>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 11 மார்ச், 2018

பால் கூட்டுறவு சங்க தேர்தல் பணி தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அவதி....

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் சரகத்தில் உள்ள, 572 பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, மார்ச், 12, 19, 26, ஏப்ரல், 2 ஆகிய தேதிகளில், தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதற்காக, வாக்காளர்பட்டியல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வுப் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், இந்த தேர்தல் பணி, கூடுதல் சுமையை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்க தேர்தல், ஒரு நாளில் நடந்தாலும், அதற்கான பணிகள், பயிற்சி என, பலநாட்களை செலவிட வேண்டியிருக்கும்.ஏற்கனவே, பெரும்பாலான ஆசிரியர்கள்,தேர்வுப் பணிக்கு சென்று விட்டனர்.பள்ளியில் ஓரிருஆசிரியர்களை வைத்து சமாளிக்கும் சூழலில், தேர்தல் பணிக்கும்ஆசிரியர்களை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு நேரத்தில், இத்தேர்தல் பணியைத் தவிர்த்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

சனி, 10 மார்ச், 2018

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.


விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளத
வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது

உயிர்களுடன் பழகும் பணியில் ஆசிரியர்கள்:-தொடக்கக் கல்வி அலுவலர் உருக்கம்!!!

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை!!!

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு 
கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திறந்துவைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்தது, பள்ளி விளையாட்டு விழாவின்போது வாயு உருளை வெடித்து மாணவர் உயிரிழந்தது, பள்ளிக் கட்டிடத்தின் மாடியிலிருந்து மாணவர் விழுந்து உயிரிழந்தது போன்ற துயரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்றபோதிலும், பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை காரணமாகவும், மெத்தனப்போக்கினாலும் நடைபெற்றுவருவது ஏற்கத்தக்கதல்ல.
பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே முழுப்பொறுப்பாகும். பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை நம்பியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
மாவட்ட அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்படும் குழுவால் அளிக்கப்படும் அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு சுட்டிக்காட்டப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாக பிரதிநிதி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகம் முழுமையும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும்.
முட்புதர்கள், கழிவு பொருட்களின் குவியல், கற்குவியல் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடங்கள் இல்லாமல் பள்ளி வளாகம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் கிணறு இருப்பின் அதனை தடிமனான இரும்புக்கம்பி கொண்டு வலை அமைத்து பாதுகாப்பாக மூடவேண்டும். கிணற்றை சுற்றி சுவர் எழுப்பப்பட வேண்டும். கிணற்றுக்கு செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தால் அதனை மூடி பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும்.
பள்ளிக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும்.
 ஆய்வகத்தில் பயன்படுத்தும் அமிலம் மற்றும் ரசாயனங்கள் உரிய ஆசிரியரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
மழலையர் மற்றும் தொடக்கநிலை வகுப்பு குழந்தைகளை நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு அழைத்துச்சென்றுவர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கழிவறைக்குள் எக்காரணம் கொண்டும் நீர்த்தேக்கத் தொட்டி இருக்கக் கூடாது. குழாய் வழியாக மட்டுமே கழிவறைக்குள் தண்ணீர் செல்ல வேண்டும். கழிவுநீர் தேக்கத்தொட்டி பாதுகாப்பாக மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும்.
அதனை சுத்தம் செய்யும் பணி விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு அகப்படாவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
 பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வாயு, எரிவாயு உருளை பயன்பாடு, மின்சாதனங்கள் பயன்பாடு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளை உரிய அலுவலரின் முன் அனுமதி இல்லாமல் பள்ளி வளா கத்தினைவிட்டு வெளியே அழைத்துச்செல்லக் கூடாது.
கல்வி நிறுவனங்களின் வாகன விபத்தினை தடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது!!!

மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது.
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150 இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு மே 6-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளிகளில் SSA திட்ட இயக்குனர் ஆய்வு: பதிவேடுகளை பராமரிக்க CEO உத்தரவு!!!

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால்,
பள்ளி பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மார்ச் மூன்றாம் வாரத்தில், திட்ட இயக்குனர் தலைமையில் குழு பார்வை நடக்கவுள்ளது.
இதனால், அனைத்து பள்ளிகளிலும், எட்டு வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தர முன்னேற்ற நிலை ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து, ஆய்வுக்கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்!!!

09.03.2018 ன்படி பள்ளிவருகை பதிவேட்டின் மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS- இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம் பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்!!!

யாழ்பாண நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தககங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இலங்கை யாழ்பாணத்தில் எரிக்கப்பட்ட
நூலத்துக்கு ஒரு லட்சம் புத்தகப் பிரதிகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையிலுள்ள அண்ணா நூலகத்துக்கு ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

தனி ஊதியம் 750நிர்ணயத்தில் திருச்சி , மதுரை , கடலூர் மண்டல தணிக்கைகளில் எது சரி முதல்வர் தனிப்பிரிவில் மனு!!


ஊதிய உயர்வு வேண்டாம் : இப்படியும் ஒரு கோரிக்கை!!!

கியூபெக்,: 'தேவைக்கு அதிகமாகவே 
வருமானம் ஈட்டுவதால், எங்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை். அந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என்று கனடா டாக்டர்கள் மனு அளித்து வருகின்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது கியூபெக் நகரம். இங்குள்ள அரசு டாக்டர்களுக்கு, சமீபத்தில், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு டாக்டர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.கியூபெக்கில், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலக ஊழியர்கள் என பலரும், கடினமாக உழைக்கின்றனர்.அதிக பணிச் சுமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு, குறைவான ஊதியமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.மேலும், செவிலியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்கள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்றுவதாக கூறப்பட்டது.இந்நிலையில், 'சக ஊழியர்கள் கஷ்டப்படும்போது, நாங்கள் மட்டும் எப்படி ஊதிய உயர்வை ஏற்க முடியும்' என, டாக்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஏற்கனவே, 'தேவைக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதால், இந்த ஊதிய உயர்வு தேவையில்லை.இந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என, டாக்டர்கள் சார்பில், அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவு

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது.

மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

1st - 12 th கணித ஆசிரியர்களுக்கான "ICT4MATHS" ANDROID MOBILE APP

கணித ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி கணித பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4MATHS" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
"ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலி அனைத்து நிலைகளிலும் (ஆரம்ப்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் கணித ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு கணிதத்தை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
அனைத்து கணித ஆசிரியர்களும் ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.
LINK:
...............................................................................................

TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
  அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும். 
அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 9 மார்ச், 2018

அரசாணை எண் 99:பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுசூழல் மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி இயக்குநர் மற்றும் 32 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து பணி நீட்டிப்பு அரசாணை!!!


TNTET - 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சிந்தனையை சோதிக்கும் கேள்விகள் : பிளஸ் 1ல், 'சென்டம்' பெறுவதில் சிக்கல்!!!

தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. இதில், சில வினாக்கள் 
கடினமாக இருந்ததால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகமாகி உள்ளது. நேற்று துவங்கிய இத்தேர்வில், 8.63 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நேற்று, தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அகமதிப்பீட்டுக்கு, 10 மதிப்பெண் ஒதுக்கப்படுவதால், 90 மதிப்பெண்களுக்கு மட்டும் வினாத்தாள் வழங்கப்பட்டது.காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதினர். வினாத்தாளை வாசிக்கவும், சுய விபரங்களை பூர்த்தி செய்யவும், முதல், 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன; மீதம் உள்ள, 2:30 மணி நேரத்தில், விடை எழுத அவகாசம் தரப்பட்டது. வினாக்களுக்கு உரிய பதிலை எழுத, மாணவர்களுக்கு போதிய நேரம் கிடைத்தது.தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், '10ம் வகுப்பில், பொது தேர்வை எழுதியுள்ளோம்.'பிளஸ் 1ல் அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளை, பொது தேர்வு போல் எழுதினோம். அதனால், இந்த தேர்வில், சிரமம் தெரியவில்லை. வினாக்கள் எளிமையாக இருந்தன. சில, ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடங்களின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன' என்றனர்.தமிழ் ஆசிரியர்கள் கூறியதாவது:வினாத்தாளில், கடினமான கேள்விகள் இல்லை. ஆனால், மொழிப் பாடம் என்பதால், அவற்றில் முழு மதிப்பெண் வழங்க சில, 'ட்விஸ்ட்' கேள்விகள் இருக்கும்.அப்படித்தான், பிளஸ் 1 தேர்விலும், மாணவர்களின் சிந்தனை மற்றும் புரிந்து படிக்கும் திறனை சோதிக்கும் வகையில், ஐந்துக்கும் மேற்பட்ட, ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வியாழன், 8 மார்ச், 2018

CLASS ROOM LANGUAGE FOR TEACHERS AND STUDENTS

மத்திய பாடத்திட்டத்தில் மாற்றம்: ஆலோசனைகள் வரவேற்பு!!!

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை
மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புத்தகப் படிப்புடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவக் கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியவையும் அவசியம். மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சிலிடம் (என்சிஇஆர்டி) வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் இந்தப் பிரச்னையில் ஆர்வம் கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்து பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக மத்திய மனிதள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர், தங்களது கருத்துகளை ட்ற்ற்ல்://164.100.78.75/ஈஐஎஐ என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதற்கான படிவத்தில் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை சுருக்கமாகத் தெரிவிக்கலாம். ஆலோசனைகள் தெரிவிப்போர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றின் பாடத்திட்ட ஆவணங்களை ட்ற்ற்ல்://ஸ்ரீக்ஷள்ங்ஹஸ்ரீஹக்ங்ம்ண்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ரீன்ழ்ழ்ண்ஸ்ரீன்ப்ன்ம்.ட்ற்ம்ப் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீங்ழ்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ழ்ண்ஞ்ட்ற்ள்ண்க்ங்/ப்ண்ய்ந்ள்/ள்ஹ்ப்ப்ஹக்ஷன்ள்.ட்ற்ம்ப் ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவை வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பல்வேறு பாடங்கள் தொடர்பான பொருளடக்கத்தை சமநிலை கொண்டதாக மாற்றியமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோருக்கு உள்ள ஊதிய முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21 முதல் 24ம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 26ம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இதுநாள் வரையில் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், தற்போது தேர்வுகள் துவங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தினை தவிர்த்து வருகிறோம்.
இருப்பினும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. அதன் பிறகும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் மே மாதம் 8ம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம். 

Census E-Register 2018 @ MSK Free Edusoft...

Census E-Register 2018 @ MSK Free Edusoft

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை

பள்ளிக்கல்வி மேல்நிலைப்பள்ளிஆசிரியர்களுக்கான ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை

100 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஓராண்டு  ஊதிய நீட்டிப்பு ஆணை
 click here
அரசாணை எண் 86
193 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஓராண்டு  ஊதிய நீட்டிப்பு ஆணை 
click here 
அரசாணை எண் 87

ஞாயிறு, 4 மார்ச், 2018

பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார் தாலுகா, பெரிய கொளுத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், மோகன்; இவரது மகன், கீர்த்தீஸ்வரன். அப்பகுதியில் உள்ள பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தான்.நேற்று முன்தினம், பள்ளி கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த, கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான்.இதை அறிந்த முதல்வர், இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கும்படிஉத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்படவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்லுாரி கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மாணவன் கீர்த்தீஸ்வரன் இறந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

Soon, CS to be allied with science ... news:Indian Express.

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது

சனி, 3 மார்ச், 2018

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5,6,7 தேதியில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்...

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு தலைமை செயலக சங்க செயற்குழு கூட்டம் நேற்று மாலை தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர்கள் மணிவண்ணன், அருண், பொருளாளர் ெகாளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:
பஐயா ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர் குழுவின் காலக்கெடுவை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக இறுதி அறிக்கையை அளித்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பதவி உயர்வு பெற்றும் இதுவரை கட்டாய மாவட்ட பயிற்சிக்கு அனுப்பாமல் உள்ள சுமார் 100 பேரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். 7வது ஊதியக்குழுவில் தலைமை செயலக அனைத்து நிலை பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, அனைவருக்கும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் தலைமை செயலக பணியாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள கோப்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் செலவை குறைக்க, அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு மற்றும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தலைமை செயலகத்தில் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்று பணியில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணி வரன்முறை செய்து, அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5, 6 மற்றும் 7ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வருவார்கள். வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மதிய உணவு இடைவேளையின்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. அந்த மூன்று நாட்களும் தலைமை செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் வருமா?’ - வலுக்கும் புதிய கோரிக்கை

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் தொடந்து 5 நாள்களும் கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கலவை சாதங்கள் பிடிக்கவில்லை. அதனால் 90 விழுக்காடு மாணவர்கள் கலவை சாதத்தை உட்கொள்ளாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள்.
இதனால் கிராமப்புற ஏழை எளியமாணவர்களுக்கு சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயநிலை உள்ளது. அதனால் தமிழக அரசு இதை ஆய்வு மேற்கொண்டு, அரசு மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்கிறார்கள் தமிழ் சமூக கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.இதுபற்றி தமிழ்ச் சமூக கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பாய கூறுகையில், ``2015-க்கு முன்பு தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வெள்ளை சாதம், காய்கறி, பருப்பு சாம்பாரோடு, முட்டை சேர்த்து மதிய உணவாக வழங்கப்பட்டு வந்தது. இதைச் சுவையாகச் சமைத்துக் கொடுக்கும்போது மாணவர்கள்நன்றாகச் சாப்பிட்டு வந்தார்கள். அதன்பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்தோடு சத்துணவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று 2016-க்குப் பிறகு, அரசுப் பள்ளி செயல்படும் 5 நாள்களும் மதியம் கலவை சாதங்கள் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதியம் புளி சாதம்,எலுமிச்சைச் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், பிஸ்பேலா பாத் போன்ற கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை எவ்வளவு சுவையாகக் கொடுத்தாலும் கிராமப்புற மாணவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. காரணம் நம்முடைய தமிழர் நிலத்தின் தட்பவெட்ப நிலையிலும் கலாசார பண்பாட்டாலும் வறட்சியான கலவை உணவுகளைப் பெரும்பாலும் விரும்பி உட்கொள்ள மாட்டோம்.
அதேபோல அரசுப் பள்ளியில் மதியம் வழங்கப்படும் கலவை சாதங்களைக் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பெரும்பாலும் சாப்பிடாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள். இதுதொடர்பாக 7 பள்ளிகளில் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் விசாரித்தபோது, மதியம் வெள்ளை சாதத்தோடு, சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சாப்பிடுவதையே விரும்புவதாக 90 விழுக்காடு மாணவர்கள் தெரிவித்தார்கள். இது சத்துணவு அமைப்பாளர்களுக்கும் தெரியும். அரிசி செலவு குறைவதால், இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை.
அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தால், மாணவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதனால் தமிழக அரசு இதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நூலக உறுப்பினர்களாக சேர்க்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Read More

Quiver videos

வன்முறையில்லாத வகுப்பறைக்கான தீர்வு

பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு..


பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

ஆசிரியர் படிப்பு:

தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில்  ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .


அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு!!!

எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது. நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மற்றும், ‘ஜிப்மர்’ கல்லுாரிகளில்சேருவதற்கு, தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, மே, 26, 27ல் நடக்கிறது. இதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, பிப்.,5ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் மாலை, 5:00 மணியுடன் முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை, www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.
விளம்பர எண்: 492
விளம்பர நாள்: 01.03.2018
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2018
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test
பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual
துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual