ.20,000 கோடி மதிப்பில் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இது தவிர, புதிய இருப்புப்பாதைகளை அமைப்பது, டீசல் ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றுவது, நவீனமயம், தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து ரயில் நிலையங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றுவது, மத வழிபாட்டுத் தலங்களுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

மரபுவழி விளையாட்டுகளை மீட்கும் முயற்சியில் அரசுப் பள்ளி: மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் முயற்சி


மரபுவழி விளையாட்டான ‘பாயும் புலி’ விளையாட்டில் பங்கேற்றுள்ள மாணவர்கள்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழகத்தின் மரபுவழி விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர்களின் மரபு வழி விளை யாட்டு என்பது குழு உணர்வை மையப்படுத்தியதாகும். கபடி, கிட்டிப்புல், ஓடி ஒளிந்து விளை யாடு தல் என்று நீண்டு செல்கின்ற தமிழர்களின் விளையாட்டு மரபு களைப் பட்டியலிட்டாலே அதுபுரி யும். நாகரிகம், பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செஸ், கேரம் போர்டில் தொடங்கி தொலைக்காட்சி, இணையதள வசதி, ஆண்ட்ராய்டு செல்போன் களின் வருகை என்று பல கார ணிகள் நம் மரபுகளைச் சிதைத்து வருகின்றன.
அதனால், குழந்தைப் பருவத் தில் விளையாடும்போது கிடைக்க வேண்டிய தன்னம்பிக்கை கிடைப் பதில்லை. தோல்வியை, விமர் சனத்தை ஏற்றுக்கொள்கின்ற மனவலிமையும் தற்போதைய மாணவர்கள், இளைஞர்களுக்கு குறைந்துவருகிறது. வாழ்க்கையை எளிமைப்படுத்துகிற பல்வேறு வசதிகள் கிடைத்துள்ள இக்கால கட்டத்திலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கும், குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதற்கும் இதுவே மூலகாரணமாக உள்ளது.
இந்நிலையை மாற்ற வேண்டு மானால் நாம் மறந்துபோன மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுப் பதுதான் ஒரே வழி என்று உணர்ந்து, இதனை முன்னிறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக. திரு வாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள மேலராதா நல்லூர் அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மணிமாறன் தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மரபுவழி விளையாட்டுகளை நடத்தி வருகிறார். பள்ளியில், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று நடை பெற்ற நிகழ்ச்சிகளில் மரபுவழி விளையாட்டுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிர் எழுத்துகளில் குறில் எழுத் துகளை மாணவர்கள் சத்தமாக வும், நெடில் எழுத்துகளை சிரித் துக்கொண்டே வேகமாகவும் கூற வேண்டும். சப்த விளையாட்டு என்ற இதை விளையாடும்போது 247 தமிழ் எழுத்துகள், அவற்றுக் கான மாத்திரை அளவு, சரியான உச்சரிப்பு போன்றவற்றை விளை யாட்டுடன் சேர்த்தே பயிற்றுவிக்க முடியும்.
மாணவர்களை 10 பேர்கொண்ட குழுக்களாகப் பிரித்து 2 குழுக் களுக்கு இடையே போட்டியை நடத்த வேண்டும். முதல் 10 பேரில் 5 பேர் குனிந்துகொண்டும், மீத முள்ள 5 பேர் குனிந்தவர்களைத் தாங்கிக்கொண்டும் இருக்க வேண் டும். அடுத்த குழுவில் உள்ள 10 பேரும் ஒருவர்பின் ஒருவராக ஓடிச்சென்று குனிந்தவர்களின்மீது பாய்ந்து அமர வேண்டும். 5 பேர் வரை சரியாக அமர்ந்துவிட்டால் அல்லது குனிந்தவர்கள் சாய்ந்து விட்டால் உட்காரும் அணிக்கு வெற்றி. உட்கார முடியாவிட்டால் குனிந்தவர்களுக்கு வெற்றி. பாயும் புலி எனப்படும் இந்த விளையாட் டின் மூலம் உடல் வலிமை அடைவ துடன் கூட்டுறவு மனப்பான்மை யும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
மாணவர்கள் ஒவ்வொரு சொற் களாகக்கூறி ஒரு கதையை உரு வாக்கும் போட்டி கதை விளை யாட்டு. கற்பனை யுடன் சேர்த்து கதைகளின் மையக் கருத்தை மட்டுமே உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது.
விளையாடுபவர்களை இரு அணிகளாக பிரித்து எதிரெதிரே நிற்க வைத்து மையத்தில் ஒரு வட்டம் வரைந்து, ஒரு குச்சியை வட்டத்தில் குத்தி வைக்க வேண்டும், அதை எடுக்க இரு தரப்பிலும் இருந்து ஒருவர் முயலும் விளையாட்டு, எலும்புத்துண்டு விளையாட்டு. இந்த விளையாட்டு சுறுசுறுப்பு, கூடுதல் கவனம் ஆகியவற்றை மாணவர்களிடம் வளர்க்கிறது.
இன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டுவரும் விளை யாட்டு தாத்தா குச்சி என்பது. இந்த விளையாட்டில், சிதறிய குச்சி களை ஒவ்வொன்றாக, ஒன்று மற் றொன்றின் மீது மோதிவிடாமல் எடுக்க வேண்டும். நரம்புத் தளர்ச்சி யின்மை, சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு வளர்க்கிறது.
இதுகுறித்து ஆசிரியர் மணி மாறன் கூறியது: இந்த மரபுவழி விளையாட்டுகள், எதிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க உதவும். ஆசிரியர் மாணவர்கள் இடையே யான இடைவெளி குறைந்து கற் பித்தல் எளிதாக நடைபெற இத் தகைய விளையாட்டுகள் உதவும். மேலும், மாணவ, மாணவிகள் கூடி விளையாடுவதால் பாலின சமத்துவம் பிறக்கும்.

மணிமாறன்
எங்கள் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் அனுபவத்தின் வாயிலாக மரபுவழி விளையாட்டுகளின் மகத்துவத்தை நன்றாக உணர்கிறோம். இந்த முயற்சிக்கு ‘பல்லாங்குழி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனியன், பள்ளி தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு காரணம் என்றார்.