>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 2 டிசம்பர், 2017

டிச.8ல் மதுரையில் 'ஜாக்டோ -ஜியோ' கூட்டம்

ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழுக்கூட்டம் மதுரையில் டிச., 8 ம் தேதி நடக்க உள்ளதாக உயர் மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவும், புதிய ஊதியக்குழு அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செப்.,7,8 மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஜாக்டோ -ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு டிச. 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக இருந்தது. நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அன்றே அடுத்த கட்ட நடவடிக்கையை கூடி தீர்மானிக்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் இவ் வழக்கு டிச.8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ''நீதிமன்ற வழக்கு டிச.8 ம் தேதி விசாரணைக்கு வரஉள்ளதால் அன்று மாலை 4:00 மணிக்கு மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்ட குழுக்கூட்டம் நடைபெறும்'' என்றார்.