>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 25 நவம்பர், 2017

DEE PROCEEDINGS- Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- பள்ளிகளை தூய்மையாக வைத்திருத்தல் - சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை சார்ந்த பள்ளிகளை தூய்மையான பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துதல் சார்பு...

SSA -SPD PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award 2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category of School -Reg

அன்றாடம் தொங்கி செல்லும் நிலை மாணவர்களுக்கு சிறப்பு பஸ் ஏன் இயக்க கூடாது?: அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

மாநகர பஸ்களில் ஆபத்தான நிலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ஏன் சிறப்பு பஸ்கள் இயக்கக்கூடாது என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து, நாளை (இன்று) பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் நேற்று ஆஜராகி, ‘‘கடந்த அக். 25ம் தேதி வெளிவந்த தினகரன் நாளிதழில் மாணவர்கள் பஸ்சில் தொங்கிக் கொண்டு செல்லும் படத்தை காண்பித்து, இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மாணவர்கள் மேற்கொள்கிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் போதுமான பேருந்துகள் இல்லாததால் இதுபோன்று மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு உயிரை பணயம் வைத்து கல்வி கற்கச் செல்கிறார்கள். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்’ என்றார்.
உடனே பத்திரிகை புகைப்படத்ைத பார்த்த தலைமை நீதிபதி, மிகவும் அதிர்ச்சியுடன், ‘‘மாணவர்களுக்காக சிறப்பு பஸ்களை அரசு ஏன் இயக்க கூடாது’’ என்று கேள்வி எழுப்பினார். 
மேலும், இந்த செய்தியை பொதுநல வழக்காக உயர் நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். 
அதற்கு அரசு பிளீடர் ராஜகோபாலன், ‘‘இந்த வழக்கில் நாங்கள் பதில் தருகிறோம். வழக்கை தள்ளி வையுங்கள்’’ என்றார். உடனே, தலைமை நீதிபதி, ‘‘இது முக்கியமான விஷயம். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது. நாளைக்கே பதில் தாருங்கள். 
மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இதுபோன்று மாணவர்கள் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரிக்கு செல்வதாக வக்கீல் தெரிவித்துள்ளார். அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் தாக்கல் செய்துள்ளார். எனவே இதை அவசர வழக்காக நாளை விசாரிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வர உள்ளது.

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. 
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்துதல், பங்கேற்பு ஒய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜாக்டோ-ஜியோ அ மைப்பு போராடி வருகிறது.
இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. 
ஊதிய உயர்வு தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கையை பெறவும், ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தரவும் அரசுக்கு உயர்நீதி மன்றம் காலக்கெடு நிர்ணயித்தது. 
நீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவுக்குள் அரசு அந்த அறிக்கையை பெற்று பெயரளவுக்கு ஒரு ஊதிய உயர்வை அறிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே ஜாக்டோ-ஜியோவை ஏமாற்றி வருகிறது. குறித்த காலத்துக்குள் ஊதிய உயர்வு அறிவிப்பை தந்து விட்டோம் எனக்கூறி நீதி மன்றத்தையும் அரசு ஏமாற்ற முயல்கிறது. 
மேலும் நீதிமன்ற ஆணைக்கு முரணாக போராடிய ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் மீது அரசு பொய் வழக்கு போட்டு பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கி வருகிறது. என்றாலும் நீதி மன்றம் தன் இறுதித் தீர்ப்பில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் என்றும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யும் என காத்திருக்கிறோம். இது பொய்த்துப் போனால் போராட்டம் ஓயாது. இவ்வாறு மீனாட்சி சுந்தரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஜாக்டோ - ஜியோ வழக்கு : நேற்று (23.11.2017) நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்

வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில், விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராகரித்தது. 
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும், கடந்த செப்டம்பர் 7ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி வக்கீல் சேகரன் என்பவர், ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சேகரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சங்க நிர்வாகிகள் ஆஜராகினர். இதேபோல், தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதனும் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். 
மேலும், இந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டின் விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதான் ஆகியோரது சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.  அப்போது அரசுத் தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டுமென்பதால் அவகாசம் வேண்டுமென கூறப்பட்டது. 
ஜாக்டோ-ஜியோ தரப்பில், ‘மூத்த வக்கீல் உடல் நலக்குறைவால் ஆஜராகவில்லை. எனவே, இருவார கால அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘உங்களுக்காகவே இந்த வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கிறது. கால அவகாசம் கேட்டால் எப்படி’ என்றனர். 
இதற்கு ஜாக்டோ-ஜியோ வக்கீல், ‘அட்வகேட் ஜெனரலும், எங்கள் மூத்த வக்கீலும் சென்னையில் உள்ளனர். எனவே, இருவரும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அங்கிருந்து வாதிட அனுமதிக்க வேண்டும்’ என்றார். 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நாங்கள் விசாரிக்க தயாராக இருக்கிறோம். இதற்காக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரிக்க வேண்டியதில்லை. உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. வேண்டுமானால் இரு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கிறோம். அப்போது வந்து ஆஜராகி வழக்கை நடத்துங்கள்’’ எனக்கூறி விசாரணையை டிசம்பர் 8 க்கு தள்ளி வைத்தனர்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
திருவண்ணாமலை செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார். தமிழ் வழியில் அரசு வேலை வழங்கும் அரசு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு நிலுவையில் இருப்பதால் பழைய சம்பளம் வழங்க கோரிக்கை!!!

மருத்துவ விடுப்பு குறைந்த பட்சம் 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்


டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!


கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்குகிறது. தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.
கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், “இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

'வாட்ஸ் ஆப்' குழு துவக்கிய, 'ஸ்மார்ட்' வகுப்பு




 'வாட்ஸ் ஆப்' மூலம் இணைந்த நண்பர்கள் குழுவினர், உடுமலை அருகே, வெஞ்சமடை அரசுப் பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு துவக்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தை சரியான வழியில் பயன்படுத்தினால், புதிய மாற்றத்தை உருவாக்கலாம் என, செயல்பட்டு வருகிறது, 'நாட்டாம தீர்ப்ப மாத்து' என்ற வாட்ஸ் ஆப் குழு.
 

இக்குழுவில் உள்ளவர்களில் பலருக்கும், பலரது முகம் தெரியாது; பேசியதும் இல்லை. ஆனாலும், குழுவில், 70 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கமே, இயலாதவர்களுக்கு உதவுவது தான்.
 
கடந்தாண்டு, செப்., மாதம் துவக்கப்பட்ட குழுவின் மூலம், இதுவரை, ஐந்து லட்சம் ரூபாய் வரை, கல்வி, தொழில் என, பலருக்கும் உதவிகள் சென்றடைந்துள்ளன.
குழுவில் உள்ள நண்பர்கள் மூலம், என்ன உதவி, யாருக்கு என்பதை பதிவிட்ட பின், அக்குழு உறுப்பினர்கள், நேரடியாக சென்று, விசாரிக்கின்றனர். அதன்பின், தொகையாகவோ அல்லது, அவர்களுக்கு தேவையானதையோ செய்து தருகின்றனர்.
 
உடுமலை, வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிறப்பான ஆசிரியர்கள், திறமையுள்ள குழந்தைகள் இருந்தும், அவர்களுக்கான தொழில்நுட்ப வசதி போதிய அளவில் இல்லை என, குழு நண்பர் ஒருவரால் பதிவிடப்பட்டது. 
தொடர்ந்து, குழுவினர் பள்ளிக்கு சென்று, விசாரித்து, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்குவதற்கான, ஏற்பாடுகளை துவக்கினர்.
 
தற்போது, பணிகள் முழுமையாக முடிந்து, ஸ்மார்ட் வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. குழு, 'அட்மின்' பாபு சபாபதி மற்றும் உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சொத்துக்களுடன் ஆதாரை இணைப்பது 

கட்டாயமாகிறது - பிரதமர் மோடியின் அடுத்த 

அதிரடி.. ​

நாட்டில் கருப்புபணப் புழக்கத்தை ஒழிக்க சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு விரைவில் கட்டாயமாக்க உள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் எண்ணை, வங்கிக்கணக்கு, செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, பான்கார்டு, பி.பி.எப்., என்.எஸ்.சி., சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கியள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு. இதற்கு நாட்டு மக்களின் பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆனால், இந்த நடவடிக்கை இதோடுமுடியாமல், கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பல நேரங்களில் பேசும் போது, கருப்புபணப் புழக்கத்தை கட்டுப்படுத்த பல ஸ்திரமான முடிவுகள், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிவருகிறார். அந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு மிகவிரைவில் ெவளியாகும்.
கருப்புபணத்தை பினாமி பெயரில் பலர் அசையா சொத்துக்களாக வாங்கி குவித்துள்ளனர். இவை அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் போது, பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படும். உண்மையில் சொத்துக்களின் உரிமையாளர் யார், அவருக்கு வந்த வருமான உள்ளிட்டவைகள் வெளியாகும்.
இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி  நிருபர்களிடம் கூறுகையில், “ மிகவிரைவில் சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்படும். சொத்துக்கள் வாங்கினாலும், விற்பனை செய்தாலும் ஆதார் கட்டாயமாக்கப்படும். இதற்கான பணிகளில் மத்திய வீட்டு வசதி துறையும்,  மத்திய நிலவளங்கள் துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த விஷயம் குறித்து மத்திய அரசின் உயர் மட்ட அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் இந்த திட்டம் மிகச்சிறப்பானதாகும். சொத்துக்கள் விற்கும்போதும், வாங்கும்போதும் ஆதார் கட்டாயமாக்குவது கருப்புபணத்தை தடுக்கும். இந்த திட்டம் விரைவில் நனவாகும், அதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.
சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால், அந்த சொத்துக்கள் இரு நபர்களுக்கு இடையே விற்பனையாகும் போது அதை அரசு கண்காணிக்க முடியும். கருப்புபணத்தின் அடிப்படையில் சொத்துக்கள் வாங்கப்படுகிறதா, முறையாக முத்திரைத்தாள் செலுத்தப்படுகிறதா என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

11th Tamil Paper 2 - Centum Question Papers

11th Tamil Paper 2 - Centum Question Papers:
  1. 11th Tamil Paper 2 - Centum Question Paper | Mr. Dr.A.Krishnamoorthy - Tamil Medium
Prepared by Dr.  A. KRISHNAMOORTHI,
N M HR SEC SCHOOL,
EZHAYIRAMPANNAI - 626 201,
VIRUDHUNAGAR DISTRICT.


*பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண் 

தோழமையைக் கற்பிக்கலாமா?* - நன்றி..'தி இந்து',

 தமிழ் நாளிதழ்

சமூகப் பொறுப்பைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்றின் தொடக்க விழா அது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேல்நிலை வகுப்பு மாணவர்களைப் பற்றி அப்பள்ளியின் ஆசிரியை முகத்தில் பூரிப்போடும் குரலில் பெருமையோடும் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.
“எங்களுடையது ஆணும் பெண்ணும் இணைந்து படிக்கும் பள்ளிதான். ஆனால் கூடவே படிக்கும் மாணவிகள் நேர் எதிரில் நடந்துவந்தால்கூட எங்களுடைய மாணவர்கள் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ மாட்டார்கள். அத்தனை நல்ல பிள்ளைகள்!”.

இருபாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும் பெண்ணும் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான். ஆணையும் பெண்ணையும் தனித் தீவுகளாகப் பிரித்துவைத்துச் சமத்துவத்தை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்? ஆனால் இன்று பெரும்பாலான இருபாலர் பள்ளிகள் மட்டுமல்லாமல் கல்லூரிகளும் இப்படித்தான் மாணவ - மாணவிகளை ‘நல்ல பிள்ளைகள்’ ஆக்கி வெளி உலகத்துக்கு அனுப்புகின்றன. கல்விக்கூடங்களே இப்படி இருக்கும்போது நம்முடைய வீடுகளைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தாய்மை மிக உயர்ந்தது, தாயைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் எனச் சொல்லித்தரும் கலாசாரமும் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழிமொழியும் நம்முடைய வீடுகளும் பெண்ணை சக மனுஷியாக மதிக்கச் சொல்லித்தரத் தவறிவிடுகின்றன.

*புரியாத புதிர்!*

கூடவே படிக்கும், அருகிலேயே வசிக்கும் பெண் பிள்ளைகளைப் பற்றி எந்தப் புரிதலும் கொடுக்கப்படாத ஆண் குழந்தைகள், இளைஞர்கள் ஆன பிறகு சமூகத்தில் பெண்களை நேருக்கு நேர் சந்திக்கவும் பழகவும் வேண்டிவருகிறது. அப்போது திகைப்பும், தடுமாற்றமும், ஈர்ப்பும் உண்டாகின்றன. ஈர்ப்பை எப்படிக் கண்ணியமாக வெளிப்படுத்துவது என்பதற்கான பயிற்சியோ அனுபவமோ இல்லாததால் இருவருக்கும் சங்கடமான நிலை ஏற்படுகிறது. தங்களது கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதை எதிர்கொள்ளக் கற்றுத்தரப்படாததால் ஈர்ப்பு வெறுப்பாக மாறுகிறது. இது பாலியல் சீண்டல், வன்புணர்வு, அமில வீச்சு, கொலை என்று பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறையாகத் தடம் மாறுகிறது. காதல் விவகாரங்கள் காரணமாக மட்டும் ஆண்டுதோறும் தமிழகத்தில் 150 பெண்கள் கொல்லப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, ஃபேஸ்புக்கில் ஆபாசமாகப் புகைப்படம் வெளியிடப்பட்ட வினுப்பிரியா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி தேவாலயத்தில் ஆசிரியை பிரான்சினா இப்படிக் காதலின் பெயரால் தமிழகத்தில் சமீபத்தில் கொடூரமாகப் பலியான இளம் பெண்களின் மரணங்கள் எதைக் காட்டுகின்றன?

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் பொருளாதாரம், சாதி, கவுரவம், கலாசாரம் உள்ளிட்ட பல அடுக்குகள் இருந்தாலும் அடிப்படையில் உள்ள சிக்கல் ஆண்-பெண் உறவு நிலையில் புரிதல் இன்மையே. இதில் கவனிக்க வேண்டியது, காதல் மறுக்கப்பட்டதால் கொலை செய்தவர்கள் எல்லாம் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் பலர் அதற்கு முன்பு சிறு வன்முறையில்கூட ஈடுபட்டதில்லை. ஆகவே, ஆண் பெண் உறவு நிலையில் புரிதல் இல்லாததே இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணம்.

வெறும் தண்டனை மூலமாக இந்தப் போக்கை மாற்றி அமைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் இத்தகைய கோரமான சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி, பாலினச் சமத்துவக் கல்விக்கான தேவை உணரப்படுகிறது.ஆனால் நிதர்சனத்தில் நம்முடைய கல்வி நிலையங்களில் இவற்றுக்கான இடம் எங்கே?

*இருபாலருக்கும் நல்லது*

முதலாவதாக, பாலினச் சமத்துவம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணும் பெண்ணும் இச்சமூகத்தில் சமமானவர்கள் என்பதைப் ஏற்றுக்கொள்வதே பாலினச் சமத்துவம். இதைக் கற்றுத்தருவதற்குச் சில பாடங்கள் உள்ளன. ‘ஜெண்டர் ஸ்டடீஸ்’, ‘விமன் ஸ்டடீஸ்’ எனச் சில பெண்கள் கல்லூரிகளில் பாலின விழிப்புணர்வுப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் அவற்றைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள் கல்லூரிகளிலோ இந்தப் பாடமே இல்லை. “ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் தாழ்வு இல்லை என்பதைப் பெண்களுக்குக் கற்றுத் தரும்போதே அதை ஆண்களுக்கும் சேர்த்து நிச்சயமாகக் கற்றுத்தர வேண்டும் இல்லையா?” எனக் கேட்கிறார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உளவியல் ஆலோசகர் ஆர்த்தி.

பாலியலுக்கும் (sex) பாலினத்துக்கும் (gender) இடையில் உள்ள வேறுபாட்டைக் கற்றுத்தருவதில் இது தொடங்குகிறது. பாலியல் என்பது உடல் ரீதியானது, இயற்கையானது. ஆனால் பாலினத் தன்மைகள் என்பவை ஆண்மை, பெண்மை எனச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை. “பெண்ணால் மட்டுமே பிரசவிக்க முடியும், ஆணால் முடியாது என்பது உடல் சார்ந்தது. ஆண்கள் அழக் கூடாது; பெண்கள் மென்மையானவர்கள் என்பவை சமூகத்தால் உருவாக்கப்பட்ட விழுமியங்கள். இவற்றை முதலில் இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும்” என்கிறார் ஆர்த்தி.

அதே நேரத்தில் வழக்கமான பாடங்களைப் போலவே பாலினச் சமத்துவத்தையும் தேர்வுக்கான பாடத் திட்டமாகத் திணித்துவிடக் கூடாது. சொல்லப்போனால் வகுப்பறைக்குள் அவரவர் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு படிக்கும் பாடம் அல்ல இது என்பது பாலினச் சமத்துவப் பயிற்றுனர் இசை பிரகாஷின் கருத்து. “பாலின விழிப்புணர்வை உண்டாக்க முதலில் தங்குதடை இன்றி நினைத்ததை வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

‘மிரரிங்’எனப்படும் ஒருவரைப் போலவே இன்னொருவர் உடல் அசைவுகளால் செய்துகாட்டுவதில் இந்தப் பயிற்சி தொடங்கும். ஆணைப் போலப் பெண்ணும் பெண்ணைப் போல ஆணும் உடல் அசைவுகளால் பிரதிபலிக்கும்போது அங்கு ஆண்மை,பெண்மை என்கிற பிம்பம் தளர்வதற்கான முதல் படியாக உருவாகிறது. அடுத்துத் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆணின் அனுபவத்தைப் பெண்ணும் பெண்ணின் அனுபவத்தை ஆணும் கூடியிருப்பவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோன்ற பயிற்சிகள் ஆண்களைப் பற்றிப் பெண்களும்,பெண்களைப் பற்றி ஆண்களும் புரிந்துகொள்ள உதவுகின்றன” என்கிறார் இசை பிரகாஷ்.

“பாலினச் சமத்துவத்துக்கான பாடப் புத்தகங்கள் மனப்பாடப் பகுதிகளாக இல்லாமல் விவாதப் புள்ளிகளை முன்வைக்க வேண்டும். அதிலிருந்து ஊக்கம் பெற்று மாணவ, மாணவிகள் பாலினம் தொடர்பான பல சிக்கல்களைக் கலந்துரையாட வேண்டும். பாலினப் பாகுபாட்டைத் தகர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள், திரைப்படங்களின் திரையிடலும் கலந்துரையாடலும் வாசக வட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்கிறார் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரும் தத்துவப் பேராசிரியருமான இரா. முரளி.

மொத்தத்தில், என்று நம்முடைய பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ, மாணவிகள் சக தோழர்களாக இணைந்து சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அன்றுதான் பாலினச் சமத்துவச் சமூகத்தை நோக்கி ஒரு படி முன்னேற முடியும். அதற்குக் கல்விக்கூடங்களாலும் கணிசமான பங்காற்ற முடியும் என்பதையே பாலினச் சமத்துவப் பாடங்கள் காட்டுகின்றன.. "சமத்துவ சமுதாய கழகம்" - தலைமை

ரூ. 20 க்கு ஒரு ஜி.பி டேட்டா - செக்க போடு போடும் வை பை டப்பா...!

குறைந்த கட்­ட­ணத்­தில், தொலை தொடர்பு சேவை­களை வழங்கி வரும், ரிலை­யன்ஸ் ஜியோ­வுக்கு போட்டி போடும் வகையில் அதி­ர­டி­ ஆஃபரை இறக்கியுள்ளது பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னம்.

‘வை பை டப்பா’ எனும் நிறுவனத்தை சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகி­யோ­ர் துவங்கியுள்ளனர். இந்­நி­று­வ­னம், 2, 10 மற்­றும் 20 ரூபா­யில், அதி­வேக இன்­டர்­நெட் சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

முதற்­கட்­ட­மாக இந்த சேவையை கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. அதாவது ரூ. 2 க்கு 100 எம்.பி. ரூ. 10 க்கு 500 எம்.பி. ரூ. 20 க்கு 1 ஜி.பி. வீதம் டேட்டா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி.

தேநீர் விடுதி மற்­றும் பல­த­ரப்­பட்ட கடை­களில், ‘வை பை டப்பா’ டோக்­கன் விற்­கப்­படும் எனவும் இதை வாங்கி மொபைல் எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. நெம்பரை பதிவுசெய்து டேட்டாவை பெற­லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்­க­ளூரு முழு­வ­தும், 350 வழித்­த­டங்­களில், ‘வை பை டப்பா’ பயன்­பாட்­டிற்­கான, ஒருங்­கி­ணைப்பு வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்

மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு  கூடுதல் ஊதியம் பெற்று  வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 


அதிர்ச்சி அளிக்கிறதா ? நண்பர்களே ...

உண்மைதான் ..


🔰மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்காக பல ஆண்டுகளாக நாம் போராடிவருகிறோம் ...


🔰உண்மையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்குவதைவிட அதிக ஊதியம் வழங்கி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ?


🔰குழம்ப வேண்டாம் பொறுமையாக படிக்க ..மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200.  தமிழக மாநில இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750(1.1.2011க்கு பிறகு ), 5200+2800(1.1.2011க்கு முன்பு ...


🔰இப்போது மூன்று வித ஊதியங்களில் இருந்து பதவி உயர்வு பெறுவதால் பெறும் ஊதிய நிர்ணயங்களை இங்கே காண்போம் ..

🔥அடிப்படை ஊதியம் மூன்று கணக்கீட்டிற்கும் 10000என்று வைத்துக் கொள்வோம் ..

31.12.2010 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .


அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   2800
--------------------------------
மொத்தம்.      12800
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

12800*3%= 384@390

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        390

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      14990
--------------------------------



🔰  1.1.2011 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .


அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   2800

தனி ஊதியம்.  750
--------------------------------
மொத்தம்.      13550
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

13550*3%= 406.50@410

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        410

தனி ஊதியம்.  750

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      15760
--------------------------------

குறிப்பு :
-------------
பதவி உயர்வில் தனி ஊதியம் அடிப்படை ஊதியத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது .

இதுவே மத்திய அரசைவிட கூடுதல் ஊதியம் பெற வழிவகை செய்கிறது ..


🔰 1.1.2011ல் மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டால்

 9300+4200

பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .

அ. ஊதியம்  10000

தர ஊதியம்.   4600

--------------------------------
மொத்தம்.      14600
--------------------------------

பதவி உயர்வு

 பணப்பலன் 3%

14600*3%= 426@430

பட்டதாரி பதவி உயர்வு

 நிர்ணயம் 


அ. ஊதியம்  10000

3%                        410

தர ஊதியம்.   4600
--------------------------------
மொத்தம்.      15010
--------------------------------

முடிவு :
----------

🔥மத்திய இணை ஊதியம் பெற்று பதவி உயர்வில் சென்றால் பெறும் ஊதியம் 15010

🔥தற்போதைய நிலையில் பதவி உயர்வில் பெறும் ஊதியம் 15760


மத்திய அரசைவிட அதிகமாக வழங்கும் ஊதியம் ..

      15760
      15010
------------------
          750
------------------

🔰தமிழக கல்வித்துறையில் 1.1.2011க்கு பிறகு

 5200+2800+750பெற்று பதவி உயர்வில் செல்பவர்களுக்கு AEEOக்களும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்  மத்திய அரசு தரும் ஊதியத்தைவிட அதிக ஊதியத்தை வழங்கி பெரும் உதவி செய்து வருகிறார்கள் ..



🔥மேலும் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசின் பணத்தை தொடர்ந்து  வாரி வழங்கும் கர்ண பிரபுக்களை பாராட்டியே ஆக வேண்டும் ..

🔰இத்தகை நிர்ணயங்களை தணிக்கை அலுவலர்களும் கவனிப்பை எதிர்நோக்கி கண்டும் காணாமல் போவதும் கல்வித்துறையில் பெறும் குழப்பங்களை முரண்பாடுகளையும் உருவாக்கி வருகிறது ..


🔥கர்ண பிரபுக்கள் கைங்கர்யம் மற்றும் தணிக்கை அலுவலர்களின் காட்டில் மழை பெய்யும் வரை அரசு பணம் வீணாகும் ...

🔥தொடரட்டும் மத்திய அரசை விட கூடுதல் மாநில பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் ...

ஆக்கம் 
------------

சுரேஷ் மணி 

நாமக்கல் 

9943790308

How to prepare Tnpsc Group 4 exam?

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?

கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.
முதன்முதலாக தேர்வு எழுதுவோர், *6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2* வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். *பொருளாதாரம்* குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.
தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான *கணிதக்* கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.
*நடப்பு நிகழ்வுகள்* குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் *செய்தித்தாள்களைப்* படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.
*அறிவியல்* பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். *கம்ப்யு ட்டர் சயின்சில்* அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.
பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், *10 மாதிரி தேர்வுகளை* எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.
*முக்கிய குறிப்புகள்:*
தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.
*அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!*
ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், *மொழியறிவு* நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, *தாய்மொழி, ஆங்கிலம்* மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.
குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.
மூன்றாவதாக அடிப்படை *கணித அறிவு* முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.
பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
*வினாத்தாள் பற்றிய விவரங்கள்:*
பொதுத் தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : *100 வினாக்கள்*
பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள்!!!
*1. வரலாறு - 16 வினாக்கள்*
*2.பொருளாதாரம் - 09 வினாக்கள்*
*3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்*
*4. புவியியல் - 06 வினாக்கள்*
*5. இயற்பியல் - 04 வினாக்கள்*
*6. வேதியியல் - 03 வினாக்கள்*
*7.தாவரவியல் - 02 வினாக்கள்*
*8. விலங்கியல் - 06 வினாக்கள்*
*9. முக்கிய தினங்கள், திட்டங்கள்* - *03 வினாக்கள்*
*10. கணிதம் - 25 வினாக்கள்*
*11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்*

10th,11th,12th - Half yearly Exam 2017 - Time Table ( single page )

12th Accountancy - Centum Question Papers

12th Accountancy - Centum Question Papers:
  1. 12th Accountancy - Centum Question | Mr. Muhammed Ebrahim - English Medium
Prepared by Mr. MUHAMMAD EBRAHIM SHAMEEM,

BCom, CA Inter, Chennai. 



10th Half Yearly Exam Previous Year Question Papers and Answer Keys - Download

Hi Teachers & Students,

             Now a days Department of School Education Conducts Quarterly Exam & Half Yearly Exam as a common exams to all districts of Tamil Nadu. So Our Team will give Instant Key Answers for 10th Standard Half Yearly Exam Question Papers. We think this Key Answers are very useful to all teachers & students.

10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2016
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2015
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2014
  • 10th Standard Half Yearly Exam Question Papers & Key Answers - Click Here and Download Here
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2013
10th Half Yearly Exam Question Paper & Answer Keys - 2012
10th Standard Important Collections
  • 10th Standard | Previous Year Quarterly Exam Question Papers & Answer Keys - Click Here
  • 10th Standard | Previous Year Half Yearly Exam Question Papers & Answer Keys - Click Here
  • 10th Standard | Previous Year Public Exam Question Papers & Answer Keys - Click Here
  • 10th Standard | Quarterly / Half Yearly / Public Exam | Syllabus - Click Here
  • 10th Standard | Quarterly / Half Yearly / Public Exam | Time Table - Click Here
  • 10th Standard | Latest Study Materials - Full Collection - Click Here
  • 10th Standard | Padasalai.Net's Special - Centum Coaching Team Questions - Click Here
  • 10th Standard | Padasalai.Net's Special - Creative Questions - Click Here
  • 10th Standard | Free Online Test Questions For Tamil Medium - Click Here
  • 10th Standard | Free Online Test Questions For English Medium- Click Here

முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை!

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொது,நிகழ்ச்சியில்,மாணவர்கள்,பங்கேற்க,55கட்டுப்பாடுகள் ,: அரசியல்,நிகழ்ச்சிக்கு,அனுமதி,இல்லை
தமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது. 
பின், அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்
* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை
* அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது. 
நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது 
* தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது
* போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது
* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்
* கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
* மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது 
* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
* குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்
* சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்
* உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்
* அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும் 
நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம். 
* மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்
* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்
* வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது 
* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்
* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்
* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

அரசு பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் போதிப்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் - CM CELL REPLY