>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 20 ஏப்ரல், 2019

நீட்க்கு தயாராகி கொண்டு இருக்கிறார்களா இதோ உங்கள் திறமைக்கு சவாலாக இருக்கும் நீட் quiz செயலி (application) உங்களில் அடுத்த டாக்டர் யார்?

Saturday, April 20, 2019


உங்கள் நண்பர்களுக்கு உங்களின் மதிப்பெண்ணை screen short எடுத்து அவர்களுக்கு சவால் விடுங்க

இந்த செயலியின் டவுன்லோட் லிங்கை கீலே சொடுக்கவும்

இது உங்களுக்கு பயன் படவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

https://play.google.com/store/apps/details?id=neet.entrance.exam

.................................................

பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கவனத்திற்கு...



பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துகள்.


இந்த நேரத்தில் 'பெற்றோர்கள்’ கவனத்தில் கொள்ள வேண்டியவை..

1. இது படித்தால்தான் உறவுகள் மத்தியில் கௌரவம் என்று பிள்ளைகளைப் பலியிடாதீர்கள்.

2. நீங்கள் விரும்பி, உங்களுக்குக் கிட்டாத படிப்பை பிள்ளைகளின் வாயிலாக அடைந்துவிட வேண்டுமென திணிக்காதீர்கள்.

3. பிள்ளைகள் விரும்பாத படிப்பை, இதுதான் நல்லது என்று ஒருபோதும் சுமத்தாதீர்கள்.

4. கல்லூரியில் ஒரு இடத்தைப் பிடித்து தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் உறுதியான மனநிலையோடு இருங்கள்.

5. மகள்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவதுதான் முக்கியக் கடமை, ஆகவே அதுவரை ஒரு கல்லூரியில் எதாச்சும் படிக்கட்டுமே என்ற எண்ணத்தோடு அனுப்ப நினைக்காதீர்கள்.

6. தேர்ந்தெடுக்கும் படிப்பில், ஏற்கனவே சிறப்பாக இயங்கும் சிலரைத் தேடி உங்கள் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டுங்கள்.


*மாணவ, மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது..*


1. ஆர்வம் இருக்கும், ஏதுவான கல்லூரிப் படிப்பை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

2. இந்தப் படிப்புதான் சிறந்தது, இது மோசமானது என்று எதையும் பட்டியலிட முடியாது.

3. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என ஓரளவு திட்டம் வகுத்து, அதற்கேற்ற கல்லூரி பிரிவு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கவும்.

4. தேர்ந்தெடுக்கும் படிப்பின் துறையில் முடிந்தவரை தொடர்வோம் எனும் உறுதியோடு தேர்ந்தெடுங்கள்.

5. 'இதுதான் நல்லது என யாரோ சொன்னார்கள்!’ என உங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டாம்.

6. 'சும்மா இருக்க முடியாது, எதாச்சும் படிப்பேன், வேலை, தொழிலுக்கு அதைப் பயன்படுத்த மாட்டேன் அல்லது கொஞ்ச நாள் வேலைக்குச் செல்வேன்’ என்ற மனநிலையோடு மட்டும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு பிறகு வீணடிக்க வேண்டாம். காரணம் அந்த இடம் மிகவும் தேவையுள்ள ஒருவருக்கானதாக இருக்கலாம். அதை மதிப்பெண், பணம், சிபாரிசு என்ற அடிப்படையில் பிடித்துக் கொண்டு நீங்களும் பயன்படுத்தாமல் இன்னொருவரையும் பயன்பெற விடாமல் செய்ய வேண்டாம்.

7. எது உங்களை வாழ்நாள் முழுக்க உயிர்ப்புடன் வைத்திருக்கும் என நினைக்கிறீர்களோ அந்தப் படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவும்.




மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் மற்றும் பல பயனுள்ள படிப்புக்களில் தமிழ்நாடு, வெளிநாடுகளில் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேரவும், அந்தக் கல்லூரியின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் உடனே அழையுங்கள்..

இது போட்டி உலகம்.. ஆகவே நீங்கள் தாமதிக்கும் நிமிடத்தில் அடுத்தவர் உங்கள் இடத்தினை நிரப்பிடுவார்..


JK, கல்வி ஆலோசகர் மற்றும்

மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்.


9842463437

.....?........

பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் #பல்கலைக்கழகம் அறிவிப்பு!





பிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம்  அறிவிப்பு


மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது.

ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பல் கலைக்கழகம் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி. பிஎட் படிப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல்) வழங்கி வருகிறது. பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டு களாக உயர்த்தப்பட்ட நிலையில், பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகிவிடும்.

 ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி, பிஎட் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

 கணிதம், இயற்பியல், வேதியியல்
பாடங் களுடன் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்கள் இப்படிப்பில் சேர லாம்.


குறைந்தபட்சம் 50 சத வீத மதிப்பெண் அவசியம்.

 நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்படி, கணிதம், இயற்பியல், வேதியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிக்கலாம்.

இதற்கான ஆன் லைன் பதிவு தொடங்கப்பட் டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் மாணவர்களிடம் மிகவும் குறைவான கல்விக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6,600 (வேதியியல் பாடப்பிரிவு எனில் ரூ.7,600) செலுத்த வேண்டும்.

 இறுதி ஆண்டு ஒரு செமஸ்டருக்கு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் கல்விக்கட்டணம் ரூ.8,600. தகுதி யுடைய பிளஸ் 2 மாணவ-மாணவி கள் ஆன்லைனில்


 பதிவுசெய்யலாம் என காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

..............

+2 Public Exam Results 2019 - Complete Analysis - School Education Publication

12th Result - மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்


பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

* பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின

* மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%

* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி- திருப்பூர் முதலிடம் (95.37%)

* ஈரோடு 2-வது இடம்(95.23%),

* பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)



+2 Results March 2019 Published - 3 Direct Result Links




வரும் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு!!




ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

#BREAKING: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

* பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின

* மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%

* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி- திருப்பூர் முதலிடம் (95.37%)

* ஈரோடு 2-வது இடம்(95.23%),

* பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)

............................

தேர்தல் பணிக்காக சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தேர்தல் பணிக்காக வந்த அரசுப்பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சம்சிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரின் மனைவி சங்கரகோமதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி, வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பணிக்கு வருவதற்காக சங்கரகோமதி, தன் கணவர் ஜெயவேல் உடன் காரில் வந்துள்ளார். காரை ஜெயவேல் ஓட்டிவந்துள்ளார். 

கோவில்பட்டி அருகேயுள்ள வெம்பூர் பகுதிக்கு வந்துகொண்டிருக்கும்போது, காரை ஜெயவேல் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டியுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காரும், ஆசிரியை வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் ஆசிரியை சங்கரகோமதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயவேல் படுகாயம் அடைந்தார்.




இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ஜெயவேலுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்காக வந்த ஆசிரியை, எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

உங்கள் தொகுதியில் யாரெல்லாம் போட்டி இடுகின்றனர்? அவர்களின் கல்வி என்ன? தொழில் என்ன? சொத்து என்ன? குற்ற வழக்கு விபரங்கள் என்னென்ன? ஒரு சில நிமிடங்களில் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்




அரக்கோணம்
ஆரணி
ஈரோடு
கடலூர்
கன்னியாகுமரி
கரூர் 
கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சிதம்பரம்


சிவகங்கை
சேலம்
தஞ்சாவூர்
தர்மபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பூர் 
திருவண்ணாமலை
திருவள்ளூர்
தூத்துக்குடி
தென் சென்னை
தென்காசி
தேனி
நாகப்பட்டினம்


நாமக்கல்
நீலகிரி
புதுச்சேரி
பெரம்பலூர்
பொள்ளாச்சி
மதுரை
மத்திய சென்னை
மயிலாடுதுறை
ராமநாதபுரம்
வட சென்னை
விருதுநகர்
விழுப்புரம்
வேலூர்
ஸ்ரீபெரும்புதூர்

?
+2 HSE ) RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்  
  
19.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில்குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண கீழ் கொடுக்கப்பட்டுள்ள தேர்வுத்துறையின் நேரடியான இணையதள இணைப்பை தேர்வு செய்து தெரிந்துகொள்ளுங்கள்...


செவ்வாய், 16 ஏப்ரல், 2019

EMIS : 2019 - 2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வேறு பள்ளிக்கு மாற்றம் , நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் EMIS Web Portal மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு மற்றும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் வழிகாட்டுதல் செயல்முறைகள்!

வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக மாணவர் தேர்ச்சி அளிப்பதற்கு பின்வரும் வழிகாட்டுதலின்படி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


......................................................................................................................................................

EMIS- How to promote/ transfer students -Video


Click here to watch video

Thanks To

T.THENNARASU
R.K.PET BLOCK
THIRUVALLUR DT
TN DIGITAL TEAM

'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று 15.04.2019 மாலை 5 மணிக்கு வெளியாகிறது

இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

CLIK HEAR

திங்கள், 15 ஏப்ரல், 2019

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு.



 அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு  துறைக்கு  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம்  அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Election 2019 - Poll Monitoring System - Presiding Officer Mobile App [ Download Before 17.04.2019 ]




PO க்கள் இந்த App-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்....
தேர்தல் முதல் நாள்
தேர்தல் நாள் அன்று ரிப்போர்ட் இதன் மூலம் தான் கொடுக்கவேண்டும்.

CLIK HEAR

..............................................................................................................................................................................

வாக்களிக்க தேவையான அடையாள அட்டைகள் எது தெரியுமா?

*வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம்*
*மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு புகைப்படங்களுடன் கூடிய 11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்*
*வாக்காளர்கள், தங்கள் வாக்கை பதிவு செய்யவதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்*
*வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவா்கள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிக்காக வழங்கப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம்*
*மேலும், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப்பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்*
*வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றவற்றை பொருட்படுத்த தேவையில்லை*
*எனவே, வாக்காளர்கள் மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்து ஏப்.18 ஆம் தேதி தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்யலாம்

SBI BANK - ல் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் "ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது*
*💢💢இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*🎈🎈மொத்த காலியிடங்கள்: 8,653*
*💠💠பணி: Junior Associate (Customer Support & Sales)*
*♦♦தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*
*💎💎வயதுவரம்பு*
*01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.*
*🔰🔰சம்பளம்: மாதம் ரூ.13,075 - 31,450*
*💎💎தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்*
*♦♦தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*
*முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு*
*🔮🔮விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*
*மேலும் முழுமையான விவரங்கள் அறிய*
*https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf எ ன்ற லிங்கில் சென்றுதெரிந்துகொள்ளவும்*
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019

தங்கத்துக்கு ஆசைப்படாத அரசுப்பள்ளியில் படிக்கும் அக்கா - தம்பி.


கள்ளக்குறிச்சி : கேட்பாரற்று கிடந்த, ஒரு சவரன் சங்கிலியை ஒப்படைத்த அரசுப் பள்ளியில் படிக்கும், அக்கா - தம்பியை பாராட்டி, எஸ்.பி., ஜெயகுமார் ஊக்கப்பரிசு வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நத்தகாளியைச் சேர்ந்த தம்பதி சரவணன் - சரோஜா. இவர்களது மகள் ஜோதிகா,13, மகன் சதீஷ், 10. இருவரும், அருகிலுள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 8, 5ம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை, இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றபோது, சாலையில் கேட்பாரற்று கிடந்த, 1 சவரன் சங்கிலியை கண்டெடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதன்படி, அதை தவறவிட்ட ஏமம் அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரனிடம், உரிய விசாரணைக்குப் பின், ஒப்படைக்கப்பட்டது. ஏழ்மை நிலையிலும், நேர்மையாக செயல்பட்ட ஜோதிகா - சதீஷ் இருவரையும், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் உட்பட பலரும் பாராட்டினர். தகவலறிந்த விழுப்புரம், எஸ்.பி., ஜெயகுமார், இருவரையும் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வரவழைத்தார். அங்கு, அவர்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு கொடுத்து பாராட்டினார்.

EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்






கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாதனை.


வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே மகிழ்வித்து மகிழ் சென்னை சிறுதுளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த ஆசிரியர். ஜெயா வெங்கட் நினைவாகவும், தஞ்சாவூர் கனவு மெய்ப்பட வேண்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான குழந்தைசாமி, சிவகுருநாதன், தரணிபாய், ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளையும்,நமது முடிவுகளை இரவு பகலும் கண் விழித்து சேகரித்து உதவிய அன்புத்தம்பி கனவு பள்ளி பிரதீப் ஆகியோர் இடைவிடாது ஏற்பாடுகளை
 செய்து அரசு பள்ளிகளுக்கு இடையே அஞ்சல் துறை அஞ்சல் அட்டையை மூலம் அரசு பள்ளிகளுக்கு இடையே வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்ளச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அஞ்சல் அட்டையில் படம் வரைந்து இதர பள்ளிகளுக்கு அனுப்பி இருந்தனர்.

இதில் கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அஜய்  முதல் பரிசையும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஆஷிகா இரண்டாம் பரிசும், நான்காம் வகுப்பு மாணவன் கிரண்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். சென்னை சிறு துளி மற்றும் கனவு மெய்ப்பட வேண்டும் குழு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்,பரிசு மற்றும் பதக்கத்தினை மாணவர்களுக்கு வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.

................................................................................................................................................................................